இவர்களை அவ்வப்போது நீங்கள் தெருக்களில் பார்க்கலாம்.. இந்த கோஷ்டி ராமர், அனுமார் வேடம் பூண்டிருந்தது.. ஓரிடத்தில் பார்த்தபோது, அவர்களை அழைத்து உபசரித்து நின்று பாடச் சொல்லி, படம் பிடித்தேன். சன்மானமும் கொடுத்தனுப்பினேன். ஏக சந்தோஷம் அவர்களுக்கு.
வீடியோ: பாகம் 1
வீடியோ: பாகம் 2
கிராமத்தில் விவசாயக் கூலிகளாகவோ பண்ணைத் தொழிலாளர்களாகவோ இருப்பவர்கள்.. வேலை இல்லாத காலங்களில் நாடகம் போடுவது, ஊர் ஊராக பாடி சுற்றுவது என்று காலத்தை ஓட்டுகிறார்கள்..
இரண்டாவது வீடியோவில் உடைந்த கன்னடத்தில் கேள்வி கேட்பது அடியேன் தான். கன்னடம் நன்கறிந்த பெரியோர்கள் மன்னித்தருள்க!
கதிரவனைத் தொட விரியும் சிறகுகள். அரக்கத் தனத்தை எதிர்த்துப் போரிடும் சிறகுகள். தருமத்தின் துணை நிற்கும் சாமானியனின் சிறகுகள்.
Thursday, May 26, 2011
Tuesday, May 03, 2011
வெ.சா விமர்சனங்களும் விவாதங்களும் - வெளியீட்டு விழா பதிவுகள்
தமிழ் கலை, இலக்கிய விமர்சன பிதாமகர் வெங்கட் சாமிநாதன் அவர்களது அரை நூற்றாண்டு எழுத்து இயக்கத்தை சிறப்பிக்கும் முகமாக 30-ஏப்ரல்-2011 அன்று சென்னையில் ஒரு விழா நடந்தது. வெளியீட்டு விழா அழைப்பிதழ் இங்கே.
இவ்விழாவில் வெ.சா: விமர்சனங்களும் விவாதங்களும் என்ற புத்தகமும் வெளியிடப் பட்டது. இப்புத்தகத்தில் நான் எழுதியிருக்கும் ”வெ சா என்னும் சத்திய தரிசி” என்ற கட்டுரையை இங்கே படிக்கலாம்.
விழாவின் போது நான் எடுத்த புகைப்படங்கள் இங்கே.
வீடியோ பதிவுகள்:
ஜெயமோகன் உரை:
அரவிந்தன் நீலகண்டன் உரை:
வெங்கட் சாமிநாதன் உரை:
இது உரையின் முதல் பகுதி. பாதியில் காமிரா பேட்டரி தீர்ந்து விட்டதால் மீதம் உரையை செல்போனில் ஆடியோ பதிவு மட்டுமே செய்ய முடிந்தது. அந்தப் பதிவு:
இவ்விழாவில் வெ.சா: விமர்சனங்களும் விவாதங்களும் என்ற புத்தகமும் வெளியிடப் பட்டது. இப்புத்தகத்தில் நான் எழுதியிருக்கும் ”வெ சா என்னும் சத்திய தரிசி” என்ற கட்டுரையை இங்கே படிக்கலாம்.
விழாவின் போது நான் எடுத்த புகைப்படங்கள் இங்கே.
வீடியோ பதிவுகள்:
ஜெயமோகன் உரை:
அரவிந்தன் நீலகண்டன் உரை:
வெங்கட் சாமிநாதன் உரை:
இது உரையின் முதல் பகுதி. பாதியில் காமிரா பேட்டரி தீர்ந்து விட்டதால் மீதம் உரையை செல்போனில் ஆடியோ பதிவு மட்டுமே செய்ய முடிந்தது. அந்தப் பதிவு:
வெ.சா: விமர்சனங்களும் விவாதங்களும் - அரை நூற்றாண்டு எழுத்து இயக்கம்
(கலை, இலக்கிய ஆளுமைகள், ஆர்வலர்கள் எழுதிய 43 கட்டுரைகள்)
தொகுப்பு: பா.அகிலன், திலீப்குமார், சத்தியமூர்த்தி
வெளியிடுவோர்:
சந்தியா பதிப்பகம்
பு. எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை - 600 083.
தொலைபேசி: 044-24896979
http://sandhyapublications.com/
பக்கங்கள்: 504
விலை: ரூ. 300