tag:blogger.com,1999:blog-30966295.post115570303942228561..comments2024-03-13T12:54:05.050+05:30Comments on ஜடாயு எண்ணங்கள்: ஆன்மீகப் பார்வையிலும் அடிபடும் ஜோதிடம் : பாகம் 2ஜடாயுhttp://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-30966295.post-1157978165197623252006-09-11T18:06:00.000+05:302006-09-11T18:06:00.000+05:30திருமணத்தில் ஜாதகம் பார்க்கவில்லை, ஆனால் நல்ல நேரம...திருமணத்தில் ஜாதகம் பார்க்கவில்லை, ஆனால் நல்ல நேரம் பார்த்தார்களே என்று கேட்கிறீர்கள், நல்ல கேள்வி. <BR/><BR/>சிலப்பதிகாரம் <BR/><BR/>இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால் <BR/>மணஅணி காண மகிழ்ந்தனர்,<BR/>........<BR/><BR/>வான்ஊர் மதியம் சகடுஅணைய வானத்துச்<BR/>சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன் <BR/>மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் <BR/>தீவலம் செய்வது காண்பார்க்கண் நோன்புஎன்னை. <BR/><BR/>ம்.. ஜோஸியத்தின் சில கூறுகள் இதில் வருகின்றன. பெருநாள் என்பது நல்ல நாள் என்று கொள்ளலாமோ? <BR/><BR/>வேத அங்கமாக உள்ள ஜ்யோதிஷம் எப்பேற்பட்டது என்று பாகம்-1லேயே சொல்லியிருந்தேன். இன்று உள்ள Astoronomy, Astorphysics துறைகளின் ஆதிகால முன்னோடி என்று வரலாற்றுச் சிறப்புக்காக அது பற்றிப் பேசலாம், ஆனால் நடைமுறையில் இன்றைய வானியல் வேதகால அறிவைத் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டது. <BR/><BR/>இதிகாசங்களில் இப்போதைய ஜோதிட நம்பிக்கைகள் பற்றி சில விஷயங்கள் இருக்கலாம். ஆனால் நடக்கும் எல்லா விஷயங்களும் நாள்-கோள்களால் தான் நடக்கின்றன (ராவனன் பிறப்பு பற்றி இங்கு நீங்கள் சொன்னது போல) என்ற கருத்து கண்டிப்பாக இல்லை. தேடிப் பார்த்தால் புத்தர், விவேகானந்தர் ஜாதகம் போலவே உள்ள 40-50 ஜாதகங்கள் இன்றும் கிடைக்கலாம் (going just the law of probability here), ஆனால் இவர்கள் யாரும் அப்படி மாமனிதர்கள் ஆகவில்லையே?? இதற்கும் ஜோதிடத்தில் ஏதாவது விளக்கம் கண்டிப்பாக வைத்திருப்பார்கள் :))ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1157971339885476162006-09-11T16:12:00.000+05:302006-09-11T16:12:00.000+05:30சிவன் பார்வதி, முருகன் தெய்வானை, கண்ணகி கோவலன் திர...<I> சிவன் பார்வதி, முருகன் தெய்வானை, கண்ணகி கோவலன் திருமணங்கள் பெற்றோர்கள் சம்மத்துடன் ஊர் கூடி நடந்தது (ஜாதகம் பார்த்ததாக காவியங்களிலும், புராணங்களிலும் குறிப்பு இல்லை).</I><BR/><BR/><BR/>ஆச்சரியமளிக்கும் தகவல். <BR/><BR/>ஆனால், சுபமுகூர்தத்தில் அந்த திருமணங்கள் நடந்தன என்பதுமாதிரி படிக்கிறோமே. <BR/><BR/>ஏன், ஐந்தாம் வேதமான மஹாபாரதத்திலும்கூட செயல்களை ஆரம்பிக்க நல்ல நேரங்களை ஸஹாதேவன் குறித்துக்கொடுத்த நிகழுவுகளைக் காண்கிறோம்.<BR/><BR/>ராவணன் அஸுர பிறவி எடுத்ததற்குக் காரணமே ஸந்தி நேரத்தில் அவனுடைய பெற்றோர்கள் இணைந்ததுதான் என்றிருக்கிறது.<BR/><BR/>அதுவுமன்றி, ஜோஸியம் என்பதுகூட வேதங்களின் ஒரு பகுதியாகிவிட்டதே. அது எவ்வாறு?<BR/><BR/>புத்தரின் வாழ்க்கை முதல், விவேகானந்தவர் வாழ்க்கை உள்ளீடாக அவர்களது ஜாதகங்கள் அவர்களின் உயர்வை குறிப்பதாக அமைந்துள்ளதே. இதுவும் எதனால்?<BR/><BR/>நான் ஒன்றும் ஜோஸியத்தின் அதி தீவிர விஸிறி இல்லை. பெரும்பாலான மக்கள்போல 50 - 50 கேஸு. உங்களின் பதில்கள் தெளிவை தரும் என்பதால்தான் கேட்கிறேன். மூன்றாம் பாகம் எதிர்பார்க்கலாமா?Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.com