"நவராத்திரி - ஒன்பது இரவுகள் சக்தியைப் பூஜிக்கிறோம். காஷ்மீரம் முதல் கன்யாகுமரி வரை வேதத்தை நம்பும் கூட்டத்தார் அனைவரும் பராசக்தியை வணங்கி அருள்பெற முன்னோர் அமைத்த நல்ல ஏற்பாடு" என்று ஒரு கட்டுரையில் பாரதி கூறுகிறார். சக்தி தாசரான பாரதி, அற்புதமான இந்தத் திருநாளை அன்னையை அகத்தில் இருத்தி வழிபடுவதற்கு உகந்த பருவமாகக் கண்டதில் ஆச்சரியமில்லை.
ஒருமுறை நவராத்திரியின்போது, தன் மகள் தங்கம்மாவும், அவள் தோழிகளும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அன்னை பராசக்தியின் பேரில் "நவராத்திரிப் பாட்டு" என்ற அழகிய பாடலை எழுதிக் கொடுத்தார். அந்தப் பாடல் இதோ -
உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி (உஜ்ஜயினீ)
உஜ்ஜய காரண சங்கர தேவி
உமா ஸரஸ்வதி ஸ்ரீமாதா ஸா (உஜ்ஜயினீ)
வாழி புனைந்து மஹேசுர தேவன்
தோழி, பதங்கள் பணிந்து துணிந்தனம் (உஜ்ஜயினீ)
சத்ய யுகத்தை அகத்திலிருத்தி
திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி (உஜ்ஜயினீ)
"உஜ்ஜயினீ" என்ற தேவியின் திருப்பெயரின் பொருள் "மேன்மேலும் வெற்றி பெறுபவள்" என்பது. வெற்றி தருபவள் என்றும் கொள்ளலாம். அன்னை காளீயின் அருள் பெற்ற விக்கிரமாதித்தன் (குப்த வம்சத்து அரசன்), தான் புதிதாக அமைத்த தலைநகரத்திற்கு அன்னையின் இப்பெயரைச் சூட்டினான். மத்தியப் பிரதேசத்தில் க்ஷிப்ரா நதிக்கரையில் இருக்கும் பழம்பெருமை வாய்ந்த ""உஜ்ஜைன்" என்ற இந்த நகரம் 52 சக்தி பீடங்களில் ஒன்று. "சக்தி.. நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி. கம்பனும், காளிதாசனும், விக்கிரமாதித்தனும் வனங்கிய தெய்வம்" என்றும் இன்னொரு கட்டுரையில் பாரதி குறிப்பிடுகிறார்.
இரண்டாம் அடியில் வரும் "உஜ்ஜய" என்ற சொல்லுக்கு உத்பத்தி, சிருஷ்டி என்று பொருள் கொள்ளலாம். எல்லா சிருஷ்டிக்கும் காரணனான சங்கரனின் தேவி என்று தேவியைப் புகழ்கிறார்.
"ஸா" என்பதன் பொருள் "அவள்" (சம்ஸ்க்ருதத்தில்). இப்படி எழுவாய்ச் சொல்லிலேயே (pronoun) சம்ஸ்க்ருதத்தைப் பயன்படுத்தி இருப்பது சிறப்பு, தமிழ் மணிப்ரவாள நடையில் அபூர்வம். அது மட்டுமல்ல "ஸா" என்பது பரதேவதையின் பெயர்களில் ஒன்றான மந்த்ர அக்ஷரமும் கூட.
"மஹேசுர தேவன் தோழி" என்பதும் அழகிய சொல்லாட்சி. சத்ய யுகத்தை நிலைநிறுத்தும் திறன் வேண்டி பாடல் முடிகிறது.
அனைவருக்கும் நவராத்ரி வாழ்த்துக்கள்.
Dear Jatayu,
ReplyDeleteThanks for reminding about this beautiful song. I have heard it sung in "Senjurutti" raagam and it sounds divine. Thanks for throwing light on its meaning also.
- Gangadharan
Thanks for this rare song of Bharathiyar. the way you explained meaning of Ujjayini is also good.
ReplyDeleteVery nice of you to bring out a nice poem, aptly suiting the occassion. I always wondered if shakthi worship is mentioned in the vedas. I have not come across any hint in the fifth veda,BG. Pl throw some light. Warm regards,
ReplyDeleteHoney Bee ஐயா, வருகைக்கு நன்றி. BG (பகவத்கீதை) 5-வத் வேதமான பாரதத்தின் ஒரு பாகம். இதில் ப்ரக்ருதி என்று பகவான் குறிப்பிடுவது சக்தி தத்துவத்தைத் தான் என்று கொள்ளலாம். அது தவிர, போருக்கு முன் கண்ணன் துர்காதேவியை வணங்குமாறூ கூறுகிறான். அதன் படியே அர்ஜுனனும் வணங்கி அருள் பெற்ற குறிப்பும் உள்ளது.
ReplyDeletehi sir
ReplyDeletethanks for your comment in my blog ..i read the navarathiri songs from ur blog . thanks for response