Monday, April 23, 2007

பயங்கொள்ளிப் பதிவர்களுக்கு... சில வார்த்தைகள்

தமிழ் இணையத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அரவிந்தன் நீலகண்டனின் பதிவை நீக்குவதாக தமிழ்மணம்.காம் வலைதிரட்டி அறிவித்து, அவர் தனது பதிவில் கூறியிருந்தது போல த.ம பாசிசப் பாதையில் அடையெடுத்து வைத்திருப்பதை கட்டியம் கூறி முரசறைகிறது.

சென்னையில் வாழ்ந்து வரும் ஒரு பயந்த சுவாமுள்ள அப்பாவி பதிவரை மிரட்டி கையழுத்து வாங்கி ஏதோ பெரிய வீர சாகசம் செய்துவிட்டதாக புல்லரித்துக் கொள்கிறது ஒரு இணைய ரவுடி கும்பல். திராவிட கட்சிகளின் அதே பாணியைப் பின்பற்றும் இந்த கும்பல் அ.மு.க என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பது சாலப் பொருத்தம் தான். இப்படிப்பட்ட ரவுடிகளுக்கு வழக்கமாக கொம்பு சீவிவிடும் தமிழ்மணம், இந்தப் பிரச்சினையில் தார்மீகநிலைப்பாட்டைக் கொண்டவர்களிடம் ஐபியை தருவோம் என்று தெளிவாகவே சொல்லியுள்ளது. இது பற்றி கால்கரி சிவா, ம்யூஸ் கேட்ட நியாயமான கேள்விகளுக்கும் இன்றுவரை எந்த உருப்படியான பதிலையும் இதுவரை தரவில்லை...

தமிழ்மணம்.காம் தொகுத்து வழங்கும் "சிறந்த பதிவுகளை" உள்ளடக்கிய பூங்கா என்ற வெறுப்பியல் இதழ் உருவான நாள் முதலாக இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும், இந்திய தேசியம் என்ற கருத்துருவாக்கத்தை கேலி செய்யும் பதிவுகளைப் பொறுக்கி எடுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது என்பதை முன்பே கூறியிருக்கிறேன். அப்சல் விவகாரமாகட்டும், காவிரி குடிநீர் விவகாரத்தை "தேசிய இனங்களின்" பிரசினையாக சித்தரிப்பதாகட்டும், "தேசிய ஜல்லிகள்" என்று தலைப்பிட்ட பதிவை கட்டம் கட்டி போடுவதாகட்டும், இந்திய நீதிமன்றத்தை காரணமில்லாமல் இழித்துரைப்பதாகட்டும், இந்திய எதிர்ப்பை முழுநேரப் பிழைப்பாக வைத்திருக்கும் ஜிகாதிகள், மாவோயிஸ்டுகள், ஜனநாயக எதிர்ப்பாளர்கள் கருத்துக்களை முன்னிறுத்துவதாகட்டும், "சிறந்த பதிவு"களாக தமிழ்மணம்.காம் கருதும் பதிவுகளின் யோக்கியதை இப்படித் தான் இருக்கிறது. விரல்விட்டு எண்ணி விடக் கூடிய ஒரு சில பதிவர்களைத் தவிர எத்தனை இந்தியர்கள் இதை எதிர்த்துக் கேள்வி கேட்கிறீர்கள்? ஏன் தயக்கம்? என்ன பயம்?

"பாட மறுக்கும் பாப்பாத்திகள்" என்று ஒரு ரவுடி எழுதுகிறான். இதற்காக அவனை முதுகில் தட்டிக் கொடுத்து அந்தப் பதிவை பூங்காவில் தலைப்பை மட்டும் மாற்றி பிரசுரிக்கின்றார்கள் தமிழ்மணம் ஆட்கள். மனச்சாட்சியுள்ள எத்தனை நடுநிலைப் பதிவர்கள், பெண் பதிவர்கள் இதை எதிர்த்துக் கேள்வி கேட்கிறீர்கள்?

இந்து தருமம், இந்துத் துவம், இந்து ஒற்றுமை இவற்றை மட்டுமே சமூகக் கொள்கைகளாக நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன், எந்த சாதிச் சார்புடைய கருத்துக்களையும் அல்ல. ஆனாலும் இந்த நேரத்தில் குறிப்பாக இதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. தமிழ்மணத்தில் தங்கள் பதிவுகளை இணைத்துள்ளவர்களில் குறைந்தது ஒரு 30 பதிவர்களாவது பிராமணர்களாக இருப்பார்கள். உள்ளே தினம் தினம் இழிவுக்கு ஆளாகிக் கொண்டு சகித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றார்கள். இந்த சமயத்தில், நேசகுமாருடன் முழுமையாக ஒப்பவில்லை என்றால் கூட அவர் சொன்னவற்றில் தமிழ்மணம் இடமளிக்கும் அப்பட்டமான பிராமண வெறுப்பு குறித்த கருத்து குறித்தாவது கொஞ்சமாவது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கலாம். அதில்லாமல் உள்ளே அமர்ந்து கொண்டு வாய்மூடி, இந்தக் கும்பல்களுடன் சிரித்து (அடி வாங்கிக்) கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சமூகம் இந்த அளவுக்கு அடிபடுவதில் வியப்பென்ன? வேறு எந்த சாதியையோ, மதத்தையோ எதாவது ஒரு தளத்தில் இப்படி திட்டமிட்டு கேவலப்படுத்துவதற்கு அனுமதித்தால் அங்கே இன்னேரம் என்ன நிகழ்ந்திருக்கும் என்று யூகித்துப் பாருங்கள். பரசுராமரின், சாணக்கியரின், மங்கள் பாண்டேயின், பாரதியின் மரபில் வந்தவர்கள் தானா இவர்கள்?

பிராமணர்கள் சிறுபான்மையாயிருக்கிறார்கள் என்றெல்லாம் யாரும் நினைக்க வேண்டாம். வலைப்பதிவுகளில் அவர்களைவிட சிறுபான்மையாக கிறித்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பாருங்கள், நேசகுமார் கிறித்துவத்துக்கு எதிராக எதுவும் எழுதவில்லை என்றாலும் கூட, அவர் முன்னிறுத்தும் ஆபிரகாமிய விமர்சனங்கள் தங்களது நம்பிக்கைகளுக்கு எதிரானவை என்பதால் மற்ற தேசவிரோத-ஜிகாதி குழுக்களுடன் கைகோர்த்து தமிழ்மணத்தின் வலைப்பதிவில் சென்று பின்னூட்டமிட்டு அவருக்கு எதிரான தங்களின் கருத்துக்களை எழுதியுள்ளார்கள்.

ஒரு சம்ஸ்கிருத பாடல் சொல்கிறது "ஆடுகள் தான் பலியிடப்படுகின்றன, சிங்கங்கள் அல்ல, புலிகள் அல்ல, யானைகள் அல்ல. ஏனென்றால், துர்ப்பலமான ஜந்துவை தெய்வமே அழிக்கிறது" என்று. இப்படி ஆடுகளாய் பலிபீடத்தை நோக்கி தலையாட்டிக் கொண்டு சென்றால், பின், ஏன் தான் இப்படிப்பட்ட கூத்துக்கள் நிகழ்ந்தேறாது?

இந்திய தேசியத்தில் முழு நம்பிக்கை கொண்ட பதிவர்கள், பெண் பதிவர்கள், பிராமண பதிவர்கள் நன்கு அறியப்பட்ட பலர் இருக்கின்றார்கள். அவர்கள் இந்த சமயத்தில் மௌனம் காக்காமல் வாய்திறந்து இந்த அராஜகத்தைக் கண்டித்தால், புத்தியைக் காட்டிட்டான் என்று சொல்வார்கள். சொல்லிவிட்டுத்தான் போகட்டுமே. எப்படியும் சொல்லப் போகிறார்கள், சொல்லிக் கொண்டுள்ளார்கள் என்ற நிலையில் இதனால் வாய்மூடி மௌனம் காக்கும் நீங்கள் இழக்கப்போவதுதான் என்ன?

தமிழ்மணத்திலிருந்து தூக்கிவிடுவார்கள் என்று அஞ்சினால், இங்கு இருந்து கொண்டு தினம் தினம் அவமானங்களைச் சந்திப்பதைவிட இது மேல் அல்லவா? உங்களில் எத்தனை பேரை இப்படித் தூக்க முடியும்? எண்ணிப் பாருங்கள். அரவிந்தன் குறிப்பிட்டிருப்பது போல இந்த வலைதிரட்டியுடன் நீங்கள் கொண்டிருப்பது ஒரு symbiotic relationship தான்.. ஆண்டான் அடிமை உறவு அல்ல.

இந்த வலைவறட்டியில் வளையவரும் வம்புப் பேச்சுகளில் மயங்கி ஏதோ இது தான் தமிழ் இணையம் முழுதும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு அல்பத் தனமான மாயையை விட்டு வெளியே வாருங்கள். தமிழ் இணையம் பெரியது, உலகம் அதைவிடப் பெரியது.

நான்... வெளியே வந்து கொண்டேயிருக்கிறேன் (அடுத்த பதிவையும் பாருங்க).

என்னவோ தெரியவில்லை இந்த வாரம் சிஃபி.காம் இதழில் படித்த வெங்கட் சாமிநாதனின் பத்தி நினைவுக்கு வருகிறது -

.. நாற்றத்தை நாற்றம் என்றுதானே சொல்லவேண்டும் என்றால், அப்படிச் சொல்வது இன்றைய சூழலில் விவேகமான காரியமில்லை. சமூகம் முழுதுமே கண்டனத்தில் சீறியெழும். ஆனால், சொல்லித் தான் ஆகவேண்டும் என்ற முனைப்பு இருந்தால், சொல்வதற்கு வழிகள் பிறக்கும். குறியீடுகள், உருவகங்கள், உருவகக் கதைகள், சமூக, வரலாற்று விடம்பனங்கள், கேலி, எல்லாம் இத்தகைய சூழலில் எதிர்க் குரலெழுப்பும் சக்தி வாய்ந்த ஆயுதங்களாகக் கூடும்...

27 comments:

  1. //இந்தப் பிரச்சினையில் தார்மீகநிலைப்பாட்டைக் கொண்டவர்களிடம் ஐபியை தருவோம் என்று தெளிவாகவே சொல்லியுள்ளது. //

    ஐயா ஜடாயு,
    தமிழ்மண நிர்வாகம் எங்கே அப்படிச் சொல்லியிருக்கிறது என்று சொல்ல முடியுமா?
    உங்களைப் போன்ற பலரால் தான்தோன்றித்தனமாக சொல்லப்படும் இக்குற்றாச்சாட்டுப் பற்றி எனக்கும் விளக்கம் வேண்டும். அப்படி தமிழ்மண நிர்வாகம் சொல்லியிருந்தால் அதை எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டிய தேவை எனக்குமுள்ளது.
    மீண்டும் கேட்கிறேன், தமிழ்மண நிர்வாகம் எங்கே அப்படிச் சொல்லியிருக்கிறது? இன்றுவரை உங்களைப் போன்று சேறிறைத்துக்கொண்டிருப்பவர்களிடமிருந்து இதற்குரிய பதில் வரவேயில்லை.

    http://blog.thamizmanam.com/archives/95
    இந்தச் சுட்டியைத் தந்து ஏமாற்றிவிடாதீர்கள்.
    அங்கு நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்குரிய எந்த வசனமுமில்லை. ஐ.பி முகவரியையோ பதிவர் பற்றிய இன்னபிற தகவல்களையோ சகபதிவர்களுக்கு வழங்குவோம் என்று தமிழ்மண நிர்வாகம் எவ்விடத்திலும் சொல்லியிருக்கவில்லை. மாறாக அப்படி சகபதிவர்கள் யாருக்கும் வழங்கமாட்டோம் என்றுதான் சொல்லியிரக்கிறார்கள்.
    மேற்படிச் சுட்டியில்தான் நீங்கள் சொன்னபடி நிர்வாகம் சொல்லியிருக்கிறது என்று சொல்கிறீர்களென்றால் தமிழில் ஆனா ஆவன்னாவிலிருந்து தொடங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைதான் இருக்கிறது.

    ReplyDelete
  2. Anonymous7:40 PM

    //இப்படிப்பட்ட ரவுடிகளுக்கு வழக்கமாக கொம்பு சீவிவிடும் தமிழ்மணம், இந்தப் பிரச்சினையில் தார்மீகநிலைப்பாட்டைக் கொண்டவர்களிடம் ஐபியை தருவோம் என்று தெளிவாகவே சொல்லியுள்ளது.//

    அட முட்டாளே, வாசிக்க தெரியாமல் அரவிந்தன் நீலகண்டந்தான் உளரி வைத்தார் என்றால், யோசிக்கவே தெரியாமல் அதை வரிசையாக எல்லோரும் வாந்தியெடுத்ததை இன்னுமா பெருமையாக சொல்லிகொண்டிருக்க போகிறீர்கள். பெயரிலி போட்டு கிழி கிழி என்று கிழித்திருக்கிறார். மானம் உள்ளவன் தவறை ஒப்புகொண்டு மன்னிப்பு கேட்பான். கால்கரி சிவாபெயரிலியின் பதிவையே படிக்காமல், வாங்கி கட்டிகொண்டு, வாங்கி கட்டிகொண்ட விஷயமும் தெரியாமல், தனது முட்டாள்தனத்தையும் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு இவ்வளவு பாரட்டா? இதில் வீராப்பு வேறா? அட முட்டாள்களா?


    இது அரை வேக்காட்டு பொய் என்பதால் இந்த பதில். மற்ற அண்ட புளுகுகளுக்கு எதாவது சொல்லமுடியுமா? ஜெயராமன் ஏன் வாயையே திறக்கவில்லை என்ற கேள்வி கூட எழாத மட ஜென்மங்கள் அல்லது அயோக்கியர்களீடம் என்ன பேச முடியும்?

    ReplyDelete
  3. கொழுவி ஐயா,

    நீங்கள் தந்த சுட்டியில் இப்படிக் கூறப் பட்டிருக்கிறது -

    // எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும். //

    இதற்கான விளக்கமாக பரஸ்பர நம்பிக்கை" என்பதே பதிலாக வந்துள்ளது. ஐ.பி சித்து விளையாட்டுகளை வைத்து பதிவர்களை பிளாக்மெயில் செய்யப் பார்க்கும் குழுக்களுக்கு த.ம மறைமுகமாக அறிந்தோ, அறியாமலோ செய்தி அளிக்கிறதோ என்ற சிறு சந்தேகமே போதும், நம்பிக்கையை இழப்பதற்கு. பூங்கா இதழின் அளவுகடந்த வெறுப்பியல் பின்னணி இந்த சந்தேகங்களை இன்னும் வலுவாக்குகிறது. ஜிகாதிகள் இணையம் மூலமாக விடுக்கும் வெளிப்படையான கொலைமிரட்டல்களும் வேறு இதோடு சேர்ந்து கொள்கின்றன.

    இதுவே பயங்கொள்ளிப் பதிவர்களை ஒரு அராஜக செயலை கண்டிக்கக் கூட யோசிக்க வைக்கிறது. இதற்காக தமிழ்மணம் வெட்கப் பட வேண்டும்.

    ReplyDelete
  4. //எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்.//

    //எமது செயற்பாடுகள் குறித்து //

    எமது செயற்பாடுகள் என..

    அதாவது மிகத் தெளிவாக தமிழ்மணம் தனது செயற்பாடுகள் குறித்து

    அதாவது தமிழ்மணத்தில் எவருள்ளார்.. என்ன செய்கிறார்.. எங்கு போகிறார்..

    என்ற தகவல்கள் குறித்து மட்டுமே தார்மீக அடிப்படையில் தகவல்களைக் கொடுக்க முடியும் என

    தமிழ்மணம் சொல்லியிருக்கிறது.

    மற்றும் படி பதிவரின் செயற்பாடுகள் அல்ல.

    நீங்கள் என்னடா என்றால் பதிவரின் ஐபியை தார்மீக அடிப்படையில் கொடுப்போம் என தமிழ்மணம் சொன்னதாகத் திரிக்கின்றீர்கள். நன்றாகத் தான் திரிக்கின்றீர்கள்.

    தமிழ் கூட படித்து தெரிந்து புரிந்து கொள்ள முடியாதவரா நீங்கள் ? ஒரு வேளை ஆங்கிலத்தில் எழுதினால் புரிந்து கொண்டிருப்பீர்களோ..

    என்ன புரிதலோ என்ன அறிதலோ..? உங்கள் புரிந்துணரும் ஆற்றல் குறித்து புரிந்து எனக்குள் சிரித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  5. Anonymous8:29 PM

    அடேய் முட்டாள், எல்லாருடைய பொறுமைக்கும் அளவு இருக்கிறது. ஒரு முறை எந்த வரிக்க என்ன அர்ர்த்தம் என்று யோசித்து விட்டு எழுது, பெயரிலி பதிவை ஒருமுறையாவது மீண்டும் நிதானமாக படி. முட்டாள்தனதை இவ்வளவு பெருமையாக காட்டிக்கொள்ளாதே!

    ReplyDelete
  6. Anonymous8:44 PM

    ஏன் பெயரிலி பதிவுகளில் யாரும் பின்னூட்டம் போடுவதில்லை? ஏனென்றால், சும்மா யாரேனும் பாராட்டி போட்டாலே, அதன் ஐபியை வைத்துக்கொன்டு, நீ இங்கே இருந்து வந்திருக்கிறாய், என்று வெறியாட்டம் ஆடும் புண்ணியவான் அது. அதனால் யாரும் அதனை படிக்கக்கூட போவதில்லை.

    அதன் கையில் தமிழ்மணமே கிட்டினால் எப்படி இருக்கும்? எல்லோர் ஐபியையும் வைத்துக்கொன்டு, யாரெல்லாம் பிலிக்கு எதிராக எழுதினார்கள் என்று மூக்கை தரையில் தேய்த்துக்கொண்டிருக்கும்

    யாருக்கும் புரியாத பிளிறலில் தனக்குத்தானே பட்டம் கொடுத்துக்கொன்டு பாயை பிராண்டும் ஜந்து அது.

    இந்த லட்சண்த்தில், அவர் பதிவில் விளக்கம் கேட்டு எழுதிய அப்பாவிகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

    ReplyDelete
  7. கொடுந்தமிழ் அறிவாளி என்னை திட்டிவிட்டாராம் அதை எண்ணி புளகாங்கிதம் கொள்கிறது ஒரு அனானி. சிம்பிள், நான் கேட்ட கேள்விக்கு நேரடி பதில் தேவை. அந்த கால வானிலை அறிக்கை மாதிரியான பதில் இல்லை.

    வெட்டிபயலின் நறுக்கான பதிலைப் பார்த்து பின்வாங்கியவர்தானே கொடுந்தமிழ் அறிவாளி.

    இதோ அவர்களின் பதில் "// எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும். //

    இதில் தார்மீக காரணங்களுக்கு ஒரு டெபனிஷன் கொடுங்கையா என கேட்டேன். அதுக்கு பதிலில்லாமல் கொடுந்தமிழில் வாந்தி எடுப்பது அறிவாளியாம்.

    அப்புறம் அனானி நாந்தான் போதுமையா போதும் என வந்துட்டேனில்லே அதுக்கப்புறம் அதை எடுத்து பதிவெல்லாம் போட்டு திரும்ப திரும்ப ஏன்யா ஆப்படிச்சிகிறீங்க.

    நானெல்லாம் போனபிறகு திராவிட கம்யூனீச ஜிகாத பதிவுகளை போட்டு கும்மி அடிக்க வேண்டியதை விட்டு திரும்ப திரும்ப ஏன்யா சொறிஞ்சு விடறீங்க

    ReplyDelete
  8. ஸ்ப்ப்ப்பா பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது, மத்தவால்லாம் சுத்தி வளைச்சி பேசிண்டிருந்தா, நீர் நன்னா நேரடியா சொல்லிட்டேள், ஜடாயு தெள்ளத்தெளிவா என்ன சொல்றார் புரியுதோன்னா புரியுதோ?....

    ReplyDelete
  9. Anonymous9:07 PM

    Shame on you!

    If you really interested in truth rather than your group's dirty politics and issue diversion go to
    the following links and think about
    the so called truth you people are
    propagating

    http://wandererwaves.blogspot.com/2007/04/i.html

    http://koluvithaluvi.blogspot.com/2007/04/blog-post_23.html

    ReplyDelete
  10. Anonymous9:42 PM

    //
    தமிழ்மணத்தில் தங்கள் பதிவுகளை இணைத்துள்ளவர்களில் குறைந்தது ஒரு 30 பதிவர்களாவது பிராமணர்களாக இருப்பார்கள். உள்ளே தினம் தினம் இழிவுக்கு ஆளாகிக் கொண்டு சகித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றார்கள். இந்த சமயத்தில், நேசகுமாருடன் முழுமையாக ஒப்பவில்லை என்றால் கூட அவர் சொன்னவற்றில் தமிழ்மணம் இடமளிக்கும் அப்பட்டமான பிராமண வெறுப்பு குறித்த கருத்து குறித்தாவது கொஞ்சமாவது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கலாம். அதில்லாமல் உள்ளே அமர்ந்து கொண்டு வாய்மூடி, இந்தக் கும்பல்களுடன் சிரித்து (அடி வாங்கிக்) கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சமூகம் இந்த அளவுக்கு அடிபடுவதில் வியப்பென்ன? வேறு எந்த சாதியையோ, மதத்தையோ எதாவது ஒரு தளத்தில் இப்படி திட்டமிட்டு கேவலப்படுத்துவதற்கு அனுமதித்தால் அங்கே இன்னேரம் என்ன நிகழ்ந்திருக்கும் என்று யூகித்துப் பாருங்கள். பரசுராமரின், சாணக்கியரின், மங்கள் பாண்டேயின், பாரதியின் மரபில் வந்தவர்கள் தானா இவர்கள்?
    //

    அத்தான் நம்ம விடாது கருப்பு கரிக்டா சொல்லிகிறாருல்ல..!

    பாப்பான்னா கூட்டிக் கொடுத்து மேல வர்ரவன்னு...! அந்த சாதி பாப்பான்னு வெச்சுக்கோ!

    ReplyDelete
  11. //
    தமிழ்மணத்தில் தங்கள் பதிவுகளை இணைத்துள்ளவர்களில் குறைந்தது ஒரு 30 பதிவர்களாவது பிராமணர்களாக இருப்பார்கள். உள்ளே தினம் தினம் இழிவுக்கு ஆளாகிக் கொண்டு சகித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றார்கள்.
    //

    இவன எவ்வளவு வேணா அடிக்கலாம் டா, இவன் அழல்ல டா...இவன் ரொம்ப ரொம்ப நல்லவண்டா..!

    அந்த நல்லவன் பட்டத்துக்காகத்தான் எச்சில் இலைகளை நக்கும் பிராமணர்கள் அவர்கள்.

    வடகலை, தென்கலை எல்லாம் இல்லை, இவர்கள் எச்சக்கலை பிராமணர்கள். (நன்றி சுஜாதா)

    ReplyDelete
  12. ////எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும். //
    "எமது செயல்பாடுகள் குறித்த தகவல்களை தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால் மட்டுமே" (For valid ethical reasons we will give the data regarding our activities) என்று வாக்கியம் அமைந்திருந்தால் சரி. "எமது செயல்பாடுகள் குறித்து தார்மீகக் காரணங்களுக்காக நாமே விரும்பினால் மட்டுமே தகவல்களை" (As for our activities are concerned, we will give the data voluntarily for ethical reasons) என்று சொன்னால் இந்த தகவல்களை என்பது "எமது செயல்பாடுகள் குறித்த தகவல்களை" என கொள்வதா? "எமது செயல்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக பதிவர்கள் குறித்த தகவல்களை" எனக் கொள்வதா? ஆக ஒழுங்காக எழுதத்தெரியாமல் இடியாப்ப குழப்பமாக ஒரு வாக்கியத்தை எப்படி வேண்டுமானாலும் பொருள் படும்படியாக போட்டுவிட்டு அதனை தெளிவு படுத்த கோரினால் 24 மணிநேரத்தில் ஆட்டோ அடியாளை அனுப்புவதற்கு இணையாக திரட்டியிலிருந்து தள்ளிவைப்போம் என கூறும் பாசிச ரவுடித்தனம் காட்டும் தமிழ் மணத்துக்கு வக்காலத்து ஒன்றுதான் குறை.இதற்கு மேல் இரண்டு பக்கமும் விவாதித்துக்கொண்டே போகலாம். ஆனால் ஒரு விளக்கம் கேட்டால் ஒரு ஐயப்பாட்டினை கூறினால் அதனை நிவர்த்திக்க வக்கில்லாமல் நீ என்னை எப்படி கேட்கலாச்சு என்று பேசுகிற தமிழ்மண பாசிச ரவுடித்தனம்தான் இங்கே பிரச்சனை. அதற்கான எதிர்ப்பே பல பதிவர்களின் வெளிநடப்பு.

    ReplyDelete
  13. Anonymous7:51 AM

    //மத்தவால்லாம் சுத்தி வளைச்சி பேசிண்டிருந்தா, நீர் நன்னா நேரடியா சொல்லிட்டேள், ஜடாயு தெள்ளத்தெளிவா என்ன சொல்றார் புரியுதோன்னா புரியுதோ?...//

    சுத்தமா புரியலை குழலி.
    அந்த கும்பல்ல சேர்ந்து உங்களுக்கும் அந்த வியாதி தொத்திகிடிச்சின்னு நெனக்கிறேன்.

    வேணும்னா, உங்க தாய்மொழியான பிராகிருதத்திலோ, அல்லது சமஸ்கிருதத்திலோ எழுதிப்பாருங்களேன். புரியறமாதிரி வருதான்னு பாக்கலாம்.

    ReplyDelete
  14. Anonymous8:09 AM

    நீ தமிழ்மணத்திலிருந்து மட்டுமல்ல இந்தியாவிலிருந்தே ஓடிப்போய்விடு.
    நாடோடி நாய்களுக்கு நாக்கு நீளுதோ?கூட்டிக் கொடுத்தே பிழைக்கும் உன் இனத்திற்கு எங்கு போனாலும் வேலை இருக்கும்.மாமா வேலையையே முழு நேரத்தொழிலாக
    கொண்ட பாப்பார பசங்க எல்லாரும் ஓடுங்கடா.தெரு நாய்களாக வந்த உங்களுக்கு இந்தியாவின் இறையாமையைப் பத்தி பேச அருகதை இல்லை.

    ReplyDelete
  15. //அதற்கான எதிர்ப்பே பல பதிவர்களின் வெளிநடப்பு.//

    பல பதிவர்கள்னா யாருங்க? அரவிந்தனும், ஜடாயுமா? :-))))

    எப்படியோ சாதிவெறி, மதவெறி கசடுகள் அதுவாகவே வெளியேறினால் சரி. ஆரோக்கியமான வலைச்சூழல் கண்டிப்பாக உருவாகும்.

    ReplyDelete
  16. Thanks for the holiday work.

    cheers mate!

    ReplyDelete
  17. Anonymous2:35 PM

    //நாடோடி நாய்களுக்கு நாக்கு நீளுதோ?கூட்டிக் கொடுத்தே பிழைக்கும் உன் இனத்திற்கு எங்கு போனாலும் வேலை இருக்கும்.மாமா வேலையையே முழு நேரத்தொழிலாக
    கொண்ட பாப்பார பசங்க எல்லாரும் ஓடுங்கடா//

    இதோ பாருடா அரபுகாரனுக்கு பொண்டாட்டிய கூட்டி கொடுத்து ஏமாந்தவன் புலப்புறத...

    ReplyDelete
  18. Anonymous2:58 PM

    //எப்படியோ சாதிவெறி, மதவெறி கசடுகள் அதுவாகவே வெளியேறினால் சரி. ஆரோக்கியமான வலைச்சூழல் கண்டிப்பாக உருவாகும்.//

    ஆமாம், ஆரோக்கியமான வலைச்சூழல் அப்படின்னா எங்க லக்கி?.....கருணாநிதி புகழ் பாடுவதும், திராவிட நஞ்சினைக் கக்குவதும், 3%, 12% அப்படின்னு பேசுவதும், இந்துக் கடவுள்களை மட்டும் ஏசுவதுமா?....

    ReplyDelete
  19. அரவிந்தன் கூறியது போல இடியாப்ப வாக்கியங்களைப் போட்டு குழப்பம் தான் தமிழ்மணம் அறிவிப்பில் இருக்கிறது.

    இங்கே சாதி பெயரைக் கூறி ஏசும் மறுமொழிகளை அனுமதித்திருக்கிறேன். தமிழ்மணத்தில் இணைக்கப் பட்டுள்ள பதிவுகளில் எதைப் பற்றி எழுதினாலும் இத்தகைய மறுமொழிகள் வரும்.

    // எப்படியோ சாதிவெறி, மதவெறி கசடுகள் அதுவாகவே வெளியேறினால் சரி. ஆரோக்கியமான வலைச்சூழல் கண்டிப்பாக உருவாகும். //

    அப்படியா லக்கிலுக்? மூச்சுக்கு முன்னூறு தடவை சாதியைச் சொல்லிச் சொல்லித் திட்டும் சூழல் உங்களுக்கு ரொம்ப ஆரோக்கியமாகத் தென்படுகிறது. வாழ்க!

    ReplyDelete
  20. //நீ தமிழ்மணத்திலிருந்து மட்டுமல்ல இந்தியாவிலிருந்தே ஓடிப்போய்விடு.
    நாடோடி நாய்களுக்கு நாக்கு நீளுதோ?கூட்டிக் கொடுத்தே பிழைக்கும் உன் இனத்திற்கு எங்கு போனாலும் வேலை இருக்கும்.மாமா வேலையையே முழு நேரத்தொழிலாக
    கொண்ட பாப்பார பசங்க எல்லாரும் ஓடுங்கடா.தெரு நாய்களாக வந்த உங்களுக்கு இந்தியாவின் இறையாமையைப் பத்தி பேச அருகதை இல்லை.//

    ஜடாயு, மேலுள்ள பின்னூட்டங்களை ஒத்த பதிவுகளை தான் லக்கிலுக்கு சுத்தமான பதிவுகள் என்கிறார். இந்த மாதிரி பதிவுகளை வைத்து மணம் வீசினால் என்ன வீசாவிட்டால் என்ன

    ReplyDelete
  21. கொழுவி,

    தமிழ்மணம் Personal identity ஐ தந்திருப்பார்களோ என நேசகுமார் ஐயத்தினை கிளப்பினார்.

    அதற்கு பதில் தான் //எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்.//

    இங்கே அவர்களின் செயல்பாடு என்பது Personal identity ஐ தருவது.

    எப்போதுமே இடம் பொருள் ஏவல் அறிந்து பேசவேண்டும். வார்த்தைகளை மட்டும் தனித்தனியே எடுத்துப் பார்த்தால் விகல்பம்தான் மிஞ்சும்.

    நான் Personal identity ஐ தருவதையும் ஆட்சேபிக்கவில்லை, தார்மீக காரணம் என்றால் என்ன என்பதே என் கேள்வி.

    என் கேள்விக்கு பதில் பரஸ்பர நம்பிக்கை என வந்தது. அவர்களிடம் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் விலகிவிட்டேன்.

    அதைவிட்டு வழக்கமான திராவிட ஜல்லியடிகள் தொடர்கின்றன.

    இவைதான் உங்களுக்கு இன்பம் என்றால் செய்துக் கொள்ளுங்கள் யார் வேண்டாம் என்றார்

    ReplyDelete
  22. Anonymous3:54 PM

    ///பாட மறுக்கும் பாப்பாத்திகள்" என்று ஒரு ரவுடி எழுதுகிறான்.///

    என் நன்பர் வரவணையான் செந்திலை ரவுடி என்று நீங்கள் குறிப்பிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் மிஸ்டர் ஜடாயு.

    அந்த பதிவுக்கு பதிலைக்கானோம்...அதை விடுத்து ரவுடி என்று நீங்கள் குறிப்பிட்டது உங்கள் நேர்மையற்ற செயலை குறிக்கிறது. நீங்கள் ஏன் அவ்வாறு எழுதி இருக்கிறீர்கள் என்று விளக்கம் தரமுடியுமா ?

    ரவுடி என்றால் அவர் என்ன கடைகளில் மாமூல் வசூலித்து வயிறு வளர்க்கிறாரா ? அல்லது கூலி வாங்கிக்கொண்டு கொலைத்தொழில் செய்கிறாரா ?

    தயவு செய்து விளக்கவும்...!!!

    ReplyDelete
  23. Anonymous4:41 PM

    //அதற்கான எதிர்ப்பே பல பதிவர்களின் வெளிநடப்பு.//

    பல பதிவர்கள்னா யாருங்க? அரவிந்தனும், ஜடாயுமா? :-))))


    ஜடாயு அய்யா !! இதுக்கு மொதல்ல பதில் சொல்லுங்க...

    ReplyDelete
  24. // என் நன்பர் வரவணையான் செந்திலை ரவுடி என்று நீங்கள் குறிப்பிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் மிஸ்டர் ஜடாயு.

    அந்த பதிவுக்கு பதிலைக்கானோம்...அதை விடுத்து ரவுடி என்று நீங்கள் குறிப்பிட்டது உங்கள் நேர்மையற்ற செயலை குறிக்கிறது. நீங்கள் ஏன் அவ்வாறு எழுதி இருக்கிறீர்கள் என்று விளக்கம் தரமுடியுமா ? //

    ரவி, ரோட்டோரும் நின்றுகொண்டு பெண்களைக் கேலி செய்யும் ரவுடிகள் தான் இப்படிப் பட்ட மொழியைப் பயன்படுத்துவார்கள். அதனால் தான் அப்படி சொன்னேன்.

    அதுவும் சுதா ரகுநாதன், எஸ்.சௌம்யா, அருணா சாயிராம் போன்ற உலக அளவில் மதிக்கப்படும் பெண் கர்நாடக இசைக் கலைஞர்களைக் குறித்து இந்த விளித்தல்! பிராமணப் பெண்களை ரோட்டில் கேலி செய்த அதே ரவுடித்தனம் இணையத்திலும் எதிரொலிக்கிறது, இல்லையா?

    "சாதி வெறி வேண்டாம் ஆ ஊ" என்று ஊளையிடுகிறீர்கள். ஆனால் உங்கள் நண்பன் எழுதிய இத்தகைய இழிவான சாதிவெறுப்பு வசைபாடலுக்காக வக்காலத்து வேறு வாங்க வருகிறீர்கள்! உங்கள் நண்பன் செயலுக்காக நீங்கள் உண்மையில் வெட்கப் பட வேண்டும்.

    இஸ்லாமின் வன்முறைக் கருத்தியலை எதிர்த்து விவாதக் களத்தில் எழுதும் நேசகுமாரோ, கால்கரி சிவாவோ ஒருமுறையாவது அந்த சமூகத்தினரைக் குறிப்பிடும் திட்டு வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்களா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  25. // பல பதிவர்கள்னா யாருங்க? அரவிந்தனும், ஜடாயுமா? :-))))

    ஜடாயு அய்யா !! இதுக்கு மொதல்ல பதில் சொல்லுங்க... //

    எண்ணிக்கை விஷயம் அல்ல இது. இதற்கும் முன்பே தேர்ந்த எழுத்தாளரான பி.கே.சிவகுமார் தமிழ்மணத்தின் மீது நம்புக்கையின்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

    வெ.சா (வெங்காய சாம்பார் அல்ல, வெங்கட் சாமிநாதன்) வரிகளை இன்னொரு முறை படித்துப் பாருங்க. அதிலேயே விடை இருக்கிறது.

    ReplyDelete
  26. Anonymous1:40 PM

    செந்தழல் ரவி அவர்களே,

    ஒரு சமூகத்தின் பெண்ணினத்தை கேவலமான சொல்லினால் குறிப்பிடும் ஒருவரை உங்கள் நண்பர் என்று சொல்லும் நீங்கள் 'அவரை ரவுடி என்று ஏன் சொன்னீர்கள்' என்று கேட்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டீர்கள் என்பது என் எண்ணம்.

    ReplyDelete
  27. //இங்கே அவர்களின் செயல்பாடு என்பது Personal identity ஐ தருவது. //

    இல்ல.. அந்த பத்தி நேசக்குமாரின் இரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கிறது.
    1. ஐ.பி லீக்
    2. தமிழ்மணம் ஆட்கள் யாரெல்லாம் அவங்க என்ன செய்கிறாங்க.

    தார்மீக அடிப்படையில் தருவோம் என்பது 2 கேள்விக்கான பதில். இது தெளிவாகவே தெரிகிறது.

    anyway an old issue. Just happen to read these things. Very unfortunate things turned out thisway.

    ReplyDelete