Tuesday, December 07, 2010

இந்திய மதப்பிரிவினை சட்டம் (Article 30) = பண்பாட்டு அழிவு?

அரசு நிதியில் இயங்கும் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களும் மத அடிப்படையில் பெருமளவில் இட ஒதுக்கீடு செய்ய வழிவகுக்கும் சர்ச்சைக்குரிய இந்திய சட்டம் இது...

தில்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி தொடங்கி மதுரை அமெரிக்கன் கல்லூரி வரை இந்தச் சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்யும் அடாவடிகள் கடந்த சில ஆண்டுகளாக அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்...

இதன் நீண்டகால விளைவுகள் என்னவாக இருக்கும்? - என்பது பற்றி நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் ஷெல்லிங்கின் ஒரு அறிவியல்பூர்வமான கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்ந்து டாக்டர் மூர்த்தி முத்துசுவாமி என்பவர் எழுதிய ஒரு கட்டுரையை நான் மொழிபெயர்த்திருக்கிறேன் -

Saturday, December 04, 2010

கவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்

தண்ணீரே அனைத்துக் குலங்களுக்கும் தாயல்லவோ? தண்ணீரின் குலம் என்ன என்று தெரியுமோ?… பகவான் தரிசனம் தந்து விட்டார். ஆனால் தன் வாழ்நாளின் கடைசிவரை கனகதாசர் கோயிலுக்குள் நுழையவே இல்லை. உடுப்பியில் அவர் நின்று பாடிய வீதியில் கோயிலுக்கு வெளியே அவருக்கு ஒரு சிறு நினைவு மண்டபம் உள்ளது. அதில் கனகதாசரின் திருவுருவச் சிலைக்கு மாலை போட்டு வைத்திருக்கிறார்கள்…

முழுதும் படிக்க: http://www.tamilhindu.com/2010/11/kannada-nandhanar-kanakadasa/

Monday, November 22, 2010

ஒரு தேசம், இரு உரைகள்

... சாதாரண பாமர மக்களின் இந்த சாதாரண பாமர முட்டாள்தனத்தை அருந்ததி ராய் போன்ற அறிவுஜீவி எழுத்தாளரால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? எனவே துப்பாக்கிகளும், துவேஷ பிரசாரங்களும், ரத்தக்களறிகளும் தான் அவர்களது மீட்புக்கு வழி என்று போதிக்கிறார். ...

முழுதும் படிக்க - http://www.tamilhindu.com/2010/11/a-nation-and-two-speeches/


Wednesday, November 17, 2010

சமீபத்திய கட்டுரைகள்....

பெப்ரவரிக்குப் பிறகு இந்த வலைப்பதிவை அப்டேட் செய்யவில்லை. அப்போது முதல் அக்டோபர் வரை எழுதியவற்றின் சுட்டிகள் இங்கே..

தமிழ்ஹிந்து:

திண்ணை: