Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Saturday, December 04, 2010

கவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்

தண்ணீரே அனைத்துக் குலங்களுக்கும் தாயல்லவோ? தண்ணீரின் குலம் என்ன என்று தெரியுமோ?… பகவான் தரிசனம் தந்து விட்டார். ஆனால் தன் வாழ்நாளின் கடைசிவரை கனகதாசர் கோயிலுக்குள் நுழையவே இல்லை. உடுப்பியில் அவர் நின்று பாடிய வீதியில் கோயிலுக்கு வெளியே அவருக்கு ஒரு சிறு நினைவு மண்டபம் உள்ளது. அதில் கனகதாசரின் திருவுருவச் சிலைக்கு மாலை போட்டு வைத்திருக்கிறார்கள்…

முழுதும் படிக்க: http://www.tamilhindu.com/2010/11/kannada-nandhanar-kanakadasa/

Wednesday, February 17, 2010

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம்

சாதிகள், சாதியம் இவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியம் குறித்து இந்து தருமம் கூறுவதென்ன? சாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா? சாதியத்தை எதிர்க்க இந்து தருமம் அளிக்கும் கருத்தியல் என்ன? இத்தகைய கேள்விகளுக்கு இந்தச் சிறு நூல் சுருக்கமாக விடையளிக்க முயல்கிறது.

நண்பர்கள் அரவிந்தன் நீலகண்டன், பனித்துளி, அடியேன் மூவரும் இணைந்து எழுதியிருக்கும் இந்தச் சிறு நூல் தமிழ்ஹிந்து தளத்தில் தொடராக வந்து கொண்டிருக்கிறது..

தொடரின் அனைத்துப் பகுதிகளையும் இங்கே படிக்கலாம்.

காதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்

இருபாலருக்கும் இடையில் இயல்பான, ஆரோக்கியமான, பாலியல் சாராத அதே சமயம் ஆர்வமூட்டுகிற (non-sexual, yet exploratory) நட்புகளைப் புரிந்துகொள்ளவோ, ஊக்குவிக்கவோ இன்னும் முழுமையாகத் தயாராகாத ஒரு சமூகத்தில், காதலர் தினத்தின் வருகையை இத்தகைய வருடாந்திர வெள்ளத்திற்குத் தான் ஒப்பிடத் தோன்றுகிறது… அதன் பக்கவிளைவுகள் எப்போதுமே துயரம் தரக் கூடியவை. மேலும், அவற்றை எப்போதுமே நாம் தவறில்லாமல் கணித்துவிடவும் முடியும்!...

முழுதும் படிக்க: இங்கே.

Sunday, September 13, 2009

கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?

மூலம்: தருண் விஜய், தமிழில்: ஜடாயு

ஷா ஆலம் (மலேசியா) பகுதியில் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தினர் மதவெறி கோஷங்களை எழுப்ப தலைவரான ஹாஜி சொன்னார் - “கோயில் கட்டுமானம் மட்டும் தொடர்ந்தால் இங்கே ரத்த ஆறு ஓடும்” … தாங்கள் ஒரு குற்றமும் செய்யாதபோதும், கோயம்புத்தூர் முதல் கோலாலம்பூர் வரை, காட்மாண்டு முதல் ஜெட்டா வரை ஏன் எல்லா இடங்களிலும் கொத்துக் கொத்தாக இந்துக்கள் படுகொலைக்கு எளிய இலக்காகின்றனர்? இந்துக்கள் படும் காயங்கள் பல துறைகளிலும் செல்வாக்குள்ள தலைவர்களாக உள்ள இந்துக்களாலேயே கண்டுகொள்ளாமல் ஒதுக்கப் படுகின்றன. ஏன்? ....

முழுக்கட்டுரையும் தமிழ்ஹிந்து தளத்தில் படிக்கலாம்.

Wednesday, August 12, 2009

வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: வள்ளுவர், சர்வக்ஞர்

... குடகு மலையில் தோன்றும் காவிரி என்கிற கன்னடத்தி, மலைமுகடுகளில் இளநடை பயின்று தன் யௌவனத்தின் முழுப் பொலிவுடன் தமி்ழச்சியாகித் தன் மணாளனாகிய சமுத்திர ராஜனை ஆதுரத்துடன் சென்று தரங்கம்பாடியில் தழுவிக் கொள்கிறாள், பின்னர் கடலோடு கலந்து உலகப் பிரஜையாக உருமாறி விடுகிறாள். இயற்கையே செய்திருக்கும் ஏற்றமிகு ஏற்பாடு!...

முழுக்கட்டுரையும் தமிழ்ஹிந்து.காம் தளத்தில் படிக்கலாம்..

Friday, July 03, 2009

மும்பை இந்து-கிறிஸ்தவ உரையாடல்கள்: ஒரு பார்வை

”சகிப்புத் தன்மையுள்ள நாடான இந்தியாவில், ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடப்பது ஏன்” என்றார் வாத்திகன் பிரதிநிதி. ஆனால், இந்துத் துறவியர் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் கிறிஸ்தவ மதப்பிரசாரம் மற்றும் மதமாற்றங்களே என்பதை ஆணித்தரமாக முன்வைத்தனர். இந்துத் தரப்பின் சார்பாக வெளியிடப் பட்ட அறிக்கையின் மையமான கருத்துக்கள்...

தமிழ்ஹிந்து.காம் தளத்தில் முழுக் கட்டுரையையும் படிக்கலாம் -

http://www.tamilhindu.com/2009/06/mumbai-inter-faith-meet-jun09/

Tuesday, July 15, 2008

வேர்ல்டுவிஷன்(World Vision) அமைப்புக்கு நன்கொடை அளிக்காதீர்கள்!

வேர்ல்டு விஷன் (World Vision) என்கிற இந்த அப்பட்டமான கிறிஸ்தவ மதமாற்ற அமைப்பு இந்திய சமூகத்திற்கு சேவை செய்வதாக உணர்ச்சிகரமான பிரசாரத்தை பெரும் பொருட்செலவில் பல்வேறு ஊடகங்களிலும், பல்வேறு விதமான விளம்பர யுக்திகள் மூலம் செய்து வருகிறது. தொலைக்காட்சி, பத்திரிகைகள், இணையம் ஒன்று விட்டுவைக்காமல் இந்தியாவின் ஏழைக் குழந்தைகளின் முகங்களைக் காட்டி தங்கள் மத ஆக்கிரமிப்பு அரசியல் அதிகாரத்திற்கு நியாயம் கற்பிக்கும் இந்த அமைப்புக்கு பல மத்திய வர்க்க இந்துக்கள் அப்பாவியாக நன்கொடைகளும் அளித்து வருகின்றனர்.

உலகெங்கும் NGO என்ற போர்வையில் தன் கரங்களை விரித்திருக்கும் இந்த அதிகார அமைப்பு அப்பட்டமான கிறிஸ்தவ மதவெறியர்களாலும், அடிப்படை வாதிகளாலும் நடத்தப் படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தங்கள் எஜமானர்களிடமிருந்து பெறும் கணக்கிலடங்கா பணபலம் போதாதென்று இந்த அமைப்பு நடுத்தர வர்க்க இந்தியர்களைக் குறிவைத்து, அவர்களிடம் நன்கொடைகள் வேண்டி பயங்கர பிரசாரமும் செய்கிறது.

திடீரென்று உங்கள் முகவரிக்கு வேர்ல்டு விஷனிடமிருந்து ஒரு கடிதம் வரும் -ஆந்திராவில் ஒரு குக்கிராமத்தில் உள்ள ஆஞ்சனேயா என்ற சிறுவனுக்கு உதவுங்கள் என்ற அப்பாவித் தனமான கோரிக்கையோடு. அந்த வண்ணமயமான விளம்பர நோட்டீசில் லேசாக ஓரத்தில் "World Vision is a Christain Charity" என்று குறு-அச்சில் (fine print) இருக்கும், கிரெடிட் கார்டு பில்களில் சம்பிரதாயமாக பின்பக்கம் அச்சிட்டிருப்பது மாதிரி.. இவர்களுக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு அதனால் பயன்பெறுபவர்கள் என்று சிறுவர் படங்கள் பளபள லேமினேட்டில் அனுப்பி வைக்கப் படும் - இதைப் பெருமையாக, என் இந்து நண்பர் ஒருவர் காண்பிக்க வேறு செய்தார்!

ஏழைகளுக்குத் தானே உதவுகிறார்கள், அதனால் என்ன என்று காஷுவலாக இவர்களுக்கு நன்கொடை அளிக்கும் மேல்தட்டு, நடுத்தர வர்க்க இந்துக்களே !

நீங்கள் கஷ்டப் பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தை எந்த கிறிஸ்தவ மிஷநரி அமைப்புக்கும் தயவு செய்து கொடுக்காதீர்கள். உங்கள் தர்மத்தையும், நம்பிக்கையையும் குழிதோண்டிப் புதைப்பதற்காக ராப்பகலாக வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு பேய்த்தனமான ஆக்கிரமிப்பு நிறுவன சக்தியின் கரங்களை உங்கள் பணத்தால் வலுப்படுத்துவது தற்கொலைக்கு ஒப்பான செயல் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? இது நீங்கள் வணங்கும் தெய்வத்திற்கும், உங்கள் முன்னோர்களின் புனித நினைவுக்கும், உங்களை ஊட்டி வளர்த்த இந்த மண்ணுக்கும், நீங்கள் அங்கம் வகிக்கும் இந்து சமுதாயத்திற்கும் இழைக்கும் துரோகம் அன்றி வேறில்லை.

ஏனென்றால், இவர்களது விஷன் உலக நல்வாழ்வோ, மனித சுதந்திரமோ அல்லவே அல்ல. மேற்கில் தேய்ந்து, மறைந்து, சிதறி வரும் கிறிஸ்தவ அரசியல் அதிகாரத்திற்கு வளரும் நாடுகளில் இடம் தேடுவது, அவ்வளவே. தங்கள் குப்பைகளை வெளிநாடுகளில் கொட்டுவதற்குக்
காண்டிராக்ட் தருவது போல, தாங்களே நம்பாத கிறிஸ்தவத்தை இந்தியாவிலும், சீனாவிலும் மார்க்கெட் செய்வது வணிக, அதிகார நோக்கில் சாதகம் தரும் என்று தான் மேற்கு நாடுகளின் சில செல்வந்தவர்களும், நிறுவனங்களும் இத்தகைய "விஷன்"களுக்கு ஆதரவும், பொருளுதவியும் அளித்து வருகின்றனர், இதன் பின் எந்த "ஆன்மிக" நோக்கமும் இல்லை.

கிறிஸ்தவ மிஷநரிகளின் வரலாறு முழுவதும் அதைத் தான் சொல்கிறது.


வேர்ல்டு விஷன் மட்டுமல்ல, பல வேடங்களில் சமூக சேவை என்ற போர்வையில் மதமாற்றம் செய்யும் அனைத்து அமைப்புகளையும் இந்துக்கள் தவிர்க்க வேண்டும். இதோ ஒரு பட்டியல் -


நீங்கள் சமூகப் பணிகளுக்காக நன்கொடைகளும், உதவிகளும் கண்டிப்பாக செய்ய வேண்டும். ஏராளமான இந்து அமைப்புகள் எந்தக் கூச்சலும் இல்லாமல், மிகப் பெரிய அளவில், எந்தப் பாரபட்சமும் இல்லாமல் இந்தியர்கள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் அருமையான சேவைப் பணிகளைச் செய்து வருகின்றன. அந்த அமைப்புகளுக்கு உதவலாமே !


அது மட்டுமில்லாமல், உங்கள் ஊரில், நீங்கள் வாழும் பகுதியிலேயே கல்வி, மருத்துவம், சுயதொழில் போன்றவற்றுக்கு உதவும் பல சிறு அமைப்புகள் இருக்கலாம். எந்த உள்நோக்கமும் இல்லாத இத்தகைய அமைப்புகள் ஆரவராமில்லாமல் பல நல்ல பணிகளைச் செய்துவரும். அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தும் நீங்கள் உதவலாமே!

இந்திய தேசிய ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் விரும்பும் கிறிஸ்தவர்களும் வேர்ல்டு விஷன் போன்ற மதமாற்ற அமைப்புகளின் செயலுக்குத் துணைபோகக் கூடாது. உள்நோக்கம் இல்லாத சமூக சேவையை மட்டுமே அவர்கள் ஆதரிக்கவேண்டும்.


மகாத்மா காந்தி சொல்கிறார் -

“எனது அச்சம் இது தான் – இந்து மதம் பொய் என்று இப்போதைக்கு கிறித்தவ நண்பர்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் அவர்களது மனதில் இந்துமதம் தவறானது, தாங்கள் நம்பும் கிறித்தவ மதமே உண்மை என்ற எண்ணங்களை வளர்த்து வருகிறார்கள். இப்போது நடக்கும் கிறித்தவ (மதமாற்ற) முயற்சிகளையெல்லாம் பார்க்கும்போது, இந்துமதத்தின் அடிப்படையை வேரறுத்துவிட்டு அங்கு வேறு ஒரு மதத்தை நிறுவப் பார்ப்பது தான் அவர்களது நோக்கம் என்பது புரியும்”

– ஹரிஜன், மார்ச் 13, 1937.

“என்னிடம் மட்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்தால், எல்லா மதமாற்றங்களையும் நிறுத்தி விடுவேன். இந்து குடும்பங்களில் ஒரு மிஷநரியின் வருகை என்பது குடும்பத்தைக் குலைக்கும் செயல்; உடை, ஒழுக்கம், மொழி, உணவு உள்பட கலாசாரத்தையே மாற்றும் செயல் என்றே ஆகிவிட்டிருகிறது”

- ஹரிஜன், நவம்பர் 5, 1935.

ஏழை இந்து மாணவர்கள் கல்விக்கு உதவுங்கள்

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கயுள்ள இந்து மாணவ, மாணவியர்களின், படிப்பிற்காக இளைய பாரதம் சேவா டிரஸ்ட் நிதி உதவி கோருகிறது. இந்த உதவி நேரடியாக வறுமையில், துயரத்தில் வாடும் அடித்தட்டு இந்துக் குடும்பங்களைச் சேர்ந்த் மாணவர்களைச் சென்றடையும்.

இளய பாரதம் சேவா டிரஸ்ட் அறக்கட்டளை இந்தியாவின் முன்னணி மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தமிழகக் கிளையின் தொண்டுப் பிரிவாகும். கடந்த11 வருடங்களாக இந்த அறக்கட்டளை பல தொண்டுப் பணிகளை செய்துவருகிறது.

மறைந்த இந்து சமூகத்தொண்டர் மதுரை பேராசிரியர் கே. ஆர்.பரமசிவன் நினைவு வாராந்திர இலவச மருத்துவ ஆலோசனை முகாம் ஒன்றினை கடந்த 10 வருடங்களாக இடைவெளி இல்லாமல் நடத்தி வருகிறது. இதில் வாரந்தோறும் சுமார் ரூ5000 மதிப்புள்ள மருந்துகளை இலவசமாக வழங்கிவருகிறது . சென்னை ஆலந்தூர் நகராட்சிப் பகுதியில் கடந்த 4 வருடங்களாக காசநோய் தடுப்பு தொடர் சிகிட்சை மையத்தையும் நடத்தி வருகிறது. மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்காக பல திட்டங்களையும் செயல் படுத்தி வருகிறது. இந்த அறக்கட்டளையின் சேவை மையங்கள் சென்னை மற்றும் மதுரையில் உள்ளன.

இந்து மாணவர்களின் படிப்பிற்காக நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் தங்களது உதவியை காசோலையாகவோ, வரைவோலையாகவோ அல்லது பணமாகவோ வழங்கலாம். தேவைப்படுபவர்களுக்கு வருமானவரி விலக்குச் சான்றிதழ் 80 ஜி வழங்கப்படும் (தங்கள் நன்கொடையுடன் இதனைக் குறிப்பிட்டு எழுதவும்). நன்கொடைகளை " இளய பாரதம் சேவா டிரஸ்ட்" (Ilaiya Bharatham Seva Trust) என்கிற பெயரில் வழங்கிடவேண்டும்.

நன்கொடைகளை அனுப்பவேண்டிய முகவரி:

ஆசிரியர்- விஜயபாரதம்
# 12 எம் .வி. நாயுடு தெரு
சேத்துப்பட்டு, சென்னை - 600 031
தொலைபேசி எண்: 044 2836 0874

இளய பாரதம் சேவா டிரஸ்ட் அலுவலக முகவரி:

அலுவலக செயலாளர்,
ஏ. பி வி பி அலுவலகம்,
# 35/12 சிவாஜி தெரு,
தி. நகர், சென்னை - 600 017

பள்ளி, கல்லுரிகள் திறந்துவிட்டதால் தங்களால் முடிந்த உதவிகளை விரைவாகச் செய்வது சிறந்தது.

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

Monday, June 16, 2008

அஸ்ஸாம் அரக்கனைத் தமிழனாக்கும் கருநாநிதியின் அபத்த உளறல்கள்

கடலூர்: தீபாவளி தமிழன் கொல்லப்பட்ட நாள். அந்த நாளை மறந்து விட்டு, தமிழை ஏற்றி வைக்கும் நாளான பொங்கலை கொண்டாடுங்கள் என முதல்வர் கருணாநிதி கூறினார்" -

- தட்ஸ்தமிழ்.காம் செய்தி

தமிழகத்தின் ஒரு பழைய இருண்டகாலத்தில், திராவிட இனவெறிக் கும்பல்கள் உருவாக்கிய ஒரு கேவலமான பொய்ப் பிரசார கட்டுக் கதையை, தேவையில்லாமல் 2008ம் ஆண்டில் தமிழக முதல்வர் கருநாநிதி வாந்தி எடுத்திருக்கிறார்.

நரகாசுரனை ஸ்ரீகிருஷ்ணன் வதம் செய்ததும், அப்போது அவன் தீமை அழிந்த நாளாக தன் மரணதினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று வரம் கேட்டதுமான தீபாவளிப் பண்டிகை தொடர்பான புராணக் கதை எல்லாருக்கும் தெரியும்.

யார் இந்த நரகாசுரன்?

மகாபாரதத்தின் படி, இன்று அஸ்ஸாம் என்று இன்று அழைக்கப் படும் காமரூப தேசத்தில் ப்ராக்ஜோதிஷபுரம் என்ற நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த கொடுங்கோல் மன்னன். புராணங்களின் படி இவன் பூமிதேவியின் மகன் (சிலவற்றில் ஹிரண்யாக்ஷன் என்ற அசுரன் மகன்). 16,000 பெண்களை இவன் சிறைப்பிடித்து வைத்தது, மக்களைக் கொடுமைப் படுத்தியது, பின்னர் சத்யபாமா தேரோட்ட கண்ணன் போர்செய்து நரகாசுரனைக் கொன்றது, தர்மவானான அவனது மகன் பகதத்தனுக்குப் பட்டம் சூட்டியது எல்லாம் புராணங்களில், மகாபாரதத்தில் வருகிறது. இந்த பகத்தன் பின்னர் பாரதப் போரில் கௌரவர் பக்கம் வீரப் போர் புரிகிறான்.

எந்த ஒரு புராணத்திலும், இதிகாசத்திலும் தமிழகத்திற்கும் நரகாசுரனுக்கும் எந்தத் தொடர்பும் சொல்லப் படவில்லை. பழந்தமிழ் நூல்களில் எதிலாவது நரகாசுரனைப் பற்றி ஏதாவது கூறப் பட்டுள்ளதா? அப்பேர்ப்பட்ட மறத்தமிழன் நரகாசுரனைப் பற்றி ஏதாவது கல்வெட்டு, கில்வெட்டு இருக்கிறதா? ம்ஹூம்.

பத்தாம் நூற்றாண்டில் திருவஞ்சைக் களத்தில் வாழ்ந்த, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகரப் பெருமாள், தனது "முகுந்த மாலை" என்ற சம்ஸ்கிருத நூலில் "நரகே வா நரகாந்தக ப்ரகாமம்" (நரகனை அழித்தவனே, நான் நரகத்தில் இருந்தாலும், உன்னை மறவாமலிருக்க வேண்டும்) என்று பாடும் ஒரு வரி இருக்கிறது. தீபாவளி தோறும் வரும் எண்ணெய்க் குளி தவிர்த்து, பழந்தமிழகத்திற்கும், நரகாசுரனுக்கும் உள்ள ஸ்நானப்ராப்தி இவ்வளவு தான்.

பின் எந்த ஆதாரத்தில், ஒரு மாநில முதல்வர் இப்படி ஒரு வெறுப்பைத் தூண்டும், துவேஷத்தை வளர்க்கும் பச்சைப் பொய்யைக் கூறுகிறார்?

மக்களே கேட்டுக் கொள்ளுங்கள் - தமிழனின் கொலையைக் கொண்டாடும் மன்மோகன் சிங் என்ற ஒருவர் தான் உங்களுக்கு பிரதமராக இருக்கிறார்.
இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், தமிழர்கள் உள்ளிட்ட கோடிக் கணக்கான இந்தியர்கள் தமிழன் கொலை செய்யப் பட்ட ஒரு நாளைக் கொண்டாடி வருகின்றனர் உலகெங்கும் வாழும் தமிழர்கள் எல்லா நாடுகளிலும் தமிழன் கொலையுண்டதைக் கொண்டாடி வருகின்றனர் ! ஐயகோ, ஆனாலும் தமிழனுக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்கக் கூடாது.

மேலும், நரகாசுர வதம் என்பது தீபாவளி என்கிற மாபெரும் பண்டிகை பற்றிய மரபுகளில் ஒன்று தான்.

இறைவனை ஒளிதரும் ஜோதியாக வழிபடுதல், கோவர்த்தன பூஜை, கார்கால அமாவாசையில் காளி பூஜை (வங்கத்தில்), பாற்கடலில் இருந்து மகாலக்ஷ்மி உதயம், ராமர் அயோத்தி திரும்பிய நாள் என்று ஏராளமான சிறப்புக்கள் இப்பண்டிகைக்கு உண்டு. ஜைனர்களுக்கும், சீக்கியர்களுக்கும் கூட முக்கியமான பண்டிகை.



இதே உரையில் "அப்படி என்றால் அது பொங்கல் அல்ல, தமிழனுடைய விழா அல்ல. ஆரியனுடைய மகர சங்கராந்தி. எப்படி வந்தது மகர சங்கராந்தி?"
என்று கேட்டு மகர சங்கிராந்தி என்ற பெயரிலும் அழைக்கப் படும் பொங்கல் என்ற உன்னதமான இந்துப் பண்டிகையையும் இழிவு செய்திருக்கிறார்



மேலும், எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல, "தமிழா உனக்கு ஆண்டுக் கணக்கே இல்லை என்றால் இதை விட கேவலம் இருக்க முடியுமா?. எப்படி பிறந்து நமக்கு ஆண்டு?. மகா விஷ்ணுவுக்கும் நாரதருக்கும் பிறந்த 60 பிள்ளைகள் அல்லவா நமக்கு ஆண்டாக கூறப்பட்டுள்ளது" என்றும் பிதற்றியிருக்கிறார் கருநா.

"மாயை- காலத்தின் தன்மை ஆகியவற்றைக் காட்டும் -இன்றைய நவீன அறிவியல் புனைவின் அனைத்து தன்மைகளையும் கொண்Î Time-consciousness-illusion ஆகியவற்றைக் காட்டும் தொன்மம் இது." என்று அரவிந்தன் நீலகண்டன் அற்புதமாக விளக்கும் இந்தப் புராணக் கதையின் கவித்துவம் கலைஞர், கவிஞர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் ஒருவருக்குப் புரியாமலிருக்குமா? பின் ஏன் இப்படி உளறுகிறார்?

பாரத நாட்டின் தேசிய பண்டிகைகளான தீபாவளி, மகர சங்கிராந்தி என்கிற பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு ஆகியவற்றைப் பற்றி பொய்யைப் பரப்பி, மக்களிடையே துவேஷத்தையும், வெறுப்பையும் வளர்க்கும் முதல்வர் கருநாநிதி மீது தேசவிராத சட்டத்தின் கீழ் வழக்குப் போடவேண்டும்.

Saturday, June 14, 2008

பரதநாட்டியமும், இஸ்லாமிய குருட்டு வெறியும்

செய்தி:

http://www.malaysia-today.net/2008/content/view/8420/1/

Nataraja Statue Banned from Malaysian Bharatanatyam Dance Performance

IPOH, MALAYSIA, June 8, 2008: At the beginning of every Bharatanatyam performance, artistes of this famous South Indian classical dance pay obeisance on stage to a statue of Lord Nataraja. However, on Monday night, a group of Bharatanatyam dancers performed before a full gallery at the Taman Budaya public auditorium without the customary on-stage prayer to Lord Nataraja.

This was because the owner of the venue, the state Unity, Culture, Arts and Heritage Department, permitted the dance on condition they did not install a statue or portrait of the deity and offer their prayers on stage. This is not the first time that dancers from the three Bharatanatyam schools of Nrityakalanjali, Natyakalamandir and Anandanarthana Choodamani in the state had performed at the venue. The department said the organizers were informed beforehand of the conditions and chose to go ahead with the performance.

The department's public relations officer, Shaliza Azlin, said the organizers had agreed that the prayers would be performed backstage to respect the sensitivities of the audience, who also comprised Chinese and Malays. "We did not stop them from doing the puja. We did not want them to do it in public."
Shaliza said the same conditions had been imposed on other cultural groups.

Perak state assembly speaker V. Sivakumar, who was at the performance, said: "The prayer is very much part of the cultural performance and should have been allowed on the stage." He said he would bring the matter up with the state government as well as his party so that such "intolerant behavior" could be nipped in the bud before it became widespread.

இது இந்த மலேசிய இஸ்லாமியர்களின் முழு அறியாமையையும், குருட்டு வெறித்தனத்தையையுமே காட்டுகிறது.

பரத நாட்டியம் என்பதே ஒரு இந்து வழிபாடு, இந்து ஆன்மிக, கலை வெளிப்பாடு தான். பிரபஞ்சத்தில் எங்கும் உறையும் பரம்பொருளை, அதன் உருவான தெய்வாம்சங்களை மனத்தில் இருத்தி, அந்த மனத்தில் பொங்கும் பாவங்களை அபிநயத்திலும், முத்திரைகளிலும் வெளிப்படுத்துவது தான் பரதநாட்டியம்.

பரத ரிஷியின் நாட்டிய சாஸ்திரம் கூறுகிறது -
யதோ ஹஸ்த: ததோ த்ருஷ்டி: யதோ த்ருஷ்டி: ததோ மன:
யதோ மன: ததோ பாவ: (BhaavaH), யதோ பாவ: ததோ ரஸ:

கரங்கள் செல்லும் வழி பார்வை, பார்வை செல்லும் வழி மனம் மனம் செல்லும் வழி பாவம் (Bhaavam), பாவம் செல்லும் வழி ரசம்.

இந்த ரசம் என்பது ஒரு தூய, ஆத்மானுபவ உணர்ச்சி. "ரஸோ வை ஸ:" (அந்தப் பரம்பொருள் உணர்வின் சாரமே ரசம்) என்று உபநிஷத் கூறுகிறது. சிற்பம், இசை, நடனம் ஆகிய இந்து செவ்வியல் கலைகள் அனைத்திலும் அடிப்படையாக உள்ள கோட்பாடு இது.

எனவே பரதத்தில் வரும் பாடல்கள், அபிநயங்கள் அனைத்தும் இறைவனுக்கு அர்ப்பணமாகத் தான் செய்யப் படுகின்றன, சொல்லப் போனால் உன்னத நாட்டிய அனுபவம் என்பது அந்த இறைத் தன்மையுடன் ஒன்றிவிடுவது, லயம் கொள்வது.

"தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடி, சங்கரா ஜெய போற்றி போற்றி என்னும்" என்கிறார் அப்பர். "விஷ்ணோர் கானம் ச ந்ருத்தம் ச நடனம் ச விசேஷத: " என்கிறது ஸ்ரீமத்பாகவதம்.

எல்லா பூஜைகளிலும் இறுதியில் செய்யப் படும் ராஜோபசாரம், தேவோபசாரம் என்ற வகையில் நிருத்யம், கீதம், வாத்யம் மூன்றுமே வரும். எனவே அந்த மேடையில் ஆடும் பரதநாட்டியம் என்பது முதலில் தொடங்கிய பூஜையின் அங்கம் தான். அதனால் பூஜையை மறுத்து, நடனத்தை மட்டும் எப்படி அனுமதிக்கலாம்? ஷரியத் சட்டப்படி அந்த நடனமும் ஒரு காஃபிர் மதச் சடங்கு தான்!

"பார்வையாளர்களின் உணர்ச்சிகளைக் கணக்கில் கொண்டு" பூஜை தடை செய்யப் பட்டது என்று செய்தி சொல்கிறது. நடராஜரின் சிலை வடிவம் உணர்ச்சிகளைப் புண்படுத்துமாம, ஆனால் அதே உருவை ஒவ்வொரு அசைவிலும், கதியிலும், சொல்லிலும், இசையிலும் கூட்டி ஆடுவதை இவர்கள் பார்த்து ரசிப்பார்களாம்.. அது என்ன கலை உணர்ச்சியோ? இந்த ஜென்மங்களுக்காக, இப்படியும் நிகழ்ச்சி வழங்க வேண்டுமா அந்த நாட்டியக் குழுவினர்? அவர்கள் மறுத்திருக்கலாம்.

எந்த அளவுக்கு இந்த "மென் இஸ்லாமிய" நாட்டின் எண்ணப் போக்கு ஒற்றைப் படையாகவும், வெறுப்பில் அமிழ்ந்தும் போய்க் கொண்டிருக்கிறது பாருங்கள்.

இந்த இஸ்லாமிய அகராதியில், முழங்காலில் உட்கார்ந்து தலையைத் தரையில் இடித்து சில அராபிய மந்திர வார்த்தைகளை உதிர்க்கும் நமாஸ் என்கிற மெக்கானிகல் சமாசாரம் மட்டுமே "வணங்குவது". இது தவிர, ஒரு உயர் பொருளையோ, உயர் தத்துவத்தையோ, உயர்ந்த மனிதரையோ பற்றிய சிலிர்ப்பூட்டும் எண்ணங்கள், அனுபவங்கள், இசை, கலை வெளிப்பாடு எதுவுமே "வணக்கத்தில்" சேராது என்பார்கள். அதனால் தான் அவர்கள் அல்லாவை மட்டுமே "வணங்குகிறார்கள்", முகமதுவை "வணங்குவதில்லை" என்று "தெளிவாக" ஜல்லியடிப்பார்கள். இதே கருத்தை முன்வைத்து கடந்த வாரங்களில் 3-4 முஸ்லீம் எழுத்தார்கள் திண்ணை இதழில் கடிதங்கள் எழுதியிருந்தார்கள். புரோகிராம் செய்யப்பட்ட ரோபோட்கள் போன்று அனைவரும் ஒரே மாதிரி எண்ணி, ஒரே மாதிரி எழுதுவதாகவும் தோன்றியது - மெமெட்டிக் க்ளோன்கள் என்று சில வருடங்கள் முன்பு இஸ்லாமிஸ்டுகளை வர்ணித்து அரவிந்தன் நீலகண்டன் எழுதியது எவ்வளவு உண்மை என்று நினைத்துக் கொண்டேன்.

இப்படி ஒரு மூடிய மனத்தையும், இறுகிய எண்ணங்களையும் வைத்துக் கொண்டிருக்கும் உள்ளத்தால், பரதம் மட்டுமல்ல எந்த ஒரு நுண்கலையையும், ஆழ்ந்தகன்ற விஷயங்களையும் அணுகவோ, ரசிக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியாது.
மனம் கொஞ்சம் திறந்து கொள்ளத் தொடங்கினால், இந்த இறுகிய கொள்கைகளை அது வெறுக்கவும், ஒதுக்கவுமே செய்யும்.

அதனால் தான் மனிதர்கள், விலங்குகளை சிற்பமாகவும், ஓவியமாகவும் வடிப்பதற்கும், செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கும், இசைக்கும், பாடலுக்கும், மென்கலைகளுக்கும், மனதை மலரவைத்து அதன் இறுக்கத்தைத் தளர்த்தும் எல்லாவிதமான விஷயங்களுக்கும், குர் ஆன் தடை விதித்தது; இன்றைய முல்லாக்கள், தாலிபான் வரை அந்தத் தடையை செயல்படுத்தியும் வருகின்றனர்.

Wednesday, June 11, 2008

பெங்களூர் தீமிதி விழா - தமிழ் போஸ்டர்

நேற்று அல்சூர் ஏரிக்கரை வழியாக போகும்போது கண்ணில் பட்ட போஸ்டர்:



(பெரிதாக்க படத்தில் க்ளிக் செய்யவும்)


கோயில் மற்றும் சுற்றிலும் உள்ள சாலைகளில் எல்லாம் காவிக் கொடி பறந்து கொண்டு இருந்தது. தீமிதி விழாவை சமூக விழாவாக, இந்து எழுச்சி விழாவாகக் கொண்டாடும் அல்சூர் மக்களுக்கு வாழ்த்துக்கள்.

"நில்லும்" என்று கண்ணை உறுத்தும் இலக்கணப் பிழை இல்லாமல் எழுதியிருக்கலாம். அதற்குப் பதிலாக, "வெல்லும்" சரியாக இருந்திருக்கும்.

"திருப்பதம் வரவேற்று" ?? "ஸ்ரீபாதகள ஸ்வாகதா" என்று கன்னடத்தில் சிந்தித்து தமிழில் எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்..

Thursday, June 05, 2008

பிறந்தநாள் பிச்சை கேட்கும் தமிழினத் தலைவர்

இந்த தினமணி செய்தியைப் பாருங்கள் -

சென்னை, ஜூன் 2: சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தாருங்கள் என்று எதிர்ப்பாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற "உளியின் ஓசை' திரைப்படத்தின் பாடலை வெளியிட்டு அவர் பேசியதாவது: சுற்றியுள்ள மாநிலங்கள் அனைத்தும் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் மாநிலங்களாக இல்லை. கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்தை தனித் தீவாக மாற்றிவிட்டன.

இந்தச் சூழ்நிலையில் தமிழகத்தின் "ஒரே கதி' சேது சமுத்திரத் திட்டம் மட்டுமே. சேது சமுத்திரத் திட்டத்தால் மட்டுமே தமிழகம் வளம் கொழிக்கும் மாநிலமாக மாறும். வாணிபத் தொடர்புகள் அதிகரிக்கும். சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றித்
தாருங்கள் என்று அந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனது பிறந்த நாள் யாசகமாக இதனைக் கேட்டுக் கொள்கிறேன். என் பேரப் பிள்ளைகளுக்காகக் கேட்கவில்லை. தமிழகத்தின் எதிர்காலத்துக்காகக் கேட்கிறேன்...."

சேது திட்டம் தான் "ஒரே கதியாம்". தமிழகம் "தனித்தீவாக" ஆகி விட்டதாம். எப்படிக் கூசாமல் அண்டப் புளுகு புளுகுகிறார் ஒரு மாநில முதல்வர்? மாநிலத்தின் வளர்ச்சிக்காக உருப்படியாக ஒன்றும் செய்யாமல், செய்யத் தெரியாமல், அண்டை மாநிலங்களை அநாவசியமாக வம்புக்கு இழுத்திருக்கிறார், துவேஷ மனப்பான்மையை வளர்க்கிறார். மிகவும் பொறுப்பற்ற பேச்சு.

திருவள்ளுவர், திருவள்ளுவர் என்று ஒருவர் இருந்தார். உலகின் உன்னதமான அறநூலான திருக்குறளை எழுதியவர். அதில் "இரவச்சம்" என்று ஒரு அதிகாரம் உண்டு. (ராத்திரி பயம் அல்ல; இப்போது இருப்பது போல திருவள்ளுவர் காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அவ்வளவு மோசமாக இல்லை). அதாவது உயிர்போவது பற்றிக் கூட பயம் கொள்ளாத மானமுள்ள மனிதர்கள் இரப்பதற்கு, பிச்சை கேட்பதற்கு அதை விடமிகுந்த நாணமும், அச்சமும் படுவார்கள் என்பதை வலியுறுத்திக் கூறும் அதிகாரம். அதில் ஒரு குறள்:

"ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்குஇரவின் இளிவந்தது இல்"

"(சாகக் கிடக்கும் ஒரு பசுவைக் காப்பாற்றுவதற்காக) பசுவிற்கு நீர்வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும் அந்த இரத்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை."

அதனால் என்ன? திருக்குறளை ஒரு அலங்காரத்துக்காக மட்டுமே "குறளோவியமாக" சட்டம் போட்டு மாட்டிவைத்து புளகாங்கிதப் படும் தன்மானத் தமிழினத் தலைவர் அவர்கள் இப்படித் தயங்காமல் பிச்சை கேட்பது ஆச்சரியம் இல்லை தானே?

அதுவும் யாரிடம்? இந்தத் திட்டத்திற்கு எதிராக இருப்பவர்கள், முட்டுக்கட்டை போடுபவர்களிடமாம். அது யார் யார்?

நீதிமன்றம். அது தான் இந்தத் திட்டத்திற்குத் தடை விதித்து, தொல்பொருள் ஆய்வுத் துறை சேது பகுதியில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் நீதி கிடைக்கலாம். பிச்சை..?

பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். கூட்டணிக் கட்சிகளிடம் மன்றாடுவதில் கின்னஸ் சாதனை படைத்த பல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். வாக்காளர்களிடம் மன்றாடியார்கள் இருக்கிறார்கள். ஆனால் முதன்முறையாக, தள்ளாத வயதில் எதிர்க்கட்சிகளிடம் மன்றாடுவதாக வெட்கமில்லாமல் அறிவித்த அரசியல்வாதி என்கிற சாதனை பட்டத்தை இதன்மூலம் தானைத் தலைவர் தட்டிச் செல்கிறார்.

இந்து இயக்கங்கள், ராம பக்தர்கள், துறவிகள். இவர்களைப் பார்த்து கலிஞ்சர் செய்யாத கேலியா? கிண்டலா? ஏளனமா? அவதூறா? கடைசியாக, இந்த "மூட, மௌடீக, மதவாத" சக்திகளிடமெல்லாம் பிச்சை கேட்கும்படி அவர் நிலைமை ஆகிவிட்டதே. தெரியாமல் முதுகில் பட்டுவிட்ட வேலுக்கெல்லாம் கூட நாணிக் கோணி, வீறாப்பு தன்மான டயலாக் பேசி, ஓவராக ஃபிலிம் காட்டிய, பொழைக்கத் தெரியாத புறம்போக்கு புறநானூற்றுத் தமிழனுங்க பேரையெல்லாம் ஏந்தான் சொன்னோமோ என்று தன்மானத் தலைவர் தன்னைத் தானே நொந்துகொண்டு நோகும்படி ஆகிவிட்டதே. ரொம்ப பரிதாபமாக இருக்கிறது.

தலைவர் பேச்சில் எப்பவுமே ஒரு பொடி இருக்கும். தென்னாட்டு பெர்னாட்ஷாவிடம் அவர் கற்ற பாடம் அது. அதாவது உடன்பாட்டாகச் சொல்ல வேண்டியதை எதிர்மறையாகச் சொல்வார்...and vice versa. முந்தைய காலங்களில், அப்போதைய அரசுகள் சட்டவிரோத அல்லது அரசியல் காரணங்களுக்காக அவரைக் கைதுசெய்து சிறையில் அடைக்கும்போதெல்லாம் உடன்பிறப்புகளுக்கு பஸ்களை எரிக்கக் கூடாது, கலவரம் எதுவும் செய்யக் கூடாது, வன்முறையில் ஈடுபடுவது கூடவே கூடாது என்று அறிக்கை விடுவார். உடனடியாக என்ன செய்யவேண்டும் என்று தொண்டனுக்குத் தெரியும்.

இன்னொரு சமீபத்திய உதாரணம். தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையருக்கு நினைவு மண்டபம் அமைக்கிறோம் என்ற பெயரில் உத்தமதானபுரம் ஊரில் அவர் வாழ்ந்த அழகிய பாரம்பரிய வீட்டை இடித்து எந்தக் கலை உணர்வும் இல்லாத ஒரு கான்கிரீட் கட்டிடத்தைக் கட்டி, தனது தொடரும் கலை, கலாசார ஒழிப்புப் பட்டியலில் இன்னும் ஒரு எண்ணைச் சேர்த்தது தமிழக அரசு. படிக்கும்போதே ரத்தக் கண்ணீர் வருகிறது. இது பற்றி மனம் நொந்து விமர்சன பிதாமகர் வெங்கட் சாமிநாதன் எழுதியிருக்கும் கட்டுரையில் கூறுகிறார் -

"... அச்செய்திகளில், முதல்வர் கலைஞரின் வாழ்த்துச் செய்தியும் காணப்பட்டது. அவருடைய பாராட்டுச் செய்தியும், தமிழுக்குத் தொண்டாற்றிய உ.வே.சா எந்த இனத்தைச் சேர்ந்தவர் எந்த ஜாதிய்னர், குடியினர் என்பதையெல்லாம் புறமொதுக்கித் தான், அவரது தமிழ்த் தொண்டை போற்றத் தான் நினைவகம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற பொருளில் தான் இருந்தது. எந்த ஜாதி, எந்த இனம் என்ற சிந்தனை இல்லையென்றால் அதைச் சொல்லவேண்டும் என்ற எண்ணமும் தோன்றி யிராது தானே. யாரும் ஏதும் கேட்காமலேயே 'எங்களுக்கு அந்த சிந்தனையெல்லாம் கிடையாது" என்று சொல்லித் தன் தாராள மனதுக்கும் சிந்தனைகளுக்கும் பாராட்டுக்களைத் தனக்கு வழங்கிக் கொள்ளும் அவசியம் இருந்ததென்றால், அந்த சிந்தனை தான் மேலோங்கியிருக்கிறது என்று தானே பொருள் படும். இது தான் இன்றைய தமிழ் நாடு."

ஆமாம். அந்தத் தமிழ்நாட்டின் தலைவர் பேச்சில் அந்தப் பொடி இன்னும் இருக்கிறது. "என் பேரப் பிள்ளைகளுக்காகக் கேட்கவில்லை. தமிழகத்தின் எதிர்காலத்துக்காகக் கேட்கிறேன்" என்று அவர் கூறும்போது, அதில் மேலோங்கியிருக்கும் சிந்தனை என்ன என்பது இந்த முதுபெரும் தலைவரின் கரகர பேச்சைக் காலம் காலமாய்க் கேட்டு வரும் மாங்கா மடையர்களாகிய நமக்குப் புரியாதா என்ன? மிக மிக நன்றாகவே புரியும்.

Thursday, May 29, 2008

கர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன?

காங்கிரஸ் கட்சி மற்றும் போலி மதச்சார்பின்மை அரசியலின் தொடர் வீழ்ச்சியின் அடுத்த கட்டமாக, தென்னகத்தில் முதன்முறையாக தாமரையின் ஆட்சி முழுமையாக மலர்ந்திருக்கிறது. குழிபறிக்கும், ஏமாற்றும் கூட்டணிக் கட்சியாக வரலாற்றில் புகழ்பெற்றுவிட்ட தேவகவுடாவின் “மதச்சார்பற்ற ஜனதா தளம்” கட்சியை அனேகமாக மண்ணைக் கவ்வ வைத்ததோடு, அரசியல் ஸ்திரத்தன்மை, மாநில முன்னேற்றம், தேசிய அளிவிலான பிரசினைகள் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு வாக்களித்த கர்நாடக மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.

தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருந்த நேரம், ஊடகங்கள் மண்டையைக் குடைந்து கொண்டு பா.ஜ.க வெற்றிக்கான காரணங்களைத் தேடிக் கொண்டிருந்தன. எடியூரப்பாவை முதல்வராக முன்னிறுத்தியதன் மூலம் அப்பட்டமான லிங்காயத் ஜாதி அடையாளத்தைக் காட்டி பாஜக அரசியல் செய்தது என்று காங்கிரஸ் தலைவர்கள் புலம்பினார்கள். “இதற்காகத் தான் நாங்கள் முதல்வர் யார் என்றே அறிவிக்கவில்லை!” என்று கோஷ்டிப் பூசலுக்குப் பேர்போன கர்நாடக காங்கிரசின் தலைவர் ஒருவர் கூறியது கலகலப்பான காமெடி. “ஒருவர் தான் முதல்வராக இருக்க முடியும், அவர் ஏதாவது ஒரு ஜாதிக் காரராக இருந்துதானே ஆகவேண்டும்? என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?” என்ற நிருபரின் கேள்விக்கு அவர்கள் வழிந்த அசடைப் பார்க்க வேண்டுமே!

தேர்தல் பிரசாரத்தில் ஆரம்ப முதலே பாஜக ஒரு தெளிவான, உறுதியான வானவில் சமூக ஆதரவை விழைந்தது என்பது தான் சரியாக இருக்கும். எடியூரப்பா, மாநிலத் தலைவர் சதானந்த கௌடா, பெங்களூர் நகர எம்.பி அனந்தகுமார் இந்த மூவரின் படங்கள் பிரதானமாகவும், மேலிருந்து அத்வானி, வாஜ்பாய் ஆசி வழங்குவது போலும் பாஜக வெளியிட்ட அனைத்து விளம்பரங்களும் நகரம், கிராமம், உழவர்கள், தொழில்முனைவோர், முக்கியமான சமூகங்கள் அனைத்தையும் பிரதிநிதித் துவம் செய்தன. மாறாக, காங்கிரஸ் விளம்பரங்களிலேயே அந்தக் கட்சியின் குழப்பம் தெரிய ஆரம்பித்து விட்டது. விளம்பரம் செய்வது எந்தக் குழு என்பதைப் பொறுத்து அதில் இந்திரா காந்தி, ராஜீவ், மல்லிகார்ஜுன் கர்கே, ஜாபர் ஷெரீப், ராகுல், எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, தரம்சிங், பிரகாஷ், வீரப்ப மொய்லி என்று 12 பேருக்குக் குறையாமல் இருந்தார்கள்!

மத்திய கர்நாடகம், கடற்கரை மாவட்டங்கள், பெங்களூர், வடக்கு கர்நாடகம், ஆந்திராவை ஒட்டிய பெல்லாரி பகுதிகள் இவை அனைத்திலும் கணிசமான வாக்கு விகிதத்தையும் பெற்று, இடங்களையும் வென்றதன் மூலம் பா.ஜ.க கர்நாடகத்தில் ஆழமாகவும், அகலமாகவும் வேரூன்றியுள்ளது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. தேவகவுடாவின் கோட்டையான மைசூர் பிரதேசத்தில் மட்டுமே பாஜகவுக்கு அவ்வளவு இடங்கள் கிடைக்கவில்லை. இது ஒரு பிரதேச போக்கு மட்டுமே தவிர, தேவகவுடாவின் சமூகத்தினரான ஒக்கலிகர்கள் பாஜகவை நிராகரிக்கவில்லை என்பது கண்கூடு. வெற்றிபெற்ற பாஜக எம்.எல்.ஏக்களில் 17 பேர் இந்த சமூகத்தினர் (ஜனதாதளத்தில் 15 பேர்). 9 பிராமண பாஜ.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் (கர்நாடக மக்கள்தொகையில் 7% பிராமணர்கள்). வெற்றிபெறும் வாய்ப்பு உள்ள முஸ்லீம் வேட்பாளர்கள் பாஜகவில் இல்லாததால் தான் அந்த சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் இல்லை என்று தெரிவித்த பாஜக தலைமை, ஆட்சி அமைக்கும் நேரத்தில் ஒரு முஸ்லீம் அமைச்சர் அரசில் கண்டிப்பாக இடம் பெறுவார் என்றும் அறிவித்துள்ளது. இத்துடன், தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஒதுக்கப் பட்ட 36 ரிசர்வ் தொகுதிகளில் 22ஐயும், பழங்குடியினர் ரிசர்வ் தொகுதிகளில் கணிசமான இடங்களையும் பா.ஜ.க, கைப்பற்றையுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

பிரணய்ராயின் என்.டி.டிவி போன்ற சில தொலைக் காட்சிகள் சாதிதான் தேர்தலில் மிக முக்கியமான காரணி என்று “அறிவியல் பூர்வமான” ஒற்றைப் படைக் கருத்தாக்கங்களை மீண்டும் மீண்டும் சொல்லி வருவதனால், இது ஒரு பிரம்மாண்டமான விஷயமாக மக்கள் மனதில் பதிந்துள்ளது. ஆனால் உண்மையில், பிரதிநிதித்துவம் என்ற அளவில் மட்டுமே இதன் தாக்கத்தைப் பார்க்கவேண்டும். இதோடு கூட, ஒட்டுமொத்தமாக தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பது அப்போதைய சூழலும், தேவைகளும், பிரசினைகளும் தான்.

இந்த தேர்தலின் முக்கிய பிரசினைகளாக இருந்தவைகள் என்னென்ன?

காங்கிரஸ் வெற்றியடைந்தால் அதில் சோனியா, ராகுல் மற்றும் “முதல் குடும்பத்தின்” பங்களிப்பையும், தோல்விகளுக்கெல்லாம் அமானுஷ்யமான காரணங்களையும் காண்பதை ஒரு கலையாகவும், பாரம்பரியமாகவும் ஆக்கிக் கொண்டுள்ள காங்கிரஸ், இந்தத் தேர்தலில் உள்ளூர் பிரசினைகளை மட்டும் வைத்து மக்கள் வாக்களித்தார்கள், தேசிய அளவிலான எந்த பிரசினையும் விவாதிக்கப் படவேயில்லை என்று சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கிறது. இந்திய வாக்காளர்களிடம் சில பலவீனங்கள் இருந்தாலும், ஜனநாயகம் என்ற ஆயுதத்தை பிரயோகிப்பதில் அவர்கள் சாதுர்யமானவர்களாகி வருகிறார்கள் என்பதை பல சமீபத்திய தேர்தல்கள் நிரூபித்து வருகின்றன. பல விஷயங்களையும் கூட்டிக் கழித்துப் பார்த்துத் தான் அவர்கள் வாக்களிக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில், அடித்தட்டிலிருந்து வந்த, எளிமையானவராகவும், உழைப்பாளியாகவும் அறியப் பட்ட எடியூரப்பாவின் உறுதியான தலைமையை முன்வைத்தது மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு உத்திரவாதம் கூறியது : இந்த இரண்டும் பா.ஜ.க வெற்றிக்கு முக்கியக் காரணங்கள். பல முன்னேறும் மாநிலங்களில் இரு கட்சி ஜனநாயகம் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பதால், மூன்று கட்சிகளால் விளையும் குழப்பங்களை மக்கள் ஊகித்து ஜனதா தளத்தை ஓரங்கட்டினார்கள் என்றும் சொல்லலாம்.

மத்திய அரசு விலைவாசியைக் கட்டுப் படுத்தத் தவறியது, ஜிகாதி தீவிரவாதத்தை ஒடுக்காமல் மறைமுக ஆதரவு அளித்து வருவது உள்ளிட்ட தேசிய அளவிலான பிரசினைகளும் பிரசாரத்தில் முக்கியப் பங்கு வகித்தன. குறிப்பாக, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளுக்குப் பின் நிகழ்ந்த மூன்றாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில், அந்த நிகழ்வுக்கும், அப்சல் குருவை இன்னும் தூக்கிலிடாமலிருப்பதற்கும், வட கர்நாடகம், ஹூப்ளி பகுதிகளில் ஜிகாதி தீவிரவாதிகள் கைது செய்யப் பட்டதற்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக் காட்டி பா.ஜ.க செய்த தேசப் பாதுகாப்பு பற்றிய பிரசாரம் பரவலாக மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. தீவிரவாதத்தை ஏன் அரசியலாக்குகிறீர்கள் என்று அழாதகுறையாக காங்கிரஸ் கேட்டுக் கொண்டிருந்தது தான் மிச்சம். பா.ஜக. ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும், இதற்கு முழுப் பொறுப்பாளி மத்திய காங்கிரஸ் அரசு தான் என்று அடித்துச் சொல்லப் பட்ட பிரசாரத்தைக் கூட எதிர்கொள்ளத் திராணியற்றுப் போய் இருந்தது காங்கிரஸ் தரப்பு.

இந்துத்துவம்..

ஆகக் கூடி, இந்தத் தேர்தலில் “பா.ஜக இந்துத்துவம் பற்றி எதுவுமே கூறவில்லை. அதனால் இந்த வெற்றிக்கும் இந்துத்துவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்கிற அதிசய “உண்மையை”யும் செக்யுலர் ஊடகங்கள் மறக்காமல் சொல்லிவருகின்றன. ஆனால், இத்தகைய செய்திகளின் தலைப்புகள் என்னவோ “Saffron Surge” “Karnataka goes saffron” என்று இருக்கின்றன!

1980களில் ஹெக்டே அரசுக்கு சிறிய கட்சியாக ஆதரவு அளித்த பா.ஜக., 90களில் ராமஜன்ம பூமி இயக்கத்தின் பின்னணியில் கர்நாடகத்தில் பெருவளர்ச்சி கண்டு, இப்போது தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்திருப்பது ஒரு பெரிய சாதனை. அமரர் யாதவராவ் ஜோஷி, அமரர் ஹெச்.வி. சேஷாத்ரி போன்ற தன்னலமற்ற தலைவர்களின் அயராத உழைப்பால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து இயக்கங்கள் கர்நாடகத்தின் பல பகுதிகளில் வேரோடி இருந்ததும், பொதுப் பணிகள், சமூக சேவை, இந்து சமூக ஒருங்கிணைப்பு இவற்றில் ஈடுபட்டிருந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம். இது பற்றிக் கேட்டபோது, பாஜகவின் அருண் ஜெட்லி, “தெளிவாகவே, பாஜ.க ஒரு கருத்துச் சார்புடைய கட்சி. கொள்கைச் சார்புடைய தொண்டர்களைக் கொண்ட கட்சி. மக்களுக்கு இது நன்றாகவே தெரியும், அதைச் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை” (We are an idelogical party, and clearly a cadre based party. People know that very well, no need to keep repeating that). என்று கூறினார். எனவே இந்தத் தேர்தல் வெற்றியை, இந்துத்துவம் என்கிற சமூக, அரசியல் சித்தாந்தம் கர்நாடக மக்களால் பெரும்பான்மையாக அங்கீகரிக்கப் பட்டு விட்டது என்பதற்கான குறியீடாகக் கொள்வதில் தவறேதும் இல்லை.

தமிழர்கள், தமிழகம்...

ஆரம்பத்தில் சலசலப்பு ஏற்படுத்திய ஒகேனக்கல் பிரசினை தேர்தலின் போது தலைகாட்டாமல் அனைத்துக் கட்சிகளும் கட்டுப்பாடு காத்தது சந்தர்ப்பவாத அரசியலின் ஒரு யுக்தி என்றாலும், ஆரோக்கியமான முன்னுதாரணம். காவிரி பிரசினையில் வெளிப்படையான தமிழர் எதிர்ப்பு நிலைப் பாட்டை எடுத்து வரும் வட்டள் நாகராஜை இந்தத் தேர்தலில் டெபாசிட் இழக்க வைத்ததன் மூலம், மொழிவெறி அரசியலைத் தெளிவாகவே நிராகரித்திருக்கும் கன்னட மக்கள் பாராட்டுக்குரியவர்கள். அதே நேரத்தில் எடியூரப்பாவையும், ஏன் பா.ஜ.கவையுவே தமிழக எதிரிகள் என்ற கணக்கில் சித்தரித்து பீதியைக் கிளப்பிய பொறுப்பற்ற பல தமிழ் ஊடகங்கள் கண்டனத்திற்குரியவை. கடும் இந்துத்துவ வெறுப்பு, பாஜக எதிர்ப்பு போன்ற சட்டகத்தில் அடித்த எதிர்மறை மனப்பான்மைகளை மூட்டி கட்டி வைத்து விட்டு இரு மாநிலங்களுக்கும் இடையேயான நட்புறவைக் குலைக்கும் படி அவைகள் கருத்துக்கள் வெளியிடாமல் இருப்பது நல்லது.

கர்நாடகத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்கள் இரண்டு : கோலார், சாமராஜ் நகர் பகுதி, பெங்களூர் நகரின் பல பகுதிகள். இதில் முதலில் குறிப்பிட்ட தொகுதிகள் உள்ள பிரதேசம் முழுவதுமே ஜனதாதளம், காங்கிரஸ் வேட்பாளர்கள் வென்றுள்ளனர், அது ஒரு அலை. ஆனால் பெங்களூர் நகரில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மல்லேஸ்வரம், ராஜாஜி நகர், ஜெயநகர், சி.வி.ராமன் நகர், பெங்களூர் தெற்கு ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிவாகை சூடியதில் கணிசமான அளவு பெங்களூர் தமிழர்களின் வாக்குகள் இருந்தேயாக வேண்டும் என்பது கண்கூடு.

தேர்தல் வெற்றிக்குப் பின் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் எடியூரப்பா ஒகேனக்கல் பிரசினையில் தனது தரப்பைத் தெளிவாகவே கூறியிருக்கிறார் -





“.. ஒகேனக்கல் பிரச்னையைப் பொறுத்தவரை நான் அன்றைக்கு சொன்னதுதான் இன்றைக்கும்..! தர்மபுரி ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்காகத் தண்ணீரை உறிஞ்சினால் கர்நாடகாவுக்கு தண்ணீர் பற்றாக்குறை வரும்னு இங்குள்ள மக்கள் நினைக்கிறாங்க. அதனால நானும் அந்த விஷயத்துல ஆரம்பத்துல இருந்தே எதிர்ப்பு காட்டிட்டு வர்றேன். எலெக்ஷன்ல ஜெயிக்கிறதுக்காக ஒகேனக்கல் பிரச்னையை வச்சு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியும் காங்கிரஸ்காரங்களும் ஏதேதோ டிராமா போட்டுப் பார்த்தாங்க. எதுவும் மக்கள்கிட்ட எடுபடல.

தமிழ்நாட்டுக்காரங்களோ,மகாராஷ்டிரா காரங்களோ எனக்கு எதிராளிகள் கிடையாது. எந்த மொழிக்கும் நான் எதிரானவன் கிடையாது. இன்னும் சொல்லணும்னா தமிழர்கள், கன்னடர்கள், மராட்டியர்கள் மூவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள்னு நினைக்கிறவன் நான். கர்நாடகா என்னுடைய வீடு. இந்த வீட்டுக்கு நான்தான் குடும்பத் தலைவன். என்னோட வீட்ல இருக்கறவங்களோட பிரச்னையை முதல்ல நான் தீர்த்து வச்சாகணும். அதுக்குப் பிறகுதான் பக்கத்து வீட்டைப் பத்தி யோசிக்க முடியும். அதனால காவிரி பிரச்னையிலும் சரி, ஒகேனக்கல் விவகாரத்திலும் சரி... எடுத்தோம் கவுத்தோம்னு எந்த முடிவும் எடுக்க முடியாது. பேசி முடிவு பண்ணலாம். ஆனா, அந்த முடிவு நிச்சயமா எங்க மாநிலத்து மக்களோட நலனுக்கு பாதகமா இருக்க முடியாது. இருக்கவும் விடமாட்டேன்.''

அரசியல் சட்ட அடிப்படையிலும், காவிரி நடுவர்மன்ற முடிவுகளின் படியும், தமிழக அரசின் இந்தத் திட்டத்தை கர்நாடக அரசு ஆட்சேபிக்க முடியாது என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும், ஒரு மாநில முதல்வர் என்ற அளவில் எடியூரப்பா முதிர்ச்சியுடனும், தேசிய உணர்வுடனும் பேசியிருக்கிறார். இந்திய ஒருமைப்பாட்டில் உறுதியான பிடிப்பு வைத்திருக்கும் அவரது நிலைப்பாடு நம்பிக்கையளிக்கிறது. தமிழக முதல்வர் தானைத் தலைவர் ஒருமுறை கூட அண்டை மாநில மக்களைப் பற்றி இவ்வளவு அன்போடு ஏதாவது கூறி, நான் படித்ததாக ஞாபகம் இல்லை.

இன்று கர்நாடகம். நாளை பாரதம்?

இந்தத் தேர்தல் முடிவுகளின் அதிர்வலைகள் தேசிய அரசியலில் ஏற்கனவே புயலைக் கிளப்பத் தொடங்கி விட்டன. ஏழு பெரிய மாநிலங்களில் பாஜக அரசுகள் உள்ள நிலையில், காங்கிரசை விடப் பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பாஜக அடைந்திருக்கிறது. இடதுசாரிகளின் இழுபறி ஆதரவுடனும், பெயரளவில் அதிகாரம் செலுத்தும் ஒரு பிரதமருடனும் ஓடிக் கொண்டிருக்கும் சோனியாவின் சமையலறை கேபினெட் மத்திய அரசு, மக்களைப் பாதிக்கும் முக்கியமான பிரசினைகள் ஒவ்வொன்றையும் தவற விட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வளவு நடந்த பிறகும், காங்கிரஸ் கட்சி தனது வீழ்ச்சி மற்றும் தோல்விக்கான காரணங்களை சிறிதும் ஆராய்ந்து பார்ப்பதாகத் தெரியவில்லை. விநாச காலே விபரீத புத்தி:?

கர்நாடகம் தென்னகத்தில் பா.ஜகவின் வரவைக் கட்டியம் கூறும் நுழைவாயில் என்று சில அரசியல் விமர்சகர்கள் ஹேஷ்யம் கூறுகின்றனர். தமிழகம், கேரளம், ஆந்திரா இந்த மூன்று மாநிலங்களிலும் ஜிகாதி தீவிரவாதத்திற்கு எதிரான சமரசமற்ற நடவடிக்கைகள், இந்துமதம் மீது துவேஷம் வளர்க்காத அரசியல், முன்னேற்றம் விழையும் திட்டங்கள் ஆகிய கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவு கண்டிப்பாக இருக்கிறது. இதனை செயல்திறனோடு ஒருங்கிணைக்கக் கூடிய அரசியல் தலைவர்களையும், தொண்டர்களையும் இந்த மாநிலங்களில் பா.ஜ.க உருவாக்க வேண்டும்.

கர்நாடக வெற்றியில் இருந்து, பா.ஜ.கவும் சரி, காங்கிரசும் சரி, கற்க வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.

Wednesday, May 28, 2008

உலக விருது பெரும் அர்விந்த் கண் மருத்துவமனை: வாழ்த்துக்கள்!

மைக்ரோசாஃப்ட் மகாகுரு பில் கேட்ஸ் மற்றும் அவர் மனைவி மெலிண்டா கேட்ஸ் நடத்தும் கேட்ஸ் ஃபவுண்டேஷன் அமைப்பு மதுரை அர்விந்த் கண் மருத்துவமனைக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் "கேட்ஸ் விருது" வழங்கியுள்ளது. வளரும் நாடுகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் அமைப்புகளுக்கான அகில உலக விருதுகளில் முதன்மையான விருதாகும் இது.

சமூக சேவையை முக்கிய நோக்கமாகக் கொண்டு, அதே சமயம் அதிநவீன மருத்துவ வசதிகள், தொழில்நுட்பம் இவற்றை உயரிய தொழில் நேர்த்தியுடன் இணணத்து சாதனை படைத்துள்ளார் இதனை நிறுவிய டாக்டர் ஜி.வெங்கடசாமி.

உலகின் மிகப்பெரிய, மிக அதிகப் பயனர்களுக்கு சேவை வழங்குகின்ற கண் மருத்துவமனை பற்றிய 6 நிமிட வீடியோ -



பரபரப்பு மீடியா வெளிச்சங்களுக்கு அப்பால், ஒரு பழம்பெருமை மொஃபசல் நகரம் என்று கருதப் படும் மதுரையில் இருந்து கொண்டும் செயற்கரிய சாதனைகளை செய்ய முடியும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் அரவிந்த் கண் மருத்துவமனை.

Tuesday, May 27, 2008

மார்க்சிஸ்டு வெறியர்கள் உடைத்த பள்ளியை சீரமைக்க உதவுங்கள்

கேரளத்தில் இந்து அமைப்பு ஒன்று நடத்தும் பள்ளியில் இருந்து கீழ்க்கண்ட செய்தி வந்துள்ளது. எந்த அளவுக்கு வெறுப்பும், வன்மமும், குரோதமும் இருந்தால் முழுவதும் பொதுமக்கள் உழைப்பில் உருவான, பொதுச் சொத்தான ஒரு அழகிய பள்ளியை இப்படித் திட்டமிட்டுத் தாக்கி அழிப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.

அழிவு சக்தியான மார்க்சியத்தை ஒழியுங்கள்.
ஆக்கசக்தியான இந்துத்துவத்திற்கு ஆதரவு தாருங்கள்.
பள்ளியை சீரமைக்க உதவுங்கள்.

Adiyodi Vakeel Smaraka Tagore Vidyapeetam, a reupted school in Thalassery, Kerala was attacked and destroyed by a gang of CPM (Communist Pary of India Marxist) criminals on 27th January 2008. This calculated attack was done within 24 hours of the Republic Day Celebrations.

The school is named in the memory of Late Adv. Gopalan Adiyodi, a well respected social worker and RSS leader of Kerala. It started as a primary school in 1990 and has grown into a full fledged high school now. This is the only Hindu Educational Institution in Kannur district amidst the several institutions run by the Christian and Muslim managements. With the coming up of Tagore Vidyapeetam, a long cherished wish of the Hindus of this area had come true. It is to provide affordable, quality education and impart Hindu values that the selfless RSS workers of this district started this school. To acquire three acres of land and to build up a full-fledged school complex was really a Herculean task, but the brave Swayamsevaks did it all, that too within a few years, all through public donations. The infrastructure and other educational facilities were appreciated by one and all.




The brutal destruction of the school, a public property is just another bloody chapter in the continuing attack on Hindu activists and institutions by the CPM goons in this area. The Hindutva movement started in Kerala in 1942 at Calicut. In 1946 the RSS sakhas started in Thalassery. Many prominent personalities including advocates, doctors and teachers started attending the sakhas. And from that time onwards the Communist forces were trying to build up impediments to curb the growth of Hindu movement. Actual bodily clashes started in Kannur district in 1969 in which Sri Ramakrishnan, a Mukhya Sikshak, was killed. Pinarayi Vijayan present CPM State Secretary was one of the accused in this case. Kodiyeri Balakrishnan, the present home minister (CPM) was one of the accused in the second murder which followed very soon. From 1969 to 2008 May, 63 Swayamsevaks were murdered in and around Thalassery. Though the entire Kannur district witnessed Marxist terrorism, Thalassery Thaluk has been the main area of their attack. More than 200 swayamsevaks received fatal injuries in the past years. Many lost their limbs, many became blind and duff. They are all unable to earn their livelihood.

Since the very inception of this institution the Marxists were trying to put an end to this move through several methods and this attack was the final one. All our dreams, all our efforts came to nil with this CPM attack. The building was partially demolished. The Principal’s room, staff room and many class rooms were destroyed. 60% of the furniture was totally destroyed. The well furnished computer lab consisting of 35 systems and one LCD projector with lap top, which was sponsored by an NRI group, was all smashed to pieces. The science Labs were all gone. All this was done by an unruly crowd of more than 200 CPM activists, in the full presence of the Police force.



At present more than 700 students are studying in this school with a staff strength of 62. All the members on staff are well qualified and trained by Vidya bharathi, an educational NGO that operates in many parts of the country. The Principal is very well respected in the area and was formerly a CBSE school teacher in Arunachal Pradesh. All the batches presented for the X CBSE exams attained 100% success.

Our school reopens after summer vacation on June 2nd. It is beyond our capacity to find means to put things in place. The managing committee appeals to one and all to help us to re-build this Hindu educational institution. It is our sincere request to help us to rebuild the school infrastructure as it was before.

Vande Mataram.

How you can help :

1. Monetary donations may be sent as cheque, draft or Money order favouring "Adiyodi Vakeel Smaraka Educational Trust" to The Secretary, Adiyodi Vakeel Smaraka Educational Trust, Thiruvangad, Thalassery 670103, Kerala
2. Electronic transfers and direct deposits can be done to the following account:
Current a/c no.: 30072288490, State Bank of India, Main Branch, Thalassery – 1
3. Receipts will be sent to all the donors. Donors, please send in your name and address along with the donations. (Those who do bank transfers can send the details thru email to vidyapeetam@gmail.com)
4. To rebuild the computer lab, you can donate new computers or even used ones in good condition.

All donations are exempt from Income Tax u/s 80-G.

For further details, contact:
Sri M K Sreekumaran (9446373383), Sri Banish (9446166407)

Monday, May 26, 2008

எச்சரிக்கை: இந்தியாவின் உட்பகை (enemy within)

ரவி ஸ்ரீனிவாஸ் அரசியல் கைதிகள்-பினாயக் சென்-அ.மார்க்ஸ்: ஒரு எச்சரிக்கைக் குறிப்பு என்ற தனது பதிவில் அப்பட்டமான இந்திய விரோதிகளுக்குப் பரிந்து பேசும் அறிவுஜீவி மனநிலை குறித்து சரியான கண்ணோட்டத்தை முன்வைத்திருக்கிறார். துரதிர்ஷ்ட வசமாக, "அரசியல் கைதி" என்று பரிவுடன் அவர் குறிப்பிடும் டாக்டர் பினாயக் சென் அமைதிப் புறா அல்ல. அப்பட்டமான தீவிர நக்சல் ஆதரவாளர் அவர் என்பதே உண்மை.

"உறுதியான சட்டங்கள், தேர்ந்த உளவுத்துறை, அதிநவீன பாதுக்காப்பு சாதனங்கள் இவை மட்டுமே ஜிகாதிகள், நக்சலைட்டுகள், மற்ற பிரிவினைவாதிகளுடனான போரில் நமக்கு வெற்றி தேடித் தராது.. தேசவிரோதிகளுக்காகக் கச்சை கட்டிக்கொண்டு பேசவரும் இத்தகைய உட்பகைகளையும் நாம் எதிர்கொள்ளவேண்டும். பயங்கரவாதத்தால் பாதிக்கப் படுபவர்களுக்குப் பதிலாக, பயங்கரச் செயலை நிகழ்த்தியவர்களின் பாதுகாப்பையும், நலனையும் முன்நிறுத்தும் இந்த இழிவான மனநிலை, அதன் பிரதிநிதிகள் இந்த விரோதிகளுடன் போரிட்டு முதலில் நாம் வெல்ல வேண்டும்" என்கிறார் பயனியர் ஆசிரியர் சந்தன் மித்ரா.

Jaipur to Raipur - பயனியர் இதழில் வந்த கட்டுரை.

Jaipur to Raipur
- Chandan Mitra

From Jaipur to Raipur and beyond, India is under a siege within. While the political class has predictably fulminated against Pakistan and Bangladesh, the fact is that every heinous crime against the people of India has been committed by Indians, even if funded and trained by outside forces.

For the ordinary citizen it comes as no solace to learn that something called HuJI has replaced LeT or JeM as the new face of terror in India. For the victims of terror, the jihadi terrorist remains an elusive, sinister figure irrespective of nomenclature. Periodically we are told that these shadowy organisations receive logistic support from yet another dangerous outfit, SIMI (or is it now called SIM?). Whether it is the Students' Islamic Movement that acts as the liaison agency for the executors of bomb blasts, it is quite inconsequential to the public at large. Jihadi terrorists have demonstrated their ability to strategise precisely, plan meticulously, strike at will and massacre innocents at destinations chosen by them. Every year India has reeled under three or more major terrorist outrages and just when complacency sets in, jihadis strike yet another deadly blow.

Where does Raipur fit in this scheme? Chhattisgarh, Jharkhand, Orissa, Andhra Pradesh, Bihar and parts of Maharashtra and Karnataka have similarly been reeling under successive waves of terror of another kind. Although there is no concrete evidence yet of links between jihadis and Maoists, they share a common aim -- destabilisation of the Indian nation. The green flag of Islamic jihad and red pennant of Naxalites are fluttering virtually all over the country even if they have carved out separate areas of operation, the former focusing more on big cities and the latter on interior villages. The numbers decimated by Maoist marauders is probably no less than those felled by terrorist depredations. In vast stretches of the Indian heartland, the writ of the Government either does not run at all or runs cursorily only between dawn and dusk. Just as the jihadi terrorists are working in coordination with, or at the behest of, foreign powers and global terror outfits like Al Qaeda, Maoists in India too have a central command, swear allegiance to a foreign ideology and, after the tragic legitimisation of ultra-Left rule through elections in Nepal, will work in even greater concert with a neighbouring country's Government.

The similarity does not end there. Both jihadis and Maoists thrive on the back-up support of an army of secular fundamentalists and bleeding-heart intellectuals in India. These fifth columnists hold opinion makers in this country in an octopus-like grip, and are perpetually busy generating sympathy for the mass murderers. While every attempt by the state to act decisively against both jihadis and Naxalites is greeted with howls of protest, law-enforcement agencies are continuously berated and sought to be systematically demoralised. The self-styled cheerleaders of liberalism oppose the demand to bring back POTA or enact similar State laws needed to act aggressively against terror merchants.

Further, they are at the forefront of vicious campaigns against conscientious security personnel for their alleged excesses and so-called violation of human rights. One only has to recall their frenzied attempts to put Gujarat Chief Minister Narendra Modi on the mat for defending his police in the encounter that led to the fully justified liquidation of jihadi operatives such as teenage terror courier Ishrat Jahan. The subversive section of the Indian intelligentsia went almost berserk over the alleged crimes of VG Vanzara, the Gujarat police officer who eliminated terrorist Sohrabuddin. These effete intellectuals have been out to prove that the Government itself plotted the December 13 attack on Parliament and Afzal Guru is an innocent, honourable man who must be saved from the gallows irrespective of judicial verdicts.
The India-baiters inevitably succeed because we are unfortunate enough to have a Prime Minister who confesses he could not sleep for nights without end worrying about the fate of an Indian-origin Glasgow airport bombing suspect detained briefly in Australia, although the same Prime Minister has shown no such concern for the thousands of his fellow-countrymen who die gruesome deaths at the hands of jihadis and Maoists.

Not surprisingly, closet sympathisers of India's destabilisation have now mounted a campaign to allow Naxalite intellectual Dr Binayak Sen to travel to Washington to personally collect something called the Jonathan Mann award from an organisation that describes itself as the Global Health Council. Apparently he is to be honoured for his "spectacular and pioneering" work among tribals of Chhattisgarh and also for "exposing" the "Government-backed vigilante group, Salwa Judum". It is remarkable how a Washington-based organisation came to know about Dr Sen's "spectacular" work when nobody in India (except Maoists and their frontal organisations) had heard of him, at least till he was caught smuggling vital correspondence to a Naxalite leader in detention, under the garb of attending to his medical condition. Moreover, the Goebblessian propaganda that Salwa Judum is a vigilante group, whereas it is an unarmed people's movement against Naxalites, has actually got embedded even in intelligent people's minds through sheer repetition. Although various agitations planned on the dubious doctor's behalf by Maoists and their fellow-travellers have not quite taken off despite high voltage publicity on websites, it would be naïve to rule out a crescendo of support as May 29, the date on which the award is to be conferred, comes closer.

Remarkably, Indian subversives have a huge international network, which includes various separatist outfits, Christian missionary groups and busybody NGOs. I recall being confronted by an earnest young Tamilian Christian student at Berkeley last August demanding my intervention as MP with the "fascist, communal" Chhattisgarh Government for Dr Sen, whose name I first heard at that seminar. Taken aback, I checked up with friends at home about the activist-doctor's antecedents that night and sparred with his misguided young supporters in the US thereafter. I have no doubt that India's terror network thrives because of such people. I even came across an article titled "India: No country for good men" detailing the Government's apparently disgraceful human rights record and condemning the "systematic crackdown" on dissenters in this country. If India were not mentioned a few times, anybody would have thought it was a write-up on the excesses of the Burmese military junta! Needless to add,
the internet article was written by an Indian!

Thus, the siege within is much more pervasive than it appears at first sight. While the country needs more stringent anti-terror laws, better intelligence, superior equipment for security forces and other paraphernalia for combating jihadi, Maoist and separatist terror, apart from draconian measures to stop infiltration from Bangladesh, the war against the enemy within cannot be won by laws alone.


Till such time as we agree that "terrorism in all its manifestations" includes mindset that in effect protect and promote the cause of the perpetrators of terror rather than those of its victims, I am afraid the war can never be decisively won.

Wednesday, May 21, 2008

தமிழக ஜிகாதிகள்: போலீஸ் தேடுதல் தீவிரம்

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகள் பற்றிய இந்தப் பதிவின் இறுதியில் இப்படிக் கூறியிருந்தேன் -

"எனவே அரசு மிக உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், உடுமலைப் பேட்டையிலும், உடுப்பியிலும், குண்டூரிலும், நாசிக்கிலும் என எதிர்பாராத இடங்களில் எல்லாம் ஜிகாதிகள் தாக்குதல் நடத்தப் போவது உறுதி. மக்களின் உயிருக்கு உத்தரவாதம் தராத அரசு நீடிப்பதில் அர்த்தமில்லை, அது அகற்றப் படவேண்டும்"





எழுதிய கம்ப்பூட்டரை இன்னும் ஒருமுறை boot கூடப் பண்ணவில்லை, அதற்குள் சென்னை மண்ணடியில் ஜிகாதிகள் கைது செய்யப் பட்டதாகவும், சென்னையிலும் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. போலீஸ் போய்ப் பிடிப்பதற்குள் இந்த ஜிகாதி கும்பலின் தலைவன் தப்பியோடிவிட்டான். இது பற்றி ஜுனியர் விகடன் இதழ் ஒரு அதிரடி ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது.

தஞ்சை கடலோரப் பகுதிகளில் இஸ்லாமிய தீவிரவாதமும், மதவெறியும் நாளுக்கு நாள் பெருகிவருகிறது பற்றியும் இந்த ரிப்போர்ட் கவலை தெரிவிக்கிறது. ஒன்றரை வருடம் முன்பு பாகிஸ்தான் ஆகி வரும் தஞ்சைத் தமிழ் மண்??? என்ற பதிவில் குறிப்பிட்டது போல, கோயில் திருவிழாக்களில் சுவாமி வீதியுலா வருகையில் கோலம் போட்டு வரவேற்று தஞ்சை மண்ணின் கலாசாரத்துடன் தங்களை இணைத்துக் கொண்டிருந்த முஸ்லீம்களின் தலைமுறை முடிந்துபோய், ஜிகாதி தீவிரவாத விஷ விருட்சங்கள் அங்கே வளர்ந்துகொண்டிருக்கின்றன. இன்று ஜூ.வியே இதைப் பற்றி எழுத ஆரம்பித்துள்ளது.

மற்ற மாநில, மற்றும் வெளிநாட்டு ஜிகாதிகளுடன் இவர்களுக்கு இருக்கும் தொடர்புகளையும் ஜூ.வி கட்டுரை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

டென்ஷனில் தமிழகம்! 'டேஞ்சரஸ் தவ்பீக்...'
(ஜூனியர் விகடன் 25-5-2008 இதழிலிருந்து)

தமிழகத்தை திடீரென திக்திக்கில் மூழ்கடித்திருக் கிறது தவ்பீக் என்ற பெயர்! 'இறைவன் ஒருவனே' அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக இருக்கும் தவ்பீக், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம் பட்டினத்தைச் சேர்ந்தவன். சில மாதங்களுக்கு முன்பு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டவன். அப்போது, ''வெறுங்கையோட திரியிற நான், இத்தனை போலீஸ் பாதுகாப்பையும் தாண்டி எப்படி சார் மோடியைக் கொல்ல முயன்றிருக்க முடியும்? இருந்தாலும், என்னால மோடியோட உயிருக்கு ஆபத்து இருக்குன்னு நீங்க நினைச்சதே எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு'' என சொல்லி போலீஸாரையே அசரடித்தவன் தவ்பீக்.

அந்த வழக்கிலிருந்து கடந்த மாதம்தான் வெளியே வந்திருக்கிறான்.ஆறு வருடங்களுக்கு முன்பு அதிராம்பட்டினத் தில் முஸ்லிம் பெண்களை ஏற்றிச் சென்ற ஒரு ஆட்டோக்காரரை அரிவாளால் வெட்டிய தவ்பீக், போலீஸாரிடம் மத்திய அமைச்சர் ஒருவரின் பெயரைச் சொல்லி மிரட்டியதை அப்போதே ஜூ.வி-யில் வெளியிட்டிருந்தோம் (தவ்பீக்கின் புகைப்படத்தை அப்போதே முதன்முறையாக வெளியிட்டது ஜூ.வி.).அதன்பிறகு, தவ்பீக்கை உளவுத்துறை போலீஸார் விடாமல் வேவு பார்த்த போதுதான் இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலனுக்கு குறி வைக்கப்பட்டிருக்கும் தகவல் தெரிய வந்திருக்கிறது. உடனே, அவனையும் அவன் கூட்டாளிகளையும் சேர்த்து வளைக்க போலீஸ் திட்டம் போட்டது.

இந்த நிலையில், ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பை அடுத்து சென்னையில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, தவ்பீக்கும் அவனுடைய கூட்டாளிகளும் சென்னை மண்ணடி யில் உள்ள அட்வகேட் மேன்ஷனில் தங்கியிருப்பதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது. அடுத்தகணமே இணை கமிஷனர் ரவி தலைமையிலான போலீஸ் படை அங்கு விரைந்திருக்கிறது.

அதற்குள் தவ்பீக்கும், 'இறைவன் ஒருவனே' அமைப்பின் சென்னை தலைவன் அபுதாகிரும் எஸ்கேப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 'பழனி' உமர், நெல்லையைச் சேர்ந்த சையத்காசிம் என்கிற ஹீரா, சென்னை மண்ணடி ஏரியா காதர் ஆகிய மூவரையும் வளைத்தது போலீஸ்.

தவ்பீக்கின் தீவிரவாத வளர்ச்சி பற்றிய பல விஷயங்களை, போலீஸ் மற்றும் விவரமறிந்த புள்ளிகள் விரிவாக நம்மிடம் சொன்னார்கள்.''அவனிடம் ஐந்து நிமிஷம் பேசினாலே எதிராளி மயங்கிவிடுவார். பிரமாதமாகப் பாடவும் செய்வான். இமாம் அலியுடன் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்தவன். இமாம் அலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட பிறகு, ஒட்டுமொத்த போலீஸ§ம் கண்காணித்துக் கொண்டிருப்பது தெரிந்தும், உடலை எந்த தயக்கமும் இன்றி முதல் ஆளாக நின்று சுமந்து சென்றவன். இமாம் அலியின் பல திட்டங்கள் தவ்பீக்குக்குக் கைமாற்றப்பட்டதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது. 'இமாம் அலியின் நண்பர்' என்கிற அடையாளத்தை வைத்து சர்வதேச தீவிரவாத அமைப்புகளோடும் தவ்பீக் தொடர்புகொண்டிருக்கிறான்.

ஆரம்பத்தில் 'முஸ்லிம் டிஃபென்ஸ் ஃபோர்ஸ்' என்ற அமைப்பில் இருந்த தவ்பீக், சர்வதேச தீவிரவாதியான 'மல்லிப்பட்டினம்' இம்ரான் (சமீபத்தில் தமிழகத்தில் கைது செய்யப்பட்டான் இவன்) உதவியுடன் சவூதி அரேபியா சென்று பயிற்சி பெற்றான். இதற்கிடையில், தமிழகத்தில் சில முக்கியமான அசைன்மென்ட்களை நிறை வேற்றுவதற்காக தவ்பீக் சென்னைக்குத் திரும்பி வர, தமிழக போலீஸ் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அவனைக் கைது செய்தது. இருந்தாலும், அவன் சம்பந்தப்பட்ட எந்த வழக்கையும் போலீஸால் முறையாகப் பதிவு செய்ய முடியவில்லை. அதனால், நான்கு வருடங்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டான்.

அண்டை மாநிலங்களில் பிடிபட்ட தீவிரவாதிகளின் வாக்குமூலங்களில் தவ்பீக்கின் பெயர் தவறாமல் இடம் பிடித்தது. கடந்த மார்ச் 25-ம் தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ராம.கோபாலன் கூட்டத்தில் அவரை தீர்த்துக் கட்டுவதற்கான ப்ளானை நிறைவேற்ற தவ்பீக் திட்டமிட்டிருந்தான். ஆனால், அன்று எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாக இருந்ததால் திட்டம் நிறைவேறாமல் போயிருக்கிறது.இது மட்டுமல்ல... ஜெய்ப்பூரைப் போல் சென்னையிலும் அசம்பாவிதங்களை அரங்கேற்ற தவ்பீக்கின் கும்பல் திட்டம் போட்டிருக்கிறது. நல்ல வேளை, அதற்குள் அந்த கும்பல் பிடிபட்டுவிட்டது. தப்பியோடிவிட்ட தவ்பீக்குக்கு அடைக்கலம் கொடுக்க பல அமைப்புகள் தயாராக இருக்கின்றன. அதனால், அவன் போட்டு வைத்திருக்கும் திட்டங்களை விடாப்பிடியாக நிறைவேற்ற முயலுவான் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது'' என்று கவலையூட்டினார்கள்.

தவ்பீக்கின் கூட்டாளிகளிடம் விசாரித்துவரும் டீமில் இருப்பவர்கள், ''ஜெய்ப்பூரிலும், சென்னையிலும் ஒரே சமயத்தில் குண்டுவெடிப்பு களை அரங்கேற்ற திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. உளவுத்துறை போலீஸாரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் சென்னை தப்பியிருக்கிறது. ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றிருக்கும் 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்புக்கும் தவ்பீக்குக்கும் தொடர்பு இருப்பதற்கான முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்பினரின் மெயில் மிரட்டலில் 'டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களையும் தகர்ப்போம்' எனச் சொல்லி இருக்கிறார்கள். போலீஸ் தன் மீது கண் பதித்திருந்ததால்தான் தவ்பீக்கால் சென்னையைத் தகர்க்கும் அசைன்மென்ட்டை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கிறது. இப்போது அவன் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. விரைவில் அவனைப் பிடிப்போம்'' என்கிறார்கள்.

அதிராம்பட்டினம் - மல்லிப்பட்டினம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தவ்பீக்குக்கும் மல்லிப்பட்டினத்தில் இம்ரானுக்கும் ஆதரவாளர்கள் அதிகம். சில வருடங் களுக்கு முன்பு மல்லிப்பட்டினம் பள்ளிவாசல் அருகே வெடிமருந்து மூட்டைகள் கைப்பற்றபட்டபோது, பிடிபட்டவர்கள் 'தஞ்சை பெரிய கோயிலை தகர்க்கத்தான் திட்டம் போட்டோம்' எனச் சொல்லி அதிர வைத்தார்கள்.

ஐயாயிரம் வாக்குகளை அள்ளிய தவ்பீக்!

இரண்டு வருடங்களுக்கு முன்பு சிறையிலிருந்தபடியே சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டி யிட்டவன்தான் இந்த தவ்பீக். அவன் பேசிய கேசட்களை தொகுதி முழுக்க ஒலிபரப்பியும், உரைகளை பிட் நோட்டீஸ்களாக அச்சடித்தும் அவன் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்தார்கள். தேர்தல் முடிவில் அவனுக்கு ஐயாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் விழுந்திருந்தன.

ரகசிய கூட்டம்?

தவ்பீக் பதற்றம் தமிழகம் முழுவதும் தொற்றிக்கொண்டிருக்கும் நேரத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்னும் அதிகமாகி இருக்கிறது. மேலப்பாளையத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களைத் திரட்டி, சீருடையும் கொடுத்து, 'அணிவகுப்பு ஒத்திகை மற்றும் மனதிடப்பயிற்சி' அளிக்க இருக்கிறார்கள் என்றொரு பரபரப்பு கடந்த வாரம் கிளம்பியது. போலீஸ் கண்காணிப்பு தீவிரமானதால், அந்தக் கூட்டம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதேபோல், இரண்டு நாட்களுக்கு முன்பு தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் குண்டு வெடிக்கப்போகிறது என்று தென்காசி போலீஸ் நிலையத் துக்கும், '100'-க்கும் ஒரு தகவல் வந்தது. தென்காசி கோயில் பக்கத்திலிருந்த ஆளில்லா ஒரு ரூபாய் டெலிபோன் பூத்திலிருந்துதான் அந்த போன் வந்திருக்கிறது.

-- இரா.சரவணன்
Copyright © 2007 Junior Vikatan

Thursday, May 15, 2008

வீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா?

இந்த வார ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகள் தேசத்தை இன்னொரு முறை அதிர்ச்சியிலும், ஆழ்ந்த துயரத்திலும் உறைய வைத்திருக்கின்றன. சுற்றிப் பார்க்க வந்தவர்கள், அனுமன் கோயிலில் தரிசனம் செய்ய வந்தவர்கள், விளையாட வந்தவர்கள், கடைகளில் பொருள் வாங்க வந்தவர்கள், காற்று வாங்க வந்தவர்கள் என பேதம் பார்க்காமல் அப்பாவி இந்திய மக்களைக் கொன்று குவித்திருக்கின்றன தீவிரவாதிகள் வைத்த சைக்கிள் குண்டுகள். இந்த தேசம் முழுவதும் ஜெய்ப்பூரில் மடிந்தவர்களுக்காகக் கண்ணீர் வடிக்கிறது, இறந்த இந்திய ஜீவன்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது. எம் தேசத்தின் மைந்தர்களின் கோரப் படுகொலையும், சோகமும், இழப்பும், வேதனையும், வலியும் தொலைக்காட்சியில் காணும் போது நெஞ்சு வெடிக்கிறது.




தீவிரவாதம் பற்றி இந்திய சமூகத்தின் பொதுவான மனநிலை எப்படியிருக்கிறது? ஜெய்ப்பூர் என்கிற ஒரு சுற்றுலாத் தலத்தில், மொஃபசல் நகரில் தீவிரவாதத் தாக்குதல் நடந்திருப்பது பெரிய அதிர்ச்சி என்று ஊடகங்களில் பேசப் படுகிறது. “ஜெய்ப்பூர் இதற்கெல்லாம் பழக்கப் பட்டதேயில்லை” (Jaipur is just not used to this) என்கிறார் ஒருவர். மும்பை, தில்லி, வாரணாசி, அயோத்தி, ஹைதராபாத் இங்கெல்லாம் ஏற்கனவே குண்டுவெடுப்புகள் நடந்து விட்டன, அந்த நகரங்களில் இருப்பவர்கள் எல்லாரும் ஜிகாதிகள் கையால் சாவதற்குப் பழகிக் கொண்டு விட்டிருக்கிறார்கள் (அல்லது பழகிக் கொள்ளவேண்டும்) என்று மறைமுகமாக உணர்த்துவது போல் நிருபர்கள் பேசுகிறார்கள். தீவிரவாதத்தின் பயங்கரத்தால் இந்திய உயிர்கள் தொடர்ச்சியாக சாவது என்பது அல்ல, அது “எதிர்பாராத” ஒரு “புதிய” இடத்தில் நடந்திருக்கிறதே என்பது தான் பெரிய கவலையாக இருக்கிறது. அந்த அளவிற்கு சமூகத்தின், ஊடகங்களின் உணர்ச்சி மரத்துப் போய்விட்டிருக்கிறது.

இந்த கோரச் செயலின் பின் இருப்பவர்கள் பற்றி இம்முறை கொஞ்சம் மெதுவாகத் தான் தகவல்கள் வரத்தொடங்கியிருக்கின்றன. அதே “சிமி” இஸ்லாமிய மாணவர் அமைப்பு, அதே லஷ்கர்-ஏ-தொய்பா, அதே HUJI என்கிற ஹர்கத்-உல்-ஜிஹாதி-இஸ்லாமி. “இந்தியன் முஜாஹிதீன்” என்று ஒரு புதிய குழு புறப்பட்டிருக்கிறதாம். அதே மதரசாக்களில் படித்து மதவெறியேற்றப் பட்ட நடுத்தர வயது இளைஞர்கள். ஊர்கள், பெயர்கள், ஆட்கள் கொஞ்சம் கொஞ்சம் மாறிய அதே ஜிகாதி இஸ்லாமிஸ்ட் தீவிரவாதம். ராஜஸ்தான் காவல்துறை சந்தேத்தின் பேரில் தேடிவரும் நபர் உ.பி குண்டுவெடிப்புகளாகக் கைது செய்யப் பட்டு லக்னோவில் விசாரிக்கப் பட்டு வரும் ஒரு முன்னாள் மதரசா மாணவாரால் ஏற்கனவே கூட்டாளி என்று கூறப்பட்டவர். இவரும் சஹ்ரான்புர் மதரசாவின் முன்னாள் மாணவர் தான். இந்தூரில் இரு மாதங்கள் முன்பு கைது செய்யப் பட்ட 13 ஜிகாதிகளுடனும் தொடர்புடையவர் என்றும் கூறப் படுகிறது.

ஆனால் ஏதோ இந்த ஜிகாதி தீவிரவாதிகளுக்கு சில ஊர்கள், சில ஆட்கள் பேரில் மனஸ்தாபம் இருப்பதால் அங்கு போய் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள் என்பது போன்ற பாமரத் தனத்துடன் இந்த செய்தி அலசப் படுகிறது. ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்துள்ள இந்த நாசவலைக் குழுக்கள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் எதிராக போர் தொடுக்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லை. இந்த தேசத்தின் மீதும், இதன் ஆதாரமான, ஆன்மாவான இந்து வாழ்க்கை முறைமீதும் மட்டற்ற வெறுப்புக் கொண்டு அவற்றை அழிப்பதற்குக் கங்கணம் கட்டியிருப்பவர்கள் இவர்கள் என்ற விஷயம் சொல்லப் படுவதில்லை. இந்தியாவின் எல்லா இடங்களிலும் இவர்கள் குண்டுவைக்காமலிருப்பதற்கு, அந்த அளவுக்கு ஆள், அம்பு, ஆயுதம், கட்டமைப்பு இல்லை என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்கிற விஷயம் இன்னும் உறைக்கவில்லை. இவ்வளவு தாக்குதல்கள் நடந்தும் இந்த தேசவிரோத, தேசத்துரோக இஸ்லாமிஸ்ட், ஜிகாதி கும்பல்கள் பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை ஏன் அரசும், ஊடகங்களும் மக்களுக்கு வழங்குவதில்லை?

தீவிரவாதிகளின் நோக்கம் அப்பாவி இந்தியர்களைக் கொல்வதல்ல, அதுவும் செவ்வாய்க் கிழமை அனுமன் கோவில் வாசலுக்கு வரும் இந்து பக்தர்களைக் குறிவைத்துக் கொல்வது அல்லவே அல்ல. அதன் நோக்கம் “அமைதியைக் குலைப்பது” என்று திரும்பத் திரும்பச் சொல்லப் படுகிறது. அதாவது மக்கள் உயிர்போவதைப் பற்றிக் கூடக் கவலைப் படாமல் “அமைதி” காப்பாற்றப் படவேண்டும் என அரசு விரும்புகிறது.

ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததும், அதில் ஏற்பட்ட மனித உயிரிழப்பின் வலியை விட, அதன் சோகத்தை விட, ஐயையோ மதக்கலவரம் வந்து விடாமல் இருக்கவேண்டுமே குண்டடி பட்டுச் செத்த மக்களின் உற்றாருக்கு, சமூகத்தினருக்குக் கோபம் வந்து ஏதும் செய்யாமலிருக்க வேண்டுமே என்ற கவலையில் ராணுவத்தை ராஜஸ்தானுக்கு அனுப்புகிறது மத்திய அரசு. ஒரு இரண்டு நாள் துக்கம் அனுஷ்டித்து விட்டு பிறகு தங்கள் உற்றாரின் கோர மரணத்தையும், அந்த நிகழ்வையும் பற்றி சுத்தமாக மறந்து விட்டு தங்கள் வேலையைப் பார்க்கப் போகும் இந்து மனப்போக்கிற்கு “மன உறுதி” (resilience) பட்டம் தவறாமல் ஊடகங்களால் வழங்கப் படுகிறது. மும்பை ரயில் குண்டுவெடிப்புக்கு மறுநாளே சோகத்திலிருந்து மீண்டெழும் அந்த நகரின் “மன உறுதி” பற்றி சிலாகிக்கப்பட்டது (ஜெய்ப்பூர் விஷயத்தில் இரண்டு நாள் தாமதமானாலும், தவறாமல் ஊடகங்கள் இந்த சடங்கை செய்துவிட்டன). ஆனால் குஜராத் கலவரங்களில் பாதிக்கப் பட்ட, மன உறுதி மிக்க முஸ்லிம்களின் “காயங்கள்” “வடுக்கள்” வலிகள்” எல்லாம் அப்படியே ஆறவைக்கப் படாமல் வருடங்கள் கழித்தும், சம்பந்தமில்லாத நேரங்களிலும் மீண்டும் மீண்டும் நினைவு படுத்தப் படும். என்னே ஊடகங்களின் நடுநிலைமை, மதச்சார்பின்மை!

இதற்கு நடுவில் அரசு இதில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக சொல்லியதை அடுத்து, ராஜஸ்தானில் சிதைகள் வெந்து முடிப்பதற்கு முன்பாகவே, அண்டை நாடுகளுடனான உறவு பற்றி சர்ச்சை ஆரம்பித்து விட்டது. ஒரு தொலைக் காட்சி சேனலில் பேசிய வெளியுறவுத்துறை நிபுணர் ஜி.பார்த்தசாரதி, “அண்டை நாடுகளை விடுங்கள். கடந்த 3-4 வருடங்களில் நடந்த எல்லா குண்டுவெடிப்புகளிலும் இந்திய ஜிகாதிகளின் பங்கு தெளிவாக உறுதிசெய்யப் பட்டிருக்கிறது. நாம் அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கினோம்? இஸ்லாமிஸ்ட் ஜிகாதி தீவிரவாதத்தால் நம்மை விட மிகக் குறைவாக உயிர்களை இழந்த யு.எஸ், யு.கே, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் மிகமிகக் கடுமையான தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்களை இயற்றியிருக்கின்றன, குற்றவாளிகளைத் தண்டிக்கின்றன. தீவிரவாதத்தை ஒடுக்க என்று தனிப் படைகளையே அமைத்திருக்கின்றன. இது ஒன்றையுமே செய்யாத நாம் புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?” என்று கேட்டார். மிக நியாயமான கேள்வி.

சமீபத்திய குண்டுவெடிப்புகள் அனைத்திலும், பங்களாதேஷ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஹுஜி அமைப்பின் பெயர் முக்கியமாக அடிபடுகிறது. சிட்டகாங் மற்றும் இன்னும் சில நகரங்களில் ஜிகாதி தீவிரவாத முகாம்கள் இயங்குவதை இந்திய அரசே உறுதி செய்திருக்கிறது. இந்தியாவால் உருவாக்கப் பட்ட இந்த சிறிய நாடு இப்போதைய முக்கியமான ஜிகாதி தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்று. இது போக பங்களாதேஷ் எல்லைப் புற ஊடுருவல் மூலமும், ஆயிரக் கணக்கான திரைமறைவு ஜிகாதிகள் ஏற்கனவே இந்தியாவின் பல நகரங்களில் மையம் கொண்டுள்ளனர். ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளில் இவர்கள் சிலரின் பங்கும் உள்ளதாகக் கூறப் படுகிறது. இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும்போது ஏன் இந்தியா விமானத் தாக்குதல் நடத்தி பங்களாதேஷில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்கக் கூடாது? ஆற்றாமையுடன் நண்பர் ஒருவர் சொன்னார்: "Sword Fish என்ற படத்தில் ஜான் ட்ரவோல்டாவின் வசனத்தை இங்கே நினைவுகூர்கிறேன் - அவர்கள் இங்கே ஒரு விமானத்தை கடத்தினால் அங்கெ சில விமான நிலையங்கள் அழியவேண்டும். அவர்கள் இங்கே இரண்டு கட்டிடங்களை அழித்தால் நாம் அங்கே சில நகரங்களை அழிக்கவேண்டும்"
ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து அழித்த அமெரிக்கப் படைகள் தாலிபான்களைத் துரத்தி அழித்ததையும், 2002ல் நடந்த 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க மண்ணில் இன்றுவரை ஒரு தீவிரவாதத் தாக்குதல் கூட நடக்கவிலை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் ரேடார் திரையில் இல்லாத “மென்மையான இலக்கு”களை (soft targets) ஏன் தீவிரவாதிகள் தாக்குகிறார்கள் என்று பரிதாபமாகக் கேட்கிறார்கள். தீவிரவாதிகள் என்ன கேனையர்களா? இத்தகைய இலக்குகள் மீது தேர்ந்தெடுத்து அடிக்கடி தாக்குதல் நடத்துவது அவர்களுக்கு மிஅக் சாதகமான விஷயம் என்கிறார் பாதுகாப்பு நிபுணரும், ஓய்வுபெற்ற “ரா” அதிகாரியுமான பி.ராமன். சிறு நகரங்களில், குறைந்த அளவு ஜிகாதிகளை வைத்து எளிதாக ஒரு குழுவை உருவாக்கி செயல்படுத்துவது மிக எளிது. இந்தியா முழுக்க வர்த்தகம், சுற்றுலா, கல்வி இவற்றுக்குப் பெயர்போன பல சிறு நகரங்கள் உள்ளன என்பதால் இத்தகைய தாக்குதல் விளைவிக்கும் சமூக, பொருளாதார அதிர்ச்சிகளும் கடுமையாகவே இருக்கும்.




எனவே அரசு மிக உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், உடுமலைப் பேட்டையிலும், உடுப்பியிலும், குண்டூரிலும், நாசிக்கிலும் என எதிர்பாராத இடங்களில் எல்லாம் ஜிகாதிகள் தாக்குதல் நடத்தப் போவது உறுதி. மக்களின் உயிருக்கு உத்தரவாதம் தராத அரசு நீடிப்பதில் அர்த்தமில்லை, அது அகற்றப் படவேண்டும்.

வரும் தேர்தலில் ஜிகாதி தீவிரவாதம் தான் இந்தியாவின் தலையாய பிரசினையாக இருக்கவேண்டும். இருக்குமா? ஜிகாதிகளுக்கு நேர்முக, மறைமுக ஆதரவு அளிக்கும் அரசியல் கட்சிகள் மக்களால் கடுமையாகத் தண்டிக்கப் படுமா? அல்லது வீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா?

Thursday, May 08, 2008

ஒரு மணப்பெண்ணும், தேவதைகளும், திராவிட பகுத்தறிவும்

திராவிட இயக்கத்தைச் சேர்ந்த வெறியர்கள் இந்து சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமாக வசைபாடுவது தெரிந்த விஷயம் தான். சில சமயங்களில் பித்தம் தலைக்கேறி ஏதாவது ஒரு வேதமந்திரத்தையோ அல்லது வேத இலக்கியத்தில் உள்ள படிமத்தையோ எடுத்துக் கொண்டு, அதற்குப் “பொருள் கூறி” அது உலகத்திலேயே அருவருப்பான விஷயம் என்றெல்லாம் பிரசாரம் செய்வார்கள்.

உதாரணமாக, பாணிக்ரஹணம் எனப்படும் கைத்தலம் பற்றும் சடங்கின் போது மணப்பெண்ணை நோக்கிச் சொல்லப் படும் ஒரு மந்திரம்:

सोम: प्रथम: विविदे गन्धर्वो विविद उत्तर: ॥
तृतीयो अग्निस्ते पति: तुरीयास्ते मनुष्यजः ॥

ஸோம: ப்ரதம: விவிதே கந்தர்வோ விவித உத்தர:
த்ருதீயோ அக்னிஸ்தே பதி: துரீயாஸ்தே மனுஷ்யஜ:
(ரிக்வேதம் 10.85.40)


“முதலில் சோமனும், இரண்டாவதாகக் கந்தர்வனும், மூன்றாவதாக அக்னியும் உன்னை சுவீகரித்தனர். பெருமைக்குரிய தேவர்களால் சுவீகரிக்கப் பட்ட உன்னை, இறுதியாக மனிதனாகிய நான் வரிக்கிறேன்”

பார்ப்பனர்களின் இந்த மந்திரம் பெண்மையை இழிவு செய்கிறது, இழிவான பெண்ணை தூய்மைப் படுத்துவது என்பது தான் இதன் பொருள் என்று ஒரு அவதூறு. “மூன்று பேர் மணந்த பென்ணை நாலாவதாக மணக்கிறேன் என்று சொல்கிறான், எந்த மானமுள்ள ஆண்மகனாவது இப்படிச் செய்வானா?” என்பது “கற்பு என்பதே ஒரு பொய்க் கற்பிதம்” என்று பேசுவதாகச் சொல்லிக் கொண்ட இந்த இயக்கத்தின் இன்னொரு அவதூறு.

முதலில் இந்த மந்திரத்தின் தாத்பர்யம் என்ன? பிறந்தது முதல் தேவர்களின் ஆசிர்வாதத்தாலும், அனுக்ரஹத்தாலும் வளர்ந்த பெண்ணை, அவர்கள் ஆசியுடன் மனிதன், அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஏற்றுக் கொள்வது என்பது.

எல்லா வேதமந்திரங்களையும் போல, இதிலும் “தேவர்கள்” என்பவர்கள் ஆசாமிகள் அல்லர். அகமும், புறமும் உள்ள தெய்வ சக்தியின் குறியீடுகள். “சோமன்” என்பது எல்லா உயிர்களிலும் அடங்கியிருக்கும் பரம்பொருளின் ஸ்வரூபமான ஆனந்தம் என்ற தத்துவத்தைக் குறிப்பது, கந்தர்வன் என்பது மனத்தில் காமம் என்ற விதையை ஊன்றும் இச்சா தத்துவம். அக்னி என்பது தெய்வீக சக்தி ஓங்கி வளர்ந்து தன் உன்னத நிலையை எய்துவதன் குறியீடு. இந்த தெய்வ சக்தியே இகம்,பரம் என்ற இரண்டு விதமான சுகங்களையும் நோக்கி மனிதனை இட்டுச் செல்கிறது.

இதை ஒரு அழகிய கவிதையாகக் கண்டு அனுபவிக்கவும் இடமிருக்கிறது,

“சிறுமியாக இருக்கையில் முதலில் நீ நிலவைக் கண்டு மையல் கொண்டாய்
பின்னர் மேகங்களில் வழிந்தோடும் இசையில் மனம் பறிகொடுத்தாய்
பின்னர் ஆசைத் தீ உன்னைப் பற்றியது.
ஓ பெண்ணே
நான்காவதாக மனிதனாகிய நான் உன்னை வரிக்கிறேன்.
ஏற்றுக் கொள்.”

சோமன், நிலவு, மனம், ஆனந்தம் இவை அனைத்தும் வேதப் படிமத்தில் தொடர்புடையவை. கந்தர்வர்கள், இசை, கலைகள், மேகங்கள் இவையும்.

தத்துவமும், கவித்துவமும் ததும்பும் அழகிய மொழியில் சொல்லப் பட்ட இந்த மந்திரத்தில் அருவருப்பைக் காணும் திராவிட பகுத்தறிவு ஒருவிதமான மனப்பிறழ்வு நிலை என்று தான் கூற வேண்டும்.

பெண் இழிவானவள் என்று கூறவந்தால் தேவர்கள் அவளைத் தள்ளினார்கள் என்றல்லவா இருக்கவேண்டும்? ஆனால் இங்கே ஸ்வீகரித்தார்கள் என்று வருகிறது. மேலும் இந்த ஒற்றை மந்திரத்தை வைத்து ஒன்றும் சொல்ல முடியாது. திருமணச் சடங்கில் உள்ள எல்லா மந்திரங்களும் பெண்ணை மிக உயர்வாகக் கூறுகின்றன.


“பெண்ணே, அர்யமாவும் பகனும் உன்னை ஆசிர்வதிக்கட்டும், என் குலம் விளங்க வரும் வரப்பிரசாதம் நீ”

“வேதத்தை அறிந்த பகன் முதலியோர், இல்லறம் என்ற புனிதமான விரதத்தை ஏற்றனர். உன் கரம் பிடித்த நானும், அந்த வம்சத்தைச் சேர்ந்தவனானேன்.”

“ஏழு அடிகள் என்னுடன் நடந்துவந்த நீ என் உயிர்த் தோழியாகி விட்டாய். நீ ரிக், நான் சாமம். நீ பூமி, நான் ஆகாயம். நீ சொல், நான் பொருள். நீ ஆத்மா, நான் மனம். இனிய சொற்களை உடையவளே, என்னைப் பின் தொடர்ந்து வந்த நீ என் வம்சத்தை விருத்திசெய்வாய்”

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சில வருடங்கள் முன்பு, சேலத்தில் அதிகமாக வசிக்கும் ஒரு சமூகத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். திருமணத்திற்கு முந்தைய நாள் நிச்சயதார்த்தத்தின் போது ஒரு சடங்கு. சமூகப் பெரியவர் நடுவில் வந்து அமர்ந்தார். மணமகன், மணமகள் வீட்டார் இருபுறமும். சடங்கு ஆரம்பித்தது. மணமகனின் தந்தை மகளின் தந்தையிடம் ஒரு ரூபாய் கொடுத்தார், அதை அவர் மகளின் தாயிடம் கொடுத்தார், பெரியவர் சொன்னர் “இது மகளைப் பெற்று வளர்த்ததற்காக”. அடுத்தது இன்னொரு ரூபாய், “இது பாலூட்டியதுக்காக”. அப்புறம் ஒரு ரூபாய் “இது சீராட்டியதற்காக”. இப்படி ஒரு பதின்மூன்று ரூபாய் வரை போயிற்று. இந்தப் பரிமாற்றம் முடிந்ததும் பத்திரிகை வாசிக்கப் பட்டது. பக்கத்தில் இருந்த பெரிசு ஒருவர் “அந்தக் காலத்தில பதிமூணு பணம் அப்படின்னு குடுப்பாங்க, பெரிய தொகை அது.. மகளைப் பெத்துத் தந்ததுக்கான கடனைத் தீர்க்கணும் இல்லையா” என்று பேசிக் கொண்டிருந்தார்.

கிறிஸ்தவ திருமண நிச்சயதார்த்தங்களில், மணப்பெண் கையில் அணியும் மோதிரம் எதைக் குறிக்கிறது? அவள் முதலில் கர்த்தருக்கு மணமுடிக்கப் பட்டு பின்பு மனிதனுக்கு மனைவியாக வருகிறாள் என்று சொல்லுவார்கள். கிறிஸ்தவ கன்யாஸ்தீரிகள் தங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளும் சடங்கின் போது ஏசுவின் மணமகள்கள் (Brides of Jesus) ஆவதாகவே கூறுவார்கள்.

இது போன்ற பல சடங்குகள் தமிழ்நாட்டின் பல சமூகங்களின் திருமணங்களில் உள்ளன. இதில் எல்லாம் எந்த அருவருப்பும் தென்படவில்லையா? ஆரிய, வந்தேறி குணங்கள் எதுவும் தென்படவில்லையா? பகுத்தறிவுப் பகலவனுக்கே வெளிச்சம்.

(இணையத்தில் பதிப்பிக்கப் படாத எனது பழைய கட்டுரை ஒன்றின் மீள்பதிவு இது)

Sunday, April 27, 2008

திருவாசகம், குரான், தீவிரவாதம்: ஒரு கடிதம்

அன்புள்ள பா.ரா,
Fitna - தேவையற்ற அச்சுறுத்தல் பதிவில் ரொம்ப அப்பாவியாக இப்படி சொல்கிறீர்கள் -

// பிற கடவுள்களை வணங்குவோரைச் சுட்டிக்காட்டி மாணிக்கவாசகர் கலவரப் பீதியைத் தூண்டுவதோ நமக்கு ஒரு பொருட்டில்லையென்றால் மேற்படி சூராக்களையும் நாம் பெரிய அளவில் பொருட்படுத்தத் தேவையில்லை. //

தேவையில்லை தான்.. இஸ்லாம் என்கிற மதம் தான் சென்றவிடமில்லாம் பெரும் படுகொலைகளையும், பேரழிவுகளையும் *மதத்தின் பெயரால்* செய்யாமலே இருந்திருந்தால். அது *இன்றும்* தொடர்ந்து நடக்காமல் இருந்திருந்தால்.. போர் நடக்கும் ஈராக்குக்கு அடுத்தபடியாக, இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு அதிக குடிமக்களை பலிகொடுத்திருக்கும் ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டு கொஞ்சம் கூட உணர்ச்சியில்லாமல் எப்படி சுவாமி உங்களுக்கு இப்படி எழுத வருக்கிறது?

சொற்கள் மட்டும் ஒரு கருத்தியலின் தாக்கத்தைத் தீர்மானிப்பதில்லை.. ஒரு மனிதன், மதம், சமூகம் அந்தச் சொற்களை உள்வாங்கித் தங்கள் வாழ்க்கையையும், அமைப்புகளையும் கட்டமைக்கும் விதமே அவற்றின் நடத்தையையும், செயல்முறைகளையும் தீர்மானிக்கிறது. "அஞ்சுமாறே" என்பதற்கும் "மாண்டனர்" எனபதற்கும் "அழிந்து போகிறான் (விநஷ்யதி)" என்பதற்கும் திருவவசகத்திலும், ராமானுஜ நூற்றந்தாதியிலும், கீதையிலும் அர்த்தமே வேறு. இந்த நூல்களின் தளமே வேறு. அது சுத்த ஆன்மிகம். இவை காஃபிர்களைக் கண்ட இடங்களில் கொல்லப் போகிற முஃமீன்களான "நம்பிக்கையாளர்கள் கூட்டத்திடம்" பேசவில்லை. ஒரு தனிமனிதனின், ஆன்ம சாதகனின் மனத்துடன் பேசுகின்றன. இதுவும் உங்களுக்குத் தெரியாததல்ல. மேலும், இந்த நூல்களினால் எத்தனை பாதகர்கள் உருவாகியிருக்கிறார்கள்? எத்தனை இனப்படுகொலைகள் நிகழ்ந்துள்ளன? வரலாற்று அறிஞரே, தயவு செய்து ஆதாரங்கள் தாருங்கள்.

ஆனால், இஸ்லாமின் ரத்தம் தோய்ந்த வரலாறு பற்றி வில் டுராண்ட் (அவரது பிரபலான மேற்கோளை மடல் முடிவில் தந்திருக்கிறேன்) முதல் இன்றைய கொய்ன்ராட் எல்ஸ்ட் வரை ஏராளமான வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இன்றைய செய்தி ஊடகங்களும், அப்பட்டமாக நமக்கு இவற்றை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. இப்படியிருக்கும்போது "அந்தளவுக்கு அவர்கள் அடக்குமுறைக்கும் ஆதிக்கத்துக்கும் உட்பட்டிருக்கிறார்கள் என்பது தவிர எனக்கு வேறு காரணம் தெரியவில்லை" என்று ஜல்லியடிக்கிறீர்களே.. மத்தியக் கிழக்கு சரி, மற்ற நாடுகளின் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு என்ன காரணம்?

பாகிஸ்தானிய, வங்கதேச இந்துக்கள் சந்தித்த அடக்குமுறை, ஆக்கிரமிப்புக்கள், கற்பழிப்புக்கள் கொஞ்சமா? நஞ்சமா? இத்தனைக்கும் இஸ்லாமிய ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு எந்தக் கலகமும் செய்யாமல், அதற்கு அடிபணிந்த வாழக் கூட இணங்கியவர்கள் அவர்கள். அவர்களை இன அழிப்பு செய்து, அவர்கள் சொந்த மண்ணை விட்டுத் துரத்திய இஸ்லாமிய" அராஜகத்திற்கு என்ன காரணம்?? இந்த குரானிய சூராக்கள் என்பதைத் தவிர?

"புவியிலோரிடம்" போன்ற அற்புதப் படைப்பைத் தந்த நீங்கள், மனச்சாட்சியையும், முதுகெலும்புகையும் கழற்றிவைத்துவிட்டு எழுதியிருக்கிறீர்கள்.

வேதனையுடன்,
ஜடாயு

வில் டுரான்ட் தனது “நாகரீகங்களின் வரலாறு” என்ற நூலில் கூறுகிறார் “இந்தியாவை இஸ்லாமியர்கள் கைப்பற்றியது தான் உலக சரித்திரத்திலேயே அதிக அளவு ரத்தக்கறை படிந்த கதையாக இருக்கும். அது எவரையும் நிலைகுலையச் செய்யும் கதை. அதிலிருந்து தெளிவாகப் புரியும் பாடம் என்னவென்றால், கலாசாரம் என்பது ஒரு பெருமதிப்புள்ள பொருள். அதன் சிக்கலான, நுட்பமான ஒழுங்கும், சுதந்திரமும் வெளியிலிருந்து ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் அவர்கள் மூலம் உள்ளிருந்தே பல்கிப்பெருகுபவர்கள் என்ற இருவகைக் காட்டுமிராண்டிகளாலும் எந்நேரமும் தகர்த்தெறியப் படும் அபாயம் இருக்கிறது”.

“...the Islamic conquest of India is probably the bloodiest story in history. It is a discouraging tale, for its evident moral is that civilization is a precious good, whose delicate complex order and freedom can at any moment be overthrown by barbarians invading from without and multiplying from within “
- Will Durant in “History of Civilization