Friday, November 24, 2006

இலங்கைப் பிரசினையில் இந்தியா இப்போது தலையிட வேண்டுமா?

யாழ் நகரம் மற்றும் இலங்கையின் வட பகுதிகளில் நிலைமை மிக மோசமாகி இது ஒரு humanitarian crisis என்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்தும் ஸ்தம்பித்ததை அடுத்து இலங்கை அரசு ஏ-9 நெடுஞ்சாலையைத் திறந்து விட்டது, ஆனாலும் விமானங்கள் குண்டு மழை பொழிகின்றன. மஹிந்தா ராஜபக்ஷேயின் இந்தியா வருகையை ஒட்டி பல விவாதங்களும் கிளம்பியுள்ளன. இந்தியா சமீபத்தில் அனுப்பிய சாதாரண நிவாரண உதவி யையும் இலங்கை அரசு அவ்வளவாக விரும்பவில்லை என்று கூறப் படுகிறது.

ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு இந்தியா இலங்கை விஷயத்தில் நீண்ட நெடும் மௌனத்தைத் தவிர பெரிதாக ஒன்றும் கிழிக்கவில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. இதற்காக இலங்கைக்கு
நன்கொடை அளிக்கும் நாடுகள் இந்தியாவைப் பாராட்டியுள்ளன - "இலங்கை விஷயத்தில் இந்தியா பொறுப்பான பங்காற்றி வருகிறது" என்று. அதாவது ஒரு கையாலாகாத மூன்றாம் உலக நாடு தன் அண்டை நாட்டு விஷயத்தில் எப்படி நடக்கவேண்டுமோ அந்த அடக்கத்தைக் கடைப் பிடித்ததற்காக இந்தப் பாராட்டு!

ஆனால், இலங்கை மற்றும் இந்திய மக்கள் என்ன நினைக்கிறார்கள்? முந்தா நாள் NDTV-ல் இது பற்றிய கவரேஜ் வந்தது. "ராஜீவ் காந்தி கொலை என்பது எப்போதோ நடந்த துன்பியல் நிகழ்வு. அதை நினைத்து வருந்துகிறோம், மன்னிப்பு கோருகிறோம், இப்போது இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் என்று கோருகிறோம்" என்று முகம் இருட்டடிக்கப் பட்ட இலங்கைத் தமிழர்கள் சொல்வதைக் காட்டினார்கள். இதே வேண்டுகோளை கொஞ்ச நாள் முன்பு முகத்தை மிகப் பரிதாபமாக வைத்துக் கொண்டு ஆன்டன் பாலசிங்கமும் மொழிந்தது நினைவிருக்கலாம். நிகழ்ச்சியின் ஊடாக நடந்த எஸ்.எம்.எஸ் வாக்கெடுப்பில் 75% இந்தியா தலையிட வேண்டும் என்றும் 25% கூடாது என்றும் வந்தது (இந்த வாக்கெடுப்புக்கள் ஆங்கில செய்தி பார்க்கும் மேல் மற்றும் நடுத்தர நகர்வாழ் இந்தியர்களின் கருத்தை எதிரொலிப்பதாகக் கொள்ளலாம்). ஓய்வு பெற்ற, IPKF-ல் பணியாற்றிய ராணுவ அதிகாரி ஒருவரையும் பேட்டி கண்டார்கள். இவ்வளவு நாள் நாம் தலையிடாமல் இருந்தது முட்டாள் தனம் என்றெல்லாம் முழங்கினார். "ராணுவத் தலையீடு செய்திருக்க வேண்டும்" என்று கூறுகிறீர்களா என்று கேட்டதற்கு வழவழா என்று ஏதோ சொல்லி மழுப்பினார்.

இது பற்றி பொதுவாகக் கூறப் படும் கருத்துகள் என்ன?

"ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர்கள் புலிகள். அதனால் அவர்களோடும், அவர்கள் யாருடைய பிரதிநிதிகளோ அந்த இலங்கைத் தமிழரோடும் ஒட்டுறவு ஒன்றும் வேண்டாம்" - ஆனால், இந்திரா காந்தியைக் கொலை செய்த சீக்கியத் தீவிரவாத சதிக்குப் பின்னாலும், அதற்குப் பழியாக காங்கிரஸ் நடத்திய சீக்கியக் கொலைவெறியாட்டத்திற்குப் பின்னாலும், சீக்கிய மக்கள் மற்றும் கட்சிகளோடு காங்கிரஸ் உறவு தொடர்கிறதே? இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் அது ஏன் "முடிந்த அத்தியாயமாக" இருக்க வேண்டும்? இது காங்கிரசின் இரட்டை வேடம் அல்லவா?

மும்பை ரயில் வெடிகுண்டு சதிக்குப் பின் பாகிஸ்தானின் கரம் குறித்து தீர்மானமான ஆதாரங்கள் இருந்தும் "அமைதி" முயற்சிகள் தோற்கும் என்பதால் அவற்றை வெளியிடாமல் இருக்கிறதாம் மனமோகன் அரசு! அப்பப்பா, நிறுவனப் படுத்தப் பட்ட இந்திய-இந்து வெறுப்பை திட்டமிட்டு தன் நாடு முழுவதும் விதைத்து, இடைவிடாமல் தொடர்ச்சியாக தனது ஜிகாதி தீவிரவாதத்தால் இந்தியாவை ரத்த விளாறாக்கி வரும் பாகிஸ்தானிய இஸ்லாமிய அரசுகளுக்கு இவ்வளவு சலுகை ! ஆனால் புலிகளின் track record பார்த்தால், ராஜீவ் கொலைக்குப் பிறகு இந்தியாவின் மக்களுக்கும், அதன் இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் எந்தச் செயலையும் புலிகள் செய்யவில்லை.. அவர்களது விரோதம் அந்த நாளைய இந்திய அரசுடன் தானே அன்றி பாகிஸ்தானுடையது போன்ற கடைந்தெடுத்த இந்திய வெறுப்பு அல்ல. அந்தக் குற்றத்திற்காக புலிகள் மற்றும் இலங்கைத் தமிழருக்கான உதவிகளுக்கு ஏன் நிரந்தர நிராகரிப்பு? இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இலங்கைத் தமிழர்களை போலி மதச்சார்பின்மைக் கட்சிகள் நடத்தும் விதம் தானோ இது?


இன்னொரு வாதம் - தனிநாடு கோரும் ஈழத்தமிழர்களை ஆதரித்தால் காஷ்மீர் பிரசினையில் காஷ்மீரிகளுக்கு தனிநாடு மறுக்கும் இந்தியாவின் தார்மீக நிலைப்பாடு என்ன ஆகும் என்று. இந்த இரண்டு பிரசினைகளையும் ஆழ்ந்து நோக்காததால் வந்த குழப்பம் இது. காஷ்மீரில் பாகிஸ்தான் உதவியுடன், ஜிகாத் மதவெறியால் உந்தப் பட்டு அங்கு வசித்து வந்த சிறுபான்மை இந்து பண்டிட்களை இஸ்லாமியத் தீவிரவாதிகள் அடித்து விரட்டி தங்கள் நாட்டுக்குள்ளேயே அகதிகளாகும்படிச் செய்தார்கள். தங்களுக்குப் பல உதவிகளும் செய்யத் தயாராக இருக்கும் இந்திய அரசை எதிர்த்து வருகிறார்கள். ஆனால் இலங்கையில்? இதே போன்ற பௌத்த-ஜிகாதி மதவெறி மற்றும் பெரும்பான்மை சிங்கள இனவெறியினால் தாக்கி அழிக்கப் படும் சிறுபான்மை தமிழர்கள் பலர் அகதிகளாகப் புலம் பெயர்ந்தும் இன்னும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்! ஒற்றுமை என்னவென்றால் இரண்டு பிரசினைகளிலும் தாக்கி அழிக்கப் படுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே! இலங்கைத் தமிழர்களை ஒப்பிடுவதானால் காஷ்மீர் பண்டிட்டுகளுடன் தான் ஒப்பிட வேண்டுமே அன்றி காஷ்மீர் பிரிவினைவாதிகளோடு அல்ல! இலங்கைத் தமிழர்கள் போன்று பண்டிட்டுகள் தங்கள் உரிமைக்காக ஆயுதம் ஏந்தித் தாங்களே போரைத் தொடங்கியுருந்தால் இன்று காஷ்மீர் பிரசினையின் போக்கே வேறு மாதிரி ஆகியிருக்கும் . ஆனால் அவர்களிடையே ஊறியிருந்த இஸ்லாமிய ஆதிக்கத்தைக் கண்டு பயப்படும் திம்மித்தனம் தான் அவ்வாறு செய்யவிடாமல் தடுத்தது. பங்களாதேசிலும், பாகிஸ்தானிலும் தங்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகளை எதிர்த்துப் போரிடாமல் இந்துக்கள் தப்பி ஓடி வந்ததையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தங்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகளுக்கு எதிராக தீவிரத்துடன் போரிடும் இந்துப் பெரும்பான்மை மக்கள் என்றால் அவர்கள் ஈழத் தமிழர் தான். உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப் படும் இந்துக்களுக்கு உதாரண புருஷர்கள் அவர்கள் தான்.

இதே போல இலங்கைப் பிரசினையை பாலஸ்தீன பிரசினையுடன் ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்பவர்களைத் தெளிவிக்கும் வகையில் வஜ்ரா ஒரு பதிவைப் போட்டிருக்கிறார். சரியான கருத்து.

இந்தியா இலங்கைப் பிரசினையில் முழுமையாகத் தலையிட வேண்டும், ராணுவத் தலையீடு உட்பட. துன்புறும் இலங்கைத் தமிழ் மக்களின் துயர் துடைக்க தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கையை வைக்க வேண்டும். இந்த பிரசினையில் காங்கிரசைப் போலவே சிந்திப்பதை விடுத்து பா.ஜ.க. தன் தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும்.

இதுவே இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் விருப்பம்.

30 comments:

ஜடாயு said...

test

Anonymous said...

நல்லாத்தான் எழுதுகிறீர்கள். இலங்கைத்தமிழர்கள் இந்துமதத்தைச் சார்ந்தவர்களானாலும் அதனை அடக்கித்தான் வாசிக்கிறார்கள். இந்து என்னும் கோணத்தில் அணுகினால் ஏதாவது நன்மை விளையுமானால் அதையும் செய்துபார்த்தால் என்ன என்று தோன்றுகிறது. ஏற்கனவே முஷாரப்பும் சில அமெரிக்கர்களும் விடுதலைப்புலிகளை இந்து தீவிரவாதிகள் என்றுதான் சொல்லிக்கொள்கிறார்கள்.

வஜ்ரா said...

ஜடாயு,

சரியாகச் சொன்னீர்கள்.

ப.ஜ.க வினரும் காங்கிரஸ் போலவே இந்த விஷயத்தில் சிந்திக்கின்றனர்.

ஈழத்தமிழர்கள் ப.ஜ.க வினரின் நன்மதிப்பைப் பெறும் வகையில் ஏதேனும் செய்தால் நலம். இந்தியாவில் அவர்கள் காங்கிரஸ் திராவிட கட்சிகளை நம்பி மட்டுமே இருப்பது நல்லதல்ல.

முதலும் முடிவுமாக திராவிட அரசியல் கட்சிகளின் கொள்கையிலிருந்தும், போலி மதச்சார்பற்ற கட்சிகளின் உலக அரசியல் சாய்விலிருந்தும் விலகுவது நல்லது.

கால்கரி சிவா said...

ஜடாயு, ஒரு வித்தியாசமான பார்வை. ராஜீவ் காந்தி கொலைக்குப் பின் இலங்கை தமிழரின் மேல் படிந்த பழிப் பார்வையை மாற்ற இந்த பதிவு முயலும் என நம்புகிறேன்.

ஜடாயு said...

// நல்லாத்தான் எழுதுகிறீர்கள். //

நன்றி அனானி.

// இலங்கைத்தமிழர்கள் இந்துமதத்தைச் சார்ந்தவர்களானாலும் அதனை அடக்கித்தான் வாசிக்கிறார்கள். //

இதற்குக் காரணம் இந்திய இந்துக்கள் தங்கள் மீதே கொண்ட self-alienation மனநிலையும் இந்து உணர்வைப் பெரிதாக வளர்த்தெடுக்காததும் தான். இந்து என்று சொன்னால் எங்கே செக்யூலர், திராவிட, இடது கூட்டங்களின் ஆதரவு கிடைக்காதோ என்ற எண்ணத்தின் ஈழ ஆதரவாளர்கள் இப்படிச் செய்திருக்கலாம்.

ஆனாலும், சில இடங்களில் அவர்கள் "இந்துக்கள் தாக்கப் படுகிறார்கள்" என்றெழுதி கவனம் பெற முயல்வதையும் நான் பார்க்கிறேன். இது சரியான ட்ரெண்ட் தான். இதை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும்.

// இந்து என்னும் கோணத்தில் அணுகினால் ஏதாவது நன்மை விளையுமானால் அதையும் செய்துபார்த்தால் என்ன என்று தோன்றுகிறது. //

தோற்றத்திற்காக மட்டும் ஏன் செய்யவேண்டும்? இலங்கைத் தமிழர்கள் நாத்திக, திராவிட வாதத்தால் பெரும்பாலும் பீடிக்கப் படாமல் சைவ, அன்மீக நெறிகளையே இன்றளவும் வாழ்க்கை முறையாக ஏற்று வந்து கொண்டிருக்கும் இந்து உணர்வு உள்ள இந்துக்களே. இதில் எள்ளளவும் ஐயமில்லை.

பிரசினையில் பின்புலத்திலும் உள்ளோடிக் கொண்டிருக்கும் சைவ பௌத்த சமய மோதல் உள்ளது.

// ஏற்கனவே முஷாரப்பும் சில அமெரிக்கர்களும் விடுதலைப்புலிகளை இந்து தீவிரவாதிகள் என்றுதான் சொல்லிக்கொள்கிறார்கள். //

நல்லது. இந்தச்xசெய்தியை மேலும் பிரபலப் படுத்துங்கள்

ஜடாயு said...

// ஈழத்தமிழர்கள் ப.ஜ.க வினரின் நன்மதிப்பைப் பெறும் வகையில் ஏதேனும் செய்தால் நலம். //

தவறு இரண்டு பக்கங்களிலும் இருக்கிறது. பாஜக-வினரும் ஈழத்தமிழர்களை நெருங்கி நேசக் கரம் நீட்ட வேண்டும். கண்டிப்பாக அதற்கு positive response தான் ஈழத் தமிழர்களிடம் இருந்து வரும்.

// இந்தியாவில் அவர்கள் காங்கிரஸ் திராவிட கட்சிகளை நம்பி மட்டுமே இருப்பது நல்லதல்ல. //

உண்மை. இதை ஈழ ஆதரவாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடுகளையும் மீறி புலிகளுக்கு consistent ஆக ஆதரவு தரும் ஜார்ஜ் பெர்னான்டஸ், மராட்டியப் புலிக் கட்சிக் காரர் பால் தாக்கரே போன்றவர்கள் பா.ஜ.க முகாம் காரர்கள் என்பதையும் நினவில் வைக்க வேண்டும்.

ஜடாயு said...

// ஜடாயு, ஒரு வித்தியாசமான பார்வை. ராஜீவ் காந்தி கொலைக்குப் பின் இலங்கை தமிழரின் மேல் படிந்த பழிப் பார்வையை மாற்ற இந்த பதிவு முயலும் என நம்புகிறேன். //

நன்றி சிவா. இதை ஒரு பேச்சுக்காக எழுதவில்லை. உண்மையின் நான் feel பண்ணுவதைத் தான் எழுதினேன். நண்பர் இல. கணேசனிடமும் இந்தக் கருத்தை convince செய்வதற்கு முயற்சி செய்வேன்.

Anonymous said...

ஜடாயு,
அருமையான கருத்து. மாறுபட்ட கோணம். ஈழத்தமிழர்கள் தங்களை திராவிடப்பிரிவினைவாதிகள் என்ற லேபிளை ஒட்டுவோரிடமிருந்து பிய்த்துக் கொண்டு வந்தாலே போதும். உண்மையில் அவர்கள் பிரிவினவாதிகள் அல்ல. உலகெங்கும் கிறித்துவ அமைப்புகளால் நயவஞகமாக பிளவுகளை ஏற்படுத்தித் துண்டாடப்படும் எஞ்சியுள்ள பாகன்மார்களில் ஒருவரே. இலங்கையின் இனப்பிரசனைக்குப் பின்னாலும் கிறித்துவத்தின் கொலைக்கரங்கள் ஒளிந்திருக்கின்றன. இன்று ஈழத்தமிழர் பலர் நாங்கள் *இந்து அல்ல* சைவர் என்று சொல்லிக்கொள்ளும் நிலமைக்குத் தள்ளப்பட்டிருப்பதைப் பார்த்தீர்களா? செந்திநாதய்யரும், பத்மநாபய்யரையும் நன்கு அறிந்த இவர்கள் இன்று பார்ப்பனனைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதில் நடுவே வேளாளர், மற்றவருக்கிடையே பிரிவை வலுப்படுத்தும் முயற்சிகளிலும் கிறுத்துவ ஊடகங்கள் முழுமூச்சாய் இறங்கியுள்ளன. ஆடுகள் மோதிச்சாக ரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஓநாய்கள் இவர்கள்.

Hariharan # 03985177737685368452 said...

ஜடாயு,

சிறப்பான பார்வை. வெரி கன்வின்சிங் பாயிண்ட் ஆப் வியூ! காங்கிரஸின் கொள்கை எப்போதுமே பெரும்பான்மையை விடுத்து சிறுபான்மையினரை அப்பீஸ் செய்வதே!

காஷ்மீர பண்டிட்டுகளுடன் தமிழீழப் போராளிகளும் இணையாகக் கருதப்படவேண்டும் என்பதும் வெகுசரியே. இரண்டு தரப்பினரும் வெகுதியான அன்பற்ற, இதர மதக்காரர்களால் வன்முறைக்குள்ளாகி வருபவர்கள். உரிமைக்காக இந்துக்களாகிய தமிழீழர்கள் பதுங்காமல் எதிர்ப்புகாட்டிப் போரிடும் துணிவு இந்து உணர்வுடன் அன்பற்ற மதத்தினரை அவர்கள் வழி(லி)யை அவர்களுக்கே திரும்பத்தரும் செய்கை என்ற கோணம் தீவிரவாதிகள் என்ற நிலையைலேயே அணுகப்படும் பார்வையை மாற்றி அணுக மிகுந்த அளவில் கன்வின்ஸ் செய்கிறது!

இப்பார்வையினை பரஸ்பர புரிந்துகொள்ளல் கொண்டு மேலெடுத்துச் செல்லவேண்டும்!

Anonymous said...

இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினையையும் விடுதலைப் புலிகளையும் பிரித்துப் பார்த்து நாம் எந்த ஒரு நிலையையும் எடுக்க முடியாது, இலங்ககத் தமிழர்களில் பெரும்பாலோர் விரும்பினால் கூட விடுதலைப் புலிகளை அவர்கள் விட முடியாது. நாயர் பிடித்த புலி வால் போல. அவர்களுக்குப் புலிகள் அனுகூலச் சத்ரு. இப்படிப் பட்ட ஒரு சூழலில் நாம் இலங்கைத் தமிழர்களுக்காக எடுக்கும் எந்த ஒரு ஆதரவு நிலையும் அது புலி ஆதரவு நிலையாகத்தான் முடியும். இலங்கைத் தமிழர்கள் புலிகளை முற்றிலும் நிராகரிக்காதவரை நாம் எடுக்கும் எந்தவொரு ஆதரவு நிலையும் தீவீரவாதக் குழுக்களின் ஆதரவாகத்தான் இருக்கும்.


என்னைப் பொருத்தவரை பிரபாகரனுக்கும் இலங்கை அரசுக்கும் நடக்கும் போரானாது இரண்டு கிறிஸ்துவ குழுக்களுக்கிடையில் நடக்கும் சிலுவைப் போராகும்., இவர்களில் யாரையும் ஆதரிக்காமல் ஒதுங்கி இருபப்தே இந்தியாவுக்குப் பொதுவாக நலம் பயக்கும். புலிகள் அழிக்கப் பட்டு அதன் பிறகும் இந்து இலங்கைத் தமிழர்கள் ஒடுக்கப் படுவார்கள் என்றால் அந்த சமயத்தில் மட்டுமே நாம் கொடுக்கும் ஆதரவு உருப்படியான பயனுள்ள ஆதரவாக இருக்கும். அதுவரை நாம் இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களுக்குக் கொடுக்கும் ஆதரவு இணைய பாஷையில் சொல்வதானால் சொந்த செலவில் வைக்கும் சூனியமாகவே இருக்கும் என்பது எனது தீர்மானமான எண்ணம்.

முதலில் இலங்கை வாழ் தமிழர்கள் தங்களை ஒரு இந்துக் குழுவாக அடையாளம் காண மறுக்கிறார்கள். அவர்களுக்கு நாம் செலவிடும் நேரத்தை பண்டிட்களுக்கும் பங்களாதேச இந்துக்களுக்கும் செலவிடலாம்.


இன்று இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தன் மூக்கை நுழைத்து தமிழர்களின் கையை வலுப்படுத்துமானால் அது இந்தியாவுக்கு எதிராகத் திரும்ப அதிக நாள் பிடிக்காது. அமெரிக்கா ஆப்கானிலும், ஈரானிலும், பாகிஸ்தானிலும் கற்ற பாடத்தை நாம் அதிக விலை கொடுத்து இலங்கைப் பிரச்சினனக்கு ஆதரவு கொடுத்து கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கருணாநிதி, வீரமணி, நெடுமாறன், போன்ற கருங்காலிகளும், நக்சல் அமைப்புகளும் , மிஷணரிகளும், விடுதலைப் புலிகள் வலிமை பெற்று தமிழ் நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்கும் நாளள ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்படிப் பட்ட ஒரு சூழ்நிலையில் இந்தியா எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் இலங்ககயில் தமிழர்களின் வன்முறைப் போராட்டத்தை ஆதரிக்கும் ஒரு நிலையை எடுக்கவே கூடாது. அது இந்தியாவுக்கு கடும் பாதிப்புக்களை உடனடியாக ஏற்படுத்தும். நன்றி கெட்டத்தனத்துக்கு மறு பெயர் விடுதலைப் புலிகள். நரியின் மறுபெயர் பிரபாகரன். இந்தியா தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டு, தமிழ் நாட்டை இன்னொரு காஷ்மீரரக மாற்ற வேண்டுமானால் மட்டுமே இலங்கைப் பிரச்சினையில் தலையிடலாம். வீரமணி, நெடுமாறன் , ராமதாஸ் , பிராபகரன் தலைமையிலான ஒரு தமிழ் நாட்டை ஒரு முறை எண்ணிப் பாருங்கள். நாம் இலங்கைப் பிரச்சினையில் கொடுக்கும் எந்த வித ஆதரவும் அந்தக் கொடுங்கோன்மை சாம்ராஜ்யத்தில்தான் கொண்டு போய் விடும்.


நமது சுயநலனையும் இந்தியாவின் ஒன்று பட்ட எதிர்காலத்தையும் சிந்திக்கும் பொழுது இலங்கைப் பிரச்சினையில் தமிழர்கள் தங்கள் விதியையை சந்திக்கட்டும் என்ற நிலைப்பாடே சரியானதாக இருக்கும். எனது பதில் சற்று இரக்கமில்லாததாகவும், குரூரமாகவும் கூட இருக்கலாம், ஆனால் இன்றய யதார்த்தம் இதுதான்.

இலங்கைப் பிரச்சினைக்கு ஒரே வழி, புலிகள் அமைப்பு அழிக்கப் பட்டு கலைக்கப் படுதல்., அதன் பின்னர் ஏற்படும் சூழ்நிலையில் இந்தியா தலையிட்டு தமிழர்களுக்கு அதிக உரிமை உள்ள ஒரு மாநில அமைப்பை ஏற்படுத்துதல். புலிகள் அழிக்கப் படாதவரை இந்தியா இந்தப் பிரச்சினையில் ஒதுங்கி இருப்பதையே நான் வரவேற்கிறேன். அது வரை தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ வேண்டியது அவர்களது தலையெழுத்து.

நாம் எந்த நிலையிலும் தனி ஈழத்தை ஆதரிக்கவே கூடாது. எந்த நிலையிலும் விடுதலைப் புலி ஆதரவு நிலை எடுக்கக் கூடாது,



இந்தியா முடிந்தவரை புலிகளை அழிப்பதில் தன் பலத்தை செலவிட்டால் பாதி பிரச்சினை தீர்ந்தி விடும். அதன் பிறகு இலங்கையை இந்தியா வற்புறுத்துவது இந்திய நலனுக்குப் பாதகம் இல்லாமல் இந்தியாவின் பிரிவினையைத் தூண்டும் ஒரு இயக்கத்தின் ஆபத்து இல்லாமல் சுதந்திரமான ஒரு சூழ்நிலையில் எடுக்கும் நடவடிக்கையாக இருக்கும்., ஆகவே இந்தியா புலிகளை அழிப்பதில் முழு மூச்சுடன் செயல் படுவதே இந்தியாவுக்கு, இலங்ககத் தமிழர்களுக்கும் செய்யும் மிகப் பெரிய சேவையாக இருக்கும். அதையே பா ஜ் க போன்ற கட்சிகள் இந்திய அரசிடம் வற்புறுத்த வேண்டும். புலிகள் இல்லாத, இலங்கையின் இறையாண்மையின் கீழான சகல உரிமைகளும் கொண்ட ஒரூ மாநில அரசு அமைப்பிற்கு மட்டுமே இந்தியா என்றும் ஆதரவு தெரிவிக்க வேண்டுமே அன்றி புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதும் பாம்புக்குப் பால் வார்ப்பதும் ஒன்றே.

ஜடாயு said...

அரிய தகவல்கள் தரும் அனானி அறிஞர் அவர்களே,

// இன்று ஈழத்தமிழர் பலர் நாங்கள் *இந்து அல்ல* சைவர் என்று சொல்லிக்கொள்ளும் நிலமைக்குத் தள்ளப்பட்டிருப்பதைப் பார்த்தீர்களா? //

ஆம், பெரிய சோகம் இது.

// செந்திநாதய்யரும், பத்மநாபய்யரையும் நன்கு அறிந்த இவர்கள் இன்று பார்ப்பனனைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். //

தங்கள் தயவால் செந்திநாத ஐயர்
என்று அதிகம் அறியப்படாத
ஈழத்தமிழர்
ஒருவரைப்பற்றி அறிய்ம் பேறூ கிட்டியது. ஆறுமுகநாவலரின்
சீடரிவர். கிறித்துவமெஷிநரிகளைத்
தீவிரமாக எதிர்த்தவர்,
கிறித்துவத்தைக் கிண்டல் செய்து பல
புத்தகங்களை வெளியிட்டவர் என்ற
காரணத்தால் இவரை இருட்டடிப்பு
செய்து வருகிறார்கள்.

KASIVASI SENTHINATHA IYAR - K.Ganesalingham

Following the footsteps of Arumuga Navalar,
Senthinathaiyar carried forward his arduous task of
protecting the Saiva religion from the onslaught of
Christian missionaries. ................
Read on:
http://www.kuppilan.com/htmdocuments/Essay.htm


// இதில் நடுவே வேளாளர், மற்றவருக்கிடையே பிரிவை வலுப்படுத்தும் முயற்சிகளிலும் கிறுத்துவ ஊடகங்கள் முழுமூச்சாய் இறங்கியுள்ளன. //

சாத் வேற்றுமையை மறந்து தங்கள் தர்மம் காக்க ஈழத் தமிழர்கள் முன்வர வேண்டும். இந்த சதியை வெளிச்சம் போட்டுக் காட்டி முறியடிக்க வேண்டியது உலகெங்கும் உள்ள இந்துக்களின் கடமை.

ஜடாயு said...

கருத்துக்கு நன்றி ஹரிஹரன்.

// உரிமைக்காக இந்துக்களாகிய தமிழீழர்கள் பதுங்காமல் எதிர்ப்புகாட்டிப் போரிடும் துணிவு இந்து உணர்வுடன் அன்பற்ற மதத்தினரை அவர்கள் வழி(லி)யை அவர்களுக்கே திரும்பத்தரும் செய்கை என்ற கோணம் தீவிரவாதிகள் என்ற நிலையைலேயே அணுகப்படும் பார்வையை மாற்றி அணுக மிகுந்த அளவில் கன்வின்ஸ் செய்கிறது! //

ஆம். ஆயுதப் போர், தற்கொலைப் படை என்ற வழிமுறைகளக் கடைப்பிடித்தாலும், ஜிகாதி தீவிரவாதிகளையும், ஈழத் தமிழர்களையும் ஒரே தட்டில் வைப்பது மிகத் தவறு. ஈழத் தமிழர்கள் இடத்தில் இஸ்லாம் போன்று ஊற்றாகச் சுரக்கும் வன்முறைக் கருத்தியல் இல்லை. தங்கள் உரிமை நிலைநிறுத்தப் படும் பட்சத்தில் அவர்கள் வன்முறையைக் கைவிட்டு விடுவார்கள். நேசகுமார் இந்த வேறுபாடு பற்றி மிகத் தெளிவாகத் தனது பழைய பதிவு ஒன்றில் எழுதியிருந்தார்.

ஜடாயு said...

விரிவாகக் கருத்துச் சொன்ன அனானி அவர்களே,

// இப்படிப் பட்ட ஒரு சூழலில் நாம் இலங்கைத் தமிழர்களுக்காக எடுக்கும் எந்த ஒரு ஆதரவு நிலையும் அது புலி ஆதரவு நிலையாகத்தான் முடியும். இலங்கைத் தமிழர்கள் புலிகளை முற்றிலும் நிராகரிக்காதவரை நாம் எடுக்கும் எந்தவொரு ஆதரவு நிலையும் தீவீரவாதக் குழுக்களின் ஆதரவாகத்தான் இருக்கும் //

ஆம். ஆனால் எந்தவொரு ஆதரவும் தராமல் இருப்பது இதைவிட மோசமானது. ஆய்தப் போரைக் கைக் கொண்டதனாலேயே ஒரு குழுவை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்ற காந்திய (நேருவிய??) கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை.

சிலுவைப் போர் என்ற ரீதியில் நீங்கள் இதைக் காண்பது சரியல்ல என்றே தோன்றுகிறது. நேசகுமாருடன் உடன் படுகிறேன்.

தனது உரிமைப் போருக்கு ஆதரவு வேண்டி புலிகள் கிறித்தவக் குழுக்களை நாடியதன் காரணம் desperation. இந்துத்துவ இயக்கங்களோ உலகம் முழுவதும் உள்ள இந்துக்களோ அந்த சமயத்தில் நேசக்கரம் அல்ல, ஆதரவு கூடத் தெரிவிக்காமல் விட்டது தவறே அல்லவா?

// முதலில் இலங்கை வாழ் தமிழர்கள் தங்களை ஒரு இந்துக் குழுவாக அடையாளம் காண மறுக்கிறார்கள். //

இதன் காரணத்தை வேறு ஒரு பதிலில் சொல்லியிருந்தேன். (self alienation among INdian Hindus themselves etc.)

// அவர்களுக்கு நாம் செலவிடும் நேரத்தை பண்டிட்களுக்கும் பங்களாதேச இந்துக்களுக்கும் செலவிடலாம்.//

இது மிகவும் ஒருதலைப் பட்சமானது. பண்டிட்டுகள், பங்களாதேச இந்துக்கள், ஈழத்தமிழர்கள் இவர்கள் அனைவருக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்.


// கருணாநிதி, வீரமணி, நெடுமாறன், போன்ற கருங்காலிகளும், நக்சல் அமைப்புகளும் , மிஷணரிகளும், விடுதலைப் புலிகள் வலிமை பெற்று தமிழ் நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்கும் நாளள ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். //

இதில் கருணாநிதிக்கு விலக்கு அளிக்கலாம் என்று நினைக்கிறேன். இன்றைய மத்திய அரசில் பங்கு பெற்று அவர் ஈட்டிய அதிகாரம்,அவரது குடும்பத்துக்கு அளித்துள்ள clout அவரை இந்திய தேசிய விசுவாசியாக வைத்திருக்கும்.

// நன்றி கெட்டத்தனத்துக்கு மறு பெயர் விடுதலைப் புலிகள். நரியின் மறுபெயர் பிரபாகரன். இந்தியா தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டு, தமிழ் நாட்டை இன்னொரு காஷ்மீரரக மாற்ற வேண்டுமானால் மட்டுமே இலங்கைப் பிரச்சினையில் தலையிடலாம். வீரமணி, நெடுமாறன் , ராமதாஸ் , பிராபகரன் தலைமையிலான ஒரு தமிழ் நாட்டை ஒரு முறை எண்ணிப் பாருங்கள். //

இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது மத்திய அரசின் கையில் உள்ளது. இது கொஞ்சம் delicate ஆன விஷயம் தான். ஆனால், முன்னேறிய மாநிலமான தமிழகமும் அதன் மக்களும் இத்தகைய பிரிவினைவாதத்தைக் கடுமையாக எதிர்ப்பார்கள். தங்கள் முன்னேற்றத்தையும் அடகு வைத்து இந்தியத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அது தற்கொலைத் திட்டம்.

// ஆகவே இந்தியா புலிகளை அழிப்பதில் முழு மூச்சுடன் செயல் படுவதே இந்தியாவுக்கு, இலங்ககத் தமிழர்களுக்கும் செய்யும் மிகப் பெரிய சேவையாக இருக்கும். //

இது இந்திய அரசால் முடியாத காரியம். தன் நாட்டில் ரயிலில் குண்டு வைக்கும் கூட்டங்களைக் கூடப் பிடித்துத் தண்டிக்க முடியாத அரசி இது. போகாத ஊருக்கு வழி.

// அதையே பா ஜ் க போன்ற கட்சிகள் இந்திய அரசிடம் வற்புறுத்த வேண்டும். புலிகள் இல்லாத, இலங்கையின் இறையாண்மையின் கீழான சகல உரிமைகளும் கொண்ட ஒரூ மாநில அரசு அமைப்பிற்கு மட்டுமே இந்தியா என்றும் ஆதரவு தெரிவிக்க வேண்டுமே அன்றி புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதும் பாம்புக்குப் பால் வார்ப்பதும் ஒன்றே //

வரலாற்றை ஒரு முப்பது ஆண்டுகள் ரீவைண்ட் செய்து பிறகு நம் இஷ்டம் போல மாற்ற முடியுமானால் இதை செய்யலாம்.

புலிகளைக் கண்மூடித் தனமாக ஆதரிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் நடைமுறை உண்மைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் அல்லவா?

கொழுவி said...

//அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்தும் ஸ்தம்பித்ததை அடுத்து இலங்கை அரசு ஏ-9 நெடுஞ்சாலையைத் திறந்து விட்டது,//

ஐயா மகிந்த ராசபக்ச உத்தரவு தான் இட்டிருக்கிறார்.. அவ்வளவும் தான்.. அங்கை ஒரு பாதையும் இன்னும் திறக்கப்படவுமில்லை.. திறக்கப்டவும் மாட்டாது. அவர் சொல்லியே ஒரு வாரமாயிட்டுது.

Anonymous said...

90% of Ceylon Tamil population is Hindu. but Ceylon Army kills Ceylon Tamil Christians also.
we must help all Tamils. if we help them, they can create a Hindu nation for all Hindus. We lost Hindu Nepal. This is the time to help Ceylon Tamil. we must do something for Ceylon Tamils.

Chennai Tamilan

Anonymous said...

Dear Brother!
Thank you very much. Here we face
Food shortage. our childrens have no Food. Fish 1500 RS. Egg 60RS.
milk 1L 400. Rice 1KG 150. (but
you can nnot get)

Ceylon AirForce bomber bombs every day. they bomb on Schools, Hospitals, Hindu Temples.
we are waiting for a good news from
India.

ஜடாயு said...

Thank you for your comments anonymous Tamil brthern.

// 90% of Ceylon Tamil population is Hindu. but Ceylon Army kills Ceylon Tamil Christians also. //

I used the "Hindu" term not just to indicate the population %, but to mean the essentially Hindu character of Srilankan Tamils.
we must help all Tamils.

// if we help them, they can create a Hindu nation for all Hindus. //

True.

ஜடாயு said...

கொழுவி அய்யா, வருகைக்கு நன்றி. செய்தித் தவறு பற்றி சொன்னதற்கும் நன்றி.

இந்த thought process பற்றி உங்கள் அபிப்பிராயம் ஒன்றும் சொல்லவில்லையே?

Akilan said...

Please don't talk about religion...

We(World) already given enough lives in the name of religions...

மிதக்கும்வெளி said...

ஒருலட்சம் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்திலிருந்து துரத்திய புலிகளை இந்துப்பாசிஸ்ட்கள் ஆதரிப்பதில் என்ன ஆச்சரியம்? ராஜபக்சேக்கு எதிராக தமிழ்த்தேசிய அமைப்புகள் மட்டுமல்லாது இந்துமக்கள்கட்சி போன்ற இந்துத்துவ அமைப்புகளும் களத்தில் குதிப்பது உங்கள் நிலைப்பாட்டை ஒட்டியதுதான். எப்படியோ பூனைக்குட்டி வெளியே வந்தால் சரி.

திருவடியான் said...

ஜடாயு அவர்களே....

உங்க Thought Process எல்லாம் சரிதான்.. ஆனா.. உங்கள் இந்துத்துவத்தை தமிழ்ஈழப் போராட்டத்தில் புகுத்துவதை புலிகள் ரசிக்கப் போவதில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் தாம் தமிழன் என்ற மொழி ரீதியான உணர்வில்தான் விடுதலைப்புலிகளை ஆதரித்து வந்தனர். தற்போது இந்து என்று இனம் பிரிப்பதால் இனி பிரபாகரன் ஒரு குறிப்பிட்ட சமுகத்தைச் சேர்நதவர் என்று அந்த இனத்தார் மட்டும் ஆதரிக்கக்கூடிய சூழலுக்கு தள்ளப்படக்கூடிய சாத்தியத்தை உணரவல்ல தொலைநோக்குச் சிந்தனையுடையவர்கள் புலிகள் என்பது எனது கருத்து.

இந்தியா தலையிடட்டும் என்று சொன்னவரை சரி.

வஜ்ரா said...

//
90% of Ceylon Tamil population is Hindu. but Ceylon Army kills Ceylon Tamil Christians also.
//


1881 முதல் 2001 வரையிலான மத அடிப்படை census இங்கே

I always have a doubt that christo lankan tamils would want to use gullible hindus to finish the unfinished job of destroying buddhism.

Amar said...

ஜடாயு,

புதிய கோனத்தில் விஷயத்தை அனுகியிருக்கிறீர்கள்.

A9 இல்லையென்றால் இனி ஆகாய மார்க்கம் தான். ஆப்ரேஷன் பூமாலை தான்.

Anonymous said...

//என்னைப் பொருத்தவரை பிரபாகரனுக்கும் இலங்கை அரசுக்கும் நடக்கும் போரானாது இரண்டு கிறிஸ்துவ குழுக்களுக்கிடையில் நடக்கும் சிலுவைப் போராகும்//

இது என்ன கூத்துக்குள்ள
ஒரு கோமாளியாக் கிடக்குது.

Anonymous said...

Thanks. If we write to Tamilnadu News Papres about Ceylon Tamils, we can give more Information to all Tamil People.
Pls. try to write to Newspapers.
We must help Ceylon Tamils. This is our DUTY.

madurai tamilar

Anonymous said...

BBC TAMIL and Hindu work against to Ceylon Tamils. Ceylon Govt gave
Hon Title " LANKA RATNA" to HINU RAM. Ceylo Govt gave Special Dinner to Cho and Mani shankar Iyar.

BBC Tamil has very good link with Ceylon Govt. BBC TAMILS help ceylon Millitary.

பத்மகிஷோர் said...

ஒட்டுமொத்த இலங்கையையும் இந்தியாவுடன் இணைத்தால் என்ன?

உருப்படியாக கட்டியாளத்தெரியாத ஒரு நாட்டுக்கு இறையாணமை எதற்கு?

ஜடாயு said...

// 1881 முதல் 2001 வரையிலான மத அடிப்படை census இங்கே

I always have a doubt that christo lankan tamils would want to use gullible hindus to finish the unfinished job of destroying buddhism. //

வஜ்ரா, இதுவும் ஒரு சாத்தியமே.
"ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்ற ரீதியில் தான் மிஷநரிகள் இந்த பிரசினையை அணுகுகிறார்கள். அவர்களுக்கு வேண்டியது அமைதியோ, தீர்வோ அல்ல. இந்தப் படுகொலைகளின் பின்னணியில் கடைசியில் எவ்வலவு கிறித்தவ அறுவடை நடத்தி முடிக்க முடியும் என்பது தான்.

இதை மனதில் கொண்டே ஈழத் தமிழர்களின் இந்து உணர்வைத் தட்டி எழுப்புதை அவர்கள் கடுமையாக எதிர்ப்பார்கள்.

ஜடாயு said...

// ஒட்டுமொத்த இலங்கையையும் இந்தியாவுடன் இணைத்தால் என்ன? //

இந்தியாவிற்கு இருக்கும் தலைவலிகள் போதாதா தம்பி?

Anonymous said...

Look at what the Singhalese did in Jaffna. They always target the Hindus since they have some Singhala Christians. Tamils need the Indian Hindus' support.

http://www.sibernews.com/news/sri-lanka/-200609275805/#jc_allComments

We can't even pray in Temples :(
*****************
Armed men arriving in a "White Van" opened indiscriminate fire Tuesday around 8:30 p.m. on devotees worshipping in the Periya Kallaru Kali Hindu temple in Batticaloa on the final day festival, injuring two boys who were rushed to Kallaru hospital for emergency treatment.

The injured boys were identified as Piyasena Rosanthan, 16, and Thuraisingam Sathees, 15, both from Bar Road, Thuraineelavanai, in Batticaloa, said Kalawanchchikudy police.

The "White Van Squad" armed men fired aiming at certain youths among the hundreds of devotees taking part in the religious ceremony causing the people to scatter in panic, said eyewitnesses.

Devotees from Batticaloa town, Kallaru, Kalmunai, Pandirupu, Kalawanchchikudy and many other places in the Batticaloa district had come in large numbers to the temple to participate in the water cutting ceremony on Tuesday, which due to the firings was performed later on Wednesday.

The armed assailants searched in and around the temple even entering the innermost holy shrine of the temple looking for youths from the area.

Jothiravi Sekaram