Monday, June 16, 2008

அஸ்ஸாம் அரக்கனைத் தமிழனாக்கும் கருநாநிதியின் அபத்த உளறல்கள்

கடலூர்: தீபாவளி தமிழன் கொல்லப்பட்ட நாள். அந்த நாளை மறந்து விட்டு, தமிழை ஏற்றி வைக்கும் நாளான பொங்கலை கொண்டாடுங்கள் என முதல்வர் கருணாநிதி கூறினார்" -

- தட்ஸ்தமிழ்.காம் செய்தி

தமிழகத்தின் ஒரு பழைய இருண்டகாலத்தில், திராவிட இனவெறிக் கும்பல்கள் உருவாக்கிய ஒரு கேவலமான பொய்ப் பிரசார கட்டுக் கதையை, தேவையில்லாமல் 2008ம் ஆண்டில் தமிழக முதல்வர் கருநாநிதி வாந்தி எடுத்திருக்கிறார்.

நரகாசுரனை ஸ்ரீகிருஷ்ணன் வதம் செய்ததும், அப்போது அவன் தீமை அழிந்த நாளாக தன் மரணதினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று வரம் கேட்டதுமான தீபாவளிப் பண்டிகை தொடர்பான புராணக் கதை எல்லாருக்கும் தெரியும்.

யார் இந்த நரகாசுரன்?

மகாபாரதத்தின் படி, இன்று அஸ்ஸாம் என்று இன்று அழைக்கப் படும் காமரூப தேசத்தில் ப்ராக்ஜோதிஷபுரம் என்ற நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த கொடுங்கோல் மன்னன். புராணங்களின் படி இவன் பூமிதேவியின் மகன் (சிலவற்றில் ஹிரண்யாக்ஷன் என்ற அசுரன் மகன்). 16,000 பெண்களை இவன் சிறைப்பிடித்து வைத்தது, மக்களைக் கொடுமைப் படுத்தியது, பின்னர் சத்யபாமா தேரோட்ட கண்ணன் போர்செய்து நரகாசுரனைக் கொன்றது, தர்மவானான அவனது மகன் பகதத்தனுக்குப் பட்டம் சூட்டியது எல்லாம் புராணங்களில், மகாபாரதத்தில் வருகிறது. இந்த பகத்தன் பின்னர் பாரதப் போரில் கௌரவர் பக்கம் வீரப் போர் புரிகிறான்.

எந்த ஒரு புராணத்திலும், இதிகாசத்திலும் தமிழகத்திற்கும் நரகாசுரனுக்கும் எந்தத் தொடர்பும் சொல்லப் படவில்லை. பழந்தமிழ் நூல்களில் எதிலாவது நரகாசுரனைப் பற்றி ஏதாவது கூறப் பட்டுள்ளதா? அப்பேர்ப்பட்ட மறத்தமிழன் நரகாசுரனைப் பற்றி ஏதாவது கல்வெட்டு, கில்வெட்டு இருக்கிறதா? ம்ஹூம்.

பத்தாம் நூற்றாண்டில் திருவஞ்சைக் களத்தில் வாழ்ந்த, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகரப் பெருமாள், தனது "முகுந்த மாலை" என்ற சம்ஸ்கிருத நூலில் "நரகே வா நரகாந்தக ப்ரகாமம்" (நரகனை அழித்தவனே, நான் நரகத்தில் இருந்தாலும், உன்னை மறவாமலிருக்க வேண்டும்) என்று பாடும் ஒரு வரி இருக்கிறது. தீபாவளி தோறும் வரும் எண்ணெய்க் குளி தவிர்த்து, பழந்தமிழகத்திற்கும், நரகாசுரனுக்கும் உள்ள ஸ்நானப்ராப்தி இவ்வளவு தான்.

பின் எந்த ஆதாரத்தில், ஒரு மாநில முதல்வர் இப்படி ஒரு வெறுப்பைத் தூண்டும், துவேஷத்தை வளர்க்கும் பச்சைப் பொய்யைக் கூறுகிறார்?

மக்களே கேட்டுக் கொள்ளுங்கள் - தமிழனின் கொலையைக் கொண்டாடும் மன்மோகன் சிங் என்ற ஒருவர் தான் உங்களுக்கு பிரதமராக இருக்கிறார்.
இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், தமிழர்கள் உள்ளிட்ட கோடிக் கணக்கான இந்தியர்கள் தமிழன் கொலை செய்யப் பட்ட ஒரு நாளைக் கொண்டாடி வருகின்றனர் உலகெங்கும் வாழும் தமிழர்கள் எல்லா நாடுகளிலும் தமிழன் கொலையுண்டதைக் கொண்டாடி வருகின்றனர் ! ஐயகோ, ஆனாலும் தமிழனுக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்கக் கூடாது.

மேலும், நரகாசுர வதம் என்பது தீபாவளி என்கிற மாபெரும் பண்டிகை பற்றிய மரபுகளில் ஒன்று தான்.

இறைவனை ஒளிதரும் ஜோதியாக வழிபடுதல், கோவர்த்தன பூஜை, கார்கால அமாவாசையில் காளி பூஜை (வங்கத்தில்), பாற்கடலில் இருந்து மகாலக்ஷ்மி உதயம், ராமர் அயோத்தி திரும்பிய நாள் என்று ஏராளமான சிறப்புக்கள் இப்பண்டிகைக்கு உண்டு. ஜைனர்களுக்கும், சீக்கியர்களுக்கும் கூட முக்கியமான பண்டிகை.



இதே உரையில் "அப்படி என்றால் அது பொங்கல் அல்ல, தமிழனுடைய விழா அல்ல. ஆரியனுடைய மகர சங்கராந்தி. எப்படி வந்தது மகர சங்கராந்தி?"
என்று கேட்டு மகர சங்கிராந்தி என்ற பெயரிலும் அழைக்கப் படும் பொங்கல் என்ற உன்னதமான இந்துப் பண்டிகையையும் இழிவு செய்திருக்கிறார்



மேலும், எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல, "தமிழா உனக்கு ஆண்டுக் கணக்கே இல்லை என்றால் இதை விட கேவலம் இருக்க முடியுமா?. எப்படி பிறந்து நமக்கு ஆண்டு?. மகா விஷ்ணுவுக்கும் நாரதருக்கும் பிறந்த 60 பிள்ளைகள் அல்லவா நமக்கு ஆண்டாக கூறப்பட்டுள்ளது" என்றும் பிதற்றியிருக்கிறார் கருநா.

"மாயை- காலத்தின் தன்மை ஆகியவற்றைக் காட்டும் -இன்றைய நவீன அறிவியல் புனைவின் அனைத்து தன்மைகளையும் கொண்Î Time-consciousness-illusion ஆகியவற்றைக் காட்டும் தொன்மம் இது." என்று அரவிந்தன் நீலகண்டன் அற்புதமாக விளக்கும் இந்தப் புராணக் கதையின் கவித்துவம் கலைஞர், கவிஞர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் ஒருவருக்குப் புரியாமலிருக்குமா? பின் ஏன் இப்படி உளறுகிறார்?

பாரத நாட்டின் தேசிய பண்டிகைகளான தீபாவளி, மகர சங்கிராந்தி என்கிற பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு ஆகியவற்றைப் பற்றி பொய்யைப் பரப்பி, மக்களிடையே துவேஷத்தையும், வெறுப்பையும் வளர்க்கும் முதல்வர் கருநாநிதி மீது தேசவிராத சட்டத்தின் கீழ் வழக்குப் போடவேண்டும்.

Saturday, June 14, 2008

பரதநாட்டியமும், இஸ்லாமிய குருட்டு வெறியும்

செய்தி:

http://www.malaysia-today.net/2008/content/view/8420/1/

Nataraja Statue Banned from Malaysian Bharatanatyam Dance Performance

IPOH, MALAYSIA, June 8, 2008: At the beginning of every Bharatanatyam performance, artistes of this famous South Indian classical dance pay obeisance on stage to a statue of Lord Nataraja. However, on Monday night, a group of Bharatanatyam dancers performed before a full gallery at the Taman Budaya public auditorium without the customary on-stage prayer to Lord Nataraja.

This was because the owner of the venue, the state Unity, Culture, Arts and Heritage Department, permitted the dance on condition they did not install a statue or portrait of the deity and offer their prayers on stage. This is not the first time that dancers from the three Bharatanatyam schools of Nrityakalanjali, Natyakalamandir and Anandanarthana Choodamani in the state had performed at the venue. The department said the organizers were informed beforehand of the conditions and chose to go ahead with the performance.

The department's public relations officer, Shaliza Azlin, said the organizers had agreed that the prayers would be performed backstage to respect the sensitivities of the audience, who also comprised Chinese and Malays. "We did not stop them from doing the puja. We did not want them to do it in public."
Shaliza said the same conditions had been imposed on other cultural groups.

Perak state assembly speaker V. Sivakumar, who was at the performance, said: "The prayer is very much part of the cultural performance and should have been allowed on the stage." He said he would bring the matter up with the state government as well as his party so that such "intolerant behavior" could be nipped in the bud before it became widespread.

இது இந்த மலேசிய இஸ்லாமியர்களின் முழு அறியாமையையும், குருட்டு வெறித்தனத்தையையுமே காட்டுகிறது.

பரத நாட்டியம் என்பதே ஒரு இந்து வழிபாடு, இந்து ஆன்மிக, கலை வெளிப்பாடு தான். பிரபஞ்சத்தில் எங்கும் உறையும் பரம்பொருளை, அதன் உருவான தெய்வாம்சங்களை மனத்தில் இருத்தி, அந்த மனத்தில் பொங்கும் பாவங்களை அபிநயத்திலும், முத்திரைகளிலும் வெளிப்படுத்துவது தான் பரதநாட்டியம்.

பரத ரிஷியின் நாட்டிய சாஸ்திரம் கூறுகிறது -
யதோ ஹஸ்த: ததோ த்ருஷ்டி: யதோ த்ருஷ்டி: ததோ மன:
யதோ மன: ததோ பாவ: (BhaavaH), யதோ பாவ: ததோ ரஸ:

கரங்கள் செல்லும் வழி பார்வை, பார்வை செல்லும் வழி மனம் மனம் செல்லும் வழி பாவம் (Bhaavam), பாவம் செல்லும் வழி ரசம்.

இந்த ரசம் என்பது ஒரு தூய, ஆத்மானுபவ உணர்ச்சி. "ரஸோ வை ஸ:" (அந்தப் பரம்பொருள் உணர்வின் சாரமே ரசம்) என்று உபநிஷத் கூறுகிறது. சிற்பம், இசை, நடனம் ஆகிய இந்து செவ்வியல் கலைகள் அனைத்திலும் அடிப்படையாக உள்ள கோட்பாடு இது.

எனவே பரதத்தில் வரும் பாடல்கள், அபிநயங்கள் அனைத்தும் இறைவனுக்கு அர்ப்பணமாகத் தான் செய்யப் படுகின்றன, சொல்லப் போனால் உன்னத நாட்டிய அனுபவம் என்பது அந்த இறைத் தன்மையுடன் ஒன்றிவிடுவது, லயம் கொள்வது.

"தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடி, சங்கரா ஜெய போற்றி போற்றி என்னும்" என்கிறார் அப்பர். "விஷ்ணோர் கானம் ச ந்ருத்தம் ச நடனம் ச விசேஷத: " என்கிறது ஸ்ரீமத்பாகவதம்.

எல்லா பூஜைகளிலும் இறுதியில் செய்யப் படும் ராஜோபசாரம், தேவோபசாரம் என்ற வகையில் நிருத்யம், கீதம், வாத்யம் மூன்றுமே வரும். எனவே அந்த மேடையில் ஆடும் பரதநாட்டியம் என்பது முதலில் தொடங்கிய பூஜையின் அங்கம் தான். அதனால் பூஜையை மறுத்து, நடனத்தை மட்டும் எப்படி அனுமதிக்கலாம்? ஷரியத் சட்டப்படி அந்த நடனமும் ஒரு காஃபிர் மதச் சடங்கு தான்!

"பார்வையாளர்களின் உணர்ச்சிகளைக் கணக்கில் கொண்டு" பூஜை தடை செய்யப் பட்டது என்று செய்தி சொல்கிறது. நடராஜரின் சிலை வடிவம் உணர்ச்சிகளைப் புண்படுத்துமாம, ஆனால் அதே உருவை ஒவ்வொரு அசைவிலும், கதியிலும், சொல்லிலும், இசையிலும் கூட்டி ஆடுவதை இவர்கள் பார்த்து ரசிப்பார்களாம்.. அது என்ன கலை உணர்ச்சியோ? இந்த ஜென்மங்களுக்காக, இப்படியும் நிகழ்ச்சி வழங்க வேண்டுமா அந்த நாட்டியக் குழுவினர்? அவர்கள் மறுத்திருக்கலாம்.

எந்த அளவுக்கு இந்த "மென் இஸ்லாமிய" நாட்டின் எண்ணப் போக்கு ஒற்றைப் படையாகவும், வெறுப்பில் அமிழ்ந்தும் போய்க் கொண்டிருக்கிறது பாருங்கள்.

இந்த இஸ்லாமிய அகராதியில், முழங்காலில் உட்கார்ந்து தலையைத் தரையில் இடித்து சில அராபிய மந்திர வார்த்தைகளை உதிர்க்கும் நமாஸ் என்கிற மெக்கானிகல் சமாசாரம் மட்டுமே "வணங்குவது". இது தவிர, ஒரு உயர் பொருளையோ, உயர் தத்துவத்தையோ, உயர்ந்த மனிதரையோ பற்றிய சிலிர்ப்பூட்டும் எண்ணங்கள், அனுபவங்கள், இசை, கலை வெளிப்பாடு எதுவுமே "வணக்கத்தில்" சேராது என்பார்கள். அதனால் தான் அவர்கள் அல்லாவை மட்டுமே "வணங்குகிறார்கள்", முகமதுவை "வணங்குவதில்லை" என்று "தெளிவாக" ஜல்லியடிப்பார்கள். இதே கருத்தை முன்வைத்து கடந்த வாரங்களில் 3-4 முஸ்லீம் எழுத்தார்கள் திண்ணை இதழில் கடிதங்கள் எழுதியிருந்தார்கள். புரோகிராம் செய்யப்பட்ட ரோபோட்கள் போன்று அனைவரும் ஒரே மாதிரி எண்ணி, ஒரே மாதிரி எழுதுவதாகவும் தோன்றியது - மெமெட்டிக் க்ளோன்கள் என்று சில வருடங்கள் முன்பு இஸ்லாமிஸ்டுகளை வர்ணித்து அரவிந்தன் நீலகண்டன் எழுதியது எவ்வளவு உண்மை என்று நினைத்துக் கொண்டேன்.

இப்படி ஒரு மூடிய மனத்தையும், இறுகிய எண்ணங்களையும் வைத்துக் கொண்டிருக்கும் உள்ளத்தால், பரதம் மட்டுமல்ல எந்த ஒரு நுண்கலையையும், ஆழ்ந்தகன்ற விஷயங்களையும் அணுகவோ, ரசிக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியாது.
மனம் கொஞ்சம் திறந்து கொள்ளத் தொடங்கினால், இந்த இறுகிய கொள்கைகளை அது வெறுக்கவும், ஒதுக்கவுமே செய்யும்.

அதனால் தான் மனிதர்கள், விலங்குகளை சிற்பமாகவும், ஓவியமாகவும் வடிப்பதற்கும், செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கும், இசைக்கும், பாடலுக்கும், மென்கலைகளுக்கும், மனதை மலரவைத்து அதன் இறுக்கத்தைத் தளர்த்தும் எல்லாவிதமான விஷயங்களுக்கும், குர் ஆன் தடை விதித்தது; இன்றைய முல்லாக்கள், தாலிபான் வரை அந்தத் தடையை செயல்படுத்தியும் வருகின்றனர்.

Wednesday, June 11, 2008

பெங்களூர் தீமிதி விழா - தமிழ் போஸ்டர்

நேற்று அல்சூர் ஏரிக்கரை வழியாக போகும்போது கண்ணில் பட்ட போஸ்டர்:



(பெரிதாக்க படத்தில் க்ளிக் செய்யவும்)


கோயில் மற்றும் சுற்றிலும் உள்ள சாலைகளில் எல்லாம் காவிக் கொடி பறந்து கொண்டு இருந்தது. தீமிதி விழாவை சமூக விழாவாக, இந்து எழுச்சி விழாவாகக் கொண்டாடும் அல்சூர் மக்களுக்கு வாழ்த்துக்கள்.

"நில்லும்" என்று கண்ணை உறுத்தும் இலக்கணப் பிழை இல்லாமல் எழுதியிருக்கலாம். அதற்குப் பதிலாக, "வெல்லும்" சரியாக இருந்திருக்கும்.

"திருப்பதம் வரவேற்று" ?? "ஸ்ரீபாதகள ஸ்வாகதா" என்று கன்னடத்தில் சிந்தித்து தமிழில் எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்..

Thursday, June 05, 2008

பிறந்தநாள் பிச்சை கேட்கும் தமிழினத் தலைவர்

இந்த தினமணி செய்தியைப் பாருங்கள் -

சென்னை, ஜூன் 2: சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தாருங்கள் என்று எதிர்ப்பாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற "உளியின் ஓசை' திரைப்படத்தின் பாடலை வெளியிட்டு அவர் பேசியதாவது: சுற்றியுள்ள மாநிலங்கள் அனைத்தும் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் மாநிலங்களாக இல்லை. கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்தை தனித் தீவாக மாற்றிவிட்டன.

இந்தச் சூழ்நிலையில் தமிழகத்தின் "ஒரே கதி' சேது சமுத்திரத் திட்டம் மட்டுமே. சேது சமுத்திரத் திட்டத்தால் மட்டுமே தமிழகம் வளம் கொழிக்கும் மாநிலமாக மாறும். வாணிபத் தொடர்புகள் அதிகரிக்கும். சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றித்
தாருங்கள் என்று அந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனது பிறந்த நாள் யாசகமாக இதனைக் கேட்டுக் கொள்கிறேன். என் பேரப் பிள்ளைகளுக்காகக் கேட்கவில்லை. தமிழகத்தின் எதிர்காலத்துக்காகக் கேட்கிறேன்...."

சேது திட்டம் தான் "ஒரே கதியாம்". தமிழகம் "தனித்தீவாக" ஆகி விட்டதாம். எப்படிக் கூசாமல் அண்டப் புளுகு புளுகுகிறார் ஒரு மாநில முதல்வர்? மாநிலத்தின் வளர்ச்சிக்காக உருப்படியாக ஒன்றும் செய்யாமல், செய்யத் தெரியாமல், அண்டை மாநிலங்களை அநாவசியமாக வம்புக்கு இழுத்திருக்கிறார், துவேஷ மனப்பான்மையை வளர்க்கிறார். மிகவும் பொறுப்பற்ற பேச்சு.

திருவள்ளுவர், திருவள்ளுவர் என்று ஒருவர் இருந்தார். உலகின் உன்னதமான அறநூலான திருக்குறளை எழுதியவர். அதில் "இரவச்சம்" என்று ஒரு அதிகாரம் உண்டு. (ராத்திரி பயம் அல்ல; இப்போது இருப்பது போல திருவள்ளுவர் காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அவ்வளவு மோசமாக இல்லை). அதாவது உயிர்போவது பற்றிக் கூட பயம் கொள்ளாத மானமுள்ள மனிதர்கள் இரப்பதற்கு, பிச்சை கேட்பதற்கு அதை விடமிகுந்த நாணமும், அச்சமும் படுவார்கள் என்பதை வலியுறுத்திக் கூறும் அதிகாரம். அதில் ஒரு குறள்:

"ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்குஇரவின் இளிவந்தது இல்"

"(சாகக் கிடக்கும் ஒரு பசுவைக் காப்பாற்றுவதற்காக) பசுவிற்கு நீர்வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும் அந்த இரத்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை."

அதனால் என்ன? திருக்குறளை ஒரு அலங்காரத்துக்காக மட்டுமே "குறளோவியமாக" சட்டம் போட்டு மாட்டிவைத்து புளகாங்கிதப் படும் தன்மானத் தமிழினத் தலைவர் அவர்கள் இப்படித் தயங்காமல் பிச்சை கேட்பது ஆச்சரியம் இல்லை தானே?

அதுவும் யாரிடம்? இந்தத் திட்டத்திற்கு எதிராக இருப்பவர்கள், முட்டுக்கட்டை போடுபவர்களிடமாம். அது யார் யார்?

நீதிமன்றம். அது தான் இந்தத் திட்டத்திற்குத் தடை விதித்து, தொல்பொருள் ஆய்வுத் துறை சேது பகுதியில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் நீதி கிடைக்கலாம். பிச்சை..?

பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். கூட்டணிக் கட்சிகளிடம் மன்றாடுவதில் கின்னஸ் சாதனை படைத்த பல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். வாக்காளர்களிடம் மன்றாடியார்கள் இருக்கிறார்கள். ஆனால் முதன்முறையாக, தள்ளாத வயதில் எதிர்க்கட்சிகளிடம் மன்றாடுவதாக வெட்கமில்லாமல் அறிவித்த அரசியல்வாதி என்கிற சாதனை பட்டத்தை இதன்மூலம் தானைத் தலைவர் தட்டிச் செல்கிறார்.

இந்து இயக்கங்கள், ராம பக்தர்கள், துறவிகள். இவர்களைப் பார்த்து கலிஞ்சர் செய்யாத கேலியா? கிண்டலா? ஏளனமா? அவதூறா? கடைசியாக, இந்த "மூட, மௌடீக, மதவாத" சக்திகளிடமெல்லாம் பிச்சை கேட்கும்படி அவர் நிலைமை ஆகிவிட்டதே. தெரியாமல் முதுகில் பட்டுவிட்ட வேலுக்கெல்லாம் கூட நாணிக் கோணி, வீறாப்பு தன்மான டயலாக் பேசி, ஓவராக ஃபிலிம் காட்டிய, பொழைக்கத் தெரியாத புறம்போக்கு புறநானூற்றுத் தமிழனுங்க பேரையெல்லாம் ஏந்தான் சொன்னோமோ என்று தன்மானத் தலைவர் தன்னைத் தானே நொந்துகொண்டு நோகும்படி ஆகிவிட்டதே. ரொம்ப பரிதாபமாக இருக்கிறது.

தலைவர் பேச்சில் எப்பவுமே ஒரு பொடி இருக்கும். தென்னாட்டு பெர்னாட்ஷாவிடம் அவர் கற்ற பாடம் அது. அதாவது உடன்பாட்டாகச் சொல்ல வேண்டியதை எதிர்மறையாகச் சொல்வார்...and vice versa. முந்தைய காலங்களில், அப்போதைய அரசுகள் சட்டவிரோத அல்லது அரசியல் காரணங்களுக்காக அவரைக் கைதுசெய்து சிறையில் அடைக்கும்போதெல்லாம் உடன்பிறப்புகளுக்கு பஸ்களை எரிக்கக் கூடாது, கலவரம் எதுவும் செய்யக் கூடாது, வன்முறையில் ஈடுபடுவது கூடவே கூடாது என்று அறிக்கை விடுவார். உடனடியாக என்ன செய்யவேண்டும் என்று தொண்டனுக்குத் தெரியும்.

இன்னொரு சமீபத்திய உதாரணம். தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையருக்கு நினைவு மண்டபம் அமைக்கிறோம் என்ற பெயரில் உத்தமதானபுரம் ஊரில் அவர் வாழ்ந்த அழகிய பாரம்பரிய வீட்டை இடித்து எந்தக் கலை உணர்வும் இல்லாத ஒரு கான்கிரீட் கட்டிடத்தைக் கட்டி, தனது தொடரும் கலை, கலாசார ஒழிப்புப் பட்டியலில் இன்னும் ஒரு எண்ணைச் சேர்த்தது தமிழக அரசு. படிக்கும்போதே ரத்தக் கண்ணீர் வருகிறது. இது பற்றி மனம் நொந்து விமர்சன பிதாமகர் வெங்கட் சாமிநாதன் எழுதியிருக்கும் கட்டுரையில் கூறுகிறார் -

"... அச்செய்திகளில், முதல்வர் கலைஞரின் வாழ்த்துச் செய்தியும் காணப்பட்டது. அவருடைய பாராட்டுச் செய்தியும், தமிழுக்குத் தொண்டாற்றிய உ.வே.சா எந்த இனத்தைச் சேர்ந்தவர் எந்த ஜாதிய்னர், குடியினர் என்பதையெல்லாம் புறமொதுக்கித் தான், அவரது தமிழ்த் தொண்டை போற்றத் தான் நினைவகம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற பொருளில் தான் இருந்தது. எந்த ஜாதி, எந்த இனம் என்ற சிந்தனை இல்லையென்றால் அதைச் சொல்லவேண்டும் என்ற எண்ணமும் தோன்றி யிராது தானே. யாரும் ஏதும் கேட்காமலேயே 'எங்களுக்கு அந்த சிந்தனையெல்லாம் கிடையாது" என்று சொல்லித் தன் தாராள மனதுக்கும் சிந்தனைகளுக்கும் பாராட்டுக்களைத் தனக்கு வழங்கிக் கொள்ளும் அவசியம் இருந்ததென்றால், அந்த சிந்தனை தான் மேலோங்கியிருக்கிறது என்று தானே பொருள் படும். இது தான் இன்றைய தமிழ் நாடு."

ஆமாம். அந்தத் தமிழ்நாட்டின் தலைவர் பேச்சில் அந்தப் பொடி இன்னும் இருக்கிறது. "என் பேரப் பிள்ளைகளுக்காகக் கேட்கவில்லை. தமிழகத்தின் எதிர்காலத்துக்காகக் கேட்கிறேன்" என்று அவர் கூறும்போது, அதில் மேலோங்கியிருக்கும் சிந்தனை என்ன என்பது இந்த முதுபெரும் தலைவரின் கரகர பேச்சைக் காலம் காலமாய்க் கேட்டு வரும் மாங்கா மடையர்களாகிய நமக்குப் புரியாதா என்ன? மிக மிக நன்றாகவே புரியும்.