அஸ்ஸாம் அரக்கனைத் தமிழனாக்கும் கருநாநிதியின் அபத்த உளறல்கள்
கடலூர்: தீபாவளி தமிழன் கொல்லப்பட்ட நாள். அந்த நாளை மறந்து விட்டு, தமிழை ஏற்றி வைக்கும் நாளான பொங்கலை கொண்டாடுங்கள் என முதல்வர் கருணாநிதி கூறினார்" -
- தட்ஸ்தமிழ்.காம் செய்தி
தமிழகத்தின் ஒரு பழைய இருண்டகாலத்தில், திராவிட இனவெறிக் கும்பல்கள் உருவாக்கிய ஒரு கேவலமான பொய்ப் பிரசார கட்டுக் கதையை, தேவையில்லாமல் 2008ம் ஆண்டில் தமிழக முதல்வர் கருநாநிதி வாந்தி எடுத்திருக்கிறார்.
நரகாசுரனை ஸ்ரீகிருஷ்ணன் வதம் செய்ததும், அப்போது அவன் தீமை அழிந்த நாளாக தன் மரணதினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று வரம் கேட்டதுமான தீபாவளிப் பண்டிகை தொடர்பான புராணக் கதை எல்லாருக்கும் தெரியும்.
யார் இந்த நரகாசுரன்? மகாபாரதத்தின் படி, இன்று அஸ்ஸாம் என்று இன்று அழைக்கப் படும் காமரூப தேசத்தில் ப்ராக்ஜோதிஷபுரம் என்ற நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த கொடுங்கோல் மன்னன். புராணங்களின் படி இவன் பூமிதேவியின் மகன் (சிலவற்றில் ஹிரண்யாக்ஷன் என்ற அசுரன் மகன்). 16,000 பெண்களை இவன் சிறைப்பிடித்து வைத்தது, மக்களைக் கொடுமைப் படுத்தியது, பின்னர் சத்யபாமா தேரோட்ட கண்ணன் போர்செய்து நரகாசுரனைக் கொன்றது, தர்மவானான அவனது மகன் பகதத்தனுக்குப் பட்டம் சூட்டியது எல்லாம் புராணங்களில், மகாபாரதத்தில் வருகிறது. இந்த பகத்தன் பின்னர் பாரதப் போரில் கௌரவர் பக்கம் வீரப் போர் புரிகிறான்.
எந்த ஒரு புராணத்திலும், இதிகாசத்திலும் தமிழகத்திற்கும் நரகாசுரனுக்கும் எந்தத் தொடர்பும் சொல்லப் படவில்லை. பழந்தமிழ் நூல்களில் எதிலாவது நரகாசுரனைப் பற்றி ஏதாவது கூறப் பட்டுள்ளதா? அப்பேர்ப்பட்ட மறத்தமிழன் நரகாசுரனைப் பற்றி ஏதாவது கல்வெட்டு, கில்வெட்டு இருக்கிறதா? ம்ஹூம்.
பத்தாம் நூற்றாண்டில் திருவஞ்சைக் களத்தில் வாழ்ந்த, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகரப் பெருமாள், தனது "முகுந்த மாலை" என்ற சம்ஸ்கிருத நூலில் "நரகே வா நரகாந்தக ப்ரகாமம்" (நரகனை அழித்தவனே, நான் நரகத்தில் இருந்தாலும், உன்னை மறவாமலிருக்க வேண்டும்) என்று பாடும் ஒரு வரி இருக்கிறது. தீபாவளி தோறும் வரும் எண்ணெய்க் குளி தவிர்த்து, பழந்தமிழகத்திற்கும், நரகாசுரனுக்கும் உள்ள ஸ்நானப்ராப்தி இவ்வளவு தான்.
பின் எந்த ஆதாரத்தில், ஒரு மாநில முதல்வர் இப்படி ஒரு வெறுப்பைத் தூண்டும், துவேஷத்தை வளர்க்கும் பச்சைப் பொய்யைக் கூறுகிறார்?
மக்களே கேட்டுக் கொள்ளுங்கள் - தமிழனின் கொலையைக் கொண்டாடும் மன்மோகன் சிங் என்ற ஒருவர் தான் உங்களுக்கு பிரதமராக இருக்கிறார்.
இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், தமிழர்கள் உள்ளிட்ட கோடிக் கணக்கான இந்தியர்கள் தமிழன் கொலை செய்யப் பட்ட ஒரு நாளைக் கொண்டாடி வருகின்றனர் உலகெங்கும் வாழும் தமிழர்கள் எல்லா நாடுகளிலும் தமிழன் கொலையுண்டதைக் கொண்டாடி வருகின்றனர் ! ஐயகோ, ஆனாலும் தமிழனுக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்கக் கூடாது.
மேலும், நரகாசுர வதம் என்பது தீபாவளி என்கிற மாபெரும் பண்டிகை பற்றிய மரபுகளில் ஒன்று தான்.
இறைவனை ஒளிதரும் ஜோதியாக வழிபடுதல், கோவர்த்தன பூஜை, கார்கால அமாவாசையில் காளி பூஜை (வங்கத்தில்), பாற்கடலில் இருந்து மகாலக்ஷ்மி உதயம், ராமர் அயோத்தி திரும்பிய நாள் என்று ஏராளமான சிறப்புக்கள் இப்பண்டிகைக்கு உண்டு. ஜைனர்களுக்கும், சீக்கியர்களுக்கும் கூட முக்கியமான பண்டிகை.
இதே உரையில் "அப்படி என்றால் அது பொங்கல் அல்ல, தமிழனுடைய விழா அல்ல. ஆரியனுடைய மகர சங்கராந்தி. எப்படி வந்தது மகர சங்கராந்தி?"
என்று கேட்டு மகர சங்கிராந்தி என்ற பெயரிலும் அழைக்கப் படும் பொங்கல் என்ற உன்னதமான இந்துப் பண்டிகையையும் இழிவு செய்திருக்கிறார்
மேலும், எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல, "தமிழா உனக்கு ஆண்டுக் கணக்கே இல்லை என்றால் இதை விட கேவலம் இருக்க முடியுமா?. எப்படி பிறந்து நமக்கு ஆண்டு?. மகா விஷ்ணுவுக்கும் நாரதருக்கும் பிறந்த 60 பிள்ளைகள் அல்லவா நமக்கு ஆண்டாக கூறப்பட்டுள்ளது" என்றும் பிதற்றியிருக்கிறார் கருநா.
"மாயை- காலத்தின் தன்மை ஆகியவற்றைக் காட்டும் -இன்றைய நவீன அறிவியல் புனைவின் அனைத்து தன்மைகளையும் கொண்Î Time-consciousness-illusion ஆகியவற்றைக் காட்டும் தொன்மம் இது." என்று அரவிந்தன் நீலகண்டன் அற்புதமாக விளக்கும் இந்தப் புராணக் கதையின் கவித்துவம் கலைஞர், கவிஞர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் ஒருவருக்குப் புரியாமலிருக்குமா? பின் ஏன் இப்படி உளறுகிறார்?

