Wednesday, February 20, 2008

“தமிழ் எதிரிகளைத் துரத்துங்கள்”: மு.க வன்முறை அறைகூவல்

பிப்ரவரி 16, 2008: “தமிழகத்தில் உள்ள 97 சதவீதம் திராவிடர்களும், தமிழர்களும் ஒன்றிணைந்து தீய சக்திகளான தமிழ் எதிரிகளைத் துரத்துவதை கடமையாகக் கருத வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.கருநாநிதி கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா கருணாநிதியை ராவணன் என்று அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவித்தாராம். அதைக் குறிப்பிட்டு "ஜெயலலிதா ஆரியர்கள் திராவிடர்களை வெற்றிகொண்டதாகக் கூறும் ‘புராணப் பொய்களை’ மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி *தமிழர்களையும்* தமிழ் உணர்வுகளையும் புண்படுத்தி வருகிறார். ஜெயலலிதாவின் விமர்சனத்தை தமிழ் இனம் சவாலாக ஏற்க வேண்டும்” என்று திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

காமெடியிலும், காழ்ப்புணர்ச்சியிலும் கழகக் கண்மணிகளுக்கு இணை அவர்களே தான். காலம் காலமாக ராவணன் தான் உண்மையான தமிழன் என்று கட்டைத் தொண்டையில் பேசி வருவது இவர்கள் தானே? பின்னர் கொலைஞனை “ராவணன்” என்று கூறுவது இவர்களை ஏன் புண்படுத்த வேண்டும்? குஷிப்படுத்த அல்லவா வேண்டும்? 97 சதவீதம் உண்மைத் தமிழர்கள் மிச்சம் உள்ள 3 சதவீத “எதிரிகளை” அடித்து விரட்ட வேண்டுமாம். அடடா! இவர்களது புற(ம்போக்கு)நானூற்று வீரம் புல்லரிக்க வைக்கிறது.

அந்த 3 சதவீதம் என்பது பிராமணர்களைக் குறிக்கிறது என்று அந்த செய்தியே கூறுகிறது. ஒரு மாநிலத்தின் முதல்வர் அந்த மாநிலத்தின் குடிமக்களான பிராமணர்களுக்கு எதிராக துவேஷத்தையும், வெறுப்பையும் விதைத்து, வன்முறையைத் தூண்டி விடும் போக்கில் இப்படிப் பேசியிருக்கிறார்.

இந்த செய்தியைப் படித்துக் கொதித்துப் போயிருக்கும் ஒரு நண்பர் கேட்கிறார் -

தமிழ் நாட்டில் ஒரு கட்சி அதுவும் ஆளும் கட்சி அதன் தலைவர் அவனும் ஒரு முதலமைச்சர் 3 சதவிகிதம் மக்களை வேரறுக்கச் சொல்லி ஒரு தீர்மானமே போட்டிருக்கிறானே அது என்னவோ எந்தவொரு பத்திரிகையாளன் கண்களிலும், எந்தவொரு அரசியல்வாதி கண்களிலும், எந்தவொரு மனித உரிமம அமைப்புக் கண்களிலும் படவில்லை.

இது இன அழிப்புப் பிரச்சாரம் இல்லையா? வன்முறையைத் தூண்டும் இன ஒழிப்பு கோரிக்கை இல்லையா? இப்படியெல்லாம் எதுவும் பேசாத மோடியை அரக்கன் என்று வர்ணித்த பத்திரிகைகள் இன்று சர்வத்தையும் மூடிக் கொண்டிருப்பது ஏன்? காங்கிரசுக்கும், கம்னியுஸ்டுகளுக்கும் இந்த இன ஒழிப்பில் ஒப்புதல் உண்டா? ஏன் கண்டிக்கவில்லை? இது வரை ஒரு பத்திரிகை கூட இது குறித்து வாய் திறக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்காக தி மு க தடை செய்யப் பட வேண்டும், கருணாநிதியும் அவன் குண்டர்களும் கைது செய்யப் பட வேண்டும். உடனடியாக அவனது ஆட்சி கலைக்கப் பட வேண்டும்.

இதே போன்ற சில பத்தாண்டு வெறுப்பு அரசியல் பிரசாரத்தின் விளைவாக தமிழகத்தின் கிராமங்களில் இருந்தும், பல சிறு, பெரு நகரங்களில் இருந்தும் எல்லாம் ஏற்கனவே எல்லாப் பிராமணக் குடும்பங்களையும் துரத்தியாயிற்றே? விரட்டியாயிற்றே? இன்னுமா உங்கள் வன்மம் அடங்கவில்லை இனவெறி நாய்களே?

அவரது கருத்துடன் உடன்படுகிறேன்.

செய்தி:
Drive out “anti-Tamil, evil forces” - DMK

Chennai, Feb. 16 Seeking to revive its anti-Brahmin ideology, the DMK today appealed to 97 per cent Dravidians in Tamil Nadu to drive out “anti-Tamil, evil forces”, represented by the AIADMK supremo Ms Jayalalitha, from the state.

Taking exception to Ms Jayalalitha describing chief minister and DMK leader Mr M Karunanidhi as `Ravana’ in the general council meeting of AIADMK recently, a resolution adopted at the party’s administrative committee meeting said Ms Jayalalitha was again and again referring to the `mythological lies’ of Aryan victory over Dravidians and degrading Tamils and Tamil sentiments.

“Jayalalitha’s arrogant remarks will be taken as a challenge against the Tamil race. Ninety-seven per cent Tamils and Dravidians should take it as their duty to work for driving out these anti-Tamil evil forces from Tamil Nadu”, the resolution said in an obvious call to 97 per cent non-Brahmins in the state.

Even during the 2006 Assembly elections, Ms Jayalalitha had indirectly described the fight between the DMK and the AIADMK as a war between Aryans and Dravidians. - Bureau Report

Published: Saturday, February 16, 2008

11 comments:

Anonymous said...

Equating Ravana with MK was an insult to Ravana, who all said and done was a great musician, ardent devotee of Lord Shiva, a person who
knew Vedas, and a great warrior.
According to Ramanayana he was a brahmin.Rama was a Kshatriya who
won over a brahmin King. These idiots know nothing about the epic
or its characters.
30%+ of the votes in all the polls
held so far since birth of ADMK have been in favor of ADMK. DMK
cannot win an election on its own.
If at all anything in 2011 it will have to look for partners.So this 97% is nonsense.

Anonymous said...

Equating Ravana with MK was an insult to Ravana, who all said and done was a great musician, ardent devotee of Lord Shiva, a person who
knew Vedas, and a great warrior.
According to Ramanayana he was a brahmin.Rama was a Kshatriya who
won over a brahmin King. These idiots know nothing about the epic
or its characters.
30%+ of the votes in all the polls
held so far since birth of ADMK have been in favor of ADMK. DMK
cannot win an election on its own.
If at all anything in 2011 it will have to look for partners.So this 97% is nonsense.

Anonymous said...

மராத்தியர் அல்லாதவர்களுக்கு எதிராக வன்முறை தூண்டும் படி பேசிய ராஜ்தாக்கரேவையும், மராத்தியர்களுக்கு எதிராக வன்முறை தூண்டும்படி பேசிய அபு அஸிம் அஜ்மியையும் கைது செய்யும்போது, அதே குற்றத்தை செய்த தமிழக முதல்வரை இந்திய அரசு கைது செய்ய வேண்டுமா வேண்டாமா?

Hariharan # 03985177737685368452 said...

தமிழுக்கே தமிழை அறிமுகப்படுத்திய நவீன ராஜராஜ சோழராக தன்னை காட்டிக் "கொல்லும்" முதல்வர் கருணாநிதி தன்னைத் முழுமையான தமிழ் ஈனத் தலைவன் என்று வரலாற்றில் பொறிக்க ஆவன செய்கிறார்.

தாத்தாவாகி 83 வயசானா மனதில் அமைதியும் அன்பும் பெருக்கெடுக்கும், அரவணைக்கும் பாங்கு அதிகரிக்கும் என்பது பொதுவான நியதி என்றாலும் கருணாநிதிக்குத் தன் பெயர் வடமொழியில் இருப்பதால் அதன் மெய்யான பொருள் விளங்கி அதன் படி 1% இருக்க முயற்சித்தால் சிறப்பு!

Anonymous said...

இந்தத் தீர்மானத்தை மோடி அறிவித்திருந்தால் இந்நேரம் வானம் பொத்து வீழ்ந்திருக்கும். மோடியைக் கைது செய்திருப்பார்கள். மீடியாக்கள் மொத்தமும் மோடியை மாபெரும் அரக்கனாக, ஹிட்லராக, முசோலினியாகச் சித்தரித்திருக்கும். ஆனால் இந்தத் தீர்மானத்தைப் போட்டது கருணாநிதியும் அவரது காலிக் கும்பலும் என்பதனால் பத்திரிகைகள், அரசியல்வாதிகள், மனித உரிமைப் போராளிகள் எல்லோரும் அமைதி காக்கிறார்கள். தமிழ் இணையத்தில் மோடியையும் இந்துத்துவாவாதிகளையும் வேரோடு ஒழிக்க வேண்டும் என்று எழுதும் மதச்சார்பின்மைவாந்திகள் எல்லாம் அவர்கள் தம் குருபீடத்தோடு சேர்ந்து கருணாநிதியின் கால்களைக் கழுவிக் கொண்டிருக்கிறார்கள். மோடியை எதிர்த்த பேடிகள் இந்த விஷயத்தில் சர்வாங்கத்தையும் பொத்திக் கொண்டு மயான அமைதி காக்கிறார்கள். ஜெயலலிதா சொன்னது தவறென்றால் அ தி மு க வினரை அல்லவா எதிர்க்க வேண்டும், தேர்ந்தெடுத்து ஒரு இனத்தாரை மட்டும் அழிக்க வேண்டும் என்று அரைகூவல் விடுவது இன அழிப்பு. கருணாநிதி உடனடியாகக் கைது செய்யப் பட வேண்டும், ஆட்சி கலைக்கப் பட வேண்டும். ஒரு இனத்தை தமிழ் நாட்டில் இருந்து ஒழிக்கப் பட வேண்டும் என்று தீர்மானம் போடும் பேயாட்சியைக் கண்டிக்க தமிழ் நாட்டில் ஒரு ஜீவன் கூட இல்லாமல் போய் விட்டது. நல்லக் கண்ணு, கெட்டக் கண்ணு, விகடன், குமுதம், வை கோ, இந்து, விஜயகாந்த், காங்கிரஸ், இலக்கியவாந்திகள் என்று ஒருவருக்குக் கூட இது இன ஒழிப்பாகத் தெரியவில்லை. இதே விஷயத்துக்காக ராஜ் தாக்கரே கைது செய்யப் படலாம் என்றால் ஏன் கருணாநிதி கைது செய்யப் படக் கூடாது, வன்முறையைக் கொலைவெறியைத் தூண்டிய குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை அளிக்கப் பட வேண்டும்.

ச.திருமலை

Anonymous said...

// 30%+ of the votes in all the polls
held so far since birth of ADMK have been in favor of ADMK. //

Yes, so by its resolution DMK has not only insulted Brahmins, but also all the voters of ADMK who cut across castes and regions. It is a blatant anti-democratic act that deserves severe punishement from central govt. and election commission.

ஜடாயு said...

// அதே குற்றத்தை செய்த தமிழக முதல்வரை இந்திய அரசு கைது செய்ய வேண்டுமா வேண்டாமா? //

இது பாயிண்ட்.

கருணாநிதி செய்தது அதைவிடப் பெரிய குற்றம். மும்பை நாசிகள் விஷயத்திலாவது பிழைக்க வந்தவர்கள் கடந்த 30-40 வருடங்களில் வந்திருக்கலாம் என்ற ஆவணம் உள்ளது.

ஆனால் திமுகவின் "வந்தேறி" லாஜிக் உலகில் உள்ள இத்தகைய எல்லா நாசி வெறியர்களையும் தூக்கி சாப்பிடக் கூடியது. 3000 ஆண்டுகள் முன்பு கைபர் போலன் வழியாக வந்தவர்கள் என்று மேடைதோறும் நீட்டி முழக்கி பேசுவது. இதற்காக நாசிசத்திற்கான நோபல் பரிசு ஏதாவது இருந்தால் கண்டிப்பாக அது திக, திமுகவுக்கே கொடுக்கப் படவேண்டும்.

Anonymous said...

ஜடாயு

அது மட்டும் அல்ல ராஜ் தாக்கரே ஒரு லெட்டர் பாட் கட்சியின் தலைவன் மட்டுமே. ஆனால் கருணாநிதியோ ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். எல்லா மக்களின் பிரதிநிதி. தன் ஏற்றுக் கொண்ட உறுதி மொழியை மீறி 3 சதவிகிதம் மாநில மக்களைக் கொன்று குவிக்க வேண்டும் என்று இன வெறியைத் தூண்டி விடுகிறான். இது நிச்சயாமாக கடுமையான குற்றமாகக் கருதப் பட வேண்டும். உலகளாவிய மனித உரிமை அமைப்புகளும் இந்தக் குற்றத்தை எதிர்க்க வேண்டும். ஹிட்லர், ஸ்டாலின் போன்றோரின் படு கொலைகளை ஒத்தது. இப்பொழுதே இந்த இன வெறியையைத் தடுத்து நிறுத்தாமல் 3 சதவிகிதம் பேர்கள் கொன்று குவிக்கப் பட்ட பின் தடுத்து நிறுத்துவதில் அர்த்தம் இல்லை. மோடி என்றால் துள்ளிக் கொண்டு எதிர்ப்புத் தெரிவிக்கும் அத்தனை நாய்களும் கருணாநிதி என்று வரும் பொழுது பொத்திக் கொண்டு திரிகின்றன.

அன்புடன்
ச.திருமலை

Anonymous said...

Eppoda ungala apuram alikirathu.. ippadi alicha thaan undu...

Anonymous said...

ஜடாயு சாமி,

எங்க செல்லா சாமி,பூத் ஏஜன்ட் சாமி,வெளி பிள்ளை சாமி,'குறி"சாமி அல்லாம் கோவி சாமி விவகாரத்துல பிஸி.கோவி சாமியை அவுட்டாக்கியாச்சு.இப்ப வருவாங்க பாருங்க,வன்முறக்கு அர்த்தம் சொல்ல.

அன்புடன்
பாண்டியன்

Anonymous said...

வயத்தெரிச்சல் பார்டிங்க.. போடுங்க ஜெலூசில்..