Tuesday, February 19, 2008

மலேசிய இந்துத் தமிழர்கள் வாழ்வுரிமைக்காக இந்து முன்னணி போராட்டம்

பிப்ரவரி 16, 2008 அன்று சென்னை மலேசியத் தூதரகம் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வாழ்வுரிமை கோரிப் போரிடும் HINDRAF அமைப்பினரின் தலைமையில் நடைபெறும் தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்கும் மலேசிய அரசைக் கண்டித்தும், இந்துக் கோயில்கள் இடிக்கப் படுவதனை எதிர்த்தும் கோஷங்கள் இடப்பட்டன.

கைது செய்யப் பட்டுள்ள இந்து தலைவர்களை விடுவிக்கவும், தமிழர்கள் தங்கள் மரியாதையுடனும், உரிமைகளுடனும் வாழ வழிவகை செய்யுமாறு மலேசிய அரசை வலியுறுத்தியும் தூதரகத் தலைவரிடம் மனு கொடுக்கப் பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமகோபாலன், துரை சங்கர் உள்ளிட்ட இந்து முன்னணி தலைவர்களும் கலந்து கொண்டனர். இவர்கள் கைது செய்யப் பட்டு பின்னர் விடுவிக்கப் பட்டனர். பிப்ரவரி 16 அன்றே, HINDRAF தலைவர் வேதமூர்த்தியின் மகள் மலேசியப் பிரதமரை சந்தித்து இதே கோரிக்கைகளை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.

1 comment:

Anonymous said...

Brother Jadayu, thanks for the news. This has come in Dinamalar also -

http://www.dinamalar.com/2008feb17/political_tn7.asp

- Subramanian, Malaysia