Wednesday, July 25, 2007

இந்தியப் பெண்மைக்குப் பெருமையும், சிறுமையும் இன்று ஒரே நாளில்..?

இந்திய நாட்டின் கோடானுகோடி"சாதாரண" பெண்களை மறந்து விடுங்கள். அவர்களைப் பற்றியெல்லாம் யார் பேசுவார்கள்? நாம் பேசிக் கொண்டிருப்பது தங்கள் தலைமயிரை 'பாப்' கட் செய்து கொண்ட புதுமைப் பெண்களைப் பற்றி ( ஒரு இந்தி சேனலில் எந்த மாதிரி பெண்கள் இந்தியப் பாராளுமன்றத்திற்குப் போகிறார்கள் என்ற விவாதத்தில் ஒரு நாரீமணி உதிர்த்த பதம் இது - 'baal katiwali mahila')

பிரதீபா பாட்டீல் இன்று பாரத நாட்டின் முதல் "மேடம் பிரசிடென்ட்" ஆகி விட்டதைக் குறித்து செய்தி ஊடகங்கள் அல்லோல கல்லோலப் படுத்திக் கொண்டிருக்கின்றன - இந்தியப் பெண்மை பெருமிதம் அடைந்து விட்டதாக... தன்மீது சுமத்தப்பட்ட ஊழல், கொலை மற்றும் சட்டவிரோத குற்றச்சாட்டுகளுக்கு இன்று வரை நேர்மையான பதில் அளிக்க முடியாத, தன் முக்காடிட்ட முகத்தை எப்போதும் முக்கால்வாசி மட்டுமே அறியத் தரும் ஒரு அரசியல் அடிமைப் பெண் இந்த உயர்பதவிக்கு வந்திருப்பது 'பாப் கட்' பெண் முதல் பர்தா போடும் பெண் வரை எல்லாரையுமே பெருமைப் படுத்தி விட்டது தான் ! நம்புவோம்.

சிறுமை என்று சொல்ல வந்தது வேறு விஷயம். உறுதிக்கும், செயல்திறமைக்கும், நேர்மைக்கும் உதாரண புருஷி என்று சொல்லத் தக்க ஒரு பெண். ஏற்கனவே பல கடினமான, சவாலான பொறுப்புக்களை வகித்து அவை ஒவ்வொன்றிற்கும் பெருமை சேர்த்த ஒரு பெண். அதே துறையில் முறைப்படி அவருக்கு வந்திருக்க வேண்டிய ஒரு உயர் பதவி மறுக்கப் பட்டிருக்கிறது இன்று. தில்லி காவல்துறை ஆணையர் ஆவதற்கு முழுத் தகுதி படைத்த கிரண் பேடி ஓரங்கட்டப் பட்டு ஒய்.எஸ். தாலிவால் தேர்வு செய்யப் பட்டுள்ளார். இந்த அநியாயத்தை எதிர்த்து வெளிப்படையாகவே வெகுண்டு எழுந்துள்ளார் கிரண் பேடி.

காரணம் என்ன தெரியுமா?

யாரைப் பெருமைப் படுத்த வேண்டும், யாரைச் சிறுமைப் படுத்த வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை இருக்கிறதே, அது மட்டும் எந்த இந்தியப் பெண்ணிடமும் இல்லை, ஜன்பத் 10ஆவது எண் வீட்டில் வசிக்கும் ஒரு இத்தாலியப் பெண்ணிடம் தான் அது உள்ளது.

அவருக்குப் பிடிக்காதவர்கள், அவரை முறைத்துக் கொண்டவர்கள் கனவுகாணும் விஞ்ஞானியாகட்டும், காக்கிச் சட்டை கண்ணியர்களாகட்டும் - கடாசப் படுவார்கள்.

அவரது பெண் அடிமைகள் ஜனாதிபதி ஆவார்கள், ஆண் அடிமைகள் பிரதமர்களாகவும், அமைச்சர்களாவும் சேவகம் புரிவார்கள் ! உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இருக்கும் ஒரே இந்தியநாட்டு வாசி இந்தப் பெட்டை தான் என்றால் சும்மாவா? (டென்ஷன் ஆகிடாதீங்க, இவ்வளவு பெரிய அடிமைகளை அடக்கி ஆள்பவர் எவ்வளவு பெரிய "ஆண்டை" யாக இருக்கணும்! அதைத் தான் பெண்பாலில் எழுதியிருக்கிறேன்).

ஆக மொத்தத்தில் பெண்மை பெரிய பெருமை பெற்றுவிட்டது என்று தோள் தட்டி, மண்டையில் அடித்துக் கொள்வோம்!

பயங்கரவாதிகள் மீது காட்டும் பரிவால் நிகழவிருக்கும் பின்விளைவுகள்

தீவிரவாதச் செயல்களுக்கு துணணபோனதற்காக குற்றம் சாட்டப்பட்டு ஆஸ்திரேலியாவில் விசாரிக்கப் பட்டு வரும் இந்திய டாக்டருக்காக இந்திய அரசு காண்பித்து வரும் அதீத கனிவும், பரிவும் தேசபக்தர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துவது நியாயமே.

இதன் பின்னணியில் முதுபெரும் எழுத்தாளர் திரு. மலர்மன்னன் அவர்கள் ஜூலை-12, 2007 திண்ணை இதழில்
ஹிந்துஸ்தானத்தின் மீது பயங்கரவாத முத்திரை விழப் போகிறது! என்ற ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையில் கடைசியில் அவர் எடுத்துவைக்கும் வாதம் மிகவும் சிந்தனைக்குரியது -

".. ஹிந்துஸ்தானத்துப் பிரதமரோ, போதிய ஆதாரங்கள் சிக்கியதன் அடிப்படையில் விசாரணைக் கைதிகளாக லண்டனில் வைக்கப்பட்டிருக்கும் ஹிந்துஸ்தானத்து முகமதிய இளைஞர்களின் தாய்மார்கள் அளிக்கும் கண்ணீர்ப் பேட்டிகளைப் பார்த்துத் தாமும் கண்ணீர் மல்க இரவெல்லாம் உறக்கமின்றி உழன்றதாகச் சொல்கிறார். அந்தத் தாய்மார்களுக்கு ஆறுதலும் தைரியமும் அளிக்கிறார். ஹிந்துஸ்தானத்து தூதரகங்கள் அந்த விசாரணைக் கைதிகளின் நலனைக் கவனித்துக் கொள்ளும் என உறுதி கூறுகிறார். இங்கிலாந்தின் பிரதமரிடம் பேசுகிறார். தப்பித் தவறிக்கூட மதத்தின் சாயத்தை இதில் பூசிவிடாதீர்கள் என்கிறார்.

... முஷரப் ஆப்கானிஸ்தானத்துடனான எல்லைக் கோடு நெடுகிலும் கண் காணிப்புக்கும் ஏற்பாடு செய்து, தாலிபான்களின் ஊடுருவலைத் தடுக்க முனைந்துவிட்டார். ஆக, பயங்கர வாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் உறுதியாகவும், ஒரு முகமதிய தேசமாக இருப்பினும் நிர்தாட்சண்யமாகவும், திறமையாகவும் செயல்படுவதாக உலக அரங்கில் நம்பிக்கை பிறக்கிறது. அதே சமயம், ஹிந்துஸ்தானம் முகமதிய பயங்கரவாதிகளிடம் காட்டும் மெத்தனத்தையும் மீறிய பரிவின் காரணமாக, பயங்கர வாத ஆதரவு நாடாகக் கருதும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

உலக நாடுகளுக்கு ஹிந்துஸ்தானத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உள்விவகாரங்கள் பற்றி சரியான புரிதல் ஏதும் இல்லை. புரிந்துகொள்ள வேண்டுமென்கிற அக்கரையும் அவற்றுக்கு இல்லை. எனவே அவற்றின் பார்வையில் பாகிஸ்தான் பயங்கர வாதத்தை ஒடுக்கும் நாடாகவும் ஹிந்துஸ்தானம் பயங்கர வாதிகள் மீது அனுதாபம் கொண்டு சலுகை அளிக்கும் நாடாகவும்தான் தோற்றமளிக்கும்"



இதைத் தொடர்ந்து வந்த பல கேள்விகளுக்கும் பதிலளிக்கும் முகமாக சி.பி.காம் தளத்தில் அவரது இன்னொரு கட்டுரையும் வந்துள்ளது. இதில் திரு. ம.ம அவர்கள் எழுப்பும் கேள்விகளும், வைக்கும் வாதங்களும் இந்தியாவின் தற்போதைய தலையாய சமூக பாதுகாப்பு பிரசினையான ஜிகாதி தீவிரவாத்தை நேர்கொள்வதில் அரசு காட்டி வரும் மெத்தனப் போக்கை தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்துரைப்பதாக உள்ளன. சில துளிகள் -

.. அரசியலுக்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத விளையாட்டு வீரர்களை அராபத்தின் பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் கொன்று குவித்த பிறகும் நமது மைய ஆட்சியாளர்கள் அராபத்தை மார்புறத் தழுவி அவரது பயங்கரவாத இயக்கத்தை ஆதரிக்கத் தவறவில்லை. ஹிந்துஸ்தானம் இந்த மரபினைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது என்கிற செய்தியைத் தமது செயலால் உலக நாடுகளுக்குப் பிரகடனம் செய்து வருகிறார், இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்.

.. ஹிந்துஸ்தானத்தில் அண்மைக் காலத்தில் தோன்றி, உலகம் முழுவதும் சீடர்களைப் பெற்றிருந்த மிகச் சிறந்த சிந்தனையாளரும் தத்துவ ஞானியுமான ஆசாரிய ரஜனீஷ் என்கிற ஓஷோ அமெரிக்காவில் ஒரு குற்றவாளியாக அலைக்கழிக்கப்பட்டதும் நினைவிருக்கும். .. ஓஷோ அமெரிக்காவில் கைதான போது கூட அவர் அகில உலகிலும் மதிக்கப்படும் சிந்தனையாளர்; அவரைக் கௌரவமாக நடத்துங்கள் என்று நமது மைய அரசு சொன்னதாக எனக்கு நினைவில்லை. ஆனால் நமது இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் ஆஸ்திரேலிய அரசிடம் மிகவும் உறுதிபடச் சொல்கிறார்: பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாகக் கருதி நீங்கள் காவலில் வைத்திருக்கும் ஹமீது எங்கள் நாட்டுப் பிரஜை; அவரது உடலுக்கோ, உள்ளத்திற்கோ எவ்வித ஊறும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்பதாக.

.... முன்பெல்லாம் ஹிந்துஸ்தானத்திலிருந்து வருபவர்களை 'ஓ! புத்தர் பிறந்த தேசத்திலிருந்து வருகிறீர்களா?' என்று விமான நிலையத்திலேயே இன்முகத்துடன் வரவேற்பார்கள். சில சமயம் 'யோகா தேசமா' என்பார்கள். காந்தி திரைப்படம் வந்தபின் 'கேண்டி?' என்று வரவேற்பார்கள். இனி, 'ஓ! சொந்த நாட்டு பயங்கரவாதிகள் மீது பரிவு காட்டும் தேசத்திலிருந்து வருபவரா?' என்று மனத்திற்கு உள்ளாவது நினைத்துக்கொள்வார்கள். அதற்குத் தகுந்தவாறுதான் வரவேற்பும் இருக்கும்.

Wednesday, July 18, 2007

தீவிரவாத குற்றவாளிக்கு பரிந்து பேசும் இந்திய அரசு: வெட்கக்கேடு!

ஆஸ்திரேலியாவில் தீவிரவாத குற்றம் சாட்டப்பட்டு காவலில் இருக்கும் முகமது ஹனீஃபிற்காக இந்திய அரசும், ஊடகங்களும் போட்டி போட்டுக் கொண்டு அன்பைப் பொழிந்து கொண்டிருப்பதைக் கண்டு மனம் நொந்த ஜடாயு "டைம்ஸ் ஆஃப் இந்தியா" பத்திரிகைக்கு எழுதிய கடிதம் -

Dear Editor,

There are news reports that “Stepping up pressure on Australia over Mohammad Haneef issue, India on Tuesday summoned its ambassador in New Delhi to convey its concern and emphasize that the doctor from Bangalore be treated in a fair manner”. This, a day after Indian government made an extra ordinary request to Australia to treat Dr. Haneef fairly.

Has the Indian govt. ever cared to summon the ambassadors of Saudi Arabia and other Gulf countries, where many Indian citizens are the victims of extreme brutality and torture from their employers, apart from non-payment of wages? Has the Indian govt. ever expressed its concern for the Indian women victims who get sexually abused in these Gulf countries, often by the men who employ them?

Ah! What an exemplary and overt gesture of solidarity overflowing from Indian government officials and the prime minister himself for *one* Mohammed Haneef accused of criminal conspiracy in the UK terror plot! For a Haneef, merely detained for questioning in Australia, neither harassed or insulted, but treated in the best possible manner, certainly under conditions much better than Indian police lockups. Can the craving for a couple of Muslim votes bring a PM and his political bosses stoop to such abominable levels?

Today’s Times of India has dedicated one full page interview of Haneef’s wife with her emotional outbursts. Did this newspaper publish even a quarter page report of the travails of the family of Suryanarayana, the Engineer from Hyderabad who was brutally beheaded after torture by the Jihadi gangs of Afghanistan in April 2006, when he was posted in that country on Indian government service? Does anyone remember this newspaper publishing a one-page interview of a widow of a Kargil war hero?

What do the Indian govt. and the media want to convey to the citizens of India, Indian expatriates and the world at large?
That, they will turn a blind eye to the sufferings of innocent Indian expatriates, hardworking and law abiding in their countries of residence, but will empathize totally with the expatriates getting arrested for questionable and unlawful activities and Jihadi terrorism, bringing disgrace to the nation?
That Indian government welcomes and nurtures Jihadi terrorists and is deeply concerned about their fair treatment and well being?
That India is ready to be a sanctuary for the Jihadi murderers who will stage bomb blasts in India, killing Indian citizens to rehearse for bigger International operations?

Shame on such a government, Shame on such a media.

Jataayu,
Bangalore

Wednesday, July 11, 2007

உலக அளவில் இந்துக்கள் மீதான மனித உரிமை மீறல்கள்

ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை என்னும் தன்னார்வ நிறுவனம் மற்றும் மனித உரிமை அமைப்பு உலகில் 11 நாடுகளிலும், சில பிரதேசங்களிலும் இந்துக்களின் மீது தொடரும் வன்முறைகள் மற்றும் கொடுமைகள் பற்றிய விரிவான 200-பக்க அறிக்கையை அளித்துள்ளது.

இந்த அறிக்கையை அமெரிக்க சட்ட நிபுணர்கள் உட்பட பலரும் கவனத்துக்குரியதாகக் குறிப்பிட்டு, ஒரு மாபெரும் மானுட சோகத்தைப் பதிவு செய்தமைக்காக இந்த அமைப்பைப் பாராட்டியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், ஃபிஜி, ஜம்மு & காஷ்மீர் (இந்தியா), கஜகஸ்தான், மலேசியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, இலங்கை, ட்ரினிடாட் & டொபாகோ ஆகிய பிரதேசங்களில் இந்துக்களின் மீது தொடர்ந்து வரும் மனித உரிமை மீறல்களைப் பற்றிய விவரணம் இந்த அறிக்கையில் உள்ளது.

"இந்து மக்கள், இந்து நிறுவனங்கள், இந்து வழிபாட்டுத் தலங்கள் இவற்றைக் குறிவைத்து நடத்தப் படும் தாக்குதல்கள் உலக ஊடகங்களால் பெரிய அளவில் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுவதில்லை. இந்நிலையில் இந்த ஆவணம் மிக முக்கியமானதாகிறது. உலகெங்கும் உள்ள இந்துக்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செய்ய வேண்டியது அதிகம் உள்ளது" என்று அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஷெரட் பிரவுன் தெரிவித்தார். ஃப்ராங்க் பாலோன், ஜோ க்ரோலி, பீட் ஸ்டார்க் முதலிய அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கருத்தை எதிரொலிக்கின்றனர்.

இந்த அறிக்கை உருவாக்கத்தில் பங்கு வகித்த ஈசானி சௌதரி என்னும் பெண்மணி " 1947 இந்திய தேசப் பிரிவினையின் போது கிழக்கு வங்கத்தில் (இன்றைய பங்களாதேஷ்) 30 சதவீதமாக இருந்த இந்து மக்கள் தொகை இப்போது வெறும் 9 சதவீதமாக ஆகியுள்ளது - . ஒவ்வொரு நாளும், பங்களாதேசில் இந்துக்கள் பெரும் சித்திரவதைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மிகப் பெரிய இன அழிப்பு பற்றிய உண்மைகள் இவ்வளவு தாமதமாகிவிட்டபோதாவது உலகின் கண்கள் முன்னால் கொண்டுவரப்பட்டிருக்கின்றன" என்று குறிப்பிட்டார்.

முழு அறிக்கையையும் இங்கே படிக்கலாம்.

இது பற்றிய ரிடீஃ.ப்.காம் செய்தி: US lawmakers laud Hindu foundation report