Sunday, April 27, 2008

திருவாசகம், குரான், தீவிரவாதம்: ஒரு கடிதம்

அன்புள்ள பா.ரா,
Fitna - தேவையற்ற அச்சுறுத்தல் பதிவில் ரொம்ப அப்பாவியாக இப்படி சொல்கிறீர்கள் -

// பிற கடவுள்களை வணங்குவோரைச் சுட்டிக்காட்டி மாணிக்கவாசகர் கலவரப் பீதியைத் தூண்டுவதோ நமக்கு ஒரு பொருட்டில்லையென்றால் மேற்படி சூராக்களையும் நாம் பெரிய அளவில் பொருட்படுத்தத் தேவையில்லை. //

தேவையில்லை தான்.. இஸ்லாம் என்கிற மதம் தான் சென்றவிடமில்லாம் பெரும் படுகொலைகளையும், பேரழிவுகளையும் *மதத்தின் பெயரால்* செய்யாமலே இருந்திருந்தால். அது *இன்றும்* தொடர்ந்து நடக்காமல் இருந்திருந்தால்.. போர் நடக்கும் ஈராக்குக்கு அடுத்தபடியாக, இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு அதிக குடிமக்களை பலிகொடுத்திருக்கும் ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டு கொஞ்சம் கூட உணர்ச்சியில்லாமல் எப்படி சுவாமி உங்களுக்கு இப்படி எழுத வருக்கிறது?

சொற்கள் மட்டும் ஒரு கருத்தியலின் தாக்கத்தைத் தீர்மானிப்பதில்லை.. ஒரு மனிதன், மதம், சமூகம் அந்தச் சொற்களை உள்வாங்கித் தங்கள் வாழ்க்கையையும், அமைப்புகளையும் கட்டமைக்கும் விதமே அவற்றின் நடத்தையையும், செயல்முறைகளையும் தீர்மானிக்கிறது. "அஞ்சுமாறே" என்பதற்கும் "மாண்டனர்" எனபதற்கும் "அழிந்து போகிறான் (விநஷ்யதி)" என்பதற்கும் திருவவசகத்திலும், ராமானுஜ நூற்றந்தாதியிலும், கீதையிலும் அர்த்தமே வேறு. இந்த நூல்களின் தளமே வேறு. அது சுத்த ஆன்மிகம். இவை காஃபிர்களைக் கண்ட இடங்களில் கொல்லப் போகிற முஃமீன்களான "நம்பிக்கையாளர்கள் கூட்டத்திடம்" பேசவில்லை. ஒரு தனிமனிதனின், ஆன்ம சாதகனின் மனத்துடன் பேசுகின்றன. இதுவும் உங்களுக்குத் தெரியாததல்ல. மேலும், இந்த நூல்களினால் எத்தனை பாதகர்கள் உருவாகியிருக்கிறார்கள்? எத்தனை இனப்படுகொலைகள் நிகழ்ந்துள்ளன? வரலாற்று அறிஞரே, தயவு செய்து ஆதாரங்கள் தாருங்கள்.

ஆனால், இஸ்லாமின் ரத்தம் தோய்ந்த வரலாறு பற்றி வில் டுராண்ட் (அவரது பிரபலான மேற்கோளை மடல் முடிவில் தந்திருக்கிறேன்) முதல் இன்றைய கொய்ன்ராட் எல்ஸ்ட் வரை ஏராளமான வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இன்றைய செய்தி ஊடகங்களும், அப்பட்டமாக நமக்கு இவற்றை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. இப்படியிருக்கும்போது "அந்தளவுக்கு அவர்கள் அடக்குமுறைக்கும் ஆதிக்கத்துக்கும் உட்பட்டிருக்கிறார்கள் என்பது தவிர எனக்கு வேறு காரணம் தெரியவில்லை" என்று ஜல்லியடிக்கிறீர்களே.. மத்தியக் கிழக்கு சரி, மற்ற நாடுகளின் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு என்ன காரணம்?

பாகிஸ்தானிய, வங்கதேச இந்துக்கள் சந்தித்த அடக்குமுறை, ஆக்கிரமிப்புக்கள், கற்பழிப்புக்கள் கொஞ்சமா? நஞ்சமா? இத்தனைக்கும் இஸ்லாமிய ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு எந்தக் கலகமும் செய்யாமல், அதற்கு அடிபணிந்த வாழக் கூட இணங்கியவர்கள் அவர்கள். அவர்களை இன அழிப்பு செய்து, அவர்கள் சொந்த மண்ணை விட்டுத் துரத்திய இஸ்லாமிய" அராஜகத்திற்கு என்ன காரணம்?? இந்த குரானிய சூராக்கள் என்பதைத் தவிர?

"புவியிலோரிடம்" போன்ற அற்புதப் படைப்பைத் தந்த நீங்கள், மனச்சாட்சியையும், முதுகெலும்புகையும் கழற்றிவைத்துவிட்டு எழுதியிருக்கிறீர்கள்.

வேதனையுடன்,
ஜடாயு

வில் டுரான்ட் தனது “நாகரீகங்களின் வரலாறு” என்ற நூலில் கூறுகிறார் “இந்தியாவை இஸ்லாமியர்கள் கைப்பற்றியது தான் உலக சரித்திரத்திலேயே அதிக அளவு ரத்தக்கறை படிந்த கதையாக இருக்கும். அது எவரையும் நிலைகுலையச் செய்யும் கதை. அதிலிருந்து தெளிவாகப் புரியும் பாடம் என்னவென்றால், கலாசாரம் என்பது ஒரு பெருமதிப்புள்ள பொருள். அதன் சிக்கலான, நுட்பமான ஒழுங்கும், சுதந்திரமும் வெளியிலிருந்து ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் அவர்கள் மூலம் உள்ளிருந்தே பல்கிப்பெருகுபவர்கள் என்ற இருவகைக் காட்டுமிராண்டிகளாலும் எந்நேரமும் தகர்த்தெறியப் படும் அபாயம் இருக்கிறது”.

“...the Islamic conquest of India is probably the bloodiest story in history. It is a discouraging tale, for its evident moral is that civilization is a precious good, whose delicate complex order and freedom can at any moment be overthrown by barbarians invading from without and multiplying from within “
- Will Durant in “History of Civilization

Friday, April 25, 2008

திராவிட இயக்க திருக்குறள் பார்வைகள் குறித்து

கிறிஸ்தவ இறையியலில் Dehellenization என்று ஒரு கருதுகோள் உண்டு. “ஹெலன் இல்லாமல் ஆக்குவது” என்ற பொருள் தொனிக்கும் இந்தப் பதத்தின் உண்மைப் பொருள் “கிரேக்கத் தாக்க நீக்கம்” என்பதாகும் (நன்றி: அருணகிரி) 16ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க சர்ச்சின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து பிராட்டஸ்டண்ட் இயக்கம் எழுந்தபோது இந்தக் கருத்தியல் உருவானது. கிறிஸ்தவ மதக் கொள்கை, அதன் சின்னங்கள், சமய இலக்கியம் இவற்றில் இழையோடிக் கொண்டிருப்பதாகக் கருதப்பட்ட கிரேக்க தத்துவ ஞானம், கிரேக்க புராண, உருவவழிபாட்டு “பாகன்” மத தாக்கங்கள் இவற்றைத் திட்டமிட்டு நீக்கி, கிறிஸ்தவத்தை “சுத்திகரிக்க” வேண்டும் என்ற எண்ணத்துடன் பைபிள் முழுவதும் இந்தப் பார்வையில் வாசிக்கப்பட்டு அதன் கருத்துக்களுக்கு விளக்கமளிக்கும் “பண்டிதர்கள்” உருவானார்கள். ஆனால், மதிப்பீடுகள் மாறிவரும் நவீன காலகட்டங்களில் கிரேக்க தத்துவ தரிசனத்துடன் பைபிளும், கிறிஸ்தவமும் தொடர்புடையது என்று நிறுவுவதும் ஒருவகையில் சாதகமான நிலைப்பாடு தான் என்றும் கருதப் பட்டது. இன்றும் வாத்திகன் மற்றும் ஏனைய கிறிஸ்தவ வட்டாரங்களில் இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பான குரல்கள் எழுந்துவருகின்றன. சர்ச்சையைக் கிளப்பிய தனது சமீபத்திய 2006ம் ஆண்டு உரையிலும் போப் இதுபற்றிக் குறிப்பிட்டார் (இந்த உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு)

முனைவர் மு.இளங்கோவன் என்பவர் திண்ணையில் சென்ற இரு வாரங்களாக எழுதி வந்த “திராவிட இயக்க திருக்குறள் பார்வைகள்” கட்டுரையைப் படிக்கும்போது இந்தச் சொல் என் நினைவில் தோன்றி மறைந்தது. பழந்தமிழ் இலக்கியங்கள், கலை மற்றும் கலாசார விஷயத்தில் DeHinduization (இந்துத்தன்மை நீக்கம்) என்கிற “சுத்திகரிப்பு” வேலையைத் தானே முதலில் தமிழகத்திற்கு வருகை புரிந்த கிறிஸ்தவ மிஷநரிகளும், பின்னர் அவர்களால் போஷிக்கப் பட்டு வரும் திராவிட இயக்கமும் செய்து வந்திருக்கின்றன?

ஆனால் இரண்டிற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. சர்ச் கிரேக்கத் தாக்கநீக்க வேலையை ஆரம்பித்த காலகட்டத்திற்கு ஒரு பன்னிரண்டு நூற்றாண்டுகள் முன்பே கிரேக்க மதமும், தத்துவமும், கலாசாரமும் கிறிஸ்தவத்தின் வன்முறைப் பரவலால் வேரறுக்கப் பட்டுவிட்டன. அதை வெளிப்படையாகக் கடைப் பிடிப்போர் யாருமில்லை. அவற்றின் ஒளியை தரிசிக்க விரும்பிய ஐரோப்பிய மறுமலர்ச்சிக் கால ஆரம்ப சிந்தனையாளர்கள் கூட சர்ச் அதிகார அமைப்பால் வேட்டையாடப் பட்டனர். பின்னர் கிரேக்கத் தத்துவம் போற்றுதலுக்கு உரியதாக மாறிவந்ததும், சர்ச் அதன் ஒளியில் தானும் குளிர்காயத் தொடங்கியது.

ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த “சுத்திகரிப்பு” தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தில் இந்துமதம் இன்று போலவே உயிர்த்துடிப்புடன் வாழ்ந்து வந்தது. இந்திய தேசிய எழுச்சியின் நாயகர்களான விவேகானந்தர், திலகர், லாஜபத்ராய், அரவிந்தர், மகாகவி பாரதி, வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட தலைவர்கள் இந்து கலாசார அடித்தளத்தின் மீதே தேசிய எழுச்சிக்கான கருத்தியல்களைக் கட்டமைத்தனர். தமிழ்ப் பண்பாடு உள்ளிட்ட பாரத நாட்டின் அனைத்து சமுதாய வாழ்க்கை முறைகளிலும் இழையோடிக் கொண்டிருந்ததும் இந்தக் கலாசாரத்தின் கூறுகள் தாம் என்றும் அவர்கள் நாடெங்கும் எடுத்துரைத்தனர்.

ஆனால், இந்த தேசிய நீரோட்டத்திற்கு மாறாக “தமிழ்ப் பழம்பெருமை”, “நாத்திகம்/பகுத்தறிவு” என்ற இரண்டு தொடர்பேயில்லாத சண்டிக் குதிரைகள் மீது சவாரி செய்ய விரும்பியது திராவிட இயக்கம். ஒரு மிகப்பெரிய நகைமுரணாக, “நவீன” சித்தாங்களின் அடிப்படையில் எழுந்ததாகத் தன்னை சொல்லிக் கொண்ட இந்த இயக்கம் வெறித்தனமான மரபு வழிபாட்டு, இனப்பெருமைக் கொள்கைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது, அவற்றை வளர்த்தெடுத்தது. பண்டைக் கலாசாரத்தின் கூறுகளை முழுமையாக மறுக்கும் “தூய” பகுத்தறிவுவாதம் தமிழ்மண்ணில் சுத்தமாக எடுபடாது என்பதை இந்தப் பகுத்தறிவுப் பகலவன்கள் அறிந்தே இருந்தனர்.

ஆனால் கோயில்களும், சிற்பங்களும், பேரிலக்கியங்களும், பாரம்பரிய இசை, நடனக் கலைகளும், சைவ, வைணவ சமயங்களும் இல்லாமல் “தமிழ்ப் பழம்பெருமை” என்று ஒன்று இருக்கவே முடியாதே, என்ன செய்வது? இந்த ஓட்டையை இட்டு நிரப்பத் தோதாகக் கிடைத்தது கால்டுவெல் பாதிரியார் உருவாக்கிய போலியான ஆரிய-திராவிட இனவாதக் கொள்கை. அதிலிருந்து முளைத்தவையே பிராமண வெறுப்பு, இந்துமத எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, வட இந்திய வெறுப்பு, சம்ஸ்கிருதக் காழ்ப்புணர்ச்சி எல்லாம்.

இந்தச் சட்டகம் இறுதி வடிவம் அடைந்ததும், தங்கள் கையில் கிடைத்த பழந்தமிழ் இலக்கியங்களையும், கலாசாரப் பிரதிகளையும் இந்தப் பார்வையில் திரித்து, உருமாற்றி, சிதைத்து புதுப்புது விளக்கங்கள் அளிப்பது திராவிட இயக்க குடிசைத்தொழில் போன்று ஆகியது. ஒப்பீட்டளவில் “கிரேக்கத்தாக்க நீக்கம்” செய்த பாதிரிகளுக்கு இருந்த ஆழ்ந்த புலமையில் சிறிதளவும் தேராத “புலவர்”களும், பாவலர்களும், நாவலர்களும், தமிழ்க் காவலர்களும், அரசியல் ஏவலர்களும் கூட இதில் புகுந்து விளையாடினர். “சீரங்க நாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்க” ஒருவர் அறைகூவுவார். இன்னொருவர் வானளவாவ உயர்ந்த கோபுரங்களையும், அணிமாடக் கோயில்களையும் கட்டிய தமிழனின் சிற்பக் கலை உன்னதத்தைப் பற்றி அடுக்குமொழியில், துடுக்கு நடையில் உரையாற்றுவார்!

இந்தக் கட்டுரை தரும் திராவிட இயக்க திருக்குறள் உரைப் பட்டியலில் வ.சுப.மாணிக்கம் போன்று ஒரு சில உண்மையான அறிஞர்களின் உரைகள் தவிர்த்து, பெரும்பாலான உரைகளை இன்று படித்துப் பார்க்கும், ஓரளவு இலக்கியப் பிரக்ஞையும், கொஞ்சம் மரபிலக்கியப் பயிற்சியும் உள்ள எந்தத் தமிழ் வாசகனும் அவை எவ்வளவு போலித்தனமாகவும், அறிவுசார் நேர்மை இன்றியும், குருட்டாம்போக்கிலும் எழுதப்பட்டுள்ளன என்பதை உணரக் கூடும்.



பரிமேலழகர் காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் பட்டாச்சாரியாராக இருந்தவர் என்பது மரபு

திருக்குறள் தமிழிலக்கியத்தின் ஒரு சிகரம் என்றால், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப் படும் ஈடு இணையற்ற உரையாசிரியர் பரிமேலழகர் அதற்குச் செய்த உரையை தமிழிலக்கியத்தின் சிகர தீபம் என்பதே சரியாக இருக்கும். எல்லா பழம் நூல்களையும் போல, காலம் கடந்து நிற்கும் இவ்வுரையும் சிற்சில இடங்களில் தன் காலத்தைப் பிரதிபலிப்பதாகவே இருப்பது புரிந்துகொள்ளக் கூடியதே (திருக்குறளும் இதற்கு விதிவிலக்கல்ல). ஆனால் பரிமேலழகரின் உரையில் “ஆரிய சதிவேலை”யைத் தோண்டித் துருவிக் கண்டுபிடித்துப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கும் இந்த உரையாளர்களுக்கு, அதை இன்னும் கொஞ்சம் நீட்டித்தால், அதே “ஆரிய சதிவேலை”யைத் திருக்குறளின் உருவாக்கத்திற்கே கூட மிக எளிதாகப் பொருத்திவிடலாம் என்ற அடிப்படைத் தர்க்கம் கூட புரியாமல் இருந்தது ஆச்சரியம் தான்! (திருக்குறளில் வேதநெறி பற்றிய பல குறிப்புகளை இந்தத் திண்ணைக் கட்டுரையில் காணலாம்)


திருவள்ளுவ நாயனார், திருமயிலை

இத்தகைய தர்க்க ஓட்டைகளை அடைப்பதற்கு, திருக்குறளில் வரும் சில சொற்களுக்கு இவர்கள் பொருள் கொள்ளும் விதம், உலக மொழியாராய்ச்சிகளின் ஓட்டைச் சித்தாந்தங்கள் (crack pot theories) எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விடும்! ‘அமிழ்தம்’ என்பதன் பொருள் பாற்கடல் அமிர்தம் அல்ல, அது அம்மா ஊட்டும் “அம்ம”மாம். ஆனால் சங்கநூல் புறநானூற்றில் “இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும்..” என்று வருகிறது, சிலப்பதிகாரம் “அலையிடைப் பிறவா அமிழ்தே” என்கிறதே என்று ஒரு சாதாரண ஆள் கூடக் கேட்கலாம். ஆனால் அதற்கெல்லாம் திராவிட அகராதியில் பதில் கிடையாது. இதை இப்படியே நீட்டி “கருமம்” என்பதற்கு “கரு மம்மம்” அதாவது கரிய சோறு (வெள்ளைச் சோறு ஆரிய உணவு!) என்றும் தனித்தமிழ்ப் பொருள் தரலாம். திருக்குறளின் “வேள்வி”யும் “வேட்ட”லும், திராவிட உரைகளில் வேட்டைக் காரனில் இருந்து வேட்டி வரை என்ன வேண்டுமானாலும் ஆகலாம். சரி, புறநானூற்றின் “இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி” யாகம் தானே செய்தான் என்றால் அதற்கும் அதிர்ச்சிகரமான பல திராவிட உரைவிளக்கங்கள் வரலாம்! தேவர்களாக இருந்த “புத்தேளி”ரை திராவிடர்கள் “புதிய தேள்”களாகக் கூட ஆக்கி விடுவார்கள்! இந்த உரைகள் எழுதப்பட்ட காலத்தில், உலகத்திலேயே அதிக அளவு மொழிக் கோமாளிகள் தமிழ்நாட்டில் தான் இருந்திருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியும். இவர்களின் தலைவரை மொழிஞாயிறு என்றும் அழைத்து தமிழக அரசு கௌரவப் படுத்தியது. இன்றும் மெரீனா கடற்கரையில் அமாவாசை தினங்களில் நடு இரவில் சில பிசாசுகள் வந்து இதுபோன்ற தனித்தமிழ்ச் சொல்லாராய்ச்சிகள் செய்துகொண்டிருப்பதாகக் கேள்வி.

“செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென” என்னும் மணிமேகலையையும் “ஊரவர் கவ்வை எருவாக, அன்னைசொல் நீர்மடுத்து” என்ற திருவாய்மொழியும் போன்று, திருக்குறளின் சொற்களையும், பொருள்களையும் அதற்குப் பின்வந்த பல நூல்கள் பல இடங்களில் நேரடியாகவே எடுத்தாண்டுள்ளன. அதனால் திருக்குறளில் புழங்கும் இத்தகைய பழம்சொற்கள் ஏதோ உறைந்து கிடந்ததாக எண்ணி, அவற்றுக்குப் “புதுமைப்” பொருள் கூற முயன்ற செயல், இத்தகைய உரையாளர்களின் இலக்கிய, மொழியியல் அறியாமையையே காட்டுகிறது. கி.வா. ஜகன்னாதன் பதிப்பாசிரியாராக இருந்து கொணர்ந்த “திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு” ஒவ்வொரு குறளுக்கும், இத்தகைய மேற்கோள்களைத் தேடித் திரட்டித் தொகுத்திருக்கின்றது (இந்த நூல் பற்றிய எனது திண்ணைப் பதிவு)

மொத்தத்தில், திராவிட இயக்கம் நிகழ்த்த முயன்ற இந்தக் கலாசார அழிப்பு வேலையில் தமிழரின் உன்னத அறிவுக் கருவூலமான திருக்குறளும் தப்பவில்லை என்பதையே ஒரு இரங்கற்பா போன்று அந்தக் கட்டுரை சொல்லிச் செல்வதாக எனக்குத் தோன்றுகிறது.

Wednesday, April 23, 2008

Save Vivekananda House, Chennai from DMK Govt. hostile takeover

Those famililar with the city of Chennai will know that Vivekananadar Illam (or V.House, in short) on the banks of Marina beach is one of the not-to-miss landmarks of the city.

It was in this heritage building (called Castle Kernan at that time and later Ice House) that Swami Vivekananda stayed during his historic visit to Chennai in Feb, 1897, after his victorious tours of the US and Europe. Swamiji delivered some of his finest and most inspiring speeches from this very building.

As a tribute to this great son of India, govt. leased this building in Feb 1997 (centenary of Swamiji's Chennai visit) to Ramakrishna Math, upon Math's request. RK Math put a beautiful permanant exhibition about Hindu culture and Swami Vivekananda's life, at the cost of one crore. Most visitors to the beach also come to V.House, enjoy and learn from the exhibition and also pay their respects to Swamiji's life-size statue installed there.




The lease was to expire in the next 2 yrs, The Math was planning to extend it for another 30 years. But now the DMK govt. has issued a sudden *3-day* notice to the Math to vacate the builiding immediately by Apr-24! The govt officials have also started pressurizing the Math.

Reason? Govt. wants to set up a "classical Tamil center" at this place, which govt. claims will promote academic study and research of classical Tamil works. The govt. has hinted it may even demolish the century-old building for this purpose.

Well, nobody would oppose such a center. But why is the govt *so* bent upon this particular heritage building for this purpose, that has Swamiji's footprints? The govt. can always set up a new building in any place in Chennai for this purpose !

It is very clear that the anti-Hindu DMK govt. wants to erase the famed memory of Swami Vivekananda from the Chennai's landscape. But by cunningly using the name of "Tamil", DMK thinks it can silence any opponents of such a move. But its not working, as many opposition parties, including ADMK and Sarathkumar's party have condemned the govt's move.

Please add your voice also to the campaign to save Vivekananda House in its current form. Sign the online petition -
http://www.petitiononline.com/vi220408/petition.html

Related news :
http://www.newindpress.com/NewsItems.asp?ID=IE920080421151428&Page=9&Title=Chennai&Topic=0
http://thatstamil.oneindia.in/news/2008/04/22/tn-govt-asks-rk-mutt-to-vacate-vivekanandar-illam.html (Tamil)
http://thatstamil.oneindia.in/news/2008/04/23/tn-leaders-raise-voice-for-vivekanandar-illam.html (Tamil)

Sunday, April 13, 2008

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! எதிர்ப்பீர் திமுக அரசின் கலாசார ஒழிப்பை!

சங்கடங்கள் தீர்க்க வரும் சர்வதாரி
சத்திய தர்மம் காக்க சக்தி தாராய்!
கங்கையுடன் காவிரியும், இமயம் தொட்டு
கடல்குமரி ஈறாகக் கைகள் கோர்த்து
பங்கமிலாப் பாரத நல் நாடுயர்க!
பாரெங்கும் பாதகர்கள் ஒழிந்து வீழ்க!
மங்களங்கள் பொங்கிடுக! மக்கள் கூட்டம்
மனையறங்கள் பாலித்து மகிழ்ந்து வாழ்க!


அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

காலம் காலமாக நம் முன்னோர் கொண்டாடி வரும் இந்தப் புத்தாண்டுத் திருநாளை அரசாணை மூலம் திரித்து உருமாற்ற முயலும் கருநாநிதி அரசின் அப்பட்டமான கலாசார ஒழிப்புத்திட்டம் மற்றும் அதன் உள்நோக்கங்கள் பற்றி ஏற்கனவே பழைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். இது பற்றி வரலாற்று அறிஞர், ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் எழுதிய சித்திரையில் தான் புத்தாண்டு என்கிற கட்டுரையையும் சுட்டியிருந்தேன்.

இந்நிலையில் இந்தப் புத்தாண்டு நாளில் திமுக அரசு இன்னும் சில அராஜக அரசாணைகள் மூலம் மக்களின் கலாசார உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது.

இன்று தமிழ்ப் புத்தாண்டு என்று பேசுவதும், எழுதுவதும் ஏதோ கொலைக் குற்றம் என்னும்படியான அல்பத் தனமான, கிறுக்குத் தனமான பயம் தமிழ்ச் சமூகம் முழுவதும், ஊடகங்கள் முழுவதும் பீடித்திருக்கிறது. "சித்திரைத் திருநாள் நிகழ்ச்சிகள்" என்கின்றன தொலைக் காட்சிகள். "சித்திரைச் சிறப்பிதழ்" என்று அறிவிக்கின்றன பத்திரிகைகள். காலை தொலைபேசி புத்தாண்டு வாழ்த்துத் தெரிவிக்கும்போது சென்னை உறவுக்காரப் பெண் ஒருத்தி "சித்திரைத் திருநாள்னு சொல்லுங்க" என்று பயந்து கொண்டே சொல்கிறார். எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா "விஷு வாழ்த்து" மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கிறார்! என்ன நடக்கிறது இங்கே?



இன்று எங்கள் வீட்டு வாசல் கோலம்

இந்த அரசின் விஷக் கொடுக்குகளில் சிக்கியிருக்கும் தமிழகத்தின் முக்கிய கோயில்களில் எல்லாம் இன்று சிறப்புப் பூஜைகள் செய்யக் கூடாது, பஞ்சாங்கம் படிக்கக் கூடாது என்று இந்து அறநிலையத் துறை ஆணையிட்டியிருக்கிறது. ஜோதிட நம்பிக்கை உள்ளவர்கள் தான் பஞ்சாங்கம் படிப்பவர்கள், கேட்பவர்கள் - அவர்கள் கருநாநிதி அறிவித்த அபத்தப் புத்தாண்டு அறிவிப்பைப் சிறிதும் சட்டை செய்யவில்லை என்பது தெளிவு. ஆனால் அவர்கள் கொண்டாட விரும்பும் புத்தாண்டில் அவர்கள் நம்பும் சடங்கு ஒன்றிலும் குறுக்கிட்டு அரசு எப்படி ஆணையிட்டுத் தடுக்க முடியும்? அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம் இது!

இந்துக் கோயில்கள் எந்த நாளில், எந்தப் பண்டிகையை எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதையெல்லாம் இனிமேல் இந்த இந்து விரோத அரசே தான் முடிவு செய்யுமா? அதற்கான வெள்ளோட்டம் தான் இதுவா?

இன்னும் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்? எல்லா கோயில்களிலும் டிசம்பர் மாதம் கழுதை வாகனத்தில் ஏசு பவனி நடத்த வேண்டும், அன்று கூடவே பெரியார் என்ற பரிவார தேவதைக்கு வெங்காய அலங்காரம் செய்யவேண்டும் (அது குளிக்காது, அபிஷேகம் செய்தால் தொலைந்தார் அர்ச்சகர்!).

ஸ்டாலின் பட்டாபிஷேக உற்சவம், அழகிரி பாரி வேட்டை, கனிமொழி திருஅவதார தினம் இந்த எல்லா விழாக்களும் தான் தமிழர் தொன்மைத் திருநாள்கள். அவற்றை எல்லா கோயில்களும் கொண்டாட வேண்டும் என்றும் அரசாணை வரலாம்!

இனிமேல் தமிழ்நாட்டில் யாரும் மாவிலை கட்டக் கூடாது -சுப நிகழ்ச்சிகளில் எல்லாம் பனை ஓலை தான் கட்ட வேண்டும்.. ஏனென்றால் திராவிட நாடான இஸ்ரவேலுக்கு ஓசன்னா பாடிக் கொண்டு இயேசுவின் கூட்டம் நுழைந்த போது அந்த இலையைத் தான் ஆட்டிக் கொண்டு போனார்கள் என்பது பற்றி பத்துப் பாட்டிலும், எட்டுத் தொகையிலும் பலப் பல ஆதாரங்கள் உள்ளன என்று தமிழறிஞர்கள் ஆய்ந்து முடிவெடுத்துள்ளனர்.

மேலும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி முக்கனிகளில் பேரீச்சம்பழமும், ஆதாம் கடித்த ஆப்பிளும் சேர்க்கப் படுகின்றன. ஆரியக் கனிகளான மாம்பழத்தையும், பலாப் பழத்தையும் நீக்க தமிழக அரசு விரைவில் அரசாணை கொண்டுவரப் போகின்றது!

அடப் பாவிகளா! ஒரு மாநிலம் முழுவதும் இவ்வளவு பெரிய ஆட்டுமந்தைக் கூட்டமாகவா இருக்கிறது? தமிழ்ப் புத்தாண்டு என்று பேசும், எழுதும் அத்தனை பேரையும் அரசால் கைது செய்து விட முடியுமா? தண்டனை தான் வழங்க முடியுமா? என்ன செய்ய முடியும்? ஒரு அரசியல்வாதி, ஊடக நிறுவனம் கூடவா இதை எண்ணிப் பார்க்கவில்லை? வெட்கம் ! வெட்கம்!

ஆனால், ஆரவாரமில்லாமல் ஏராளமான தமிழர்கள் தங்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் புத்தாண்டைக் கொண்டாடியிருக்கின்றனர். பா.ஜ.க மற்றும் இந்து இயக்கங்கள் இன்று தமிழ்ப் பண்பாட்டுக் கலாசாரக் கொலையை எதிர்த்து சிறு குரல் கொடுத்திருக்கின்றன. வேப்பம் பூப் பச்சடியில் வந்து விழும் மாம்பழத் துண்டுகள் போல, ஆறுதல் அளிக்கும் சமாசாரம்.

அடுத்து வரும் அரசு, அது எந்த அரசானாலும் சரி, இந்தக் கேடுகெட்ட சட்டசபைத் தீர்மானத்தை ரத்து செய்யவேண்டும், அடுத்த தமிழ்ப் புத்தாண்டிலாவது தங்கள் உண்மைக் கலாசாரத்தின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளும் உணர்வுள்ளதாக தமிழர் கூட்டம் மாற வேண்டும் என்று இந்த நன்னாளில் அனைத்தையும் தரிப்பவளான சர்வதாரி, அன்னை பராசக்தியிடம் வேண்டிக் கொள்கிறேன். நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்.