Thursday, July 26, 2007

மும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்

1993-ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தி என்னால் மறக்க முடியாத ஒன்று. அப்போது நான் புனே நகரில் பணிபுரிந்து வந்தேன். விநாயக சதுர்த்தியை 10 நாட்கள் சமூக விழாவாக மிக விமரிசையாகக் கொண்டாடும் கலாசாரம் தோன்றிய இடம் புனே. அதனால் நகரின் பல இடங்களில் விழாப் பந்தல்களில் அழகிய கணபதி அலங்காரங்களோடு, அந்தந்த வருடத்தின் முக்கியமான சமூக நிகழ்வுகளைப் பிரதிபலிப்பது போன்று சிறிய, பெரிய கண்காட்சிகள் மாதிரியும் அமைத்திருப்பார்கள். அந்த வருடம் எல்லாப் பந்தல்களிலும் ஒரே ‘தீம்’ தான் : மும்பை குண்டுவெடிப்புகள், அதற்கான சதித்திட்டம், அதில் ஏற்பட்ட மரணங்கள், மனித சோகங்கள். இவற்றை கோட்டோவியங்களாகவும், பொம்மைகளாகவும், வாசகங்களிலும் வெளிப்படுத்தியிருந்தார்கள். மரணமடைந்தவர்களின் ஆத்மாக்களுக்கு அமைதியும், இந்த பெரும் கொடுமையைச் செய்த தாவூத் இப்ராகீம், டைகர் மேமன் மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு கடும் தண்டனையும் விநாயகர் வழங்குவார் என்பதாகவும் சில காட்சிகள் இருந்தன.

அந்த வருடம் மார்ச் மாதம் ஒரே நாளில் 12 இடங்களில் நடத்தப் பட்ட இந்த குண்டுவெடிப்புகள் 257 அப்பாவி மக்களின் உயிர்களைப் பலிகொண்டு, இன்னும் 800 பேரைக் காயப் படுத்தி அவர்கள் வாழ்க்கையை நாசம் செய்ததோடல்லாமல், நாட்டின் பொருளாதாரத் தலைநகரையே ஸ்தம்பித்து செயலிழக்கச் செய்தன.

14 ஆண்டு கால நீதிமன்ற வாசத்திற்குப் பின் இந்த வழக்கில் தீர்ப்புகள் இப்போது வரத் தொடங்கியிருக்கின்றன. மாஹிம் மீனவர் குப்பம் பகுதியில் கையெறி குண்டுகளை வீசி எறிந்து 3 பேர் இறப்பதற்குக் காரணமான 4 தீவிரவாத அடியாட்கள் உள்ளிட்ட 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. இவர்களில் ஒருவரான முகமது யூசுஃப் ஷேக் மத்திய மும்பையில் ஒரு ஸ்கூட்டர் நிறைய 15 கிலோ வெடிகுண்டுகளை நிரப்பி நிறுத்தியிருந்தார் – தெய்வாதீனமாக அவை வெடிக்கவில்லை. இருப்பினும், இந்த சமூக விரோத சதித்திட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததற்காக அவருக்கு அளிக்கப் பட்ட தண்டனை நியாயமானது தான் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கோடே குறிப்பிட்டுள்ளார்.

ஆயுள் தண்டனை வழங்கப் பட்டிருக்கும் 16 குற்றவாளிகளில் ஒருவரான சுங்கவரித்துறை அதிகாரி சோம்நாத் தாபா, ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் கடற்கரை வழியாக மும்பை நகரத்துக்குள் கடத்திக் கொண்டு வரப் பட்டதற்கு உடந்தையாக இருந்ததற்காக மரணை தண்டனை வழங்கப் படவேண்டியவர் எனினும் அவர் புற்றுநோயால் அவதிப் படுவதன் காரணமாக இது ஆயுள் தண்டனையாக்கப் பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானுக்குச் சென்று அங்குள்ள ஜிகாதி தீவிரவாத முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்ற, இந்தச் சதியின் முக்கிய குற்றவாளியான டைகர் மேமன் தப்பிக்க உதவிசெய்த ஜாகீர் ஹுசைன் ஷேக் உள்ளிட்ட 3 பேருக்கும் மரணதண்டனை வழங்கப் பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆஜர் படுத்தப் பட்ட 100 பேரில் இதுவரை 91 பேருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு தரப்பட்டு விட்டது. மீதமிருக்கும் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கும் இதே போன்ற கடும் தண்டனைகள் தரப்படும் என்று எதிர்பார்க்கலாம். சில குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் 1992 டிசம்பரில் நிகழ்ந்த சர்ச்சைக்குரிய பாபர் மசூதி கட்டிட இடிப்புக்கு பழி வாங்குவதற்காகவே இந்தக் குற்றவாளிகள் குண்டுவெடிப்பு சதியில் ஈடுபட்டதாகவும், அதனால் அவர்கள் தரப்பில் இந்தப் படுகொலைகளுக்கான நியாயம் இருப்பதாகவும் வாதிட்டனர். இத்தகைய வாதங்களை போதிய ஆதாரமில்லாதவை என்று கூறி நீதிபதிகள் முற்றிலுமாக நிராகரித்தனர்.

தண்டனை பெற்றவர்கள் இந்த வழக்கை உச்சநீதி மன்றம் வரை எடுத்துச் சென்று வாதிடும் சாத்தியம் உள்ளது. இருப்பினும், சாட்சிகளும், நிரூபணங்களும் மிக வலுவாக உள்ளதால் உச்சநீதி மன்றம் மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்பையே வழிமொழியும்.

இந்த வழக்கு நடந்து வந்த காலங்களில், மும்பை பொதுமக்களும் சரி, ஊடகங்களும் சரி, இந்தச் சம்பவத்தையும், பாதிக்கப் பட்டவர்களின் சோகங்களையும் மறக்கவில்லை. அவை தொடர்ச்சியாக நினைவூட்டப் பட்டுக் கொண்டே இருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக அனுராக் கஷ்யப் இயக்கிய கறுப்பு வெள்ளி (Black Friday) என்ற குறிப்பிடத்தக்க இந்தித் திரைப்படமும், சில குறும்படங்களும் கூட வெளிவந்தன. 2004, 2005 ஆம் வருடங்களில் ஏற்பட்ட சில சிறு குண்டுவெடிப்புகளும், 2006 ஜூலை மாதம் 200-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்ட ரயில் குண்டுவெடிப்பும், இந்த தீவிரவாதத்தின் கோர முகத்தினை மீண்டும் மும்பை மக்களுக்கு வெளிப்படுத்தின.

இதன் தொடர்ச்சியாக, 1993 குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருந்த 18 முக்கிய குற்றவாளிகளுக்காக வாதாடி வந்த இந்தியாவின் தலைசிறந்த கிரிமினல் வழக்கறிஞர்களில் ஒருவரான நிதீன் பிரதான் அவர்களுக்காக தான் வாதாடப் போவதில்லை என்று ஜூலை 2006ல் வெளிப்படையாக அறிவித்தார். ரிடீஃப்..காம் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் முதலில் மும்பையைச் சேர்ந்த முஸ்லீம் சமூகத் தலைவர்கள் தங்கள் சமூகம் அனியாயமாகக் குற்றம் சாட்டப் படுவதாகக் கூறியதைக் கேட்டு அதில் நியாயம் இருப்பது போலத் தோன்றியதால் அவர்கள் சார்பாக வழக்காட ஒப்புக் கொண்டதாகவும், பின்னர் அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்க முயல்வது தெரியவந்ததும் அதிலிருந்து விலகுவதாகும் கூறினார்.

11 ஜூலை,2006 குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மும்பை பொதுமக்கள் பெருமளவில் திரண்டு அண்மையில் 11 ஜூலை, 2007 அன்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பெரும்பாலான ஆங்கில, இந்தி ஊடகங்கள் இந்த குண்டுவெடிப்பால் சிதறிய கனவுகளையும், தொலைக்கப் பட்ட வாழ்க்கைகளையும் மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தன. இந்த கண்ணீர் அஞ்சலிகளுடன் இதற்காக குற்றம் சாட்டப்பட்ட ஜிகாதி தீவிரவாதிகள் “இந்த கொடுஞ்செயல் செய்ததில் தங்களுக்கு எந்தவிதமான குற்ற உணர்வோ, வருத்தமோ இல்லை” என்று கடுத்த முகங்களுடன் அளித்த வாக்குமூலத்தையும் ஊடகங்கள் தவறாமல் மக்களிடம் கொண்டு சென்றன. இந்த வழக்கும் விரைவில் விசாரிக்கப் பட்டு, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைகள் வழங்கப் படலாம் என்று எண்ணுவதற்கு முகாந்திரம் இருக்கிறது.

இந்தப் பின்னணியில், 1998 கோவை குண்டுவெடிப்பு வழக்குக்கான தீர்ப்புகள் ஆகஸ்டு முதல் தேதி அன்று அறிவிக்கப் படும் என்று செய்திகள் வந்துள்ளன. இது பற்றி விவாதிக்க ஜூலை-27 அன்று ஒரு கூட்டம் நடைபெறும் என்று குற்றம் சாட்டப் பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் சி.அபுபக்கர் கூறியிருக்கிறார்.

1998-ஆம் ஆண்டு, பிப்ரவரி 14-ஆம் நாள் பா.ஜ.க. தலைவர் அத்வானியின் உயிரைப் பறிப்பதற்காகவும், பொதுமக்கள் கூடும் இடங்களில் அவர்களைக் கொலை செய்வதற்காகவும் திட்டமிட்டு நகரின் பல பகுதிகவைக்கப் பட்ட இந்த குண்டுகள் வெடித்ததில் 52 பேர் மரணமடைந்தனர், 200க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 100 கோடிக்கு மேல் சொத்து நாசமடைந்தது. இந்த சதி தொடர்பாகக் கைது செய்யப் பட்ட 166 பேர்களில் பெரும்பாலர் அல்-உம்மா என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள். இந்த சதியின் முக்கிய காரணகர்த்தர்களாக குற்றம் சாட்டப் பட்டு 8 ஆண்டுகளாக்ச் சிறையில் இருப்பவர்களில் கேரளத்தைச் சேர்ந்த அப்துல் நசீர் மதானி மற்றும் தமிழகத்தின் எஸ். ஏ பாட்சா, முகமது அன்சாரி ஆகிய தலைவர்களும் அடக்கம்.

தொழில் நகரமான கோவையின் அமைதிக்குப் பெரும் குந்தகம் விளைவித்த இந்த சம்பவம் நிகழ்ந்தவுடன், அதுவரை இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் முளைப்பதைக் கண்டும், காணாமலும் இருந்த தமிழக அரசும், காவல் துறையும் உடனடியாக செயலில் இறங்கி இந்த இயக்கங்களின் எல்லாத் தொடர்புகளையும் ஆணிவேர் வரை சென்று தீவிரமாக ஆராய்ந்து புலன்விசாரணை செய்து, குற்றவாளிகளைப் பிடித்து, இந்த இயக்கங்கள் செய்திருந்திருக்கக் கூடிய வேறு பல குண்டுவெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாதத் திட்டங்களையும் செயலிழக்கச் செய்தது மிகவும் பாராட்டுக்குரியது. அஸ்ஸாம், மும்பை, தில்லி என்று பல நகரங்களிலும் வலைவீசி குற்றவாளிகள் கைதுசெய்யப் பட்டிருக்கின்றனர். சமீபகால வரலாற்றில், இது போன்று மிகத் துல்லியமாக ஒரு சந்தேக இழையையும் விட்டுவைக்காமல் ஒரு பயங்கரவாதச் சதியில் ஈடுபட்ட அத்தனை பேரையும் கண்டுபிடித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியற்கான உதாரணங்கள் மிகச் சிலவே உண்டு.

ஆனால், இப்படி ஆரம்பித்த இந்த விசாரணை, கால ஓட்டத்தில் மிக மோசமான அரசியல் நிர்ப்பந்தங்களை சந்தித்தது. வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மாற்றல்கள், அவர்களது சில சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் இவை இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின. ஒருவழியாக இந்த ஏப்ரல் மாதம் விசாரணைகள் முடிந்து, இப்போது தீர்ப்ப்புகள் வரப்போகின்றன.

திரும்பிப் பார்க்கையில், கோவை மற்றும் தமிழக மக்கள் மற்றும் ஊடகங்கள் இந்த பயங்கரவாதச் செயலையும், அதன் பின்னணியையும், பற்றி ஒரேயடியாக மற்ந்து விட்டார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது. சிறையில் இருக்கும் தீவிரவாத குற்றவாளிகளுக்கு ராஜோபசாரம் நடப்பது பற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.. மதானிக்கு சிறையில் ஆயுர்வேத மசாஜ், ஸ்பெஷல் கோழிக்கறி இவை வழங்கப் படுவது பற்றிய செய்திகள் வந்தன. கேரள சட்டசபை உறுப்பினர்கள் மதானி என்கிற இந்த குற்றவாளியை தமிழக சிறைகளில் “துன்புறுத்துவதாகவும்” அவரை விடுவிக்கவேண்டும் என்றெல்லாம் கூட கோரிக்கை வைத்தனர். இவ்வளவு சீரியஸான விஷயத்தை எதிர்த்து ஒரு கண்டனம், ஒரு அரசியல் பொதுக் கூட்டம் இங்கு நடத்தப் படவில்லை. மாறாக, சிறைகளில் “துன்புறும்” தீவிரவாதிகளது “மனித உரிமை”களுக்கு வக்காலத்து வாங்கி பொதுக்கூட்டங்கள் நடத்தப் பட்டன. சில முற்போக்குவாதிகள் அவைகளில் சென்று இந்த மனித மிருகங்களுக்கு தங்கள் பரிவையும், கனிவையும் தெரிவித்தனர்.

சட்டத்திற்கு அடங்கி நடக்கும் கோடிக் கணக்கான சாதாரண குடிமக்களின் பாதுகாப்பையும், நலவாழ்வையும் விட தீவிரவாதிகளுக்கு தரப் படும் வசதிகளும், உரிமைகளும் தான் முக்கியமானவையாக அரசும், அறிவுஜீவிகள் சிலரும் கருதும் ஒரு சமூகத்தில் இருக்கிறோம் என்ற உணர்வே பெரும் அச்சமூட்டுவதாக உள்ளது.

இந்த சூழலில் வரப் போகும் கோவை தீர்ப்புகள் மும்பை தீர்ப்புகளை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்று இயற்கையாகவே ஒரு எதிர்பார்ப்பு உருவாகிறது. கோவையைக் கோரமாக்கிய கொடியவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை நீதிமன்றங்கள் வழங்கி, மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

இதில் இன்னொரு சோகம் என்னவென்றால் கோவை குண்டுவெடிப்பில் பாதிக்கப் பட்ட அப்பாவி மக்களின் இழப்புகள், துயரங்கள், வேதனைகள் பற்றிய நினைவுகளோ, பதிவுகளோ தமிழக ஊடகங்களில் பெரிய அளவில் எடுத்துச் சொல்லப் பட்டதாகதவே தெரியவில்லை. சமீபத்தில், “ஜிகாதி வெறிக்கு பலியான தமிழர்” என்ற இந்த வலைப் பதிவில் சுட்டியிருந்த வீடியோ சுட்டிகளைப் பார்க்க நேர்ந்தது.

பக்கத்தில் உள்ள மைதானத்தில் விளையாடச் சென்று, உடல் சிதறி இழந்த மகனைப் பற்றி மீளமுடியாத துயரத்துடன் நினைவு கூறும் தாய். திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற இடத்தில் குண்டு வெடித்ததால் அருமை அண்ணனை இழந்த சகோதரி. மகனையும், அவன் இறந்த சோகத்தால் மறைந்த கணவனையும் பறிகொடுத்து நிற்கும் அபலைப் பெண். இவர்களது வேதனையைப் பார்க்கையில் நெஞ்சு பதறுகிறது. இந்தக் கதி செய்தவர்களை சும்மா விடக் கூடாது, அவர்கள் உடல் சிதறி சாக வேண்டும் என்று ஆற்றாமையில் சாபமிடுகிறார்கள் இந்த அல்லலுற்றவர்கள்.

அந்த கண்ணீருக்குப் பதில் சொல்லும் பொறுப்பு வரப் போகும் நீதி மன்றத் தீர்ப்புகளுக்கு இருக்கிறது.

Wednesday, July 25, 2007

இந்தியப் பெண்மைக்குப் பெருமையும், சிறுமையும் இன்று ஒரே நாளில்..?

இந்திய நாட்டின் கோடானுகோடி"சாதாரண" பெண்களை மறந்து விடுங்கள். அவர்களைப் பற்றியெல்லாம் யார் பேசுவார்கள்? நாம் பேசிக் கொண்டிருப்பது தங்கள் தலைமயிரை 'பாப்' கட் செய்து கொண்ட புதுமைப் பெண்களைப் பற்றி ( ஒரு இந்தி சேனலில் எந்த மாதிரி பெண்கள் இந்தியப் பாராளுமன்றத்திற்குப் போகிறார்கள் என்ற விவாதத்தில் ஒரு நாரீமணி உதிர்த்த பதம் இது - 'baal katiwali mahila')

பிரதீபா பாட்டீல் இன்று பாரத நாட்டின் முதல் "மேடம் பிரசிடென்ட்" ஆகி விட்டதைக் குறித்து செய்தி ஊடகங்கள் அல்லோல கல்லோலப் படுத்திக் கொண்டிருக்கின்றன - இந்தியப் பெண்மை பெருமிதம் அடைந்து விட்டதாக... தன்மீது சுமத்தப்பட்ட ஊழல், கொலை மற்றும் சட்டவிரோத குற்றச்சாட்டுகளுக்கு இன்று வரை நேர்மையான பதில் அளிக்க முடியாத, தன் முக்காடிட்ட முகத்தை எப்போதும் முக்கால்வாசி மட்டுமே அறியத் தரும் ஒரு அரசியல் அடிமைப் பெண் இந்த உயர்பதவிக்கு வந்திருப்பது 'பாப் கட்' பெண் முதல் பர்தா போடும் பெண் வரை எல்லாரையுமே பெருமைப் படுத்தி விட்டது தான் ! நம்புவோம்.

சிறுமை என்று சொல்ல வந்தது வேறு விஷயம். உறுதிக்கும், செயல்திறமைக்கும், நேர்மைக்கும் உதாரண புருஷி என்று சொல்லத் தக்க ஒரு பெண். ஏற்கனவே பல கடினமான, சவாலான பொறுப்புக்களை வகித்து அவை ஒவ்வொன்றிற்கும் பெருமை சேர்த்த ஒரு பெண். அதே துறையில் முறைப்படி அவருக்கு வந்திருக்க வேண்டிய ஒரு உயர் பதவி மறுக்கப் பட்டிருக்கிறது இன்று. தில்லி காவல்துறை ஆணையர் ஆவதற்கு முழுத் தகுதி படைத்த கிரண் பேடி ஓரங்கட்டப் பட்டு ஒய்.எஸ். தாலிவால் தேர்வு செய்யப் பட்டுள்ளார். இந்த அநியாயத்தை எதிர்த்து வெளிப்படையாகவே வெகுண்டு எழுந்துள்ளார் கிரண் பேடி.

காரணம் என்ன தெரியுமா?

யாரைப் பெருமைப் படுத்த வேண்டும், யாரைச் சிறுமைப் படுத்த வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை இருக்கிறதே, அது மட்டும் எந்த இந்தியப் பெண்ணிடமும் இல்லை, ஜன்பத் 10ஆவது எண் வீட்டில் வசிக்கும் ஒரு இத்தாலியப் பெண்ணிடம் தான் அது உள்ளது.

அவருக்குப் பிடிக்காதவர்கள், அவரை முறைத்துக் கொண்டவர்கள் கனவுகாணும் விஞ்ஞானியாகட்டும், காக்கிச் சட்டை கண்ணியர்களாகட்டும் - கடாசப் படுவார்கள்.

அவரது பெண் அடிமைகள் ஜனாதிபதி ஆவார்கள், ஆண் அடிமைகள் பிரதமர்களாகவும், அமைச்சர்களாவும் சேவகம் புரிவார்கள் ! உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இருக்கும் ஒரே இந்தியநாட்டு வாசி இந்தப் பெட்டை தான் என்றால் சும்மாவா? (டென்ஷன் ஆகிடாதீங்க, இவ்வளவு பெரிய அடிமைகளை அடக்கி ஆள்பவர் எவ்வளவு பெரிய "ஆண்டை" யாக இருக்கணும்! அதைத் தான் பெண்பாலில் எழுதியிருக்கிறேன்).

ஆக மொத்தத்தில் பெண்மை பெரிய பெருமை பெற்றுவிட்டது என்று தோள் தட்டி, மண்டையில் அடித்துக் கொள்வோம்!

பயங்கரவாதிகள் மீது காட்டும் பரிவால் நிகழவிருக்கும் பின்விளைவுகள்

தீவிரவாதச் செயல்களுக்கு துணணபோனதற்காக குற்றம் சாட்டப்பட்டு ஆஸ்திரேலியாவில் விசாரிக்கப் பட்டு வரும் இந்திய டாக்டருக்காக இந்திய அரசு காண்பித்து வரும் அதீத கனிவும், பரிவும் தேசபக்தர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துவது நியாயமே.

இதன் பின்னணியில் முதுபெரும் எழுத்தாளர் திரு. மலர்மன்னன் அவர்கள் ஜூலை-12, 2007 திண்ணை இதழில்
ஹிந்துஸ்தானத்தின் மீது பயங்கரவாத முத்திரை விழப் போகிறது! என்ற ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையில் கடைசியில் அவர் எடுத்துவைக்கும் வாதம் மிகவும் சிந்தனைக்குரியது -

".. ஹிந்துஸ்தானத்துப் பிரதமரோ, போதிய ஆதாரங்கள் சிக்கியதன் அடிப்படையில் விசாரணைக் கைதிகளாக லண்டனில் வைக்கப்பட்டிருக்கும் ஹிந்துஸ்தானத்து முகமதிய இளைஞர்களின் தாய்மார்கள் அளிக்கும் கண்ணீர்ப் பேட்டிகளைப் பார்த்துத் தாமும் கண்ணீர் மல்க இரவெல்லாம் உறக்கமின்றி உழன்றதாகச் சொல்கிறார். அந்தத் தாய்மார்களுக்கு ஆறுதலும் தைரியமும் அளிக்கிறார். ஹிந்துஸ்தானத்து தூதரகங்கள் அந்த விசாரணைக் கைதிகளின் நலனைக் கவனித்துக் கொள்ளும் என உறுதி கூறுகிறார். இங்கிலாந்தின் பிரதமரிடம் பேசுகிறார். தப்பித் தவறிக்கூட மதத்தின் சாயத்தை இதில் பூசிவிடாதீர்கள் என்கிறார்.

... முஷரப் ஆப்கானிஸ்தானத்துடனான எல்லைக் கோடு நெடுகிலும் கண் காணிப்புக்கும் ஏற்பாடு செய்து, தாலிபான்களின் ஊடுருவலைத் தடுக்க முனைந்துவிட்டார். ஆக, பயங்கர வாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் உறுதியாகவும், ஒரு முகமதிய தேசமாக இருப்பினும் நிர்தாட்சண்யமாகவும், திறமையாகவும் செயல்படுவதாக உலக அரங்கில் நம்பிக்கை பிறக்கிறது. அதே சமயம், ஹிந்துஸ்தானம் முகமதிய பயங்கரவாதிகளிடம் காட்டும் மெத்தனத்தையும் மீறிய பரிவின் காரணமாக, பயங்கர வாத ஆதரவு நாடாகக் கருதும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

உலக நாடுகளுக்கு ஹிந்துஸ்தானத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உள்விவகாரங்கள் பற்றி சரியான புரிதல் ஏதும் இல்லை. புரிந்துகொள்ள வேண்டுமென்கிற அக்கரையும் அவற்றுக்கு இல்லை. எனவே அவற்றின் பார்வையில் பாகிஸ்தான் பயங்கர வாதத்தை ஒடுக்கும் நாடாகவும் ஹிந்துஸ்தானம் பயங்கர வாதிகள் மீது அனுதாபம் கொண்டு சலுகை அளிக்கும் நாடாகவும்தான் தோற்றமளிக்கும்"



இதைத் தொடர்ந்து வந்த பல கேள்விகளுக்கும் பதிலளிக்கும் முகமாக சி.பி.காம் தளத்தில் அவரது இன்னொரு கட்டுரையும் வந்துள்ளது. இதில் திரு. ம.ம அவர்கள் எழுப்பும் கேள்விகளும், வைக்கும் வாதங்களும் இந்தியாவின் தற்போதைய தலையாய சமூக பாதுகாப்பு பிரசினையான ஜிகாதி தீவிரவாத்தை நேர்கொள்வதில் அரசு காட்டி வரும் மெத்தனப் போக்கை தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்துரைப்பதாக உள்ளன. சில துளிகள் -

.. அரசியலுக்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத விளையாட்டு வீரர்களை அராபத்தின் பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் கொன்று குவித்த பிறகும் நமது மைய ஆட்சியாளர்கள் அராபத்தை மார்புறத் தழுவி அவரது பயங்கரவாத இயக்கத்தை ஆதரிக்கத் தவறவில்லை. ஹிந்துஸ்தானம் இந்த மரபினைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது என்கிற செய்தியைத் தமது செயலால் உலக நாடுகளுக்குப் பிரகடனம் செய்து வருகிறார், இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்.

.. ஹிந்துஸ்தானத்தில் அண்மைக் காலத்தில் தோன்றி, உலகம் முழுவதும் சீடர்களைப் பெற்றிருந்த மிகச் சிறந்த சிந்தனையாளரும் தத்துவ ஞானியுமான ஆசாரிய ரஜனீஷ் என்கிற ஓஷோ அமெரிக்காவில் ஒரு குற்றவாளியாக அலைக்கழிக்கப்பட்டதும் நினைவிருக்கும். .. ஓஷோ அமெரிக்காவில் கைதான போது கூட அவர் அகில உலகிலும் மதிக்கப்படும் சிந்தனையாளர்; அவரைக் கௌரவமாக நடத்துங்கள் என்று நமது மைய அரசு சொன்னதாக எனக்கு நினைவில்லை. ஆனால் நமது இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் ஆஸ்திரேலிய அரசிடம் மிகவும் உறுதிபடச் சொல்கிறார்: பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாகக் கருதி நீங்கள் காவலில் வைத்திருக்கும் ஹமீது எங்கள் நாட்டுப் பிரஜை; அவரது உடலுக்கோ, உள்ளத்திற்கோ எவ்வித ஊறும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்பதாக.

.... முன்பெல்லாம் ஹிந்துஸ்தானத்திலிருந்து வருபவர்களை 'ஓ! புத்தர் பிறந்த தேசத்திலிருந்து வருகிறீர்களா?' என்று விமான நிலையத்திலேயே இன்முகத்துடன் வரவேற்பார்கள். சில சமயம் 'யோகா தேசமா' என்பார்கள். காந்தி திரைப்படம் வந்தபின் 'கேண்டி?' என்று வரவேற்பார்கள். இனி, 'ஓ! சொந்த நாட்டு பயங்கரவாதிகள் மீது பரிவு காட்டும் தேசத்திலிருந்து வருபவரா?' என்று மனத்திற்கு உள்ளாவது நினைத்துக்கொள்வார்கள். அதற்குத் தகுந்தவாறுதான் வரவேற்பும் இருக்கும்.

Wednesday, July 18, 2007

தீவிரவாத குற்றவாளிக்கு பரிந்து பேசும் இந்திய அரசு: வெட்கக்கேடு!

ஆஸ்திரேலியாவில் தீவிரவாத குற்றம் சாட்டப்பட்டு காவலில் இருக்கும் முகமது ஹனீஃபிற்காக இந்திய அரசும், ஊடகங்களும் போட்டி போட்டுக் கொண்டு அன்பைப் பொழிந்து கொண்டிருப்பதைக் கண்டு மனம் நொந்த ஜடாயு "டைம்ஸ் ஆஃப் இந்தியா" பத்திரிகைக்கு எழுதிய கடிதம் -

Dear Editor,

There are news reports that “Stepping up pressure on Australia over Mohammad Haneef issue, India on Tuesday summoned its ambassador in New Delhi to convey its concern and emphasize that the doctor from Bangalore be treated in a fair manner”. This, a day after Indian government made an extra ordinary request to Australia to treat Dr. Haneef fairly.

Has the Indian govt. ever cared to summon the ambassadors of Saudi Arabia and other Gulf countries, where many Indian citizens are the victims of extreme brutality and torture from their employers, apart from non-payment of wages? Has the Indian govt. ever expressed its concern for the Indian women victims who get sexually abused in these Gulf countries, often by the men who employ them?

Ah! What an exemplary and overt gesture of solidarity overflowing from Indian government officials and the prime minister himself for *one* Mohammed Haneef accused of criminal conspiracy in the UK terror plot! For a Haneef, merely detained for questioning in Australia, neither harassed or insulted, but treated in the best possible manner, certainly under conditions much better than Indian police lockups. Can the craving for a couple of Muslim votes bring a PM and his political bosses stoop to such abominable levels?

Today’s Times of India has dedicated one full page interview of Haneef’s wife with her emotional outbursts. Did this newspaper publish even a quarter page report of the travails of the family of Suryanarayana, the Engineer from Hyderabad who was brutally beheaded after torture by the Jihadi gangs of Afghanistan in April 2006, when he was posted in that country on Indian government service? Does anyone remember this newspaper publishing a one-page interview of a widow of a Kargil war hero?

What do the Indian govt. and the media want to convey to the citizens of India, Indian expatriates and the world at large?
That, they will turn a blind eye to the sufferings of innocent Indian expatriates, hardworking and law abiding in their countries of residence, but will empathize totally with the expatriates getting arrested for questionable and unlawful activities and Jihadi terrorism, bringing disgrace to the nation?
That Indian government welcomes and nurtures Jihadi terrorists and is deeply concerned about their fair treatment and well being?
That India is ready to be a sanctuary for the Jihadi murderers who will stage bomb blasts in India, killing Indian citizens to rehearse for bigger International operations?

Shame on such a government, Shame on such a media.

Jataayu,
Bangalore

Wednesday, July 11, 2007

உலக அளவில் இந்துக்கள் மீதான மனித உரிமை மீறல்கள்

ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை என்னும் தன்னார்வ நிறுவனம் மற்றும் மனித உரிமை அமைப்பு உலகில் 11 நாடுகளிலும், சில பிரதேசங்களிலும் இந்துக்களின் மீது தொடரும் வன்முறைகள் மற்றும் கொடுமைகள் பற்றிய விரிவான 200-பக்க அறிக்கையை அளித்துள்ளது.

இந்த அறிக்கையை அமெரிக்க சட்ட நிபுணர்கள் உட்பட பலரும் கவனத்துக்குரியதாகக் குறிப்பிட்டு, ஒரு மாபெரும் மானுட சோகத்தைப் பதிவு செய்தமைக்காக இந்த அமைப்பைப் பாராட்டியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், ஃபிஜி, ஜம்மு & காஷ்மீர் (இந்தியா), கஜகஸ்தான், மலேசியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, இலங்கை, ட்ரினிடாட் & டொபாகோ ஆகிய பிரதேசங்களில் இந்துக்களின் மீது தொடர்ந்து வரும் மனித உரிமை மீறல்களைப் பற்றிய விவரணம் இந்த அறிக்கையில் உள்ளது.

"இந்து மக்கள், இந்து நிறுவனங்கள், இந்து வழிபாட்டுத் தலங்கள் இவற்றைக் குறிவைத்து நடத்தப் படும் தாக்குதல்கள் உலக ஊடகங்களால் பெரிய அளவில் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுவதில்லை. இந்நிலையில் இந்த ஆவணம் மிக முக்கியமானதாகிறது. உலகெங்கும் உள்ள இந்துக்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செய்ய வேண்டியது அதிகம் உள்ளது" என்று அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஷெரட் பிரவுன் தெரிவித்தார். ஃப்ராங்க் பாலோன், ஜோ க்ரோலி, பீட் ஸ்டார்க் முதலிய அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கருத்தை எதிரொலிக்கின்றனர்.

இந்த அறிக்கை உருவாக்கத்தில் பங்கு வகித்த ஈசானி சௌதரி என்னும் பெண்மணி " 1947 இந்திய தேசப் பிரிவினையின் போது கிழக்கு வங்கத்தில் (இன்றைய பங்களாதேஷ்) 30 சதவீதமாக இருந்த இந்து மக்கள் தொகை இப்போது வெறும் 9 சதவீதமாக ஆகியுள்ளது - . ஒவ்வொரு நாளும், பங்களாதேசில் இந்துக்கள் பெரும் சித்திரவதைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மிகப் பெரிய இன அழிப்பு பற்றிய உண்மைகள் இவ்வளவு தாமதமாகிவிட்டபோதாவது உலகின் கண்கள் முன்னால் கொண்டுவரப்பட்டிருக்கின்றன" என்று குறிப்பிட்டார்.

முழு அறிக்கையையும் இங்கே படிக்கலாம்.

இது பற்றிய ரிடீஃ.ப்.காம் செய்தி: US lawmakers laud Hindu foundation report

Monday, July 09, 2007

பதினாறு பேறுகள் பற்றிய அழகிய பாடல்..

"பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்று நம் மரபில் பெரியோர்கள் வாழ்த்தி வருகிறார்கள். இது பற்றிக் கூறும் பாடலைப் பற்றி தமிழ் அறிஞர் ஹரிகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டேன். அவர் தந்த அந்தப் பாடலும், விளக்கமும் இதோ -

.. அது அபிராமி அம்மை பதிகத்தின் முதல் பாடல். அபிராமி அம்மை பதிகத்தின் பதினோரு பாடல்களும் இங்கே கிடைக்கின்றன:

http://www.tamil.net/projectmadurai/pub/pm0026/abipatsc.html

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்

கவடுவா ராத நட்பும்
.....கன்றாத வளமையும் குன்றாத இளமையும்

கழுபிணிஇ லாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்

தவறாதசந் தானமும்
.....தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள்வா ராதகொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு

துன்பமில் லாத வாழ்வும்
.....துய்யநின் பாதத்தில் அன்பும்உதவிப் பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே

ஆதிகட வூரின் வாழ்வே
....அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி

அருள்வாமி அபிராமியே!

வாய்விட்டுப் படித்தால் கண்ணில் நீர் அரும்பும்.

பொருள் தேவைப்படுமோ? சொல்லிவிடுகிறேன். கல்வி, நீண்ட ஆயுள், கபடில்லாத நட்பு, நிறைந்த செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், சலிப்பு வராத மனம், அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான அருகதை, எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்), செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், துன்பமில்லாத வாழ்வு, உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை என்றும் பிரியாத கூட்டு. இவற்றை அருள வேண்டும்.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.







எனக்கு ஏற்கனவே பரிச்சயமான பாடல் தான் இது.. ஆனால் 16 செல்வங்கள் என்பவை இவை தான் என்று அறிந்திருக்கவில்லை. ஹரியின் விளக்கத்திற்குப் பிறகு இன்னொரு முறை படித்துப் பார்க்கும்போது இந்த பாடலில் அற்புதமான சொல்லாட்சியும், மேலும் சில நயங்களும் அனுபவிக்கக் கிடைக்கின்றன..

"கபடு வாராத நட்பும்" என்பதை என் நண்பர்கள் மீது நான் கொள்ளும் நட்பில் கபடு வராமல் இருக்கவேண்டும் என்று விழைவதாகவும் கொள்ளலாம். "அன்பகலாத மனைவியும்" என்கையில் என்மீது அவள் அன்பும், அவள் மீது என் அன்பும் இரண்டும் அகலாதிருக்கட்டும் என்ற பொருள் தொக்கி நிற்கிறது.

"தவறாத சந்தானமும்" என்பதை "என் சொல் பேச்சுக்குத் தவறாத குழந்தைகள்" என்று அல்ல, தங்கள் ஒழுக்கத்திலும், நன்னடத்தையிலும் தவறாத குழந்தைகள் என்றே நான் கொள்கிறேன். "தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்" என்னும் வள்ளுவர் மொழிக்கேற்ப இதற்கும் பொறுப்பாளி நான் தான் என்பதை நினைவூட்டுகிறது இது.

சொல்லப் போனால் இந்த செல்வங்களுக்கெல்லாம் பிறப்பிடம் வெளியில் இல்லை, என்னிடத்திலேயே உள்ளது. அதை நான் அகத்தில் உணர்ந்து நடந்தால் அதன் பிரதிபலிப்பாக இந்த செல்வங்கள் நம்மைத் தேடி வந்து அடைகின்றன. அதை உணரும் தன்மையை வேண்டி அபிராமி அன்னையிடம் கசிந்துருகி வேண்டுகிறது இந்த அழகிய பாடல்.

Sunday, July 01, 2007

ஒரு மத அழிப்பு மற்றும் மக்கள் அழிப்பின் கதை

பங்களாதேஷில் இந்துக்களுக்கு தொடர்ந்து இழைக்கப் பட்டு வரும் மனிதத் தன்மையற்ற வன்கொடுமைகள் பற்றி தமிழில் மிகக் குறைவாகவே எழுதப் பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.. இந்த வார திண்ணையில் அருணகிரி எழுதிய கட்டுரை உலக அளவில் மனித உரிமை ஆர்வலர்களால் கூட இந்தப் பிரசினை கண்டுகொள்ளப் படாததன் சோகத்தை விவரிக்கிறது..

அதை இங்கே மீள்பதிவு செய்கிறேன் -


ஒரு மத அழிப்பின் கதை

- அருணகிரி

சில நாட்களுக்கு முன் பள்ளி விழா ஒன்றில் அழகான வங்காள நடனம் ஆடிய ஒரு குழந்தையின் தந்தையான ஒரு பங்களாதேஷி இந்துவுடன் பேசிக்கொண்டிருந்தேன். உலகமே அமைதியாய்ப் பார்த்துக்கொண்டிருக்க, ஐ-நா. அமைதி காக்க திட்டமிட்டு பங்களாதேஷி இந்துக்கள் எப்படி படிப்படியாக அழிக்கப்பட்டார்கள், படுகிறார்கள் என்பதை ஒரு மெலிதான விரக்தி புன்னகையுடன் அமைதியாக ஒரு மணி நேரம் நிதானமாக விளக்கினார். கல்விக்கூடங்களில் discrimination, அரசாங்கத்தில் வேலையை எண்ணிப்பார்க்கக்கூட இயலாத நிலை, வியாபாரம் நடத்தமுடியாமல் terrorize செய்யப்படுவது, நிலங்கள் பறிக்கப்படுவது, இந்தியாவில் மதக்கலவரம் வந்தால், சதாம் உசேன் செத்தால் என்று எல்லாக்காரணங்களை வைத்தும் அடிக்கப்பட்டும், கொல்லப்பட்டும், கற்பழிக்கப்பட்டும் கொடிய மனித இன அழிப்பு தொடர்ந்து நிகழ்ந்த வேளையில் எப்படி மனித நேய அமைப்புகள் என்று சொல்லிக்கொள்ளும் அமைப்புகளும், என்.ஜி.ஓ.க்களும், இந்திய அரசும், ஐ.நா. சபையும் அமைதியாக அதனைப்பார்த்துக்கொண்டு இருந்தன என்பதை உணர்ச்சி வசப்படாமல் விவரித்தார். பிரிவினையில் தொடங்கி, 1971 போரில் பாகிஸ்தானாலும் வங்க ரசாக்கர்களாலும் கொன்று குவிக்கப்பட்டு, பின்னர் இன்று வரை, 30 வருடங்களில் பாதிக்கும் மேற்பட்ட இந்துக்கள் பங்களாதேஷிலிருந்து அழிக்கப்பட்டு விட்ட நிலையை விளக்கினார். கிறித்துவ, புத்த மைனாரிட்டிகள் மக்கள் தொகை அதே நிலையில் இருக்க இந்துக்கள் சதவீதமோ 1990- தொடங்கி பத்து வருடங்களில் 50% குறைந்து விட்டது என்றார். ஒரு பாப்ரி மஸ்ஜித் அழிப்பில் பொங்கி எழுந்த உலக என்.ஜி.ஓ.க்கள், அந்நிகழ்வைத் தொடர்ந்து சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்கான இந்துக்கோவில்கள் தரைமட்டமாக்கப்படதை எதிர்த்து முணுமுணுப்பு கூட எழுப்பாத அவலத்தைக் குறிப்பிடும்போது மட்டும் அவர் குரல் சற்றே உயர்ந்தது.

அவரது கோபம் கிழக்கு வங்காள முஸ்லீம்களை விட மேற்கு வங்காள இந்துக்கள் மீதே அதிகம் இருந்தது. பங்களாதேஷிலிருந்து உயிர் தப்பி அகதிகளாய் ஓடி வந்த இந்துக்களை, உள்ளூர் முஸ்லீம்களைத் திருப்திப்படுத்த வேண்டி, மேற்கு வங்காள "கம்யூனிஸ்டு" இந்துக்கள், செலக்டிவாக அவமதித்தும், கேவலப்படுத்தியும் , வாழ்நிலை மறுத்தும் அட்டூழியம் செய்வதாக வெதும்பினார். இது பற்றி இந்திய வெகுஜனப்பத்திரிகைகள் கண்டுகொள்ளாமல் மவுனம் காப்பதை விமர்சித்தார். மேற்கு வங்காள கம்யூனிஸ்டு இந்துக்கள் போல இந்து விரோத கேவல கும்பலை இதுவரை தாம் பார்த்ததில்லை என்றார்.

எப்படி இடதுசாரி மற்றும் கிறித்துவ, முஸ்லீம் அமைப்புகளின் உதவியுடன் ஐநா சபையிலும் இந்து-ஆதரவு என்.ஜி.ஓ அமைப்புகள் கம்யூனல் அமைப்புகள் என்று சொல்லப்பட்டு விலக்கப்படுகின்றன என்பதை விவரித்தார். பல முஸ்லீம் மற்றும் கிறித்துவ அமைப்புகள் தததம் நாட்டு அரசின் உதவியுடனும் ஆசியுடனும் ஐநாவில் உதவித்தொகையுடன் உலாவர, இந்து என் ஜி ஓ அமைப்புகளை இந்திய அரசு கைகழுவியது மட்டுமன்றி, அவற்றை எதிர்த்த பிரச்சாரத்திற்கும் (காங்கிரஸ் காலத்தில்) உதவியதாகக் குற்றம் சாட்டினார். பிஜேபியும் சரி, காங்கிரஸும் சரி பங்களாதேஷ் இந்துக்களின் விஷயத்தில் முழுமுயற்சி எடுத்து உதவவில்லை என்று ஆதங்கப்பட்டார்.

கடைசியாகச்சொன்னது மனதில் முள்ளாகத் தைத்து விட்டது: இன்று பங்களாதேஷில் இருக்கும் இந்துக்கள் பரம ஏழைகள்; குரல் எழுப்ப முயன்றால் கொல்லப்படுவோம் என்ற நிலையிலிருக்கும் அவல ஜன்மங்கள். இவர்களுக்கான குரல் வெளியில் இருந்துதான் வர வேண்டும். இந்திய அரசு கைவிட்டு விட்ட நிலையிலும், தொடர்ந்து HRBCM போன்ற பல அமைப்புகள் மூலமும், வலை மூலமும், ஐநா என்ற கல்சுவரில் முட்டிக்கொண்டும், இந்திய அரசு இயந்திரங்களின் மூலமும் முயன்று வருவதாகச் சொன்னார். 'இதனால் எந்த பயனும் விளையுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது, ஆனாலும் எங்களால் செய்ய முடிவது இதுபோல குரல் எழுப்புவது ஒன்றுதான் என்பதனால், இதை ஒரு பூஜை போல தொடர்ந்து செய்து வருகிறோம் - தோற்கும் போரில்தான் ஈடுபட்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் இருந்தாலும்..." என்றார் மெல்லிய புன்னகை மாறாமல்.

பங்களாதேஷ் மத அழிப்பின் பின்புல உண்மைகள் சில:

- 1972-இல் விடுதலையடைந்த பங்களாதேஷ் புதிய நாட்டிற்கு அரசியலமைப்புச்சட்டத்தை மதச்சார்பற்றதாகவே இயற்றியது. ஆனால், 1977-இல் "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்ற இஸ்லாமிய வாசகம் அரசியலமைப்பின் முதல் வாசகமாக சேர்க்கப்பட்டது. இஸ்லாமியர் அல்லாதோர் அரசியலமைப்பின்படி ஜனாதிபதியாக முடியாது. இஸ்லாமிய மதவெறி நாடாக பங்களாதேஷ் உருப்பெறும் இந்த காலகட்டத்தில் முதன்மை ஆதரவு தெரிவித்த மூன்று நாடுகள்: சவுதி அரேபியா, லிபியா, சீனா ஆகியவை. 1988-இல் இஸ்லாம் பங்களாதேஷின் அரசு மதமாக வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டது.

- பங்களாதேஷ் கிழக்கு பாகிஸ்தானாக இருந்தபோது "எதிரிச் சொத்து" என்ற பெயரில் இந்துக்களின் நிலங்கள், வியாபார இடங்கள், பறிமுதல் செய்யப்பட்டன. இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருங்கே போரிட்டு பங்களாதேஷ் விடுதலையடைந்தபின் ஷேக் முஜிபுர் ரஹ்மான் இதனை மாற்றுவார் என எதிர்பார்க்கப்படது. அவரோ பழைய சட்டத்தை நீக்கி விட்டு ஆனால் அதே ஷரத்துகள் கொண்ட "அர்பிதா சம்பதி" சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்தார். இந்த சட்டத்தின் மூலம் இந்துக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன அல்லது அடிமாட்டு விலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இச்சட்டத்தின் மூலம் கிறித்துவர்களின் நிலங்களோ பவுத்தர்களின் நிலங்களோ இவ்வாறு பறிமுதல் செய்யப்படவில்லை. கடந்த முப்பது வருடங்களில் இவ்வாறு இந்துக்கள் இழந்த நிலத்தின் அளவு ஏறக்குறைய பத்து லட்சத்து நாற்பதாயிரம் ஏக்கர்கள். இன்றைய மதிப்பில் ஏறக்குறைய 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள்.

- பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறைகளில் இந்துக்கள் சேர்க்கப்படுவதில்லை.

- சிறுபான்மையினருக்கு எதிராக சிட்டகாங் பகுதிகளில் பங்களாதேஷ் முஸ்லீம்கள் நடத்தி வரும் பயங்கரவாதத்தில் ரத்தம் வழிய வழிய அடித்தே கொல்வது, வீடு புகுந்து குடும்பத்தினருக்கு எதிரேயே கற்பழிப்பது, கொலைகளை நிகழ்த்துவது ஆகியவை அடங்கும்.

- இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைகளை எதிர்த்து அரசோ, காவல் துறையோ நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த வன்கொடுமைகளில் கீழ்க்கண்டவை முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்றன: கொலை, கற்பழிப்பு, மிரட்டிப்பணம் பறித்தல், மிரட்டி ஆக்கிரமித்தல், சொத்துகளை சூறையாடுதல், கோவில்களைக் கொள்ளையடித்தல், விக்கிரகங்களை உடைத்தல், இந்து பண்டிகைகளை நடத்தவிடாமல் கலவரம் செய்தல் ஆகியவை.

- பல முற்போக்கு எண்ணம் கொண்ட பங்களாதேஷ் முஸ்லீம்களே இவற்றை எதிர்த்துப் பேசுகின்றனர் என்பது ஓர் ஆறுதலான விஷயம். ஆனால் இவர்களும் பெரும்பான்மை முஸ்லீம் அடிப்படைவாதிகளால் குறிவைக்கப்படுகிறார்கள். தஸ்லிமா நஸ்ரீன் உயிர் பயத்தில் வெளிநாட்டில் வாழ்கிறார்.

- 2001-இல் பங்களாதேஷ் தேசியக்கட்சி இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைப்பிடித்ததும் இந்துக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

- கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கைதான பல முஸ்லீம்கள் பங்களாதேஷில் பயிற்சி பெற்றதாகக் கூறினர்.

- பாரதப்பிரிவினையின்போது பங்களாதேஷ் மக்கள்தொகையில் இந்துக்கள் எண்ணிக்கை 29% சதவீதமாக இருந்தது; இது படிப்படியாகக்
குறைந்து இன்று 10% சதவீதத்தில் நிற்கிறது. ஒரு நாளைக்கு 500 பங்களாதேஷி மக்கள் அகதிகளாக பங்களாதேஷை விட்டு இந்தியாவுக்கு வருகின்றனர்.

- இந்துக்கள் பங்களாதேஷில் இஸ்லாமிய மதவெறி அரசால் உயிருக்கும், மானத்திற்கும், உடமைக்கும் உத்தரவாதமின்றி வாழும் நிலை உள்ளது. டார்ஃபோர், ருவாண்டா போன்ற ஒரு கொடுமையான அழிவுதான் இது; இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகவே ஒரு குழுவினர் அழித்தொழிக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது. ஆனாலும் டார்ஃபோருக்கும், ருவாண்டாவிற்கும் கிடைத்த வெளிச்சம் உலக அளவில் இன்னும் இப்பிரச்சனைக்குக் கிட்டவில்லை.

- முஸ்லீம் ஆதரவு இடதுசாரி என்.ஜி.ஓ.க்களும் சரி, அவர்களின் ஆதிக்கத்திலுள்ள ஐ.நா ஆசீர்வாதம் பெற்ற மனித உரிமைக் குழுக்களும் சரி, மற்ற மேற்கு நாடுகளும் இப்பிரச்சனைக்கு இன அழிப்பு அல்லது குழு அழிப்பு என்ற அளவில் உரிய அழுத்தம் தருவதில்லை. இதே கொடுமை கிறித்துவர்களின்மீதோ அல்லது முஸ்லீம்களின்மீதோ ஒரு நாட்டின் அதிகாரபூர்வ அரசு நடத்துமானால், மேற்சொன்ன அமைப்புகளும் அரசுகளும் 50 வருடங்களுக்கும் மேலாய் அதைப் பார்த்துக்கொண்டிருக்குமா என எண்ணிப்பார்க்கலாம். இந்துக்கள் அரசியல் ரீதியாக அணிதிரளாமல் இருந்தால், இப்படிப்பட்ட விலைபோன "நடுநிலைவாதிகளிடமிருந்தும்" ஆபிரஹாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தும் எப்படி தம் வாழ்வியல் உரிமையைக் காத்துக்கொள்ள இயலும்?

- பிற என்.ஜி.ஓக்கள் கைவிட்ட நிலையில், விரட்டப்பட்ட பங்களாதேஷிகள் "பங்களாதேஷ் சிறுபான்மையினருக்கான மனித உரிமைக்குழுமம் (HRCBM)" என்று தனியாக அமைத்துப் போராடி வருகிறார்கள். HRBCM வலைப்பக்கம் பங்களாதேஷ் இந்துக்களுக்கெதிரான கொடுமைகளை வெகுவாக முகத்திலறைந்தாற்போல் ஆவணப்படுத்தியுள்ளது-

முஸ்லீம்கள் சேர்ந்து இந்து ஒருவரை ரத்தம் வர வர அடித்தே கொல்லும் இந்தப் புகைப்படம் உட்பட.




http://www.hrcbm.org/(எச்சரிக்கை: இதில் உள்ள பல செய்திகளும் படங்களும் மனத்தை உலுக்குபவை):