Thursday, May 29, 2008

கர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன?

காங்கிரஸ் கட்சி மற்றும் போலி மதச்சார்பின்மை அரசியலின் தொடர் வீழ்ச்சியின் அடுத்த கட்டமாக, தென்னகத்தில் முதன்முறையாக தாமரையின் ஆட்சி முழுமையாக மலர்ந்திருக்கிறது. குழிபறிக்கும், ஏமாற்றும் கூட்டணிக் கட்சியாக வரலாற்றில் புகழ்பெற்றுவிட்ட தேவகவுடாவின் “மதச்சார்பற்ற ஜனதா தளம்” கட்சியை அனேகமாக மண்ணைக் கவ்வ வைத்ததோடு, அரசியல் ஸ்திரத்தன்மை, மாநில முன்னேற்றம், தேசிய அளிவிலான பிரசினைகள் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு வாக்களித்த கர்நாடக மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.

தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருந்த நேரம், ஊடகங்கள் மண்டையைக் குடைந்து கொண்டு பா.ஜ.க வெற்றிக்கான காரணங்களைத் தேடிக் கொண்டிருந்தன. எடியூரப்பாவை முதல்வராக முன்னிறுத்தியதன் மூலம் அப்பட்டமான லிங்காயத் ஜாதி அடையாளத்தைக் காட்டி பாஜக அரசியல் செய்தது என்று காங்கிரஸ் தலைவர்கள் புலம்பினார்கள். “இதற்காகத் தான் நாங்கள் முதல்வர் யார் என்றே அறிவிக்கவில்லை!” என்று கோஷ்டிப் பூசலுக்குப் பேர்போன கர்நாடக காங்கிரசின் தலைவர் ஒருவர் கூறியது கலகலப்பான காமெடி. “ஒருவர் தான் முதல்வராக இருக்க முடியும், அவர் ஏதாவது ஒரு ஜாதிக் காரராக இருந்துதானே ஆகவேண்டும்? என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?” என்ற நிருபரின் கேள்விக்கு அவர்கள் வழிந்த அசடைப் பார்க்க வேண்டுமே!

தேர்தல் பிரசாரத்தில் ஆரம்ப முதலே பாஜக ஒரு தெளிவான, உறுதியான வானவில் சமூக ஆதரவை விழைந்தது என்பது தான் சரியாக இருக்கும். எடியூரப்பா, மாநிலத் தலைவர் சதானந்த கௌடா, பெங்களூர் நகர எம்.பி அனந்தகுமார் இந்த மூவரின் படங்கள் பிரதானமாகவும், மேலிருந்து அத்வானி, வாஜ்பாய் ஆசி வழங்குவது போலும் பாஜக வெளியிட்ட அனைத்து விளம்பரங்களும் நகரம், கிராமம், உழவர்கள், தொழில்முனைவோர், முக்கியமான சமூகங்கள் அனைத்தையும் பிரதிநிதித் துவம் செய்தன. மாறாக, காங்கிரஸ் விளம்பரங்களிலேயே அந்தக் கட்சியின் குழப்பம் தெரிய ஆரம்பித்து விட்டது. விளம்பரம் செய்வது எந்தக் குழு என்பதைப் பொறுத்து அதில் இந்திரா காந்தி, ராஜீவ், மல்லிகார்ஜுன் கர்கே, ஜாபர் ஷெரீப், ராகுல், எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, தரம்சிங், பிரகாஷ், வீரப்ப மொய்லி என்று 12 பேருக்குக் குறையாமல் இருந்தார்கள்!

மத்திய கர்நாடகம், கடற்கரை மாவட்டங்கள், பெங்களூர், வடக்கு கர்நாடகம், ஆந்திராவை ஒட்டிய பெல்லாரி பகுதிகள் இவை அனைத்திலும் கணிசமான வாக்கு விகிதத்தையும் பெற்று, இடங்களையும் வென்றதன் மூலம் பா.ஜ.க கர்நாடகத்தில் ஆழமாகவும், அகலமாகவும் வேரூன்றியுள்ளது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. தேவகவுடாவின் கோட்டையான மைசூர் பிரதேசத்தில் மட்டுமே பாஜகவுக்கு அவ்வளவு இடங்கள் கிடைக்கவில்லை. இது ஒரு பிரதேச போக்கு மட்டுமே தவிர, தேவகவுடாவின் சமூகத்தினரான ஒக்கலிகர்கள் பாஜகவை நிராகரிக்கவில்லை என்பது கண்கூடு. வெற்றிபெற்ற பாஜக எம்.எல்.ஏக்களில் 17 பேர் இந்த சமூகத்தினர் (ஜனதாதளத்தில் 15 பேர்). 9 பிராமண பாஜ.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் (கர்நாடக மக்கள்தொகையில் 7% பிராமணர்கள்). வெற்றிபெறும் வாய்ப்பு உள்ள முஸ்லீம் வேட்பாளர்கள் பாஜகவில் இல்லாததால் தான் அந்த சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் இல்லை என்று தெரிவித்த பாஜக தலைமை, ஆட்சி அமைக்கும் நேரத்தில் ஒரு முஸ்லீம் அமைச்சர் அரசில் கண்டிப்பாக இடம் பெறுவார் என்றும் அறிவித்துள்ளது. இத்துடன், தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஒதுக்கப் பட்ட 36 ரிசர்வ் தொகுதிகளில் 22ஐயும், பழங்குடியினர் ரிசர்வ் தொகுதிகளில் கணிசமான இடங்களையும் பா.ஜ.க, கைப்பற்றையுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

பிரணய்ராயின் என்.டி.டிவி போன்ற சில தொலைக் காட்சிகள் சாதிதான் தேர்தலில் மிக முக்கியமான காரணி என்று “அறிவியல் பூர்வமான” ஒற்றைப் படைக் கருத்தாக்கங்களை மீண்டும் மீண்டும் சொல்லி வருவதனால், இது ஒரு பிரம்மாண்டமான விஷயமாக மக்கள் மனதில் பதிந்துள்ளது. ஆனால் உண்மையில், பிரதிநிதித்துவம் என்ற அளவில் மட்டுமே இதன் தாக்கத்தைப் பார்க்கவேண்டும். இதோடு கூட, ஒட்டுமொத்தமாக தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பது அப்போதைய சூழலும், தேவைகளும், பிரசினைகளும் தான்.

இந்த தேர்தலின் முக்கிய பிரசினைகளாக இருந்தவைகள் என்னென்ன?

காங்கிரஸ் வெற்றியடைந்தால் அதில் சோனியா, ராகுல் மற்றும் “முதல் குடும்பத்தின்” பங்களிப்பையும், தோல்விகளுக்கெல்லாம் அமானுஷ்யமான காரணங்களையும் காண்பதை ஒரு கலையாகவும், பாரம்பரியமாகவும் ஆக்கிக் கொண்டுள்ள காங்கிரஸ், இந்தத் தேர்தலில் உள்ளூர் பிரசினைகளை மட்டும் வைத்து மக்கள் வாக்களித்தார்கள், தேசிய அளவிலான எந்த பிரசினையும் விவாதிக்கப் படவேயில்லை என்று சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கிறது. இந்திய வாக்காளர்களிடம் சில பலவீனங்கள் இருந்தாலும், ஜனநாயகம் என்ற ஆயுதத்தை பிரயோகிப்பதில் அவர்கள் சாதுர்யமானவர்களாகி வருகிறார்கள் என்பதை பல சமீபத்திய தேர்தல்கள் நிரூபித்து வருகின்றன. பல விஷயங்களையும் கூட்டிக் கழித்துப் பார்த்துத் தான் அவர்கள் வாக்களிக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில், அடித்தட்டிலிருந்து வந்த, எளிமையானவராகவும், உழைப்பாளியாகவும் அறியப் பட்ட எடியூரப்பாவின் உறுதியான தலைமையை முன்வைத்தது மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு உத்திரவாதம் கூறியது : இந்த இரண்டும் பா.ஜ.க வெற்றிக்கு முக்கியக் காரணங்கள். பல முன்னேறும் மாநிலங்களில் இரு கட்சி ஜனநாயகம் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பதால், மூன்று கட்சிகளால் விளையும் குழப்பங்களை மக்கள் ஊகித்து ஜனதா தளத்தை ஓரங்கட்டினார்கள் என்றும் சொல்லலாம்.

மத்திய அரசு விலைவாசியைக் கட்டுப் படுத்தத் தவறியது, ஜிகாதி தீவிரவாதத்தை ஒடுக்காமல் மறைமுக ஆதரவு அளித்து வருவது உள்ளிட்ட தேசிய அளவிலான பிரசினைகளும் பிரசாரத்தில் முக்கியப் பங்கு வகித்தன. குறிப்பாக, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளுக்குப் பின் நிகழ்ந்த மூன்றாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில், அந்த நிகழ்வுக்கும், அப்சல் குருவை இன்னும் தூக்கிலிடாமலிருப்பதற்கும், வட கர்நாடகம், ஹூப்ளி பகுதிகளில் ஜிகாதி தீவிரவாதிகள் கைது செய்யப் பட்டதற்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக் காட்டி பா.ஜ.க செய்த தேசப் பாதுகாப்பு பற்றிய பிரசாரம் பரவலாக மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. தீவிரவாதத்தை ஏன் அரசியலாக்குகிறீர்கள் என்று அழாதகுறையாக காங்கிரஸ் கேட்டுக் கொண்டிருந்தது தான் மிச்சம். பா.ஜக. ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும், இதற்கு முழுப் பொறுப்பாளி மத்திய காங்கிரஸ் அரசு தான் என்று அடித்துச் சொல்லப் பட்ட பிரசாரத்தைக் கூட எதிர்கொள்ளத் திராணியற்றுப் போய் இருந்தது காங்கிரஸ் தரப்பு.

இந்துத்துவம்..

ஆகக் கூடி, இந்தத் தேர்தலில் “பா.ஜக இந்துத்துவம் பற்றி எதுவுமே கூறவில்லை. அதனால் இந்த வெற்றிக்கும் இந்துத்துவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்கிற அதிசய “உண்மையை”யும் செக்யுலர் ஊடகங்கள் மறக்காமல் சொல்லிவருகின்றன. ஆனால், இத்தகைய செய்திகளின் தலைப்புகள் என்னவோ “Saffron Surge” “Karnataka goes saffron” என்று இருக்கின்றன!

1980களில் ஹெக்டே அரசுக்கு சிறிய கட்சியாக ஆதரவு அளித்த பா.ஜக., 90களில் ராமஜன்ம பூமி இயக்கத்தின் பின்னணியில் கர்நாடகத்தில் பெருவளர்ச்சி கண்டு, இப்போது தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்திருப்பது ஒரு பெரிய சாதனை. அமரர் யாதவராவ் ஜோஷி, அமரர் ஹெச்.வி. சேஷாத்ரி போன்ற தன்னலமற்ற தலைவர்களின் அயராத உழைப்பால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து இயக்கங்கள் கர்நாடகத்தின் பல பகுதிகளில் வேரோடி இருந்ததும், பொதுப் பணிகள், சமூக சேவை, இந்து சமூக ஒருங்கிணைப்பு இவற்றில் ஈடுபட்டிருந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம். இது பற்றிக் கேட்டபோது, பாஜகவின் அருண் ஜெட்லி, “தெளிவாகவே, பாஜ.க ஒரு கருத்துச் சார்புடைய கட்சி. கொள்கைச் சார்புடைய தொண்டர்களைக் கொண்ட கட்சி. மக்களுக்கு இது நன்றாகவே தெரியும், அதைச் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை” (We are an idelogical party, and clearly a cadre based party. People know that very well, no need to keep repeating that). என்று கூறினார். எனவே இந்தத் தேர்தல் வெற்றியை, இந்துத்துவம் என்கிற சமூக, அரசியல் சித்தாந்தம் கர்நாடக மக்களால் பெரும்பான்மையாக அங்கீகரிக்கப் பட்டு விட்டது என்பதற்கான குறியீடாகக் கொள்வதில் தவறேதும் இல்லை.

தமிழர்கள், தமிழகம்...

ஆரம்பத்தில் சலசலப்பு ஏற்படுத்திய ஒகேனக்கல் பிரசினை தேர்தலின் போது தலைகாட்டாமல் அனைத்துக் கட்சிகளும் கட்டுப்பாடு காத்தது சந்தர்ப்பவாத அரசியலின் ஒரு யுக்தி என்றாலும், ஆரோக்கியமான முன்னுதாரணம். காவிரி பிரசினையில் வெளிப்படையான தமிழர் எதிர்ப்பு நிலைப் பாட்டை எடுத்து வரும் வட்டள் நாகராஜை இந்தத் தேர்தலில் டெபாசிட் இழக்க வைத்ததன் மூலம், மொழிவெறி அரசியலைத் தெளிவாகவே நிராகரித்திருக்கும் கன்னட மக்கள் பாராட்டுக்குரியவர்கள். அதே நேரத்தில் எடியூரப்பாவையும், ஏன் பா.ஜ.கவையுவே தமிழக எதிரிகள் என்ற கணக்கில் சித்தரித்து பீதியைக் கிளப்பிய பொறுப்பற்ற பல தமிழ் ஊடகங்கள் கண்டனத்திற்குரியவை. கடும் இந்துத்துவ வெறுப்பு, பாஜக எதிர்ப்பு போன்ற சட்டகத்தில் அடித்த எதிர்மறை மனப்பான்மைகளை மூட்டி கட்டி வைத்து விட்டு இரு மாநிலங்களுக்கும் இடையேயான நட்புறவைக் குலைக்கும் படி அவைகள் கருத்துக்கள் வெளியிடாமல் இருப்பது நல்லது.

கர்நாடகத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்கள் இரண்டு : கோலார், சாமராஜ் நகர் பகுதி, பெங்களூர் நகரின் பல பகுதிகள். இதில் முதலில் குறிப்பிட்ட தொகுதிகள் உள்ள பிரதேசம் முழுவதுமே ஜனதாதளம், காங்கிரஸ் வேட்பாளர்கள் வென்றுள்ளனர், அது ஒரு அலை. ஆனால் பெங்களூர் நகரில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மல்லேஸ்வரம், ராஜாஜி நகர், ஜெயநகர், சி.வி.ராமன் நகர், பெங்களூர் தெற்கு ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிவாகை சூடியதில் கணிசமான அளவு பெங்களூர் தமிழர்களின் வாக்குகள் இருந்தேயாக வேண்டும் என்பது கண்கூடு.

தேர்தல் வெற்றிக்குப் பின் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் எடியூரப்பா ஒகேனக்கல் பிரசினையில் தனது தரப்பைத் தெளிவாகவே கூறியிருக்கிறார் -





“.. ஒகேனக்கல் பிரச்னையைப் பொறுத்தவரை நான் அன்றைக்கு சொன்னதுதான் இன்றைக்கும்..! தர்மபுரி ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்காகத் தண்ணீரை உறிஞ்சினால் கர்நாடகாவுக்கு தண்ணீர் பற்றாக்குறை வரும்னு இங்குள்ள மக்கள் நினைக்கிறாங்க. அதனால நானும் அந்த விஷயத்துல ஆரம்பத்துல இருந்தே எதிர்ப்பு காட்டிட்டு வர்றேன். எலெக்ஷன்ல ஜெயிக்கிறதுக்காக ஒகேனக்கல் பிரச்னையை வச்சு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியும் காங்கிரஸ்காரங்களும் ஏதேதோ டிராமா போட்டுப் பார்த்தாங்க. எதுவும் மக்கள்கிட்ட எடுபடல.

தமிழ்நாட்டுக்காரங்களோ,மகாராஷ்டிரா காரங்களோ எனக்கு எதிராளிகள் கிடையாது. எந்த மொழிக்கும் நான் எதிரானவன் கிடையாது. இன்னும் சொல்லணும்னா தமிழர்கள், கன்னடர்கள், மராட்டியர்கள் மூவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள்னு நினைக்கிறவன் நான். கர்நாடகா என்னுடைய வீடு. இந்த வீட்டுக்கு நான்தான் குடும்பத் தலைவன். என்னோட வீட்ல இருக்கறவங்களோட பிரச்னையை முதல்ல நான் தீர்த்து வச்சாகணும். அதுக்குப் பிறகுதான் பக்கத்து வீட்டைப் பத்தி யோசிக்க முடியும். அதனால காவிரி பிரச்னையிலும் சரி, ஒகேனக்கல் விவகாரத்திலும் சரி... எடுத்தோம் கவுத்தோம்னு எந்த முடிவும் எடுக்க முடியாது. பேசி முடிவு பண்ணலாம். ஆனா, அந்த முடிவு நிச்சயமா எங்க மாநிலத்து மக்களோட நலனுக்கு பாதகமா இருக்க முடியாது. இருக்கவும் விடமாட்டேன்.''

அரசியல் சட்ட அடிப்படையிலும், காவிரி நடுவர்மன்ற முடிவுகளின் படியும், தமிழக அரசின் இந்தத் திட்டத்தை கர்நாடக அரசு ஆட்சேபிக்க முடியாது என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும், ஒரு மாநில முதல்வர் என்ற அளவில் எடியூரப்பா முதிர்ச்சியுடனும், தேசிய உணர்வுடனும் பேசியிருக்கிறார். இந்திய ஒருமைப்பாட்டில் உறுதியான பிடிப்பு வைத்திருக்கும் அவரது நிலைப்பாடு நம்பிக்கையளிக்கிறது. தமிழக முதல்வர் தானைத் தலைவர் ஒருமுறை கூட அண்டை மாநில மக்களைப் பற்றி இவ்வளவு அன்போடு ஏதாவது கூறி, நான் படித்ததாக ஞாபகம் இல்லை.

இன்று கர்நாடகம். நாளை பாரதம்?

இந்தத் தேர்தல் முடிவுகளின் அதிர்வலைகள் தேசிய அரசியலில் ஏற்கனவே புயலைக் கிளப்பத் தொடங்கி விட்டன. ஏழு பெரிய மாநிலங்களில் பாஜக அரசுகள் உள்ள நிலையில், காங்கிரசை விடப் பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பாஜக அடைந்திருக்கிறது. இடதுசாரிகளின் இழுபறி ஆதரவுடனும், பெயரளவில் அதிகாரம் செலுத்தும் ஒரு பிரதமருடனும் ஓடிக் கொண்டிருக்கும் சோனியாவின் சமையலறை கேபினெட் மத்திய அரசு, மக்களைப் பாதிக்கும் முக்கியமான பிரசினைகள் ஒவ்வொன்றையும் தவற விட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வளவு நடந்த பிறகும், காங்கிரஸ் கட்சி தனது வீழ்ச்சி மற்றும் தோல்விக்கான காரணங்களை சிறிதும் ஆராய்ந்து பார்ப்பதாகத் தெரியவில்லை. விநாச காலே விபரீத புத்தி:?

கர்நாடகம் தென்னகத்தில் பா.ஜகவின் வரவைக் கட்டியம் கூறும் நுழைவாயில் என்று சில அரசியல் விமர்சகர்கள் ஹேஷ்யம் கூறுகின்றனர். தமிழகம், கேரளம், ஆந்திரா இந்த மூன்று மாநிலங்களிலும் ஜிகாதி தீவிரவாதத்திற்கு எதிரான சமரசமற்ற நடவடிக்கைகள், இந்துமதம் மீது துவேஷம் வளர்க்காத அரசியல், முன்னேற்றம் விழையும் திட்டங்கள் ஆகிய கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவு கண்டிப்பாக இருக்கிறது. இதனை செயல்திறனோடு ஒருங்கிணைக்கக் கூடிய அரசியல் தலைவர்களையும், தொண்டர்களையும் இந்த மாநிலங்களில் பா.ஜ.க உருவாக்க வேண்டும்.

கர்நாடக வெற்றியில் இருந்து, பா.ஜ.கவும் சரி, காங்கிரசும் சரி, கற்க வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.

Wednesday, May 28, 2008

உலக விருது பெரும் அர்விந்த் கண் மருத்துவமனை: வாழ்த்துக்கள்!

மைக்ரோசாஃப்ட் மகாகுரு பில் கேட்ஸ் மற்றும் அவர் மனைவி மெலிண்டா கேட்ஸ் நடத்தும் கேட்ஸ் ஃபவுண்டேஷன் அமைப்பு மதுரை அர்விந்த் கண் மருத்துவமனைக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் "கேட்ஸ் விருது" வழங்கியுள்ளது. வளரும் நாடுகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் அமைப்புகளுக்கான அகில உலக விருதுகளில் முதன்மையான விருதாகும் இது.

சமூக சேவையை முக்கிய நோக்கமாகக் கொண்டு, அதே சமயம் அதிநவீன மருத்துவ வசதிகள், தொழில்நுட்பம் இவற்றை உயரிய தொழில் நேர்த்தியுடன் இணணத்து சாதனை படைத்துள்ளார் இதனை நிறுவிய டாக்டர் ஜி.வெங்கடசாமி.

உலகின் மிகப்பெரிய, மிக அதிகப் பயனர்களுக்கு சேவை வழங்குகின்ற கண் மருத்துவமனை பற்றிய 6 நிமிட வீடியோ -



பரபரப்பு மீடியா வெளிச்சங்களுக்கு அப்பால், ஒரு பழம்பெருமை மொஃபசல் நகரம் என்று கருதப் படும் மதுரையில் இருந்து கொண்டும் செயற்கரிய சாதனைகளை செய்ய முடியும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் அரவிந்த் கண் மருத்துவமனை.

Tuesday, May 27, 2008

மார்க்சிஸ்டு வெறியர்கள் உடைத்த பள்ளியை சீரமைக்க உதவுங்கள்

கேரளத்தில் இந்து அமைப்பு ஒன்று நடத்தும் பள்ளியில் இருந்து கீழ்க்கண்ட செய்தி வந்துள்ளது. எந்த அளவுக்கு வெறுப்பும், வன்மமும், குரோதமும் இருந்தால் முழுவதும் பொதுமக்கள் உழைப்பில் உருவான, பொதுச் சொத்தான ஒரு அழகிய பள்ளியை இப்படித் திட்டமிட்டுத் தாக்கி அழிப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.

அழிவு சக்தியான மார்க்சியத்தை ஒழியுங்கள்.
ஆக்கசக்தியான இந்துத்துவத்திற்கு ஆதரவு தாருங்கள்.
பள்ளியை சீரமைக்க உதவுங்கள்.

Adiyodi Vakeel Smaraka Tagore Vidyapeetam, a reupted school in Thalassery, Kerala was attacked and destroyed by a gang of CPM (Communist Pary of India Marxist) criminals on 27th January 2008. This calculated attack was done within 24 hours of the Republic Day Celebrations.

The school is named in the memory of Late Adv. Gopalan Adiyodi, a well respected social worker and RSS leader of Kerala. It started as a primary school in 1990 and has grown into a full fledged high school now. This is the only Hindu Educational Institution in Kannur district amidst the several institutions run by the Christian and Muslim managements. With the coming up of Tagore Vidyapeetam, a long cherished wish of the Hindus of this area had come true. It is to provide affordable, quality education and impart Hindu values that the selfless RSS workers of this district started this school. To acquire three acres of land and to build up a full-fledged school complex was really a Herculean task, but the brave Swayamsevaks did it all, that too within a few years, all through public donations. The infrastructure and other educational facilities were appreciated by one and all.




The brutal destruction of the school, a public property is just another bloody chapter in the continuing attack on Hindu activists and institutions by the CPM goons in this area. The Hindutva movement started in Kerala in 1942 at Calicut. In 1946 the RSS sakhas started in Thalassery. Many prominent personalities including advocates, doctors and teachers started attending the sakhas. And from that time onwards the Communist forces were trying to build up impediments to curb the growth of Hindu movement. Actual bodily clashes started in Kannur district in 1969 in which Sri Ramakrishnan, a Mukhya Sikshak, was killed. Pinarayi Vijayan present CPM State Secretary was one of the accused in this case. Kodiyeri Balakrishnan, the present home minister (CPM) was one of the accused in the second murder which followed very soon. From 1969 to 2008 May, 63 Swayamsevaks were murdered in and around Thalassery. Though the entire Kannur district witnessed Marxist terrorism, Thalassery Thaluk has been the main area of their attack. More than 200 swayamsevaks received fatal injuries in the past years. Many lost their limbs, many became blind and duff. They are all unable to earn their livelihood.

Since the very inception of this institution the Marxists were trying to put an end to this move through several methods and this attack was the final one. All our dreams, all our efforts came to nil with this CPM attack. The building was partially demolished. The Principal’s room, staff room and many class rooms were destroyed. 60% of the furniture was totally destroyed. The well furnished computer lab consisting of 35 systems and one LCD projector with lap top, which was sponsored by an NRI group, was all smashed to pieces. The science Labs were all gone. All this was done by an unruly crowd of more than 200 CPM activists, in the full presence of the Police force.



At present more than 700 students are studying in this school with a staff strength of 62. All the members on staff are well qualified and trained by Vidya bharathi, an educational NGO that operates in many parts of the country. The Principal is very well respected in the area and was formerly a CBSE school teacher in Arunachal Pradesh. All the batches presented for the X CBSE exams attained 100% success.

Our school reopens after summer vacation on June 2nd. It is beyond our capacity to find means to put things in place. The managing committee appeals to one and all to help us to re-build this Hindu educational institution. It is our sincere request to help us to rebuild the school infrastructure as it was before.

Vande Mataram.

How you can help :

1. Monetary donations may be sent as cheque, draft or Money order favouring "Adiyodi Vakeel Smaraka Educational Trust" to The Secretary, Adiyodi Vakeel Smaraka Educational Trust, Thiruvangad, Thalassery 670103, Kerala
2. Electronic transfers and direct deposits can be done to the following account:
Current a/c no.: 30072288490, State Bank of India, Main Branch, Thalassery – 1
3. Receipts will be sent to all the donors. Donors, please send in your name and address along with the donations. (Those who do bank transfers can send the details thru email to vidyapeetam@gmail.com)
4. To rebuild the computer lab, you can donate new computers or even used ones in good condition.

All donations are exempt from Income Tax u/s 80-G.

For further details, contact:
Sri M K Sreekumaran (9446373383), Sri Banish (9446166407)

Monday, May 26, 2008

எச்சரிக்கை: இந்தியாவின் உட்பகை (enemy within)

ரவி ஸ்ரீனிவாஸ் அரசியல் கைதிகள்-பினாயக் சென்-அ.மார்க்ஸ்: ஒரு எச்சரிக்கைக் குறிப்பு என்ற தனது பதிவில் அப்பட்டமான இந்திய விரோதிகளுக்குப் பரிந்து பேசும் அறிவுஜீவி மனநிலை குறித்து சரியான கண்ணோட்டத்தை முன்வைத்திருக்கிறார். துரதிர்ஷ்ட வசமாக, "அரசியல் கைதி" என்று பரிவுடன் அவர் குறிப்பிடும் டாக்டர் பினாயக் சென் அமைதிப் புறா அல்ல. அப்பட்டமான தீவிர நக்சல் ஆதரவாளர் அவர் என்பதே உண்மை.

"உறுதியான சட்டங்கள், தேர்ந்த உளவுத்துறை, அதிநவீன பாதுக்காப்பு சாதனங்கள் இவை மட்டுமே ஜிகாதிகள், நக்சலைட்டுகள், மற்ற பிரிவினைவாதிகளுடனான போரில் நமக்கு வெற்றி தேடித் தராது.. தேசவிரோதிகளுக்காகக் கச்சை கட்டிக்கொண்டு பேசவரும் இத்தகைய உட்பகைகளையும் நாம் எதிர்கொள்ளவேண்டும். பயங்கரவாதத்தால் பாதிக்கப் படுபவர்களுக்குப் பதிலாக, பயங்கரச் செயலை நிகழ்த்தியவர்களின் பாதுகாப்பையும், நலனையும் முன்நிறுத்தும் இந்த இழிவான மனநிலை, அதன் பிரதிநிதிகள் இந்த விரோதிகளுடன் போரிட்டு முதலில் நாம் வெல்ல வேண்டும்" என்கிறார் பயனியர் ஆசிரியர் சந்தன் மித்ரா.

Jaipur to Raipur - பயனியர் இதழில் வந்த கட்டுரை.

Jaipur to Raipur
- Chandan Mitra

From Jaipur to Raipur and beyond, India is under a siege within. While the political class has predictably fulminated against Pakistan and Bangladesh, the fact is that every heinous crime against the people of India has been committed by Indians, even if funded and trained by outside forces.

For the ordinary citizen it comes as no solace to learn that something called HuJI has replaced LeT or JeM as the new face of terror in India. For the victims of terror, the jihadi terrorist remains an elusive, sinister figure irrespective of nomenclature. Periodically we are told that these shadowy organisations receive logistic support from yet another dangerous outfit, SIMI (or is it now called SIM?). Whether it is the Students' Islamic Movement that acts as the liaison agency for the executors of bomb blasts, it is quite inconsequential to the public at large. Jihadi terrorists have demonstrated their ability to strategise precisely, plan meticulously, strike at will and massacre innocents at destinations chosen by them. Every year India has reeled under three or more major terrorist outrages and just when complacency sets in, jihadis strike yet another deadly blow.

Where does Raipur fit in this scheme? Chhattisgarh, Jharkhand, Orissa, Andhra Pradesh, Bihar and parts of Maharashtra and Karnataka have similarly been reeling under successive waves of terror of another kind. Although there is no concrete evidence yet of links between jihadis and Maoists, they share a common aim -- destabilisation of the Indian nation. The green flag of Islamic jihad and red pennant of Naxalites are fluttering virtually all over the country even if they have carved out separate areas of operation, the former focusing more on big cities and the latter on interior villages. The numbers decimated by Maoist marauders is probably no less than those felled by terrorist depredations. In vast stretches of the Indian heartland, the writ of the Government either does not run at all or runs cursorily only between dawn and dusk. Just as the jihadi terrorists are working in coordination with, or at the behest of, foreign powers and global terror outfits like Al Qaeda, Maoists in India too have a central command, swear allegiance to a foreign ideology and, after the tragic legitimisation of ultra-Left rule through elections in Nepal, will work in even greater concert with a neighbouring country's Government.

The similarity does not end there. Both jihadis and Maoists thrive on the back-up support of an army of secular fundamentalists and bleeding-heart intellectuals in India. These fifth columnists hold opinion makers in this country in an octopus-like grip, and are perpetually busy generating sympathy for the mass murderers. While every attempt by the state to act decisively against both jihadis and Naxalites is greeted with howls of protest, law-enforcement agencies are continuously berated and sought to be systematically demoralised. The self-styled cheerleaders of liberalism oppose the demand to bring back POTA or enact similar State laws needed to act aggressively against terror merchants.

Further, they are at the forefront of vicious campaigns against conscientious security personnel for their alleged excesses and so-called violation of human rights. One only has to recall their frenzied attempts to put Gujarat Chief Minister Narendra Modi on the mat for defending his police in the encounter that led to the fully justified liquidation of jihadi operatives such as teenage terror courier Ishrat Jahan. The subversive section of the Indian intelligentsia went almost berserk over the alleged crimes of VG Vanzara, the Gujarat police officer who eliminated terrorist Sohrabuddin. These effete intellectuals have been out to prove that the Government itself plotted the December 13 attack on Parliament and Afzal Guru is an innocent, honourable man who must be saved from the gallows irrespective of judicial verdicts.
The India-baiters inevitably succeed because we are unfortunate enough to have a Prime Minister who confesses he could not sleep for nights without end worrying about the fate of an Indian-origin Glasgow airport bombing suspect detained briefly in Australia, although the same Prime Minister has shown no such concern for the thousands of his fellow-countrymen who die gruesome deaths at the hands of jihadis and Maoists.

Not surprisingly, closet sympathisers of India's destabilisation have now mounted a campaign to allow Naxalite intellectual Dr Binayak Sen to travel to Washington to personally collect something called the Jonathan Mann award from an organisation that describes itself as the Global Health Council. Apparently he is to be honoured for his "spectacular and pioneering" work among tribals of Chhattisgarh and also for "exposing" the "Government-backed vigilante group, Salwa Judum". It is remarkable how a Washington-based organisation came to know about Dr Sen's "spectacular" work when nobody in India (except Maoists and their frontal organisations) had heard of him, at least till he was caught smuggling vital correspondence to a Naxalite leader in detention, under the garb of attending to his medical condition. Moreover, the Goebblessian propaganda that Salwa Judum is a vigilante group, whereas it is an unarmed people's movement against Naxalites, has actually got embedded even in intelligent people's minds through sheer repetition. Although various agitations planned on the dubious doctor's behalf by Maoists and their fellow-travellers have not quite taken off despite high voltage publicity on websites, it would be naïve to rule out a crescendo of support as May 29, the date on which the award is to be conferred, comes closer.

Remarkably, Indian subversives have a huge international network, which includes various separatist outfits, Christian missionary groups and busybody NGOs. I recall being confronted by an earnest young Tamilian Christian student at Berkeley last August demanding my intervention as MP with the "fascist, communal" Chhattisgarh Government for Dr Sen, whose name I first heard at that seminar. Taken aback, I checked up with friends at home about the activist-doctor's antecedents that night and sparred with his misguided young supporters in the US thereafter. I have no doubt that India's terror network thrives because of such people. I even came across an article titled "India: No country for good men" detailing the Government's apparently disgraceful human rights record and condemning the "systematic crackdown" on dissenters in this country. If India were not mentioned a few times, anybody would have thought it was a write-up on the excesses of the Burmese military junta! Needless to add,
the internet article was written by an Indian!

Thus, the siege within is much more pervasive than it appears at first sight. While the country needs more stringent anti-terror laws, better intelligence, superior equipment for security forces and other paraphernalia for combating jihadi, Maoist and separatist terror, apart from draconian measures to stop infiltration from Bangladesh, the war against the enemy within cannot be won by laws alone.


Till such time as we agree that "terrorism in all its manifestations" includes mindset that in effect protect and promote the cause of the perpetrators of terror rather than those of its victims, I am afraid the war can never be decisively won.

Thursday, May 22, 2008

The irresponsible Indian Home Minister: Sack him

See this: Patil links Afzal to Sarabjit; BJP says 'nonsense'.

It appears that minister Shivraj Patil does not have a clue of even the most basic details of both the cases.

AFZAL is an *Indian* citizen, sentenced to death by the *Indian* "Supreme court" after extensive investigations and proceedings and appeals, for the crime of waging war against India by attacking the Indian parliment and killing Indian policemen on duty. He has been treated in a dignified manner in the Indian prisons for 4 years. He himself accepts the crime and asks for "sympathy" as part of his clemency petition... And remember, India is a secular, democratic country, known for its reasonably impartial Justice system.

SARABJIT is an *Indian* citizen, about to be hanged by the *Pakistani* government based on frivolous charges, after trial by just lower courts with no options for any appeal at any level, most probably in a case of mistaken identity, for one "Man singh" who was allegedly involved in some bomb blasts in Pak. He has been tortured in the Paki jails for more than 18 years... And Remember Pakistan is a rouge Islamist Jihadist state ruled by a dictatorship, with horrible record of Judiciary and of treating its own non-Mulsim minorities, particularly Hindus.

Where is the comparison, Mr. Home Minister?
Do you also mean to say that, in case if Pak. govt. gives clemency to Sarbajit, should India *free* all the Jihadi terrorists it has captured?

With a home minister like this, is there any surprise that Islamist bombs are exploding all over India and killing patriotic, innocent Indian citizens?

BJP should not just stop with calling this "nonsense". They should press for this guy to be sacked.

Wednesday, May 21, 2008

தமிழக ஜிகாதிகள்: போலீஸ் தேடுதல் தீவிரம்

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகள் பற்றிய இந்தப் பதிவின் இறுதியில் இப்படிக் கூறியிருந்தேன் -

"எனவே அரசு மிக உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், உடுமலைப் பேட்டையிலும், உடுப்பியிலும், குண்டூரிலும், நாசிக்கிலும் என எதிர்பாராத இடங்களில் எல்லாம் ஜிகாதிகள் தாக்குதல் நடத்தப் போவது உறுதி. மக்களின் உயிருக்கு உத்தரவாதம் தராத அரசு நீடிப்பதில் அர்த்தமில்லை, அது அகற்றப் படவேண்டும்"





எழுதிய கம்ப்பூட்டரை இன்னும் ஒருமுறை boot கூடப் பண்ணவில்லை, அதற்குள் சென்னை மண்ணடியில் ஜிகாதிகள் கைது செய்யப் பட்டதாகவும், சென்னையிலும் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. போலீஸ் போய்ப் பிடிப்பதற்குள் இந்த ஜிகாதி கும்பலின் தலைவன் தப்பியோடிவிட்டான். இது பற்றி ஜுனியர் விகடன் இதழ் ஒரு அதிரடி ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது.

தஞ்சை கடலோரப் பகுதிகளில் இஸ்லாமிய தீவிரவாதமும், மதவெறியும் நாளுக்கு நாள் பெருகிவருகிறது பற்றியும் இந்த ரிப்போர்ட் கவலை தெரிவிக்கிறது. ஒன்றரை வருடம் முன்பு பாகிஸ்தான் ஆகி வரும் தஞ்சைத் தமிழ் மண்??? என்ற பதிவில் குறிப்பிட்டது போல, கோயில் திருவிழாக்களில் சுவாமி வீதியுலா வருகையில் கோலம் போட்டு வரவேற்று தஞ்சை மண்ணின் கலாசாரத்துடன் தங்களை இணைத்துக் கொண்டிருந்த முஸ்லீம்களின் தலைமுறை முடிந்துபோய், ஜிகாதி தீவிரவாத விஷ விருட்சங்கள் அங்கே வளர்ந்துகொண்டிருக்கின்றன. இன்று ஜூ.வியே இதைப் பற்றி எழுத ஆரம்பித்துள்ளது.

மற்ற மாநில, மற்றும் வெளிநாட்டு ஜிகாதிகளுடன் இவர்களுக்கு இருக்கும் தொடர்புகளையும் ஜூ.வி கட்டுரை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

டென்ஷனில் தமிழகம்! 'டேஞ்சரஸ் தவ்பீக்...'
(ஜூனியர் விகடன் 25-5-2008 இதழிலிருந்து)

தமிழகத்தை திடீரென திக்திக்கில் மூழ்கடித்திருக் கிறது தவ்பீக் என்ற பெயர்! 'இறைவன் ஒருவனே' அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக இருக்கும் தவ்பீக், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம் பட்டினத்தைச் சேர்ந்தவன். சில மாதங்களுக்கு முன்பு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டவன். அப்போது, ''வெறுங்கையோட திரியிற நான், இத்தனை போலீஸ் பாதுகாப்பையும் தாண்டி எப்படி சார் மோடியைக் கொல்ல முயன்றிருக்க முடியும்? இருந்தாலும், என்னால மோடியோட உயிருக்கு ஆபத்து இருக்குன்னு நீங்க நினைச்சதே எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு'' என சொல்லி போலீஸாரையே அசரடித்தவன் தவ்பீக்.

அந்த வழக்கிலிருந்து கடந்த மாதம்தான் வெளியே வந்திருக்கிறான்.ஆறு வருடங்களுக்கு முன்பு அதிராம்பட்டினத் தில் முஸ்லிம் பெண்களை ஏற்றிச் சென்ற ஒரு ஆட்டோக்காரரை அரிவாளால் வெட்டிய தவ்பீக், போலீஸாரிடம் மத்திய அமைச்சர் ஒருவரின் பெயரைச் சொல்லி மிரட்டியதை அப்போதே ஜூ.வி-யில் வெளியிட்டிருந்தோம் (தவ்பீக்கின் புகைப்படத்தை அப்போதே முதன்முறையாக வெளியிட்டது ஜூ.வி.).அதன்பிறகு, தவ்பீக்கை உளவுத்துறை போலீஸார் விடாமல் வேவு பார்த்த போதுதான் இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலனுக்கு குறி வைக்கப்பட்டிருக்கும் தகவல் தெரிய வந்திருக்கிறது. உடனே, அவனையும் அவன் கூட்டாளிகளையும் சேர்த்து வளைக்க போலீஸ் திட்டம் போட்டது.

இந்த நிலையில், ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பை அடுத்து சென்னையில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, தவ்பீக்கும் அவனுடைய கூட்டாளிகளும் சென்னை மண்ணடி யில் உள்ள அட்வகேட் மேன்ஷனில் தங்கியிருப்பதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது. அடுத்தகணமே இணை கமிஷனர் ரவி தலைமையிலான போலீஸ் படை அங்கு விரைந்திருக்கிறது.

அதற்குள் தவ்பீக்கும், 'இறைவன் ஒருவனே' அமைப்பின் சென்னை தலைவன் அபுதாகிரும் எஸ்கேப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 'பழனி' உமர், நெல்லையைச் சேர்ந்த சையத்காசிம் என்கிற ஹீரா, சென்னை மண்ணடி ஏரியா காதர் ஆகிய மூவரையும் வளைத்தது போலீஸ்.

தவ்பீக்கின் தீவிரவாத வளர்ச்சி பற்றிய பல விஷயங்களை, போலீஸ் மற்றும் விவரமறிந்த புள்ளிகள் விரிவாக நம்மிடம் சொன்னார்கள்.''அவனிடம் ஐந்து நிமிஷம் பேசினாலே எதிராளி மயங்கிவிடுவார். பிரமாதமாகப் பாடவும் செய்வான். இமாம் அலியுடன் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்தவன். இமாம் அலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட பிறகு, ஒட்டுமொத்த போலீஸ§ம் கண்காணித்துக் கொண்டிருப்பது தெரிந்தும், உடலை எந்த தயக்கமும் இன்றி முதல் ஆளாக நின்று சுமந்து சென்றவன். இமாம் அலியின் பல திட்டங்கள் தவ்பீக்குக்குக் கைமாற்றப்பட்டதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது. 'இமாம் அலியின் நண்பர்' என்கிற அடையாளத்தை வைத்து சர்வதேச தீவிரவாத அமைப்புகளோடும் தவ்பீக் தொடர்புகொண்டிருக்கிறான்.

ஆரம்பத்தில் 'முஸ்லிம் டிஃபென்ஸ் ஃபோர்ஸ்' என்ற அமைப்பில் இருந்த தவ்பீக், சர்வதேச தீவிரவாதியான 'மல்லிப்பட்டினம்' இம்ரான் (சமீபத்தில் தமிழகத்தில் கைது செய்யப்பட்டான் இவன்) உதவியுடன் சவூதி அரேபியா சென்று பயிற்சி பெற்றான். இதற்கிடையில், தமிழகத்தில் சில முக்கியமான அசைன்மென்ட்களை நிறை வேற்றுவதற்காக தவ்பீக் சென்னைக்குத் திரும்பி வர, தமிழக போலீஸ் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அவனைக் கைது செய்தது. இருந்தாலும், அவன் சம்பந்தப்பட்ட எந்த வழக்கையும் போலீஸால் முறையாகப் பதிவு செய்ய முடியவில்லை. அதனால், நான்கு வருடங்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டான்.

அண்டை மாநிலங்களில் பிடிபட்ட தீவிரவாதிகளின் வாக்குமூலங்களில் தவ்பீக்கின் பெயர் தவறாமல் இடம் பிடித்தது. கடந்த மார்ச் 25-ம் தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ராம.கோபாலன் கூட்டத்தில் அவரை தீர்த்துக் கட்டுவதற்கான ப்ளானை நிறைவேற்ற தவ்பீக் திட்டமிட்டிருந்தான். ஆனால், அன்று எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாக இருந்ததால் திட்டம் நிறைவேறாமல் போயிருக்கிறது.இது மட்டுமல்ல... ஜெய்ப்பூரைப் போல் சென்னையிலும் அசம்பாவிதங்களை அரங்கேற்ற தவ்பீக்கின் கும்பல் திட்டம் போட்டிருக்கிறது. நல்ல வேளை, அதற்குள் அந்த கும்பல் பிடிபட்டுவிட்டது. தப்பியோடிவிட்ட தவ்பீக்குக்கு அடைக்கலம் கொடுக்க பல அமைப்புகள் தயாராக இருக்கின்றன. அதனால், அவன் போட்டு வைத்திருக்கும் திட்டங்களை விடாப்பிடியாக நிறைவேற்ற முயலுவான் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது'' என்று கவலையூட்டினார்கள்.

தவ்பீக்கின் கூட்டாளிகளிடம் விசாரித்துவரும் டீமில் இருப்பவர்கள், ''ஜெய்ப்பூரிலும், சென்னையிலும் ஒரே சமயத்தில் குண்டுவெடிப்பு களை அரங்கேற்ற திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. உளவுத்துறை போலீஸாரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் சென்னை தப்பியிருக்கிறது. ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றிருக்கும் 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்புக்கும் தவ்பீக்குக்கும் தொடர்பு இருப்பதற்கான முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்பினரின் மெயில் மிரட்டலில் 'டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களையும் தகர்ப்போம்' எனச் சொல்லி இருக்கிறார்கள். போலீஸ் தன் மீது கண் பதித்திருந்ததால்தான் தவ்பீக்கால் சென்னையைத் தகர்க்கும் அசைன்மென்ட்டை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கிறது. இப்போது அவன் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. விரைவில் அவனைப் பிடிப்போம்'' என்கிறார்கள்.

அதிராம்பட்டினம் - மல்லிப்பட்டினம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தவ்பீக்குக்கும் மல்லிப்பட்டினத்தில் இம்ரானுக்கும் ஆதரவாளர்கள் அதிகம். சில வருடங் களுக்கு முன்பு மல்லிப்பட்டினம் பள்ளிவாசல் அருகே வெடிமருந்து மூட்டைகள் கைப்பற்றபட்டபோது, பிடிபட்டவர்கள் 'தஞ்சை பெரிய கோயிலை தகர்க்கத்தான் திட்டம் போட்டோம்' எனச் சொல்லி அதிர வைத்தார்கள்.

ஐயாயிரம் வாக்குகளை அள்ளிய தவ்பீக்!

இரண்டு வருடங்களுக்கு முன்பு சிறையிலிருந்தபடியே சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டி யிட்டவன்தான் இந்த தவ்பீக். அவன் பேசிய கேசட்களை தொகுதி முழுக்க ஒலிபரப்பியும், உரைகளை பிட் நோட்டீஸ்களாக அச்சடித்தும் அவன் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்தார்கள். தேர்தல் முடிவில் அவனுக்கு ஐயாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் விழுந்திருந்தன.

ரகசிய கூட்டம்?

தவ்பீக் பதற்றம் தமிழகம் முழுவதும் தொற்றிக்கொண்டிருக்கும் நேரத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்னும் அதிகமாகி இருக்கிறது. மேலப்பாளையத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களைத் திரட்டி, சீருடையும் கொடுத்து, 'அணிவகுப்பு ஒத்திகை மற்றும் மனதிடப்பயிற்சி' அளிக்க இருக்கிறார்கள் என்றொரு பரபரப்பு கடந்த வாரம் கிளம்பியது. போலீஸ் கண்காணிப்பு தீவிரமானதால், அந்தக் கூட்டம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதேபோல், இரண்டு நாட்களுக்கு முன்பு தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் குண்டு வெடிக்கப்போகிறது என்று தென்காசி போலீஸ் நிலையத் துக்கும், '100'-க்கும் ஒரு தகவல் வந்தது. தென்காசி கோயில் பக்கத்திலிருந்த ஆளில்லா ஒரு ரூபாய் டெலிபோன் பூத்திலிருந்துதான் அந்த போன் வந்திருக்கிறது.

-- இரா.சரவணன்
Copyright © 2007 Junior Vikatan

Sunday, May 18, 2008

சங்கீத அன்பர்களே, இந்த ஏழைக் குடும்பத்துக்கு உதவுங்கள்

தேவகி அண்மையில் காலமானார். திருமணமாகி மூன்றாம் மாதத்தில் இறந்து போன அவரது கணவர் கொடுத்துவிட்டுப் போனது ஒரே மகன். அவரது இறுதி சடங்குகளை செய்யக்கூட நிதி நிலை சரியில்லையாம் அந்தக் குடும்பத்துக்கு. காயத்ரி அறக்கட்டளை எனும் நிறுவனத்தின் உதவியுடன் தான் அது நடந்ததாம். அவரது மகன் அரசு இல்லத்தில் சேர்க்கப்பட்டு வளர்ந்து இப்போது கரண்டிதூக்கி தொழில் நடத்துகிறார். இதற்கும் இந்த குடும்பத்துக்கு எம்.ஜி.ஆர்தான் பொருள் உதவி செய்திருக்கிறார். தேவகியின் பேத்தி பத்தாவதுடன் படிப்பை நிறுத்திவிட்டார். பேரன் காஞ்சியில் வேதம் படிக்கிறார்.

யார் இந்த தேவகி?
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகளின் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை தேவகி.

கலைகளும், இசையும் கௌரவிக்கப் பட்ட தஞ்சைத் தரணியில் நிலபுலன்களுடன் வாழ்ந்த இந்த இசைக் குடும்பத்தில் அடுத்தடுத்த தலைமுறைகள் தொழில் மற்றும் பிசினஸில் இறங்கி கடன்பட்டு, நொடித்துப் போய் இப்போது இந்த சந்ததியினர் சென்னையில் சிட்லபாக்கத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களது துயர நிலை பற்றி "தி இந்து" நாளிதழில் சமீபத்தில் வந்த செய்தி:
http://www.thehindu.com/2008/05/06/stories/2008050660511100.htm

சந்ததியினர் சங்கீதத்திற்கு என்ன செய்தார்கள்? அவர்கள் பட்ட கடனால் தானே இந்த நிலைமை என்றெல்லாம் தர்க்கங்களும், விவாதங்களும் ரசிகர்கள் சந்திக்கும் இணையக் குழுமங்களில் ஒருபக்கம் நடந்து வருகின்றன. (இந்த விவாத இழையில் சியாமா சாஸ்திரி பற்றிய சில வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன)




ஆனால், காபிரைட், ராய்ல்டி போன்ற எந்தச் சிடுக்குகளும் இல்லாத காலத்தில், இசையையே உயிர்மூச்சாக்கி, இசைக்காகவே வாழ்ந்து மறைந்த ஒரு உன்னத கலைஞரின் சந்ததியினருக்கு உதவ சங்கீத வித்வான்களும், ரசிகர்களும் கடமைப்பட்டுள்ளனர் என்பது எனது சொந்த அபிப்பிராயம். சியாமா சாஸ்திரிகளின் ஒவ்வொரு கிருதியையும் பாடும்போது வித்வான்கள் ஒரு 50 ரூபாய் கொடுத்தால் கூட இந்தக் குடும்பம் இந்த கஷ்டதசைக்கு வந்திருக்காது என்று ஒரு ரசிகர் வருத்தப் பட்டிருந்தார்.

இது பற்றிக் கேள்வியுற்று மனம் வருந்திய ரசிகர் வி.வி.சுந்தரம் (அமெரிக்காவின் புகழ்பெற்ற க்ளீவ்லேண்ட் ஆராதனை இசை விழாக் கமிட்டியுடன் தொடர்புடையவர்) உதவிசெய்ய விரும்புபவர்களது நன்கொடைகளைத் திரட்டி ஒருங்கிணைக்க முன்வந்துள்ளளார். இது பற்றிய அனைத்து விவரங்களும் ஆராதனைக்கமிட்டியின் இணைய தளத்தில் அனைவரும் அறிய வெளியிடப் படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்த மகானின் கீர்த்தனைகளால் மன அமைதி பெற்றவர்கள் வாழ்வில் வளம்பெற்றவர்கள் எத்தனையோ பேர் இருப்பீர்கள் அவர்கள் இந்த குடும்பத்துக்கு உதவ நினைத்தால்,

வெளிநாடுகளில் இருந்து உதவி செய்ய விரும்புவர்கள், தங்கள் காசோலைகளை Aradhana Committee என்ற பெயரில் அனுப்பவேண்டிய முகவரி:
Aradhana Committee, 4 Cranberry Brook Drive, Millstone, NJ 07726

இந்தியாவில் இருந்து உதவி செய்ய விரும்புபவர்கள் Aradhana Committee என்ற பெயரில் அனுப்பவேண்டிய முகவரி:
Aradhana Committe, 3 Royal Enclave, Adyar, Chennai 600 020

காசோலைகளின் பின்பக்கம் Syama Sastry Family Fund என்று மறக்காமல் குறிப்பிடவும். அதிக விவரங்கள் மேற்குறிப்பிட்ட rasikas.org விவாத இழையில் கிடைக்கும்.

"தருணம் இதம்மா - என்னை ரக்ஷிக்க
தருணம் இதம்மா
கருணாநிதியாகிய காமாக்ஷி ரக்ஷிக்க (தருணம்)"

என்று அன்னை பராசக்தியையே தன் வாழ்நாள் முழுவதும்
பாடிப்பரவிய சியாமா சாஸ்திரிகளின் கௌளிபந்து ராகக் கீர்த்தனை பின்னணியில் ஒலிக்கிறது.

Thursday, May 15, 2008

வீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா?

இந்த வார ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகள் தேசத்தை இன்னொரு முறை அதிர்ச்சியிலும், ஆழ்ந்த துயரத்திலும் உறைய வைத்திருக்கின்றன. சுற்றிப் பார்க்க வந்தவர்கள், அனுமன் கோயிலில் தரிசனம் செய்ய வந்தவர்கள், விளையாட வந்தவர்கள், கடைகளில் பொருள் வாங்க வந்தவர்கள், காற்று வாங்க வந்தவர்கள் என பேதம் பார்க்காமல் அப்பாவி இந்திய மக்களைக் கொன்று குவித்திருக்கின்றன தீவிரவாதிகள் வைத்த சைக்கிள் குண்டுகள். இந்த தேசம் முழுவதும் ஜெய்ப்பூரில் மடிந்தவர்களுக்காகக் கண்ணீர் வடிக்கிறது, இறந்த இந்திய ஜீவன்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது. எம் தேசத்தின் மைந்தர்களின் கோரப் படுகொலையும், சோகமும், இழப்பும், வேதனையும், வலியும் தொலைக்காட்சியில் காணும் போது நெஞ்சு வெடிக்கிறது.




தீவிரவாதம் பற்றி இந்திய சமூகத்தின் பொதுவான மனநிலை எப்படியிருக்கிறது? ஜெய்ப்பூர் என்கிற ஒரு சுற்றுலாத் தலத்தில், மொஃபசல் நகரில் தீவிரவாதத் தாக்குதல் நடந்திருப்பது பெரிய அதிர்ச்சி என்று ஊடகங்களில் பேசப் படுகிறது. “ஜெய்ப்பூர் இதற்கெல்லாம் பழக்கப் பட்டதேயில்லை” (Jaipur is just not used to this) என்கிறார் ஒருவர். மும்பை, தில்லி, வாரணாசி, அயோத்தி, ஹைதராபாத் இங்கெல்லாம் ஏற்கனவே குண்டுவெடுப்புகள் நடந்து விட்டன, அந்த நகரங்களில் இருப்பவர்கள் எல்லாரும் ஜிகாதிகள் கையால் சாவதற்குப் பழகிக் கொண்டு விட்டிருக்கிறார்கள் (அல்லது பழகிக் கொள்ளவேண்டும்) என்று மறைமுகமாக உணர்த்துவது போல் நிருபர்கள் பேசுகிறார்கள். தீவிரவாதத்தின் பயங்கரத்தால் இந்திய உயிர்கள் தொடர்ச்சியாக சாவது என்பது அல்ல, அது “எதிர்பாராத” ஒரு “புதிய” இடத்தில் நடந்திருக்கிறதே என்பது தான் பெரிய கவலையாக இருக்கிறது. அந்த அளவிற்கு சமூகத்தின், ஊடகங்களின் உணர்ச்சி மரத்துப் போய்விட்டிருக்கிறது.

இந்த கோரச் செயலின் பின் இருப்பவர்கள் பற்றி இம்முறை கொஞ்சம் மெதுவாகத் தான் தகவல்கள் வரத்தொடங்கியிருக்கின்றன. அதே “சிமி” இஸ்லாமிய மாணவர் அமைப்பு, அதே லஷ்கர்-ஏ-தொய்பா, அதே HUJI என்கிற ஹர்கத்-உல்-ஜிஹாதி-இஸ்லாமி. “இந்தியன் முஜாஹிதீன்” என்று ஒரு புதிய குழு புறப்பட்டிருக்கிறதாம். அதே மதரசாக்களில் படித்து மதவெறியேற்றப் பட்ட நடுத்தர வயது இளைஞர்கள். ஊர்கள், பெயர்கள், ஆட்கள் கொஞ்சம் கொஞ்சம் மாறிய அதே ஜிகாதி இஸ்லாமிஸ்ட் தீவிரவாதம். ராஜஸ்தான் காவல்துறை சந்தேத்தின் பேரில் தேடிவரும் நபர் உ.பி குண்டுவெடிப்புகளாகக் கைது செய்யப் பட்டு லக்னோவில் விசாரிக்கப் பட்டு வரும் ஒரு முன்னாள் மதரசா மாணவாரால் ஏற்கனவே கூட்டாளி என்று கூறப்பட்டவர். இவரும் சஹ்ரான்புர் மதரசாவின் முன்னாள் மாணவர் தான். இந்தூரில் இரு மாதங்கள் முன்பு கைது செய்யப் பட்ட 13 ஜிகாதிகளுடனும் தொடர்புடையவர் என்றும் கூறப் படுகிறது.

ஆனால் ஏதோ இந்த ஜிகாதி தீவிரவாதிகளுக்கு சில ஊர்கள், சில ஆட்கள் பேரில் மனஸ்தாபம் இருப்பதால் அங்கு போய் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள் என்பது போன்ற பாமரத் தனத்துடன் இந்த செய்தி அலசப் படுகிறது. ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்துள்ள இந்த நாசவலைக் குழுக்கள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் எதிராக போர் தொடுக்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லை. இந்த தேசத்தின் மீதும், இதன் ஆதாரமான, ஆன்மாவான இந்து வாழ்க்கை முறைமீதும் மட்டற்ற வெறுப்புக் கொண்டு அவற்றை அழிப்பதற்குக் கங்கணம் கட்டியிருப்பவர்கள் இவர்கள் என்ற விஷயம் சொல்லப் படுவதில்லை. இந்தியாவின் எல்லா இடங்களிலும் இவர்கள் குண்டுவைக்காமலிருப்பதற்கு, அந்த அளவுக்கு ஆள், அம்பு, ஆயுதம், கட்டமைப்பு இல்லை என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்கிற விஷயம் இன்னும் உறைக்கவில்லை. இவ்வளவு தாக்குதல்கள் நடந்தும் இந்த தேசவிரோத, தேசத்துரோக இஸ்லாமிஸ்ட், ஜிகாதி கும்பல்கள் பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை ஏன் அரசும், ஊடகங்களும் மக்களுக்கு வழங்குவதில்லை?

தீவிரவாதிகளின் நோக்கம் அப்பாவி இந்தியர்களைக் கொல்வதல்ல, அதுவும் செவ்வாய்க் கிழமை அனுமன் கோவில் வாசலுக்கு வரும் இந்து பக்தர்களைக் குறிவைத்துக் கொல்வது அல்லவே அல்ல. அதன் நோக்கம் “அமைதியைக் குலைப்பது” என்று திரும்பத் திரும்பச் சொல்லப் படுகிறது. அதாவது மக்கள் உயிர்போவதைப் பற்றிக் கூடக் கவலைப் படாமல் “அமைதி” காப்பாற்றப் படவேண்டும் என அரசு விரும்புகிறது.

ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததும், அதில் ஏற்பட்ட மனித உயிரிழப்பின் வலியை விட, அதன் சோகத்தை விட, ஐயையோ மதக்கலவரம் வந்து விடாமல் இருக்கவேண்டுமே குண்டடி பட்டுச் செத்த மக்களின் உற்றாருக்கு, சமூகத்தினருக்குக் கோபம் வந்து ஏதும் செய்யாமலிருக்க வேண்டுமே என்ற கவலையில் ராணுவத்தை ராஜஸ்தானுக்கு அனுப்புகிறது மத்திய அரசு. ஒரு இரண்டு நாள் துக்கம் அனுஷ்டித்து விட்டு பிறகு தங்கள் உற்றாரின் கோர மரணத்தையும், அந்த நிகழ்வையும் பற்றி சுத்தமாக மறந்து விட்டு தங்கள் வேலையைப் பார்க்கப் போகும் இந்து மனப்போக்கிற்கு “மன உறுதி” (resilience) பட்டம் தவறாமல் ஊடகங்களால் வழங்கப் படுகிறது. மும்பை ரயில் குண்டுவெடிப்புக்கு மறுநாளே சோகத்திலிருந்து மீண்டெழும் அந்த நகரின் “மன உறுதி” பற்றி சிலாகிக்கப்பட்டது (ஜெய்ப்பூர் விஷயத்தில் இரண்டு நாள் தாமதமானாலும், தவறாமல் ஊடகங்கள் இந்த சடங்கை செய்துவிட்டன). ஆனால் குஜராத் கலவரங்களில் பாதிக்கப் பட்ட, மன உறுதி மிக்க முஸ்லிம்களின் “காயங்கள்” “வடுக்கள்” வலிகள்” எல்லாம் அப்படியே ஆறவைக்கப் படாமல் வருடங்கள் கழித்தும், சம்பந்தமில்லாத நேரங்களிலும் மீண்டும் மீண்டும் நினைவு படுத்தப் படும். என்னே ஊடகங்களின் நடுநிலைமை, மதச்சார்பின்மை!

இதற்கு நடுவில் அரசு இதில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக சொல்லியதை அடுத்து, ராஜஸ்தானில் சிதைகள் வெந்து முடிப்பதற்கு முன்பாகவே, அண்டை நாடுகளுடனான உறவு பற்றி சர்ச்சை ஆரம்பித்து விட்டது. ஒரு தொலைக் காட்சி சேனலில் பேசிய வெளியுறவுத்துறை நிபுணர் ஜி.பார்த்தசாரதி, “அண்டை நாடுகளை விடுங்கள். கடந்த 3-4 வருடங்களில் நடந்த எல்லா குண்டுவெடிப்புகளிலும் இந்திய ஜிகாதிகளின் பங்கு தெளிவாக உறுதிசெய்யப் பட்டிருக்கிறது. நாம் அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கினோம்? இஸ்லாமிஸ்ட் ஜிகாதி தீவிரவாதத்தால் நம்மை விட மிகக் குறைவாக உயிர்களை இழந்த யு.எஸ், யு.கே, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் மிகமிகக் கடுமையான தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்களை இயற்றியிருக்கின்றன, குற்றவாளிகளைத் தண்டிக்கின்றன. தீவிரவாதத்தை ஒடுக்க என்று தனிப் படைகளையே அமைத்திருக்கின்றன. இது ஒன்றையுமே செய்யாத நாம் புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?” என்று கேட்டார். மிக நியாயமான கேள்வி.

சமீபத்திய குண்டுவெடிப்புகள் அனைத்திலும், பங்களாதேஷ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஹுஜி அமைப்பின் பெயர் முக்கியமாக அடிபடுகிறது. சிட்டகாங் மற்றும் இன்னும் சில நகரங்களில் ஜிகாதி தீவிரவாத முகாம்கள் இயங்குவதை இந்திய அரசே உறுதி செய்திருக்கிறது. இந்தியாவால் உருவாக்கப் பட்ட இந்த சிறிய நாடு இப்போதைய முக்கியமான ஜிகாதி தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்று. இது போக பங்களாதேஷ் எல்லைப் புற ஊடுருவல் மூலமும், ஆயிரக் கணக்கான திரைமறைவு ஜிகாதிகள் ஏற்கனவே இந்தியாவின் பல நகரங்களில் மையம் கொண்டுள்ளனர். ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளில் இவர்கள் சிலரின் பங்கும் உள்ளதாகக் கூறப் படுகிறது. இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும்போது ஏன் இந்தியா விமானத் தாக்குதல் நடத்தி பங்களாதேஷில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்கக் கூடாது? ஆற்றாமையுடன் நண்பர் ஒருவர் சொன்னார்: "Sword Fish என்ற படத்தில் ஜான் ட்ரவோல்டாவின் வசனத்தை இங்கே நினைவுகூர்கிறேன் - அவர்கள் இங்கே ஒரு விமானத்தை கடத்தினால் அங்கெ சில விமான நிலையங்கள் அழியவேண்டும். அவர்கள் இங்கே இரண்டு கட்டிடங்களை அழித்தால் நாம் அங்கே சில நகரங்களை அழிக்கவேண்டும்"
ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து அழித்த அமெரிக்கப் படைகள் தாலிபான்களைத் துரத்தி அழித்ததையும், 2002ல் நடந்த 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க மண்ணில் இன்றுவரை ஒரு தீவிரவாதத் தாக்குதல் கூட நடக்கவிலை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் ரேடார் திரையில் இல்லாத “மென்மையான இலக்கு”களை (soft targets) ஏன் தீவிரவாதிகள் தாக்குகிறார்கள் என்று பரிதாபமாகக் கேட்கிறார்கள். தீவிரவாதிகள் என்ன கேனையர்களா? இத்தகைய இலக்குகள் மீது தேர்ந்தெடுத்து அடிக்கடி தாக்குதல் நடத்துவது அவர்களுக்கு மிஅக் சாதகமான விஷயம் என்கிறார் பாதுகாப்பு நிபுணரும், ஓய்வுபெற்ற “ரா” அதிகாரியுமான பி.ராமன். சிறு நகரங்களில், குறைந்த அளவு ஜிகாதிகளை வைத்து எளிதாக ஒரு குழுவை உருவாக்கி செயல்படுத்துவது மிக எளிது. இந்தியா முழுக்க வர்த்தகம், சுற்றுலா, கல்வி இவற்றுக்குப் பெயர்போன பல சிறு நகரங்கள் உள்ளன என்பதால் இத்தகைய தாக்குதல் விளைவிக்கும் சமூக, பொருளாதார அதிர்ச்சிகளும் கடுமையாகவே இருக்கும்.




எனவே அரசு மிக உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், உடுமலைப் பேட்டையிலும், உடுப்பியிலும், குண்டூரிலும், நாசிக்கிலும் என எதிர்பாராத இடங்களில் எல்லாம் ஜிகாதிகள் தாக்குதல் நடத்தப் போவது உறுதி. மக்களின் உயிருக்கு உத்தரவாதம் தராத அரசு நீடிப்பதில் அர்த்தமில்லை, அது அகற்றப் படவேண்டும்.

வரும் தேர்தலில் ஜிகாதி தீவிரவாதம் தான் இந்தியாவின் தலையாய பிரசினையாக இருக்கவேண்டும். இருக்குமா? ஜிகாதிகளுக்கு நேர்முக, மறைமுக ஆதரவு அளிக்கும் அரசியல் கட்சிகள் மக்களால் கடுமையாகத் தண்டிக்கப் படுமா? அல்லது வீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா?

Friday, May 09, 2008

திராவிட திருக்குறள் பார்வைகள் இன்னொரு எதிர்வினை

சென்ற திண்ணை இதழில் மு.இளங்கோவன் இப்படி ஒரு எதிர்வினையை எழுதியிருக்கிறார்.

முதலில் ஒரு சில்லறை விஷயம். என் பெயரை நான் எழுதுவது போலன்றி “சடாயு” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பெயரைப் பல வகைகளில் எல்லா மொழிகளிலும் எழுதமுடியும் தான். ஆனால் ஒருவரைப் பெயர் சொல்லி அழைக்கையில் அப்பெயருடையவர் எழுதுவது போலவே எழுதுவது என்பது அடிப்படை நாகரீகம், பண்பு, இணைய ஒழுக்கம் (netiquette). இதிலும் கொள்கை, புண்ணாக்கு எல்லாம் கலப்பது, எனது பெயரை இப்படித் திரிப்பது என்பது அநாகரீகம்.

(“தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை” என்று தானே கம்பன் சொல்லியிருக்கிறான்? ஆமாம். ஆனால் கம்பன் சொன்னது போலவே எல்லாப் பெயர்களையும், எல்லாக் காலத்திலும், எல்லாரும் எழுதிக் கொண்டிருக்கிறோமா? தொல்காப்பியர் சொன்ன பெயர்ச்சொல் விதிகளின் படி தான் இப்போது எல்லாரும் பெயர் வைத்துக் கொள்கிறார்களா?)

மேலும் சொல்கிறார்:
// “அவரின் இணையப்பக்கத்தில் உள்ளஅவர்தம் கொள்கை முழக்கங்களையும் காணும்போது அவர் யார் என்பதையும், அவர் உள்ளத்துள் உறைந்துள்ள எண்ணங்கள் என்ன என்பதையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது”//

அடேயப்பா! ஒருவரது ஒரே ஒரு வலைப்பதிவைப் பார்த்தே இவ்வளவு தூரம் உளவறியக் கூடிய ஜித்தர்கள் எல்லாம் இருக்கிறார்களா? ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

// “கட்டுரையைப்பற்றி எழுதியுள்ளதைவிட கிறித்தவ மதம்,திராவிட இயக்கம் பற்றித் தாக்குவதை நோக்கமாகக் கொண்டு இயங்கும்” //

இது அபாண்டம். என்னுடைய கட்டுரையில் நான் தொட்டுக் காட்டிய மூன்று விஷயங்கள் சுருக்கமாக -

1. தமிழ்ப் பழம்பெருமை, நவீனத்துவம், கடவுள்மறுப்பு ஆகிய முரண்களை சமாளிக்கத் தெரியாத திராவிட இயக்கம் கால்டுவெல்லின் “ஆரிய திராவிட இனவாதத்தை” வைத்து ஒரு சட்டகம் உருவாக்கியது.
2. இந்தச் சட்டகத்தைக் கொண்டு திருக்குறளுக்கு கண்மூடித்தனமாக உரைகண்டது, அடிப்படை தர்க்க ஓட்டைகள், சொல் பயன்பாடு போன்றவற்றைக் கூட கண்டுகொள்ளாதது
3. இத்தகைய செயல்கள் மத்திய கால நிறுவன கிறிஸ்தவத்தின் DeHellenization முயற்சிகளின் மோசமான காப்பி போன்று இருந்தது
இதை இப்படிப் புளியைப் போட்டு விளக்கிய பின்னும், முத்திரை குத்துதல் மூலமே ஒரு வாதத்தை எதிர்கொள்ள நினைப்பவர்கள் பற்றி ஒன்றும் பேசுவதற்கில்லை.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, திராவிட இயக்கத்தின் பொதுவான “சட்டக” அணுகுமுறை குறித்து நான் கூறியிருந்தவற்றை அப்படியே மெய்ப்பிக்கும் வகையில் இந்த எதிர்வினையும் எழுதப் பட்டுள்ளது.

இப்படி எழுதிச் செல்கிறார்.
// “தமிழ்ச்சமூகத்தைப் பிளவுப்படுத்தி ஏமாற்றி வாழ்ந்தவர்கள் ஆரியர்கள்” //
// தமிழ் இலக்கியங்களையும்,தமிழர்தம் கலைகளையும் சமற்கிருதமயமாக்கிக் கொண்டு தமிழ்மூலத்தை அழித்தவர்கள் //
// பின்னர் வளவன், வழுதி,பாண்டியன், சேரன் என்ற பெயர்கள் மாறிஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன்,விஜயாலயன் வந்தன. தமிழ் நீச பாஷையானது.மக்கள் அடிமையாக்கப்பட்டனர். //

அடடா, என்ன அரிய கண்டுபிடிப்பு! அந்த “அடிமையாக்கப் பட்ட” தமிழினத்தில் தான் உலகெங்கும் தமிழ்ப் பெருமையை நிலைநாட்டிய ராஜராஜனும், ராஜேந்திரனும், குலோத்துங்கனும் தோன்றினரா? இன்றும் தமிழனின் சிற்பக் கலையைப் பறைசாற்றும் மாமல்லபுரமும், தஞ்சைப் பெருங்கோயிலும், திருவரங்கமும் தோன்றினவா?





இந்த “நீசபாஷையாக்கப் பட்ட” தமிழில் தான், தமிழின் அதிஉன்னத காவியங்களான கம்பராமாயணமும், பெரியபுராணமும், சிந்தாமணியும் படைக்கப் பட்டனவா? தமிழர் சமயத்தின் ஆணிவேர்களான சைவத் திருமுறைகளும், நாலாயிர திவ்யப் பிரபந்தமும் எழுந்தனவா? வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபனும், சங்கத் தமிழ்மாலை முப்பதும் செப்பிய ஆண்டாளும், தமிழ்விரகன், தமிழ்ஞானசம்பந்தன் என்றே தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட சைவப் பெருந்தகையும் உருவானார்களா?

இந்த அடிப்படையான, எளிமையான கேள்விகளைக் கூட சிந்தித்துப் பார்க்காமல், அது எப்படி தன்னை ஒரு சட்டகத்தில் அறைந்து கொண்டு ஒரு “முனைவர்” எழுதுகிறார்? சொல்லப் போனால் இந்தக் கேள்விகளை என் முதல் பதிவிலேயே எழுப்பியாகி விட்டது.

// முகத்தை மறைத்துக்கொண்டு எழுதும் சடாயுவுக்கும் அவர் போன்றவர்களுக்கும், ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் //

தொடக்கத்தில் ஜடாயுவின் ஜாதகமே தெரியும் என்ற ரீதியில் எழுதினார். இப்போது “முகத்தை மறைத்துக் கொண்டு”. என்னதான் சொல்லவரீங்க? “அவர் போன்றவர்கள்” என்பது யார்? திண்ணை என்பது சுயபுத்தியுள்ளவர்கள் படிக்கும் இணைய இதழ், திராவிய இயக்கப் பொதுக்கூட்ட மேடையல்ல என்று நினைவுபடுத்த விரும்புகிறேன்.

என்னை சில புத்தகங்கள் படிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். திண்ணை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான வரலாற்று அறிஞர் எஸ்.இராமச்சந்திரனின் “தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்” என்ற இந்த ஒரு கட்டுரையைப் படிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன்,
ஜடாயு

பின்குறிப்பு:

இதே கடிதத்தில் சம்பந்தமே இல்லாமல் வேத திருமணச் சடங்கில் வரும் ஒரு மந்திரத்தைப் பற்றிய “சட்டக” அபத்தக் கருத்து ஒன்றை அப்படியே போகிற போக்கில் உமிழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்.

// இவர்கள் திருமணம் செய்யும் பெண்ணை தூய்மை(புனிதம்)பெறும்பொருட்டு முதலில் சோமனும்,அடுத்த நாள் கந்தருவனும்அதற்கடுத்த நாள் உத்திரனும்,நான்காம் நாள் அக்கினியும் நுகர்ச்சிசெய்தபிறகு இவளை மணம்செய்தவன் புணரவேண்டும் என்ற மந்தரங்கள் அருவருப்பு ஊட்டும் தந்திர வித்தைதானே //

இதில் “இவர்கள்” என்பது யார்? பாரத நாடு முழுதும் ஏராளமான சமூகங்கள் வேதத் திருமணச் சடங்கில் நம்பிக்கை வைத்து அதன்படி மணம் புரிகின்றனர். அவர்கள் அத்தனை பேரையும் அவதூறு செய்திருக்கிறார். இதற்கும் எடுத்துக் கொண்ட பொருளுக்கும் என்ன சம்பந்தம்?

சம்பந்தமில்லையென்றாலும், தெரிந்துகொள்ள விழைபவர்களுக்காக இது பற்றிய எனது பழைய பதிவு ஒன்றை பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன்.

பிற்சேர்க்கை: ஒரு மணப்பெண்ணும், தேவதைகளும், திராவிட பகுத்தறிவும்

Thursday, May 08, 2008

ஒரு மணப்பெண்ணும், தேவதைகளும், திராவிட பகுத்தறிவும்

திராவிட இயக்கத்தைச் சேர்ந்த வெறியர்கள் இந்து சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமாக வசைபாடுவது தெரிந்த விஷயம் தான். சில சமயங்களில் பித்தம் தலைக்கேறி ஏதாவது ஒரு வேதமந்திரத்தையோ அல்லது வேத இலக்கியத்தில் உள்ள படிமத்தையோ எடுத்துக் கொண்டு, அதற்குப் “பொருள் கூறி” அது உலகத்திலேயே அருவருப்பான விஷயம் என்றெல்லாம் பிரசாரம் செய்வார்கள்.

உதாரணமாக, பாணிக்ரஹணம் எனப்படும் கைத்தலம் பற்றும் சடங்கின் போது மணப்பெண்ணை நோக்கிச் சொல்லப் படும் ஒரு மந்திரம்:

सोम: प्रथम: विविदे गन्धर्वो विविद उत्तर: ॥
तृतीयो अग्निस्ते पति: तुरीयास्ते मनुष्यजः ॥

ஸோம: ப்ரதம: விவிதே கந்தர்வோ விவித உத்தர:
த்ருதீயோ அக்னிஸ்தே பதி: துரீயாஸ்தே மனுஷ்யஜ:
(ரிக்வேதம் 10.85.40)


“முதலில் சோமனும், இரண்டாவதாகக் கந்தர்வனும், மூன்றாவதாக அக்னியும் உன்னை சுவீகரித்தனர். பெருமைக்குரிய தேவர்களால் சுவீகரிக்கப் பட்ட உன்னை, இறுதியாக மனிதனாகிய நான் வரிக்கிறேன்”

பார்ப்பனர்களின் இந்த மந்திரம் பெண்மையை இழிவு செய்கிறது, இழிவான பெண்ணை தூய்மைப் படுத்துவது என்பது தான் இதன் பொருள் என்று ஒரு அவதூறு. “மூன்று பேர் மணந்த பென்ணை நாலாவதாக மணக்கிறேன் என்று சொல்கிறான், எந்த மானமுள்ள ஆண்மகனாவது இப்படிச் செய்வானா?” என்பது “கற்பு என்பதே ஒரு பொய்க் கற்பிதம்” என்று பேசுவதாகச் சொல்லிக் கொண்ட இந்த இயக்கத்தின் இன்னொரு அவதூறு.

முதலில் இந்த மந்திரத்தின் தாத்பர்யம் என்ன? பிறந்தது முதல் தேவர்களின் ஆசிர்வாதத்தாலும், அனுக்ரஹத்தாலும் வளர்ந்த பெண்ணை, அவர்கள் ஆசியுடன் மனிதன், அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஏற்றுக் கொள்வது என்பது.

எல்லா வேதமந்திரங்களையும் போல, இதிலும் “தேவர்கள்” என்பவர்கள் ஆசாமிகள் அல்லர். அகமும், புறமும் உள்ள தெய்வ சக்தியின் குறியீடுகள். “சோமன்” என்பது எல்லா உயிர்களிலும் அடங்கியிருக்கும் பரம்பொருளின் ஸ்வரூபமான ஆனந்தம் என்ற தத்துவத்தைக் குறிப்பது, கந்தர்வன் என்பது மனத்தில் காமம் என்ற விதையை ஊன்றும் இச்சா தத்துவம். அக்னி என்பது தெய்வீக சக்தி ஓங்கி வளர்ந்து தன் உன்னத நிலையை எய்துவதன் குறியீடு. இந்த தெய்வ சக்தியே இகம்,பரம் என்ற இரண்டு விதமான சுகங்களையும் நோக்கி மனிதனை இட்டுச் செல்கிறது.

இதை ஒரு அழகிய கவிதையாகக் கண்டு அனுபவிக்கவும் இடமிருக்கிறது,

“சிறுமியாக இருக்கையில் முதலில் நீ நிலவைக் கண்டு மையல் கொண்டாய்
பின்னர் மேகங்களில் வழிந்தோடும் இசையில் மனம் பறிகொடுத்தாய்
பின்னர் ஆசைத் தீ உன்னைப் பற்றியது.
ஓ பெண்ணே
நான்காவதாக மனிதனாகிய நான் உன்னை வரிக்கிறேன்.
ஏற்றுக் கொள்.”

சோமன், நிலவு, மனம், ஆனந்தம் இவை அனைத்தும் வேதப் படிமத்தில் தொடர்புடையவை. கந்தர்வர்கள், இசை, கலைகள், மேகங்கள் இவையும்.

தத்துவமும், கவித்துவமும் ததும்பும் அழகிய மொழியில் சொல்லப் பட்ட இந்த மந்திரத்தில் அருவருப்பைக் காணும் திராவிட பகுத்தறிவு ஒருவிதமான மனப்பிறழ்வு நிலை என்று தான் கூற வேண்டும்.

பெண் இழிவானவள் என்று கூறவந்தால் தேவர்கள் அவளைத் தள்ளினார்கள் என்றல்லவா இருக்கவேண்டும்? ஆனால் இங்கே ஸ்வீகரித்தார்கள் என்று வருகிறது. மேலும் இந்த ஒற்றை மந்திரத்தை வைத்து ஒன்றும் சொல்ல முடியாது. திருமணச் சடங்கில் உள்ள எல்லா மந்திரங்களும் பெண்ணை மிக உயர்வாகக் கூறுகின்றன.


“பெண்ணே, அர்யமாவும் பகனும் உன்னை ஆசிர்வதிக்கட்டும், என் குலம் விளங்க வரும் வரப்பிரசாதம் நீ”

“வேதத்தை அறிந்த பகன் முதலியோர், இல்லறம் என்ற புனிதமான விரதத்தை ஏற்றனர். உன் கரம் பிடித்த நானும், அந்த வம்சத்தைச் சேர்ந்தவனானேன்.”

“ஏழு அடிகள் என்னுடன் நடந்துவந்த நீ என் உயிர்த் தோழியாகி விட்டாய். நீ ரிக், நான் சாமம். நீ பூமி, நான் ஆகாயம். நீ சொல், நான் பொருள். நீ ஆத்மா, நான் மனம். இனிய சொற்களை உடையவளே, என்னைப் பின் தொடர்ந்து வந்த நீ என் வம்சத்தை விருத்திசெய்வாய்”

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சில வருடங்கள் முன்பு, சேலத்தில் அதிகமாக வசிக்கும் ஒரு சமூகத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். திருமணத்திற்கு முந்தைய நாள் நிச்சயதார்த்தத்தின் போது ஒரு சடங்கு. சமூகப் பெரியவர் நடுவில் வந்து அமர்ந்தார். மணமகன், மணமகள் வீட்டார் இருபுறமும். சடங்கு ஆரம்பித்தது. மணமகனின் தந்தை மகளின் தந்தையிடம் ஒரு ரூபாய் கொடுத்தார், அதை அவர் மகளின் தாயிடம் கொடுத்தார், பெரியவர் சொன்னர் “இது மகளைப் பெற்று வளர்த்ததற்காக”. அடுத்தது இன்னொரு ரூபாய், “இது பாலூட்டியதுக்காக”. அப்புறம் ஒரு ரூபாய் “இது சீராட்டியதற்காக”. இப்படி ஒரு பதின்மூன்று ரூபாய் வரை போயிற்று. இந்தப் பரிமாற்றம் முடிந்ததும் பத்திரிகை வாசிக்கப் பட்டது. பக்கத்தில் இருந்த பெரிசு ஒருவர் “அந்தக் காலத்தில பதிமூணு பணம் அப்படின்னு குடுப்பாங்க, பெரிய தொகை அது.. மகளைப் பெத்துத் தந்ததுக்கான கடனைத் தீர்க்கணும் இல்லையா” என்று பேசிக் கொண்டிருந்தார்.

கிறிஸ்தவ திருமண நிச்சயதார்த்தங்களில், மணப்பெண் கையில் அணியும் மோதிரம் எதைக் குறிக்கிறது? அவள் முதலில் கர்த்தருக்கு மணமுடிக்கப் பட்டு பின்பு மனிதனுக்கு மனைவியாக வருகிறாள் என்று சொல்லுவார்கள். கிறிஸ்தவ கன்யாஸ்தீரிகள் தங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளும் சடங்கின் போது ஏசுவின் மணமகள்கள் (Brides of Jesus) ஆவதாகவே கூறுவார்கள்.

இது போன்ற பல சடங்குகள் தமிழ்நாட்டின் பல சமூகங்களின் திருமணங்களில் உள்ளன. இதில் எல்லாம் எந்த அருவருப்பும் தென்படவில்லையா? ஆரிய, வந்தேறி குணங்கள் எதுவும் தென்படவில்லையா? பகுத்தறிவுப் பகலவனுக்கே வெளிச்சம்.

(இணையத்தில் பதிப்பிக்கப் படாத எனது பழைய கட்டுரை ஒன்றின் மீள்பதிவு இது)

Tuesday, May 06, 2008

கீதை இந்துமதநூலா, தத்துவநூலா?: எதிர்வினை

கீதைவெளி என்ற தனது சமீபத்திய பதிவு ஒன்றில் "கீதை எக்காலத்திலும் ஒரு மத நூலாகக் கருதப் படக் கூடாது. தத்துவ நூலாகவே கருதப் பட வேண்டும்" என்ற கருத்தை முன்வைத்து ஜெயமோகன் எழுதியிருந்தார்.

இது பற்றி கற்றறிந்த நண்பர்கள் சிலர் விவாதிக்க நேர்ந்தது. அவர்கள் முன்வைக்கும் சில முக்கிய கேள்விகளையும், விஷயங்களையும் இங்கு பதிவு செய்கிறேன். இதனை ஒரு கடிதமாக ஜெயமோகனுக்கும் அனுப்பியிருக்கிறேன்.

ஹரி கிருஷ்ணன்:

// ஜெ.மோ: புத்தகத்தின் மீது மரியாதை உள்ள கீழைநாட்டினன்தான் நானும்" என்று கூறும் நடராஜ குரு, "அதன் முதல்வரியைப் படி" என்கிறார். நித்யா படிக்கிறார். "கீதை இந்துமதத்தின் புனித நூல்" என்று முதல்வரி. நடராஜகுரு "பிரஸ்தானத் திரயம் என்றால் என்ன தெரியுமா?" என்று நித்யாவிடம் கேட்கிறார். நித்யா, "உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், கீதை" என்கிறார். "இப்போது நீயே கூறினாய் கீதை மூன்று தத்துவ நூல்களில் ஒன்று என்று. அது மத நூல் என்று இவர் கூறுகிறார். மதநூலா தத்துவநூலா, எது சரி?" //

தெளிவான குழப்பம்.

பிரஸ்தான திரயம் என்றால் என்ன தெரியுமா என்று கேள்வி. உபநிடதம், பிரம்ம சூத்திரம், கீதை என்று பதில். 'உபநிடதம், பிரம்ம சூத்திரம், கீதை ஆகிய மூன்றும் பிரஸ்தான திரயம்' என்பது ஒரு விடை. அந்த விடை 'பிரஸ்தான திரயம்' என்றால் என்ன என்பதற்கான முழுமையான விடையாகாது. திரயம் என்றால் மூன்று. பிரஸ்தானம் என்ற சொல்லுக்கு என்ற பொருள் என்கின்ற டெஃபனிஷன் (அவர் பார்வையின்படி) சொல்லப்படவில்லை. இதைச் சொன்னால்தான் வாதத்தின் அடுத்த நிலைக்கே போகமுடியும். பிரஸ்தானம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? அதைச் சொல்ல வேண்டாமா?

பிரம்ம சூத்திரத்துக்கு எழுதிய முன்னுரையில் டிஎம்பி மகாதேவன் இவ்வாறு சொல்கிறார். "The three basic texts of Vedanta are te Upanisads, the Bhagavad-gita and the Brahma-sutra. Together they are referred to as prasthana-traya, triple canon of Vedanta".

இந்த அடிப்படையில் பார்த்தால், கீதை ஒரு மதநூல் ஆகாது என்றால், வேதாந்தத்துக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை; வேதாந்தத்துக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை என்றால் வேததத்துக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை. பேஷ்!

(ஜடாயு: இதே canon என்ற சொல்லை மூலநூல் என்பதைக் குறிக்க முதலில் பயன்படுத்தும் ஜெ.மோ, பின்னர் கீதை "பிரஸ்தானத்ரயங்களில்" ஒன்று, ஆனால் canon அல்ல என்கிறார்.)

// ஜெ.மோ: "டாக்டர் ராதாகிருஷ்ணன் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்றால் உரிய காரணம் இருக்கும்" என்கிறார் நித்யா. பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு நித்யாவுக்கு கிடைக்கிறது. சென்னை விவேகானந்தா கல்லூரியில் அவர் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றும் காலகட்டம் அது. அக்கேள்வியை ராதாகிருஷ்ணனிடமே கேட்கிறார். அவரால் பதில் கூறமுடியவில்லை. பதிப்பாளர் அவசரப்படுத்தியதனால் எழுதிய நூல் அது என்று கூறி நழுவுகிறார். நடராஜ குருவிடம் இதைக் கூறிய போது நடராஜகுரு "கவனமில்லாது எழுதப்படும் நூல்கள் ஆபத்தானவை" என்கிறார். //

உட்டாலக்கடி. எழுப்பப்பட்ட கேள்வி முன்னுரையில் ஒரு வரியைப் பற்றியது. ராதாகிருஷ்ணன் சொன்ன பதிலோ அந்த ஒருவரியைப் பற்றியது. அளிக்கப்படும் தீர்ப்போ, ராதாகிருஷ்ணன் எழுதிய முழு உரையுமே அவசரத்திலும் கவனமில்லாமலும் எழுதப்பட்டது' என்பது போன்ற ஒரு தோற்றம். டாக்டர் ராதாகிருஷ்ணனுடைய உரை காரிலிருந்து வெளியே வீசப்படவேண்டிய ஒன்று. ஏனென்றால் அது கீதையை இந்து மதத்தின் புனித நூல் என்று முன்னுரையில் ஓரிடத்தில் குறிக்கிறது. ஆகவே நாம் என்ன முடிவுக்கு வரவேண்டும்? கீதை ஒரு மதநூல் அல்ல என்றுதானே?
பிறகு, ஜெயமோகன் எழுதியிருக்கும் இந்த வரிக்கு என்ன பொருள்?

// ஜெ.மோ: மாறாக 'என்னைப்பற்றி விவாதிப்பாயாக' என்று அறைகூவும் மதநூலாக நிற்கிறது கீதை. இந்து மன அமைப்பும் சரி, இந்திய சட்டமும் சரி, அதை ஆதரிக்கின்றன. //

இப்ப இந்தக் கட்டுரையைக் காரிலிருந்து வெளியே எறியவேண்டுமானால் எறிந்துவிடலாம். கம்ப்யூடரிலிருந்து வெளியே எறிய முடியவில்லை. எப்படி அதைச் செய்வது என்று ஜெமோ சொல்லட்டும்.




மதநூலுக்கும் தத்துவ நூலுக்கும் உள்ள வேறுபாடு என்ன? தத்துவம் என்ற சொல்லுக்கு என்ன வரையறை? Philosophy, philosophical போன்ற எல்லாச் சொற்களுக்கும் தத்துவம் என்ற சொல் இணையாகுமா? தத்-துவம் (நீ அது) என்று சொல்லும்போதே அதற்குள் இந்து மதம் வந்துவிடுகிறதே, அதன்பிறகு, தத்துவநூல் என்று அதைச் சொன்னால் 'அது இந்து மதத்தின் புனிதநூல்' என்ற ஒரே வரியில் தரநிர்ணயம் செய்யப்பட்டு வெளியில் வீசப்பட்ட உரையின் கதிக்கு இதுவும் ஆளாகாதா?

அது ஒருபக்கம். தத்துவம் என்ற சொல்லைப் பொதுவான ஒன்றாகவே வைத்துக் கொள்வோம். திருக்குறள் தத்துவநூல் என்றால் புரிந்துகொள்ள முடிகிறது. பல குறட்பாக்களுக்கு மதம் சாராமல் விளக்கம் தரமுடியாது என்றபோதிலும். விதுரநீதி, அர்த்த சாஸ்திரம், Art of War எல்லாமும் தத்துவங்களை, மதம் கடந்த தத்துவங்களை, எடுத்துச் சொல்கின்றன என்று சொன்னால்கூட புரிந்துகொள்ள முடிகிறது. கீதையோ 'எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண்புகு' என்று சொன்ன நூல். அப்படியானால், கடவுளுக்கும், கடவுளைச் சரண்புகுவதற்கும் மதத்துக்கும்--மிகக் குறிப்பாக இந்து மதத்துக்கும்--சம்பந்தமில்லை என்று சொல்லலாம்.

// ஜெ.மோ: தினம் காலை ஒரு சுலோகம் படித்து கும்பிடும் பக்தர்கள் தவிர வேறு எவரும் கீதையைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கும் போதே இந்த பிரம்மாண்டமான விவாதப்பரப்பில் ஒரு குரலாக ஆகிவிடுகிறார்கள். //

இதுவும் எனக்குப் புரியவில்லை. பகவத் கீதையை யாராவது வழிபடுகிறீர்களா? அன்றாடமோ அல்லது வாரம் ஒருமுறையோ அதிலிருந்து பாராயணம் செய்து, தூப தீபம் காட்டி, கீதையை யாராவது கும்பிடுகிறீர்களா? அது என்ன குரு கிரந்த ஸாஹிபா? 'கீதையின்மேல் ஒரு வழிபாட்டு உணர்வு இருக்கக் கூடாது' என்றும், 'கீதையை அன்றாடம் வழிபடும் மக்கள்'என்றும் கட்டுரையில் வேறு இடங்களில் சொல்கிறார். என்னிடம் கீதைக்கு ஆறு வேறுவேறு உரைகள் இருக்கின்றன. நான் அவற்றைப் படிக்கத்தான் பயன்படுத்துகிறேன். வழிபடுவதில்லை. எனக்கு அனுபவமில்லாத காரணத்தால் கேட்கிறேன். உங்களில் எத்தனை பேர் கீதைக்கு ஊதுவத்தி ஏற்றிவைத்து, கற்பூரம் காட்டி கன்னத்தில் போட்டுக்கொண்டு விழுந்து விழுந்து நமஸ்கரிக்கிறீர்கள்?

(ஜடாயு: கீதை மட்டுமல்ல, எல்லா நூல்களையும் கலைமகளின் வடிவமாகக் கருதி சரஸ்வதி பூஜையன்று வழிபடும் மரபு உள்ளது. இந்தக் கலாசாரத்தைப் பற்றி இங்கு ஜெ.மோ குறிப்பிடவில்லை, அதனை அவர் ஏளனம் செய்யவும் மாட்டார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நாவில் சரஸ்வதி உறைவது என்ற படிமம் பற்றி ஒரு ரிக்ஷாக் காரனுக்கு இருந்த புரிதல் கூட ஈவேராவுக்கு இல்லை என்று இன்னொரு கட்டுரையில் எழுதியிருந்தார்)

சேதுபதி:

சாரே, என் குழப்பமும் இதுதான்.. ஏன் தத்துவத்தையும், மதத்தையும் மிகத் தெளிவாக, தனியாகப் பிரித்து வைத்துவிட முடியுமா? 'புல்லாகிப் பூடாகி புழுவாகி,மரமாகி' என்று மாணிக்கவாசகர் உருகுவது மதம் என்றால் அப்படிப்பட்ட மதமும், பக்தி உணர்வும், ஒரு தத்துவ விசாரம் இல்லாமல் தனியாக எங்கோகாற்றிலிருந்து வருமா? எந்த வித விசாரமும் இல்லாமல் கடவுளே கதி என்றுகாலில் விழுந்து கிடப்பதற்கும் சரணாகதித் தத்துவம் என்கிறார்களே? இப்படிப்பட்ட அமைப்பு சார்ந்த சாய்வை எதிர்த்துதானே எக்ஸிஸ்டென்ஷியலிஸம் என்ற **தத்துவம்** ஒன்று கிளம்பி ஊரெல்லாம் வெறுமை பரப்பிச் சென்றது?

சரி, கீதையை மதநூல் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரு தத்துவம் என்றுமட்டுமே வைத்துக் கொள்வோம். அப்படி கீதை மதநூல் இல்லை என்று டிக்ளேர்செய்தபின் என்ன செய்ய வேண்டும்? முதலில் அதை பக்தி நூல் ஷெல்ஃபில் இருந்து தத்துவ நூல் ஷெல்ஃபில் வைத்துவிட வேண்டுமா? என்னிடமிருக்கும் ஷெல்ஃபில் ரமணரும், சார்த்தரும் அருகருகே இருக்கிறார்கள். இனிமேல்தான் பிரிக்க வேண்டும் :-)
இப்படி வகைப்படுத்துவதன் நோக்கம் என்னவென்று எனக்கு இன்றுவரை
புரியவில்லை.

1) கீதை மத நூல் இல்லை என்று டிக்ளேர் செய்துவிட்டால் எல்லா மதத்துக்குக்காரர்களும் அதைப் படிப்பார்கள் என்ற நல் எண்ணமா?

2) கீதை போன்ற **தத்துவங்கள்** தேவைப்படும் மதம் சாராத எழுத்தாளர்கள்ஒளிந்து ஒளிந்து கீதை படிப்பதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்பதாலா?

3) இல்லை இப்போது டிக்ளேர் செய்துவிட்டால் இன்னும் ஐம்பது வருடங்களில்மொத்தமாக கீதை உருவானதே பைபிளிலிருந்துதான் என்று சொல்லிவிடலாம் என்பதாலா?

யாருக்காவது பிரிந்தால் விளக்குங்கள்.

பி.கு: அடுத்து ஜெமோ எது இந்து மதத்தோடு தொடர்பில்லை என்று சரியாகக் கண்டுபிடித்து 65656 என்ற நம்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புபவர்களுக்கு 'பதஞ்சலி யோக சூத்திரத்தில் நாட்டார் வழிபாடுகளின் கூறுகள்' என்ற புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

ஆனந்தர்:

ஜெயமோகன் கம்யூனிஸ்ட்டுகள் பல காலமாகச் சொல்லிவருவதைத்தான் சொல்லுகிறார்.ஹிந்து தத்துவம் என்ற ஒன்று கிடையாது. ஹிந்து மதம் என்கிற பார்ப்பனீய கருத்துமுதல்வாதம் மட்டுமே உண்டு. (ஆனால், அதே கம்யூனிஸ்ட்டுகள் பௌத்த தத்துவம் என்று பேசுவார்கள்.)
ஹிந்து மதத்தின், ஏன், கீழை நாட்டு பாகன் மதங்களின் சிறப்பே அவை அனைத்தும் தத்துவத்தின் பிண்ணணியில் இருந்து எழுந்தவை என்பதுதான். இந்து, பௌத்த, சமண, டாவோ, ஷிண்டோ, கன்ஃபூஷிய என்று அனைத்து மதங்களுமே தத்துவத்திலிருந்து எழுந்தவை. இதுதான் ஆபிரகாமிய மதங்களுக்கும் (இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம்), ஏனைய அறநெறிகளுக்கும் உள்ள வித்தியாசம். இது மிகவும் அடிப்படையான விஷயம். ஆனால், ஜெயமோகன் ஏன் இந்த அடிப்படையான உண்மையை அறியாதவர் போல் எழுதவேண்டும்?

ஏனென்றால், இந்த தத்துவத்தின் தொடர்பை எடுத்துவிட்டால் இருப்பது வெறும் புராணங்களும், சடங்குகளும் மட்டுமே, ஆபிரகாமிய மதங்கள் போல. அப்படிப்பட்ட குறுகிய கட்டமைப்பாக ஹிந்து மதத்தை மாற்றுவதில், மற்ற ஆபிரகாமியர்களுக்கு பல லாபங்கள் உள்ளன. தத்துவத்தின் ஆதாரம் இல்லாவிட்டால் ஹிந்து மதத்தை எளிதாக அழித்துவிடலாம். மேலும், தத்துவங்கள் இல்லாத ஹிந்து மதத்திற்கும், கிருத்துவ இஸ்லாமிய மதங்களுக்கும் வேறுபாடு இல்லை என்றும் நிறுவுவதை இது எளிதாக்கலாம்.

எனவே, ஹிந்துக்கள் மதம் மாறுவதால் எதையும் இழந்துவிட்டதாக உணரப்போவதில்லை. இது மதம் மாறுபவர்களுக்கு மிக அவசியத் தேவை. இந்த தேவையை பூர்த்தி செய்ய ஜெயமொக்கன் துணைபோகிறாரோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை .

புத்திசாலித்கனமாக, கம்யூனிஸ்ட்டுகள் செய்கின்ற அதே காரியத்தை செய்கிற ஜெயமோகன், கம்யூனிஸ்ட்டுகளை எதிர்க்கத் தேவையான காரணிகளையும் ஆதரித்துவிடுகிறார். இதுதான் ஜெயமோகன ஜாலம். மீனுக்குத் தலையை காட்டு, பாம்புக்கு வாலை காட்டு என்கிற புத்திசாலித்தனம்.
கீதையை விமர்சிப்பவர்கள் மற்ற மத நூல்களை ஏன் விமர்சிப்பதில்லை என்ற கேள்வியின் மூலம் அவர் கீதையை மதிக்கும் ஹிந்துக்கள் முக்கியமாக ஹிந்து தத்துவவாதிகளின் தேவையை பூர்த்தி செய்துவிடுகிறார். அவர்களது கண்கள் அவர் கண்காட்டி வித்தையினால் மறைக்கப்படும் மற்ற திருகுத்தாளங்களில் இருந்து மறைக்கப்படுகின்றன.

ஹிந்து தத்துவக் குழந்தைக்கு லாலிபாப் வாங்க காசு கொடுத்து வெளியே அனுப்பிவிட்டு, ஆபிரகாமிய காதலியின் கால்பிடிக்க ஜெயமோகன் போடுகிற வெற்றிகரமான ஜெயமொக்கைதான் ஹிந்து மதத்திற்கு தத்துவங்களோடு தொடர்பற்றவை என்கிற கருத்துக்களும்.

ஜடாயு:

// ஜெ.மோ: கீதை மூலநூல் என்றால் கீதையை முழுமையாக எதிர்க்கும் ஒர் இந்து ஞானமரபை எங்கே கொண்டு சேர்ப்பது? பல்வேறு ஆதிசைவ மதங்களுக்கும் சாக்தேய மதப்பிரிவுகளுக்கும் கீதை ஏற்புடைய நூல் அல்ல. //
// ஜெ.மோ: இன்று கீதையைப் பற்றிய ஒரு விளக்கமாவது எழுதாத ஒரு இந்து அறிஞர் இல்லை என்று கூறுமளவுக்கு கீதை விளக்கங்கள் கிடைக்கின்றன. //

இந்த இரண்டு இடங்களிலும் சொல்லவருவது முரணாக உள்ளதே! இல்லாத கற்பனை இந்து ஞானமரபைப் பற்றிக் கூட ஜெ.மோ கவலைப் படுகிறார் போலிருக்கிறது!

நிற்க. கீதையை எந்த இந்து மரபும் தத்துவ அளவில் முழுமையாக எதிர்க்காது, எதிர்க்கவும் முடியாது. "உபநிஷதங்கள் பசுக்கள், அவற்றின் பாலைக் கறந்து தருபவன் கோபாலன்" என்று கீதைப் பாயிரம் கூறுகிறது. அதனால், உபநிஷதங்களின் சாரமான கீதையை *முழுமையாக* மறுக்கும் மரபு, சுருதியாகிய வேதத்தையே கருத்தளவில் மறுத்ததாகும். சுருதியை மறுப்பது இந்து மரபே அல்ல.

முரண்பாடுகள் பெரும்பாலும் சமய சம்பிரதாயங்கள் தொட்டே இருக்கும். கிருஷ்ணனை விஷ்ணு அவதாரம் என்னாமல் வேதாந்தத்தை எடுத்துரைத்த ஜகத்குருக்களில் ஒருவன் என்று கொண்டால் அந்த முரணும் கிடையாது.

சைவ தத்துவங்கள் பெரும்பாலும் கீதையுடன் இயைந்தே உள்ளன. ஜெயமோகன் குறிப்பிடும் அதே சுவாமி சித்பவானந்தர் தமது புகழ்பெற்ற திருவாசக உரையில் ஏராளமான கீதை சுலோகங்களை இயைபுக்காக மேற்கோள் காட்டுகிறார். திருமந்திரத்தையும், தாயுமானவர் பாடல்களையும் எடுத்துக் கொண்டால் அவை கூறும் எல்லா யோகசாதனை முறைகளும் அடிப்படையில் கீதை கூறுபவையே.

சாக்தம் சங்கரரின் அத்வைத வேதாந்தத்தை முற்றிலுமாக ஏற்றுக்கொண்ட ஒரு சமயமரபு. அது எவ்விதம் கீதையுடன் முரண்படும்? ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள "அண்ணா" அவர்கள் எழுதிய அழகிய கீதை உரையில் பல இடங்களில் தேவாரம், திருமுறைகள், சக்தி தந்திரங்களில் இருந்தும் மேற்கோள்கள் உள்ளன. தட்சிணாசாரம் என்றும் சாக்த மரபில் தோய்ந்த தேவி உபாசகர் அண்ணா. அவர் லலிதா சகஸ்ர நாமத்திற்கு எழுதிய உரையிலும் பல இடங்களில் கீதை மேற்கோள்கள் உள்ளன.

சேஷாசலம்:

என் கேள்வி எளிமையானது. ஏன் அது ஒரு மத நூலாகவும் அதே நேரத்தில் தத்துவ நூலாகவும் இருத்தல் கூடாது? மத நூல் என்று அறிவித்தால் அதில் தேடல் போய் விடும், பக்தி நிலைத்து விடும் எதிர்ப்பு அதிகரிக்கும் என்கிறார். ஏன் பக்தியுடன் தத்துவச் சாரத்தை அறியக் கூடாது??நம்மாழ்வாரை அப்படி அணுகுவதில்லையா? இதே லாஜிக்கின் படி நம்மாழ்வாரின் பாசுரத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை, பக்திக்கும் சம்பந்தம் இல்லை .. இப்படியே போனால், ஜெயமோகனிடமிருந்து பின்வரும் பொன்மொழிகளை எதிர்பார்க்கலாம்.

1. கோவில் கட்டிடக் கலை, சிற்பக் கலைக்கும் இந்துமதத்திற்கும் தொடர்பு கிடையாது
2. குல தெய்வங்களுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது
3. இயற்கை வழிபாட்டிற்கும் இந்து மதத்திற்கும் தொடர்பு கூடாது
4. கோவில் பூஜைகளுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது
5. விபூதி, நாமம் ஆகியவற்றுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது
6. கோவில் பிரசாதத்திற்கும் கோவிலுக்கும் சம்பந்தம் கிடையாது
7. கோவிலுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது
8. கணவனுக்கும் மனைவிக்கும் சம்பந்தம் கிடையாது
9. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் தொடர்பே கிடையாது
10. மழைக்கும் நீருக்கும் சம்பந்தம் கிடையாது