Monday, December 31, 2007

அன்பின் திருவுருவம் அம்மாச்சி

மனம் நெகிழ வைக்கிறது மாதா அம்ருதானந்தமயி பற்றிய இந்த 7 நிமிட படம் (ஆங்கிலம்).



"ஈசன் ஆராணுன்னு சோதிச்சால்.. நிங்ஙளே எண்டெ ஈசனாணு.. ஈ காத்தும், கடலும், சிங்கத்திண்டெ கத்துவதும், குயிலிண்டெ பாட்டும்.. எல்லாம் எனக்கு ஈசனாணு" - ஆங்கில ஒலிவடிவத்தின் பின்னணியில் கேட்கும் இந்த அத்வைத ஞான அமுதம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

உலகனைத்தையும் ஆதரவில் அணைத்து ஆறுதல் தருகின்றது அன்னையின் அளப்பரிய அன்பு நெஞ்சம்.

Thursday, December 27, 2007

கிறிஸ்தவம் என்கிற கோகோ கோலா

“பறவைகளுக்குக் கூடு உண்டு, விலங்குகளுக்கு குகைகள் உண்டு, மனித குமாரனுக்குத் தலைசாய்க்க இடமில்லை” - மத்தேயு 8:20

இணையத்தில் வேறு எதற்காகவோ மேய்ந்துகொண்டிருக்கையில் நல்ல மேய்ப்பருடைய சாம்ராஜ்ய விரிவாக்கத் திட்டங்கள் பற்றிய பல விவரணங்களில் தடுக்கி விழ நேர்ந்தது. அனேகமாக எல்லா உலகளாவிய மதப்பிரசார, மதமாற்றத் திட்டங்கள் பற்றிய வலைத்தளங்களிலும் உலகத்தை கிறிஸ்தவ மயமாக்கி ஆக்கிரமித்தல் என்ற தங்கள் ஆதிக்க உள்நோக்கத்தை எந்த வித தயக்கமும், குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தெளிவாகவே சொல்லிவிடுகிறார்கள். பாசாங்கு செய்யும் தெருவோர கிறிஸ்தவ பஜனைக்காரர்கள், சுவிசேஷக் கூச்சல்காரர்கள் இவர்களுடன் ஒப்பிடுகையில் அவர்களது எஜமானர்களின் வெளிப்படையான போக்கைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஜோஷுவா ப்ராஜெக்ட் (Joshua Project) எனப்படும் இத்தகைய ஒரு திட்டத்தின் வலைத்தளத்தில் உலகெங்கும் உள்ள “சென்றடையாத மக்களுக்கு” (unreached peoples) இவர்கள் நற்செய்தியைக் கொண்டு சென்று “முடிக்கப் படாத பணியை முடிப்போம்” என்று அறைகூவுகிறார்கள். முகப்பிலேயே பாரத வரைபடம் “வரைபடங்கள், புள்ளிவிவரங்கள், மேலும்” என்கிறது. குண்டு வைத்தல் (planting a bomb) என்பதற்கு ஈடாக சர்ச் வைத்தல் (Church Planting) என்ற சொல்லாடலை சரளமாகப் பயன்படுத்துகிறார்கள். தேசவாரியாக, மொழிவாரியாக உலகெங்கும் உள்ள மக்கள் குழுக்களின் பட்டியல், அதில் ஒவ்வொரு குழுவினரின் மக்கள் தொகை, அதில் எத்தனை சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள், எத்தனை சதவீதம் மதப்பிரசாரகர்கள் (evangelicals) என்ற விவரங்கள். இந்தியாவைப் பொறுத்த வரையில் மக்கள் குழுக்கள் என்பதில் சாதிகள் வருகின்றன. மொழிவாரியாக “தமிழ்” என்று தேடி பட்டியலிட்டால் [1] அடவியார், அத்தப்பு சிங்கா, ஆதி ஆந்திரா, ஆதி திராவிடா என்று ஆரம்பித்து விடுகிறது. முன்னேற்ற அளவு (progress scale) என்பதில் ஒவ்வொரு சாதியிலும் எத்தனை சதவீதம் மேய்ப்பரின் ஆடுகளாக மாறியிருக்கிறார்கள் என்று காண்பிக்க சிவப்பு, பச்சை, நீலம் என்று வண்ணக் குறியீடுகள் வேறு!

மகா கீழ்த்தரமான, பிளவுபடுத்தும் சாதி அரசியல் நடத்தும் இந்திய அரசியல்வாதிகளிடமோ அல்லது வாக்காளர்களின் சாதி எண்ணிக்கையையே முக்கிய அளவீடாக வைத்து “அறிவியல் பூர்வமாக” தேர்தல் கணிப்புகள் கூறும் பிரணய் ராய் குழுவிடமோ கூட இந்த அளவு நேர்த்தியாக சாதிப் பட்டியல் போடும் அளவுக்கு எண்ணமோ, வசதியோ இருக்காது என்று தோன்றுகிறது. சாதீயத்தை வேரோடு ஒழித்து, சமத்துவத்தை நிலைநாட்டும் கர்த்தரின் சாம்ராஜ்யம் புல்லரிக்க வைக்கிறது.

சர்வதேச வர்த்தக நிறுவனங்களின் சேல்ஸ் குழுக்கள் பொறாமைப் படும் அளவுக்கு திட்டம் தீட்டுகிறார்களே என்று யோசித்துக் கொண்டே இருக்கும்போது, கண்ணில் பட்டது மதமாற்ற பிரசாரகர்களுக்கான “உலக மதமாற்ற நிலவரம்” என்னும் ஒரு பயிற்சிக் கையேடு [2]. அதில் 12-வது பக்கத்தில் உள்ள ஒரு படம் இதோ:




“உலகின் எல்லை வரை நற்செய்தி”

‘கோக்’கால் ஆன உலகம்:

10% கோக் ரசிகர்கள் (ஏசுவின் உண்மையான அடியாள்கள்)
20% கோக் அருந்துபவர்கள் (பொதுவான கிறிஸ்தவர்கள்)
40% கோக் அருந்தாதவர்கள் (நற்செய்தி செல்லும் இடங்களில் இருந்து, ஆனாலும் மனம் திருந்தாதவர்கள்)
30% கோக் தெரியாதவர்கள் (நற்செய்தி இன்னும் சென்று சேராதவர்கள்)

இது ஒரு உதாரணம் மட்டும் அல்ல. தங்கள் போற்றுதலுக்குரிய தேவகுமாரனின் செய்தியின் மதிப்பு என்ன, அதை எப்படி மார்க்கெட் செய்யவேண்டும் என்ற இவர்களது எண்ண ஓட்டத்தையும் இது துல்லியமாகப் பிரதிபலிக்கிறது. இதே பயிற்சிக் கையேட்டில் (பக்கம் 22), சீனாவில் கிறிஸ்தவம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்று உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள். 1948-ல் 1 மில்லியனுக்கும் குறைவாக கிறிஸ்தவர்கள் இருந்த சீனாவில் இன்று 90 மில்லியன் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்களாம். ஒவ்வொரு நாளும் 24,000 புதிய சீன கிறிஸ்தவ விசுவாசிகள் தேறுகிறார்களாம். இன்றைய கணக்குப் படி வட அமெரிக்காவை விட அதிகம் கிறிஸ்தவர்கள் சீனாவில் இருக்கிறார்களாம். “தி இந்து” என்று பெயர் வைத்துக் கொண்டு, இந்துப் பண்பாட்டிற்கும், சமுதாயத்திற்கும் குழிபறிக்கும் வேலை செய்யும், மாவோவை ஆராதிக்கும் மவுண்டுரோடு புரட்சியாளர்கள், கம்யூனிசத்தைக் கரைத்துத் தள்ளும் இந்த ஆபிரகாமின் ‘அபின்’ மழை பற்றி ஏன் ஒன்றுமே சொல்வதில்லை?





லாவோட்சுவும், கன்பியூஷியசும், பௌத்தமும் வளர்த்த பழைய ஞான வயலில் கோகோ கோலாவைப் பொழிந்து நிமிடத்தில் அதைக் காலி செய்து விடலாம். என்னே தேவனின் மகிமை!

இன்னொரு வலைத்தளத்தில் கர்நாடகத்தின் லிங்காயத் எனப்படும் வீரசைவ சமூகத்திற்குள் மதமாற்றம் செய்வதற்காக அனுப்பப்பட்ட பிரசாரகர்கள் “எவ்வளவோ வருடம் ஊழியம் செய்தாலும் இந்த சமூகத்தில் ஒரு பயலும் கர்த்தரின் நற்செய்தியைப் புரிந்துகொள்ள முடியாத பாவிகளாக இருக்கிறார்களே” என்று புலம்பித் தீர்க்கிறார்கள். முதலீட்டுக்குத் தக்க லாபம் இல்லை என்றால் எப்படி நடத்துவது வியாபாரம்? நியாயம் தானே? ஆனால் உலகளாவிய மனித நேயத்தையும், சிவ பக்தியையும் போதித்து, சாதிக் கொடுமைகளை எதிர்த்துப் போராடிய மாபெரும் சீர்திருத்த வாதியான பசவேஸ்வரர் நிறுவிய இந்து சமயப் பிரிவினைச் சேர்ந்த இந்த சமூகத்தினருக்கு ஏசுவின் இரத்தத்தாலோ, அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாலோ என்ன பிரயோஜனம் என்று ஏன் இந்த வியாபாரிகள் நினைப்பதில்லை? ஒரு அமைதியான, முன்னேற்றம் விழையும், ஆன்மிகத்தைப் பின்பற்றும் சமூகத்திற்கு உள்ளே நுழைந்து அதைக் குலைக்க வேண்டும் என்ற நோக்கமே அருவருக்கத் தக்கதாக இல்லையா? வன்முறையையும், வெறுப்பையும், கைக்கொள்ளாத இத்தகைய சமூகங்களில் இருந்து இந்த மதப்பிரசாரகர்கள் பாடம் அல்லவா கற்றுக் கொள்ள வேண்டும்?

இப்படிப் பட்டியல் இடுவதே உலகின் பல தேசங்களில் வாழும் பலவித மக்கள் குழுக்களை இழித்து, அவமதிப்பதும், அவர்களது கலாசாரத்தின், மதத்தின் மீதான நேரடி தாக்குதலும் ஆகும். இதை இந்த கிறிஸ்தவ மதமாற்றக் குழுக்களும், இவர்களது ஏஜெண்டுகளாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களிலும் செயல்படும் மதப்பிரசார வெறியர்கள் கொஞ்சமாவது எண்ணிப் பார்க்கிறார்களா?





பொட்டு வைத்த இந்துப் பெண்கள், தலைப்பாகை கட்டிய இந்துக்கள், சீக்கியர்கள், தொப்பி வைத்த முஸ்லீம்கள், அரபு ஷேக்குகள், மொட்டையர்கள், வெள்ளைய பொதுப் புத்தியில் “காட்டுமிராண்டிகளான” கறுப்பு, பழுப்பு என்று பலவண்ண இந்துக்கள் இவர்கள் அனைவரும் நீண்டு விரியும் ஏசு கிறிஸ்துவின் கைகளுக்குள் போவது போன்று பிரமாதமான சித்திரம் வரைந்து அதை பெங்களூர், சென்னை போன்ற நகரங்களின் சந்திகளில் பெரிய அளவில் விளம்பரப் பலகைகள் வைக்கிறார்களே, என்ன திமிர், என்ன ஆணவம், மற்ற மதங்களின், கலாசாரங்களின் மீது என்ன ஒரு இளக்காரம் இருக்க வேண்டும் இப்படி செய்வதற்கு? நீண்ட அந்தக் கரங்கள் எங்கள் கலாசாரத்தையும், சமயத்தையும், சமுதாயத்தையும் அழிக்க வரும் விஷக் கொடுக்குகள் என்று நாங்கள் கருதுவதில் என்ன தவறு? சிலுவை மாலை போட்ட மனிதர்கள் கூட்டம் அதை அறுத்தெறிந்து விநாயகர் முன் நின்று தொழுவது போல நான் படம் வரைந்து, அதை வீதிதோறும் நிறுத்தினால், சகித்துக் கொள்வார்களா இந்த வெறியர்கள்?





உலகின் வளரும் நாடுகளில் எல்லாம் கோகா கோலா என்பது எதேச்சாதிகாரத்தின், பொருளாதார ஆக்கிரமிப்பின், ஊடுருவலின் சின்னமாகவே கருதப் பட்டு வருகிறது. ஒன்றுக்கும் உபயோகமில்லாத, உடலுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய ஒரு சமாசாரத்தை எப்படி பிரம்மாண்டமான விளம்பரங்கள் மூலம் விற்றுத் தள்ளுவது என்பதற்கும் கோகோ கோலா ஒரு சிறந்த உதாரணம். கோலாவின் அரித்துத் தின்னும் அமிலத் தன்மை வெகு பிரசித்தம் - ‘கோக்’கை ஊற்றி அமெரிக்க காவல்துறையினர் ரத்தக்கறைகளைக் கூட கழுவுவார்கள் என்று செய்திகள் உண்டு. மேலும் கவனித்தீர்களானால் எந்த கோகா கோலா விளம்பரங்களிலும் அந்த பானத்தில் என்ன இருக்கிறது, அது எப்படி நன்மை செய்யும் என்பது பற்றிய மெஸேஜ் எதுவும் இருக்காது, ஆனால் கோக் குடிப்பது தான் பிறவிப் பயன், இந்த பானத்தைப் பருகாதவன் எல்லாம் மனிதனே இல்லை, இளநீர் குடிப்பவன் காட்டான் கோக் குடிப்பவன் நாகரீகமானவன் என்பது மாதிரி மெஸேஜ்கள் தான் இருக்கும்.

இத்தகைய சமூக-அழிப்பு மதப்பிரசாரத் திட்டங்களை வர்ணிக்கும் “இந்தியாவை வன்புணர்தல்” (The Rape of India) என்ற தனது கட்டுரையில் [4] டேவிட் கோஸ்டின்சுக் (David Kostinchuk) கூறுகிறார் - “மதமாற்றப் பிரசாரகர்கள் இந்தியாவில் தங்களது இறுதி கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகையில் ஏற்படும் விளைவுகள் பரபரப்பானவையாகவும், வருத்தம் தரக் கூடியவையாகவும் இருக்கும். மதப்பிரசாரத்திற்கு எதிரான பெருவாரியான எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பற்றி நீங்கள் செய்தித் தாள்களில் பார்க்கலாம். மதப்பிரசாரகர்கள் அரசியல்வாதிகளிடமும், சமூக உரிமை குழுக்களிடமும், மேற்கத்திய செய்தி ஊடகங்களிலும் கூக்குரல் இடுவார்கள்

இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரிசாவின் பழங்குடி வனவாசி மக்கள் வசிக்கும் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் பின்னணியில் நடந்த கலவரம் பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. “இந்து வெறிக் கும்பல்களால்” 14 “சர்ச்சுகளும் ஜெபக்கூடங்களும்” (உச்சியில் சிலுவைகள் சொருகிய உடைந்து விழும் ஓலைக் குடிசைகள்) எரிக்கப் படுவதாக அமெரிக்க [5], பிரிட்டிஷ் [6] ஊடக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மதமாற்ற பிரசாரத்தை (கிறிஸ்தவ மதத்தையே அல்ல) எதிர்த்து இயக்கம் நடத்திய 80 வயது முதியவரான, எளிய வனவாசி சமூகத்தைச் சேர்ந்த துறவி சுவாமி லக்ஷ்மானந்த சரஸ்வதி [7] என்ற “இந்து பழைமைவாத தலைவர்” (Hindu conservative leader) தாக்கப் பட்டது இதற்குக் காரணம் என்று அவை அறிவிக்கின்றன. பழங்குடியினர், மலைச்சாதியினர் இந்துக்களே அல்ல, அவர்கள் “மிருக வழிபாட்டாளர்கள்” (animists) என்று சூடம் அணைத்து சத்தியம் செய்யும் இந்த ஊடகங்களின் அகராதியில், அதே மலைவாசி, பழங்குடியினர் அக்கிரமம் தாங்காமல் பொங்கியெழுந்து ஆக்கிரமிப்பு தலங்களை எரிக்கும்போது “இந்து வெறிக்கும்பல்கள்” ஆகிவிடுகிறார்கள். என்னவொரு கருத்து நேர்மை!

தன் கட்டுரையின் இறுதியில் டேவிட் கேட்கிறார் - “மதமாற்ற பிரசாரகர்களும் அவர்களது பணியாளர்களும் பல நாடுகளிலும் அங்கிருக்கும் சமூகங்கள், கலாசாரம், மதம் மற்றும் மக்களின் குடும்பங்களில் குழப்பம் விளைவிக்க உரிமை உள்ளதா? அல்லது, மக்கள் தங்கள் சமூகம், கலாசாரம், மதம் மீது தொடரப்படும் தாக்குதலை எதிர்த்து போராட உரிமை உள்ளதா?”

“தலைசாய்க்க இடமில்லாத” மனிதகுமாரனுக்கே வெளிச்சம்.

தமிழ்ப்பெண் வாழ்வைச் சீரழிக்கும் இஸ்லாமிய சட்டம்

மலேசியாவின் இஸ்லாமிய மயமாக்கம் அங்கு வாழும் இந்துத் தமிழர்களின் வாழ்க்கையையும், எண்ணிக்கையையும், எதிர்காலத்தையும் திட்டமிட்டு அழிக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இன்று வெளியிட்டுள்ள இந்த செய்தி.

சுபாஷிணி என்கிற இந்தப் பெண்ணின் கணவன் சரவணன் முஸ்லீமாக மதம் மாறியவுடனேயே அவன் ஷரியா சட்டப்படி தனது இந்து மனைவியை விவாகரத்து செய்வது சரி என்று சிவில் நீதிமன்றம் சொல்கிறது (சுபாஷிணிக்கும் விவாகரத்து சம்மதமே, ஆனால் காட்டுமிராண்டி தலாக் முறையில் அல்ல, சட்டப்படி). அவர்களுக்குப் பிறந்த இரண்டு மகன்களையும் முஸ்லீமாக மாற்றி அவனுடன் எடுத்துச் செல்லவும் அவனுக்கு முழு உரிமை உண்டும் என்றும் கூறுகிறது.

கடைந்தெடுத்த இந்த ஷரியா அநீதியை நாட்டின் சிவில் நீதிமன்றங்கள் அங்கீகரிப்பது என்பது எவ்வளவு வெட்கக் கேடான விஷயம் !

தான் பெற்ற இரு மகன்கள் மீதும் தாய்க்கு எந்த உரிமையும் கிடையாதா? இது தான் "அமைதி மார்க்கம்" கூறும் உயரிய சட்டமா? காறி உமிழத் தோன்றுகிறது.

தாய்மை, பெண்மை, குடும்ப அமைப்பு, அன்பான இல்லறம் இந்த அனைத்து மேன்மைகளையும் காலில் போட்டு மிதித்து ஒரு தமிழ்ப் பெண்ணின் வாழ்க்கையைச் சீரழிக்கிறது இஸ்லாம் அரசு செய்யும் நாட்டின் அராஜக சட்டம்.

பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

செய்தி:

http://www.expressindia.com/latest-news/A-family-conversion-saga-in-Malaysias-highest-court/254888/

A family conversion saga in Malaysia's highest court
Posted online: Thursday , December 27, 2007 at 12:00:00
Updated: Thursday , December 27, 2007 at 12:12:16

Kuala Lumpur, December 27: Malaysia's highest court on Thursday rejected on technical grounds an appeal by an ethnic Indian Hindu woman to stop her Muslim convert husband from seeking a divorce in the Islamic 'Shariah' court, while upholding the man's right to change the religion of their youngest son.
29-year-old R Subashini's petition was rejected by the Federal Court as she had filed it within three months of the conversion of her husband, Saravanan Thangathoray alias Muhammad Shafi Abdullah, 32.
Her lawyers said she would again file the petition in the High Court to meet the legal requirement that it should be filed three months after the conversion.
Subashini is not opposed to divorcing her husband but she wants the procedure to take place in a civil court.
The Federal Court on Thursday said that her Muslim convert husband had a right to approach the Shariah courts. It also upheld his right to convert the couple's youngest of the two sons to Islam. Saravanan claims that the elder child had already converted to Islam with him.
The judgement further said that both civil courts and Shariah courts have equal status in Malaysia. A clear picture of Thursday's ruling would emerge after a full reading of the verdict, lawyers said.
Nik Hashim Nik Abdul Rahman, the presiding judge of the three-member panel, noted that "civil courts continue to have jurisdiction, notwithstanding his (the husband's) conversion to Islam ... A non-Muslim marriage continues to exist until the High Court dissolves it."
Subashini, a former Secretary, had appealed the Court of Appeal's 2-1 majority decision on a March 13 ruling that her husband could go to the Shariah Court and commence proceedings to dissolve their marriage.
The appellate court held that the Civil Court cannot stop a Muslim convert from going to the Shariah Court to dissolve his marriage with his non-Muslim spouse or from initiating proceedings relating to custody of their children.
Subashini had brought her appeal to the Court of Appeal and Federal Court in an attempt to reverse the Family Court's decision to set aside her ex-parte injunction to temporarily prevent Saravanan from commencing proceedings in the Shariah Court over their marriage or conversion of their younger son.
Subashini married Saravanan, also an ethnic Indian, in a Hindu wedding in 2002. The couple's sons, Dharvin and Sharvind, are now aged 4 and 2 respectively.
Saravanan converted to Islam in 2006 and informed his wife, who attempted suicide and was hospitalised. When she returned home, Saravanan had left with Dharvin, the elder child whom he claims has also converted to Islam
Saravanan filed for divorce and custody rights over the children in a Shariah Court in May 2006, and the right to convert Sharvind, the couple's younger child. This right was upheld by the court on Thursday.

Tuesday, December 18, 2007

எங்கும் தெய்வத் தமிழ் ததும்பும் மார்கழி..

மார்கழி வந்து விட்டாலே நெஞ்சில் கலந்து விட்ட திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் மனத்தில் ரீங்காரமிடத் தொடங்கி விடுகின்றன.

தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளில் (ஜெயா, விஜய், பொதிகை) தினந்தோறும் காலையில் விளக்க உரைகளோடு இந்த தெய்வீகத் தீந்தமிழ்ப் பாடல்கள் வருகின்றன. தொலைக்காட்சிக் காரர்களும், பார்வையாளர்களும் பாக்கியம் செய்தவர்கள். விடுபட்ட தொலைக்காட்சிகள் அடுத்த ஆண்டிலாவது இந்த தெய்வீக ஜோதியில் கலக்கும் என்று நம்பலாம்.

ஜெயாவில் பாவாடை, தாவணியில் பக்தி மணம் கமழ பெண்கள் குழாம் ஒன்று இனிய குரலில் பாடி, ஆயர்பாடி கோபிகைகளை நினைவு படுத்துகிறது என்றால், விஜய் டிவியில் நடனமும் சேர்ந்து கண்களுக்கு விருந்தளிக்கிறது. தினமலர் முதல் தினத்தந்தி வரையிலான நாளேடுகள் முதல் பக்கத்திலலேயே அந்த நாளுக்கான பாசுரங்களையும், சுருக்கமான பொருளையும் தந்து புண்ணியம் தேடிக் கொள்கின்றன.





சௌலப்யம், சௌசீல்யம், ப்ரபத்தி, சேஷத்வம் என்ற பரிபாஷைகள் வைஷ்ணவ ஆச்சாரியர்களின் விளக்க உரைகளில் தூள் கிளப்புகின்றன என்றால், பசு-பதி-பாசம், திரோதானம், சிவானுபவம் என்று சைவ அறிஞர்கள் முழக்கம் இன்னொரு பக்கம். இந்த மார்கழி மாதம் ஊடகங்கள் எல்லாவற்றிலும் ஊதுபத்தி ஏற்றியது மாதிரி
பக்தி மணம் கமழ்கிறது.

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் இணையத்திலும் சப்திக்கிறது.

வலைப்பதிவுகளில் நண்பர் ஸ்ரீகாந்த் தினந்தோறும் திருப்பாவை விளக்கம் எழுத ஆரம்பித்திருக்கிறார். பரமானந்தமாக இருக்கிறது.

பதிவுலகின் சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை?

மதுரமொழி பதிவில், திருவெம்பாவை விளக்கம், மாணிக்கவாசகர் சரிதத்தோடு அமர்க்களமாக ஆரம்பிக்கப் போகிறது.





ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இடையறாது இந்த மார்கழி பாவைப் பாரம்பரியத்தை உயிர்த்துடிப்புடன் காப்பாற்றி வரும் தமிழ் இந்துக்களாகிய நாம் உண்மையிலேயே பெருமை கொள்ளவேண்டும்.

அன்னவயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் - இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

தொல்லை இரும்பிறவி சூழும் தளைநீக்கி
அல்லலறுத்து ஆனந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எம்கோன்
திருவாசகம் என்னும் தேன்.

மாணிக்கவாசகர் மலரடிகளே சரணம்.

Friday, December 14, 2007

முகமது நபி மற்றும் அவர் குடும்பத்தினரின் கோர முடிவுகள்..?

மதவாதம், வன்முறை, சமூகம் பற்றிய ஒரு சூடான விவாதம் நடந்து கொண்டிருந்தது.

வன்முறை வழியை மேற்கொள்ளாதவர்களும் சமூகத்தில் ஊடாடும் வன்முறைப் போக்கிற்கு பலியாகின்றனர் என்று மகாத்மா காந்தியின் படுகொலை பற்றி குறிப்பிட்டு ஒருவர் பிரஸ்தாபித்தார். இன்னொருவர் இயேசு கொடூரமாக சிலுவையில் அறையப் பட்டது பற்றிக் குறிப்பிட்டார்.
வேறொருவர் இஸ்மாமிய இறைத்தூதர் முகமது நபி அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரும் மிகக் கோரமான முறையிலேயே மரணமடைந்தனர் என்றார். இது பற்றி அந்த அளவு கேள்விப் பட்டதில்லை.. பின்னர் கூகிளிட்டுத் தேடியதில், உண்மையிலேயே முகமது நபி மற்றும் அவரது குடும்பத்தினரில் ஒருவருக்குக் கூட அமைதியான, நிம்மதியான முறையில் மரணம் சம்பவிக்கவில்லை என்று தெரிகிறது.

"பெருங் கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
அதனினும் திறன் பெரிதுடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவழி யென்று நீ அறிந்தாய் "

என்று மகாகவி பாரதி மகாத்மா காந்தியை வாழ்த்திப் பாடியதன் உட்பொருள் இந்த சம்பவங்களைப் படிக்கையில் மேலும் உறுதியாக நெஞ்சில் பதிகிறது.


இது பற்றி இணையத்தில் உள்ள தகவல்கள், கட்டுரைகளில் கிடைக்கும் விவரங்களின் அடிப்படையில் சிலர் அளித்த தகவல்கள் இதோ - இவற்றின் நம்பகத் தன்மை பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் தான் கூற வேண்டும்.

முகமது நபி அவர்களின் செல்லப் பேரன் உசைன் பாலைவனத்தில் அலைக்கழிக்கப்பட்டு கொல்லப்பட்டார். மகள் பாத்திமா மீது நபி முகமதுவுக்கு ஏராளமான பிரியம் இருந்தது. தனக்கு ஆண்வாரிசு இல்லையென்பதால் பாத்திமாவின் மகன் உசைனின்(மற்றும் ஹசன்) மீது அவருக்கு மிகவும் பிரியம் இருந்தது. மேலும், முகமது தனது மகள் பாத்திமாவை அபுபக்கர் போன்ற இணைபிரியா நண்பர்கள் மணம்புரியக் கேட்டும் தனது குடும்பத்தில் இருக்கும் தம்பி(பெரியப்பா மகன்) அலிக்கே கொடுத்தார். அலியும் முகமதுவுக்கு மிகவும் பிரியமானவர். ஏனெனில், அவரது பெரியப்பாதான் முகமதை பாதுகாத்து வளர்த்தவர். அலி சில சமயங்களில் கட்டுப்பாட்டை மீறினாலும் முகமது அதை மன்னித்தார்(உதாரணமாக போரில் பிடிக்கப்பட்ட பெண் ஒருத்தியை முகமது பகிர்ந்து கொடுப்பதற்கு முன்பு அலி கற்பழித்துவிட்டார் - இது அப்போது பெரிய குற்றம் - அதாவது, கற்பழிப்பது குற்றமல்ல, ஆனால் போரில் கிட்டிய பொருளை தலைவர் முகமது நபி பிரித்துக் கொடுப்பதற்கு முன்பாக உண்பது பெரிய குற்றம் - ஆனால் அலியின் மீதுள்ள பிரியத்தால் முகமது , அலிக்கு இதற்கெல்லாம் உரிமை உண்டு என்று சொல்லிவிட்டார் - அதே போன்று அலி முறைதவறி ஒரு பெரியவரை கொன்றபோது, அதை நியாயப்படுத்தி ரசித்தார் - இப்படி அலியின் மீதான பிரியத்தைக் காட்ட ஏராளமான சம்பவங்கள் ஹதீதுகளில் உள்ளன) . இப்படிப்பட்ட பிரியமான மகள், தம்பி ஆகியோருக்குப் பிறந்த பேரன் உசைனின் முடிவு எப்படி இருந்தது?

Despite the figures of 72 men against thousands, it is recorded that the battle went on from dawn to dusk. However, the outcome was obvious, Husayn and his men were martyred. His women and children were taken captives. The captives were made to travel to Syria through the deserts of Iraq, tied in ropes and taken on camels without saddles, due to which many of the children fell off the camels and the women were not allowed to even stop and help their children. The graves of these children can still be seen in the desert between Karabla and Kufa. It is to be noted that people who did this with the family of Mohammad were themselves Muslims.
Today, martyrdom of Husayn ibn Ali is commemorated during every Muharram, with the most important of these days being its tenth day, Ashura.


http://en.wikipedia.org/wiki/Husayn_ibn_Ali#Battle_of_Karbala

உசைனின் கழுத்தை அறுத்துக் கொன்றார்கள் மற்ற முஸ்லீம்கள் (இதே பாணியில் பல கலவர இடங்களில் கழுத்தை அறுத்துக் கொல்வதை படித்திருக்கலாம் - சில சமயம் இப்படி அறுக்கும்போது அல்லாஹூ அக்பர் என்று சொல்லி அறுப்பர் - யூட்யூபில் தேடினால் இப்படி மாற்று மதத்தவர்களைக் கொல்லும் வீடியோக்கள் கிட்டும் - ஆனால், முகமதின் குடும்பத்திற்கே இது நிகழ்ந்தது பலருக்கு தெரியாது).

முகமது யூதப்பெண்களுக்கு, மாற்று மதக் குழந்தைகளுக்கு என்னத்தைச் செய்தாரோ, அதுவே அவரது பேரனுக்கும், பேரனின் மனைவிகள் குழந்தைகளுக்கும் நிகழ்ந்ததைப் பாருங்கள் - உசைனின் இரு பிள்ளைகளும் கொடூரமாக கொல்லப்பட்டனர் - தவித்த வாய்க்கு தண்ணீர் கூடத்தராமல், சுன்னி முஸ்லீம்களால்(இது பற்றி இணையத்தில் தேடினால் நிறையக் கிட்டும்). இன்னொரு பேரன் ஹசனோ முகமதைப் போலவே விஷத்தால் துடிதுடித்து செத்தார் (இதெல்லாம் ஒரு அரைநூற்றாண்டுகளுக்குள்ளாகவே 30? செக் செய்ய வேண்டும். நிகழ்ந்துள்ளதைக் கவனியுங்கள்).

ஹசனின் முடிவை விக்கிபீடியா இவ்வாறு சொல்கிறது:

Hasan ibn Ali, born in 625 AD, was the second Shia Imam and he also occupied the outward function of caliph for about six months. During that time Mu'awiayh marched his army into Iraq, the seat of Imam Hasan's caliphate. War ensued during which Mu'awiyah gradually subverted the generals and commanders of Hasan's army with large sums of money and deceiving promises until the army rebelled against Hasan. Finally, he was forced to make peace and to yield the caliphate to Mu'awiyah, provided it would again return to Imam Hasan after Mu'awiyah's death. In the year 50 A.H. he was poisoned and martyred by one of his own household who, as has been accounted by historians, had been motivated by Mu'awiyah
***
அலியின் முடிவும் கோரமாயிருந்தது (முகமதின் முடிவைப் போலவே). முகமது தனது கடைசி நாட்களில் விஷத்தின் கொடுமை தாங்காமல் துடிதுடித்துச் செத்தார் (யூதப்பெண்ணொருத்தி பழி வாங்கியது அது)


அதைப் போலவே ஒரு மோசமான முல்லா- சாமியார் கொல்லப்படுவதை பாகிஸ்தானின் பிரபல நாவலாசிரியை தஹ்மினா துர்ரானி தனது நாவலொன்றில் எழுதியிருப்பார். அவருக்கும் ஃபத்வா எல்லாம் கிட்டியது தனி கதை). ...

முகமதுவின் தம்பியும் மருமகனுமான அலி அல்லாஹ்வை தொழுது கொண்டிருந்தபோதுகத்தியால் குத்தப்பட்டார். அந்தக் கத்தியில் விஷம் தோய்ந்திருந்ததால்,இரண்டு நாட்கள் நரகவேதனையை அனுபவித்து செத்தார். விக்கிபீடியா இதைமென்மையாக சொல்வதைப் பாருங்கள்:

On the nineteenth of Ramadan, while Ali was praying in the mosque ofKufa, the Kharijite Abd-al-Rahman ibn Muljam assassinated him with astrike of his poison-coated sword. Ali, wounded by the poisonoussword, lived for two days and died on the 21st of Ramadan in the cityof Kufa in 661 CE.
http://en.wikipedia.org/wiki/Ali_ibn_Abi_Talib#Death
***
இது சரி, பாத்திமா எப்படிச் செத்தார்? அவரும் தீயிலிட்டு கொளுத்தப்பட்டுகொடூரமாகத்தான் செத்தார் (அப்போது நிறைமாதக் கர்ப்பினி வேறு) என்கிறது ஷியாக்களின் வர்ஷன். இதை சுன்னிக்கள் மறுத்தாலும், சுன்னிக்கள்பாத்திமாவுக்கு எதிரணியின் வம்சம் என்பதால், அவர்கள் முகமதின் செல்ல மகளைதங்களது மரியாதைக்குரிய தலைவர்கள்(ஆயிஷா குரூப்) கொடூரமாகக் கொன்றதைமறைக்கும் தக்கியாவைச் செய்கிறார்கள் என்று நம்ப இடமிருக்கிறது (9/11 ஐநினைவுகூறுங்கள். இதைத் தாங்கள் செய்யவே இல்லை என்று பொதுவிலும்,இறந்தவர்கள் சுவனத்துக்குப்போவார்கள் என்று அல்கய்தாவின்ஸ்டேட்மண்டுகளிலும் இருக்கும் முரண்பாட்டை - தக்கியாவைக் கவனியுங்கள்.இது தொடர்ந்து நிகழ்ந்து வருவது).


பாத்திமாவின் முடிவு:

Shias maintain that Fatimah died a while after her house being burntand the trauma caused by the door opening on her whilst she waspregnent. Shias hold that Muhammad appeared in a dream and informedFatimah that she would be passing away the next day. Fatimah informedher husband Ali and asked him not to allow those who had doneinjustice to her, to be involved in her janazah (prayer performed incongregation after the death of a muslim) or take part in the burial.
//
Sunni Muslims follow their Caliphs Abu Baker, Umar, and Ithman sodevotedly that they try to cover up their evil deeds, such as themurder of Fatima daugther of Prophet Muhammad, murder of Imam Ali, andImam Hasan.
Now Sunni Muslims try very hard to cover these murders of the progenyof Prophet Muhammad and they have succeed to a degree. But they wereunable to cover the massacre of Imam Hussain (son of Prophet Muhammad)and the family of Prophet Muhammad by the Sunni Caliph Yazid son ofMu’awiya.
http://www.askshia.com/2007/04/20/shia-muslim-what-is-shia-islam/

நம்மூரில் முஸ்லீம்கள் தீமிதிப்பது இந்துக்களின் தாக்கத்தால் என்றுஏளனமாக ஒருவர் எழுதியிருந்தார் (பெயர் நினைவில் இல்லை) . ஆனால்,பாத்திமா தீயில் வாட்டப்பட்டதை நினைவுகூறும் விதமாகவும் பல இடங்களில்ஷியாக்கள்(இந்தியாவுக்கு வெளியில்) இந்த தீமிதியைச் செய்கிறார்கள்.

***
இதெல்லாம் சரி. அல்லாஹ்வால் எடுத்துக்காட்டாக அனுப்பப்பட்ட முகமது நபி எப்படிச் செத்தார்? அவரே கடும் வேதனையை அனுபவித்துச் செத்ததாக ரஹீக்குல்மக்தூம் போன்ற சவுதி அரசு அங்கீகரக்கிற(அப்படியென்றால், குரான் மற்றும்சஹி என்று அவர்கள் ஒப்புக்கொள்கிற ஹதீதுகளை அடிப்படையாகக் கொண்ட )முகமதின் சீராவே அப்படிச் சொல்கிறது(கடன் வாக்ன்கிப்போன ஹூஸ்டன் நண்பர்இன்னும் படித்துக்கொண்டே இருப்பதால், அதிலிருந்து நேரடியாகமேற்கோளிடமுடியவில்லை, ஆனால், இந்நூல் இணையத்தில் கிட்டுகிறது,தேடிப்பாருங்கள).


முகமது யூதப்பெண்ணொருத்தியினால் விஷமிடப்பட்டு இறந்தார் என்று ஹதீதுகள்தெரிவிக்கின்றன(ஆனால், இதுவும் முகமதின் குடும்பத்தாரே செய்திருக்கலாம். ஏனெனில், அவர் சாகும்போது அவரது குடும்பத்திற்குள் பெரும்பூசல்கள் நிலவின - முகமது சொல்வதை யாரும் கண்டுகோள்ளவோ, அவருக்குமதிப்பளிக்கவோ இல்லை).

Mohammed poison என்று கூகிளிட்டு தேடிப்பாருங்கள், நிறைய விபரங்கள்கிட்டும். உதாரணமாக, http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/071.sbt.html#007.071.660

இவற்றின் மூலம் என்ன தெரிகிறதென்றால், வன்முறை என்பதுஉருவாக்கியவர்களையும், அவர்களின் சந்ததியினரையும் திருப்பிஅழித்துவிடும். கொடூரங்கள் செய்துவிட்டு யாரும் தப்பிவிட முடியாது.ஏனெனில், இயற்கையின் நியதி இது.

Wednesday, November 28, 2007

Taslima, Gujrat, freedom, secularists… and shame

When the Islamist cowards were buring Kolkata from the bylanes last week, crying for the expulsion of Taslima Nasreen, with the hapless Leflist government unable to control them, I had suggested that Gujrat, the Indian state that stands for growth, freedom and liberty should voluntarily welcome her and offer her residence and protection. I had requested some of my friends in the BJP to take this suggestion to Narendra Modi, Gujrat CM.

With the news of central government lodging the Bengali writer in “undisclosed locations” and the shocking rumors of the government asking her to leave the country trickling in, Narendra Modi has welcomed her to Gujrat in a public meeting yesterday, in his first election meeting. I am only too happy to know this.

Kudos to him. Modi, you have made India proud. You have made us feel that we are indeed the land of the free and home of the brave.

"If the Centre lacks the courage to give security to her, then I have the courage. Send Taslima to Gujarat. The youngsters of Gujarat are keen to provide security to her."

"Bangladeshis are staying in lanes and bylanes of this country but no one is ready to evacuate them. Taslima, who is a writer exercising freedom of expression, is being harassed by fundamentalists."

.. She is a woman who is fighting for the truth. By giving her protection, the government should have set an example of the glorious tradition of India."


Well said, Narendra bhai. Taslima, the writer not only stands for staunch feminism, free thinking and her bold statements against Islamic fundamentalists in literary prose, but also for daring to expose the untold atrocities against Hindu minorities by the Muslim fundamentalists of Bangladesh, the fundamentalists in the government, politics and society. In that sense, she is also a brave champion of Hindu human rights.

The Leftists and the pseudo secularists of this nation stand exposed in their ugly nakedness, when they surrender the spirit of freedom and liberty to the bullying of law breaking Muslim mobs and rowdyism. What a shame! The shame is manifold than Taslima’s anguish in ‘Lajja’ when Niranjan’s family helplessly moves out of Bangladesh into India.

A hundred years ago, Sri Aurobindo wrote,

"The idea that by encouraging Mohmmedan rowdyism, the present agitation may be put down, is preposterous; and those who cherish this notion forget that the bully is neither the strongest nor the bravest of men; and that because the self-restraint of the Hindu, miscalled cowardice, has been a prominent feature of his national character, he is absolutely incapable of striking straight and striking hard when any sacred situation demands this."

(Aurobindo, september 4 1906, Bande Mataram)

Has anything changed? Same rowdyism. Same reaction from the spineless secularists.

What really has Taslima done to derive such anger from Muslims? She has not written anything offensive or insulting against that holy camel of Islamists, their Prophet or their holy Q Book. She has even spoken against stereotyping of Islamic scriptures as anti-women, calling for reinterpretation of Quran verses.

It was her courage to expose the institutionalized Islamic cruelty against Hindus in Bangladesh that earned her fatwas that demanded her head. This very expose was labeled as “anti-Islamic stand”. And the likes of her heart-rendering account of chilling acts of Islamic cruelty in “The Bangla Crescent” (A docu film by Mayank Jain) - “12 year old Gauri was raped in front of her mother, and then the mother was raped in front of Gauri, again and again..”

So, what are *Indian Muslims* protesting against her for?? That, she exposed the true face of an Islamic society and government in dealing with the minorities, in *Bangladesh*? And what are the political parties in India supporting these zealots' demands for?

Sitaram Yechury has accused BJP of “double standards” in the cases of Taslima and MF Husain. The nasuating debates about “freedom of expression” applied to both cases makes one puke. This, after Taslima herself quoting Husain’s safety and well being as a counter example against what is happening in her case!

Husain depicted the images of Hindu Gods and Goddesses in nude and sexually perverted ways that will quality as offensive in the eyes of any neutral observer. He justified this in the name of Artistic freedom (which, I think is subtly different from “freedom of speech” that relates to facts and realities of life, not just art)… and here too he was not honest, as he depicted Islamic women in a fully clothed and “dignified” manner. When questioned about this, he chose to mock at the criticism and refused to accept his hurting of Hindu sentiments.

But for one small scale attack on one of Husain’s studios, all that the Hindu activists (and numerous simple Hindu individuals, not connected to any groups) have done is to file cases against him in various courts in India. And the courts have admitted all these cases, as they are credible under various sections of Indian laws. In what better dignified manner can civilized people register their protest in a democratic nation?

But the “brave” Husain, anticipating long drawn legal battles where his “artistic freedom” will be scrutinized, does not want to return to India from UK. He makes long faces in public and laments about the “treatment” meted out to an Artist of his caliber in his homeland. And our secularist friends want Hindus to *withdraw* all the cases *voluntarily* so that the offending artist is spared from the legal proceedings, unconditionally. The never-hesitating-to-bow-to-Muslim-mobs secularist friends!

What an unbiased, neutral and impeccably honest secularist yardstick !

Now pray, tell me, who has “double standards” here? The Hindu activists or the secular brigade? Who should hang their heads in shame?

Thursday, November 22, 2007

வாடிக்கை கவுடா, வாடிய தாமரை: கர்”நாடக” அரசியல்

“காலையில் மலர்ந்த தாமரைப் பூ இப்படி அந்திக் கருக்கலுக்குள் மறைந்து விட்டதே : (( அல்பாயுசில் போய் விட்டதே? எவன் பெயர் வைத்தானோ கவுடா என்று, கவுடா, கவுடா என்று கவிழ்ப்பதையே தொழிலாய் செய்கிறார்கள்..” - ஏழுநாள்-அதிசயமாக எடியூரப்பா அரசு கவிழ்ந்தவுடன் நகைச்சுவைக்குப் பெயர் போன நண்பர் ஒருவர் அடித்த கமெண்ட் இது.

“இந்தியாவில் நீங்கள் அதிகம் வெறுக்கும் அரசியல்வாதி யார்” என்று இப்போது ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தேவகவுடா அதில் வெற்றிபெற்று விடுவார். எடியூரப்பா ஆட்சி அமைக்கட்டும், கண்டிப்பாக ஆதரவு தருவேன் என்று கவர்னர் முன்பு எம்.எல்.ஏக்கள் தலை எண்ணி வாக்குறுதி அளித்து விட்டு, நம்பிக்கை ஓட்டெடுப்பு அன்று காலை, காலை வாரிய அவரது நரித்தனம் கர்நாடக சட்டசபை வரலாற்றில் ஒரு மறக்க முடியாத கருப்பு நிகழ்வாக இடம்பெற்று விட்டது.

பொதுவாக கட்சித் தலைவர்கள் என்போர் அரசாட்சி, மக்கள் நலத் திட்டங்கள், மக்கள் பிரசினைகள், கொள்கை வகுத்தல் இவற்றில் ஈடுபடுவதோடு “அரசியல்வாதி” என்ற ஒரு முகமும் கொண்டிருப்பது தான் ஜனநாயகத்திற்கு உகந்தது. ஆனால் தேவ கவுடா தான் ஒரு “365 நாள் அரசியல்வாதி” (நன்றி: யூ.ஆர்.அனந்தமூர்த்தி) என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். சுரங்கங்கள், பெங்களூர் நகர அபிவிருத்தி முதலான பணம் கொழிக்கும் துறைகளைப் பங்கு போட்டுக் கொள்வதில் ஏற்பட்ட சண்டை அரசைக் கவிழ்த்து விட்டது. இரண்டு கட்சிகளும் ஏன் இந்தத் துறைகளைக் கையகப் படுத்துவதில் குறியாக இருக்கின்றன என்பது நிதர்சனம். ஆனாலும், இந்த ஒளிவு மறைவில்லாத பணவேட்கைப் போட்டியில் கூட, தான் அவுட் ஆனதும், அடுத்தவனுக்கு மட்டையைத் தராமல் அடம்பிடிக்கும் அடாவடி கிரிக்கெட் சிறுவன் போல தேவகவுடா நடந்து கொள்வது மக்களுக்கு பெரும் எரிச்சலை ஊட்டிவிட்டது.

தேவகவுடாவை எதிர்த்து அந்தக் கூட்டத்திலேயே கட்சி எம்.எல்.ஏக்கள் பொருமித் தள்ளியது பற்றிய விவரங்கள் செய்தி ஊடகங்களில் வெளியாயின. “எங்களை பொதுவில் நிர்வாணமாக்கி விட்டீர்கள், இப்போது பொத்திக் கொள்ளவாவது அவகாசம் கொடுங்கள்” என்றார் ஒரு எம்.எல்.ஏ. “பணம் தேவை தான், பதவி தேவை தான், ஆனால் குறைந்த பட்சம் மானம், ரோஷத்தையும் இவற்றுக்காக அடகு வைக்க வேண்டுமா?” என்றார் இன்னொரு எம்.எல்.ஏ. இதோடு, “சே, அதுக்குள்ள தேர்தலா, மறுபடி காங்கிரஸ் கூட்டணி வையுங்கப்பா” என்று அலையும் எம்.எல்.ஏக்களும் காணக் கிடைத்தார்கள். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களிலும் ஒரு பிரிவினருக்கு இன்னும் கவுடாவுடன் சேரலாமா என்று குளிராட்டிக் கொண்டிருந்ததாம். ஆனால் மத்திய அரசின் சட்டசபைக் கலைப்பு ஆணை இன்னும் ஒரு ரவுண்டு கேலிக் கூத்துகள் நடப்பதை நிறுத்திவிட்டது.

தன் தந்தையின் அரசியல் செயல்பாட்டினால் கடுப்படைந்திருப்பதாகக் கூறும் குமாரசாமி, ஒரு மாநிலக் கட்சியைத் துவக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். ஆனால் கர்நாடகத்தில் முளைத்த மாநிலக் கட்சிகளின் வரலாறு தமிழகத்தைப் போல உற்சாகமூட்டுவதாக இல்லை என்பது அவருக்குத் தெரிந்திருக்கும். கெங்கல் ஹனுமந்தையா, தேவராஜ் அர்ஸ், பங்காரப்பா போன்ற பெருந்தலைகள் தனிக்கட்சிகள் தொடங்கி பெரிய அளவில் கையைச் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். ராமகிருஷ்ண ஹெக்டேவின் “லோக சக்தி” ஓரளவு வெற்றியடைந்தாலும், நீண்டகாலத்திற்கு தனிக் கட்சியாக நிற்க இயலாமல் ஜனதா தளம்(யூ)வுடன் இணைந்துவிட்டது.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் என்பதால் பெங்களூர் நிகழ்வுகள் உலக அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப் படுகின்றன. இந்த அரசியல் கூத்துகள் பெங்களூர் என்ற நகரின் மதிப்பை அதளபாதாளத்தில் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை காரணமாக கடந்த சில மாதங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை கர்நாடகம் இழந்திருக்கிறது என்று மாநில வர்த்தக, தொழில்துறை வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன. போக்குவரத்து நெரிசல், கட்டமைப்பு குறைபாடுகள், அதிகம் செலவு பிடிக்கும் நகர்ப்புறம் - இந்த எல்லா பலவீனங்களுக்கு நடுவிலும், பெங்களூர் தனது தகவல் தொழில்நுட்ப முன்னணியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அவலட்சண அரசியல் இதைக் குலைக்கும் சாத்தியக் கூறுகளை உருவாக்குவது பெரும் துரதிர்ஷ்டம்.

இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மாநில மக்களுக்கு எல்லாக் கட்சிகளிலும் எல்லாவிதமான பாத்திரப் படைப்புகளும் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்கிற விஷயம் தெளிவாகப் புரிந்திருக்கிறது. கொள்கையில் உறுதியாக நிற்க விரும்பும் எம்.எல்.ஏக்கள், எந்த சமரசத்திற்கும் தயாராக இருக்கும் எம்.எல்.ஏக்கள், தார்மீக நிலைப்பாடுகளைக் கடைப்பிடிப்பதில் வரையறை வைத்திருக்கும் எம்.எல்.ஏக்கள் இப்படி. ஆனால், மொத்தத்தில் ஒரு மோசமான இயக்குனர் இயக்கிய அபத்த நாடகமாக இது ஆகிவிட்டது.


பாஜகவைப் பொருத்தவரை இந்த இழப்பு, ஏமாற்றம் ஒரு முழுமையான அனுதாப அலையாக மாறும் என்று நம்புவதாகத் தெரிகிறது. திரும்பத் திரும்ப ஜ.தவையும் கவுடாவையும் நம்பி பரிதாபமாக நிற்கும் பாஜக, இந்த ஏமாளித்தனம் ஜ.தவை முழுமையாகத் தோலுரிக்க உதவியிருக்கிறது என்றும் மதிப்பிடுவதாகக் கேள்வி. 2008 பெப்ரவரி மார்ச்சில் தேர்தல் வரும் வரை இந்த அனுதாப அலை இருக்குமா? வாக்காளர்கள் தான் சொல்லவேண்டும்.

Thursday, November 15, 2007

கர்நாடகத்தில் மலர்ந்த கமலம்

“The day when the lotus bloomed” என்று செய்தித்தாள்களின் முதல் பக்கங்களும், எம்.ஜி ரோடில் உள்ள தட்டிகளும் அறிவித்தபோது உடனடியாக என் மனதில் மின்னியது தாகூரின் கீதாஞ்சலி பாடல் தான் -

On the day when the lotus bloomed, alas, my mind was straying, and I knew it not.

My basket was empty and the flower remained unheeded. Only now and again a sadness fell upon me, and I started up from my dream and felt a sweet trace of a strange fragrance in the south wind.

தென் திசைக் காற்றின் மணம்! தென்னகத்தில் தாமரை மலர்கிறது என்று பாஜக தலைவர்கள் குறிப்பிட்டது ஏனோ நினைவுக்கு வந்தது.

ஆனால் இது தாகூரின் கவிதை சொர்க்கம் அல்ல. ஒன்றரை மாதமாக தினமொரு ஹேஷ்யமும், மணிக்கொரு மாறாட்டமும், குடும்ப, வாரிசு, ஜோதிட அரசியல்களின் முடிச்சுகளுமாக குழம்பித் தவித்த சேற்றில் ஒருவழியாக முக்கி முனகியாவது தாமரையோ அல்லியோ ஏதோவொரு மலர் மலர்ந்துவிட்டது என்பதில் மாநில மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறோம் என்பது தான் உண்மை.

இந்த ஒன்றரை மாத காலத்தில் அரசியல் நாடகத்தின் பல காட்சிகள் அரங்கேறின. தேவகவுடாவும், குமாரசாமியும் சொன்னபடி பாஜகவுக்கு அரசுரிமையைத் தராமல் ஏமாற்றி விட்டார்கள் என்று பாஜக தலைவர்கள் ஊர் ஊராகச் சென்று நம்பிக்கைத் துரோகப் படல காட்சிகளை அரங்கேற்ற, அதே நேரத்தில் செக்யுலரிசத்திற்காக ஏமாற்றுவதும், வாக்குத்தவறுவதும் எல்லாம் அரக்க பா.ஜ.கவிடம் போகாமல் நாட்டைக் காப்பாற்றுதற்குத் தான் என்று புலம்ப ஆரம்பித்தார் குமாரசாமி. சரியாக 20 மாதங்கள் முன் ஆசார செக்யுலர் ஜனதா தளம் மதவாத பாஜகவுடன் கூட்டு வைப்பது அபசாரமில்லையோ என்று கேட்டதற்கு “செக்யுலரிசமா? அது என்ன என்று எங்கள் கட்சிக் காரர்கள் உட்பட எல்லாரையும் கேட்டுப் பார்த்தேன், ஒருத்தனுக்கும் அதற்கு அர்த்தம் கூடத் தெரியவில்லை. அதைக் காரணம் சொல்லி வலிய வந்த ராஜ்ய லஷ்மியை எட்டி உதைப்பதா??” என்று அசர வைத்த அதே குமாரசாமி!

பாஜகவை நிராகரித்ததை நம்பிக்கை நிரூபணமாக்கி சிறுபான்மை ஓட்டுக்களை தூண்டில் போட நினைத்த ஜனதா தளம், எடியூரப்பாவுக்கு வீரசைவ மடத்தலைவர்கள் அனைவரும் ஒருமித்த ஆதரவு அளிப்பதைக் கண்டு “இது ஒக்கலிகர் (கௌடா), லிங்காயத் முதல்வராவதைத் தடுக்கச் செய்யப் படும் சதி” என்று முத்திரை குத்தப் படுமோ என்று அஞ்சி நடுங்கி அடுத்த வாரத்திலேயே அந்தர் பல்டி அடித்தது! இந்தக் கூத்துக்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காங்கிரஸ் காரர்கள் என்னதான் இவர்கள் மறுபடிக் குலாவிக் கொண்டு கவர்னரிடம் போய் நின்றாலும், சோனியா நாயக மத்திய அரசு ஜனநாயகத்தை எட்டி உதைத்து என்னவாவது செய்து சட்டசபையைக் கலைத்து விடும் என்று எண்ணிய எண்ணத்திலும் மண் விழுந்தது.

இப்படியாக தாமரை மலர்ந்து விட்டது. எடியூரப்பா பதவியேற்பு நிகழ்ச்சியிலேயே ஜனதாதள, பாஜக பிணக்குகள் வெளித் தெரியத் தொடங்கியிருக்கின்றன. இருப்பினும், குறைந்தபட்ச கூட்டணி தர்மம், உடனடி தேர்தலைச் சந்திக்க விரும்பாத கட்சிக்காரர்கள் இவைகள் இந்த அரசு அதன் முழு கால அளவு வரை நீடிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

ஒருவிதத்தில் இது ஜனநாயகத்தின் வெற்றி என்றும், சாதுர்ய (pragmatic) அரசியல் மற்றும் அரசாட்சி தரும் (governing) அரசியல், போலித்தனமான, துவேஷம் வளர்க்கும் கொள்கை அரசியலைப் பின்னுக்குத் தள்ளி வருவதை நிரூபித்து வரும் இன்னொரு இந்திய நிகழ்வு என்றும் தான் மதிப்பிட வேண்டும். வளர்ந்து வரும் மாநிலமான கர்நாடகம் ஆட்சியாளர்களைத் தான் தேடுகிறதே அன்றி அடித்துக் கொண்டு அலறும் அரசியல் பூச்சாண்டிகளை அல்ல. தென்னிந்தியாவில் முதல் பாஜக அரசு அமைந்து அந்தக் கட்சியின் தலைவர் முதல்வராவது ஒரு குறிப்பிடத் தக்க அரசியல் நிகழ்வு தான். பதினைந்து ஆண்டுகளாக அடிமட்ட அளவில் கட்சியைக் கட்டமைத்து, வியூகங்கள் வகுத்து, சமரசங்கள் செய்து, படிப்படியாக தேர்தல் வெற்றிகள் அடைந்து இந்த நிலைக்கு பாஜக வந்திருக்கிறது. அதற்கு மேல் இதில் பயப்படும்படியாக ஒன்றும் இல்லை.

ஆனால் கர்நாடகத்தின் சில அறிவுஜீவிகளும், சிந்தனையாளர்களும் அப்படி நினைத்ததாகத் தெரியவில்லை. அதற்கு முன்பு நடந்த எல்லா அரசியல் அவலட்சணங்களையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், பாஜக அரசு உருவாகிவிடும் என்ற சாத்தியக் கூறு உருவான உடனேயே, கூட்டமாகக் கூடி, முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு கவர்னரிடம் போய் “கர்நாடகத்தின் அரசியல் இழுபறி மிக மோசமாகி விட்டது, உடனடியாக சட்டசபையைக் கலையுங்கள்” என்று கோரிக்கை வைத்தனர். ஒரு சாதாரண குடிமகனுக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சியும், ஜனநாயக உணர்வும் கூட இல்லையோ என்று சந்தேகம் தோன்றும் வகையில், யு.ஆர்.அனந்தமூர்த்தி, கிரீஷ் கர்னாட் உள்ளிட்ட ஞானபீட படைப்பாளிகள் தேவகவுடாவை விட மோசமாக நடந்து கொண்டது அவர்கள் மீது மக்கள் கொண்டிருந்த மதிப்பைக் கண்டிப்பாகக் குறைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அரசு அமையும் நாளில் “கர்நாடகத்தை இன்னொரு குஜராத் மாதிரி ஆக்கிவிடாதீர்கள்” என்று எச்சரிக்கிறார் யூ.ஆர்.ஏ. அனைத்து கிராமங்களிலும் தடையறாத மின்சாரம், தொழில் வர்த்தகம் முதலீடு, வளர்ச்சி வாய்ப்புக்கள் இவற்றில் முதலிடம் என்று நடைபோடும் குஜராத் மாதிரி கர்நாடகம் ஆகாதா என்று ஏங்கும் சாதாரண கன்னட குடிமகனின் உணர்வுகள் அவர் போன்ற அறிவுஜீவுகளுக்கு இருக்காதோ என்னவோ?

Saturday, October 27, 2007

விவேகானந்தர் சொன்ன மொகரம் பண்டிகை கதை

A story by Swami Vivekananda :

The city of Lucknow is astir with the festivities of the Mohurrum. The gorgeous decorations and illumination in the principal mosque, the Imambara, know no bounds. Countless people have congregated. Hindus, Mohammedans, Christians, Jews — all sorts of people — men, women, and children of all races and creeds have crowded today to witness the Mohurrum. Lucknow is the capital of the Shias, and wailings in the name of the illustrious Hassan and Hossain rend the skies today. Who was there whose heart was not touched by the lamentation and beating of breasts that took place on this mournful occasion? The tale of the Kârbâlâ, now a thousand years old, has been renovated today.

Among this crowd of spectators were two Rajput gentlemen, who had come from a far-off village to see the festival. The Thakur Sahibs were — as is generally the case with village zemindârs (landlords) — innocent of learning. That Mohammedan culture, the shower of euphuistic phraseology with its nice and correct pronunciation, the varieties of fashionable dress — the loose-fitting cloaks and tight trousers and turbans, of a hundred different colours, to suit the taste of the townsfolk — all these had not yet found their way to such a remote village to convert the Thakur Sahibs. The Thakurs were, therefore, simple and straightforward, always fond of hunting, stalwart and hardy, and of exceedingly tough hearts.

The Thakurs had crossed the gate and were about to enter the mosque, when the guard interrupted them. Upon inquiring into the reasons, he answered, "Look here, this giant figure that you see standing by the doorway, you must give it five kicks first, and then you can go in." "Whose is the statue, pray?" "It is the statue of the nefarious Yejid who killed the illustrious Hassan and Hossain a thousand years ago. Therefore is this crying and this mourning." The guard thought that after this elaborate explanation the statue of Yejid was sure to merit ten kicks instead of five. But mysterious are the workings of Karma, and everything was sadly misunderstood. The Thakurs reverentially put their scarfs round their neck and prostrated and rolled themselves at the feet of the statue of Yeiid, praying with faltering accents: "What is the use of going in any more? What other gods need be seen? Bravo Yejid! Thou alone art the true God. Thou hast thrashed the rascals so well that they are weeping till now!"

மூலம் : Complete-Works / Volume 6 / Writings: Prose and Poems / Matter for Serious Thought

Friday, October 26, 2007

கிருஷ்ணர் கடவுளா, அரசரா?: விகடனில் ஹாய் மதன் பாமரத்தனம்

இந்த வார விகடனில் "ஹாய் மதன்" பகுதியில் இப்படி ஒரு கேள்வி பதில்.

கிருஷ்ணர் கடவுளா, அரசரா?
என்.பிரபாகர், ஆ.புதூர்.

மகாபாரதத்தில், கிருஷ்ணர் நினைத்திருந்தால் சில நிமிடங்களில் துரியோதனன்உட்பட கௌர-வர்கள் அத்தனை பேரையும் அழித்திருக்கலாம். ஏன் குரு«க்ஷத்திரபோர் வரை செல்லவிட்டார்?முதன்முதலில் எழுதப்பட்ட மகாபாரதத்தின்படி, கிருஷ்ணர் யாதவர்களின்அரசர்தானே தவிர, கடவுள் இல்லை. துரியோதனனிடம் பாண்டவர்களின் பிரதி-நிதியாகச் சென்று ‘போர் வேண்டாம்’ என்று எடுத்-துரைக்க மட்டுமேகிருஷ்ணரால் முடிந்தது. அவர் கடவுள் அவதாரமாகக் கருதப்பட்டது, மிகப்பிற்பட்ட காலத்தில்தான். பிறகு, கடவுளுக்குரிய அம்சங்கள் மகாபாரதத்தில்சேர்க்கப்பட்டன. மிகப் பெரிய அளவில் கிருஷணர் வழிபாட்டை முதலில்துவக்கிவைத்த பெருமை வங்காளிகளுக்கே சேரும்!'

ஹாய் மதன் அனைத்தும் அறிந்த ஒரு அறிஞர் என்று அவரிடம் கேள்வி கேட்பவர்கள் உட்பட யாருமே எண்ணுவதில்லை.

இருந்தாலும், இப்படிப் பட்ட ஒரு கூமுட்டைத் தனமான பதிலைப் பார்க்கையில், மகாபாரதம் போன்ற நன்கறியப் பட்ட விஷயத்தில் கூட ஒரு குறைந்த பட்ச ஹோம் ஒர்க், புரிதல், உண்மை இருக்கவேண்டிய அவசியமில்லை என்று அவரே என்ணுவதாகத் தெரிகிறது.

இது பற்றி இதிகாசங்களில் ஆழ்ந்த புலமை கொண்ட திரு. ஹரிகிருஷ்ணன் (அனுமன் வார்ப்பும் வனப்பும் நூலின் ஆசிரியர்) அவர்களிடம் மின் அஞ்சல் அனுப்பிக் கேட்டபோது அவர் அனுப்பிய பதில் மூலம் ஹாய் மதனிடம் தொடுக்கும் கேள்விகள் -

1) முதலில் எழுதப்பட்ட மகாபாரதத்தின் பதிப்பு இப்போது யாரால் வெளியிடப்பட்டுள்ளது? எங்கே கிடைக்கும்?

2) கிருஷ்ணன் யாதவர்களின் அரசனே இல்லை. அவன் ஒருபோதும் அரசனாகவே இருந்ததில்லை என்பதுதான் வியாச பாரதத்தின் தற்போதைய மொழிபெயர்ப்புகள் சொல்வது. பாகதவமும் இதையே சொல்கிறது. சிசுபாலன் கிருஷ்ணனை நிந்திக்கும்போது சொல்வனவற்றில் இதுவும் ஒன்று:

O Bhishma, if one like thee, possessed of virtue and morality acteth from motives of interest, he is deserving of censure among the honest and the wise. How doth he of the Dasarha race, who is not even a king, accept worship before these kings and how is it that he hath been worshipped by ye? O bull of the Kuru race, if thou regardest Krishna as the oldest in age, here is Vasudeva, and how can his son be said so in his presence?

ஆகவே, கிருஷ்ணனை யாதவ அரசன் என்று சொல்லும் முதலில் எழுதப்பட்ட வியாச பாரதம் மிகவும் முக்கியமான ஒன்றாகிறது. எனவே தயவுசெய்து எந்தப் பதிப்பகத்தார் வெளியிட்ட புத்தகத்தைத் தாங்கள் வைத்திருக்கிறீர்கள் என்பதைத் தெரிவிப்பது எம்போன்ற எளிய வாசகர்களுக்குப் பெரிய உபகாரமாக இருக்கும்.

3) ஆனால் பாரதமும் பாகவதமும் கிருஷ்ணனைப் பரம்பொருள் என்று மிகப் பல இடங்களில் குறிக்கின்றன. பீஷ்மர் தன்னுடைய உடலை விடுவதற்கு முன்னால் மிகத் தெளிவாகவே இதைச் சொல்கிறார். யுத்த சமயத்தில் சக்கரத்தை எடுத்துக் கொண்டு பீஷ்மரை வதைப்பதற்காகக் கண்ணன் விரையும்போதும், கூப்பிய கரங்களோடு 'வா கண்ணா, உன் கையால் எனக்கு விடுதலை கிடைக்கட்டும்' என்று துதிக்கிறார்.

இவையெல்லாம் வங்காளிகளுடைய பிற்சேர்க்கை என்பதை நிறுவுவதற்காகத் தாங்கள் எங்களுக்கு அருள்கூர்ந்து இந்த உபகாரத்தைச் செய்ய வேண்டும்.

இவை ஒரு அறிஞர் கேட்கும் கேள்விகள்.

எனக்கும் சில சாதாரணமான கேள்விகள் தோன்றுகின்றன -

பொது சகாப்தம் (Common Era, CE) முதல் நூற்றாண்டில் வாழ்ந்த *தமிழர்* இளங்கோ அடிகள் *மகாபாரத* கண்ணனை நாராயணனாகவே கண்டு பாடுகிறாரே -

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுபவர் பால் நாற்றிசையும் போற்ற
படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா என்னா நாவென்ன நாவே

சிலப்பதிகாரத்தில், மதுரைப் புறஞ்சேரியில் உள்ள ஆயர்கள், ஆய்ச்சிகள் அனைவரும் குரவையிட்டு கண்ணனை ஆராதிக்கிறார்களே? இதற்கும் முந்தைய சங்க இலக்கியமாகிய பரிபாடலில் கண்ணனின் லீலைகளைச் சுட்டி அவனை மாயோன், திருமால் என்று போற்றும் பாடல்களும், அவனது கோயில்கள் பற்றிய குறிப்புக்களும் உள்ளனவே? இது எல்லாம் "மிகப் பெரிய அளவில் கிருஷ்ணர் வழிபாடு" இல்லையா?

அப்போ சிலம்புக்கும், பரிபாடலுக்கும் முற்பட்ட ஏதாவது வங்காளி நூல் கிருஷ்ணனைக் கடவுள் என்று ஆக்கியதா? அதை மதன் படித்திருக்கிறாரா? அல்லது இளங்கோ அடிகளும் அதைப் படித்துத் தான் கண்ணன் கடவுள் என்று தெரிந்து கொண்டாரா?

ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மகாப்ரபு 16-ஆம் நூற்றாண்டில் வங்கத்தில் தோன்றுவதற்கு ஒரு 800-900 ஆண்டுகள் முன்பே ஆண்டாள் திருப்பாவையும், "கண்ணன் எம்பெருமான்" என்று கசிந்துருகிப் பாடிய திருவாய்மொழியும் தோன்றி விட்டதே! திருக்கண்ணபுரம் என்று தமிழகத்தில் திவ்யதேசமே இருந்ததே!

இப்படி ஆகத் தொன்மையான சங்கத் தமிழ் நூல்களே கண்ணனைக் கடவுளாகப் போற்றுகின்றன என்னும்போது இந்தக் கருத்துக்கள் தமிழகம் முழுதும் பரவியிருந்த காலமே "மிகப் பிற்பட்ட காலமா"? அப்போ நீங்கள் சொல்லும் அந்த "கண்ணன் கடவுள் ஆகாத" மிக மிக முற்பட்ட காலத்திற்கு சான்றுகள் எங்கே? எந்த அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள்?

கோடிக்கணக்கான இந்துக்கள் போற்றும் தெய்வ அவதாரமான ஸ்ரீகிருஷ்ணனைப் பற்றி இப்படி ஏனோதானோ என்று போகிற போக்கில் ஒரு பதில் கொடுத்து விட்டுப் போகிறீர்களே மதன்? இது நியாயமா?

Burk-E-Albani : Islamic Kamadhenu?

I stumbled upon this interesting piece of art while searching for original oleographs published by Raja Ravi Varma Press -



Is this the representation of the horse Harak, climbing which prophet mohammed is supposed to have visited different worlds? Or some other motif mentioned in Islamic books?

I am amazed at the ease with this artist from Southern India (not Ravi Varma, some other artist) has blended motifs and icons from different cultures and religions.

Friday, October 19, 2007

ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் மனம் கனிந்த ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்!




(இந்த வாழ்த்து அட்டை பெரிய வடிவில் இங்கே)


சக்தியின் திருநாள், வெற்றித் திருநாள் நமக்கும், நம் தேசத்திற்கும் சக்தியும், வெற்றியும் கொண்டுவரட்டும்!

Thursday, October 11, 2007

மனிதர்கள், சம்பவங்கள், மதங்கள் - 2

திரு. அருணகிரி அவர்களின் இந்தக் கட்டுரையின் முதல் பாகம் இங்கே.

அதன் தொடர்ச்சி...

வன்முறைக்கும் உயிர்க்கொலைக்கும் அரசு மற்றும் சமூக நிறுவனங்கள் தரும் அங்கீகாரத்தை விட மத நிறுவனங்கள் தரும் அங்கீகாரங்கள் அதிகத் தீமையைத் தர வல்லவை. அரசின் சட்டங்கள் சமூகத்தால் சமூகத்தின் சட்டங்கள் அரசால் திருத்தப்படலாம், மாற்றப்படலாம். காலப்போக்கில் தூக்கியெறியப்படலாம். உடன்கட்டை ஏறுதலுக்கும், சாதிக் கொடுமைகளுக்கும் எதிராகச் சட்டம் இயற்ற முடிந்தது. நிறப்பிரிவு (seggregation) நடைமுறைகளையும், பெண்களுக்கு ஓட்டுரிமையின்மையும் கடந்த நூற்றாண்டில் சட்டம் மூலம் மாற்ற முடிந்தது. ஆனால் மத சட்டங்கள், அதுவும் இஸ்லாம் போன்ற அரசியல் மதத்தின் சட்டங்கள் மாற்றப்படுவதையோ காலத்திற்கேற்றவாறு திருத்தப்படுவதையோ அடிப்படைவாத இஸ்லாம் அனுமதிப்பதில்லை.

ஐரோப்பாவின் விழிப்புணர்வு காலம் தொட்டு கிறித்துவம் பல கேள்விகளுக்கு உட்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இது ஓரளவுக்காவது அதன் மத அதிகார வெறியைக் கட்டுக்குள் வைக்கிறது. முக்கியமாக, கிறித்துவப் பெரும்பான்மை நாடுகள் பைபிளை அரசியல் அமைப்புக்கு அடிப்படையாக்கவில்லை. அரசு நடத்தவோ சட்டம் இயற்றவோ ஏசுவின் வாழ்க்கையையோ பேச்சுகளையோ நாடுவதில்லை. அடிப்படைவாத இஸ்லாமோ இதற்கு நேர்மாறாக 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவரின் அன்றைய வாழ்க்கை முறையையும் பேச்சுகளையும் என்றும் மாறா உண்மைகளாகக் கொண்டு இன்றும் அரசியல் செய்யவும் அரசு நடத்தவும் முற்படுகின்றன. அரசியலில் மட்டுமல்ல, தனிமனித வாழ்வியலிலும் அவற்றைக் கொண்டு வருகின்றன. விளைவு, குண்டு வெடித்தல்களையும், படுகொலைகளையும், இஸ்லாத்திற்காக செய்கிறோம் என்று கொலைகாரர்களால் எளிதாகச் சொல்லி மத அங்கீகாரம் பெற்று விட முடிகிறது. இவற்றை ஓரளவு விமர்சிக்கும் தஸ்லிமா நஸ்ரின், ரசூல் போன்ற ஒரு சிலர்களை மதவிரோதிகளாகக் காட்டி விட முடிகிறது.



தனிமனித சுதந்திர மறுப்பை நிறுவனப்படுத்திய ஸ்டான்ஃபோர்டு பரிசோதனை சாதாரண மனிதர்களை குரூரர்களாக்கியது. பலரை சிந்தனை இழந்த யந்திர வேதாளங்களாக (zombies) ஆக்கியது. சிலரை மிகுந்த மன அழுத்தத்திற்கு உட்படுத்தி சிறையிலிருந்து வெளியேற வைத்தது. இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற மத அதிகார நிறுவனமும் இப்பரிசோதனையின் பல கூறுகளைப் பிரதிபலிக்கின்றது: தன் பிடிக்குள் வருபவர்களை, சக மனிதர்களைக் கொன்றுபோடத் தயங்காத மூர்க்கர்களாக நிலை மாற்றுகின்றது. சிலரை சுய சிந்தனை இழந்து கேள்விகளற்றுப் பணியும் யந்திரங்களாக்குகிறது.

ஆனாலும் ஒரு விஷயத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் ஸ்டான்ஃபோர்டு சோதனையிலிருந்து வேறுபடுகின்றதுதான். அதாவது, ஸ்டான்ஃபோர்டு பரிசோதனையைப் போலன்றி, இந்த அடிப்படைவாத நிறுவனத்தை எதிர்ப்பவர்களுக்கு அதனை உதறி வெளியேறும் வாய்ப்பினை அது வழங்குவதில்லை. மாறாக அப்படிப்பட்ட எதிர்ப்பாளர்கள் கடவுளை அவமதித்தவர்களாகக் கருத்தப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள் (மரண தண்டனை உள்பட). ஒரு மாஃபியாத் தன்மையுடன் நிறுவப்படும் இப்படிப்பட்ட தீவிரவாத மத நிறுவனங்களுக்கு உள்ளே மாட்டிக்கொள்பவர்களின் மன உளைச்சலும் அழுத்தங்களும் எங்காவது வெடிக்கத்தானே வேண்டும். அதற்கும் வழி செய்து தருகிறது இந்த நிறுவனம். இவர்களது ஊமைக்கோபத்தையும் உள்ளுறை இயலாமையையும் அடிப்படைவாத நிறுவனத்தின்மேலேயே காட்டி விடாமல் இருக்கும் பொருட்டு, எதிரிகள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள்- இந்துக்களாகவோ, கிறித்துவர்களாகவோ, யூதர்களாகவோ, கம்யூனிஸ்டுகளாகவோ, ஓரினச்சேர்க்கையாளர்களாகவோ, பெண்விடுதலை பேசுபவர்களாகவோ, இஸ்லாத்தை விமர்சிக்கும் இஸ்லாமியர்களாகவோ- இப்படி எவ்விதத்திலாவது எல்லா நேரத்திலும் வசதியாக இவர்களுக்கு எதிரிகள் காட்டித்தரப்படுகிறார்கள். இந்த 'எதிரிகளைக்' கொன்று அழிப்பவர்கள் இறைவனுக்கு உகந்தவர்களாக அடையாளப்படுத்தப்பட்டு, ஜிஹாதி வன்முறையாளர்களாய் நிலை மாற்றப்படுகிறார்கள். உருவாக்கப்பட்ட துப்பாக்கி அதற்கு ஏற்ற கரத்தைக் கட்டாயம் கண்டு பிடித்து விடுவது போல, உற்பத்தி செய்யப்பட்ட வன்முறை ஜிஹாதிகளும் ஏதாவது ஒரு எதிரியைக் கண்டு பிடித்து விடுகிறார்கள்தான். அப்படிக் கண்டுபிடிப்பதில்தான் அவர்களது இருப்பு அவர்களுக்கே அர்த்தம் உடையதாக ஆகின்றது. அடிப்படைவாத இஸ்லாம் என்பது ஜிஹாதி உற்பத்திக்கூடமாவது இவ்வாறுதான். இதனால்தான், முழுவதும் இஸ்லாமிய நாடுகளாக இருக்கும் நாடுகளிலேயே கூட ஒரு பிரிவு மற்றொரு பிரிவை மதக்கடமையாக, ஜிஹாதிப்போரில் அழித்துக்கொல்வதை அதன் தொடக்க காலம் முதலே காண முடிகிறது.

கொலையும், கொள்ளையும், பாலியல் கொடுமைகளும், பெண்ணடிமைத்தனமும், படிப்பறிவின்மையும், மதவெறியும், சுவனக்கனவுகளும் இஸ்லாத்தின் பெயரால் புகட்டப்பட்டு இஸ்லாத்தின் தலைவர்களாலேயே அதன் இளைய சமுதாயத்திற்கு ஒரு மாபெரும் அநீதியும் வாய்ப்பு மறுத்தலும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. "முஸ்லீம்கள் ஒரு விரும்பத்தகாத கூட்டம்" என்ற கருத்து பல நாடுகளிலும் பரவி வருகிறது. என்னுடைய மிக நல்ல முஸ்லீம் நண்பர்களை நினைத்து, என் வீட்டிற்கு விளையாட வரும் முஸ்லீம் குழந்தைகளைக் கண்டு மனம் பதைத்து இதைச் சொல்கிறேன். இஸ்லாமிய அடிப்படைவாதம் ஒரு விபரீதக் கோட்பாடாக ஆகிவருகிறது என்பதை இஸ்லாத்தில் உள்ள முற்போக்காளர்கள் உடனடியாக வெளிச்சம் போட வேண்டும். உள்ளிருந்து அவ்வாறு வெளிச்சம் போட முனைவது எத்தகைய ஆபத்தான விஷயம் என்பது சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின், சமீபத்தில் ஹெச். ஜி. ரசூல் ஆகியோர் மேல் விதிக்கப்பட்ட ஃபாத்வாக்களைப் பார்க்கையில் தெளிவாகின்றது.



தன் தந்தை ஷாஜஹானுக்கு வளர்ப்புப் பறவை ஒன்றைப் பரிசளிக்கும் இளவரசர் தாரோ ஷுகோ


"உலகம் முல்லாக்களின் சத்தங்களிலிருந்து விடுதலை பெறட்டும்; எவரும் அவர்களது ஃபட்வாக்களுக்கு செவி மடுக்க வேண்டாம்" என்று எழுதிய தாரா ஷிக்கோவின் எழுத்துக்கள் ஒரு ஆரோக்கியமான புதுப்பித்தலை நோக்கி இஸ்லாத்தை திசை மாற்றி நகர்த்திச்செல்ல வேண்டும். இப்படிப்பட்ட திசைமாற்றத்தை அடிப்படைவாத இஸ்லாம் அனுமதிக்காத இன்றைய நிலையில், இஸ்லாத்துக்கு வெளியே உள்ள சிந்தனையாளர்கள் அதனை எதிர்த்துக் குரல் எழுப்ப வேண்டும். சிறுபான்மையைத் திருப்திப்படுத்தவும் , 'பிற மத சக்திகளுக்கு ஆதரவாகப் பேசுவதாக ஆகிவிடக்கூடாது' என்ற போலித்தனமான நியாய உணர்விலும், ஓட்டுப்பொறுக்கும் முனைப்பிலும் இந்த விஷயத்தில் பலர் கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய் வாயிருந்தும் ஊமைகளாய் இருந்து வருகின்றனர். இதனை அனைத்து தரப்பும் பேசத்தொடங்குவதுதான் இஸ்லாத்தின் அடிப்படைவாதத்தையும் அதன் சமூக பயங்கரவாதத்தையும் முனை மழுங்க வைப்பதன் முதற்படியாய் இருக்க முடியும். ஏனெனில் தனது மத அடிப்படைவாதத்தையும் ஜிஹாதி வன்முறையையும் விட்டொழிக்காத ஒரு மதக் கருதுகோள், உலகத்தில் பெரும்பாலான நாடுகளுடன் பிணக்கத்தில் ஈடுபட்டிருப்பது, அந்த மதத்தின் ஆரோக்கியமான இருப்புக்கோ, எதிர்கால தலைமுறைக்கோ நன்மை தருவதாக அமையாது.

ஸ்டான்ஃபோர்டு சிறைப்பரிசோதனையை மத நிறுவனம் கொண்டு சமுதாய நடைமுறையாக்க இஸ்லாமியத் தீவிரவாதிகளும் அடிப்படைவாத முல்லாக்களும் முயல்வது தடுக்கப்பட வேண்டும்- எல்லோருடைய நன்மைக்காகவும்- முக்கியமாக, இஸ்லாமியர்களின் நன்மைக்காகவும்.

மனிதர்கள், சம்பவங்கள், மதங்கள் - 1

திண்ணை இதழில் "இடதுசாரி இந்துத்துவம்" போன்ற பல கருத்துச்செறிவுள்ள கட்டுரைகளை எழுதியிருக்கும் நண்பர் அருணகிரி, தனது (இதுவரை பிரசுரிக்கப் படாத) இந்தக் கட்டுரையை எனக்கு அனுப்பியிருந்தார். இதன் முடிபுகளை மறுக்க விரும்புபவர்களைக் கூட தீவிரமாக சிந்திக்க வைக்கும் கட்டுரை.

சீரான அறிவுசார் தேடலுடன், தெளிவான நடையில் எழுதப் பட்ட அருணகிரியின் இந்தக் கட்டுரை, பிரத்தியேகமாக ஜடாயு வலைப் பதிவு வாசகர்களுக்காக இங்கே -

மனிதர்கள், சம்பவங்கள், மதங்கள் - 1

பிலிப் சிம்பார்டோ என்னும் சமூக உளவியல் ஆராய்ச்சியாளர் ஸ்டான்ஃபோர்ட் சிறைச்சாலையில் 1971-இல் ஒரு பரிசோதனை நடத்தினார். சிறைச்சாலையில் கைதிகளின் நடவடிக்கையை ஆராய்வது இதன் முக்கிய நோக்கம் . சாதாரண கல்லூரி இளைஞர்கள் சிலரிடம் முன்கூட்டியே ஒப்புதல் வாங்கிய பின் இந்தப்பரிசோதனையில் ஈடுபடுத்தினார். இதற்கான பரிசோதனைக்குழுவை ஜெயிலர்களாகவும் கைதிகளாகவும் இரண்டு குழுக்களாகப் பிரித்தார். கைதிகளின் நடவடிக்கையை ஆராயத்தொடங்கிய பரிசோதனை ஜெயிலர்களின் உளவியல் குறித்த உண்மைகளையும் வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், நிறுவனப்படுத்தப்படும் அதிகாரத்தைக் குறித்தும் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தது. பரிசோதனையின் விளைவுகள் அந்தப்பேராசிரியரை அதிர்ச்சிக்குள்ளாக்கின. பரிசோதனை தொடங்கிய சில நாட்களிலேயே ஒரு 'கைதி' தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டார். பல கைதிகள் ஜெயிலர்களை எதிர்த்து புரட்சி செய்யத்தொடங்கினர். சிறைச்சாலை உடைப்பில் ஈடுபட முனைந்தனர். 'ஜெயிலர்களின்' அடக்குமுறையோ படிப்படியாகப் பல மடங்கு அதிகரித்தது. தனிமைச்சிறையில் எப்போதும் யாராவது ஒரு கைதி அடைக்கப்பட்டிருந்தார். தண்டனைகள் புதுப்புது விதமாக அளிக்கப்பட்டன. பரிசோதனையில் ஈடுபட்டுள்ள சக மாணவர்கள் என்ற எண்ணம் அடியோடு மறக்கப்பட்டு "கைதிகள்" உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் பலவாறு துன்புறுத்தப்பட்டனர். பரிசோதனைக்காலம் முடியும் முன்பே கைதிகளில் ஒரு பாதியினர் மிகப்பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி, அவர்களை விடுவிக்க வேண்டி வந்தது. ஒரு சில கைதிகளைத்தவிர பிற கைதிகள் அனைவரும் ஜெயிலர்களின் இழிவுறுத்தலையும் ஆணையையும் ஏற்று நடக்கும் ஊமைச்சனங்களாக மாறிப்போயினர். மிகச் சாதாரணமாகத் தொடங்கிய ஒரு உளவியல் பரிசோதனையின் பரிமாணம் ஒரே வாரத்தில் மனித உரிமை மீறல் என்னும் அளவுக்குப் பரிணமிக்க, இரண்டுவார பரிசோதனையை அவசரமாக ஒரே வாரத்தில் முடிக்க நேரிட்டது.

சாதாரண மக்களையும் கூட, நிறுவனப்படுத்தப்படும் ஒரு அதிகாரக் கட்டமைப்பு எவ்வாறு இரக்கம் இழந்த குரூரர்களாக மாற்றுகிறது என்பதை ஒரே வாரத்தில் கண்ணெதிரே நிரூபித்ததுக் காட்டியது இந்தப் பரிசோதனை. சீருடை அணிந்தவுடன் சாதாரண நிலையிலிருந்து 'அதிகார அடக்குமுறையாளன்' என்ற நிலைக்கு மனநிலையில் மாற்றம் அடைந்ததாக 'ஜெயிலர்கள்' கூறினர். ஒரு நிலையில் நல்ல மனிதர்களாக இருக்கும் சாதாரணர்கள் கூட வேறொரு நிலைக்கு மாறுகையில் மிகவும் குரூர சம்பவங்களை விருப்பமுடன் நிகழ்த்தும் கொடியவர்களாக மாறுவதையும் அவ்வாறு மாற்றமடையும் உளவியல் ரச வாதத்திற்கு அதிக அவகாசம் தேவைப்படுவதில்லை என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டியது இந்த ஸ்டான்ஃபோர்டு சிறைச்சாலைப் பரிசோதனை.

சக மனிதனைத் துன்புறுத்துவதும் கொல்வதும் சாதாரணமாக எந்தத் தனிமனிதனுக்கும் உவப்பானதல்ல,
என்றாலும் மனிதனை மனிதன் கொல்வதோ ஒரு மனிதக்கூட்டத்தை இன்னொரு கூட்டம் அழிப்பதோ மனித வரலாற்றில் தொடர்ந்து காணப்படும் ஒன்றுதான். ஸ்பார்ட்டர்கள், அலெக்ஸாண்டர், சேர சோழ பாண்டியர்கள், செங்கிஸ்கான் ஆகிய பல மன்னர்களும் குழுக்களும் போர் புரிந்த வரலாறு உண்டு. ஆனால் மேற்குறிப்பிட்ட இந்தப் போர்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் ஒரு தலைவனின்/ நாட்டின் அதிகாரப்பரவலுக்காக செய்யப்பட்டவை. தமிழ் மண்ணிலோ, மன்னர்களின் போர்களைத் தடுக்க படித்தறிந்த புலவர் பலர் முயன்ற செய்தி சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கிறது. அதாவது போர் என்பது உவப்பானதாக இருந்திருக்கவில்லை. அதிலும் முக்கியமாக மனிதக்கொலைகளை ஆன்மீக விடுதலைக்கான அவசிய வழியாக நம் மண்ணில் வேர் விட்ட கீழை ஞான மரபுகள் காணவில்லை.

மதத்திணிப்புக்காக போர் செய்வதையும் கொலை செய்வதையும் சனாதன மரபு ஆன்மீக வழிகளாக அங்கீகரிப்பது இல்லை. ஆனால் ஆபிரஹாமிய புத்தக மதங்கள் இதில் மிகத்தெளிவாக கீழைத்தத்துவங்களுடன் வேறுபடுகின்றன. மனிதக்கொலைகளை இறை ஆசீர்வாதம் பெற்றதாக மாற்றி அவற்றிற்கு புனித அங்கீகாரம் கொடுத்து சக மனிதனைத் துன்புறுத்துவதையும் கொல்வதையும் உவப்பானதாக மாற்றிய 'பெருமை' ஆசீர்வதிக்கப்பட்ட மதங்களான கிறித்துவத்தையும் இஸ்லாத்தையுமே சாரும். கிறித்துவத் தொன்மத்தில், ஏக இறைவன் தன்னை ஏற்காத பாகன் வழிபாட்டாளர்களின் பிள்ளைகளைக் கொல்கிறார். இதன் தொடர்ச்சியாக, தன்னை ஏற்காத மனிதர்களின் அழிவு இறைவனுக்கு உவப்பானவை என்ற உளவியல், ஆபிரஹாமிய மதங்களின் ஆன்மீக அடித்தளமாக உருப்பெறத்தொடங்குகிறது. இதன் அராபிய நீட்சியாக இஸ்லாம் உருவெடுத்து இஸ்லாத்தை ஏற்காத மக்களைக் கொல்வதையும், துன்புறுத்துவதையும், அவர்களது மத சின்னங்களை அழிப்பதையும், இறைவனை அடையும் மதக்கடமையாகவே எழுதி வைக்கிறது. இது இஸ்லாமிய சமூக உளவியலில் ஒரு முக்கிய மாற்றத்தைத் தோற்றுவிக்கிறது. அதாவது, கொலையும், போரும், ரத்தக்களறியும் மனித உளவியலுக்கு உவப்பானதில்லை என்றாலும் தனிப்பகை காரணமாகவோ, அரசியலாலோ அவ்வப்போது நிகழ்கின்ற "அவசியமான தீமை" (necessary evil) என்ற நிலையை அடியோடு மாற்றி, அவற்றை இறைக்கோட்பாடாக, புனிதச் செயலாக, அவசியமான மதக்கடமையாகக் கட்டமைப்பதன் மூலம், வன்முறைக்கு புனிதத்துவம் தரப்பட்டு, தேவ பீடத்தில் ஏற்றப்பட்டது. வன்கொலைகள் உவப்பானதில்லை என்ற மனித குல இயல்பு நிலை மாறி, மாற்று மதத்தவரின் மேல் நிகழத்தப்படும் இழிவுறுத்தலும், வாழ்வியல் அழிப்பும், பயங்கரவாதமும் மனிதனுக்கு மட்டுமல்ல, இறைவனுக்கே ஏற்புடைய ஆன்மீக தத்துவமாக உயர்த்தப்பட்டது.



இளவரசர் தாரோ ஷுகோ உபநிஷதங்களைக் கற்கிறார் (சமகால, முகலாயர் பாணி ஓவியம்)


இதனால்தான் அன்று இந்து மதத்தில் ஆர்வம் காட்டி உபநிஷதங்களை மொழிபெயர்த்த தாராஷிக்கோவை சொந்த சகோதரனென்றும் பாராமல் அவுரங்கசீப்பால் கொலை செய்ய முடிந்திருக்கிறது- மதக்கடமையாக. இன்றும் இதனால்தான் பெண்கள் குழந்தைகள் உட்பட்ட பொதுமக்களை ரயிலிலும், பஸ்ஸிலும், பொது இடங்களிலும் குண்டு வைத்து உடல் சிதறிச் சாகடிக்க முடிகிறது- மதக்கடமையாக. எந்தத் தனிப்பட்ட தொடர்பும் விரோதமும் இல்லாத டேனியல் பெர்ல் என்ற பத்திரிகையாளரை தொலைக்காட்சியில் பலர் பார்க்க கழுத்தை அறுத்துக்கொன்று "அமெரிக்க யூதனின் கழுத்தை ஆசீர்வதிக்கப்பட்ட இந்த வலக்கரம்தான் அறுத்துக்கொன்றது" என்று ஒருவனைப் பெருமிதத்துடன் சொல்ல வைக்கிறது- மதக்கடமையாக. இஸ்லாத்துக்கு மதம்மாறியவுடன் ஜெர்மனியின் சொந்த நாட்டு மக்களையே குண்டு வைத்துக் கொல்லத் துணியச் செய்கிறது - மதக்கடமையாக. தன் படிப்புக்கு உதவிய மதுரைப் பேராசிரியர் பரமசிவத்தை ஜிஹாதிகள் வெட்டிக்கொல்ல, அந்த முஸ்லீம் மாணவனே உதவி செய்ய வைத்தது- மதக்கடமையாக. நேற்று வரை நண்பனாக இருந்த முருகேசன் அப்துல்லாவாக மதம் மாறிய பின், தன் நண்பன் குமார் பாண்டியனை தென்காசியில் பொது இடத்தில் உடலை வெட்டி கழுத்தை அறுத்து கொல்ல வைக்கிறது- மதக்கடமையாக. அப்படியும் அடங்காத வெறியில் இந்த ஆகஸ்டு மாதம் 14 -இல் (பாகிஸ்தான் சுதந்திர நாள்) குமார் பாண்டியனின் மூன்று சகோதரர்களையும் வெட்டிக் கொல்ல வைத்தது- மதக்கடமையாக.

நாலடியாரில் தீயோர் நட்பு குறித்த பாடல் ஒன்று, தீயநட்பு காய்ந்த வைக்கோல் போருடன் நட்புக்கொண்ட நெருப்பு போல் ஆகும் என்று உவமை சொல்கிறது. பெரிதாய் வளர்ந்தாலும் யாருக்கும் உபயோகமின்றி எரிந்து சேர்ந்தவரையே அழித்து மடியும் கொடுந்தீயைப்போலத்தான் இன்றைய தீவிரவாத இஸ்லாம் விளங்குகின்றது. மனிதர்கள் என்ற நிலையிலிருந்து கொடும் சம்பவங்களை நிகழ்த்தும் ஜிஹாதிகளாக மாற தீவிரவாத இஸ்லாம், மத நம்பிக்கையின் பெயரில் பாதை போட்டுத்தருகிறது.

தனிமனிதக்கொலை அம்மனிதனுக்கு தண்டனை தருவதோடு முடிகிறது. ஜாலியன் வாலாபாக் போன்ற குழுக்கொலைகள் சமூக அநீதிச் சம்பவங்களாகி வரலாற்று வடுவாகின்றன. ஆனால், இந்த இரண்டுமே இறைவனின் பெயரால் மத அங்கீகாரத்துடன் நிகழ்த்தப்படுகையில் அச்செயல்களுக்கு தண்டனையோ, தலைகுனிவோ, வடுவோ இல்லாதது மட்டுமல்ல, மதப்பெருமையையும் இறை அங்கீகாரமும் அளிக்கப்பட்டு புனிதச் செயல்களாய் நிறுவப்பட்டு விடுகின்றன. எதிர்காலச் சந்ததிகள் மென்மேலும் அதே போன்ற கொடுமைகளை நிகழ்த்த இப்படிப்பட்ட மத நிறுவன அங்கீகாரம் தடம் போட்டுத் தருகின்றது. எனவேதான் இறைவன் வாக்கு என்ற பெயரிலும் மதத்தின் பெயரிலும் நடத்தப்படும் வன்முறைகள் வெறும் தனிமனித அல்லது குழு வன்முறைச் சம்பவங்களை விட அதிகக் கொடுமையானதாகின்றன. இப்படிப்பட்ட கொடுமைகள் வேரிலேயே பிடுங்கி எறியப்பட வேண்டிய விஷச்செடிகளைப் போன்றவைதான்.

(தொடர்ச்சி அடுத்த பகுதியில்)

Wednesday, October 10, 2007

"தமிழக தலித்களின் குடிகெடுத்த பெரியார்" - தலித் தலைவர் சந்திரபான் பிரசாத்

இந்தியாவின் முதல் தலித் ஆங்கில எழுத்தாளர் என்று அறியப்பட்ட சமூக சிந்தனையாளர் சந்திரபான் பிரசாத் தனது சமீபத்திய கட்டுரை ஒன்றில் பெரியாரிசத்திற்கு பெரிய ஆப்பு ஒன்று அடித்திருக்கிறார் (இந்தக் கட்டுரையை அனுப்பிய வஜ்ரா-வுக்கு நன்றி).





இதில் அவர் கூறுகிறார் -

"தலித்களுக்கும், மற்ற பிற்பட்ட வகுப்பினருக்கும் (OBC) இடையே வளர்ந்து வரும் மோதல்களைக் கண்டிருந்தும், 1991-ல் மண்டல் கமிஷன் மீது பல விமரிசனங்கள் இருந்தும் அதை ஆதரித்தேன். ஏனென்றால் அப்போது கங்கைச் சமவெளி முழுதும் பிராமணர் உள்ளிட்ட உயர்சாதியினர் ஆதிக்கம் இருந்தது. எனவே, "பிராமணர்களது ஆதிக்கத்தை ஒழிப்பது வட இந்தியாவை சமூக விடுதலை பெறச்செய்யும், தமிழ் நாட்டைப் போல" என்று நினைத்தேன்.

மண்டல்-காலங்களுக்குப் பின்னர், நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள அறிஞர்கள், செயல்வீரர்களுடன் உரையாடிய பின், பெரியாரின் திராவிட இயக்கத்தைப் பற்றிய பல சந்தேகங்கள் தோன்றத் தொடங்கின. "நம்பிக்கைத் துரோகம்" (விஷ்வாஸ்காத்) என்ற எனது முதல் புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கையில் இந்திய அளவிலான நிலச் சொத்துரிமைகள் பற்றிய விவரணங்கள் என்னைத் தட்டி எழுப்பின. சமூக விடுதலை அடைந்த தமிழ் நாட்டில், ஒவ்வொரு 100 தலித்களிலும் 15 தலித்கள் தான் சுயமாகப் பயிரிடுபவர்கள், 63 பேர் நிலமில்லாத கூலிக்காரர்கள். ஆனால் உத்தரப் பிரதேசத்தில், ஒவ்வொரு 100 தலித்களிலும் 43 பேர் சுயமாகப் பயிரிடுபவர்கள், 39 பேர் தான் நிலமில்லாத கூலிக்காரர்கள். எப்படி தமிழக தலித்கள் உத்திரப் பிரதேச தலித்களை விட இவ்வளவு தூரம் பின் தங்கியிருக்கிறார்கள்?

பெரியாரது பிராமண எதிர்ப்பு இயக்கம் அர்த்தமில்லாதது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். நான் சொல்வதைக் கேட்க யாரும் தயாராயில்லை - பெரும்பாலான வட இந்திய தலித்களுக்கு தமிழ் நாடு ஒரு ஆதர்ச உதாரணமாக இருந்தது. அந்த நேரத்தில் தான் பேராசிரியர் ஃப்ராங்கெல் அவர்களது நூல் கிடைத்தது.

தனது நூலில் ஃப்ராங்கெல் பிராமணர்கள் மற்றும் சாதி இந்துக்களின் அதிகார வீழ்ச்சியைப் பதிவு செய்கிறார். ஆனால், சூத்திரர்கள் மற்றும் இதர பிற்பட்டவர்கள் (OBC) இவர்களது உயர்ச்சியில் காண்பது உண்மையில் "சமூக நீதி" தானா என்பது பற்றிய சந்தேகத்துடனேயே பேசுகிறார். இந்த நூலில் இருந்து எனக்குப் புரிவது இது தான் - பெரியாரது திராவிட இயக்கம் வெறும் பிராமண எதிர்ப்பு மட்டுமே, அது ஒருபோதும் சாதிக்கு எதிரான போராட்டமாக இல்லை.

இந்த அறிவுபூர்வமான தேடலின் முடிவுகளைக் கொண்டு, தலித்-பிராமணர் (கூட்டுக்) கொள்கையை நான் உருவாக்கத் தொடங்கினேன். 1997 ஆகஸ்டில் அதை வெளியிடவும் செய்தேன். அதிகாரத்தைப் பெற்ற பிறகு சூத்திரர்கள், மற்றும் மற்ற பிற்பட்டவர்கள் (OBC) தங்களுக்குக் கீழாக உள்ள சமூகத் தட்டைப் பார்ப்பார்கள், அங்கே இரையாகப் போவது தலித்கள் தான் என்று எனக்குத் தீர்மானமாகத் தோன்றியது.

உ.பி.யில் பகுஜன் சமாஜ்க் கட்சியின் வெற்றி சூத்திரர், மற்ற பிற்படுத்தப் பட்டவர்கள் (OBC) இயக்கம் பற்றிய எனது பார்வையை நிரூபித்திருக்கிறது. Dominance and State Power in Modern India என்ற ஃப்ராஙகெல் அவர்களது நூல் சொல்வதற்கு இன்னும் இருக்கிறது என்ற எண்ணத்தைத் தூண்டுகிறது."

தமிழக தலித்கள் இன்னும் எவ்வளவு காலம் தான் பெரியாரிசத்தையும், கழகக் கண்மணிகளையும் கட்டிக் கொண்டு மோசம் போகப் போகிறார்கள்?

உத்திரப்பிரதேச உதாரணம் இவ்வளவு தெளிவாக இருக்கையில், அந்த வழிமுறையைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் இருப்பது தமிழக தலித்களைத் தற்க்கொலைப் பாதைக்கே இட்டுச் செல்லும்.

மொழியாக்கம் செய்யப் பட்ட பகுதியின் ஆங்கில மூலம்:

... Though I had my reservations regarding Mandal as I was witness a growing conflicts between Dalits and OBCs, I still went ahead and defended it as by 1991, the larger Gangetic belt was still dominated by Dwijas/Brahmins. So, as I thought, a total annihilation of the Brahmin dominance may turn north India into a socially liberated zone as it had happened in Tamil Nadu.

Post-Mandal, when I begun touring and interacting with activists and scholars from all over the country, I developed doubts over Periyar's Dravidian movement. When I was writing my first book titled as Viswasghat (betrayal), I was alerted by the census figures on the landholding pattern in India. I was shocked to find that for every 100 Dalit in socially liberated Tamil Nadu, only 15 were independent cultivators and 64 were landless labourers. In Uttar Pradesh, of every 100 Dalit, 43 were independent cultivators and only 39 were landless labourers. How could Tamil Dalits be so far behind the UP Dalits."


There was no meaning to Periyar's anti-Brahmin movement I thoughts to myself. But there was no one who was willing to listen to me. For most of the Dalits in north India Tamil Nadu was a role model. It was then that I was given a book to read by prof Frankel.

In his book, Frankel mirrors the fall of Dwijas/Brahmins from the political power structure, the book however, remains sceptical of the social justice element in the rise of Shudras/OBCs. What I understood from the book suggests that Periyar's Dravidian movement was merely anti-Brahmin, and not anti-caste.

Equipped with a credible intellectual inquiry, I begun developing my Dalit-Brahmin thesis and made it public in August 1997. I was certain that after acquiring power and resources, Shudras/OBCs were looking for subordinate social categories and Dalits will be sure victims.

The BSP's win in Uttar Pradesh goes to confirm my reading of the Shudra/OBC movement, and revives Dominance and State Power in Modern India for further reading.

பீகாரின் தலித் அர்ச்சகர்கள்: "ஒரு புதிய புனித அத்தியாயம்"

சமீபத்தில் பாட்னா அருகில் உள்ள பாலிகஞ்ச் என்ற ஊரின் ராம ஜானகி ஆலயத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு பூஜை மற்றும் போஜனம் (ஸங்கத் பங்கத்) நிகழ்ச்சியில் மாநில துணை முதல்வர் சுஷீல் குமார் மோடி கலந்து கொண்டார். தலித் சமூகத்தைச் சேர்ந்த திரு. ஜனார்தன் மாஞ்சி என்பவர் இந்த ஆலயத்தின் தலைமை அர்ச்சகராகப் பொறுப்பேற்றுக் கொண்டதை ஒட்டி நடத்தப் பட்ட விழா இது.

இதற்கு முன்பிருந்தே பீகாரின் 5-6 பெரிய கோயில்களில் தலித்கள் தலைமை அர்ச்சகர்களாக இருந்து வருகின்றனர். ஆகஸ்டு-2007ல் தான் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஹில்ஸா என்னும் ஊரின் புகழ்பெற்ற "காகி பாபா ராம் ஜானகி தாகுர்பாரி" என்ற 300-ஆண்டுகள் பழைய ராமர் ஆலயத்தின் பூஜைகள் உள்ளிட்ட முழுப் பொறுப்பும், நிர்வாகமும் தலித்கள் வசம் ஒப்படைக்கப் பட்டது. இந்த முயற்சியில் முன் நின்றவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த உயர்சாதியினர் உள்ளிட்ட அனைத்து இந்துக்களும். வால்மீகி தாஸ் என்ற மஹந்த் (சாது) அவர்களின் வழிகாட்டுதலின் படி பாஸ்வான், சமார், ரவிதாஸ், ரஜக் ஆகிய தலித் சாதிகளைச் சேர்ந்தவர்களை ஆலயத்தின் நிர்வாகிகளாகத் தெரிவு செய்தனர்.

பீகாரில் நடந்து வரும் ஆலயங்களின் இத்தகைய 'தலித்மயமாக்கல்' குறித்து இந்தியா டுடே (அக்டோபர்-8) இதழ் "The Now Holy Order" என்ற கட்டுரையை வெளியிட்டுள்ளது. முழுக் கட்டுரையையும் இங்கே படிக்கலாம்.

இந்த முயற்சிகளின் பின் இருப்பவர் பீகார் ஆலய வாரியத் (BSBRT) தலைவர் ஆசார்ய கிஷோர் குணால். இவர் ஒரு முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும் சம்ஸ்கிருத அறிஞர் ஆவார். பரபரபுக்காக அல்ல, ஒரு மாபெரும் இயக்கமாகவே இதை நடத்தப் போகிறோம் என்று அவர் கூறுகிறார். "தலித்களுக்கு முறையாக சம்ஸ்கிருதம் மற்றும் சமய நூல்களைப் பயிற்றுவித்து அதன் பின்னரே இத்தகைய பூஜை மற்றும் புரோகிதப் பணிகளில் ஈடுபடுத்துகிறோம். இதனால் தலித்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைப்பது மட்டுமன்றி ஊழல், அராஜகத்தில் சிக்கியிருந்த கோயில் நிர்வாகங்களும் உண்மையான பக்தர்களின் கட்டுப் பாட்டுக்குள் வருகிறது" என்று சில சமீபத்திய உதாரணங்களையும் அவர் அடுக்குகிறார்.

"இந்த சீர்திருத்தங்களுக்கு சாஸ்திர சம்மதம் உள்ளதா?" என்று கேட்பவர்களுக்கு விடையளிக்கும் முகமாக, கடந்த 20 ஆண்டுகளாக பல வேத, சாத்திர, புராணங்களைக் கற்று ஆராய்ச்சி செய்து "தலித தேவோ பவ" (தலித் நம் கடவுளாகட்டும்) என்ற 700 பக்க நூலையும் இவர் எழுதியுள்ளார். "ஆதியில் இருந்தே சூத்திரர்களுக்கு புராணங்கள், காயத்ரி மந்திரம் இவற்றைப் பயிலும் உரிமை வழங்கப் படவில்லை" என்பதை மறுக்கும் இவர் இந்தக் கட்டுப் பாடுகள் சுயநலமிகளால் பின்னர் விதிக்கப் பட்டவையே என்றும் அறுதியிட்டுக் கூறுகிறார் - "சாதியம் பற்றி பரப்பப் படும் பல பொய்கள் உண்மையான இந்து சமய நம்பிக்கைக்கு எதிரானவை. எல்லாச் சடங்குகளையும் செய்யவும், செய்துவைக்கவும் எல்லாருக்கும் உரிமை உள்ளது".

பொதுப்ரஞையில் மறைந்து விட்டாலும் திருப்பதி பாலாஜி, புரி ஜகன்னாதர், புவனேஷ்வர் லிங்கராஜர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உள்ளிட்ட நாட்டின் பல பிரசித்தி பெற்ற பல கோவில்களின் பாரம்பரியத்தைப் புரட்டிப் பார்த்தால் அதில் தலித்களின் மிகப் பெரிய பங்களிப்பு புரியும். இவற்றை குணால் அவர்களின் நூல் வெளிக் கொணர்கிறது.

" வர்ணாசிரமத்தை பழைய மனுஸ்மிருதி கூறட்டும், ஆனால் நம் அரசியல் சட்டம் அனைவருக்கும் சம உரிமை என்று தானே கூறுகிறது?" என்று கேட்கும் குணால் அவர்களின் சேவை மேன்மேலும் உயரட்டும். அவரைப் பின்பற்றுவோர் மேன்மேலும் பெருகட்டும்.

இந்தக் கட்டுரையை வெளியிட்ட இந்தியா டுடே இதழுக்குப் பாராட்டுக்கள்.

Friday, October 05, 2007

தமிழர் திருமகன் இராமன்

இராமசேது பற்றிய விவாதத்தின் மத்தியில், இராமகாதையையும், இராமனையும் பற்றிய தமிழக முதல்வரது இழிமொழிகளுக்கு நாடு தழுவிய எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. தமிழகத்திலும் மிக உறுதியான எதிர்ப்பு பதிவு செய்யப் பட்டிருக்கின்றது. பல ஆங்கில, தமிழ் இதழ்களும், ஊடகங்களும் முதல்வரின் பேச்சை வன்மையாகக் கண்டித்திருக்கின்றன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அஇஅதிமுக மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தி முடித்துள்ளது. ஊட்டியில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தலைமையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் “புண்படுத்தாதே புண்படுத்தாதே, இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தாதே”, “மமதை பிடித்த கருணாநிதியே, மன்னிப்புக் கேள், மன்னிப்புக் கேள்” என்ற கோஷங்கள் எழுந்து விண்ணை முட்டின. பாஜக, மதிமுக, தேமுதிக, சரத்குமாருடைய புதிய கட்சி இவையும் முதல்வரின் அருவருக்கத் தக்க பேச்சைக் கண்டிருத்திருக்கின்றன. ஆளும் கூட்டணியில் உள்ள, இந்து உணர்வுகளை ஓரளவு மதிப்பவை என்று எண்ணப் பட்ட பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள், கூட்டணி (அ)தர்மம் கருதியோ என்னவோ, முதல்வரின் இந்த அப்பட்டமான இந்து விரோதப் போக்கைக் கண்டிக்காமல் இருந்து பெரும் தவறிழைக்கின்றன.

இந்த சூழலில், அறிவுலகத்தால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு விட்ட, வெறுப்பியலில் திளைத்த பழைய ஆரிய-திராவிட இனவாதத்தை உயிர்ப்பித்து, இந்தப் பிரசினையை விமரிசிக்கும் விஷமத் தனமான போக்கும் ஊடாகத் தென்படுகிறது. “ராமர் வழிபாடு என்பது தமிழ் நாட்டில் இல்லாத ஒன்று. தெற்கே ராமரை ஆரிய மன்னர் என்று தான் தமிழர்கள் பார்த்து வந்திருக்கிறார்கள்” என்ற அப்பட்டமான பொய்யை என்.டி.டி.வி, சி.என்.என் ஆங்கிலத் தொலைக்காட்சிகளின் சென்னை நிருபர்கள் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு என்.டி.டி.வி கலந்துரையாடலில் இந்த அபாண்டத்தைக் கேட்கச் சகியாத பேராசிரியர் நந்திதா கிருஷ்ணா நடுவில் பாய்ந்து, “என்ன கதைக்கிறார் உங்க நிருபர், தமிழ் நாட்டில் ஊருக்கு ஊர் ராமர், அனுமார் கோயில்கள் இருக்கிறதே கண்ணுக்குத் தெரியவில்லையா?” என்று வெடிக்கும் நிலைமை ஏற்பட்டது.

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (வன்னிய சத்திரியர் என்று தமிழக மக்களில் பெரும்பாலர் கருதும்) இராமர் “பிராமணர் அல்லாதவர்களான, தமிழர்களின் பார்வையில்” மிக எதிர்மறையாகவே எப்போதும் கருதப் படுவதாக, பழைய திராவிட இயக்க அபத்தங்களை ஆங்கில இதழ்களில் மறுசுழற்சி செய்யத் தொடங்கியிருக்கிறார் [1]. இவற்றுக்குச் சிகரம் வைத்தாற்போல இந்த வார ஜூனியர் விகடனில் திருமாவளவன் 'சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இராவணனை’ போற்றுவதாகத் தெரிவிக்கிறார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் படைத்த தமிழின் ஒப்புயர்வற்ற இலக்கியமான கம்பராமாயணம் ஒன்று போதாதா, இராமன் தமிழர் போற்றும் தெய்வம் என்று நிறுவுவதற்கு? தமிழர் சமயத்தின் இரு கண்கள் சைவமும், வைணவமும். அதில் ஒன்றான வைணவத்தின் பன்னிரு ஆழ்வார்களும் தெய்வமாக இராமனைப் போற்றுகிறார்களே, அது போதாதா? ஆனால் விதி வலியது. ஈவேரா காலத்திலிருந்து, அப்பேர்ப்பட்ட கம்பனுக்கே ஆரியஅடிவருடி, மனுவாதி போன்ற முத்திரைகள் இந்த அறிவீனர்களால் குத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆழ்வார்கள் எம்மாத்திரம்?

ஆதாரமில்லாத இத்தகைய உளறல்கள் ஊடகங்களின் மூலம் தொடர்ந்து பரப்பப் படுவதால், உண்மையை உரக்க உரைப்பது மிக அவசியமாகிறது, ‘’புலிநகக் கொன்றை’ ஆசிரியரும், மார்க்சிய சார்புடையவராகக் கருதப் படும் அறிஞருமான பி.ஏ.கிருஷ்ணன் ‘பயனியர்’ இதழில் எழுதியுள்ள “Karunanidhi wrong, Ram an ancient Tamil icon” என்ற அருமையான ஆங்கிலக் கட்டுரையில் [2] சங்க இலக்கியம் தொட்டு பண்டைத் தமிழரின் போற்றுதலுக்குரிய தெய்வமாக இராமன் இருந்து வந்ததற்கான ஆதாரங்களை அளிக்கிறார். அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள “சிலப்பதிகாரம் தெரியாத கருணாநிதி” என்ற பதிவில் [3] “கடுந்தெறல் இராமன்”, “வெல்போர் இராமன்” என்று இராமன் சங்கப் பாடல்களில் போற்றப் படுவதையும், சமண முனிவரான இளங்கோவடிகள் தனது காப்பியத்தில் திருமாலின் அவதாரமாக இராமனைப் பாடுவதையும் மிக அழகாக எடுத்துக் கூறுகிறார்.

சங்ககால பாமர மக்களின் வழக்கிலே கூட இராமாயணம் என்ற இதிகாசம் போற்றுதலுக்குரிய காவியமாக மட்டுமன்றி, உவமைகளைச் சுட்டும்போது கூட பண்டு நிகழ்ந்த சான்றுகளாய்க் கையாளும் வண்ணம் அமைந்திருப்பதை இந்த இரு கட்டுரைகளும் குறிப்பிடுகின்றன. வேறு சிலவற்றைப் பார்ப்போம்.

மணிமேகலையில் இராமாயணம்:

கம்பராமாயணத்திற்கு 6-7 நூற்றாண்டுகள் முற்பட்ட பௌத்த காவியமான மணிமேகலையில் ராமாயணச் செய்திகள் சான்றுகளாகவே அளிக்கப் பட்டிருக்கின்றன.

'நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்


(உலக அறவி புக்க காதை, 10-20)

காயசண்டிகை கூறினாள் - “நெடியோனாகிய திருமால் இராமனாக மண்ணில் அவதாரம் புரிந்து, அவன் அடங்காத பெரிய கடலை அடைத்த போது, குரங்குகள் பெயர்த்துக் கொண்டு வந்து எறிந்த பெரிய பெரிய மலைகள் எல்லாம் கடலின் வயிற்றில் சென்று மறைந்தது போல, இந்த அடங்காப் பசியை நிரப்ப இடும் மலை மலையான உணவு எல்லாம் என் வயிற்றின் ஆழத்தில் சென்று மறைந்து விடுகிறது”.

இந்த வரிகளில் பல செய்திகள் அடங்கியுள்ளன - ராமன் திருமாலின் அவதாரம். அவனது ஆணையில் வானரர்கள் கடலை அடைத்து அணை கட்டியது. மேலும், இந்த வரலாறு உவமையாகக் கூறப் படும் அளவுக்கு பிரசித்தி பெற்றிருந்தது.

இதே காப்பியத்தில் பிறிதோரிடத்தில், வாத விவாதத்தில், “ராமன் வென்றால் என்றால் மாண்பில்லாத ராவணன் தோற்றான் என்று தானே அர்த்தம்?” என்று அடிப்படையான தர்க்கமாகவே இராமகாதைச் சான்று வைக்கப்படுகிறது, அதுவும் ஒரு புத்தமதம் சார்ந்த புலவரால் என்றால் அது பண்டைத் தமிழகத்தில் எவ்வளவு அறியப் பட்ட விஷயமாக இருக்க வேண்டும்!

"மீட்சி என்பது "இராமன் வென்றான்" என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
உள்ள நெறி என்பது "நாராசத் திரிவில்
கொள்ளத் தகுவது காந்தம்" எனக் கூறல்"

(சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)

இந்த வரிகளில் “மாட்சி இல் இராவணன்” என்று இராவணன் உரைக்கப் படுவதையும் காண்க.

சைவத் திருமுறைகளில் இராமாயணம்:

சைவம் தழைக்கப் பாடிய சமயக் குரவர்களது பாடல்களிலும் இராமாயணம் இருக்கிறது.




திருநாவுக்கரசர் இராமன் கட்டிய சேதுபந்தனத்தைக் குறிப்பிடும் பாடல் -

"செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ”

(திருநாவுக்கரசர் தேவாரம், திருவலம்புறப்பதிகம்)

திருஇராமேச்சுரம் என்று வழங்கும் ராமேஸ்வரம் திருத்தலத்தில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் பாடிய பதிகங்களில் சில பாடல்கள் -

"பலவுநாள் தீமை செய்து பார்தன் மேல் குழுமி வந்து
கொலைவிலார் கொடியராய அரக்கரைக் கொன்று வீழ்த்த
சிலையினான் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்

தலையினால் வணங்குவார்கள் தாழ்வராம் தவம் அதாமே

[சிலையினான் - வில்லை உடைய இராமன்]

வன்கண்ணர் வாளரக்கர் வாழ்வினை ஒன்றறியார்
புன்கண்ணர் ஆகிநின்று போர்கள் செய்தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்
தங்கணால் எய்த வல்லார் தாழ்வராம் தலைவன் பாலே"

(திருநாவுக்கரசர் தேவாரம், திருவிராமேச்சுரப் பதிகம்)

தேவியை வவ்விய தென்னிலங்கை யரையன் திறல் வாட்டி
ஏவியல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச் சுரத்தாரை

[தேவியை வவ்விய - சீதையைக் கவர்ந்து சென்ற]

(திருஞானசம்பந்தர் தேவாரம், 3ம் திருமுறை, 101-10)

இந்த அனைத்துப் பாடல்களும், தருமத்தின் நாயகனான இராமனைத் திருமாலின் அவதாரமாகவே போற்றுகின்றன. சிவபக்தன் ஆயினும் அதர்ம வழியில் சென்ற இராவணனையும், அவன் கூட்டத்தாரையும் கொடிய அரக்கர் என்றே பல்வேறு அடைமொழிகளுடன் குறிப்பிடுகின்றன.

இராவணன் கயிலாய மலையைப் பெயர்க்கையில், சிவபிரான் தம் கால் விரலால் அதை அழுத்தியதைக் கூறுகையில்,

“அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே”


(திருஞானசம்பந்தர் தேவாரம், திருமறைக்காட்டுப் பதிகம்)

என்றே சம்பந்தர் பாடுவார்.

மேலும், இடர்கள் களையப் பாடிய கோளறு பதிகத்தில் ‘ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா’ என்கையில் இராவணனை தீய சக்தியின் குறியீடாகவும், இடராகவும் உருவகித்து, அத்தகைய தீமைகளும் அணுகாதிருக்கும் என்று சம்பந்தர் உரைக்கிறார்.

சைவத் திருமுறைகள் இப்படி இருக்கையில், தங்களை சைவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் சிலர், நாத்திகவாத, தமிழ்ப் பண்பாட்டையே இழித்துரைக்கின்ற ஈவேராத் தனமான திராவிட சித்தரிப்புக்களின் வழியே இராமாயணத்தை நோக்க முற்படுவதை காலத்தின் கோலம் என்றும் நகைமுரண் என்றும் தான் கூறவேண்டும்.

திருப்புகழில் ராமாயணம்:

முருக பக்தி மரபில் முதன்மை பெறும் திருப்புகழ் உள்ளிட்ட அருணகிரிநாதரின் எல்லா நூல்களிலும் இராமபிரானைப் பற்றி நூற்றுக் கணக்கான குறிப்புகள் உள்ளன. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தனது பல இராமாயணத் தொடர் சொற்பொழிவுகளில் இவற்றை எடுத்துக் காட்டியிருக்கின்றார்.

கம்பனும், வால்மீகியும், ஏனையோரும் குறிப்பிடாதவற்றையும் அருணகிரியார் தமது பாடல்களில் சொல்லியுள்ளார். உதாரணமாக, கோசலை ராமனைக் கொஞ்சும் அழகு -

“எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பா¢வி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்”

(“தொந்தி சரிய” என்று தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்)

இதற்கு வாரியார் சுவாமிகள் விளக்கம் கூறுகையில் “குடும்பத்தை வாழ்விப்பவன் மகன். தன் சுற்றம், குலம், நாடு எல்லாவற்றையும் வாழ்விப்பன் மைந்தன், அதனால் இந்த இரண்டு பெயர்களையுமே கூறி கோசலை இராமரை அழைக்கிறாள்” என்று அழகாகக் குறிப்பிடுவார். இன்னொரு பாடலில், சானகியை அபகரித்துச் சென்ற இராவணனை “திருட்டு ராக்கதன்” என்றே குறிப்பிடுகிறார்.

“சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்
திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து
சயத்த யோத்தியில் வருபவ னரிதிரு ...... மருமகப் பரிவோனே”

(‘பழிப்பர் வாழ்த்துவர்’ எனத் தொடங்கும் மதுரைத் திருப்புகழ்)

இராமபக்திக்கு உரமூட்டிய தமிழகம்:

“வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்” என்று புகழ்பெற்ற நம்மாழ்வார் திருவாய்மொழியில் “கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ? என்று இராமபிரானுக்கு வைணவ மரபில் மிக உயர்ந்த இடத்தை அளித்திருக்கின்றார்.




கண்ணனைக் குழந்தையாக வரித்து வழிபடும் மரபு பிரசித்தமானது. இராமனைக் குழந்தையாகப் பாவித்துத் தாலாட்டுப் பாடிய முதல் பக்தர் குலசேகராழ்வார் தான்.

“மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!”

என்று தொடங்கி ராமாயணம் முழுவதையும் சொல்லித் தாலாட்டுகிறார் ஆழ்வார். இதன் நீட்சியாகவே நந்தலாலா போன்று “ராம லாலா” என்று குழந்தை ராமனின் உருவமும், வழிபாடும் உருவாயிற்று. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் இஷ்டதெய்வமாகக் குழந்தை ராமனை ஆராதித்திருக்கிறார். அயோத்தி ராமஜன்மஸ்தானம் கோயிலில் இருப்பதும் இந்தக் குழந்தைத் திருவுருவம் தான்.

தென் தமிழ் நாட்டிலிருந்து காசிக்குச் சென்று அங்கே சைவ மடம் அமைத்த குமரகுருபரர் கம்பனின் ராமாயணத்தை அங்கே பிரசாரம் செய்ததாகவும், துளசிதாசர் அதைக் கேள்வியுற்றதனாலேயே தமது ராமசரித்மானஸ் என்ற புகழ்பெற்ற ஹிந்தி ராமாயண நூலில் கம்பனின் ராமகாதைப் படி சில இடங்களை அமைத்திருப்பதாகவும் ஒரு வழக்கு உள்ளதாக காசி மடத்துடன் தொடர்புடைய நண்பர் ஒருவர் தெரிவிக்கிறார்.

இன்று பாரதம் முழுவதும் வழங்கும் எல்லா ராமாயணக் கதையாடல்களிலும் சிறப்பிடம் பெறும் ‘அணில் இராமருக்கு பாலம் கட்ட உதவிய” பிரசங்கம், தமிழகத்தில் உயிர்த்ததே ஆகும் என்றும் இது பற்றிய முதல் இலக்கியக் குறிப்பு கீழ்க்கண்ட திவ்வியப் பிரபந்த பாசுரம் தான் என்றும் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ஒரு ஆங்கிலப் பதிவு [4] குறிப்பிடுகிறது -

“குரங்குகள் மலையைத் தூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டோடி
தரங்க நீரடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேன்”


(தொண்டரடிப் பொடியாழ்வார், திருமாலை 27)

ராமனுடைய முதன்மையான பெயராகிய புருஷோத்தமன் (புருஷ+உத்தமன்) என்பதன் தமிழ் வடிவமே பெருமாள் (பெரும்+ஆள்). வைணவர்கள் அனைவரும் கடவுளைக் குறிக்கையில் சொல்லும் முதன்மையான திருநாமம் ‘பெருமாள்’ என்பது தான்!

தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக-ஆன்மிக விடுதலைக் குரலாக எழுந்த அவதார புருஷர் அய்யா வைகுண்டர் இராமாயண வாசிப்பை தம்முடைய பக்தர்களுக்கு கட்டாயமாக்கினார். அதற்காகவே அருள் நூலில் இராம சரிதை இடம் பெற செய்து இரண்டாம் நாள் திருஏடு வாசிப்பு இராவண வதமாக அமைத்தார். கலிகால சாதியம், வெள்ளையர் காலனியாதிக்கம் மற்றும் மதமாற்ற கொடுமைகளாக உருவாகி வந்திருக்கும் இராவணன் என்ற தீய சக்தி அய்யாவின் அன்பு வழி இயக்கத்தால் அழிக்கப்படும் என்பதும் அதற்காக அனுமனைப் போன்ற தொண்டர்கள் தோன்றி தெய்வீகப் பணி செய்வார்கள் என்பதும் இன்றுவரை அய்யா வழி பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இப்படி இராமகாதை மற்றும் இராமபக்தியின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் தமிழகம் பெரும் பங்கு ஆற்றி வந்திருக்கிறது.

கலைகள் போற்றும் காகுத்தன்:

10-ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்த இராமன், இலட்சுமணன், சீதை, அனுமன் ஆகிய மூர்த்திகளின் அழகு கொஞ்சும் செப்புத் திருமேனிகள் திருவாரூருக்கு அருகில் உள்ள பருத்தியூர் என்னும் ஊரில் கண்டெடுக்கப் பட்டவை.
ஒய்யாரமாக வில்லைப் பிடித்திருக்கும் ராமனின் கம்பீர வடிவமானது நடராஜ வடிவம் புகழ்பெறத் தொடங்கியிருந்த காலம் முதலே தமிழக சிற்பிகளின் உள்ளத்தை ஆட்கொண்டது இவை என்று உணர்த்துகின்றன.



தஞ்சைத் தரணியில் பிறந்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர், இன்றளவும் பல கச்சேரி மேடைகளிலும் இடம் பெறும் இராமநாடகக் கீர்த்தனைகளை இயற்றிய அருணாசலக் கவிராயர் ஆகியோர் தென்னகத்தின் தலைசிறந்த ராமபக்தர்களில் அடங்குவர்.

தெருக்கூத்து, பாவைக்கூத்து, வில்லுப் பாட்டு முதலிய கலைவடிவங்கள் உருவாகும்போது அவற்றின் முதல் கூறுபொருளாக அமைந்தவை ராமாயண, மகாபாரத கதைகள் தான்.

எனவே, செவ்வியல் இலக்கியம் மட்டுமின்றி, சிற்பம், நடனம், இசை, நாடகம், நாட்டுப் புறக் கலைகள் ஆகிய பல்வேறு தமிழகக் கலைகளிலும் இராமனும், சீதையும் அவர்கள் சரிதமும் வெகுகாலம் தொட்டு நீக்கமற நிறைந்திருக்கின்றன.

தமிழர் திருமகன் இராமன்:

திராவிட இயக்கம் சார்ந்த சில தமிழ் ஆர்வலர்களாலும் மதிக்கப் படும் பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் ராம காதையை ஆரிய-திராவிட நோக்கில் பார்த்தது என்பது ஒரு குறுகிய காலத்திற்கு தமிழ்ச் சமுதாயத்தில் உண்டான, துரதிர்ஷ்டவசமான போக்கு என்றும் இது அந்த மாபெரும் இதிகாசத்தின் அடிப்படைகள் பற்றிய தவறான புரிதல் ஆகும் என்றும் குறிப்பிடுகிறார். [5]

“..I find it very sad that anyone would want to burn Kamban's Ramayana. Kamban was, simply, the greatest poet India has produced and one greatest poets of the world. He is demonstrably greater than Kalidasa. Unfortunately, for a short period it became fashionable to read his epic in cultural terms -- Aryan vs. Dravidian. This, in my view, is a misreading of the fundamental premise of the epic: the opposition between two views of life, one epitomized by Rama, the other by Ravana. What makes Kamban so great is that he presents both views in extremely convincing and beautiful terms -- Ravana is the greatest of all kings and symbolizes this world, Rama symbolizes another dimension. And don't forget, Ravana is a Brahmin.”

திராவிட இயக்கத்தினர் இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்ற தொனியில் வெறியூட்டி வந்தபோது, தென் தமிழகத்தில் அதை முன்னின்று எதிர்த்தவர் இஸ்லாமியரான சதாவதானி செய்குத் தம்பி பாவலர். கம்பர் அடிப்பொடி சா.கணேசன் இராமாயணம் என்ற மாபெரும் பொக்கிஷத்தைக் காக்க கம்பன் கழகம் தொடங்கியதன் பின் வந்த காலகட்டங்களில் இராமகாதையில் தோய்ந்து அதைப் பற்றியே தன் வாழ்நாளின் இறுதிவரை பேசியும் எழுதியும் வந்தவர் நீதிபதி மு.மு.இஸ்மாயில்.

எனவே சங்ககாலத் தமிழர் தொடங்கி, சைவ, வைணவ, சமண, பௌத்த தமிழர் வரை அனைவரும் இராமனைத் “தலைவன், திருமகன், திருமால், பெருமாள், தெய்வம்” என்றே கூறி வந்திருக்கின்றனர். இராவணனை “அரக்கன், திருட்டு ராக்கதன்” என்று அழைத்திருக்கின்றனரே அன்றி திராவிட மன்னன் என்றோ, வீரன் என்றோ, மதிப்பிற்குரியவன் என்றோ கூட எந்த மானமுள்ள தமிழனும் குறிப்பிடவில்லை.

'செக்குலர்' சங்கப்புலவனும், தமிழின் அனைத்து சமயப் பெருந்தகைகளும் ஏற்றுக் கொள்ளாத ஓர் அரக்கனை இங்கே தமிழ்ப் பாதுகாவலர்களாகக் கூறிக் கொள்ளும் பொய்ப்பிண்டங்கள் தங்கள் பிரதிநிதியாகச் சித்தரிப்பதும், இராமபிரானை இழித்துரைப்பதும் காலத்தின் கொடுமையன்றி வேறென்ன!

(பி.கு: இதில் கூறப்பட்டுள்ள சில தகவல்களை அளித்த திரு, ஹரி கிருஷ்ணன் மற்றும் பெயர் குறிப்பிடப் பட விரும்பாத இன்னொரு தமிழறிஞர் இவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றிகள்).

இந்தக் கட்டுரையை வெளியிட்ட திண்ணை இதழுக்கு நன்றிகள்.

Friday, September 28, 2007

"பாரதி நாத்திகனா?" - பதிலடி

பாரதியின் கீழ்க் குறிப்பிட்ட ஒரு கவிதையைக் காட்டி அவர் நாத்திகர் என்று கூறும் ஒரு பதிவைப் பார்த்தேன்.

கடலினைத்தாவும் குரங்கும் வெங்
கனலிடைப் பிறந்த செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததனாலே தெற்கே
வந்து சமன்செய் குட்டைமுனியும்

நதியினுள்ளே மூழ்கிப் போய் அந்த
நாகர் உலகில் ஒரு பாம்பின் மகளை
விதியுறவே மணம் செய்த திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்

ஒன்று மற்றொன்றைப் பழிக்கும் ஒன்று
உன்மையொன்றோதி மற்றொன்று பொய்யென்னும்
நன்று புராணங்கள் செய்தார் அதில்
நல்ல கவிதைகள் பலபல தந்தார்

கவிதை மிக நல்லதேனும் அக்
கதைகள் பொய்யெனத் தெளிவுறக் கண்டோம்

அந்தப் பதிவில் அளித்த மறுமொழியை இங்கே இடுகிறேன் -

கண்ணன்,

மெய்ஞானியும், யோகியும், கவிஞனும் ஆன பாரதியின் கவிதைகளைக் கற்கும் போது அவற்றின் ஆழ்ந்த உட்பொருளைக் கருத வேண்டுமே அல்லாது, மேம்போக்காகப் படித்தால் அர்த்தத்திற்குப் பதில் அனர்த்தம் தான் கிடைக்கும்.

இந்தப் பாடலையே எடுத்துக் கொள்வோம் -

// கனலிடைப் பிறந்த செவ்விதழ்ப் பெண்ணும் //

இது யாகத்தீயிலிருந்து தோன்றிய பாஞ்சாலி என்ற திரௌபதியைக் குறிக்கிறது. பாரதக் கதையும் பாஞ்சாலியும் முழுப் பொய் என்று பாரதி உண்மையிலேயே கருதியிருந்தால், ஏன் நூற்றுக் கணக்கான பாடல்களில் பாஞ்சாலி சபதம் என்ற காவியத்தை எழுத வேண்டும்? அதன் கடவுள் வாழ்த்திலேயே "ஐவர் பூவை திரௌபதி புகழ்க் கதையை" என்று கூற வேண்டும்? பராசக்தியையும், தேச விடுதலையையும் தரிசிக்க ஏன் இந்த அற்புதமான சரிதத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்?

// விதியுறவே மணம் செய்த திறல்வீமனும் கற்பனை என்பது கண்டோம் //

இந்த வீமனையும், அவன் சகோதரன் பார்த்தனையும் தான் எழுச்சி பெற்ற பாரதத்தின் லட்சிய நாயகர்களாகவே பாரதி காண்கிறார் -

"விளையும் மாண்பு யாவையும் பார்த்தன் போல்
விழியினால் விளக்குவாய் வா வா வா"
(பாடல் - ஒளி படைத்த கண்ணினாய்)

"முன்னைப் பார்த்தன் கண்ணன் இவன் நேரா - என்னை
உய்யக் கொண்டருளல் வேண்டும்"
(பாடல் - தேடிச் சோறு நிதம்)

"பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும்
வீமனும் துரோணனும் வீட்டுமன் தானும்
இராமனும் வேறுள இருந்திறல் வீரரும்
நற்றுணை புரிவர் வானக நாடுறும்"
(பாடல் - சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது)


"முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்த வில் யாருடை வில்? - எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்"

என்று ராமனை பாரத தேவியின் வடிவமாகவே கண்ட பாரதியா ஸ்ரீராமனை இழித்துரைத்தவன்? என்ன கொடுமை இது!

இங்கு குறிப்பிட்டிருக்கும் பாடல் ஒருவிதமான நிராகரிப்பு மனப்பான்மையில் பாரதி பாடியது, அவ்வளவே. (இதை யோக மொழியில் "நிவ்ருத்தி" என்பர்).

சைவம், வைணவம் முதலான அறுசமயங்களையும் தழைக்கச் செய்து, இவற்றின் இறுதிப் பொருளாக இருங்கும் அருவமான, குணங்களைக் கடந்த அத்வைதப் பரம்பொருளையும் உணர்த்தியவர் ஆதிசங்கரர் - இது தெரிந்த விஷயம். அவரது "ஆன்ம ஷட்கம்" என்ற பிரசித்தமான பாடலில், சில வரிகள்-
"நான் சைவமும் அல்ல, சாக்தமும் அல்ல,
ஐந்து இரவுகள் திருமாலை வழிபடும் வைணவமும் அல்ல,
எனக்கு வேதமும் இல்லை, வேள்வியும் இல்லை,
ஆசாரமும் இல்லை, தவமும் இல்லை
சிதானந்த ரூபம் சிவம் நான் சிவம் நான்"!

இந்த வரிகளை மட்டும் தனியாகக் காட்டி சங்கரர் சைவத்திற்கும், வைணவத்திற்கும் எதிரி என்று பிதற்றுவது சரியா? அது போன்றது இங்கு சொல்லியிருப்பது.

பாரதியின் ஆன்மிக, தேசிய, சமய தரிசனங்களை முழுமையான கருத்தாக்கங்களாக நாம் பார்க்க வேண்டுமே அல்லாது ஏதோ ஒரு கவிதையில் இருந்து ஒன்றிரண்டு வரிகளை மேற்கோள் காட்டி அவர் "நாத்திகர்" என்றெல்லாம் பேசுவது பகுத்தறிவின்மையையே காட்டுகிறது. குறிப்பாக எதையுமே உருப்படியாகவும், ஆழமாகவும் ஆராயாமல் பிதற்றும் திராவிட இயக்க அறியாமையை.

இந்த வார விகடன் "ஓ பக்கங்கள்" பகுதியில் ஞாநி இதே பாடலை வைத்துக் கொண்டு இதே மாதிரி ஜல்லியடித்திருக்கிறார்.

இவர் பாரதியைப் படித்த லட்சணம் இது தானா? இந்த அக்ஞானி எழுதிய கட்டுரையை மட்டும் பாரதி படித்தால், "நீ படித்த என் கவிதைகள் எல்லாம் மறந்து போகக் கடவது" என்று பரசுராமர் மாதிரி சாபமிட்டிருப்பார்.

புராணங்கள் பற்றி பாரதி சொல்லும் இந்த ஒரு பாடலை மட்டும் காட்டிச் செய்யும் புரட்டுக்கள், விஷமத்தனம் தொடர்வதால், இந்தப் பதிவில் இன்னும் கொஞ்சம் சேர்க்கிறேன்:

இந்து சமய நூல்களின் மேன்மையை நேரிடையாகப் புராணங்கள், சாத்திரங்கள் என்ற சொற்களையே இட்டு பாரதி புகழ்ந்துரைக்கும் இரண்டு பாடல்களை இங்கே தருகிறேன். இதன்றி, புராணக் கதை மாந்தர், கருப்பொருள், அவை கூறும் நீதிகள் இவற்றை எத்தனையோ பாடல்களில் அவர் எடுத்தாண்டுள்ளார் என்பதை பாரதியை ஓரளவாவது கற்றவர்கள் புரிந்து கொள்வர்.

பாடல் 1: வீரர் முப்பத்திரண்டு கோடி" எனத் தொடங்கும் "பாரத மாதா நவரத்தின மாலை"யிலிருந்து

அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம்
ஆணிமுத்துப் போன்றமணிமொழிக ளாலே
பன்னிநீ வேதங்கள், உபநிட தங்கள்
பரவுபுகழ்ப் புராணங்கள், இதிகா சங்கள்
இன்னும்பல நூல்களிலே இசைத்த ஞானம்
என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்?
மின்னுகின்ற பேரொளிகாண்! காலங் கொன்ற
விருந்துகாண்! கடவுளுக்கோர் வெற்றி காணே.

இப்பாடலில் பாரத ரிஷிகளின் ஞான ஒளி காலத்தை வென்று நிற்கிறது என்று பெருமிதம் கொள்கிறார் மகாகவி.

பாடல் 2: "மண்ணுலகின் மீதினிலே" என்று தொடங்கும் ஹிந்து மதாபிமான சங்கத்தார் மீது வாழ்த்துப் பாக்கள்

எப்போதும் ஆனந்தச் சுடர்நிலையில்
வாழ்ந்துயிர்கட் கினிது செய்வோர்
தப்பாதே இவ்வுலகில் அமரநிலை
பெற்றிடுவார்; சதுர்வேதங்கள்
மெய்ப்பான சாத்திரங்கள் எனுமிவற்றால்
இவ்வுண்மை விளங்கக் கூறும்
துப்பான மதத்தினையே ஹிந்துமத
மெனப்புவியோர் சொல்லு வாரே.

பாரதி யோக நிலையில் நின்று புராணம், சாத்திரம் எல்லாம் கதைகளே என்று கூறுகிறார் என்பதை முன்பே விளக்கியிருக்கிறேன்.

தனது கட்டுரையில் புராணங்கள் எல்லாம் குப்பைகள் என்று ஈவேரா, கருணாநிதி மற்றும் தான் கூறுவது போன்றே பாரதியும் கூறுகிறார் என்று ஞாநி சொல்ல வந்திருப்பது எப்படியிருக்கிறது?

சுவாமி விவேகானந்தர் சொல்லுகிறார் - "பல சமயங்களில் மிக ஆழ்ந்த மூடத்தனத்தில் இருப்பவர்கள், சில புறத்தோற்றங்களைக் கண்டு தாங்கள் ஆன்மிக உயர்நிலை அடைந்து விட்டதாகக் கருதிக் கொண்டு மனம் பிறழ்வார்கள். மாமன்னரின் மகனான புத்தர் சகல செல்வங்களையும் துறந்து ஓர் இரவில் வீட்டை விட்டுச் செல்கிறார். அடுத்த வேளை உணவுக்கு அல்லாடும் பிச்சைக் காரன் ஒருவன் "புத்தர் தான் செய்யக் கூடுமா? நான் எல்லாவற்றையும் துறக்கிறேன்" என்று சொல்வானானால் அது எவ்வளவு முட்டாள் தனம்! இழப்பதற்கு என்ன இருக்கிறது இவனிடம்?"

அப்படித் தான் இருக்கிறது.