Tuesday, December 07, 2010

இந்திய மதப்பிரிவினை சட்டம் (Article 30) = பண்பாட்டு அழிவு?

அரசு நிதியில் இயங்கும் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களும் மத அடிப்படையில் பெருமளவில் இட ஒதுக்கீடு செய்ய வழிவகுக்கும் சர்ச்சைக்குரிய இந்திய சட்டம் இது...

தில்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி தொடங்கி மதுரை அமெரிக்கன் கல்லூரி வரை இந்தச் சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்யும் அடாவடிகள் கடந்த சில ஆண்டுகளாக அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்...

இதன் நீண்டகால விளைவுகள் என்னவாக இருக்கும்? - என்பது பற்றி நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் ஷெல்லிங்கின் ஒரு அறிவியல்பூர்வமான கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்ந்து டாக்டர் மூர்த்தி முத்துசுவாமி என்பவர் எழுதிய ஒரு கட்டுரையை நான் மொழிபெயர்த்திருக்கிறேன் -

Saturday, December 04, 2010

கவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்

தண்ணீரே அனைத்துக் குலங்களுக்கும் தாயல்லவோ? தண்ணீரின் குலம் என்ன என்று தெரியுமோ?… பகவான் தரிசனம் தந்து விட்டார். ஆனால் தன் வாழ்நாளின் கடைசிவரை கனகதாசர் கோயிலுக்குள் நுழையவே இல்லை. உடுப்பியில் அவர் நின்று பாடிய வீதியில் கோயிலுக்கு வெளியே அவருக்கு ஒரு சிறு நினைவு மண்டபம் உள்ளது. அதில் கனகதாசரின் திருவுருவச் சிலைக்கு மாலை போட்டு வைத்திருக்கிறார்கள்…

முழுதும் படிக்க: http://www.tamilhindu.com/2010/11/kannada-nandhanar-kanakadasa/

Monday, November 22, 2010

ஒரு தேசம், இரு உரைகள்

... சாதாரண பாமர மக்களின் இந்த சாதாரண பாமர முட்டாள்தனத்தை அருந்ததி ராய் போன்ற அறிவுஜீவி எழுத்தாளரால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? எனவே துப்பாக்கிகளும், துவேஷ பிரசாரங்களும், ரத்தக்களறிகளும் தான் அவர்களது மீட்புக்கு வழி என்று போதிக்கிறார். ...

முழுதும் படிக்க - http://www.tamilhindu.com/2010/11/a-nation-and-two-speeches/


Wednesday, November 17, 2010

சமீபத்திய கட்டுரைகள்....

பெப்ரவரிக்குப் பிறகு இந்த வலைப்பதிவை அப்டேட் செய்யவில்லை. அப்போது முதல் அக்டோபர் வரை எழுதியவற்றின் சுட்டிகள் இங்கே..

தமிழ்ஹிந்து:

திண்ணை:

Monday, October 11, 2010

காஷ்மீர் இந்துபூமி யே என்கிறார் ஹாய் மதன் - பாராட்டுக்கள்!

சமீபத்திய விகடனில் ஹாய் மதன் பகுதியில் ஒரு கேள்வி - பதில்..

கேள்வி: காஷ்மீரில் நடக்கும் கலவரங்களை நம்மால் அடக்கமுடியவில்லை; பிரிவினைத் தீயை அணைக்க முடியவில்லை. முஸ்லிம்கள் தான் அங்கே பெரும்பான்மை. போனால் போகட்டும் என்று காஷ்மீரை விட்டுத் தொலைத்துவிட்டு நாம் ஏன் நிம்மதியாக வாழக் கூடாது?

இதற்கு அளித்த பதிலில்,

.. வேத காலத்தில் அங்கு வசித்த காஷ்யப முனிவரின் பெயரில் இருந்து தான் காஷ்மீர் என்ற பெயர் வந்தது என்று கருதப் படுகிறது...

என்று தொடங்கி காஷ்மீர சைவம், அபினவ குப்தர், யோக வாசிஷ்டம் ஆகிய இந்துப் பண்பாட்டுக் கூறுகளின் தாயகமான காஷ்மீர் இந்தியாவின் பகுதியே என்று பதில் சொல்லியிருக்கிறார் ஹாய் மதன். கருத்துக்கள் தவறாகவும், மேம்போக்காகவும், தகவல் பிழைகளுடனும் உள்ளன - காஷ்மீரி சைவம் தமிழக சைவத்திலிருந்து தான் உருவானது என்பது தவறு; இரண்டுமே வேதநெறியை விலக்கவில்லை, மாறாக வேதநெறியையே அடிப்படையாகக் கொண்டவை. பக்தி, தாந்தீரிகம் குறித்து மதன் கூறியதும் தவறு. இந்து தத்துவ நூல்களை பாரசீக மொழியாக்கம் செய்தவர் தாரா ஷீகோ, அக்பர் அல்ல. நாகார்ஜுனர் தமிழர் அல்ல, ஆந்திரர் - அவர் பெயரில் நாகார்ஜுனகொண்டா என்று ஊர் இன்றும் இருக்கிறது.

இந்த சின்ன பதிலிலேயே இவ்வளவு தவறுகள் இருந்தாலும், வெறும் செய்தித் தாள் துணுக்குகளின் அடிப்படையில் இல்லாமல், ஓரளவு வரலாற்று, கலாசார, சமூகப் பின்னணி பற்றிய புரிதலுடன் இக்கேள்விக்கு விடையளித்த ஹாய் மதனுக்குப் பாராட்டுக்கள்!

இந்த இண்டர்நெட் யுகத்தில் சரியான தகவல்களைத் திரட்டுவது கடினமே அல்ல; ஹாய் மதன் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்து தகவல்களைத் திரட்டி பதிலளிக்க வேண்டும்.

கேள்வி-பதில் இதோ -



Wednesday, February 17, 2010

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம்

சாதிகள், சாதியம் இவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியம் குறித்து இந்து தருமம் கூறுவதென்ன? சாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா? சாதியத்தை எதிர்க்க இந்து தருமம் அளிக்கும் கருத்தியல் என்ன? இத்தகைய கேள்விகளுக்கு இந்தச் சிறு நூல் சுருக்கமாக விடையளிக்க முயல்கிறது.

நண்பர்கள் அரவிந்தன் நீலகண்டன், பனித்துளி, அடியேன் மூவரும் இணைந்து எழுதியிருக்கும் இந்தச் சிறு நூல் தமிழ்ஹிந்து தளத்தில் தொடராக வந்து கொண்டிருக்கிறது..

தொடரின் அனைத்துப் பகுதிகளையும் இங்கே படிக்கலாம்.

காதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்

இருபாலருக்கும் இடையில் இயல்பான, ஆரோக்கியமான, பாலியல் சாராத அதே சமயம் ஆர்வமூட்டுகிற (non-sexual, yet exploratory) நட்புகளைப் புரிந்துகொள்ளவோ, ஊக்குவிக்கவோ இன்னும் முழுமையாகத் தயாராகாத ஒரு சமூகத்தில், காதலர் தினத்தின் வருகையை இத்தகைய வருடாந்திர வெள்ளத்திற்குத் தான் ஒப்பிடத் தோன்றுகிறது… அதன் பக்கவிளைவுகள் எப்போதுமே துயரம் தரக் கூடியவை. மேலும், அவற்றை எப்போதுமே நாம் தவறில்லாமல் கணித்துவிடவும் முடியும்!...

முழுதும் படிக்க: இங்கே.

இந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்

செஞ்சியில் திடீரென ஏற்பட்டுள்ள பிரச்னையில் பழைமையான கோவிலின் வழிபாட்டை கிறிஸ்தவர்கள் தடுத்தி நிறுத்தி கோவிலை பூட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. காலனிய அடிமைத்தனத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு, தங்களுடன் காலம் காலமாக வாழ்ந்து வரும் தங்கள் சொந்த சகோதரர்களின் பழமையான வழிபாட்டுத் தலத்தை அபகரிக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் எப்பேர்ப்பட்ட ஈனத்தனம்!...

முழுதும் படிக்க: இங்கே.

Thursday, January 28, 2010

கம்பன் கண்ட சிவராம தரிசனம்

வெகுநாட்களுக்குப் பிறகு நான் அனுபவித்து எழுதிய கம்பராமாயணக் கட்டுரை.

நுரைத்து ஓடும் கங்கை நீரின் துளிகள் ராமனின் சடைக் கற்றைகள் வழியாக
விழுகின்றன. திரண்ட அவன் புயங்கள் அந்த நீரில் ஜொலிக்கின்றன. தன் கணவனைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள் சீதை…... இவன் கல்லாத கலை என்று ஒன்று உண்டா? அப்படி உண்டானால், அது இல்லாத உலகத்தில் தான் இருக்க வேண்டும்! யாரப்பா இந்தச் சொல்லின் செல்வன்? இவன் பிரமனோ? சிவனோ?

முழுவதும் படிக்க: http://www.tamilhindu.com/2010/01/sivarama-darshanam-by-kamban/

பண்பாட்டைப் பேசுதல்: தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல்!

ந்து மத சாத்திரங்கள் சாதிப் பாகுபாடுகளையும், பெண்ணடிமைத் தனத்தையும் வளர்க்கின்றனவா?ந்துத்துவம் சாதிய ஆதரவு சித்தாந்தமா?லக கிறிஸ்தவ நிறுவனங்கள் உண்மையிலேயே இந்தியாவைக் குறிவைத்து மதமாற்றத் திட்டங்கள் தீட்டுகின்றனவா? .....

மூகம், வரலாறு, இலக்கியம், சமயம், கலாசாரம் தொடர்பான இத்தகைய கேள்விகளுக்கு விடைதேடிக் கொண்டிருப்பவரா நீங்கள்?

நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.

மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும். ஜெ.ராம்கியின் புத்தக விமர்சனம் சொல்வனம் இதழில் வந்துள்ளது.

இந்தத் தொகுப்பில் அடியேன் எழுதிய, மொழியாக்கம் செய்த கட்டுரைகளும் உண்டு!