Monday, November 27, 2006

இலங்கைப் பிரசினையில் இந்தியத் தலையீடு : அபாயங்கள்

என்னுடைய முந்தைய பதிவைப் படித்த அனானி ஒருவர், என்னுடய நிலைப்பாடு தவறானது என்று கூறி, ஒரு நெடிய மின் அஞ்சல் அனுப்பியிருந்தார். இந்திய தேசியம், இந்து மக்களின் உரிமைகள் இவற்றில் என் போன்றே அக்கறை கொண்டுள்ளதாகத் தம்மைப் பற்றிக் கூறிக்கொண்ட அவர் எழுப்பிய சில வாதங்கள் மிகவும் சிந்தனைக்குரியதாக இருந்தன. அவர் கேட்டுக்கொண்டபடி, அவர் அனுமதி பெற்று அவரது கருத்துக்களை அப்படியே கீழே தருகிறேன்.இந்தப் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு Anonymous Author என்ற பெயரில் அவர் தமது பதில்களைத் தர வேண்டுகிறேன். ஓவர் டூ அனானி.


அன்புள்ள ஜடாயு,

இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என்பதும், இலங்கையில் அவதிப் படும் தமிழர்கள் இந்துக்கள் என்பதானால் இந்தியா தலையிட்டு இந்தப் பிரச்சினையினால் அல்லல் படும் இந்துக்களைக் காக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது என்றும் கூறுகிறீர்கள். மேலும் பிராபகரன் ஒரு நல்ல இந்துவாக இருப்பதனால் அவர் தலைமியிலானதொரு தனி ஈழம் மூலமாக இந்தியாவுக்கு எவ்விதப் பங்கமும் வந்து விடாது என்றும் , அப்படிப் பட்ட ஒரு தனி ஈழம் ஒரு முழுமையான இந்து நாடாக அமையும் என்பதும் உங்களைப் போன்ற இந்து நலம் விரும்பிகளின் எண்ணமாகவும் இருக்கிறது என்று கருதுகிறேன். இதையே வெளிப்படையாகச் சொல்லாமல் தனி ஈழம் அமைந்தால் அது இந்தியாவுக்கு இயற்கையான ஒரு தோழனாக இருக்கும் என்று வை கோபால் சாமி தனது ரீடிஃப் நேர்முகத்தில் கூறியுள்ளார். இந்துக்களின் நலனில் எனக்கும் உங்களளப் போலவே பெருத்த அக்கறையும், இலங்கையில் பரிதவிக்கும் சகோதரர்களுக்கு அமைதியானதொரு தீர்வு கிட்டி அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் அனைத்து உரிமைகளுடன் வாழ வேண்டும் என்ற அக்கறையும் முற்றிலும் உண்டு என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்களுடன் கருத்து வேறு படுவது இலங்ககத் தமிழர் பிரச்சினையில், இந்தியாவின் தலையீடு எந்த அளவுக்குள் இருக்க வேண்டும் என்பதில்தான். பின்வரும் எனது பதிவில் எனது அச்சங்களையும், சந்தேகங்களளயும், கருத்துக்களையும் தெரிவித்துள்ளேன். இலங்கைப் பிரச்சினையில் புலிகளுக்கு இந்தியா உதவ வேண்டும் என்ற உங்களைப் போன்ற இந்து/இந்திய நலனில் அக்கறை கொண்ட தேசீயவாதிகள் அனைவரும் எனது கேள்விகளில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு எனது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கலாம்.

இந்தியா ஏன் இலங்கைப் பிரச்சினையில் தலையிடக் கூடாது என்கிறேன் ?

1983 உங்களுக்கு எந்த அளவு நினைவு இருக்கும் என்பது தெரியவில்லை. நான் அப்பொழுது படித்து முடித்து விட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்த நேரம். துடிப்பான இளைமைப் பருவம். தமிழ் நாடே பற்றி எரிந்து கொண்டிருந்தது. தமிழ் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கும், உணர்ச்சிக் கொந்தளிப்பாக இருந்த நேரம் அது, தீவட்டி ஊர்வலம், கொடும்பாவி எதிர்ப்பு என தமிழர்களின் உணர்ச்சிகள் உச்சகட்டமாகத் தூண்டப் பட்டதொரு காலம். மிக எளிதாக தமிழர்களின் உணர்வவத் தூண்டி ஒரு பெரிய கலவரத்தைத் தூண்ட முடியும் என்று நிரூபிக்கப் பட்ட சமயம். சும்மா தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டால் பற்றிக் கொண்டு எரியும் காலம். அப்படி ஒரு உணர்ச்சி பூர்வமான கொந்தளிப்பு, அதன் பின்னர் எந்தவொரு பிரச்சினைக்காகவும் தமிழ் நாட்டில் உருவாகவில்லை. 1991ல் நடந்த ஒரு படு கொலை, இலங்ககத் தமிழர்கள் மேல் இருந்த அத்தனை நல்லெண்ணத்தையும், நேசத்தையும், பரிதாப உணர்வையும் அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது, அதே தமிழகம் பற்றி எரிந்தது, மீண்டும் உணர்ச்சிக் கொந்தளிப்பு, இந்த முறை தொப்புள் கொடி உறவு என்று சொந்தம் கொண்டாடிய அதே இலங்கைத் தமிழர்களின் மீது ஆவேச வெறுப்பாக மாறியது.

ஆக தமிழர்களை எளிதில் உணர்ச்சி வசப்படுத்த வைக்கலாம், அறிவு ரீதியாக இல்லாமல் , உணர்ச்சி ரீதியாக அவர்களை எந்தவொரு மாபெரும் போராட்டத்துக்கும் தூண்டலாம் என்பதை அறுபதுகளில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும்,
83ல் நடந்த இலங்கைத் தமிழர் ஆதரவு போராட்டங்களும், ரரஜீவ் கொலைக்குப் பின்னர் நடந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகளுமே சாட்சி. தமிழக மக்களை எளிதில் உணர்ச்சி பூர்வமாக தூண்டி விடலாம் என்பதை அரசியல்வாதிகள் சரியாகப் புரிந்து கொண்டனர். 1983-91 வரை விடுதலைப் புலிகளும், பிற இலங்கைப் போராளி அமைப்புகளும் தமிழ் நாட்டில் சர்வ சுதந்திரத்துடன் வலம் வந்தனர். அந்தக் காலத்தில் தி க, நெடுமாறன் , பெருஞ்சித்திரனார் போன்ற ஒரு சில பலவீனமான அமைப்புகள் தவிர வேறு தனித் தமிழர் பிரிவினைவாத அமைப்புகள் பலம் பெற்றிராத நேரம். பா ம க, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகள் பலம் பெற்றிராத காலம்.

அப்படிப் பட்ட தீவீர தமிழர் அமைப்புகள் இல்லாத சமயத்திலேயே தமிழ் நாட்டில் எளிதாக உணர்ச்சி பூர்வமான ஒரு சூழலை எளிதாக உருவாக்க முடிந்தது என்றால் இன்றய சூழலில், எந்த அளவுக்குத் தமிழ் நாட்டில் வன்முறையானதொரு போரரட்டத்தை இந்திய அரசினை எதிர்த்தோ அல்லது இந்திய ஒருமைப்பாட்டை எதிர்த்தோ தூண்ட முடியும் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். தமிழக மக்கள் பொதுவாக அமைதியானவர்கள், ஆனால் அவர்கள் ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்ற மனநிலை உடையவர்கள். தனித்தமிழ் நாடு நோக்கம் கொண்ட அமைப்புகள் சிறிதாக இருப்பினும் கூட அவர்களின் வன்முறை சார்ந்த போராட்டத்தைக் கண்டு அஞ்சி அதற்கு மொளனமான ஆதரவு காட்டினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆக இந்திய இறையான்மையை எதிர்த்தும், தனித் தமிழ் நாட்டுக்கு ஆதரவு கோரியும் ஒரு மாபெரும் வன்முறைப் போராட்டத்தை ஆரம்பிப்பதும், துண்டுவதும் அதைத் தொடர்ச்சியாக நடத்தி தமிழ் நாட்டை ஒரு காஷ்மீர் போலவோ, அஸ்ஸாம் போலவோ, ஒரு வடகிழக்கு மாநிலம் போலவோ ஆக்க அதிக நேரம் பிடிக்காது என்ற உண்மையை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டு, இதை நான் ஏதோ தனித்தமிழர் அமைப்புகளின் மீது உள்ள வெறுப்பினால் மிகைப் படுத்திக் கூறுவதாக நினைத்தால் தயவு செய்து இன்றைய ரீடிஃ பேட்டியில் கோபலசாமி என்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதி எத்தனை முறை தமிழகம் காஷ்மீராக மாறும் என்று எச்சரிக்கை விடுகிறார் என்பதை உற்று நோக்குங்கள். தமிழகத்தில் தினமும் நடக்கும் ஒரு நெடுமாறன் கூட்டத்திற்கோ ஒரு தி க கூட்டத்திற்கோ சென்று கேளுங்கள், நான் சொல்வதில் ஒரு அணு கூட மிகைப் படுத்துதல் இல்லை என்பது புரியும். தி மு க, அதிமுக இந்தக் கும்பலில் இணையா விட்டாலும் கூட வெறும் பா ம க, வி சி, ம தி மு க போன்ற அமைப்பில் உள்ளவர்கள் மட்டுமே இப்படிப் பட்ட ஒரு வன்முறைச் சூழலை உருவாக்கி அதற்கு பிற அமைப்புகளின் ஆதரவவ எளிதாகப் பெற்று விட முடியும் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு மேலே படியுங்கள்.

1983ல் எங்கள் வீட்டின் அருகே பல வீடுகளில் விடுதலைப் புலிகள் தங்கியிருந்தனர். இடுப்பில் துப்பாக்கி சொருகிக் கொண்டு பைக்கில் அங்கும் இங்கும் போய் வருவார்கள். நமது போலீசாரிடம் கூட சாதாரண தருணங்களில் இடுப்பில் துப்பாக்கியைப் பார்த்திராத எங்களுக்கு சர்வ சாதாரணமாக இடுப்பில் துப்பாக்கியுடன் திரியும் புலிகளைக் கண்டு ஒரு வித அச்சம் ஏற்பட்டது. ஆனால் வேலை வெட்டியில்லாத இளைஞர்களுக்கோ அவர்கள் ஹீரோவாகத் தெரிந்தனர். அவர்களிடம் இவர்கள் எடுபிடிகளாக வேலை செய்தனர். தமிழ் நாட்டில் துப்பாக்கியுடன் திரிவது சாதாரணமானதொரு கலாச்சாரமாக மாறியது. மெதுவாக அவர்களது அடாவடிகள் பல இடங்களில் தலை தூக்கின. போலீசார் மொளனம் காத்தனர். தமிழ் நாட்டின் சூழல் மெதுவாக மாறிக் கொண்டிருந்தது. சென்னை பாண்டி பஜாரில் வெளிப்படையாகத் துப்பாக்கிச் சண்டை நடந்தது. மீனம்பாக்கம் விமானநிலையத்தில் குண்டு வெடித்தது. இந்த சூழல் எம் ஜி யாரின் உடல் நலம் கெட்ட பொழுது கொஞ்சம் தொய்ந்தாலும், மீண்டும் அவர் மறறவுக்குப் பின் வந்த கருணாநிதி ஆட்சியில் உச்சகட்டம் அடைந்தது. பத்மநாபாவையும் 13 பேரையும் கொன்ற சிவராசன் எவ்விதத் தடையுமில்லாமல் இலங்கை செல்ல முடிந்தது. அவனைத் தடுக்கத் துணிந்த கான்ஸ்டபிள் சுட்டுக் கொல்லப் பட்டார். எஸ் பி சஸ்பெண்ட் செய்யப் பட்டார். அவன் மீண்டும் வந்தான் அடுத்த முறை அது ராஜீவின் கொலையில் முடிந்தது. இது ஒரு சுருக்கமான வரலாறு. ஜடாயு, உங்களைப் போன்றவர்களுக்கு இதன் தாக்கம் தெரியாததால் விடுதலைப் புலிகளால் தமிழ் நாட்டில் ராஜீவ் கொலையைத் தவிர வேறு உபத்திரவம் கிடையாது என்று அப்பாவித்தனமாக எழுத முடிகிறது.

பங்களாதேஷ் யுத்தத்தில் வெற்றி கண்ட இந்திராவுக்கு அது போன்ற சாகசங்களில் தொடர் நாட்டம் ஏற்பட, பிந்தரன்வாலே, விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புக்களுக்கு வெளிப்ப்டையாக இந்திய ராணுவ பயிற்சி போன்றவற்றை கொடுக்க ஆரம்பித்தார். வன்முறை இருபுறமும் கூர்மையானதொரு ஆயுதம், அதைத் தேவையில்லாமல் பிரயோகித்தால் அது பயன்படுத்தியவரையே தாக்கி விடும் என்ற உண்மையை அவர் தனது கடைசி மூச்சின் போதுதான் புரிந்து கொண்டார். அவர் செய்த முட்டாள்தனங்களின் விலையை அவரது உயிராகவும், பின்னர் அவரது மகனது உயிராகவும் கொடுக்க நேர்ந்தது. இலங்கை என்பது இந்தியாவுக்கு அதிக அளவில் தொந்தரவு கொடுக்காத ஒரு சிறிய நாடு என்பதையும், பங்களாதேசம் போலவே இலங்கையைப் பிரிக்க நினனத்தது எவ்வளவு அபத்தமானதொரு காரியம் என்பதையும் அவருக்குப் புரிவதற்கு முன்பாகவே அவரது மற்றொரு தவறு அவரைப் பலி வாங்கியது.

தனது அன்னன துணிந்த ஆபத்தான சாகசங்களால் அவரது உயிர் போயிற்று என்பதைக் கூட உணர முடியாத முட்டாள் அரசியல்வாதி ரரஜீவ் காந்தில் பக்கத்து வீட்டுச் சண்டையில் மூக்கை நுழைத்தன் விளைவை அனுபவித்தவர். 1991 ராஜீவ் கொலை. நான் ராஜீவ் காந்தியின் ரசிகன் கிடையாது. என்னைப் பொருத்தவரை அவர் ஒரு முட்டாள். இலங்கைப் பிரச்சினையில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தது, உரிய அறிவு இல்லாமல் , அனுபவம் இல்லாமல் எல்லை தாண்டிய பிரச்சினையில் சிறுபிள்ளளத் தனமாக ஆணவப் போக்கில் நடந்து கொண்டது, இந்திய ராணுவத்தை அனுப்பி அவர்களை பக்கத்து வீட்டுக்காரன் சண்டையில் பலி கொடுத்து, அவர்கள் சேர்ந்து கொண்ட பின் எதிர்க்க இயலாமல் கைகளைக் கட்டிப் போட்டது போன்ற முட்டாள்தனமானங்களின் மொத்த உருவம் ராஜீவ் காந்தி. அதற்கான விலை அவர் உயிர்.

ராஜீவுக்குப் பின்னர் வந்த நரசிம்ம ராவும், வாஜ்பாயும் சுதாரித்துக் கொண்டனர். முந்தைய உயிர் இழப்புக்கள் அவர்களுக்கு நல்ல பாடமாக அமைந்தன. எந்த அளவுக்கு தலையிட வேண்டும் என்பதை புரிந்து கொண்டனர். ஆனால் அவர்களிடம் உரிய ஆளுமையும், சுய பலமும் இருந்தது. இப்பொழுது மீண்டும் ஒரு முதுகெலும்பில்லாத மனிதரின் ஆட்சி. இத்தாலிக் காரரின் தலையீடுகள் என்று இந்தியா ஒரு சிக்கலான தருணத்தைக் கடந்து வரும் பொழுது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பிரிவினைவாதக் கும்பல்களோ, இதன் மூலம் இன்னும் ஒரு வடகிழக்கு மாநிலங்களின் சூழலை தெற்கிலும் உருவாக்க முடியுமான என மிஷனரிகளும் முயல்கின்றன. இந்தச் சதித் திட்டங்கள் எல்லாம் இந்திய தேசிய அமைப்புகளும், உங்களைப் போன்ற தேசாபிமானிகளும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்றே கருதுகிறேன். அதனால் தான் இந்த நீண்ட மடல்.

ரரஜீவ் காந்தியின் கொலைக்குப் பின் தமிழர்களை உணர்வு பூர்வமாக தட்டி எழுப்பக் கூடிய எந்தவொரு தீவீரமான பிரச்சினையும் இந்தப் பிரிவினை சக்திகளுக்கு கிட்டவில்லை. அதற்கான சந்தர்ப்பம் கனியக் காத்திருக்கின்றனர். இருந்தாலும் இலங்கைத் தமிழர்கள் மீது உள்ள அனுதாபம் இன்னுமொரு முறை உணர்ச்சிபூர்வமான கிளர்ர்சியாக உருவெடுக்குமா என்பது சந்தேகமே. தி மு க வின் தலைமைக் குடும்பத்துக்கு வேறு ஒரு ஆதாயம் கொடுக்கும் பிசினஸ் சன் டி வி சாம்ர்ஜ்யத்துடன் கிட்டி அவர்களள உலகப் பணக்காரர்கள் வரிசையில் கொண்டு வைத்து விட்டது. இப்படி ஒரு பணம் கொழிக்கும் வியாபாரம் ஒன்று பட்ட் இந்தியாவில்தான் சாத்தியம் என்பதும் புரிந்து விட்டதால், இனிமேலும் பிரிவினன வாத அரசியலில் லாபம் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்ட கருணாநிதி இனிமேலும் மொழி, இனம் மூலம் மக்களை தூண்டும் அரசியலை அவ்வளவாக விரும்ப மாட்டார். பெரியாறு அணையில் தண்ணீர் வராவிட்டாலும் காவிரி காய்ந்தாலும் அவருக்கு ஒரு பொருட்டல்ல, அதனால் போராட்டம் ஏதும் நடத்தி தனது டி வி வியாபாரத்துக்குப் பங்கம் வந்து விடக் கூடாது என்பது ஒன்றே குறியாக இருக்கிறார். ஆனால் இதர பிரிவினைவாத சக்திகளுக்கு அதன் அரசியல் எதிர்காலமே தனித் தமிழ் நாடு கேட்பதிலும் தமிழ் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதிலுமே அடங்கி உள்ளது. அது போலவே மற்றொரு வடகிழக்கு மாநில சூழலை உருவாக்க மிஷினரி சக்திகளும் காத்துக் கிடக்கின்றன. அவர்களுக்கு இந்து விரோத இந்திய விரோத பிரிவினனவாத சக்திகள் ஒரு இயற்கையான கூட்டாளியாக அமைகின்றனர். இந்த பிரிவினைவாத அரசியலுக்கு இந்து அமமப்புகளும், இந்திய தேசியத்தில் நம்பிக்கையுள்ள கட்சிகளும் ஏன் துணை போக வேண்டும் ?

மத்தியில் வலுவில்லாத ஒரு அரசு செயல்படும் இன்றைய சூழலில், 1983 ஏற்பட்ட எழுச்சி இப்பொழுது பிரிவினைவாத சக்திகளுக்குத் தேவைப் படுகிறது. அதற்கு கிறிஸ்துவப் பாதிரியார்களின் ஆசிகளும் பரிபூரணமாகக் கிடைக்கின்றன. அதை உருவாக்க விகடன் போன்ற பத்திரிகககள் தலை கீழாக முயல்கின்றன. விகடன் போன்ற பத்திரிகைக்கு
தமிழ் நாட்டின் நலன்களில் அக்கறை கிடையாது. தமிழ் நாடு நாளைக்கு போதை மருந்து சந்தையாக மாறினாலோ, மற்றொரு காஷ்மீராக மாறினாலோ அவர்களுக்கு மேலும் வியாபாரமே. மக்களின் உணர்ச்சியைத் தூண்டுவதன் மூலம் தனது பத்திரிகையின் பிராமண இமேஜ் மறந்து போய் அதிக பிரதிகள் விற்பனையாக வேண்டும் அவ்வளவுதான். ஆனால் அப்படி ஒரு தனித் தமிழ் நாடு உருவாகுமானால் இதே விகடன் பத்திரிகை காணாமல் போய் அதன் உரிமையாளர்கள் தமிழ்நாட்டை விட்டே உயிருக்கு பயந்து ஓட வேண்டி வரும் என்ற சிறிய உண்மையைக் கூட உணர முடியாமல் அவர்களது வியாபாரப் பேராசை கண்ணை மறைக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு திரட்டும் வண்னம் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டு விகடன் போன்ற பத்திரிகைகள் தமிழ் நாட்டு மக்களுக்கு கடும் துரோகம் விளைவிக்கின்றன. அப்படிப் பட்ட பத்திரிகைகளுக்குத்தான் வியாபார நோக்கம் என்றால் இந்து அமைப்புகள் ஏன் இந்த பிரிவினை நோக்கம் சார்ந்த அரசியலை ஆதரிக்க வேண்டும் ?

இன்று இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தமிழர்களுக்கு ஆதரவு நிலை எடுக்குமானால் அதனால் முழு முதல் பயனும் அனுபவிக்கப் போகிறவர்கள் விடுதலைப் புலிகளே. இந்தியா தலையிட்டு எடுக்கும் எந்த முடிவும் தமிழர்களின் சர்வாதிகாரத் தலைமமயின் நன்மையில்தான் முடியும்., இன்று வேறு எவ்வித ஜனநாயக தமிழ் அமைப்புகளும் இல்லாத நிலையில், இலங்கைத் தமிழர் ஆதரவு என்றாலே அது பாசிச சக்திகளின், அவர்களுக்கு மறைமுகமாக ஆதரவு தரும் பிரிவினை சக்திகளைத்தான் ஆதாயப் படுத்தும். அதனால் என்ன என்ன விளைவுகள் தமிழ் நாட்டில் ஏற்படும் ? இன்று தனித் தமிழர் அமைப்புகள் முன்னெப்போதையும் விட பலமுள்ளதாய் இருக்கின்றனர். பா ம க, விடுதலைச் சிறுத்தைகள் , தி க, ம தி மு க போன்ற அமைப்புகள் நிதி ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் பலமுள்ள அமைப்பாகத் திகழ்கின்றன. அவர்களுக்கு அவர்களது அபிமானிகளின் உணர்ச்சிகளளத் தக்க விதத்தில் தூண்டி விட ஒரு சிறிய பொறி தேவையாக உள்ளது. ராஜீவ் காந்தியின் கொலையினால், பொது மக்களளின் ஆதரவு அது போன்ற உணர்ச்சி ரீதியான எழுப்பல்களளப் புறக்கனித்து மழுங்கிக் கிடக்கிறது. இந்த அமைப்புகளுக்கு இந்திய அரசின் ஒரு கண் சிமிட்டல் கிடைத்தால் போதும், மீண்டும் பொது மக்களின் உணர்வுகளை அப்பாவி இலங்கைத் தமிழர் ஆதரவு என்ற போர்வையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாக மாற்ற பத்திரிகைகளும், பா ம க போன்ற கட்சிகளும் காத்துக் கிடக்கின்றன.

அந்தப் பொறியைக் கிளப்பத் தடையாக இருப்பது மத்திய அரசின் ரா போன்ற அமைப்புக்களும், நாராயணன் போன்ற அதிகாரிகளுமே. அது போன்ற ஒரு உணர்ச்சி பேரலையை மிக எளிதாக எழுப்பி விடலாம். இலங்கை ராணுவத்தை தக்க விதத்தில் தூண்டி அவர்கள் பதிலடி கொடுக்கும் இடத்தில் குழந்தைகளையும் பெண்களளயும் வவத்து பலிகடாவாக்கி தமிழர்களின் பரிதாபத்தை எளிதாகப் பெற்று விடலாம். இந்திய அரசு மட்டும் கண்டு கொள்ளாமல் இருக்குமானால் அந்தச் சிறு பொறியை பற்ற வைத்து விடலாம். அதன் பின்னர் புலிகள் தமிழ்நாட்டுக்குள் மீண்டும் தங்கு தடையின்றி நடமாடலாம். அப்படி புலிகளின் தங்கு தடையில்லாத தளமாக தமிழ் நாட்டைக் கொணர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கோபாலசாமி, ராமதாஸ், திருமாவளவன் போன்ற பிரிவினைவாதிகளும், புலிகளுக்கு ஆதரவு தரும் சர்ச் அமைப்புகளும் தலை கீழாக நிற்கின்றன. அவர்களுக்குத் தேவையான அந்த ஆதரவு மத்திய அரசிடம் இருந்து இதுவரை கிட்டவில்லை. நாளைக்கே பி ஜே பி தலைமியிலான அரசொன்று அமையுமானால் அதன் மூலமாகவும் கிட்டி விட இந்து அமைப்புகள் துணை போய் விடக் கூடாது.

அப்படியொரு ஆதரவு விடுதலைப் புலிகளுக்குக் கிட்டி அவர்கள் தமிழ் நாட்டில் சுதந்திரமாக உலவ முடியும் நிலமை வருமானால், பழைய 1983 போல் இந்த முறை தமிழ் நாடு அமைதியாக இருக்காது. வி சி, பா ம க, நெடுமாறன் போன்ற அமைப்புக்களும், புலிகளுக்கு உதவப் போகிறோம் என்ற போர்வையில் துப்பாக்கி பயிற்சி பெறுவார்கள். எல்லோர் கைகளிலும் அருவாளுக்குப் பதிலாக ஒரு துப்பாக்கி இடம் பெறும், அதிகம் வேண்டாம் சில லட்சம் இளைஞர்களுக்கு இந்தத் துப்பாக்கிகளும் ராக்கெட் லாஞ்சர்களும் கிடைத்தாலே போதுமானது இந்தப் போராட்டத்தை இலங்கையில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வர. மற்றுமொரு காஷ்மீர், மற்றுமொரு வட கிழக்கு தமிழ் நாட்டில் நிகழ அதிக நேரம் எடுக்காது. அதைத்தானே மிஷினரிகள் விரும்புகிறார்கள். அதனால்தானே இந்து ஆதரவாளர்களை விட மிஷனரி அமைப்புகள் இவர்களுக்கு விருப்பமுள்ளவையாக இருக்கின்றன.

புலிகள் தங்களது முக்கிய நிதி ஆதாரமான போதை மருந்துக் கடத்தலை தமிழ் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு நடத்துவார்கள். தனித் தமிழ் நாடு போராளிகள் அதற்கு ஏஜெண்டாக மாறுவார்கள். கடந்த 40 ஆண்டுகால திராவிட அரசுகளினால் குடிக்கும் வழக்கம் வந்தது போல் தமிழக இளைஞர்கள் போதை மருந்துக்கு அடிமமயாவார்கள்.

ரரக்கெட் லாஞ்சரில் இருந்து, விமானம் வரை தமிழ்நாட்டிலேயே தயாரிக்கப் பட்டு தமிழ் நாடு மற்றொரு பால்ஸ்தீனமாகும். புலிகளுக்கு தனி ஈழம் கிட்டி விட்டால் அதை தக்க வைத்துக் கொள்ள இந்திய மத்திய அரசின் தலையீடு இல்லாத ஒரு தனித் தமிழ் நாடு தேவைப் படும். ஆதலால் புலிகள் தனித் தமிழ் நாடு போராளிகளுக்கு ஆதரவு அளித்து தமிழ் நாட்டை மற்றுமொரு காஷ்மீராக மாற்ற முயல்வார்கள். அது நிச்சயம் நடக்கும். இன்று புலிகள் எங்களுக்கு அப்படியொரு நோக்கம் இல்லையென்று வெளியில் சொன்னாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் அந்தத் திட்டத்தை மறைக்க முயல்வதேயில்லை. தனி ஈழம் கிட்டிய அடுத்த நிமிடமே தனித் தமிழ் நாட்டுக்கானதொரு போர் ஆரம்பித்து விடும்.

தமிழ் நாட்டையும் சேர்த்து ஒரு அகண்ட தமிழகம் படைத்து விட்டால் இலங்கையினால் விடுதலைப் புலிகளை ஒன்றும் செய்ய இயலாது. இந்தியாவினாலும் தமிழ் நாட்டை திரும்பப் பெற இயலாது. தமிழ் நாட்டில் இருந்து வட இந்தியர்கள், கன்னடர்கள், மலையாளிகள் அடித்து துரத்தப் படுவார்கள். அதன் பின்னர் பிராமணர்கள் அழிக்கப் படுவார்கள் அல்லது நாடு கடத்தப் படுவார்கள். இதைத்தான் இன்று நாம் வட கிழக்கு மாநிலங்களில் சந்தித்து வருகிறோம். நாகாலாந்தில் வீட்டுக்குள் கூட தீபாவளி கொண்டாட முடியாத நிலைமை அதே நிலமை தமிழ் நாட்டுக்குள் வர அதிக நேரம் பிடிக்காது. தமிழ் நாட்டின் இன்றைய பிரிவினைவாத சக்திகள் அனைத்துமே இந்து எதிர்ப்பாளர்கள் என்பதும், நாத்திகர்கள் என்பதும், சர்ச் ஆதாரவாளர்கள் என்பதும் உள்ளங்கக நெல்லிக் கனி. அவர்களுக்கு சர்ச்களின் பணமும் கிடைக்கும் பொழுது தமிழ் நாட்டில் இருந்து இந்து மதம் விரைவில் வெளியேற்றப் படும். இன்றைக்கு புலிகளுக்கு கொடுக்கும் ஆதரவு நாளைக்கு ஒரு தனிக் கிறிஸ்துவ தமிழ் நாட்டின் அஸ்திவாரம் என்பதை நாட்டுப் பற்றுள்ள ஒவ்வொரு இந்து அமைப்புகளும் உணர வேண்டும்.


இந்தியாவில் இருந்து ஒரு காஷ்மீரையோ, ஒரு நாகலாந்தையோ, ஒரு அருணாச்சலப்பிரதேசத்தையோ விட்டுக் கொடுக்க எந்தவொரு தேச பக்தியுள்ள இந்தியனாவது ஒத்துக் கொள்வானா ? அப்படி இருக்கும் பொழுது இலங்கக மட்டும் ஏன் தன் நிலப் பரப்பை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று இந்து ஆதரவாளர்கள் எதிர்பார்க்க வேண்டும், நமக்கென்றால் வெண்ணை, இலங்கைக்கென்றால் சுண்ணாம்பா ? அப்படி என்ன இந்தியாவின் ரியல் எஸ்டேட் உசத்தி, இலங்கையின் ரியல் எஸ்டேட் தாழ்த்தி ? அந்தந்த நாட்டுக்கு அதன் அதன் நிலப் பரப்பு முக்கியம். அதில் தலையிட இந்தியாவுக்கும், அதில் தலையிட வேண்டும் என்று சொல்ல எந்தவொரு இந்திய அமைப்புக்கும் உரிமையில்லை. இன்று நாம் தனி ஈழத்தை ஆதரிப்போமாயின் எந்த முகத்தை வைத்துக் கொண்டு காஷ்மீரப் பிரச்சினையில் பாக்கிஸ்தானை எதிர்க்க முடியும் ? இரட்டை வேடமாகி விடாதா, நமது கோரிக்கக. இலங்கையை தமிழர்களுக்கு சகல உரிமைகளளயும் கொடுக்கச் சொல்லி நாம் தாராளாக வற்புறுத்தலாம், தேவை ஏற்பட்டால் அதன் கைகளை முறுக்கி, பொருளாதாரத் தடைகளை விதித்து நிர்ப்பந்திக்கலாம் அதை விடுத்து, இலங்கைப் பிரிவினைக்கு நாம் எந்த விதத்திலும் துணை போகக் கூடாது. இந்து அமைப்புகள் இதில் உறுதியாக இருக்க வேண்டும், பாம்புக்குப் பால் வார்க்கக் கூடாது, நம் தலையில் நாமே மண்ணை வாறிப் போட்டுக் கொள்ளக் கூடாது.

புலிகளைப் பொருத்தவரை அவர்களுக்கு இந்து அபிமானம் என்றெல்லாம் ஏதும் கிடையாது என்பதும், மிஷனரிகள் மூலமாகவோ, தாலிபான் மூலமாகவோ தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்த இயலுமானால் தாராளாமாக அது போன்ற அழிவு சக்திகளுடன் கை கோர்த்துக் கொள்ள தயங்க மாட்டார்கள் என்பதை கீழ்கண்ட தளத்தைப் படித்தால் புரிந்து கொள்ளலாம்.

http://freetruth.50webs.org/D4g.htm#Terrorism
http://www.christianaggression.org/item_display.php?type=ARTICLES&id=1113838580

ஆகவே புலிகள் இந்து ஆதரவாளகளாக இருப்பார்கள் என்ற நினைப்பில் அவர்களுக்கு இன்று நாம் ஆதரவு கொடுப்போமாயின் முதலுக்கே மோசம் விளையும் என்று எச்சரிக்கிறேன்.

இந்திய அரசு இலங்கைப் பிரச்சினையில் இன்னும் ஒரு முறை புலிகளுக்கு ஆதரவான நிலல எடுக்குமானால், இந்தியா தமிழ் நாட்டை பத்து வருடங்களுக்குள் மொத்தமாக இழந்து விடக் கூடிய ஆபத்து இருக்கிறது. இது வெற்றுப் பூச்சாண்டி அல்ல, நிதர்சனம், இந்தத் தருணத்திற்காகவே தமிழ் நாட்டின் பல குள்ள நரிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. பாரதமாதா தன் தலையை மட்டும் அல்ல இரு கைகளையும், இழந்தது போதாமல் தன் வலங்கால் தொடங்கி பாதம் வரையும் இழப்பாள். நான் இங்கு சொன்னது எதுவும் மிகைப் படுத்தப் பட்டது அல்ல. நெடுமாறன் போன்றவர்கள் மிக வெளீப்படடயாக பொதுக்கூட்டங்களில் பேசும் விஷயம் தான். இணையத்தில் பலரும் வெளிப்படையாக எழுதியவைதான். அதற்கான தருணம் கனியக் காத்திருக்கின்றனர். அதனால் பலனடையப் போவது விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, இந்தியப் பிரிவினையைத் தூண்ட எதையும் செய்யத் தயங்காத மிஷினரிகளும், முல்லாக்களும், கம்னியுஸ்டுகளும் கூடத்தான். அவர்களுடன் நாமும் துணை போக வேண்டுமா என்பதுதான் என் கேள்வியே. நிச்சயமாக அப்பாவி இலங்கைத் தமிழர்கள் புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் நடுவே கிடந்து அல்லல் படுவது பரிதாபத்துக்குரியதே. அவர்களுக்கு இந்திய அரசு எப்படி உதவி செய்யலாம் ?
1. இலங்கை அரசுடன் கண்டிப்பாக பேசி, இன்று தமிழ் நாடு இந்தியாவில் அனுபவிக்கும் உரிமைகள் போன்றதானதொரு மாநில அமமப்புக்கு உடனடியாக அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும். அது போன்ற அமைப்பை கண்காணிக்கும் உரிமையை பெற வேண்டும்.
2. அப்படி இலங்கை அரசை ஒத்துக் கொள்ள வவத்தவுடன், சிங்கள ராணுவத்துக்கு உதவி புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டும். தீவீரவாதிகளின் கைகளில் துப்பாக்கி இருக்கும் வரை தன் நிலையில் இருந்து இறங்கி வர இலங்கை முன்வராது. புலிகளின் தீவீரவாதப் பற்கள் பிடுங்கப் பட வேண்டும்.
3. பின்னர் கடும் நிபந்தனைகளள விதித்து ஒரு சமஷ்டி தமிழ் மாநிலத்தை ஏற்படுத்தச் செய்ய வேண்டும் அந்த தமிழ் மாநிலத்தில் தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளளயும் இலங்கை அரசு அளிப்பதைக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
4. அந்த மாநிலத்துக்கு கல்வி, அடிப்படை கட்டுமானம் போன்ற உதவிகளை நிர்மாணித்து, தன்னிறைவானதொரு மாநிலமாக மாற்ற சகல உதவிகளையும் அளிக்க வேண்டும். அதை பொருளாராத ரீதியில் சிங்கள அரசால் அலட்சியப் படுத்தி விட முடியாத ஒரு வலுவான மாகானமாக மாற்ற வேண்டும். அதன் பின்னர் நிலமை சமச் சீர் அடையும். நாளைய இந்தியா ஒன்று பட்டு பிரிந்து விடாமல் இருக்க வேண்டுமானால் இன்றைய இலங்கை ஒன்று பட்டு இருத்தல் அவசியம். பாரத மாதாவின் கண்களை நம் கைகள் கொண்டே குத்திட வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.

ஜெய்ஹிந்த்
வந்தே மாதரம்.

Friday, November 24, 2006

இலங்கைப் பிரசினையில் இந்தியா இப்போது தலையிட வேண்டுமா?

யாழ் நகரம் மற்றும் இலங்கையின் வட பகுதிகளில் நிலைமை மிக மோசமாகி இது ஒரு humanitarian crisis என்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்தும் ஸ்தம்பித்ததை அடுத்து இலங்கை அரசு ஏ-9 நெடுஞ்சாலையைத் திறந்து விட்டது, ஆனாலும் விமானங்கள் குண்டு மழை பொழிகின்றன. மஹிந்தா ராஜபக்ஷேயின் இந்தியா வருகையை ஒட்டி பல விவாதங்களும் கிளம்பியுள்ளன. இந்தியா சமீபத்தில் அனுப்பிய சாதாரண நிவாரண உதவி யையும் இலங்கை அரசு அவ்வளவாக விரும்பவில்லை என்று கூறப் படுகிறது.

ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு இந்தியா இலங்கை விஷயத்தில் நீண்ட நெடும் மௌனத்தைத் தவிர பெரிதாக ஒன்றும் கிழிக்கவில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. இதற்காக இலங்கைக்கு
நன்கொடை அளிக்கும் நாடுகள் இந்தியாவைப் பாராட்டியுள்ளன - "இலங்கை விஷயத்தில் இந்தியா பொறுப்பான பங்காற்றி வருகிறது" என்று. அதாவது ஒரு கையாலாகாத மூன்றாம் உலக நாடு தன் அண்டை நாட்டு விஷயத்தில் எப்படி நடக்கவேண்டுமோ அந்த அடக்கத்தைக் கடைப் பிடித்ததற்காக இந்தப் பாராட்டு!

ஆனால், இலங்கை மற்றும் இந்திய மக்கள் என்ன நினைக்கிறார்கள்? முந்தா நாள் NDTV-ல் இது பற்றிய கவரேஜ் வந்தது. "ராஜீவ் காந்தி கொலை என்பது எப்போதோ நடந்த துன்பியல் நிகழ்வு. அதை நினைத்து வருந்துகிறோம், மன்னிப்பு கோருகிறோம், இப்போது இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் என்று கோருகிறோம்" என்று முகம் இருட்டடிக்கப் பட்ட இலங்கைத் தமிழர்கள் சொல்வதைக் காட்டினார்கள். இதே வேண்டுகோளை கொஞ்ச நாள் முன்பு முகத்தை மிகப் பரிதாபமாக வைத்துக் கொண்டு ஆன்டன் பாலசிங்கமும் மொழிந்தது நினைவிருக்கலாம். நிகழ்ச்சியின் ஊடாக நடந்த எஸ்.எம்.எஸ் வாக்கெடுப்பில் 75% இந்தியா தலையிட வேண்டும் என்றும் 25% கூடாது என்றும் வந்தது (இந்த வாக்கெடுப்புக்கள் ஆங்கில செய்தி பார்க்கும் மேல் மற்றும் நடுத்தர நகர்வாழ் இந்தியர்களின் கருத்தை எதிரொலிப்பதாகக் கொள்ளலாம்). ஓய்வு பெற்ற, IPKF-ல் பணியாற்றிய ராணுவ அதிகாரி ஒருவரையும் பேட்டி கண்டார்கள். இவ்வளவு நாள் நாம் தலையிடாமல் இருந்தது முட்டாள் தனம் என்றெல்லாம் முழங்கினார். "ராணுவத் தலையீடு செய்திருக்க வேண்டும்" என்று கூறுகிறீர்களா என்று கேட்டதற்கு வழவழா என்று ஏதோ சொல்லி மழுப்பினார்.

இது பற்றி பொதுவாகக் கூறப் படும் கருத்துகள் என்ன?

"ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர்கள் புலிகள். அதனால் அவர்களோடும், அவர்கள் யாருடைய பிரதிநிதிகளோ அந்த இலங்கைத் தமிழரோடும் ஒட்டுறவு ஒன்றும் வேண்டாம்" - ஆனால், இந்திரா காந்தியைக் கொலை செய்த சீக்கியத் தீவிரவாத சதிக்குப் பின்னாலும், அதற்குப் பழியாக காங்கிரஸ் நடத்திய சீக்கியக் கொலைவெறியாட்டத்திற்குப் பின்னாலும், சீக்கிய மக்கள் மற்றும் கட்சிகளோடு காங்கிரஸ் உறவு தொடர்கிறதே? இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் அது ஏன் "முடிந்த அத்தியாயமாக" இருக்க வேண்டும்? இது காங்கிரசின் இரட்டை வேடம் அல்லவா?

மும்பை ரயில் வெடிகுண்டு சதிக்குப் பின் பாகிஸ்தானின் கரம் குறித்து தீர்மானமான ஆதாரங்கள் இருந்தும் "அமைதி" முயற்சிகள் தோற்கும் என்பதால் அவற்றை வெளியிடாமல் இருக்கிறதாம் மனமோகன் அரசு! அப்பப்பா, நிறுவனப் படுத்தப் பட்ட இந்திய-இந்து வெறுப்பை திட்டமிட்டு தன் நாடு முழுவதும் விதைத்து, இடைவிடாமல் தொடர்ச்சியாக தனது ஜிகாதி தீவிரவாதத்தால் இந்தியாவை ரத்த விளாறாக்கி வரும் பாகிஸ்தானிய இஸ்லாமிய அரசுகளுக்கு இவ்வளவு சலுகை ! ஆனால் புலிகளின் track record பார்த்தால், ராஜீவ் கொலைக்குப் பிறகு இந்தியாவின் மக்களுக்கும், அதன் இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் எந்தச் செயலையும் புலிகள் செய்யவில்லை.. அவர்களது விரோதம் அந்த நாளைய இந்திய அரசுடன் தானே அன்றி பாகிஸ்தானுடையது போன்ற கடைந்தெடுத்த இந்திய வெறுப்பு அல்ல. அந்தக் குற்றத்திற்காக புலிகள் மற்றும் இலங்கைத் தமிழருக்கான உதவிகளுக்கு ஏன் நிரந்தர நிராகரிப்பு? இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இலங்கைத் தமிழர்களை போலி மதச்சார்பின்மைக் கட்சிகள் நடத்தும் விதம் தானோ இது?


இன்னொரு வாதம் - தனிநாடு கோரும் ஈழத்தமிழர்களை ஆதரித்தால் காஷ்மீர் பிரசினையில் காஷ்மீரிகளுக்கு தனிநாடு மறுக்கும் இந்தியாவின் தார்மீக நிலைப்பாடு என்ன ஆகும் என்று. இந்த இரண்டு பிரசினைகளையும் ஆழ்ந்து நோக்காததால் வந்த குழப்பம் இது. காஷ்மீரில் பாகிஸ்தான் உதவியுடன், ஜிகாத் மதவெறியால் உந்தப் பட்டு அங்கு வசித்து வந்த சிறுபான்மை இந்து பண்டிட்களை இஸ்லாமியத் தீவிரவாதிகள் அடித்து விரட்டி தங்கள் நாட்டுக்குள்ளேயே அகதிகளாகும்படிச் செய்தார்கள். தங்களுக்குப் பல உதவிகளும் செய்யத் தயாராக இருக்கும் இந்திய அரசை எதிர்த்து வருகிறார்கள். ஆனால் இலங்கையில்? இதே போன்ற பௌத்த-ஜிகாதி மதவெறி மற்றும் பெரும்பான்மை சிங்கள இனவெறியினால் தாக்கி அழிக்கப் படும் சிறுபான்மை தமிழர்கள் பலர் அகதிகளாகப் புலம் பெயர்ந்தும் இன்னும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்! ஒற்றுமை என்னவென்றால் இரண்டு பிரசினைகளிலும் தாக்கி அழிக்கப் படுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே! இலங்கைத் தமிழர்களை ஒப்பிடுவதானால் காஷ்மீர் பண்டிட்டுகளுடன் தான் ஒப்பிட வேண்டுமே அன்றி காஷ்மீர் பிரிவினைவாதிகளோடு அல்ல! இலங்கைத் தமிழர்கள் போன்று பண்டிட்டுகள் தங்கள் உரிமைக்காக ஆயுதம் ஏந்தித் தாங்களே போரைத் தொடங்கியுருந்தால் இன்று காஷ்மீர் பிரசினையின் போக்கே வேறு மாதிரி ஆகியிருக்கும் . ஆனால் அவர்களிடையே ஊறியிருந்த இஸ்லாமிய ஆதிக்கத்தைக் கண்டு பயப்படும் திம்மித்தனம் தான் அவ்வாறு செய்யவிடாமல் தடுத்தது. பங்களாதேசிலும், பாகிஸ்தானிலும் தங்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகளை எதிர்த்துப் போரிடாமல் இந்துக்கள் தப்பி ஓடி வந்ததையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தங்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகளுக்கு எதிராக தீவிரத்துடன் போரிடும் இந்துப் பெரும்பான்மை மக்கள் என்றால் அவர்கள் ஈழத் தமிழர் தான். உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப் படும் இந்துக்களுக்கு உதாரண புருஷர்கள் அவர்கள் தான்.

இதே போல இலங்கைப் பிரசினையை பாலஸ்தீன பிரசினையுடன் ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்பவர்களைத் தெளிவிக்கும் வகையில் வஜ்ரா ஒரு பதிவைப் போட்டிருக்கிறார். சரியான கருத்து.

இந்தியா இலங்கைப் பிரசினையில் முழுமையாகத் தலையிட வேண்டும், ராணுவத் தலையீடு உட்பட. துன்புறும் இலங்கைத் தமிழ் மக்களின் துயர் துடைக்க தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கையை வைக்க வேண்டும். இந்த பிரசினையில் காங்கிரசைப் போலவே சிந்திப்பதை விடுத்து பா.ஜ.க. தன் தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும்.

இதுவே இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் விருப்பம்.

Wednesday, November 22, 2006

இனவாதப்-பேயை மிதிக்கும் தேசியம், துதிக்கும் துரோகிகள்

ருவாண்டாவின் ரத்த அழிவின் பின்புலத்தில் "ஆரிய" வாதம் என்ற அருமையான, கருத்தாழம் மிக்க கட்டுரையை திரு. அருணகிரி திண்ணை (நவ .17) இதழில் எழுதியிருக்கிறார். இந்தியச் சூழலில் இனவாதம் பற்றிய சில எண்ணங்களை இங்கே முன்வைக்கிறேன். இதற்குத் தூண்டுதல் அளித்த திரு. அருணகிரிக்கு மிக்க நன்றிகள்.

“ஐந்து லட்சம் மக்கள் ஏறக்குறைய நூறு நாட்களுக்குள் படுகொலை செய்யப்பட்ட பரிதாபம் 1994-இல் ருவாண்டாவில் நிகழ்ந்தது. 20-ஆம் நூற்றாண்டின் கொடிய இன அழிப்புகளில் இது ஒன்றாக இருந்தபோதிலும் போதிலும், ரத்த ஆறு ஓடிய அந்த 100 நாட்களும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் மயான அமைதி காத்தன. ஐரோப்பியக் காலனீயம் செய்த ருவாண்டாவின் வரலாற்றுப்புரட்டலும், விதைத்த இனவேறுபாட்டுக் கற்பிதமும் நூறாண்டுகளுக்குப்பின் அந்த சிறிய நாட்டை பெரிய பிணக்காடு ஒன்றிற்குக் கொண்டு வந்து சேர்த்திருந்தது” என்று தொடங்கி ருவாண்டாவின் சீரழிவுக்கான பின்னணியை அருமையாக விவரித்திருக்கும் அவர், இந்தியச் சூழலில் இது போன்று நடப்பதற்கான சாத்தியக் கூறுகளை காலனிய சக்திகள் உருவாக்க முயன்றதையும், அது எவ்வாறு செயலிழந்தது என்பதையும் கூறுகிறார் :

“முதலாக, ஆரிய வாதம் பிராமணர்களையே உயர் ஆரியர்களாகக் காட்ட முயன்றாலும், யதார்த்தத்தில் அவர்கள் கல்வி, இலக்கியம், ஆன்மீகம் இவற்றிலன்றி (ருவாண்டாவின் டுட்ஸிகளைப்போல்) பொருளாதார பேராதிக்க சக்திகளாக இல்லையென்பது கண்கூடாய்த் தெரிந்தது. டுட்ஸிக்கள் ஹுடுகளுக்கெதிரான இன ஆதிக்கத்தினைக் கைக்கொண்டது போல் இந்தியாவில் நிகழவில்லை, மாறாக பல "ஆரியர்கள்" காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் "திராவிடர்களுடன்" இணைந்து உடமை இழந்தனர்; குடும்பம் இழந்தனர்; உயிரை இழந்தனர். திராவிடரின் தொன்மை இலக்கியங்களில் "ஆரியர்" மதிக்கப்பட்டிருந்தனர். திராவிட மொழிகள் என்பவை "ஆரியர்களால்" போற்றிப் வளர்க்கப்பட்டன. ருவாண்டா போல சிறிய நிலப்பரப்பாகவோ சிறு கலாசாரமாகவோ இருந்திருந்தால் ஒருவேளை இன்று வடகிழக்கில் பழங்குடிகளுக்கு நிகழ்வது போல இந்தியாவிலும் இன அழிப்பு நடந்திருக்கலாம். ஆனால் அகன்று விரிந்த பாரதத்தின் வலிமையான தொன்மைக்கலாசாரம் காலனீயத்தின் எளிய இனவாத வரையறைகளுக்குள் சிக்கி சிதறுண்டு போகாது, கம்பீரமாக இணைந்து உறுதியாக நின்றது. ருவாண்டாவைப்போல கிறித்துவமயமாக்கல் மூலம் விவிலிய மூளைச்சலவை செய்வது இந்தியாவில் எளிதில் சாத்தியமாகாமல் போனதும் கூட இனவாதம் ரத்தவெறி பிடித்து வளராமல் போனதற்கு முக்கியக் காரணம். மொகலாயக் கொடுமைகளைப் பலவாறு பார்த்திருந்த இந்து மதம், கிறித்துவத்தை எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தது. கீதையின் அடிப்படையில் எழுந்த காந்தியடிகளின் இந்து தார்மீகத்தின் முன், கிறித்துவப் பிரச்சாரங்கள் எடுபடாமல் போயின.”






மிகச் சரியான, ஆணித்தரமான, உறுதியான கூற்று. காலனிய அரசு மற்றும் கிறித்தவ மிஷநரிகளின் அதிகார பலத்திற்கும் மற்றும் ஐரோப்பிய “அறிஞர்களின்” அறிவுத் தீவிரவாதத்திற்கும் முன்னால் மிகச் சாதாரணமாகத் தோற்றமளித்த இந்திய தேசிய எழுச்சியின் நாயகர்களே இந்த இனவாதப் பேயை சரியாக இனம் கண்டு எதிர்த்தனர். சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர், ஆரிய சமாஜ் நிறுவனர் சுவாமி தயானந்தர், மகாகவி பாரதி, டாக்டர் அம்பேத்கர், ரவீந்திரநாதத் தாகூர், வீர சாவர்க்கர் மற்றும் பலர். இதற்காக இந்திய சமுதாயம் என்றென்றும் இவர்களுக்குக் கடமைப் பட்டுள்ளது. மகாத்மா காந்தி சித்தாந்த ரீதியில் ஆரிய இனவாதத்தை பெரிய அளவில் எதிர்கொள்ளாவிட்டாலும் அவரது சத்தியம், அகிம்சை சார்ந்த போர்முறை இனவாதம் என்னும் வன்முறைப் பேயை வளரவிடாமல் தடுத்தது என்பதில் ஐயமில்லை. டாக்டர் அம்பேத்கார் சாதிக் கொடுமைகள் உருவானதன் சமய, சமூக, அரசியல் காரணிகளை அலசி ஆராய்ந்து அவற்றிலிருந்து இனவாதம் என்ற கொள்கையை முற்றிலும் நிராகரித்தார். பாரதம் முழுவதிலும் உள்ளது ஒரே ஆரிய இனம் என்பதையும் தெளிவாகப் பதிவு செய்தார்.

சுவாமி விவேகானந்தர் காலனியம் விதைத்த இனவாதப் புரட்டை தமக்கே உரிய நடையில் எதிர்கொள்வதைப் பாருங்கள் (சுவாமிஜின் உரைகள் பாரதத்தின் எதிர்காலம், ஆரியரும் தமிழரும்):

“ஐரோப்பிய வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள் சூத்திரர்கள் எல்லாம் பழங்குடியினர், அடிமைகள் என்று. சரித்திரம் மறுபடி மறுபடி நிகழும் என்பார்கள். அமெரிக்கர்களும், ஆங்கிலேயர்களும், டச்சுக் காரர்களும், போர்த்துகீசியர்களும் ஏழை ஆப்பிரிக்கக் கறுப்பர்களைக் கையகப் படுத்தி அவர்களைக் கொத்தடிமைகளாக்கித் தாங்கள் சுகபோகத்தில் வாழ்ந்தார்கள். அந்தக் கலப்புச் சேர்க்கைகளில் அடிமைகளாகவே பிறந்த குழந்தைகளை அடிமைத் தளையில் வாழ்க்கை முழுதும் வைத்திருந்தார்கள். இந்த சரித்திரப் பின்னணியிலேயே திளைக்கும் ஐரோப்பியச் சிந்தனை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் முன் தாவிச் சென்று பாரதத்திலும் இதே தான் நடந்திருக்கும் என்று கற்பனை செய்கிறது போலும்! கருப்புத் தோல் படைத்த பழங்குடிகள் நிறைந்திருக்கும் பாரதம், அங்கே திடீரென்று வெள்ளை ஆரியன் எங்கிருந்தோ வருகிறான் ! எங்கிருந்து என்பது கடவுளுக்கே வெளிச்சம். மத்திய திபேத்திலிருந்து வந்தார்கள் என்று வாதிடும் சிலர், மத்திய ஆசியாவிலிருந்து தான் என்று வாதிடும் பலர். தேசப்பற்றுள்ள பிரிட்டிஷ்காரர்கள் சாதிக்கிறார்கள் ஆரியர்கள் செந்நிற முடியுடையவர்கள் என்று. வேறு சிலர் சொல்லுகிறார்கள் இல்லை இல்லை அவர்கள் முடி கறுப்பு தான் என்று. சொல்லும் வரலாற்று ஆசிரியர் கறுப்புமுடி உள்ளவர் என்றால் ஆரியர்கள் கண்டிப்பாகக் கருப்புமுடிக் காரர்கள் தான். சமீபத்தில் சுவிட்சர்லாந்துக் குளக்கரைகளில் தான் ஆரியர்கள் வாழ்ந்தனர் என்று நிறுவுவதற்காக ஒரு முயற்சி நடந்து வருகிறது. இந்த சித்தாந்தம் எல்லாம் அந்தக் குளத்திலேயே மூழ்கிப் போகட்டும், அதற்காக நான் வருந்த மாட்டேன்! இப்பொழுது வேறு சிலர் ஆரியர்கள் வடதுருவத்தில் இருந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு போகிறார்கள். ஆரியர்களையும், அவர்களது இருப்பிடங்களையும் இறைவன் ஆசிர்வதிக்கட்டும்! இந்த எல்லா சித்தாந்தங்களிலும் இம்மி அளவாவது உண்மை இருக்கிறதா? நமது (வேத) நூல்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் ஒரு சொல், ஒரு சொல் கூட ஆரியர்கள் பாரத்திற்கு வெளியில் இருந்திருக்க வேண்டும் என்று காட்டுவதாகக் கூறமுடியாது. பண்டைய பாரதத்தில் காந்தாரமும் (ஆப்கானிஸ்தான்) இணைந்திருந்தது என்பது நினைவில் இருக்கட்டும். அவ்வளவு தான், வாதம் முடிந்து விட்டது. இப்பொழுது இருக்கும் சூத்திரர்கள் எல்லாம் ஆரியர் அல்லாதவர்கள் என்பது தர்க்கம், பகுத்தறிவு இரண்டிற்கும் ஒவ்வாத ஒரு வாதம். ஒரு சில ஆரியர்கள் இப்படி நூறாயிரம் பழங்குடி அடிமைகளை ஆண்டு கொண்டிருந்திருக்க முடியாது, அடிமைப் பழங்குடியினர் அன்றே அவர்களைச் சட்னியாக்கிச் சாப்பிட்டிருப்பார்கள்! பல்வேறு விதமான, சாதிகளும், குடிகளும், தொழில் பிரிவுகளும் எப்படி உருவாயின என்பதற்கான குறிப்புக்கள் மகாபாரதம் என்ற பெரும் இதிகாசத்தில் கிடைக்கின்றன. அவையே இதற்கான உண்மையான, அறிவுக்குகந்த விளக்கங்கள் ஆகும்.”

இனவாதம் உலகெங்கும் பரப்பப்பட்ட அந்தக் காலகட்டத்தில், சுவாமிஜி தம் தாய் நாடான பாரதத்தை இனக்குழுக்களின் அருங்காட்சியகம் (ethnological museum) என்ற அழகிய சொல்லால் குறித்தார். டார்டார்கள், பலூச்சிகள் போன்ற வடமேற்கின் காட்டுமிராண்டிகளை இந்துக் கலாசாரம் சீர்படுத்தி மேன்மை தாங்கிய ராஜபுத்ர, ஜாட் வீரர்களாக மாற்றியதையும், உலகத்தில் தங்கள் இனமே அழியும் அபாயத்தில் இருந்த பார்சிகளுக்கும், யூதர்களுக்கும் இந்து தேசம் அடைக்கலம் கொடுத்ததையும் அழகாக மேற்குறிப்பிட்ட உரைகளில் விவரிக்கிறார். உலகின் மிகப் பழைய இனங்களையும் அழிவிலிருந்து காத்த பெருமைக்குரிய கலாசாரம் எங்களுடையது என்று அன்றைய மேற்கத்திய உலகின் நகரங்களிலேயே சுவாமிஜி முழங்கினார்.

அருணகிரி மேலும் கூறுகிறார்: “இனமேன்மை ஓர் இயற்கை நிஜம்' என்பது அன்றைய ஐரோப்பாவில் மிகப்பிரபலமாய்ப் பரவிக்கொண்டிருந்த ஒரு தத்துவம் . இதற்கு ஊற்றுக்கண்ணாக விளங்கியதும் உத்வேகம் கொடுத்ததும் விவிலியத்தின் மீதான ஐரோப்பாவின் வெறித்தனமான குருட்டு நம்பிக்கை. விவிலியத்தின் பெருவெள்ளத்தில் தப்பிய நோவாவிற்கு ஜாபத், ஷெம், ஹாம் என்று மூன்று மகன்கள். இவர்களே உலகின் அனைத்து உயர் இனங்களுக்கும் தோற்றுவாய் என்ற விவிலியக்கருதுகோள் அன்றைய ஆதிக்க ஐரோப்பாவால் அழுத்தமாக நம்பப்பட்டது; இதையொட்டிய கருத்தாக்கங்கள் காலனிநாடுகளில் வரலாறென்ற பெயரில் வலுவாகப் பரப்பப்பட்டன”

பைபிளோடு நிற்காமல் பாரதத்தின் சமய மரபுகளையும் இந்தப் போக்கில் திரிக்க காலனியாதிக்கம் செய்த சதிகள் நாம் அனைவரும் அறிந்தவை.





நிறம்: ரிக்வேதத்தில் வரும் ஒளி இருள் தொன்மப் படிவங்களை கறுப்பு பழங்குடியினர், வெள்ளை ஆரியர் என்று திரிக்க முயன்றது பெருமளவில் எடுபடவில்லை. கலப்பு மணங்களை சில வரையறைகளுடன் அனுமதித்த, நெகிழ்ச்சியுடைய சமூக அமைப்பைக் கொண்டிருந்த இந்து சமுதாயத்தில் எல்லா சாதிக்காரர்களும், தங்கள் கலப்பு மூதாதையர்கள், வசிப்பிடத்தின் தட்பவெப்பம் மற்றும் உணவுப் பழக்கங்களால் வடிவமைக்கப் பட்ட எல்லா நிறங்களிலும் இருந்தார்கள்! தமிழ்நாட்டுக் கன்னங்கரேல் பிராமணர்களும், பஞ்சாபின் பொன்னிற தலித்துகளும் எந்த விதமான நிறவெறித் தத்துவமும் இங்கு காலூன்றுவதற்குப் பெரும் சவாலாக இருந்தார்கள். கருமுகில் வண்ணனையும், கருப்பழகி திரௌபதியையும், பொன்னார் மேனியனையும், இவற்றோடு பச்சை அம்மனையும், மஞ்சமாதாவையும் கூட ஒன்றாகப் போற்றி வணங்கிய கலாசாரம் இந்த நிறப் பிரிவினை வாதத்தை எளிதாக விழுங்கி விட்டது.

தேவர்,அசுரர்: புராணங்களின் படி, கஷ்யப முனிவரின் இரு மனைவியர் அதிதி, திதி. அதிதியின் மக்கள் தேவர்கள், திதியின் மக்களான தைத்யர்கள் அசுரர். இத்தகைய கதைகள் தெய்வ, அசுர இயல்புகள் ஒரே மனத்தில் உதிப்பவை என்பதற்காகக் கூறப் பட்டன. தைத்யர்களின் குலத்தில் மாமனிதர்களான பிரகலாதனும், மகாபலியும் உதித்தார்கள். ஆனால், புராணங்களின் இந்த உருவகப் படிமத்துக்கு இனவாதப் பூச்சு தரும் முயற்சிகள் காலனிய, கிறித்தவ அறிஞர்களால் கடுமையாக செய்யப் பட்டன. பிரம்மாவின் பேரனான வேத அறிஞன் ராவணன் திடீரென்று திராவிடப் பழங்குடியினரின் பிரதிநிதியாக்கப் பட்டான். ராமனுடன் உறவு கொண்டாடிய உண்மையான பழங்குடியினரான படகோட்டி குகன், வேட்டுவப் பெண் சபரி, கழுகன் ஜடாயு மற்றும் காட்டுவாசி வானரர்கள் ஆரிய சதிகாரர்கள் ஆனார்கள். கிறித்துவ மதத்தின் ட்ரேட்மார்க் சொத்தான கடவுள், எதிர்க்கடவுள் (சாத்தான்) கொள்கையை இனவாதத்துடன் குழைத்துத் தந்த இந்த சதிவேலைகள் கொஞ்சம் வெற்றியடைந்தன என்றே சொல்லவேண்டும். ஒரு குறிப்பிட்ட இருள் சூழ்ந்த காலகட்டத்தில் தமிழகம் போன்ற இடங்களில் இந்தக் காலனியப் பிதற்றல்கள் ஏதோ உண்மை வரலாறு போல ஏற்கப்பட்டு இன்றும் ராவணன், அசுரன் போன்ற பெயர்களில் சாதீய, இனத்துவேஷம் பேசும் மனநிலை பிறழ்ந்த பித்துக்குளிகளை உருவாக்கியிருக்கிறது.






மதம், மொழி: பாரதத்தில் வாழ்ந்த தொன்மை மக்களின் சமயக் கூறுகளை நேரடியாக உள்வாங்கியவை வேத, சைவ, வைணவ, சாக்த மதங்களே. இதோடு ஒப்பிடுகையில் ஆரிய கௌதமர் (தம்மபதம் பெரும்பாலும் புத்த பகவனை இப்படித் தான் குறிப்பிடுகிறது) உருவாக்கிய பச்சை ஆரிய மதம் பௌத்தம். சமணமும் அப்படியே. ஆனால், ஐரோப்பியர்கள் எழுதிய வரலாற்றுக் கதையாடல்களில் இந்த விஷயங்கள் பலவிதமாகத் திரிக்கப் பட்டு குழப்பப் பட்டது. இந்த காலனியாதிக்க மூளைச்சலவையே இன்று வன்முறையை ஆதரிக்கும் ஆனால் பவுத்தத்தைப் போற்றுவதாகக் காட்டிக்கொள்ளும், அதே சமயம் வந்தேறி ஆரியர்களைத் தூற்றும் இந்து எதிர்ப்பு போலி அறிவுஜீவிகளை உருவாக்கியிருக்கிறது.

கால்டுவெல் பாதிரியார் திராவிட மொழி இலக்கணம் என்ற பெயரில் எப்படி மறைமுகமாக ஆரிய திராவிட இனவாதக் கருதுகோளை விதைத்தார் என்பது பற்றி திரு. வஜ்ரா சங்கரின் “ஏசுவும், கிறுத்துவர்களும் ஆரியர்களா” என்ற பதிவில் அருமையான விளக்கம் உள்ளது. இலங்கையில் இதன் விளைவு இன்னும் பயங்கரமானது. திராவிட மொழிக்குடும்பத்தில் உள்ள மலையாளத்தை விட சிங்களத்தில் சம்ஸ்கிருதத் தாக்கம் குறைவு, இரண்டும் ஏறக்குறைய ஒரே அளவு திராவிட (தமிழ்) மொழிக்கூறுகள் கொண்டவை. ஆனால், காலனிய மொழியியல் சிங்களத்தை வேண்டுமென்றே இந்தோஆரிய மொழிக்குடும்பத்தில் தள்ளியது. சிங்களவர் ஆரியர் என்றும் தமிழர் திராவிடர் என்பதுமான தேவையில்லாத இந்த இனவாதப் பரிமாணம் இலங்கைப் பிரசினையை இன்னும் தூபம் போட்டு வளர்க்க உதவியது.

இப்படி, இந்து ஆன்மீகமும், இந்திய தேசியமும் வெறுத்து ஒதுக்கிய இந்த இனவாதப் பேயை இந்தியச் சூழலில் இன்றும் துதித்துப் போற்றுபவர்கள் யார்?

1) கிறிஸ்தவ மி(வி)ஷநரிகள், மதமாற்ற வெறியர்கள்

இந்தப் பேயை உருவாக்கிக் கட்டவிழ்த்துவிட்ட பெருமைக்குரிய இவர்கள் சமயம் கிடைக்கும்போதெல்லாம் இதைத் துணைக்கு அழைப்பார்கள். வடமேற்கு மாநிலங்களான திரிபுரா, மணிப்பூர், மிசோரம் இவற்றில் பழங்குடிகளில் ஒருவரோடு ஒருவரை மோதவிட்டு ஜமாத்தியாக்கள் போன்ற இனங்களைப் படுகொலை செய்து அழிப்பது, NLFT போன்ற கிறித்தவ அல்-கொய்தா குழுக்களை உருவாக்கியது, வடமேற்கின் குடிகளை பாரத கலாச்சாரத்திலிருந்தும் தேசியத்திலிருந்தும் மேலும் மேலும் தனிமைப்படுத்தியது இவை சில மிஷநரி சாதனைகள். மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கட் மாநிலங்களில் உள்ள பழங்குடியினரது நிலங்களை வந்தேறி ஆரியர்கள் பறித்துக் கொண்டதாகவும், இப்போது அவையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து பாரத்திலிருந்து பிரித்து “தலித்ஸ்தான்” என்றொரு தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்றெல்லாம் பிரசாரங்களைத் தூண்டுவிடுவது, காஞ்சா இளையா போன்ற மறை கழன்ற கேசுகளை வைத்து இந்து போன்ற நாளேடுகளில் ஆரிய ஆக்கிரமிப்பு பற்றி எழுத வைப்பது. இனவாதப் பேயை வைத்து இப்படிப் பல திட்டங்கள் மிஷநரிகளிடம் உள்ளன.

2) இடது சாரிகள்

இந்திய தேசியம் என்ற வலுவான கட்டமைப்பை சித்தாந்த ரீதியாக உறுதி செய்யும் எல்லா விஷயங்களையும் முன் நின்று எதிர்க்கும் கூட்டம் இது. இந்தியா எல்லா விதங்களிலும் பிளவுபடுதல் (Balkanisation) தங்களுக்கு உதவும் என்பதை நன்கறிந்து அறிவுஜீவித் தனத்துடன் அதற்கான திட்டங்களை செயல்படுத்துபவர்கள். வரலாற்றின் உண்மைத்தன்மை, ஆதாரங்கள் போன்றவை பற்றி மிகவும் கரிசனப் படுவதாகக் காட்டிக் கொள்பவர்கள், ஆனால் பயங்கரத் தந்திரத்துடன் வரலாற்றைத் திரிப்பவர்கள், மறைப்பவர்கள். பக்கம் பக்கமாக பாரசீக, அராபிய முஸ்லீம் வரலாற்று ஆசிரியர்களே பதிவு செய்து வைத்திருக்கும் இந்துக்களின் மீதான ஆக்கிரமிப்பு, படுகொலைகள் போன்ற 300 ஆண்டுகள் முந்தைய சமீப கால ஆதாரங்களை மூடி மறைத்தோ, இல்லை என்று சாதித்தோ அல்லது நியாயப் படுத்தியோ கூடப் பேசுவார்கள். ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய, முழு ஊகங்களின் அடிப்படையில் கட்டிய ஆரிய இனவாதம் அசைக்க முடியாத உண்மை, அதுவும் அந்த ஆரிய முனிவர்கள் பசு மாமிசம் சாப்பிட்டது பக்கத்திலிருந்து பார்த்தது போன்ற உண்மை என்றெல்லாம் சாதிப்பார்கள்.

ஆரியர்களது இந்து கலாசாரம் இந்தியாவிற்கு வெளியிருந்து வந்தது, இந்தியாவிற்கென்று சொந்தமாக ஒரு சமுதாய, கலாசார சிந்தனையும் கிடையாது என்பதாக நிறுவினால் மார்க்சிய, லெனினிய, மாவோயிச, ஸ்டாலினிச சித்தாந்தங்களையெல்லாம் நாம் பின்பற்றித் தான் ஆகவேண்டும் என்று நியாயப் படுத்த இது உதவுகிறது அல்லவா?






3) இஸ்லாமிஸ்டுகள்:

இந்தக் கூட்டத்தின் இணைய உறுப்பினர்கள் சிலர் அவ்வப்போது தங்களைச் சாடுபவர்களை வந்தேறி, பார்ப்பன, ஆரியக் கும்பல் என்றெல்லாம் சாடுவதால் இது பட்டியலில் இடம்பெறுகிறது. யூத இன வெறுப்பையும், அழிப்பையும் சமயக் கொள்கையாகவே கொண்ட இஸ்லாம், ஹிட்லரை விடப் பன்மடங்கு பெரிய இனப் படுகொலைகளையும், இன அழிப்பையும் பல நூற்றாண்டுகளாக செய்துவரும் முகமது நபியின் வன்முறை சித்தாந்தமான ஜிகாத், இவற்றை நியாயப் படுத்த வேண்டுமல்லவா? அதனால் அவ்வப்போது ஆரியர்களும் இப்படி ஆக்கிரமிப்பு செய்தார்களே என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போவார்கள், அவ்வளவு தான்.

4) போலி மதச்சார்பின்மை வாதிகள்:

காலனியப் பார்வைகள் மூலம் தன் சொந்த நாட்டின் கலாசாரத்தைக் “கண்டுபிடித்து அறிந்த” டிஸ்கவரி ஆஃப் இந்தியா புகழ் ஜவகர்லால் நேருவின் சிந்தனைகளைக் கருத்தியல் அடிப்படையாகக் கருதுவதால் ஆரியப் படையெடுப்பும், இனவாதமும் உண்மை என்று முன்பு நம்பியவர்கள். தற்போது பொருளாதாரச் சீர்திருத்தம் தவிர மற்ற எல்லா சித்தாந்த சமாசாரங்களிலும் இடது சாரிகளால் கடத்தப் படுவதால், போட்டி மதச்சார்பின்மைக்காக இடது சாரிகளை விடத் தாங்கள் ஒரு படி மேல் என்பதாகக் காட்டத் துடிப்பவர்கள். ஆரிய இனவாதத்திற்கு எதிராக இந்துத்துவம் மிகத் தெளிவான, உறுதியான நிலைப்பாடு எடுத்துள்ளதால், தேசியவாதத்தை பலவீனப் படுத்தும் இந்தக் கொள்கைக்கு வலியச் சென்று தோள்கொடுக்கிறார்கள்.

5) திராவிட இயக்கங்கள்

ஒரு காலகட்டத்தில் காலனிய சக்திகளின் ஆரிய, திராவிட ஏமாற்று வேலைக்குப் பலியான ஆடுகள் என்பதால் பரிதாபத்திற்குரியவர்கள். இந்த இனவாதத்தின் எல்லாக் குப்பைகளையும் மற்றெல்லா கும்பல்களையும் விட அதி விசுவாசமாக நம்பி தீபாவளியை மறுத்து, பிள்ளையாரை உடைத்து, தங்கள் மொழியின் பேரிலக்கியமான கம்ப ராமாயணத்தையே கொளுத்தி எல்லாம் செய்யும் அளவுக்கு ஒரு காலகட்டத்தில் போனவர்கள். தமிழின் மேன்மையை நிலை நிறுத்தும் உத்வேகத்தில் பல உண்மையான அறிஞர்களும் ஒரு அடையாளம் வேண்டி இந்த இனவாதச் சேற்றுக்குள் இழுக்கப் பட்டது சோகம். தமிழகத்தில் சாதீயத்திற்கெதிரரன போராட்டம் நாராயண குருவோ, அம்பேத்கரோ இல்லாமல் ஒரு ஏமாற்றுக்கார சுயநல ஜாதிவெறியரும், காலனிய அடிவருடியுமான ஈ.வே.ரா.வால் முன் நடத்தப் பட்டதால் பகுத்தறிவுப் பகலவன்களும் கூட ஆரிய இனவாதத்தைக் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று.

முதல் சொன்னப் பட்ட மூன்று குழுக்கள் போல, கடைசி இரண்டு குழுக்களுக்கும் இனவாதத்தை நியாயப் படுத்தவேண்டிய கட்டாயம் இல்லை. ஆரிய ஊடுருவல் பச்சைப் பொய் என்பதை இந்த நூற்றாண்டின் அறிவியல், தொல்லியல், வரலாற்று ஆராய்ச்சிகள் சந்தேகமில்லாமல் நிரூபித்து வருகின்றன. சிந்து, சரஸ்வதி நதிக்கரைகளில் பிறந்து, கங்கைத் தீரத்தில் செழித்த அதே பாரதக் கலாசாரம் தான் காவிரின் கரைகளில் பொங்கிப் பெருகிப் புகழ் சூடியது. அந்த கலாசாரத்தின் மைந்தர்கள் தான் நாம் அனைவரும்.






மதச்சார்பின்மை வாதிகளே! உங்கள் மீது அநியாயமாகத் திணிக்கப் பட்ட இந்த ஆரிய இனவாதக் கொள்கையை நிராகரியுங்கள்.

திராவிட இயக்க சகோதரர்களே! தனிநாட்டுக் கொள்கையையும், கடவுள் மறுப்புக் கொள்கையும் அண்ணா அறுபதுகளில் அதிகார பூர்வமாகக் கைவிட்டது போல, ஆரிய இனவாதக் கொள்கையையும் திராவிட இயக்கம் நிராகரிக்க வேண்டும். இந்தத் துரோகக் கும்பலில் இருந்து வெளிவர வேண்டும்.

சொ-ர்-க்-க-ம் போன-சுல்தான்-கள்: வரலாற்றிலிருந்து

வீரர்களில் சிறந்த கிருஷ்ணராஜனே ! உன்னால் அழிக்கப் பட்ட திமிர்பிடித்த துருக்க சூரர்கள் சொர்க்கத்திற்கு வந்திருக்கிறார்கள். பிரகஸ்பதியைப் பார்த்து “பீர்” என்றும் இந்திரனை “சுல்தான்” என்றும், இந்திராணியை “பேகம்” என்றும் விளிக்கிறார்கள். அவர்கள் சலாம் போடுவதைப் பார்த்து தேவர்களுக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை!”

விஜயநகர சாம்ராஜ்யத்தின் புகழ்பெற்ற தெலுங்குக் கவிஞரான ராமராஜ பூஷணர் தம் மன்னரைப் புகழ்ந்து பாடிய பாடல் ஒன்றில் இப்படிச் சொல்லிக் கொண்டு போகிறார்.

பாரத நாட்டின் தார்மீக, காவிய மரபுகளுக்குட்பட்டு தன் மாமன்னரால் கொல்லப் பட்ட கொடுங்கோலர்களுக்கும் தன் கவிதையில் வீர சொர்க்கம் அளித்து விட்டார் கவிஞர்; பெரும்பாதகங்கள் புரிந்த கொலைகாரர்களானாலும் போர் செய்து உயிர் விட்டார்கள் என்பதாலும், கிருஷ்ணராஜனது படைகளின் தெய்வீக ஆயுதங்கள் தீண்டிச் செத்தார்கள் என்பதாலும் இவ்வாறு சொன்னார் போலும்! சிலப்பதிகாரத்தில் அரச ஆணைப்படி கொலைக்களத்தில் கோவலனை வாளால் வெட்டிய பணியாளர்கள் தங்கள் இயல்பினால் அல்ல, கள்ளுண்ட நிலையில் அப்படிச் செய்தார்கள் என்று இளங்கோ பாடிச் சென்றார் அல்லவா? அது போன்ற ஒரு அதீதமான, இந்துப் பண்பாட்டிற்கே உரித்தான கவிக் கருணையின் வெளிப்பாடு தான் இது.

காஃபிர்களுக்கு குரான் இம்மையில் வழங்கும் தண்டனைகள் உலகப் பிரசித்தம். ஜிகாதிகளாலும், காஜிகளாலும் இப்படிப் பலவிதமாகக் கொல்லப்படும் காஃபிர்களுக்கு அதற்குப் பின்னால் என்ன ஆகிறது? செத்தபின்னாலும் ஜஹன்னும் என்னும் இஸ்லாமிய நரகத்தில், 7ஆம் நூற்றாண்டு அராபியக் கற்பனைகளில் உதித்த பல்வேறு விதமான நரக வேதனைகளுக்கு அவர்கள் ஆட்பட வேண்டும். “இன்னமும் அவனது ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ஏனெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான்!”

சே சே என்ன இது? 16ஆம் நூற்றாண்டின் சாதாரண அரசவைக் கவிஞரது சாதாரண இயல்பைப் பேசும்போது, உலகின் ஒரே கடைசி இறைத் தூதரது உயர்ந்த மனித நீதிப் பார்வையைப் பற்றிய பேச்சு? விஷயத்துக்குப் போவோம்.

கிபி 1509ல் பாமினி, பீஜாப்பூர், பீடார் சுல்தான்களுக்கும் விஜநகரப் பேரரசுக்கும் நடந்த போரில் கிருஷ்ணதேவராயர் பெற்ற பெரும் வெற்றிகள் தென்னகத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை. இந்தப் போரில் விஜயநகரப் பேரரசு மட்டும் தோற்றிருந்தால், தென்னாடு மிகப் பெரிய, பரவலான இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு உட்படும் அபாயம் இருந்தது. கிபி 1501லேயே பாமினி சுல்தான் மஹ்மூத் காஜி முஜாஹித் விஜயநகரப் பேரரசு அழியும் வரை ஓய்வில்லாமல் ஜிகாத் செய்ய வேண்டும் என்பதாக ஒரு அரசாணை பிறப்பித்தான். இவனால் உந்தப் பட்ட முஸ்லீம் அரசுகள் எல்லாம் சேர்ந்து கிபி 1509ல் விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்தன. துருக்கியிலிருந்து வந்து கர்னாடகத்தில் அடில் ஷாஹி வமிசத்தை நிறுவிய யூசுப் அடில் ஷா (இவன் Ottomon Turk இனத்தவன்), பீடாரின் முதல் சுல்தான் காசிம் பரித், நிஜாம் வமிசத்தவனான ஃபாதுல்லா இவர்களும் விஜயநகரத்தின் மீது படையெடுக்க அது தான் சரியான தருணம் என்று எண்ணினர். முதிய அரசரான வீர நரசிம்மரின் மறைவுக்குப் பின்னர், வாரிசு அரசியல் தலைதூக்குவதாக அவர்களுக்குச் செய்திகள் கிடைத்தன.





அப்போது தான் பட்டம் ஏற்றிருந்த இளவல் கிருஷ்ணதேவராயன் இந்தப் பெரும் தாக்குதலை எண்ணி அயரவில்லை. சிதறிக் கிடந்த அக்கம்பக்கத்து இந்து மன்னர்களது படைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி, ஒரு சாதுர்யமான திட்டம் வகுத்தான். கர்னாடகத்தின் திவானி என்ற இடத்தில் இரு படைகளும் மோதின. முஸ்லீம் படைகள் விஜயநகரப் படைகளை எந்தப் புறமும் சூழ்ந்து கொள்ள முடியாதவாறு படைகளை நடத்திச் சென்ற கிருஷ்ணதேவராயன், திடீரென்று பாமினி முஸ்லீம் படைகளைப் பின்புறமிருந்து தாக்கினான். இதனால் பெரும் பீதியடைந்த பாமினி படைகளின் நடுவாக உட்புகுந்து, துருக்கியிலிருந்து வரவழைக்கப் பட்டிருந்த சுல்தான் மஹ்மூதின் சிறப்புக் குதிரைப் படையினரை நேரடியாகத் தாக்கின இந்து வீரர்களின் குதிரைப் படைகள். இந்தப் படையை மாவீரனான கிருஷ்ணராஜன் தானே முன் நடத்திச் சென்றான். இதற்குப் பயந்து சுல்தான் எதிர்த் திசையில் தப்பி ஓட முயற்சிக்க, அது நேரடியாக அவனை விஜயநகரத்தின் நுழைவாயிலுக்கே இட்டுச் சென்றது! அங்கே காத்திருந்த துப்பாக்கி வீரர்கள் சுல்தானின் படைகளைப் பதம் பார்த்தார்கள். குதிரையிலிருந்து கீழே விழுந்து தன் மண்டையை உடைத்துக் கொண்டு சுல்தான் மஹ்மூத் உயிரிழந்தான். அவனைக் காப்பாற்ற வந்த மற்ற படைகளையும் விஜயநகரப் படைகள் அழித்தொழித்தன.





இதைக் கண்ட மிச்சம் மீதியிருந்த முகமதியப் படைகள் நாற்புறமும் சிதறி ஓடின. அந்தத் தருணம் கிருஷ்ணராஜன் அவன் புகழை இன்றளவும் நிலைநிறுத்தச் செய்யும் ஒரு காரியத்தைச் செய்தான். ஓடும் படைகளை விரட்டக் கூடாது என்ற பழைய யுத்த தர்மம் இந்தச் சூழலில் பொருந்தாது என்பதை சரியாக உணர்ந்து, சிதறி ஓடும் முஸ்லீம் படையில் ஒருவனைக் கூட விட்டு வைக்காமல் துரத்தி அழிக்க வேண்டும் என்று தன் படையினருக்கு ஆணையிட்டான். கோவில்கொண்டா கோட்டைப் பக்கம் தப்பி ஓடி புதிய படைகளைச் சேர்க்க முனைந்த அடில் ஷாவின் படைகள் அழிக்கப் பட்டன, அவனும் கொல்லப் பட்டான். கோவில்கொண்டா என்ற அதி முக்கியமான இந்தக் கோட்டை விஜயநகர் வசம் வந்தது. துருக்கியைச் சேர்ந்த இன்னொரு முஸ்லீம் தளபதி குலி குதுப் ஷா என்பவன் ரெட்டிகளின் பழைய தலைநகரான கொண்டவீடு பகுதியில் படைதிரட்டி வருவதை அறிந்த விஜயநகர தளபதி நந்தியாலா நரசிம்மன் கொண்டவீடு போரில் குதுப் ஷாவையும் கொன்று அவனது மிச்சம் மீதியிருந்த சிறு படைகளையும் கோல்கொண்டாவுக்கு அப்பால் விரட்டியடித்தான்.

இது சாதாரணப் போர் வெற்றி மட்டுமல்ல, முகமதிய அரக்கத் தனத்திலிருந்து தென்னகத்தைக் காப்பாற்றி இந்து தர்மத்தை நிலைபெற்றிருக்கச் செய்யவேண்டும் என்ற லட்சியத்துடனேயே உதித்த விஜயநகரப் பேரரசின் மாபெரும் சாதனை. விஜயநகர மன்னர்கள் “ஹிந்து ராய சுர த்ராண” “வைதிக மார்க சம்ஸ்தாபக” போன்ற விருதுகளைக் கொண்டிருந்ததே இதற்குச் சான்று.

தனிப்பாடல் திரட்டில் வரும் சில பாடல்களிலும் இந்தச் செய்திகள் கிடைக்கின்றன.

திருவாரூர் கோயிலில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் நடந்த ஊழல் தொடர்பாக தத்துவப்பிரகாசர் மனம் நொந்து மன்னரை விளித்துப் பாடியதாகக் கூறப்படும் இந்தப் பாடலில், கோயிலில் ஊழல் செய்த திருவீழிமிழலை (தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருத்தலம் இது) என்ற ஊர்க்காரர்களை “வீழித் துலுக்கு” என்று வசை வைத்துப் பாடுகிறார்.

ஊழித் துலுக்கல்ல ஒட்டியன் தானுமல்ல
வீழித் துலுக்கு வந்து மேலிட்டு, வாழி
சிறந்த திருவாரூர் தியாகருடைப் பூசை
இறந்ததே கிட்டின ராயா!


“ஊழி (பிரளயம்) போல நாட்டுக்குள் வந்து மக்களையும், கோயில்களையும், பூசைகளையும் அழித்த பாதகர்களான துலுக்கர்கள் அல்ல இவர்கள். அவர்களை நீ அழித்து விட்டாய். ஆனால் வீழியிலிருந்து வந்த இந்தத் துலுக்கர்கள் உள்ளே நுழைய, சிறந்து விளங்கிய திருவாரூர் தியாகராஜருடைய பூஜை நின்று விட்டதே !”





இந்தப் புகாரைக் கேள்விப்பட்ட மன்னன், சம்பந்தப் பட்ட ஊழல் ஆசாமிகளைக் கோவில் பணியிலிருந்து நீக்கி தண்டனையும் வழங்கினானாம். அதைக் கண்டு மனமகிழ்ந்து அதே தத்துவப் பிரகாசர் பாடியதாக எள்ளல் கலந்த அருமையான இன்னொரு பாடலும் உள்ளது.

உண்ட வயிற்றில் உமிக்காந்தல் இட்டதே
தொண்டரே வீழித் துலுக்கரே, பண்டமெலாம்
அப்பம் அவல் எள் அதிரசமும் தோசைகளும்
கப்புவதும் போச்சே கவிந்து!


தென்னகம் முழுவதும் பேசப் பட்ட இந்த வெற்றிகளையே “துலுக்கர் மொகரம் தவிர்த்தான்” என்று தமிழகக் கல்வெட்டுகளில் காணப்படும் விஜயநகர அரசர்களின் மெய்க்கீர்த்தி குறிப்பிடுகிறது என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இவ்வாறாக தென்னகத்தில் அப்போது முளைத்த அனைத்து முஸ்லீம் கொடுங்கோல் அரசுகளையும் அழித்து உறுதியான, செல்வச்செழிப்பு மிக்க விஜயநகர சாம்ராஜ்யம் வளர்ந்தது. வீரமும், ஈரமும், உழவும், வணிகமும், சிற்பமும், கலைகளும், இலக்கியமும் அப்பேரரசில் தழைத்து வளர்ந்தன. பொன்னும், மணியும், பவளமும் காய்கறிகளைப் போல கூறுகட்டி விற்கப்பட்டதாக ஐரோப்பியப் பயணிகள் மலைத்து எழுதிய ராஜ வீதிகளை இன்றும் போனால் ஹம்பியின் இடிபாடுகளில் பார்க்கலாம்.





அந்த இந்துப் பேரரசில் முஸ்லீம் மக்கள் பாதுகாப்புடனும், நிம்மதியுடனும் வாழ்ந்தார்கள் என்பதற்கு உறுதியான சரித்திர ஆதாரம் உள்ளது. போரில் இறந்த முஸ்லீம் வீரர்களது மனைவிகளும், மகள்களும், மற்ற எல்லா முஸ்லீம் பெண்களும் மிக்க மரியாதையுடனும், கௌரவத்துடனும் நடத்தப் பட்டார்கள். பாரசீகத்திலிருந்து வந்த யாத்ரீகர் அப்துல் ரசாக் விஜயநகரம் பற்றி எழுதுகையில், “உலகம் முழுவதிலும் இது போன்றதொரு அற்புத நகரத்தை விழிகள் கண்டதுமில்லை, செவிகள் கேட்டதுமில்லை” என்றார். போர்த்துகீசிய யாத்திரீகர் டொமிங்கோ பயஸ் “எந்த ஒரு சிறு குற்றமும் காணமுடியாது, அரசின் எல்லாத் துறைகளிலும் சிறந்தவன் கிருஷ்ணதேவராயன்” என்று குறிப்பிட்டார். இன்னொரு போர்த்துகீசிய யாத்ரீகர் பார்போஸா “எந்தவிதமான பயமோ, அச்சுறுத்தலோ இன்றி எந்த மதத்தையும் யாரும் பின்பற்றுவதற்கு முழு சுதந்திரம் விஜயநகரத்தில் இருந்தது” என்று ஆச்சரியப் படுகிறார்.

ஆனால் கிருஷ்ணதேவராயர், மற்றும் அச்சுதராயர் காலத்திற்குப் பிறகு வந்த ராமராயரை அன்றே போலி மதச்சார்பின்மைப் பேய் பிடித்து ஆட்டியிருக்க வேண்டும். விஜயநகர அரசின் படைகளில் கொஞ்சம் கொஞ்சமாக அக்கம்பக்கங்களிலிருந்து வந்த முகமதிய படை வீரர்களைச் சேர்த்து, அவர்களுக்கு உயர் பதவியும் அளிக்கத் தொடங்கினார் இவர். பின்னாளில் உட்பகையாலும், போட்டி பொறாமையாலும் விஜயநகரப் பேரரசு குலைந்து வந்த நேரத்தில், இதை எதிர்பார்த்துக் கறுவிக் கொண்டிருந்த எல்லா முஸ்லீம் அரசுகளும் சேர்ந்து தொடுத்த கொடூரமான தலைக்கோட்டைப் போரில் இந்தப் படைவீரர்கள் அத்தனை பேரும் ஜிகாதின் அழைப்பை ஏற்று எதிரிகளுடன் சேர்ந்து கொண்டனர். ராமராயர் படையின் தளபதிகளாக இருந்த கிலானி சகோதரர்கள் இழைத்த இந்த நம்பிக்கைத் துரோகமே இப்போரில் விஜயநகர அரசு தோற்க முக்கியக் காரணம் என்று பல ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இந்தப் படுதோல்வியின் விளைவாக இந்த அற்புதமான சாம்ராஜ்யம் அழிந்தது, ஹம்பி நகரம் குரூரமாக சிதைக்கப் பட்டது.

அதைப் பற்றி இன்னொரு சமயம் பார்க்கலாம். வரலாற்றிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் தான் ஏகத்துக்கு இருக்கின்றதே!

ஆதாரங்கள்:

1) A Concise History of Karnataka by Dr. S U Kamat
2) History of South India by Prof. KAN Sastry
3) India-forum.com : ஹௌமா ஹமித்தாவின் கட்டுரைகள்:
http://www.india-forum.com/authors/17/Hauma-Hamiddha
4) தனிப்பாடல் திரட்டு

Monday, November 20, 2006

1962 போர்த் தியாகிகளுக்கு அஞ்சலி : "யே மேரே வதன் கே லோகோ"

நம் தேசத்தின் முப்படைகளின் பெருமை பேசும் பதிவை நடத்தி வரும் சமுத்ரா அவர்கள் Aye Mere Watan Ke Logo - லதா மங்கேஷ்கர் என்ற பதிவைப் போட்டிருக்கிறார். அப்போதைய பிரதமர் நேருவின் கையாலாகாத தனத்தையும் மீறித் தாய்நாட்டைக் காக்க உயிர்வீட்ட நம் படைவீரர்களின் நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் பதிவு. அப்பதிவில் இப்படிக் கேட்டிருந்தார் -

".. அது போகட்டும் இந்த போரின் போது மறைந்த வீரர்களுக்கு தேசிய அளவில் அழியா நினைவு சின்னம் என்று எதாவது உண்டா என்றால் அதுவும் இல்லை.1962 ஆம் அண்டு நமது ஜவான்கள் செய்த தியாகங்களை மக்களுக்கு நினைவுபடுத்த ஒரே ஒரு சின்னம் இருக்கிறது.மங்கேஷ்கர் பாடிய ஏ மேரே வதன் கே லோகோன் என்ற பாடல் தான் அது.

எனக்கு ஹிந்து புரியும், ஆனால் மொழிபெயர்க்கும் அளவுக்கு பத்தாது. அதனால் ஹிந்தி வரிகளை இங்கே எழுதிவிடுகிறேன், உங்களில் யாராவது மொழிபெயர்த்து தந்தீர்கள் என்றால் விக்கிபிடீயாவில் போடலாம் என்று நினைக்கிறேன்"

இதோ எனது மொழிபெயர்ப்பு. பாடலைக் கேட்பதற்கான உரல் சமுத்ராவின் பதிவில் உள்ளது -



என் தேசத்து மக்களே
உரத்து முழங்குங்கள்

இன்று நம் எல்லாருக்கும் நன்னாள் என்று
நம் அன்புக்குரிய மூவர்ணக் கொடியை

வீசிப் பறக்க விடுங்கள்
எல்லையில் உயிர்விட்ட நம் வீரர்கள்
அவர்களையும் மறவாமல் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்
வீடு திரும்பாமலேயே போய்விட்ட அந்த வீரர்கள்
அவர்களையும் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்

என் தேசத்து மக்களே

கண்களில் கொஞ்சம் கண்ணீர் விடுங்கள்
அந்தத் தியாகிகளின் பலிதானத்தை
கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்
நம் இமயத்தில் காயம் பட்டது
நம் சுதந்திரத்தை அபாயம் சூழ்ந்தது
தங்கள் மூச்சு உள்ள வரை
போரிட்டார்கள் அவர்கள்
தலை வணங்காமல் அமர பலிதானம் செய்து
தங்கள் உடல்களைத் துறந்தார்கள்
அந்தத் தியாகிகளின் பலிதானத்தை
கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்

நாம் நாட்டுக்குள்

தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கையில்
அவர்கள் எல்லையில் தங்கள் குருதியை வார்த்து
ஹோலி விளையாடினார்கள்
நாம் வீடுகளில் அயர்ந்திருக்கையில்
அவர்கள் குண்டடி பட்டார்கள்
அந்த இளைஞர்கள் உன்னதம் பெற்று விட்டார்கள்
அவர்களின் இளமையும் உன்னதம் பெற்று விட்டது
அந்தத் தியாகிகளின் பலிதானத்தை
கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்

அவர்களில் இருந்தார்கள்
சீக்கியன் மராட்டியன்
கூர்கா மதராசி
ஆனால் அந்தப் போரில் மறைந்த ஒவ்வொரு வீரனும்
பாரதவாசி
அந்த மலைச் சிகரங்களில் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தமும்
ஹிந்துஸ்தானத்தின் ரத்தம்
அந்தத் தியாகிகளின் பலிதானத்தை
கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்

உடல்களில் ரத்தம் வழிந்தும்
கைகளில் பிடித்தனர் ஆயுதம்
பத்து எதிரிகளைக் கொன்றான் ஒரு வீரன் #
ஆயினும் உடல் தளர்ந்து உயிர் பிரியும் வேளை
சொல்லிச் சென்றார்கள்
“எம் தேச மக்களே, மகிழ்ச்சியாக இருங்கள்” என்று
எப்பேர்ப்பட்ட நேசம் அவர்களுக்கு நம் மீது
எப்பேர்ப்பட்ட பாசம் நம் மண் மீது
அந்தத் தியாகிகளின் பலிதானத்தை
கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்

அவர்களை நீங்கள் மறக்கக் கூடாது
அதற்காகவே இந்தப் பாடல்
வாழ்க பாரதம்
வாழ்க பாரதப் படைகள் !
வாழ்க பாரதம்
வாழ்க பாரதப் படைகள் !

ஜெய் ஹிந்த்!
ஜெய் ஹிந்த்!

[ # 18-நவம்பர், 1962 அன்று தாங்கள் மடிவதற்கு முன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனப் போர்வீரர்களை அழித்தனர் குமாவ் படாலியனின் 13-சி பிரிவைச் சேர்ந்த 114 பாரத நாட்டு வீரர்கள். அவர்களது வீரத்தியாகம் குறித்தது இந்த வரி]

நம் படைவீரர்களின் அமர தியாகத்தை எண்ணிப் பார்க்கும் இந்த நேரத்தில் அருணாசலப் பிரதேசம் எங்களுடையது என்று சொல்லி வரும் சீன அரசின் அராஜகத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் மண்டையாட்டும் மன்மோகன் சிங்கையும், அன்று போலவே இன்றும் சீன எஜமானர்களுக்காக அதே போலக் குரைக்கும் இடதுசாரி நாய்களையும் பார்த்து இது தான் சொல்லத் தோன்றுகிறது -

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்

Friday, November 10, 2006

சபரிமலையை வளைக்க கிறிஸ்தவ மிஷநரிகள் சதித்திட்டம்

மலையின் சுற்றுப்புறங்களிலுள்ள பெரிய ரப்பர் மற்றும் தேயிலைத் தோட்டங்களை வாங்கி அங்கு மதமாற்ற மையங்களை நிறுவுவது. ஜயமாலா விவகாரம், தந்திரி விவகாரம் இவற்றைத் தூண்டிவிட்டதன் அடுத்த கட்டமாக சபரிமலை ஆலயம் மற்றும் ஐயப்பன் வழிபாடு பற்றிய அவதூறான பொய்களைக் கிளப்பி விட்டு, இந்த ஆலயத்தின் பக்தர்களில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை,எளிய மக்களின் சமய நம்பிக்கைகளைக் கேலிக்குரியதாக்கி, மதமாற்றம் செய்வதற்கான சூழலை உருவாக்குவது. மதமாற்ற வெறிபிடித்த கேரள மிஷநரிகள் தீட்டியுள்ள பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி தான் இது.

கேரளாவில் நன்கறியப்பட்ட மதமாற்றி (evangelist என்பதற்கு சரியான தமிழ்ச்சொல் இதுதான்) நிறுவனமான Gospel For Asia (GFA) திருவல்லாவுக்கு அருகிலுள்ள மஞ்சாடியைத் தலைமையகமாகக் கொண்டது. சமீபத்தில் ஹாரிசன் மலையாளம் லிமிடெட் என்கிற தோட்டக் கம்பெனியிடமிருந்து 3500 ஏக்கர் பரப்பளவுள்ள "எரிமேலி எஸ்டேட்" என்னும் எஸ்டேட்டை 65 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.

சபரிமலை புனிதப் பயணத்தின் நுழைவாயில் எரிமேலி என்பது எல்லாருக்கும் தெரியும். வேடன் உருவில் கிராத வேஷ மூர்த்தியாக ஐயப்பன் குடிகொண்ட திருத்தலம் இது. மகர விளக்கு சமயம் இங்கு நடக்கும் பேட்டை துள்ளல்கள் மிகப் பிரபலமானது, சபரிப் பயணத்தின் ஒரு முக்கியமான அங்கம்.



எரிமேலியில் இவ்வளவு பெரிய நிலத்தை வாங்கியிருக்கும் மிஷநரிகள் தீட்டியுள்ள திட்டம் மிகத் தந்திரமானது. இதில் 500 ஏக்கர் நிலத்தை அரசின் கிராம முன்னேற்றத் திட்டங்களுக்காக வழங்குவது. இப்படிச் செய்வதன் மூலமாக, சபரிமலையில் உனக்கு என்ன வேலை என்று கேட்பவர்கள் வாயை அடைக்கலாம். அரசுத் திட்டம் என்பதால் அரசே சில கட்டமைப்பு சமாசாரங்கள் (சுகாதார மையம், பள்ளி, சுயதொழில்) உருவாக்கும் - அதை வைத்தும் ஜோராக மதமாற்ற வேலைகள் நடத்தலாம். இந்த 500 ஏக்கர் தவிர அக்கம்பக்கத்து ஏரியாவையும் அரசுப் பணத்திலேயே கொஞ்சம் டெவலப் செய்து, வெளிநாட்டிலிருந்து வரும் கோடிக்கணக்கான டாலர்களை நேரடியான மதமாற்ற நடவடிக்கைகளுக்கு மட்டும் செலவழிக்கலாம். கேரளாவின் இடதுசாரி அரசு, சோனியா ஆட்டுவிக்கும் மத்திய அரசு இந்த இரண்டு சிறுபான்மை சேவக அரசுகளும் இதைக் கண்டு கொள்ளாமலிருப்பது மட்டுமல்ல, ஆதரவும் அளிக்கும்!

இந்த GFA அமைப்பின் தலைவனான கே.பி.யோஹனன் என்ற மதமாற்ற வெறியன் ஏழை மக்களை ஏய்த்து மதமாற்றும் வித்தைகளில் தேர்ந்தவன். சுனாமி நிவாரணத்திற்காக என்று போன இடத்தில் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பிக்க, அங்கு தங்கள் எல்லா உடைமைகளையும் இழந்தும் தன்மானத்தை இழக்காத இந்துக்களால் செருப்படி வாங்கித் திரும்பின இவனது கூட்டங்கள். இது பற்றி தினமலர் பரபரப்பு செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்.

இது மட்டுமல்ல, சபரிமலைப் பயணத்தின் இன்னொரு முக்கிய மையமான பத்தினம்திட்டாவுக்கு அருகில் லாஹா எஸ்டேட் என்ற இன்னொரு மிகப்பெரிய எஸ்டேட்டையும் இதே மதமாற்றி நிறுவனம் வாங்குவதற்காக பேரம் பேசிக் கொண்டிருக்கிறது.

மகர விளக்கு சமயம் பக்தர்கள் இரண்டு முக்கியப் பாதைகள் வழியாக மலை மேல் செல்ல வேண்டும். ஒன்று எருமேலி வழியாகச் செல்லும் பெருவழி. இன்னொன்று பத்தினம்திட்டா, பம்பை வழியாகப் போகும் பாதை. இந்த இரண்டு பாதைகளும் மேற்குறிப்பிட்ட எஸ்டேட்டுகளுக்கு உள்ளாகத் தான் போகவேண்டும். ஐயப்ப சுவாமியின் பூங்காவனத்தை சுற்றி வளைக்க என்ன செமத்தியான திட்டம்! மிஷநரின்னா மிஷநரிதான்!

இந்த சதித்திட்டத்திற்கெல்லாம் பணம்? 2000-01 ஆம் ஆண்டுக் கணக்குப் படியே GFA-க்கு மட்டும், வெளிநாட்டிலிருந்து மட்டும் வந்த தொகை 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ! மொத்தமாகக் கேரளாவுக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து வந்த 75 மில்லியன் அமெரிக்க டாலர்களில் 90% கிறிஸ்தவ மதமாற்றி நிறுவனங்களுக்குத் தான் போய்ச் சேர்ந்துள்ளது. இன்னும் எத்தனை எஸ்டேட்டுக்களை இப்படி வாங்கப் போகிறார்களோ, அது கடவுளுக்கே வெளிச்சம்!

கவிஞர் கண்ணதாசன் முதல் நடிகர் நம்பியார் வரை, பெரிய மனிதர்கள் முதல் அன்றாடங்காய்ச்சிகள் வரை அனைவருக்கும் சமய, ஆன்மீக நிம்மதி தரும் சன்னிதியாக ஐயப்பனின் திருக்கோவில் விளங்கி வருகிறது. சைவம் வைணவம், கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் பற்றும் நாட்டார் தெய்வங்கள் சார்ந்த தொன்மை வழிபாடு இவை அனைத்தையும் ஆன்மீக நூலிழையில் இணைப்பது ஐயப்ப வழிபாடு. அதன் மையம் சபரி மலை. இந்த அற்புதமான சமய மரபை அழித்தொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ராப்பகலாக வேலை செய்யும் மதமாற்ற வெறியர்கள் கடவுளின் ஊழியக் காரர்கள் அல்ல, அவர்கள் பாஷையிலேயே சொல்லப் போனால் சாத்தானின் சந்ததியினர்.

ஐயப்ப பக்தர்களும், அனைத்து இந்துக்களும் இந்த ஆக்கிரமிப்பு முயற்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். எழுமின் ! விழிமின்!

செய்தி உதவி:
http://www.haindavakeralam.org/PageModule.aspx?PageID=2230&SKIN=C

Wednesday, November 08, 2006

அண்டம் அளாவிய காதல்

பூங்கொடியே!
பூமி அவன் திருவடி
சூரியன், சந்திரன், தீ என்னும் முச்சுடர்கள் முக்கண்கள்
அவன் மூச்சு புவனத்தின் சுவாசம்
அலைகடல் ஆடை, வானம் திருமுடி
ஆகாயம் உடல்
வேதம் முகம், திசைகள் தோள்கள், இசையே அவன் சொல்
அவனுக்காக
உன் அழகிய நிறம் குலையுமாறு ஏங்குகிறாயே பேதையே!

நாயகிக்குத் தோழி கூறுவதாக அமைந்த இந்த அற்புதமான பாடல் சேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்து அந்தாதியில் வருகிறது:

“பாதம்புவனி சுடர்நயனம் பவனம் உயிர்ப்பு ஓங்(கு)
ஓதம் உடுக்கை உயர்வான் முடி விசும்பே உடம்பு
வேதம் முகம் திசை தோள் மிகு பண்மொழி கீதமென்ன
போதம் இவர்க்கோர் மணிநிறம் தோற்பது பூங்கொடியே”

நாயக நாயகி பாவத்தின் வெளிப்பாடுகளில், தலைவனை ஒரு தகைமை சான்ற ஆண், வேந்தன், அழகன், பலரும் விரும்பும் குணங்களை உடையவன் என்பதாக எண்ணி மயங்கி நாயகி அவன் மீது காதலுறுவது ஒரு தளம். இயற்கையின் வர்ண ஜாலங்களில் எல்லாம் அவனது உருவே நிறைந்திருப்பதாக எண்ணி, நிலவிலும் கதிரிலும் மழையிலும் மலரிலும் எல்லாம் அவன் உருவமே அவள் கண்களுக்குத் தோன்றி அவளை வாட்டுவது இன்னொரு தளம். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவிலும், அண்டத்தின் ஒவ்வொரு துகளிலும் அவன் உயிர்ப்பே நிறைந்திருப்பதாக எண்ணி அன்பில் ஆழ்வது இன்னொரு தளம். ஆண்தகை மேலான காதல் அண்டம் அளாவிய காதலாகப் பரிணமிக்கும் அற்புதமான ஆன்மீகத் தளம் அது.

“குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழகர் எம்மானார் ”

என்னும் ஆண்டாளின் நாச்சியார் திருமொழி. அவன் குழல் அழகு, வாய் அழகு, கண் அழகு, தாமரை மலர்ந்து கிடக்கும் தொப்புள் அழகு… இது உடல் வயப் பட்ட காதல் மட்டுமல்ல, உலக வயப்பட்ட காதல்! “உலகும் இயற்கையுமாய் அழகை விரிக்கும் படைப்பின் விதையான பிரம்மன் தோன்றியதால் எம்பெருமான் தொப்புள் அழகின் மூலமாயிற்று” என்றே உரையாசிரியர்கள் பொருள் கூறுவார்கள்.

எல்லா இருமைகளையும் கடந்த ஒருமை சார்ந்த யோக அனுபூதி நிலையே இப்படிக் காதல் வெளிப்பாடாக நாயகி பாவத்தில் பரிணமிக்கிறது. படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்ற பேத எண்ணமும், அதில் முளைக்கும் கசடுகளும் இந்த பாவத்தில் இல்லை. எல்லா சிருஷ்டி பேதங்களிலும் தன்னையே உணர்ந்து அந்த சுயம் மீது காதல் கொண்டு அந்தக் காதலையே இந்தப் பிரபஞ்சம் முழுவதற்குமான பேரன்பாகப் பிரதிபலிக்கும் களிப்பு நிலை அது.

கோபிகைகள் கண்ணனிடம் கொண்ட பிரேமையில் புதைந்திருப்பதும் இந்த பாவம் தான். ஒவ்வொரு கோபிகையும் கிருஷ்ணன் தன்னுடனே ஆடியதாக எண்ணிய அனுபவம் இந்த ஒருமை நிலையிலேயே வாய்த்தது. “ஓ கிருஷ்ணா, நீ கோபிகைகளுக்கு ஆனந்தம் தரும் ஆயர்குலச் சிறுவன் மட்டுமல்ல, உடல் படைத்தவை அனைத்திலும் உள் உறைந்து விளங்கும் அந்தராத்மா அல்லவா?” ( ந கலு கோபிகா நந்தனோ பவான், அகில தேஹினாம் அந்தராத்ம த்ருக் – கோபிகா கீதம்) என்று கண்ணன் தங்களை விட்டுப் பிரிந்தவுடன் கோபிகைகளின் பிரலாபித்துப் பாடும்போதும் இந்த அத்வைத பாவம் அவர்கள் உள்ளத்தை விட்டு அகலவில்லை.

நாரத பக்தி சூத்திரம் (21...23) சொல்லுகிறது:

“ஆயர்பாடியின் கோபிகைகளே தூய்மையான பக்திக்கு உதாரணம்.
பரம்பொருளின் மேலாம் தன்மையை அவர்கள் அறியாமலோ, மறந்தோ இருந்தார்கள் என்ற அபவாதம் பொருந்தாது.
மாறாக, அது (கிருஷ்ணன் பரம்பொருள் என்ற ஞானம்) இல்லாதிருந்தால் அவர்களது பக்தி கள்ளக் காதலாகவே ஆகும்”

அளவற்ற அன்புக் கடலில் ஆழ்ந்த நம் ஆழ்வாரின் வாய்மொழி சாற்றும் –

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்

கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
கடல் ஞாலத்தென் மகள் கற்கின்றனவே

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்
காண்கின்ற காற்றெல்லாம் யானே என்னும்
….
காண்கின்ற உலகத்தீர்க்கென் சொல்லுகேன்
கான்கின்ற என் காரிகை கற்கின்றனவே


இந்த உணர்வு வெறும் சொற்களால் ஆனதல்ல, ஆழ்வாரின் உள்மனத்தில் முகிழ்த்த ஆன்மீக அனுபவம். இதே உணர்வு தான் காக்கைச் சிறகினிலும், பார்க்கும் மரங்களிலும் பாரதிக்கு நந்தலாலாவைக் காட்டியது.

“நெரித்த திரைக் கடலில் நின்முகம் கண்டேன்
நீல விசும்பினிடை நின்முகம் கண்டேன்
திரித்த நுரையினிடை நின்முகம் கண்டேன்
சின்னக் குமிழிகளில் நின்முகம் கண்டேன்
பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே
பெற்றதுன் முகம் அன்றிப் பிறிதொன்றில்லை”
(கண்ணன் பாட்டு – பாரதியார்)

என்னதான் பிரித்துப் பிரித்துப் பார்த்தாலும், காதல் வயப்பட்ட அந்த மனத்திற்கு ஒரே பொருள் தான் தெரிகிறது. வேதஞானம் ஒளிரும் அந்த மனத்தில் பேதஞானத்திற்கு இடம் இல்லை.

“காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்”


என்று கவியரசரின் உள்ளத்திலே முளைத்த சமத்துவ கீதம் சோஷலிசக் கூடாரத்தில் உருவான சொத்தைக் கோஷமல்ல, அத்வைத பாவம் தோய்ந்த ஆன்மீகப் பேரொளியின் கீற்று.

உடம்பில் தோன்றும் காதல் வெளிப்பாடுகள் அதீத கவித்துவத்துடன் சொல்லப்பட்டாலும் “ஊன் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வதுவாய ஒருத்தன்” என்று திருவாசகம் சொல்வது தான் உண்மையில் நாயக நாயகி பாவத்தின் ஆழ்நிலை என்று எண்ணத் தோன்றுகிறது. வேறு சிலர் சொல்வது போல சமயத்தளையில் சிக்கியவர்கள் தங்களைக் கட்டுடைக்கப் பயன்படுத்திய உத்தி நாயக-நாயகி பாவம் என்பதும் மிகத் தவறான பார்வை. ஆண்டாளுக்கும், மணிவாசகருக்கும், நம்மாழ்வாருக்கும் யார் சமயத் தளை போட்டது? மாறாக, இவர்களது கவிதை வெளிப்பாடுகளை புனிதமான பக்தி வேதங்களாக அல்லவா இன்று வரை இந்து சமய மரபு போற்றி வந்து கொண்டிருக்கிறது?

ஏழு நாட்களில் உலகத்தையும் சாத்தானையும் படைத்து விட்டுத் தூங்கப் போன கடவுள், தன்னை இறைத்தூதன் என்று எப்போதோ சொன்னவனை ஏற்றுக் கொள்ளாதவர்களைப் படுகொலை செய்யச் சொல்லும் கடவுள் இவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது இந்தப் பேருணர்வு! உலகத்தின் அனைத்து மாசு, மறுக்களையும் கழுவி அன்புப் பெருவெள்ளத்தில் ஆழ்த்தும் சக்தி படைத்த அண்டம் அளாவிய காதல் உணர்வு!

Friday, November 03, 2006

தீந்தமிழில் தென் ஆரிய நாட்டு வளம்

அங்கே பதவி நீக்கங்கள் இல்லை
வந்தவர்கள் பாவ நீக்கம் ஆகும்
நெருக்கடி தெருக்களில் இல்லை
சென்னெல்லும் கரும்பும் போட்டியிட்டு வளரும் வயல்களிடையில் தான்
கூட்டமாய்த் தூங்கித் துவளுவது அரசு அலுவலகங்கள் அல்ல
மரங்களில் மாம்பழங்கள்
பணவீக்கத்தால் குலையும் பராரிகள் இல்லை
முலைவீக்கத்தால் பொலியும் மாதர்களே உண்டு
குண்டுகள் வெடித்து உயிர்த் தொல்லை இல்லை - மலர்ச்
செண்டுகள் நிறைக்க வெடித்திடும் முல்லை
ஏங்கி இளைக்கும் சோகரசம் இல்லை
ஓங்கி ஒலிக்கும் நன்முரசம் உண்டு
அது
கழக இருள் கவிந்த "காரிய" நாடல்ல
கடவுள் அருள் நிறைந்த தென் ஆரிய நாடு!

சொன்னது
சாதீய வெறியேற்றும் ஏச்சப்பர் அல்ல
சைவத்தமிழ்த் திரிகூட ராசப்பர்
அடுக்குமொழி வீசும் தேள் கொடுக்கு அல்ல
அழகு தமிழ் பேசும் கவிராயர் மிடுக்கு.

நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்
நெருங்கக் காண்பது கன்னலிற்செந்நெல்
தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து
சுழலக் காண்பது பூந்தயிர் மத்து
வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை
வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை
ஏங்கக் காண்பது மங்கல பேரிகை
ஈசர் ஆரிய நாடெங்கள் நாடே

(திருக்குற்றாலக் குறவஞ்சி - குறத்தி நகர்வளம் கூறியது)

மேலும் சொல்லுகிறார் -


ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்குல்
வருந்தக் காண்பது சூலுளை சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
தேடக் காண்பது ந்ல்லறம் கீர்த்தி
திருக்குற்றாலர் தென் ஆரிய நாடே

பாரதி சொல்லுகிறார் -

தேனார் மொழிக்கிளாய் தேவியெனக்கு ஆனந்தம்

ஆனாள் பொன்னாட்டை அறிவிப்பாய் - வானாடு

பேரிமய பெற்பு முதல் தென்குமரி ஈடாகும்

ஆரிய நாடென்றே அறி.

.. ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!