Tuesday, January 29, 2008

Arundhati Roy's article on Genocide - some comments

My response to the article Listening To Grasshoppers by Arundhati Roy in Outlook Magazine, 4-Feb-08 issue.

That was a long and frustrating article by the erudite Arundhati Roy in a crisp and gripping language. But I wish the article also contained more truthfulness, honesty, neutrality, non-suppression of already known material and other such qualities as well.

It starts with her repeating the totally discredited theory of Nazi-ness of Hindutva based on 2-3 quotes from the obsolete and disowned “We, our nationhood defined” by Guru Golwalkar of the 1940s fame. These quotes were analyzed in-depth by Dr. Koenrad Elst in a detailed essay “Was Guru Golwalkar a Nazi?” in his book “The Saffron Swastika” and found echoing just the popular sentiments of the prevailing time and nothing more.. In fact the Communist praise at that time, for Hitler and Nazis would far outnumber these 3 quotes and will fill up a year worth of Outlook Issues! Will Ms. Arundhati call the CPI-M formed in the “mould of Nazis”, when there is a far stronger case for that??

Her listing of various RSS outfits among extension plans of its “evil ideology” will only evoke ridicule. The organizations like Vidya Bharati and Vanvasi Kalyan Ashram have been cited as glaring examples of selfless services even by the adversaries of RSS!

She goes all over the world to evoke heart rendering tales of genocide and destruction – from Ottoman Empire to 15th century butchering of Native Americans by the armies of Columbus to Africa to Australia. Very Good. Admirable.

But she miraculously forgets everything about the centuries of genocide that happened in her own country, her own backyard. The genocide of Hindus at the hands of Muslim aggressors and invaders. A genocide invoked by Will Durant in his “Story of Civilizations” in such strong words - “"...the Islamic conquest of India is probably the bloodiest story in history. It is a discouraging tale, for its evident moral is that civilization is a precious good, whose delicate complex order and freedom can at any moment be overthrown by barbarians invading from without and multiplying from within." A genocide, the very thought of which makes V.S.Naipaul call India as “wounded civilization”.

Let’s pardon the lady for her memory lapse about the medieval history. A good half of her article is devoted to the 2002 Gujarat riots (I seriously pity her struggling hard to fit the official UN “definition” of genocide to these grievous incidents), while she mentions the bigger, 1984 genocide of Sikhs by Congress goons in passing.. Great. But, what about the genocide and large scale displacement of Hindus of Kashmir valley that took place in between these 2 incidents? According to the official govt. figures there are about 5 lakh Hindus displaced from the Kashmir valley since 1990. An undisputed act of ethnic cleansing punctuated by the mass murders of Sangrampora, Jagatsingpura, Wandhama and Nandimarg (2003). The lady does not utter a single word about this. Her only usage of the word “Hindu” is to denote murderers and perpetrators of crimes.

Arundhati, is your heart so harsh, is your intellect so numb, and is your loyalty so dubious that you do not remember to mention even one event in history where Hindus are the victims?

Towards the end of the essay, you say, “Perhaps these many million Constraining Ghosts of the Past wonder what advice Gandhi would have given the Indians of the Americas, the slaves of Africa, the Tasmanians, the Herero, the Hottentots, the Armenians, the Jews of Germany, the Muslims of Gujarat…”

Don’t the Hindu victims of Bangladesh, Pakistan, Kashmir, Fuji and other places even merit as one of the many items in such a customary list?

What have the Hindus done to you, Arundhati?

Friday, January 25, 2008

புத்தாண்டு சர்ச்சை: கருநாவின் கலாசார ஒழிப்பு திட்டம்

தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப் போவதாக தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று கவர்னர் உரை மூலம் தெரிவித்து, கிறிஸ்தவ மிஷநரிகள் பல பத்தாண்டுகளாக தமிழகத்தில் நிகழ்த்தி வரும் கலாசார திரிப்பு, ஒழிப்பு முயற்சிகளுக்கு இன்னொரு அடித்தளம் அமைத்துத் தந்திருக்கிறார். 1921-லேயே சில தமிழறிஞர்கள் இது பற்றி "விவாதித்து" புத்தாண்டைப் பற்றிய கருத்துக் கூறினார்களாம்! "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய" தமிழ்க்குடியினர் சமீபத்தில் தங்கள் புத்தாண்டு எது என்று குழம்பி, சர்ச்சை செய்தார்கள் என்று கூறுவதற்கு வெட்கமாயில்லையா?

நேற்றைய தினமணி இதழில் வரலாற்று அறிஞர், கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் "சித்திரையில் தான் புத்தாண்டு" என்றொரு அருமையான கட்டுரை எழுதியுள்ளார். அதில் உள்ள் குறிப்புகளின் படி "தைப் புத்தாண்டு" என்கிற கருத்தாக்கம் ஒரு திட்டமிட்ட முழுமையான கிறிஸ்தவ மிஷநரிகளின் சதி என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. இதற்கு பண்டைத்தமிழ் வரலாறு, இலக்கியம், மரபுகள், நாட்டார் வழக்கு எதிலும் ஆதாரம் கிடையாது.

இன்னொரு முக்கிய விஷயம். பாரத நாடு முழுவதும் பரவியிருக்கும் தேசிய, கலாசாரக் கூறுகளில் இருந்து தமிழ்ச் சமுதாயத்தைப் பிரிக்கும் முயற்சியும் ஆகும் இது. நாம் கொண்டாடும் சித்திரை முதல் நாள் (ஏப்ரல் 14, 15ம் தேதிகளில் வரும்) தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பல பகுதிகளிலும், ஏன் சில அண்டை நாடுகளிலும் கூட புத்தாண்டு தான்.

இந்து மரபின் சூரிய காலக்கணக்கு (Solar Calendar) முறை "சூர்ய சித்தாந்தம்" என்ற தொன்மையான அறிவியல் நூலில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் சூரிய ஆண்டின் முதல் நாள் புத்தாண்டு என்றாகிறது. தமிழகம் மட்டுமல்ல, கேரளம், மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, திரிபுரா, மணிப்பூர், அஸ்ஸாம், பஞ்சாப், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய எல்லா இடங்களிலும் இந்த நாள் தான் புத்தாண்டாக மிக நெடுங்காலமாக கொண்டாடப் படுகிறது.

வங்காளத்தில் நபோ பர்ஷோ (Nôbo bôrsho). பஞ்சாபில் பைசாகி (Baisakhi). அஸ்ஸாமில் ரோங்காலி பிஹு (Rongali Bihu). கேரளாவில் விஷு.

இது மட்டுமன்று, இந்து, புத்த சமயப் பின்புலம் கொண்ட தாய்லாந்து, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளிலும் இந்தப் பண்டிகை வேசாக், வைசாக், விசாக பூஜா (Vesak, Waisak, Visaka Bucha ) என்ற பெயர்களில் புத்த பூர்ணிமா நாளுடன் இணைத்துக் கொண்டாடப் படுகிறது.. இந்த எல்லா சொற்களும் தமிழின் வைகாசி என்ற சொல்லுடன் தொடர்புடையவை. சூரியப் புத்தாண்டையும் சந்திர-சுழற்சி அடிப்படையிலான மாதங்களையும், பண்டிகைகளியும் பின்பற்றுவதால் இரண்டாம் மாதமான வைகாசி இந்த நாளன்று வந்துவிடுகிறது.




தமிழ் மாதங்களின் பெயர்களும், பாரதத்தின் பாரம்பரிய மாதப் பெயர்களே. எல்லா மொழிகளிலும் இந்த மாதப் பெயர்கள் (சில ஒலிக்குறிப்பு வேறுபாடுகள் தவிர) ஒன்று போலவே உள்ளன.

சம்ஸ்கிருதம் - தமிழ்
--------------------------

சைத்ர - சித்திரை (வங்காளியில் சொய்த்ரோ - Choitro)
வைசாக - வைகாசி
ஜ்யேஷ்ட - ஆனி (ஜ்யேஷ்டா அல்லது கேட்டை நட்சத்திரத்திற்கு தமிழில் ஆனி என்றும் ஒரு பெயர் உண்டு)
ஆஷாட - ஆடி
சிராவண - ஆவணி
ப்ரோஷ்டபத - புரட்டாசி
ஆஸ்வயுஜ - ஐப்பசி
கார்த்திக - கார்த்திகை
மார்கசிர - மார்கழி
புஷ்ய - தை (8வது நட்சத்திரமான புஷ்யம் (பூசம்) என்பதற்குத் தமிழ்ப் பெயர் தை. இந்த மாதத்தின் பூசம் தமிழர்களின் தொன்மையான பண்டிகை)
மாக - மாசி
பல்குன - பங்குனி


எனவே, தமிழ்ப் புத்தாண்டு என்பது பாரதத்தின் தேசிய கலாசாரத்தின் ஒரு அங்கமே. இது இட்டுக் கட்டும் சமாசாரமல்ல, இந்த எல்லா மாநில மக்களும் நன்கு அறிந்த விஷயம். உதாரணமாக வங்காளப் புத்தாண்டு பற்றிய இந்தக் கட்டுரையில், ஆசிரியர் மறக்காமல் தமிழ் மற்றும் மற்ற புத்தாண்டுகள் பற்றிக் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்.

இந்தக் குறைந்தபட்ச கலாசார அறிவு கூட தமிழகத்தை ஆளும் "கலைஞர்" கருநாநிதிக்கு இல்லையா? ஒரு மாநில அரசு காலங்காலமாக இருந்து வரும் கலாசாரப் பிணைப்பை திட்டமிட்டு அறுத்தெறிய ஏன் முயலவேண்டும்? இதில் என்ன உள்நோக்கம் உள்ளது? மார்க்சிஸ்ட்கள் ஆளும் மே.வங்கத்திலும், கிறிஸ்தவத் தாக்கம் அதிகம் உள்ள கேரளத்திலும் கூட இவ்வளவு அப்பட்டமான ஒரு கலாசார அழிப்பு வேலை கண்டிப்பாக சகித்துக் கொள்ளப் படாது.. சகித்துக் கொள்வதென்ன, இப்படி ஒரு பேச்சே எழாது.

ஆனால், தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷநரி சதிக்கும்பல்கள் மற்றூம் அவர்கள் கைப்பாவையாவும், அடிவருடிகளாகவும்ஆகிவிட்ட திராவிட இயக்கங்கள் அதன் தலைவர்கள் - இந்த இரண்டு இந்திய தேசிய விரோத சக்திகளும் கைகோர்த்துக் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

மத்திய அரசின் கலாசாரத் துறை இதில் குறுக்கிட வேண்டும். இந்திய தேசியம் மீதும், தமிழ்க் கலாசாரத்தின், மரபுகளின் தொன்மையின் மீதும் கொஞ்சமாவது அபிமானம் உள்ள ஒவ்வொருவரும் தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்க்க வேண்டும். இது சட்டசபையில் நிறைவேற்ற விடக் கூடாது.

அனைத்து அரசியல் கட்சிகள். இந்து இயக்கங்கள், சமூக, கலை, கலாசார அமைப்புகள் அனைத்தும் இதில் ஈடுபடவேண்டும். ஆயிரமாயிரம் ஆண்டுக் காலத் தொன்மைக் கலாசாரம் இந்த அற்ப அரசியல் அயோக்கியர்களின் கையால் சிதைக்கப் படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

Monday, January 21, 2008

ஒரு மதுரைக்காரனின் ஜல்லிக்கட்டு அனுபவம், சில யோசனைகள்

மாட்டுப் பொங்கல் முடிந்து விட்டாலும் ஜல்லிக் கட்டு, இந்த வருடத்திய நீதிமன்றக் குறுக்கீடு, தமிழர் வீர விளையாட்டுக்குத் தடையா என்பது பற்றிய விவாதங்களை இன்னும் தமிழர்கள் அசைபோட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இது பற்றிய விவாதத்தில் (பெயர் குறிப்பிட விரும்பாத) எனது மதுரை நண்பர் ஒருவர் சில வருடங்கள் முன்பான (இப்போதும் ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை) தனது ஜல்லிக் கட்டு அனுபவத்தை சுவை பட எழுதி, சில கருத்துக்களையும் கூறியிருந்தார். அதனை என் வலைப்பதிவில் அவரது அனுமதியுடன் வெளியிடுகிறேன் -

.. ஒரு மாட்டுப் பொங்கல் நாளிலே, வலுவான மத்தியானச் சாப்பாட்டுக்குப் பின்னால் உறக்கம் லேசாகக் கண்ணைச் சுற்ற சற்றே தலை சாயலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையிலே என் நண்பன் வந்து சேர்ந்தான். "கிளம்பு, கிளம்பு நாம் இன்னிக்கு அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டுப் பார்க்கப் போறோம்" என்றான். ஏதோ விதி விளையாட நானும் தூக்கத்தைத் தியாகம் செய்து அவனுடன் கிளம்பி விட்டேன். இரண்டு பஸ்கள் மாறி, ஒன்றரை மணி பயணத்துக்குப் பின்னால் அலங்காநல்லூர் சென்று இறங்கினோம்.

நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாமல் ஒரு ரெண்டும் கெட்டான் ஊர் அலங்கா நல்லூர்., பஸ்ஸீல் ஏறியதுமே கண்டக்டர் எங்களை சற்று ஒரு மாதிர்யாகப் பார்த்து "ஜல்லிக் கட்டுப் பார்க்கவா?" என்று கேட்டார். ஆமாம் என்றோம், 'ஏன் சார் படிச்சவங்க மாதிரி டீசெண்டா இருக்கீங்க , எதுக்கு அங்கிட்டுப் போறீங்க, அது ரவுடிப் ப்சங்க போற இடம்ல?" என்றார். சும்மா ஒரு ஜாலிக்குப் பார்த்து விட்டு வரலாமே என்று சமாளித்தோம், எனக்கு சுருதி இறங்கி விட்டது. நண்பன் மட்டும் ஆர்வமாக இருந்தான். அலங்காநல்லூரில் இறங்கியதும் இன்னும் ஒரு சிலர் எங்களைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டார்கள்.

பஸ்ஸ்டாண்ட் எனப்படும் இடத்தை விட்டு வெளியேறியவுடனேயே திடீரென்று ஒரே கூச்சல். எங்களைத் தள்ளிக் கொண்டு பலரும் ஓடினார்கள். எதிரே கண் மன் தெரியாமல் ஒரு சோனி மாடு வெறியோடு ஓடி வந்து கொண்டிருந்தது. நாங்களும் பதறிப் போய் பக்கத்தில் இருந்த சாக்கடைப் பள்ளத்துக்குள் இறங்கினோம். அந்த மாட்டின் பின்னால் ஓ வென்று கத்திக் கொண்டு ஒரு கும்பல் ஓடி வந்தது. இப்படி ஊர் முழுக்க மாடுகள் வெறியோடு துரத்தப் பட்டு எதிரில் வருவோரை கீழே தள்ளி மிதித்துச் சென்று கொண்டிருந்தன. நான் இப்படியே திரும்பி விடலாம் என்றேன்.

நண்பன் கேட்கவில்லை. இது எல்லாம் ரவுடிப் பசங்க செய்யுறது.. நாம போய் வெள்ளைக்காரன் எல்லாம் பார்க்கும் நிஜ ஜல்லிக் கட்டைப் பார்க்கலாம் என்று அடம் பிடித்தான். ஊர் முழுக்க ரவுடிகள், பொறுக்கிகள் தண்னி போட்டுக் கொண்டு ஆடை அவிழ்வது தெரியாமல் எதிரே வருவோர் போவோரையெல்லாம் மாட்டை விட்டு மிரட்டிக் கொண்டிருந்தனர். முழுக்க முழுக்க வெளியூர் மக்களால் நிறைந்திருந்தது. எங்கும் சாராயம், கஞ்சா மணம். ஊர் முழுக்க குப்பைகளும் உடைந்த பீர் விஸ்கி பிராந்தி பாட்டில்களும், கடித்துத் துப்பிய கரும்புச் சக்கையும் வெத்திலைக் காவியுமாக நாறிப் போய் கிடந்தது.

ஒரு வழியாக ஓடி வந்த மாடுகளில் இருந்து தப்பி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஜல்லிக் கட்டு நடக்கும் இடத்தை நெருங்கி விட்டோம். ஆனால் அந்த குட்டி மைதானம் அடைக்கப் பட்டிருந்தது. அந்தச் சின்ன இடத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி பெருங் கூச்சல் இட்டுக் கொண்டிருந்தனர். கிட்டவே நெருங்க முடியவில்லை. நண்பன் ஒரு வீட்டில் போய் என்னோட அப்பா இங்கு ஹெட்மாஸ்டர் ஆகவே எங்களை வீட்டு மாடிக்கு விடுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க எங்களை உள்ளே விட்டார்கள். ஏன் தம்பி உங்களுக்கெல்லாம் வேற வேலை வெட்டி இல்லையா என்று சலித்துக் கொண்டே மொட்டை மாடிக்கு அனுப்பினார்கள்.

அந்த மைதானம் ஒரே குழப்பமாக இருந்தது. கலெக்டர் வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர். ஒரு பக்கம் சின்ன அடைசலில் இருந்து கொம்பு சீவிய சாராயம் கொடுக்கப் பட்ட மாட்டை அனுப்ப அது மேல் ஒரு நூறு பேர்கள் போய் மொத்தமாக விழுகிறார்கள். அது மிரண்டு ஓடுகிறது. ஒரு கட்டுப் பாடு இல்லை, ஒரு ஒழுங்கு இல்லை,. ஆட்ட விதிகள் இல்லை,. ஒரு பெரிய காட்டுமிராண்டிக் கும்பல் மிருக வதை செய்து கொண்டிருந்தது. ஒரு வரைமுறை இல்லாமல் அங்கு அப்பாவி மாடுகள் வதை பட்டுக் கொண்டிருந்தன. புழுதி எழும்பி அந்த இடத்தை மேலும் குழப்பமாக்கியது. யார் எதை அடக்குகிறார்கள் என்று ஒன்றும் புலப்படவில்லை. அடிபட்டவன், வயிறு கிழிந்தவன் என்று போதையில் ஒருவர் மீது ஒருவர் ஏறி மிதித்துக் கொண்டிருந்தார்கள். இதுதான் தமிழர் கலாச்சாரம் என்றால் அந்தக் கலாச்சாரம் நாசமாய்ப் போக என்பேன்.

பாதுகாப்பற்ற இடம், விதி முறைகள் கட்டுப் பாடுகள் இல்லாத குழப்பமான சூழல், அளவுக்கு மீறிய போதை, ரவுடித்தனம், திருட்டு, வசைபாடல்கள், அடிதடிகள், இதற்கு நடுவே நூறு பேர் சேர்ந்து ஒரு மாட்டைப் போட்டு அமுக்கி நசுக்கும் ஒரு கொடுமை. அந்தக் கண்றாவியைக் கண்ணால் பார்த்து விட்டுத் தெருவில் இறங்கினால் மாடுகள் தொடர்ந்து கூட்டத்தின் நடுவே ஒடி வந்து மக்களை மிரண்டு ஓட வைத்து ரோட்டில் கீழே விழுந்து பெருங்காயம் ஏற்படுத்திக் கொண்டிருந்தன. நாங்கள் ஒரு கட்டத்தில் ஒரு மாட்டிடம் இருந்து தப்ப ஒரு கால்வாய்க்குள் குதித்து விட நேர்ந்தது முழுக்க நனைந்து ஈர ஆடையுடன் பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்.

ஜல்லிக் கட்டு என்ற பெயரில் ரவுடித்தனம் தான் அங்கு கட்டவிழ்த்து விடப் படுகிறது. இந்தக் கண்றாவியைப் போய் தமிழ் நாட்டின் கலாச்சாரச் சின்னம் என்று சொன்னால் அது இப்பொழுதைய தமிழ் நாட்டின் கலாச்சாரத்துக்குப் பொருத்தமானதே :))) என்று தோன்றுகிறது.

நான் பாரம்பரியத்தை கேவலப்படுத்த வரவில்லல, எதிர்க்கவில்லை. இது இந்துக்களின், தமிழர்களின், பாரம்பரிய விளையாட்டு தான், ஒத்துக் கொள்கிறேன். இருந்தாலும் கூட முறையாக ஒரு ஆட்ட விதி முறையை வகுத்துக் கொண்டு விளையாடுங்கள் என்கிறேன். இந்த முறை சுப்ரீம் கோர்ட் தயவில்; கொஞ்சம் ஒழுங்கு வந்திருக்கிறது. நம் தமிழர்களுக்கு சின்ன சின்ன விதிமுறைகளைச் சொல்லித் தரக் கூட சுப்ரீம்கோர்ட் வர வேண்டியிருக்கிறது.

மெக்சிகோவிலும்,தென்னமரிக்காவிலும் புல் ஃபைட்டுகள் (Bull Fights)நடக்கின்றன ஆனால் எங்கும் இது போன்ற அன்ரூலி பிஹேவியரைப் பார்க்க முடியாது. அதற்கான உரிய இடம் பாதுகாப்பு, முறை, எல்லாம் நிர்ணயம் செய்யப் படாமல் விளையாடும் இதை என்னால் வீர விளையாட்டு என்று கருத முடியவில்லை. தமிழ் நாட்டில் பிற கலாச்சாரங்கள் அழிந்தது போல இதையும் ஒரு ரவுடித்தனமான விஷயமாக மாற்றி விட்டார்கள். பாரம்பரியமான விஷயமே ஆனாலும் எதையும் முறையாக ஒரு கட்டுக்கோப்பாகச் செய்ய வேண்டும் என்பது என் கோரிக்கை. சில யோசனைகள் -

1. இப்பொழுது உள்ள வசதியற்ற சிறு மைதானத்தில் உயிரழப்புகளும் விபத்துக்களும் இடிபாடுகளில் உயிரழப்பும் சாத்தியம் என்பதனால் ஜல்லிக் கட்டுக்கென ஒரு பாதுகாப்பான ஸ்டேடியம் அமைக்கப் பட வேண்டும்

2. ஒரு காளையை ஒரு வீரர் மட்டுமே ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் அடக்க முயல வேண்டும். எவ்வித வன்முறையையும் பிரயோகிக்கக் கூடாது

3. மைதானத்தில் ஒரு காளையும் ஒரு வீரரும் மட்டுமே இருக்க அனுமதிக்க வேண்டும். மற்ற அனைவரும் பார்வையாளர் பகுதியில் நிற்க வேண்டும்.

4. மாடுகளை அலங்கரித்து சாலைகளில் ஓட்டி விடுவதை நிறுத்த வேண்டும்

5. காளைகளுக்குப் போதை மருந்து அளித்தல் தடை செய்யப் பட வேண்டும்

6. வீரர்கள் உரிய உடைகளில் வர வேண்டும், வேட்டி, கைலிகளில் மாடு பிடிக்கக் கூடாது

7. வீரர்களும் மாடுகளும் மருத்துவர்களால் பரிசோதிக்கப் பட்ட பின்பே அனுமதிக்கப் பட வேண்டும்.

இதை ஒரு ஆண்டுக்கு மட்டும் கோர்ட் சொன்னதால் செய்யாமல் நிரந்தரமாகச் செய்யப் பட வேண்டும். உன்மையான வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டை மாற்றுவதும், நம் முன்னோர்கள் விளையாடியது போன்ற கட்டுப்பாட்டுடன் கூடிய விளையாட்டை மீண்டும் நிகழ்த்துவதும் அரசின் கடமை. மக்களும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.


பின் குறிப்பு:

இந்த மதுரைக்காரரின் கருத்துடன் ஒன்றுபடுகிறேன். இந்த வீடியோவைப் பாருங்கள் - அவர் சொல்வது உண்மை என்பது புரியும்.

புராண காலத்திலேயே பிரபலமாக இருந்த விளையாட்டு இது. ஸ்ரீமத் பாகவதம் நக்னஜித் என்ற மன்னனுடைய முரட்டுக் காளைகளைக் கண்ணன் அடக்கியது பற்றிக் கூறுகிறது. இதனையே பெரியாழ்வார்,

எருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய்காண் நம்பி!*
கருதிய தீமைகள் செய்து கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்!*

என்று பாடுவார். சங்ககாலம் தொட்டு "ஏறு தழுவுதல்" என்று சிறப்பாக வழங்கப் பட்ட விளையாட்டு. தமிழகம் மட்டுமின்றி பாரத நாட்டின் பல பகுதிகளிலும் பிரபலமாக இருந்து, இப்போது வழக்கொழிந்து விட்டது.

இந்த வீர விளையாட்டுப் பாரம்பரியத்தில் புகுந்து விட்ட கசடுகளை நீக்கி நண்பர் கூறும் வழிமுறைகளைச் செயல்படுத்தி இதனை உயிர்ப்பிக்க வேண்டும்.

இந்த அளவில் மிருக வதைக்கு எதிரான அமைப்புகள் தொடுத்த வழக்கையும் அதனால் விளைந்த நீதிமன்ற குறுக்கீட்டையும் நான் வரவேற்கிறேன். ஆனால் இன்னொரு கேள்வி எழுகிறது -

ராஜஸ்தானில் இருந்து தமிழ்நாடு வரை 1000 கிலோமீட்டருக்கு மேல் கால்கடுக்க 50 ஒட்டகங்களை ஓட்டிவந்து அவற்றை நடுரோட்டில் வெட்டிச் சாப்பிடும் பக்ரீத் காட்டுமிராண்டித் தனத்தை எதிர்த்துப் போட்ட வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருந்தது? "மத உணர்வுகளில் தலையிட முடியாது" ஒரே வரி, அவ்வளவு தான், பீரியட். இத்தனைக்கும் அது இந்தியப் பாரம்பரியம், கலாசாரம் இவற்றோடு தொடர்பில்லாத விஷயம் - அரபு அடிவருடித்தனத்தில் விளைந்த காட்டுமிராண்டித் தனம்.

ஏன் அங்கும் கட்டுப்பாடுகள் விதித்திருக்கலாமே - ஒட்டகம் கூடாது, ஆடுதான்.. நடுரோடு கூடாது, அதற்கென்று உள்ள ஒரு இடம்.. இப்படியெல்லாம்? ஏன் இல்லை?

இந்துக்களின் பாரம்பரியத்தில் விளைந்த சீர்கேட்டினை எதிர்த்து எத்தனை இந்துக்கள் குரல் கொடுக்கின்றனர்? வழக்குத் தொடுக்கின்றனர்? பிராணிகளின் மீதான பாசம் என்பது மதம் பார்த்தா வருகிறது? அந்த ஒட்டக வதையை எதிர்த்து ஏன் ஒரு முஸ்லீமும் பேசவில்லை? ஏன் இல்லை?

Monday, January 07, 2008

நீளும் கிறிஸ்துவின் ஆக்கிரமிப்புக் கரங்கள்

கிறிஸ்தவம் என்கிற கோகோ கோலா என்ற முந்தைய பதிவு ஒன்றில் இப்படி எழுதியிருந்தேன் -

"பொட்டு வைத்த இந்துப் பெண்கள், தலைப்பாகை கட்டிய இந்துக்கள், சீக்கியர்கள், தொப்பி வைத்த முஸ்லீம்கள், அரபு ஷேக்குகள், மொட்டையர்கள், வெள்ளைய பொதுப் புத்தியில் “காட்டுமிராண்டிகளான” கறுப்பு, பழுப்பு என்று பலவண்ண இந்துக்கள் இவர்கள் அனைவரும் நீண்டு விரியும் ஏசு கிறிஸ்துவின் கைகளுக்குள் போவது போன்று பிரமாதமான சித்திரம் வரைந்து அதை பெங்களூர், சென்னை போன்ற நகரங்களின் சந்திகளில் பெரிய அளவில் விளம்பரப் பலகைகள் வைக்கிறார்களே, என்ன திமிர், என்ன ஆணவம், மற்ற மதங்களின், கலாசாரங்களின் மீது என்ன ஒரு இளக்காரம் இருக்க வேண்டும் இப்படி செய்வதற்கு? நீண்ட அந்தக் கரங்கள் எங்கள் கலாசாரத்தையும், சமயத்தையும், சமுதாயத்தையும் அழிக்க வரும் விஷக் கொடுக்குகள் என்று நாங்கள் கருவதில் என்ன தவறு?

அந்தப் பதிவில் ஒருவர் இப்படி மறுமொழி இட்டிருந்தார் -

மாமல்லன் said...

அப்படியா? இப்படிப் பட்ட விளம்பரத்தைப் பார்த்ததில்லை. படம் இருந்தால் வெளியிட முடியுமா? நன்றி.

நேற்று ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது பெங்களூரின் முக்கிய சாலை ஒன்றில் இத்தகைய விளம்பரப் பலகை கண்ணில் பட்டது. போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், ஒருவாறாக நான் எடுத்த படம் -



பெரிய அளவு படம் இங்கே.

சாலையில் முக்கியமான இடத்தில் வைத்திருப்பதை சமாளிப்பதற்காக படத்தின் கீழே பெங்களூர் நகராட்சிக்கு (Bangalore Mahanagara Palike) உதவி செய்யும் நல்லெண்ணத்தில் இவர்கள் கீழே ஒரு "சமூக செய்தி"யையும் தந்திருக்கின்றனர் -

You must obey the state authorities, because no authority exists without Gods authority. The existing authorities have been put there by God" - Rom. 13:1

நீங்கள் அரசு அதிகாரத்திற்குக் கண்டிப்பாகக் கீழ்ப்படிந்தே ஆகவேண்டும். ஏனெனில் தேவனின் அதிகாரம் இல்லாமல் வேறெந்த அதிகாரமும் இருக்க முடியாது. இங்கு இருக்கும் அதிகாரவர்க்கத்தினர் அனைவரும் தேவனாலேயே அங்கு வைக்கப் பட்டுள்ளனர் - ரோமன்ஸ் 13:1

அந்தப் படத்தையும் இந்த செய்தியையும் ஒன்றாக இணைத்துப் பாருங்கள். அதாவது, இந்திய அரசு அதிகாரிகள் அரசால் நியமிக்கப் படவில்லை, மக்களாலும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. கிறிஸ்தவத்தின் உலக ஆக்கிரமிப்புக்கு உதவுவதற்காக கிறிஸ்துவால் அவர்கள் அங்கே வைக்கப் பட்டுள்ளனர். ஆமென்.

இது தெரியாமல் ஜனநாயகம், குடியரசு என்றெல்லாம் உளறுகிறீர்களே மடசாம்பிராணிகளே.

அதிலும் கூட ஊருக்குத் தான் இப்படி உபதேசம். மற்றபடி பெங்களூரில் பல இடங்களில் நகராட்சியினர் வைத்துள்ள் வழி, சிக்னல்களைக் காட்டும் பலகைகளை எல்லாம் பார்த்துப் பார்த்து அங்கே ஜீசஸ் அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டிருக்கிறார்.









அடப் பாவிகளா, ஒரு இடத்தையும் விட்டுவைக்க மாட்டீர்களா?

Hailing Indira killers as martyrs - Please, someone condemn SGPC

News item "Indira killers are martyrs, says SGPC" in TOI today. http://timesofindia.indiatimes.com/India/Indira_killers_are_martyrs_says_SGPC/articleshow/2679313.cms
A highly condemnable, criminal and anti-national act by SGPC.

But it is evident that media is totally playing down on this news without giving adequate coverage. It appeared as a small news item in page 6 or 7 of Times of India today. BJP and the Hindutva groups are observing deathly silence. Congress is so numb to even dare a rebuttal - it probably does not want to antogonise Sikhs at this point, with Paaji Manmohan Singh at the helm.

Media deliberately and consciously avoids showing Sikh religious leadership in bad light even when it is involved in such an act.

Remember how media kept harping on the passing comment of another Vedanti, Mr. Ram Vilas Vedanti of Varanasi a few months ago? The one abt cutting Karunanidhi's toungue, as a punishment against TN CM's insult on Sri Rama. This was a simple intimidation by some lower rank individual in the VHP and the media trumpeted it as an example of "Hindu intolerance" for a long time, in spite of Vedanti retreating from it!

This act of SGPC, the highest body of Sikhs legmitises and sanctifies the killers of a former PM thru a religious ceremony, aimed at sowing the seeds of terrorism and separatism.

Super-appeasement of the Sikh fundamentalism by the media and all political parties, including the "anti-appeasement" BJP! This is a very, very dangerous precedent.

Please, someone condemn SGPC.

Friday, January 04, 2008

கலை, இலக்கியம்: மரபு மீறலும் மரபு சிதைத்தலும்

திண்ணை (டிசம்பர்-27, 2007) இதழில் முதுபெரும் எழுத்தாளர் மலர்மன்னன் அவர்கள் எழுதிய அருமையான கட்டுரையை இங்கே மீள்பதிப்பிக்கிறேன்.

மரபு மீறல் என்பது எப்படி செய்யப்பட வேண்டும், எப்படிச் செய்யப் படக்கூடாது என்பதை தனது ஆழ்ந்த கலை, இலக்கிய அனுபவங்களின் அடிப்படையில் மிக அழகாகக் கூறியிருக்கிறார்.

இலக்கிய விசாரம் : மரபு மீறலும் மரபு சிதைத்தலும்
மலர் மன்னன்

மிகச் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகிறபோது சொன்னேன்: மரபை மீறலாம்; மரபைச் சிதைக்கத்தான் கூடாது. இதை அங்கு லேசாகக் கோடிட்டுத்தான் கூற முடிந்தது. என்னதான் இருப்பினும் இடம் பொருள் ஏவல் என்றெல்லாம் பார்க்க வேண்டும் என்கிற சம்பிரதாயம் ஒன்று இருக்கிறது அல்லவா?

நேரம் கடந்துவிட்டதும் இதை விளக்கிப் பேசுவதற்குச் சாதகமாக இல்லாது போயிற்று. கூட்டம் கலைந்தபின் தஞ்சாவூர்க் கவிராயர் என்கிற அபூர்வமான கவிஞர் நெருங்கி வந்து கூட்டத்தில் பேசுகையில் நான் தெரிவித்த கருத்தை மேலும் விரிவாகப் பேசுவது அல்லது கட்டுரையாக எழுதுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சொன்னார். இது விரிவாக விவாதித்து முடிவுக்கு வரவேண்டிய விஷயம். ஆகையால் போகிறபோக்கில் சொல்லி விட்டுப் போனதாக இல்லாமல் கட்டுரையாகவே பதிவு செய்துவிடுமாறு கூறினார். இதையே வேறு சில எழுத்தாளர்களும் கூட்டம் முடிந்தபின் சொன்னார்கள்.

ஆகையால் மரபை மீறுவதும் மரபைச் சிதைப்பதும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள்தாம் என்று உணரலானேன். ஏனெனில் மரபை மீறல் என்கிற நினைப்பில் மரபைச் சிதைத்தல் சில சமயங்களில் சில படைப்பாளிகளால் செய்யப்பட்டு விடுகிறது. இதற்குக் காரணம் நம்முடைய மரபில் நமக்கு ஆழ்ந்த புரிதல் இல்லாமல் போயிருப்பதுதான். நம்முடையதுதானே என்கிற அலட்சியத்தில் எல்லாம் அறிந்திருப்பதாகக் கருதிக் கொண்டு நமது மரபு பற்றிய அரைகுறை ஞானத்தை வைத்துக் கொண்டே அதை மீற முயற்சித்து, மீறியதாகவும் பெருமைப்பட்டுக் கொண்டு ஆனால் சிதைத்துவிடுகிறோம்.


மரபைப் பற்றிய புரிதல் மிகவும் அரிதாகவே இருப்பதால் அது எங்கே மீறப்பட்டிருக்கிறது, எங்கே சிதைக்கப்பட்டுவிட்டது என்பதும் கவனத்திற்கு வராமலேயே போய்விடுகிறது. சிலசமயங்களில் அந்தச் சிதைப்பு சிலாகிக்கவும் படுகிறது!

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தனள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய் என்று பாரதியார் சொன்ன மாதிரி நம்முடைய கலாசாரம் மிக மிகத் தொன்மையாக இருப்பதனாலேயே நமது மரபும் மிகவும் தொன்மை யாகிப் போனது. இப்படியொரு தொன்மை மிக்க கலாசாரமும் அதன் மரபும் அவற்றைச் சார்ந்த படைப்பாளிக்கு உறுதியான அடித்தளமாக அமையக்கூடும்; அதுவே கழுத்தில் கட்டிக் கொண்ட கல்லாகவும் ஆகிவிடக் கூடும். எல்லாம் மரபைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்திருக்கும் சாமர்த்தியத்தைப் பொருத்தது.

என்ன செய்ய, முன்னூறு ஆண்டுகள் போல நமக்கு வாய்த்த கல்வித் திட்டம் நமது மரபிலிருந்து நம்மை அந்நியப்படுத்திவிட்டது. எந்தவொரு விளைவிலும் நன்றும் தீதும் கலந்தே இருக்கும். இது இயற்கையின் நியதி. விளக்கின் கீழேயே நிழல் இருந்துவிடுகிற மாதிரி. நமக்கு வாய்த்த கல்வித் திட்டத்தால் சில நன்மைகளும் தீமைகளும் சேர்ந்தே கிடைக்கலாயின. காலனி ஆதிக்கம் நீங்கியபின் புத்திசாலித்தனமாக அதில் சில மாற்றங்களைச் செய்து ஒரு சுதந்திர தேசத்திற்கு உகந்ததாக மட்டுமின்றி பிற தேசங்களுக்கு வாய்க்காத அதன் தொன்மைச் சிறப்பினை உணர்ந்த பிரக்ஞையோடு பொருத்தமான புதிய கல்வித் திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தியிருக்கலாம். இன்றளவும் இது நடக்காமலேயேதானிருந்து வருகிறது. குலபதி கே.எம். முன்ஷி போன்ற நமது கலாசரத்தில் வேரூன்றிய அறிஞர்கள் அதற்கான முயற்சியை மேற்கொண்டு பார்த்தார்கள். ஆனால் நமது கலாசாரப் பின்னணியை முன்னேற்றத்திற்குச் சாதகமற்றதென எண்ணிகொண்டிருந்தவர்களின் செல்வாக்கே அதிகார பீடத்தில் செல்லுபடியாகிக் கொண்டிருந்ததால் அது செயலுக்கு வராமலே போயிற்று.

நமது படைப்பாளிகளுக்குச் சிலுவை என்பது எதன் குறியீடு என்கிற விஷயம் சரியாகவே புரிந்திருக்கிறது.
வெறும் விறகுச் சுமையைத் தலையில் வைத்துக் கொண்டு போகிறவனை அவன் தனது சிலுவையைச் சுமந்துகொண்டு செல்வதாக எவரும் எழுதுவதில்லை. ஆனால் அரசவையில் அமர்ந்தவன் அங்குள்ள அரசுக் கட்டிலில் அமர்ந்தவனுக்கே விசுவாசம் காட்டி உத்தரவு கேட்க வேண்டும் என்கிற மரபின் பிரகாரம் பதினெட்டு நாள் பாரதப் போரில் முதல் பத்து தினங்கள் கௌரவ ஸேனையை வழி நடத்திவிட்டு, விரும்பும் தருணத்தில் சாவைத் தழுவலாம் என்கிற இச்சா மரண சாபல்ய யோக்கியதை பெற்றிருந்தும் குருட்சேத்திரக் களத்தில் அம்புப் படுக்கையில் உடல் கிடத்தி, உத்தராயணத்திற்காகக் காத்திருந்து, பரமனிடமே அனுமதி பெற்றுத் தமது சடலத்தைத் துறந்த பீஷ்ம பிதாமகரை முள் புதரில் விழுந்தவனோடு இணை காட்டத் தோன்றுமானால் அது மரபின் நுட்பம் உணராத மரபின் சிதைப்பு. இதில் படைப்பாளி மீது குற்றம் இல்லை. திணிக்கப்பட்ட கல்வித் திட்டத்தின் தாக்கம் அது. மேற்கத்தியப் பார்வையுடன் சொந்த மரபைக் காணப் பயிற்றுவிக்கப்பட்டதன் விளைவு. பீஷ்மரைப் படிமம் ஆக்குகிறபோது அவரது பிரமாண்டமான ஆகிருதியையும் ஆளுமையினையும் கவனத்தில் கொண்டு இணை வைக்க வேண்டும். தவறினால் அபத்தமாகப் போய்விடும்.

தற்காலத் தமிழில் மௌனி, கு. ப. ராஜகோபாலன், புதுமைப் பித்தன், கு. அழகிரிசாமி, எனப் பலரும் மரபை அழகாக மீறியிருக்கிறார்கள். ஒரு முன்னோடியாகத் தமது பாஞ்சாலி சபதத்தில் பாரதியாரும் கம்பீரமாக மீறியிருக்கிறார். இவர்களைக் கருத்தூன்றிப் படித்தால் யார் யார் எங்கெங்கே கண்களை உறுத்தாதவாறு மரபை மீறியிருக்கிறார்கள் என்பது தெரிய வரும். கி. ராஜ நாராயணனுங்கூட மிகவும் சுவாரஸ்யமாக இதைச் செய்திருக்கிறார். கவிஞர்களில் ஞானக்கூத்தன், விக்கிரமாதித்யன், ஸல்மா, தஞ்சாவூர்க் கவிராயர் எனப் பலரும் மரபைச் சிதைக்காமல் மீறிச் சென்றிருக்கிறார்கள். அது வாசலில் போட்ட கோலத்தை மிதித்துக் கொண்டு போகாமல் எச்சரிக்கையுடன் சுற்றிக் கடந்து செல்வது போன்றது. எனக்குத் தெரியாத இன்னும் பலரும், குறிப்பாக பா. வெங்கடேசன் போன்ற இளம் தலைமுறைப் படைப்பாளிகளும் இதைச் செய்திருக்கக்கூடும்.

மரபை ஆழமாய்ப் புரிந்துணர்ந்து, அதன் பின் அவசியம் கருதியும், காலப் பொருத்தம் பார்த்தும் அதனை மீறுதல் முறையான மரபு மீறல். இதற்கும் ஓர் எடுத்துக் காட்டு நினைவுக்கு வருகிறது.



இரணியனுடன் போர் புரியும் நரசிம்மர் - பல்லவர் காலம் (காஞ்சி கைலாசநாதர் ஆலயம்)

நமது மரபு சார்ந்த அழகியலில் கோரமான எதையும் அது உள்ளவாறே புலப்படுத்தும் முறை இல்லை. ஆனால் கோரம் என்பது ஓர் உக்கிரத்தின் பின் விளைவு. ஆகவே நமது அழகியல் நமக்கு விதிப்பது கோரம் தவிர்த்த உக்கிரம். உக்கிரத்தைக் காட்டி கோரத்தை உணர்த்துதல் நம் மரபு சார்ந்த அழகியல் முறைமை. இதனால்தான் ஹிரண்யனை மடியில் கிடத்திக் கொண்டு வயிறு கிழித்துக் குடல் உருவிய நரசிம்மத்தின் முகத்தில் கோரம் இல்லை. மடியில் கிடக்கிற ஹிரண்யன் வயிறு பிளந்து குடல் சரிந்து ரத்தம் வழிகிற கோலமும் இல்லை. அவ்வளவு ஏன், நரசிம்மத்தின் விரல் நகங்கள்கூட ஹிரண்யன் வயிற்றில் பதிவதில்லை. ஒரு சமிக்ஞை, ஒரு பாவனை மாத்திரமே. அதனால் என்ன, நிலைமையின் கோரம் உணரப்படாமலா போனது? இல்லையே!



இரணியன் குடல் கிழிக்கும் நரசிம்மர் - ஹொய்சளர் காலம் (பேலூர்,கர்நாடகா)

பின்னர் ரத்த வாடையில் திளைத்த நரசிம்மத்தை ஒரு நிலைக்குக் கொணர வேண்டி வந்துதித்த சரபம் அதனிலும் கோர வடிவாய் அமைய நேரிடினும் அதன் முகத்திலும் கோரம் இல்லை. உக்கிரம் மட்டுமே உண்டு.
நரசிம்ம முகத்தில் கோரம் காட்டாது உக்கிரம் மட்டுமே காட்டிய சிற்ப வடிவங்களில் நாயக்க சம்பிரதாயத்தைப் பொருத்த வரை பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு மரபை மீறும் மாற்றம் தென்படலாயிற்று. நரசிம்ம முகத்தில் உக்கிரத்துடன் கோர சொரூபமும் மடியில் கிடக்கும் ஹிரண்யன் வயிறு பிளந்து குடல் மாலை சூடலும் உருவகித்தல் நிகழ்ந்தது. எதற்காக இந்த மரபு மீறல்?




யோக நிலையில் வீற்றிருக்கும் உக்ர நரசிம்மர் - விஜயநகர காலம், ஹம்பி, கர்நாடகம்
(பாமினி சுல்தான்கள் படையெடுப்பின் போது சிற்பத்தின் கைகளை உடைத்தனர்)

கோரக் காட்சிகளைக் கண்களுக்குப் பழக்கப்படுத்துவதற்காகத்தான். விஜய நகர சாம்ராஜ்யத்தைச் சூழ்ந்து எப்போது பாய்ந்து கடித்துக் குதறலாம் எனக் காத்திருந்த பாமினி சுல்தான் ராஜ்யங்கள் எவ்வித வரம்பும் இன்றி முற்றிலும் நாசவேலையே குறிக் கோள் எனத் திரிந்ததில் தெரிந்த கோரம் தந்த திகைப்பும் செயலிழப்பும் தவிர்க்கப்பட வேண்டும் என்கிற அவசியம் கருதி நிகழ்ந்த மரபு மீறல் அது. மரபு இன்னதெனத் தெளிவாகத் தெரிந்திருந்து, இப்படி அவசியம் கருதி, ஒரு நோக்கத்துடனான மீறலில் அர்த்தம் உண்டு. அதேபோல மரபு இதுவென அறியாது, அரைகுறையான புரிதலுடன் மரபை மீற வேண்டும் என்பதற்காகவே மரபை மீறுதலில் மரபு சிதைகிற அபாயமும் உண்டு.



ஹம்பி நரசிம்மர் திருமுகம்

படைப்பாற்றலுக்குத் தடைகளை விதிக்கிற கொடூரமோ பிடிவாதமோ தொன்மை மிக்க நமது மரபுக்குக் கிடையாது. அது மிகுந்த தாராளப் போக்குள்ளதுதான். விசாரணைகளோ விளக்கம் தருவதற்கான வாய்ப்புகளோ இன்றித் தண்டனையை விதித்து விடுகிற கொடிய சம்பிரதாயம் அதற்கு இல்லை. படைப்பாளியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள எத்தனிக்க அது எப்போதும் தவறுவதில்லை. நமது பழைய படைப்புகளை ஆராய்ந்தோமெனில் அது எத்தனையோ சந்தர்ப்பங்களில் மரபு மீறலை ஏற்றுக்கொண்டிருப்பது தெரிய வரும். ஒரு நியாயமான அவசியத்திற்காக நிகழ்வதாக அந்த மீறல் இருக்க வேண்டுமேயன்றி, வெறும் சாகசத்திற்காக, மீறிக்காட்ட வேண்டும் என்கிற அதிகப் பிரசங்கித்தனத்தால் மேற்கொள்ளப் படுவதாக இருத்தலாகாது, அவ்வளவுதான்.

சரி, மரபை மீறலாம், ஆனால் ஏன் சிதைக்கக் கூடாது? என்ன குடி முழுகிப் போய்விடும்?

உலகம் முழுவதுமே மனித சமுதாயத்திற்கு இருப்பது ஒத்த சிந்தனைப் போக்கும் ஒரே மாதிரியான உணர்வுகளும்தான். சில திணிப்புகளால் அவற்றில் வலுக்கட்டாயமான திரிபுகள் இடம் பெறக் கூடும். அவை விதி விலக்குகள்தாம். இருப்பினும் வெளியிடும் முறையில், தொனியில், கொடுக்கும் முக்கியத்துவத்தில் தென்படும் கோணங்களால் பல வண்ணப் பூக்கள் மலர்ந்த நந்தவனமாக உலகைக் காண முடிகிறது.
உதக மண்டலத்தில் நடைபெறுகிற மலர்க் காட்சியைப் பார்த்தவர்களுக்குத் தெரியும், ரோஜா மலர்களைப் பச்சை, கருமை போன்ற முற்றிலும் எதிர்பார்க்க முடியாத வண்ணங்களில் இப்பொதெல்லாம் பூக்க வைப்பது. ஆனாலும் அவை அடிப்படையில் ரோஜாச் செடியிலிருந்து மலர்பவை என்கிற மரபை இழக்கவில்லை. திகைப்பூட்டுகிற விதமாக மீறியிருக்கின்றன, அவ்வளவே. ரோஜாச் செடியில் ரோஜவுக்குப் பதிலாக வேறு ஏதேனும் மலர் பூக்கும் படியாகச் செய்தால் அது சிதைப்பு. அப்புறம் எல்லாப் பூச் செடிகளுமே ரோஜா மலர்கள் மட்டும் பூக்கிற செடிகளாகிப் போகும். பல வண்ணங்களில் அவை இருந்தாலும் எல்லாமே ரோஜாக்கள்தாம். அதன் பிறகு நந்த வனத்தில் முன்பிருந்த பன்மை அழகு தென்படாது போகும்.


ஒரேயொரு மரபு சிதைந்து அதன் விளைவாகப் பின்னர் அந்த ஒரு மரபு அழிந்து போனாலும் அது உலகிற்குப் பெரும் இழப்புதான். மிகத் தொன்மையான மரபின் மறைவோ சகிக்க முடியாத துக்கம்.
உலகம் தோன்றியது முதல் எத்தனையோ விலங்கினங்கள் பூண்டற்று அழிந்து போயின. மனிதனின் வேட்டைப் பிரியத்தினாலேயே கூடச் சில சிதைந்து அழிந்தன. சில அவனது பேராசையினால் வரம்பு கடந்த உபயோகிப்பால் மறைந்தன. பல அருமையான விலங்கினங்களை இனிக் காணவே இயலாதே என விலங்கியல் அன்பர்கள் ஏங்குகிறார்கள். முற்றிலும் அழிந்து போனதாக ஆவணப் படுத்தப்பட்ட ஏதேனும் ஒரு விலங்கினத்தின் ஒரேயொரு பிரதி அதிருஷ்ட வசமாகத் திடீரென எங்காவது தென்பட்டால் அக மகிழ்ந்து அதனை எப்படியாவது பெருகச் செய்யப் படாதபாடு படுகிறார்கள்.


ஒரு கலாசாரத்தின் மரபும் அத்தகையதுதான். சிதைக்கப்பட்டுப் பின் அழிந்தே போனால் போனதுதான். திரும்பக் கிட்டாது.
எனவேதான் நமது மரபு நம்முடைய படைப்பாளிகளிடம் மீறுங்கள், பரவாயில்லை; சிதைக்க வேண்டாம், அழிந்து போனால் அப்புறம் கிடைக்க மாட்டேன் என்று சொல்கிறது.


காதுள்ளவர்கள் கேட்டுக் கொள்ளலாம்.


malarmannan79@rediffmail.com

திண்ணையில் மலர் மன்னன்

Wednesday, January 02, 2008

What Actually Happened in Orissa?

Here is an account of the Orissa incidents that I received from Sri. Ashok Sahu, IPS (Retd), Former Inspector General of Police. He is a valiant officer who fought insurgets in north east while at service and is an expert on Naxal groups, North east insurgency and Church-terrorist nexus.

Facts on 'Clashes among Christian Missionaries and the Tribals in Kandhamal District of Orissa'.

Reports of communal violence involving the converted Christians led by the Missionaries on one hand and the Tribals on the other, in Kandhamal District of Orissa by the media since 25 th December 2007 are vastly distorted and motivated which in public interest need beclarified much before the national image is tarnished before thegeneral public and the international community. The whole series of incidents started from unprovoked and preplanned attack on Vedanta Keshari Swami Laxmanananda Saraswati who was visiting his disciples in Darsingbadi village in Kandhmal District on 24 th December.




Swamiji, 82 years old has been working relentlessly in the District since 1967 to protect the local population where more than 75% are below thepoverty line and are not literate. He has opened schools and hostels, hospitals and temples to protect mainly the tribals and the down-trodden from the clutches of Missionaries who are operating with massive fund from foreign countries and pumped into NGOs in disguisedoperations to convert the local tribals into Christianity.

Chief of such NGOs is one 'WORLD VISION' patronized by one Mr. RadhakantaNayak, a local of Darsingbadi village from 'Pana' community but later got converted to Christianity. He happens to be an employee of the State Government promoted to the IAS and retired, and now a Member in the Rajya Sabha. His henchmen were the assailants who attacked Swamiji on 24 th December.

Meanwhile, the Kui tribals among the Kandhs in the District were agitating on the conspiracy by Mr. Nayak who is engineering forgetting a Presidential notification under the provisions of the Constitution, to get his 'Pana' community, who are scheduled castes relisted as scheduled tribe along with the Kui on the ground that the former also speak the Kui dialect. Various reservation facilities to which scheduled tribes are entitled are not available to persons converted to Christianity.

On hearing the assault news on Swamiji, the already agitated Kui community reacted and protested through out the district against the 'Pana' community converted to Christianity. Interestingly, the Maoist (Naxalites) activists in the district arealso mostly from among the recent converts to Christianity. Among 47 Maoists arrested in connection with recent burning of villages inhabited by Hindus ( Brahmanigaon, Jhinjiriguda, Katingia, and Godapur) as a counter to attacks by tribals on the Churches, 20 guns have been recovered by the security forces from them.

It is evidentthat the Maoists and the Church are hands in glove with each other to spread fratricidal killings and clashes among the tribals which is evident also from incidents in Karbi-Anglong and North Cachar Hills districts in Asaam. Conversions of poor tribal villagers are being conducted on gun point and by spreading terrorism.

While in active government service Mr. Radhakanta Nayak IAS (Retd.) and Mr. John Nayak IPS (Retd.) both converted Christians were instruments of the Church to proselytize the poor and illiterate'Pana' and tribal communities in Kandhamal district of Orissa. Under guise of NGOs thousands of dollars are pumped into the country for conversion of tribals in Jharkhand, Chhatisgarh, Madhya Pradesh,Orissa, Andhra Pradesh and the North-East.



Taking advantage of the poverty and lack of education, thousands have been converted who are also being trained for separatist movements like NSCN in Nagaland and Maoist insurgency in the aforesaid states. This trend is more pronounced since 1970 which is evident from the census reports till 2001. In Kandhamal District alone the Christian population hasincreased from 6% in 1970 to 27% in 2001, despite an Act enacted by Orissa Legislature in 1967 to prevent conversion by allurement,coercion, bribery and cheating.

Swamiji has been fighting a lone battle by making the tribal district his home for last 40 years, who has been targeted by the Church to finish him off. Earlier to the recent attack, there were two other lethal attacks on Swamiji in 1971 and 1995. Since then the government has provided armed protection to Swamiji. Inspite of that, he was attacked by armed assailants on 24 December 2007 in which he and his driver and armed security personnel were seriously injured and hospitalized in Cuttack Medical College Hospital.

Hence, the recent clashes manifest the various ramificationsof the socio-economic, political and cultural tribal issues and the deep-rooted conspiracy by the Church to destabilize our society and our economy . Let the Nation awake and protect our tribal brethren and the national media stop distorting the facts.

Ashok Sahu, IPS (Retd.),
Former Ispector General of Police.


Orissa Burning - NDTV Coverage of recent Orissa happenings