Showing posts with label தீவிரவாதம். Show all posts
Showing posts with label தீவிரவாதம். Show all posts

Friday, July 24, 2009

சீனாவின் தலைவலி இந்தியாவின் நிவாரணி?

... பிரிவினை மற்றும் உரிமை கோரலுக்கான பொறி எந்தப் பகுதியிலாவது தோன்றினால், அதைச் சமாளிப்பதற்கு சீனர்கள் பயன்படுத்தும் வழிமுறை ஒன்றே தான் - கோரிக்கையாளர்களைக் கடுமையாகத் தாக்கி ஒடுக்குவது, தொடர்ந்து தாக்கி ஒடுக்குவது. உறுதியுடன் தாக்கி ஒடுக்குவது. திபெத்தில் அவர்கள் செய்வதைப் போல. ..

மூலம்: பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன்
மொழியாக்கம்: ஜடாயு

கட்டுரையை சொல்வனம் இதழில் படிக்கலாம்.

Monday, May 26, 2008

எச்சரிக்கை: இந்தியாவின் உட்பகை (enemy within)

ரவி ஸ்ரீனிவாஸ் அரசியல் கைதிகள்-பினாயக் சென்-அ.மார்க்ஸ்: ஒரு எச்சரிக்கைக் குறிப்பு என்ற தனது பதிவில் அப்பட்டமான இந்திய விரோதிகளுக்குப் பரிந்து பேசும் அறிவுஜீவி மனநிலை குறித்து சரியான கண்ணோட்டத்தை முன்வைத்திருக்கிறார். துரதிர்ஷ்ட வசமாக, "அரசியல் கைதி" என்று பரிவுடன் அவர் குறிப்பிடும் டாக்டர் பினாயக் சென் அமைதிப் புறா அல்ல. அப்பட்டமான தீவிர நக்சல் ஆதரவாளர் அவர் என்பதே உண்மை.

"உறுதியான சட்டங்கள், தேர்ந்த உளவுத்துறை, அதிநவீன பாதுக்காப்பு சாதனங்கள் இவை மட்டுமே ஜிகாதிகள், நக்சலைட்டுகள், மற்ற பிரிவினைவாதிகளுடனான போரில் நமக்கு வெற்றி தேடித் தராது.. தேசவிரோதிகளுக்காகக் கச்சை கட்டிக்கொண்டு பேசவரும் இத்தகைய உட்பகைகளையும் நாம் எதிர்கொள்ளவேண்டும். பயங்கரவாதத்தால் பாதிக்கப் படுபவர்களுக்குப் பதிலாக, பயங்கரச் செயலை நிகழ்த்தியவர்களின் பாதுகாப்பையும், நலனையும் முன்நிறுத்தும் இந்த இழிவான மனநிலை, அதன் பிரதிநிதிகள் இந்த விரோதிகளுடன் போரிட்டு முதலில் நாம் வெல்ல வேண்டும்" என்கிறார் பயனியர் ஆசிரியர் சந்தன் மித்ரா.

Jaipur to Raipur - பயனியர் இதழில் வந்த கட்டுரை.

Jaipur to Raipur
- Chandan Mitra

From Jaipur to Raipur and beyond, India is under a siege within. While the political class has predictably fulminated against Pakistan and Bangladesh, the fact is that every heinous crime against the people of India has been committed by Indians, even if funded and trained by outside forces.

For the ordinary citizen it comes as no solace to learn that something called HuJI has replaced LeT or JeM as the new face of terror in India. For the victims of terror, the jihadi terrorist remains an elusive, sinister figure irrespective of nomenclature. Periodically we are told that these shadowy organisations receive logistic support from yet another dangerous outfit, SIMI (or is it now called SIM?). Whether it is the Students' Islamic Movement that acts as the liaison agency for the executors of bomb blasts, it is quite inconsequential to the public at large. Jihadi terrorists have demonstrated their ability to strategise precisely, plan meticulously, strike at will and massacre innocents at destinations chosen by them. Every year India has reeled under three or more major terrorist outrages and just when complacency sets in, jihadis strike yet another deadly blow.

Where does Raipur fit in this scheme? Chhattisgarh, Jharkhand, Orissa, Andhra Pradesh, Bihar and parts of Maharashtra and Karnataka have similarly been reeling under successive waves of terror of another kind. Although there is no concrete evidence yet of links between jihadis and Maoists, they share a common aim -- destabilisation of the Indian nation. The green flag of Islamic jihad and red pennant of Naxalites are fluttering virtually all over the country even if they have carved out separate areas of operation, the former focusing more on big cities and the latter on interior villages. The numbers decimated by Maoist marauders is probably no less than those felled by terrorist depredations. In vast stretches of the Indian heartland, the writ of the Government either does not run at all or runs cursorily only between dawn and dusk. Just as the jihadi terrorists are working in coordination with, or at the behest of, foreign powers and global terror outfits like Al Qaeda, Maoists in India too have a central command, swear allegiance to a foreign ideology and, after the tragic legitimisation of ultra-Left rule through elections in Nepal, will work in even greater concert with a neighbouring country's Government.

The similarity does not end there. Both jihadis and Maoists thrive on the back-up support of an army of secular fundamentalists and bleeding-heart intellectuals in India. These fifth columnists hold opinion makers in this country in an octopus-like grip, and are perpetually busy generating sympathy for the mass murderers. While every attempt by the state to act decisively against both jihadis and Naxalites is greeted with howls of protest, law-enforcement agencies are continuously berated and sought to be systematically demoralised. The self-styled cheerleaders of liberalism oppose the demand to bring back POTA or enact similar State laws needed to act aggressively against terror merchants.

Further, they are at the forefront of vicious campaigns against conscientious security personnel for their alleged excesses and so-called violation of human rights. One only has to recall their frenzied attempts to put Gujarat Chief Minister Narendra Modi on the mat for defending his police in the encounter that led to the fully justified liquidation of jihadi operatives such as teenage terror courier Ishrat Jahan. The subversive section of the Indian intelligentsia went almost berserk over the alleged crimes of VG Vanzara, the Gujarat police officer who eliminated terrorist Sohrabuddin. These effete intellectuals have been out to prove that the Government itself plotted the December 13 attack on Parliament and Afzal Guru is an innocent, honourable man who must be saved from the gallows irrespective of judicial verdicts.
The India-baiters inevitably succeed because we are unfortunate enough to have a Prime Minister who confesses he could not sleep for nights without end worrying about the fate of an Indian-origin Glasgow airport bombing suspect detained briefly in Australia, although the same Prime Minister has shown no such concern for the thousands of his fellow-countrymen who die gruesome deaths at the hands of jihadis and Maoists.

Not surprisingly, closet sympathisers of India's destabilisation have now mounted a campaign to allow Naxalite intellectual Dr Binayak Sen to travel to Washington to personally collect something called the Jonathan Mann award from an organisation that describes itself as the Global Health Council. Apparently he is to be honoured for his "spectacular and pioneering" work among tribals of Chhattisgarh and also for "exposing" the "Government-backed vigilante group, Salwa Judum". It is remarkable how a Washington-based organisation came to know about Dr Sen's "spectacular" work when nobody in India (except Maoists and their frontal organisations) had heard of him, at least till he was caught smuggling vital correspondence to a Naxalite leader in detention, under the garb of attending to his medical condition. Moreover, the Goebblessian propaganda that Salwa Judum is a vigilante group, whereas it is an unarmed people's movement against Naxalites, has actually got embedded even in intelligent people's minds through sheer repetition. Although various agitations planned on the dubious doctor's behalf by Maoists and their fellow-travellers have not quite taken off despite high voltage publicity on websites, it would be naïve to rule out a crescendo of support as May 29, the date on which the award is to be conferred, comes closer.

Remarkably, Indian subversives have a huge international network, which includes various separatist outfits, Christian missionary groups and busybody NGOs. I recall being confronted by an earnest young Tamilian Christian student at Berkeley last August demanding my intervention as MP with the "fascist, communal" Chhattisgarh Government for Dr Sen, whose name I first heard at that seminar. Taken aback, I checked up with friends at home about the activist-doctor's antecedents that night and sparred with his misguided young supporters in the US thereafter. I have no doubt that India's terror network thrives because of such people. I even came across an article titled "India: No country for good men" detailing the Government's apparently disgraceful human rights record and condemning the "systematic crackdown" on dissenters in this country. If India were not mentioned a few times, anybody would have thought it was a write-up on the excesses of the Burmese military junta! Needless to add,
the internet article was written by an Indian!

Thus, the siege within is much more pervasive than it appears at first sight. While the country needs more stringent anti-terror laws, better intelligence, superior equipment for security forces and other paraphernalia for combating jihadi, Maoist and separatist terror, apart from draconian measures to stop infiltration from Bangladesh, the war against the enemy within cannot be won by laws alone.


Till such time as we agree that "terrorism in all its manifestations" includes mindset that in effect protect and promote the cause of the perpetrators of terror rather than those of its victims, I am afraid the war can never be decisively won.

Wednesday, May 21, 2008

தமிழக ஜிகாதிகள்: போலீஸ் தேடுதல் தீவிரம்

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகள் பற்றிய இந்தப் பதிவின் இறுதியில் இப்படிக் கூறியிருந்தேன் -

"எனவே அரசு மிக உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், உடுமலைப் பேட்டையிலும், உடுப்பியிலும், குண்டூரிலும், நாசிக்கிலும் என எதிர்பாராத இடங்களில் எல்லாம் ஜிகாதிகள் தாக்குதல் நடத்தப் போவது உறுதி. மக்களின் உயிருக்கு உத்தரவாதம் தராத அரசு நீடிப்பதில் அர்த்தமில்லை, அது அகற்றப் படவேண்டும்"





எழுதிய கம்ப்பூட்டரை இன்னும் ஒருமுறை boot கூடப் பண்ணவில்லை, அதற்குள் சென்னை மண்ணடியில் ஜிகாதிகள் கைது செய்யப் பட்டதாகவும், சென்னையிலும் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. போலீஸ் போய்ப் பிடிப்பதற்குள் இந்த ஜிகாதி கும்பலின் தலைவன் தப்பியோடிவிட்டான். இது பற்றி ஜுனியர் விகடன் இதழ் ஒரு அதிரடி ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது.

தஞ்சை கடலோரப் பகுதிகளில் இஸ்லாமிய தீவிரவாதமும், மதவெறியும் நாளுக்கு நாள் பெருகிவருகிறது பற்றியும் இந்த ரிப்போர்ட் கவலை தெரிவிக்கிறது. ஒன்றரை வருடம் முன்பு பாகிஸ்தான் ஆகி வரும் தஞ்சைத் தமிழ் மண்??? என்ற பதிவில் குறிப்பிட்டது போல, கோயில் திருவிழாக்களில் சுவாமி வீதியுலா வருகையில் கோலம் போட்டு வரவேற்று தஞ்சை மண்ணின் கலாசாரத்துடன் தங்களை இணைத்துக் கொண்டிருந்த முஸ்லீம்களின் தலைமுறை முடிந்துபோய், ஜிகாதி தீவிரவாத விஷ விருட்சங்கள் அங்கே வளர்ந்துகொண்டிருக்கின்றன. இன்று ஜூ.வியே இதைப் பற்றி எழுத ஆரம்பித்துள்ளது.

மற்ற மாநில, மற்றும் வெளிநாட்டு ஜிகாதிகளுடன் இவர்களுக்கு இருக்கும் தொடர்புகளையும் ஜூ.வி கட்டுரை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

டென்ஷனில் தமிழகம்! 'டேஞ்சரஸ் தவ்பீக்...'
(ஜூனியர் விகடன் 25-5-2008 இதழிலிருந்து)

தமிழகத்தை திடீரென திக்திக்கில் மூழ்கடித்திருக் கிறது தவ்பீக் என்ற பெயர்! 'இறைவன் ஒருவனே' அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக இருக்கும் தவ்பீக், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம் பட்டினத்தைச் சேர்ந்தவன். சில மாதங்களுக்கு முன்பு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டவன். அப்போது, ''வெறுங்கையோட திரியிற நான், இத்தனை போலீஸ் பாதுகாப்பையும் தாண்டி எப்படி சார் மோடியைக் கொல்ல முயன்றிருக்க முடியும்? இருந்தாலும், என்னால மோடியோட உயிருக்கு ஆபத்து இருக்குன்னு நீங்க நினைச்சதே எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு'' என சொல்லி போலீஸாரையே அசரடித்தவன் தவ்பீக்.

அந்த வழக்கிலிருந்து கடந்த மாதம்தான் வெளியே வந்திருக்கிறான்.ஆறு வருடங்களுக்கு முன்பு அதிராம்பட்டினத் தில் முஸ்லிம் பெண்களை ஏற்றிச் சென்ற ஒரு ஆட்டோக்காரரை அரிவாளால் வெட்டிய தவ்பீக், போலீஸாரிடம் மத்திய அமைச்சர் ஒருவரின் பெயரைச் சொல்லி மிரட்டியதை அப்போதே ஜூ.வி-யில் வெளியிட்டிருந்தோம் (தவ்பீக்கின் புகைப்படத்தை அப்போதே முதன்முறையாக வெளியிட்டது ஜூ.வி.).அதன்பிறகு, தவ்பீக்கை உளவுத்துறை போலீஸார் விடாமல் வேவு பார்த்த போதுதான் இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலனுக்கு குறி வைக்கப்பட்டிருக்கும் தகவல் தெரிய வந்திருக்கிறது. உடனே, அவனையும் அவன் கூட்டாளிகளையும் சேர்த்து வளைக்க போலீஸ் திட்டம் போட்டது.

இந்த நிலையில், ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பை அடுத்து சென்னையில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, தவ்பீக்கும் அவனுடைய கூட்டாளிகளும் சென்னை மண்ணடி யில் உள்ள அட்வகேட் மேன்ஷனில் தங்கியிருப்பதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது. அடுத்தகணமே இணை கமிஷனர் ரவி தலைமையிலான போலீஸ் படை அங்கு விரைந்திருக்கிறது.

அதற்குள் தவ்பீக்கும், 'இறைவன் ஒருவனே' அமைப்பின் சென்னை தலைவன் அபுதாகிரும் எஸ்கேப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 'பழனி' உமர், நெல்லையைச் சேர்ந்த சையத்காசிம் என்கிற ஹீரா, சென்னை மண்ணடி ஏரியா காதர் ஆகிய மூவரையும் வளைத்தது போலீஸ்.

தவ்பீக்கின் தீவிரவாத வளர்ச்சி பற்றிய பல விஷயங்களை, போலீஸ் மற்றும் விவரமறிந்த புள்ளிகள் விரிவாக நம்மிடம் சொன்னார்கள்.''அவனிடம் ஐந்து நிமிஷம் பேசினாலே எதிராளி மயங்கிவிடுவார். பிரமாதமாகப் பாடவும் செய்வான். இமாம் அலியுடன் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்தவன். இமாம் அலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட பிறகு, ஒட்டுமொத்த போலீஸ§ம் கண்காணித்துக் கொண்டிருப்பது தெரிந்தும், உடலை எந்த தயக்கமும் இன்றி முதல் ஆளாக நின்று சுமந்து சென்றவன். இமாம் அலியின் பல திட்டங்கள் தவ்பீக்குக்குக் கைமாற்றப்பட்டதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது. 'இமாம் அலியின் நண்பர்' என்கிற அடையாளத்தை வைத்து சர்வதேச தீவிரவாத அமைப்புகளோடும் தவ்பீக் தொடர்புகொண்டிருக்கிறான்.

ஆரம்பத்தில் 'முஸ்லிம் டிஃபென்ஸ் ஃபோர்ஸ்' என்ற அமைப்பில் இருந்த தவ்பீக், சர்வதேச தீவிரவாதியான 'மல்லிப்பட்டினம்' இம்ரான் (சமீபத்தில் தமிழகத்தில் கைது செய்யப்பட்டான் இவன்) உதவியுடன் சவூதி அரேபியா சென்று பயிற்சி பெற்றான். இதற்கிடையில், தமிழகத்தில் சில முக்கியமான அசைன்மென்ட்களை நிறை வேற்றுவதற்காக தவ்பீக் சென்னைக்குத் திரும்பி வர, தமிழக போலீஸ் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அவனைக் கைது செய்தது. இருந்தாலும், அவன் சம்பந்தப்பட்ட எந்த வழக்கையும் போலீஸால் முறையாகப் பதிவு செய்ய முடியவில்லை. அதனால், நான்கு வருடங்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டான்.

அண்டை மாநிலங்களில் பிடிபட்ட தீவிரவாதிகளின் வாக்குமூலங்களில் தவ்பீக்கின் பெயர் தவறாமல் இடம் பிடித்தது. கடந்த மார்ச் 25-ம் தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ராம.கோபாலன் கூட்டத்தில் அவரை தீர்த்துக் கட்டுவதற்கான ப்ளானை நிறைவேற்ற தவ்பீக் திட்டமிட்டிருந்தான். ஆனால், அன்று எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாக இருந்ததால் திட்டம் நிறைவேறாமல் போயிருக்கிறது.இது மட்டுமல்ல... ஜெய்ப்பூரைப் போல் சென்னையிலும் அசம்பாவிதங்களை அரங்கேற்ற தவ்பீக்கின் கும்பல் திட்டம் போட்டிருக்கிறது. நல்ல வேளை, அதற்குள் அந்த கும்பல் பிடிபட்டுவிட்டது. தப்பியோடிவிட்ட தவ்பீக்குக்கு அடைக்கலம் கொடுக்க பல அமைப்புகள் தயாராக இருக்கின்றன. அதனால், அவன் போட்டு வைத்திருக்கும் திட்டங்களை விடாப்பிடியாக நிறைவேற்ற முயலுவான் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது'' என்று கவலையூட்டினார்கள்.

தவ்பீக்கின் கூட்டாளிகளிடம் விசாரித்துவரும் டீமில் இருப்பவர்கள், ''ஜெய்ப்பூரிலும், சென்னையிலும் ஒரே சமயத்தில் குண்டுவெடிப்பு களை அரங்கேற்ற திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. உளவுத்துறை போலீஸாரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் சென்னை தப்பியிருக்கிறது. ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றிருக்கும் 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்புக்கும் தவ்பீக்குக்கும் தொடர்பு இருப்பதற்கான முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்பினரின் மெயில் மிரட்டலில் 'டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களையும் தகர்ப்போம்' எனச் சொல்லி இருக்கிறார்கள். போலீஸ் தன் மீது கண் பதித்திருந்ததால்தான் தவ்பீக்கால் சென்னையைத் தகர்க்கும் அசைன்மென்ட்டை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கிறது. இப்போது அவன் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. விரைவில் அவனைப் பிடிப்போம்'' என்கிறார்கள்.

அதிராம்பட்டினம் - மல்லிப்பட்டினம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தவ்பீக்குக்கும் மல்லிப்பட்டினத்தில் இம்ரானுக்கும் ஆதரவாளர்கள் அதிகம். சில வருடங் களுக்கு முன்பு மல்லிப்பட்டினம் பள்ளிவாசல் அருகே வெடிமருந்து மூட்டைகள் கைப்பற்றபட்டபோது, பிடிபட்டவர்கள் 'தஞ்சை பெரிய கோயிலை தகர்க்கத்தான் திட்டம் போட்டோம்' எனச் சொல்லி அதிர வைத்தார்கள்.

ஐயாயிரம் வாக்குகளை அள்ளிய தவ்பீக்!

இரண்டு வருடங்களுக்கு முன்பு சிறையிலிருந்தபடியே சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டி யிட்டவன்தான் இந்த தவ்பீக். அவன் பேசிய கேசட்களை தொகுதி முழுக்க ஒலிபரப்பியும், உரைகளை பிட் நோட்டீஸ்களாக அச்சடித்தும் அவன் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்தார்கள். தேர்தல் முடிவில் அவனுக்கு ஐயாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் விழுந்திருந்தன.

ரகசிய கூட்டம்?

தவ்பீக் பதற்றம் தமிழகம் முழுவதும் தொற்றிக்கொண்டிருக்கும் நேரத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்னும் அதிகமாகி இருக்கிறது. மேலப்பாளையத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களைத் திரட்டி, சீருடையும் கொடுத்து, 'அணிவகுப்பு ஒத்திகை மற்றும் மனதிடப்பயிற்சி' அளிக்க இருக்கிறார்கள் என்றொரு பரபரப்பு கடந்த வாரம் கிளம்பியது. போலீஸ் கண்காணிப்பு தீவிரமானதால், அந்தக் கூட்டம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதேபோல், இரண்டு நாட்களுக்கு முன்பு தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் குண்டு வெடிக்கப்போகிறது என்று தென்காசி போலீஸ் நிலையத் துக்கும், '100'-க்கும் ஒரு தகவல் வந்தது. தென்காசி கோயில் பக்கத்திலிருந்த ஆளில்லா ஒரு ரூபாய் டெலிபோன் பூத்திலிருந்துதான் அந்த போன் வந்திருக்கிறது.

-- இரா.சரவணன்
Copyright © 2007 Junior Vikatan

Thursday, May 15, 2008

வீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா?

இந்த வார ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகள் தேசத்தை இன்னொரு முறை அதிர்ச்சியிலும், ஆழ்ந்த துயரத்திலும் உறைய வைத்திருக்கின்றன. சுற்றிப் பார்க்க வந்தவர்கள், அனுமன் கோயிலில் தரிசனம் செய்ய வந்தவர்கள், விளையாட வந்தவர்கள், கடைகளில் பொருள் வாங்க வந்தவர்கள், காற்று வாங்க வந்தவர்கள் என பேதம் பார்க்காமல் அப்பாவி இந்திய மக்களைக் கொன்று குவித்திருக்கின்றன தீவிரவாதிகள் வைத்த சைக்கிள் குண்டுகள். இந்த தேசம் முழுவதும் ஜெய்ப்பூரில் மடிந்தவர்களுக்காகக் கண்ணீர் வடிக்கிறது, இறந்த இந்திய ஜீவன்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது. எம் தேசத்தின் மைந்தர்களின் கோரப் படுகொலையும், சோகமும், இழப்பும், வேதனையும், வலியும் தொலைக்காட்சியில் காணும் போது நெஞ்சு வெடிக்கிறது.




தீவிரவாதம் பற்றி இந்திய சமூகத்தின் பொதுவான மனநிலை எப்படியிருக்கிறது? ஜெய்ப்பூர் என்கிற ஒரு சுற்றுலாத் தலத்தில், மொஃபசல் நகரில் தீவிரவாதத் தாக்குதல் நடந்திருப்பது பெரிய அதிர்ச்சி என்று ஊடகங்களில் பேசப் படுகிறது. “ஜெய்ப்பூர் இதற்கெல்லாம் பழக்கப் பட்டதேயில்லை” (Jaipur is just not used to this) என்கிறார் ஒருவர். மும்பை, தில்லி, வாரணாசி, அயோத்தி, ஹைதராபாத் இங்கெல்லாம் ஏற்கனவே குண்டுவெடுப்புகள் நடந்து விட்டன, அந்த நகரங்களில் இருப்பவர்கள் எல்லாரும் ஜிகாதிகள் கையால் சாவதற்குப் பழகிக் கொண்டு விட்டிருக்கிறார்கள் (அல்லது பழகிக் கொள்ளவேண்டும்) என்று மறைமுகமாக உணர்த்துவது போல் நிருபர்கள் பேசுகிறார்கள். தீவிரவாதத்தின் பயங்கரத்தால் இந்திய உயிர்கள் தொடர்ச்சியாக சாவது என்பது அல்ல, அது “எதிர்பாராத” ஒரு “புதிய” இடத்தில் நடந்திருக்கிறதே என்பது தான் பெரிய கவலையாக இருக்கிறது. அந்த அளவிற்கு சமூகத்தின், ஊடகங்களின் உணர்ச்சி மரத்துப் போய்விட்டிருக்கிறது.

இந்த கோரச் செயலின் பின் இருப்பவர்கள் பற்றி இம்முறை கொஞ்சம் மெதுவாகத் தான் தகவல்கள் வரத்தொடங்கியிருக்கின்றன. அதே “சிமி” இஸ்லாமிய மாணவர் அமைப்பு, அதே லஷ்கர்-ஏ-தொய்பா, அதே HUJI என்கிற ஹர்கத்-உல்-ஜிஹாதி-இஸ்லாமி. “இந்தியன் முஜாஹிதீன்” என்று ஒரு புதிய குழு புறப்பட்டிருக்கிறதாம். அதே மதரசாக்களில் படித்து மதவெறியேற்றப் பட்ட நடுத்தர வயது இளைஞர்கள். ஊர்கள், பெயர்கள், ஆட்கள் கொஞ்சம் கொஞ்சம் மாறிய அதே ஜிகாதி இஸ்லாமிஸ்ட் தீவிரவாதம். ராஜஸ்தான் காவல்துறை சந்தேத்தின் பேரில் தேடிவரும் நபர் உ.பி குண்டுவெடிப்புகளாகக் கைது செய்யப் பட்டு லக்னோவில் விசாரிக்கப் பட்டு வரும் ஒரு முன்னாள் மதரசா மாணவாரால் ஏற்கனவே கூட்டாளி என்று கூறப்பட்டவர். இவரும் சஹ்ரான்புர் மதரசாவின் முன்னாள் மாணவர் தான். இந்தூரில் இரு மாதங்கள் முன்பு கைது செய்யப் பட்ட 13 ஜிகாதிகளுடனும் தொடர்புடையவர் என்றும் கூறப் படுகிறது.

ஆனால் ஏதோ இந்த ஜிகாதி தீவிரவாதிகளுக்கு சில ஊர்கள், சில ஆட்கள் பேரில் மனஸ்தாபம் இருப்பதால் அங்கு போய் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள் என்பது போன்ற பாமரத் தனத்துடன் இந்த செய்தி அலசப் படுகிறது. ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்துள்ள இந்த நாசவலைக் குழுக்கள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் எதிராக போர் தொடுக்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லை. இந்த தேசத்தின் மீதும், இதன் ஆதாரமான, ஆன்மாவான இந்து வாழ்க்கை முறைமீதும் மட்டற்ற வெறுப்புக் கொண்டு அவற்றை அழிப்பதற்குக் கங்கணம் கட்டியிருப்பவர்கள் இவர்கள் என்ற விஷயம் சொல்லப் படுவதில்லை. இந்தியாவின் எல்லா இடங்களிலும் இவர்கள் குண்டுவைக்காமலிருப்பதற்கு, அந்த அளவுக்கு ஆள், அம்பு, ஆயுதம், கட்டமைப்பு இல்லை என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்கிற விஷயம் இன்னும் உறைக்கவில்லை. இவ்வளவு தாக்குதல்கள் நடந்தும் இந்த தேசவிரோத, தேசத்துரோக இஸ்லாமிஸ்ட், ஜிகாதி கும்பல்கள் பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை ஏன் அரசும், ஊடகங்களும் மக்களுக்கு வழங்குவதில்லை?

தீவிரவாதிகளின் நோக்கம் அப்பாவி இந்தியர்களைக் கொல்வதல்ல, அதுவும் செவ்வாய்க் கிழமை அனுமன் கோவில் வாசலுக்கு வரும் இந்து பக்தர்களைக் குறிவைத்துக் கொல்வது அல்லவே அல்ல. அதன் நோக்கம் “அமைதியைக் குலைப்பது” என்று திரும்பத் திரும்பச் சொல்லப் படுகிறது. அதாவது மக்கள் உயிர்போவதைப் பற்றிக் கூடக் கவலைப் படாமல் “அமைதி” காப்பாற்றப் படவேண்டும் என அரசு விரும்புகிறது.

ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததும், அதில் ஏற்பட்ட மனித உயிரிழப்பின் வலியை விட, அதன் சோகத்தை விட, ஐயையோ மதக்கலவரம் வந்து விடாமல் இருக்கவேண்டுமே குண்டடி பட்டுச் செத்த மக்களின் உற்றாருக்கு, சமூகத்தினருக்குக் கோபம் வந்து ஏதும் செய்யாமலிருக்க வேண்டுமே என்ற கவலையில் ராணுவத்தை ராஜஸ்தானுக்கு அனுப்புகிறது மத்திய அரசு. ஒரு இரண்டு நாள் துக்கம் அனுஷ்டித்து விட்டு பிறகு தங்கள் உற்றாரின் கோர மரணத்தையும், அந்த நிகழ்வையும் பற்றி சுத்தமாக மறந்து விட்டு தங்கள் வேலையைப் பார்க்கப் போகும் இந்து மனப்போக்கிற்கு “மன உறுதி” (resilience) பட்டம் தவறாமல் ஊடகங்களால் வழங்கப் படுகிறது. மும்பை ரயில் குண்டுவெடிப்புக்கு மறுநாளே சோகத்திலிருந்து மீண்டெழும் அந்த நகரின் “மன உறுதி” பற்றி சிலாகிக்கப்பட்டது (ஜெய்ப்பூர் விஷயத்தில் இரண்டு நாள் தாமதமானாலும், தவறாமல் ஊடகங்கள் இந்த சடங்கை செய்துவிட்டன). ஆனால் குஜராத் கலவரங்களில் பாதிக்கப் பட்ட, மன உறுதி மிக்க முஸ்லிம்களின் “காயங்கள்” “வடுக்கள்” வலிகள்” எல்லாம் அப்படியே ஆறவைக்கப் படாமல் வருடங்கள் கழித்தும், சம்பந்தமில்லாத நேரங்களிலும் மீண்டும் மீண்டும் நினைவு படுத்தப் படும். என்னே ஊடகங்களின் நடுநிலைமை, மதச்சார்பின்மை!

இதற்கு நடுவில் அரசு இதில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக சொல்லியதை அடுத்து, ராஜஸ்தானில் சிதைகள் வெந்து முடிப்பதற்கு முன்பாகவே, அண்டை நாடுகளுடனான உறவு பற்றி சர்ச்சை ஆரம்பித்து விட்டது. ஒரு தொலைக் காட்சி சேனலில் பேசிய வெளியுறவுத்துறை நிபுணர் ஜி.பார்த்தசாரதி, “அண்டை நாடுகளை விடுங்கள். கடந்த 3-4 வருடங்களில் நடந்த எல்லா குண்டுவெடிப்புகளிலும் இந்திய ஜிகாதிகளின் பங்கு தெளிவாக உறுதிசெய்யப் பட்டிருக்கிறது. நாம் அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கினோம்? இஸ்லாமிஸ்ட் ஜிகாதி தீவிரவாதத்தால் நம்மை விட மிகக் குறைவாக உயிர்களை இழந்த யு.எஸ், யு.கே, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் மிகமிகக் கடுமையான தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்களை இயற்றியிருக்கின்றன, குற்றவாளிகளைத் தண்டிக்கின்றன. தீவிரவாதத்தை ஒடுக்க என்று தனிப் படைகளையே அமைத்திருக்கின்றன. இது ஒன்றையுமே செய்யாத நாம் புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?” என்று கேட்டார். மிக நியாயமான கேள்வி.

சமீபத்திய குண்டுவெடிப்புகள் அனைத்திலும், பங்களாதேஷ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஹுஜி அமைப்பின் பெயர் முக்கியமாக அடிபடுகிறது. சிட்டகாங் மற்றும் இன்னும் சில நகரங்களில் ஜிகாதி தீவிரவாத முகாம்கள் இயங்குவதை இந்திய அரசே உறுதி செய்திருக்கிறது. இந்தியாவால் உருவாக்கப் பட்ட இந்த சிறிய நாடு இப்போதைய முக்கியமான ஜிகாதி தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்று. இது போக பங்களாதேஷ் எல்லைப் புற ஊடுருவல் மூலமும், ஆயிரக் கணக்கான திரைமறைவு ஜிகாதிகள் ஏற்கனவே இந்தியாவின் பல நகரங்களில் மையம் கொண்டுள்ளனர். ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளில் இவர்கள் சிலரின் பங்கும் உள்ளதாகக் கூறப் படுகிறது. இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும்போது ஏன் இந்தியா விமானத் தாக்குதல் நடத்தி பங்களாதேஷில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்கக் கூடாது? ஆற்றாமையுடன் நண்பர் ஒருவர் சொன்னார்: "Sword Fish என்ற படத்தில் ஜான் ட்ரவோல்டாவின் வசனத்தை இங்கே நினைவுகூர்கிறேன் - அவர்கள் இங்கே ஒரு விமானத்தை கடத்தினால் அங்கெ சில விமான நிலையங்கள் அழியவேண்டும். அவர்கள் இங்கே இரண்டு கட்டிடங்களை அழித்தால் நாம் அங்கே சில நகரங்களை அழிக்கவேண்டும்"
ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து அழித்த அமெரிக்கப் படைகள் தாலிபான்களைத் துரத்தி அழித்ததையும், 2002ல் நடந்த 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க மண்ணில் இன்றுவரை ஒரு தீவிரவாதத் தாக்குதல் கூட நடக்கவிலை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் ரேடார் திரையில் இல்லாத “மென்மையான இலக்கு”களை (soft targets) ஏன் தீவிரவாதிகள் தாக்குகிறார்கள் என்று பரிதாபமாகக் கேட்கிறார்கள். தீவிரவாதிகள் என்ன கேனையர்களா? இத்தகைய இலக்குகள் மீது தேர்ந்தெடுத்து அடிக்கடி தாக்குதல் நடத்துவது அவர்களுக்கு மிஅக் சாதகமான விஷயம் என்கிறார் பாதுகாப்பு நிபுணரும், ஓய்வுபெற்ற “ரா” அதிகாரியுமான பி.ராமன். சிறு நகரங்களில், குறைந்த அளவு ஜிகாதிகளை வைத்து எளிதாக ஒரு குழுவை உருவாக்கி செயல்படுத்துவது மிக எளிது. இந்தியா முழுக்க வர்த்தகம், சுற்றுலா, கல்வி இவற்றுக்குப் பெயர்போன பல சிறு நகரங்கள் உள்ளன என்பதால் இத்தகைய தாக்குதல் விளைவிக்கும் சமூக, பொருளாதார அதிர்ச்சிகளும் கடுமையாகவே இருக்கும்.




எனவே அரசு மிக உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், உடுமலைப் பேட்டையிலும், உடுப்பியிலும், குண்டூரிலும், நாசிக்கிலும் என எதிர்பாராத இடங்களில் எல்லாம் ஜிகாதிகள் தாக்குதல் நடத்தப் போவது உறுதி. மக்களின் உயிருக்கு உத்தரவாதம் தராத அரசு நீடிப்பதில் அர்த்தமில்லை, அது அகற்றப் படவேண்டும்.

வரும் தேர்தலில் ஜிகாதி தீவிரவாதம் தான் இந்தியாவின் தலையாய பிரசினையாக இருக்கவேண்டும். இருக்குமா? ஜிகாதிகளுக்கு நேர்முக, மறைமுக ஆதரவு அளிக்கும் அரசியல் கட்சிகள் மக்களால் கடுமையாகத் தண்டிக்கப் படுமா? அல்லது வீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா?

Sunday, April 27, 2008

திருவாசகம், குரான், தீவிரவாதம்: ஒரு கடிதம்

அன்புள்ள பா.ரா,
Fitna - தேவையற்ற அச்சுறுத்தல் பதிவில் ரொம்ப அப்பாவியாக இப்படி சொல்கிறீர்கள் -

// பிற கடவுள்களை வணங்குவோரைச் சுட்டிக்காட்டி மாணிக்கவாசகர் கலவரப் பீதியைத் தூண்டுவதோ நமக்கு ஒரு பொருட்டில்லையென்றால் மேற்படி சூராக்களையும் நாம் பெரிய அளவில் பொருட்படுத்தத் தேவையில்லை. //

தேவையில்லை தான்.. இஸ்லாம் என்கிற மதம் தான் சென்றவிடமில்லாம் பெரும் படுகொலைகளையும், பேரழிவுகளையும் *மதத்தின் பெயரால்* செய்யாமலே இருந்திருந்தால். அது *இன்றும்* தொடர்ந்து நடக்காமல் இருந்திருந்தால்.. போர் நடக்கும் ஈராக்குக்கு அடுத்தபடியாக, இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு அதிக குடிமக்களை பலிகொடுத்திருக்கும் ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டு கொஞ்சம் கூட உணர்ச்சியில்லாமல் எப்படி சுவாமி உங்களுக்கு இப்படி எழுத வருக்கிறது?

சொற்கள் மட்டும் ஒரு கருத்தியலின் தாக்கத்தைத் தீர்மானிப்பதில்லை.. ஒரு மனிதன், மதம், சமூகம் அந்தச் சொற்களை உள்வாங்கித் தங்கள் வாழ்க்கையையும், அமைப்புகளையும் கட்டமைக்கும் விதமே அவற்றின் நடத்தையையும், செயல்முறைகளையும் தீர்மானிக்கிறது. "அஞ்சுமாறே" என்பதற்கும் "மாண்டனர்" எனபதற்கும் "அழிந்து போகிறான் (விநஷ்யதி)" என்பதற்கும் திருவவசகத்திலும், ராமானுஜ நூற்றந்தாதியிலும், கீதையிலும் அர்த்தமே வேறு. இந்த நூல்களின் தளமே வேறு. அது சுத்த ஆன்மிகம். இவை காஃபிர்களைக் கண்ட இடங்களில் கொல்லப் போகிற முஃமீன்களான "நம்பிக்கையாளர்கள் கூட்டத்திடம்" பேசவில்லை. ஒரு தனிமனிதனின், ஆன்ம சாதகனின் மனத்துடன் பேசுகின்றன. இதுவும் உங்களுக்குத் தெரியாததல்ல. மேலும், இந்த நூல்களினால் எத்தனை பாதகர்கள் உருவாகியிருக்கிறார்கள்? எத்தனை இனப்படுகொலைகள் நிகழ்ந்துள்ளன? வரலாற்று அறிஞரே, தயவு செய்து ஆதாரங்கள் தாருங்கள்.

ஆனால், இஸ்லாமின் ரத்தம் தோய்ந்த வரலாறு பற்றி வில் டுராண்ட் (அவரது பிரபலான மேற்கோளை மடல் முடிவில் தந்திருக்கிறேன்) முதல் இன்றைய கொய்ன்ராட் எல்ஸ்ட் வரை ஏராளமான வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இன்றைய செய்தி ஊடகங்களும், அப்பட்டமாக நமக்கு இவற்றை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. இப்படியிருக்கும்போது "அந்தளவுக்கு அவர்கள் அடக்குமுறைக்கும் ஆதிக்கத்துக்கும் உட்பட்டிருக்கிறார்கள் என்பது தவிர எனக்கு வேறு காரணம் தெரியவில்லை" என்று ஜல்லியடிக்கிறீர்களே.. மத்தியக் கிழக்கு சரி, மற்ற நாடுகளின் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு என்ன காரணம்?

பாகிஸ்தானிய, வங்கதேச இந்துக்கள் சந்தித்த அடக்குமுறை, ஆக்கிரமிப்புக்கள், கற்பழிப்புக்கள் கொஞ்சமா? நஞ்சமா? இத்தனைக்கும் இஸ்லாமிய ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு எந்தக் கலகமும் செய்யாமல், அதற்கு அடிபணிந்த வாழக் கூட இணங்கியவர்கள் அவர்கள். அவர்களை இன அழிப்பு செய்து, அவர்கள் சொந்த மண்ணை விட்டுத் துரத்திய இஸ்லாமிய" அராஜகத்திற்கு என்ன காரணம்?? இந்த குரானிய சூராக்கள் என்பதைத் தவிர?

"புவியிலோரிடம்" போன்ற அற்புதப் படைப்பைத் தந்த நீங்கள், மனச்சாட்சியையும், முதுகெலும்புகையும் கழற்றிவைத்துவிட்டு எழுதியிருக்கிறீர்கள்.

வேதனையுடன்,
ஜடாயு

வில் டுரான்ட் தனது “நாகரீகங்களின் வரலாறு” என்ற நூலில் கூறுகிறார் “இந்தியாவை இஸ்லாமியர்கள் கைப்பற்றியது தான் உலக சரித்திரத்திலேயே அதிக அளவு ரத்தக்கறை படிந்த கதையாக இருக்கும். அது எவரையும் நிலைகுலையச் செய்யும் கதை. அதிலிருந்து தெளிவாகப் புரியும் பாடம் என்னவென்றால், கலாசாரம் என்பது ஒரு பெருமதிப்புள்ள பொருள். அதன் சிக்கலான, நுட்பமான ஒழுங்கும், சுதந்திரமும் வெளியிலிருந்து ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் அவர்கள் மூலம் உள்ளிருந்தே பல்கிப்பெருகுபவர்கள் என்ற இருவகைக் காட்டுமிராண்டிகளாலும் எந்நேரமும் தகர்த்தெறியப் படும் அபாயம் இருக்கிறது”.

“...the Islamic conquest of India is probably the bloodiest story in history. It is a discouraging tale, for its evident moral is that civilization is a precious good, whose delicate complex order and freedom can at any moment be overthrown by barbarians invading from without and multiplying from within “
- Will Durant in “History of Civilization

Tuesday, February 19, 2008

கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தத் தடை!

பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினக் கதகதப்பில் தமிழகத்தின் இளவட்டங்கள் திளைத்துக் கொண்டிருக்கையில், இதே நாளில், 1998ஆம் ஆண்டு கோவை மாநகரில் இஸ்லாமிய ஜிஹாதி வெறியர்களின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த 58 அப்பாவித் தமிழர்களுக்காகக் கண்ணீர் சிந்த, அஞ்சலி செலுத்த ஒரு சிறு கூட்டம் கோவை நகரில் இந்து அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டு அனுமதி கோரப்பட்டது. இந்த அமைதியான கூட்டத்திற்குக் காவல் துறை அனுமதி மறுத்து விட்டது.

இருப்பினும் அஞ்சலி செலுத்தியே தீருவோம் என்ற உறுதியுடன் மாநகரில் முதல் குண்டு வெடித்த இடத்தில் சாலையிலேயே அமர்ந்து விட்டனர் பாஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அஞ்சலி செலுத்த வந்திருந்தவர்கள். காவல்துறை 462 பேரைக் கைது செய்தது.

ஜிஹாதி தீவிரவாதத் தாக்குதலில் தங்கள் குடிமக்களை இழந்த மும்பை, தில்லி, லண்டன், நியூயார்க், மாட்ரிட் ஆகிய நகரங்களில் பொதுமக்கள் வருடாவருடம் மறைந்தவர்களுக்காகக் கண்ணீர் சிந்தியும், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவோம் என்று உறுதிபூண்டும் இத்தகைய தினங்களை அனுசரிக்கின்றனர். அரசு அதிகாரிகளும் இவற்றில் பங்கேற்கின்றனர்.

ஆனால் தமிழக காவல்துறை அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு அனுமதியும் மறுத்து, பின்னர் அவர்களைக் காரணம் எதுவும் கூறாமல் கைதும் செய்திருக்கிறது. தமிழக அரசின் இந்த மனித விரோத, அராஜக நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது.

அங்கே இறந்தவர்கள் தமிழர்கள் தானே? இந்த நாட்டின், இந்த மாநிலத்தின் குடிமக்கள் தானே? அவர்களது நினைவை அவமதித்து, இழிவு செய்யும் இந்த ஜிஹாதி ஆதரவு அரசை இதற்காகக் கண்டிக்கும் குறைந்த பட்ச மானம், ரோஷம், மனிதாபினம் கூடவா இல்லாமல் போய்விட்டதா தமிழக பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும்?? வெட்கப் படவேண்டிய விஷயம்.

Thursday, February 07, 2008

அத்வானி, சானியா அச்சுறுத்தல்கள்: நம் அடிப்படை உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவால்

இந்த வாரம் இந்தியாவின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் இரண்டு பெரிய அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன.

பா.ஜ.க தலைவர் அத்வானி உள்நாட்டு பாதுகாப்பு, தீவிரவாதத்தை நேர்கொள்வதில் இப்போதைய அரசின் தோல்விகள் இவற்றை முன்னிறுத்தி நாடு முழுவதும் 13 இடங்களில் பேரணிகள் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து தற்கொலைப் படைத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல விதங்களிலும் அவரது உயிருக்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உயிருக்கும் ஆபத்து இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அறிவித்தார். இது வழக்கமான எச்சரிக்கை மட்டுமல்ல, உளவுத்துறையால் உறுதி செய்யப்பட்ட தகவல் என்பதால் பா.ஜக இந்தப் பேரணிகளை தீவிர மறுபரிசீலனை செய்யவேண்டும், தேவைப்பட்டால் ரத்து செய்யவும் வேண்டும் என்று எடுத்துரைக்கப் பட்டது. மோடி மற்றும் அத்வானிக்கு அளிக்கப் படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் படும் என்றும் செய்திகள் கூறுகின்றன.

அரசுத்துறையின் தகவல்கள் உண்மையாகவே இருக்க வேண்டும். பாஜக பேரணியை மத்திய அரசு குலைக்கப் பார்க்கிறது என்று சில கட்சித் தலைகள் பேசும் அற்ப அரசியலை ஒதுக்கி விடலாம். ஆனால் இதன் மூலம் அத்வானி மேற்கொண்டிருக்கும் பிரசாரம் எந்த அளவுக்கு அத்தியாவசியமானது, உண்மையானது என்பது நிரூபிக்கப் பட்டு விட்டது. இந்த தேசத்தின் இறையாண்மை, சுதந்திரம், முன்னேற்றம் இவற்றின் மீது விடாமல் போர்தொடுத்து வரும் ஜிகாதி தீவிரவாதத்தை எதிர்த்து பிரசாரம் செய்வது என்பதே அபாயகரமான செயலாக ஆகிவிட்டிருக்கிறது. அதுவும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்கள் என்ன செய்ய முடியும்?

முட்டாள் தனத்திற்காக ஒரு சாராரால் கேலிசெய்யப் பட்டாலும் “நாம் அவர்களை சாம்பலாக்குவோம்” (We will smoke ‘em out) என்று தீவிரவாதிகளுக்கு முஷ்டியை மடக்கிக் காட்டி அதைச் செய்தும் காட்டும் கௌபாய் ஜார்ஜ் புஷ் போன்ற துணிவும், உறுதியும் வாய்ந்த அரசியல் தலைமை நமக்கு வாய்க்கவில்லை தான். அதற்காக விதியை நொந்துகொள்வோம். ஆனால் இந்த பலகட்சி, பல கொள்கை ஜனநாயக நாட்டில், ஜிகாதி தீவிரவாதத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே உண்டாக்கி, அதை ஒரு அரசியல், தேர்தல் பிரசினையாக்குவதற்குக் கூட முதல் கட்டத்திலேயே முட்டுக்கட்டை போடும் அளவுக்கு இந்த தீவிரவாத வலைப்பின்னலின் ஊடுருவல் இருக்கிறது என்பது வெட்கக் கேடான விஷயம்.

இந்திய விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த “பெங்களூர் ஓபன்” போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று டென்னிஸ் இளம்புயல் சானியா மிர்சா அறிவித்து ஒரு பெரிய குண்டைப் போட்டிருக்கிறார். இது மட்டுமல்ல, இனிமேல் இந்தியாவுக்காக வெளிநாடுகளில் விளையாடுவேன், இந்தியாவில் எங்குமே தைரியமாக விளையாடுவதற்கான சூழல் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

டென்னிஸ் வீராங்கனைகளுக்கே உரிய கச்சிதமான பாவாடையை அவர் அணிவது இஸ்லாமுக்கு எதிரானது என்று லக்னோவிலிருந்து லாலாபேட்டை வரை ஒரு முல்லா, மௌல்வி விடாமல் பிரசாரம் செய்து முடித்தாயிற்று. இந்த “ஹராமை” அவர் தொடர்ந்து செய்து வருவதற்கு எதிராக பல ஃபத்வாக்களும் விடப் பட்டிருக்கின்றன. அவர் போகுமிடங்களில் எல்லாம் இது பற்றிக் கேள்விகள் கேட்கப் பட்டு அவரை சங்கடத்திலும், அசௌகரியத்திலும் ஆழ்த்துகிறார்கள். இது போதாதென்று ஹைதராபத் மசூதி ஒன்றின் பின்னணியில் அவர் ஒரு விளம்பரப் படத்தில் நடித்தார் என்பதற்காக அவர் மீது வழக்குகள், மிரட்டல்கள். (அந்தப் புகைப் படத்தைப் பார்த்தால் அதில் மசூதி எங்கோ தூரத்தில் இருக்கிறது - அதற்கே இந்தக் கூப்பாடு). இந்த முரடர்கள் விளையாட்டு மைதானத்தில் வந்து ஏதாவது பைப் குண்டுகளை வீசி எறிந்து விட்டால் என்ன செய்வது என்று சானியா உண்மையிலேயே கவலைப் படுவதாகத் தெரிகிறது.




இத்தனைக்கும் சாதாரண முஸ்லீம்கள் சானியா போன்று ஒரு துடிப்பான, அழகான விளையாட்டு வீராங்கனையை தங்கள் ‘icon” ஆக நினைப்பதில் பெருமைப் படுகிறார்கள். பல முஸ்லீம் கடைகள், வாகனங்கள், நிறுவனங்களில் அவரது குறுகுறு எழில்முகத்தை ப்ளோ அப்களில் பார்க்கிறேன். இத்தகைய வெகுஜன அங்கீகரித்தல்கள் தரும் தைரியத்தை விட சில முட்டாள் முல்லாக்களின் பயமுறுத்தல்களும், அவற்றை நிறைவேற்றும் தீவிரவாத குழுக்களும் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீராங்கனையை முடக்கிப் போடும், நசுக்கும் அவலம் இந்த நாட்டில் நிகழ்கிறது.

அயன் ராண்ட் தமது Atlas Shrugged நூலில் ஒரு சுவாரசியமான கற்பனையை முன்வைக்கிறார். திறமைசாலிகள், சாதனையாளர்கள், பெரும் கனவுகளைக் காண்பவர்கள் (dreamers of dreams) தங்கள் திறனும் ஊக்கமும் முடக்கப் படும் சூழலில், அதை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தால் என்ன ஆகும் என்று. சாதனையாளர்களை நசுக்கும் தேசம் அவர்களால் புறக்கணிக்கப் பட்டு, பாழ்படும்.

நேற்று பிப்ரவரி-6 புதன் அன்று ஜபல்பூரில் அத்வானியின் முதல் பேரணி நடந்து முடிந்திருக்கிறது. பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சலை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை என்பது உள்ளிட்ட பல கேள்விகளோடு இந்தப் பிரசாரம் தொடங்கியிருக்கிறது. அத்வானியின் அனைத்துப் பேரணிகளும் சில தேதி மாற்றங்களுடன் முன்பு அறிவிக்கப் பட்ட படியே திட்டமிட்ட எல்லா இடங்களில் நடைபெறும் என்ற அறிவிப்பு இந்த இருளில் ஒரு ஒளிக்கீற்றாக வந்திருக்கிறது.

இதே போன்று சானியாவும் தன் முடிவை மாற்றிக் கொள்வாரா? சானியாவின் உரிமைகள் நிலைநாட்டப் படுவது இந்த சுதந்திர நாட்டின் முதன்மையான கடமை.

Thursday, August 30, 2007

..இன்னொரு மிதவாத தமிழ் முஸ்லீமின் முகத்திரை கிழிகிறது

முத்தமிழ் குழுமத்தில் நடந்து வரும் இந்த விவாதத்தை தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது..

விஷயம் இதுதான். தான் எழுதிய பதிவில் இடி அமீன், ஒசாமா பின் லேடன் இவர்களை "அவன்" என்று குறிப்பிட்டு செல்வன் எழுதியிருந்தார். உடனே அங்கிருந்து வந்தார் பழைய கிரிக்கெட் வர்ணனை புகழ் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் ஐயா.

".. இடி அமீன், ஒசாமா பின் லதெயின் என்கிற பெயர்கள் வந்ததோ தொலைந்தது. "அவன்" இவன் என்று ஒருமையில் ஆரம்பித்து விடுவார்கள். யாராக இருக்கட்டுமே ஏன் இந்தப் பண்பாட்டுச் சீர்கேடு ?"

செல்வன் விடுவாரா? இப்படி எழுதினார் -

தீவிரவாதியை அவன்,இவன் என்று எழுதாமல் அவர்,இவர் என்றா எழுத முடியும்?:-).
சந்தன கடத்தல் வீரப்பனை அவன்,இவன் என்று தான் எழுதுகிறோம்<
http://thatstamil.oneindia.in/news/2000/09/06/return.html>..நம்பலைன்னா சுட்டியை பாருங்க:)
பங்க் குமாரை அவன் இவன் என்று தான் எழுதுகிறோம். நம்பலைன்னா அதுக்க்கும் சுட்டி<
http://thatstamil.oneindia.in/news/2006/12/13/latika.html> இதோ
முட்டை ரவியை அவன் இவன் என்று தான் எழுதறோம். சுட்டி<
http://thatstamil.oneindia.in/news/2006/10/22/rowdy.html>
இதை விட மோசமா எருமைன்னெல்லாம் <
http://holyox.blogspot.com/2006/10/202.html> பண்டிதர்கள் சிலரை எழுதிருக்கேன்..:-))
நாவிதர் <
http://holyox.blogspot.com/2007/08/324_23.html> அப்படின்னு மரியாதையா தான் இதுவரை எழுதிருக்கேன்.
ஆனா பின்லேடனை எல்லாம் அவர் இவர்ன்னு எழுத சொல்லாதீங்க...அவனை அவன்,இவன்னு எழுதறதே ஜாஸ்தி மரியாதையோன்னு தோணுது:-))


ஜப்பார் ஐயாவுக்கு உள்ளுக்குள் பயங்கர கோபம் போலிருக்கிறது - எழுதுகிறார் -

"... அமெரிக்கா செய்யும் கொடூரங்களையும், அநியாயங்களையும், அக்கிரமங்களையும் நிங்கள் நியாயமானவைதான் என்று வாதிட்டால், நியாயப் படுத்தினால், ஒசாமா பின் லதைனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். அமெரிகக அக்கிரமங்களுக்கு ஆப்பு வைக்கும் ஒரே ஆண்பிள்ளை ஒசாமா என்று அரேபியாவில் சொல்கிரார்கள். அரேபிய அரச குடும்பத்தை விட செல்வத்திலும் செல்வாக்கிலும் உயர்ந்த குடும்பம் பின் லதைனின் குடும்பம் என்றும் அங்கே குறிப்பிடுகிரார்கள். "

அப்படிப் போடுங்க அரிவாள ! முதலில் இவர் எழுதியதைப் படித்ததும் ஜப்பார் ஐயா எல்லாருக்கும் மரியாதை குடுக்கச் சொல்றாருப்பா என்ற எண்ணம் தான் இயல்பாகத் தோன்றியது. மேலே உள்ளதைப் படித்ததும் தான் இவரது உண்மையான நோக்கம் தெரியவருகிறது.

உண்மையில் இவருக்கு வந்த கோபம், முட்டை ரவி, பங்க் குமார் ரேஞ்சுக்கு செல்வன் ஒசாமாவை தாழ்த்திவிட்டார் என்பது தான்.. பாவம் அதைச் சொல்லவேண்டாம் என்று நினைத்தாலும் வந்து விட்டது! அதுவும் பாருங்கள், அந்த லதைன் என்ற அரபி உச்சரிப்பு பிசகாமல் தன் ஹீரோ பெயரை எழுதியிருப்பதை

இந்தியாவை எதிரி நம்பர்-2 என்று வெளிப்படையாக அறிவித்த இந்த இஸ்லாமிஸ்ட் தீவிரவாதி மீது என்ன பரிவு, என்ன மரியாதை ! இவருக்கும் தங்கள் வீடுகளில் பின் லேடன் படத்தை வைத்திருக்கும் ஹைதராபாத் ஜிகாதி ஆதரவாளர்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் இல்லத்தில் வைத்திருக்கிறார்கள், இவர் இதயத்திலேயே வைத்திருப்பார் போல.

இந்த கடைந்தெடுத்த தேசத்துரோகத்தை கண்டுகொள்ளாமல், கண்டனம் செய்யாமல் வழக்கம் போல கும்மி அடித்து காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் அந்த குழுமத்தில். முற்றிப் போன திம்மித் தனம் !

ஜப்பார் சொல்கிறார், அமெரிக்காவை எதிர்த்து போராடும் ஆண்பிள்ளை ஒசாமா என்று.

அமெரிக்காவைவிட அதிகமாக குழந்தைகளை சூடானில் இஸ்லாமிஸ்டுகள் கொல்வதோ அல்லது சதாம் விஷவாயுவிட்டு கொன்றதோ இவர்கள் கண்களுக்கு தென்படவில்லையா? அதே போன்று ஒரு கற்பழிப்பை கண்டு காஷ்மீரிலும், ஈராக்கிலும் கொதிப்பார்கள் - இங்கே அப்படிச் செய்பவர்களுக்கு அரசு தண்டனை வழங்குவதும், பொதுநலமிகள் போராடுவதும் அவர்கள் கண்ணுக்கு தென்படாது.

ஆனால், சூடானில் கற்பழிக்கப்படும் கறுப்பின இஸ்லாமியப் பெண்கள், ஆஃப்கானிஸ்தானில் முஜாஹித்தீன்களால் கற்பழிக்கப்படும் இஸ்லாமியப் பெண்கள், சதாமின் சேனையினால் கற்பழிக்கப்பட்ட ஷியா, குர்து பெண்கள் - இந்த விஷயங்களெல்லாம் இவர்கள் கண்களிலேயே படாதா?

இந்த ஒசாமா இன்று தான் அமெரிக்காவை எதிர்த்து போரிடுகிறார். நேற்று ரஷ்யாவை எதிர்த்து போர் புரிந்தார். இன்று இவர்கள் அமெரிக்கா குழந்தைகளை கொல்கிறது என்று வாதிடுவார்கள். அப்போது நேற்றே ஒசாமா தீவிரவாதிதானே? சரி, ரஷ்யாவும் ஆஃப்கானியர்களை கொன்றது, ஆக்கிரமித்தது என்று வைத்துக்கொண்டால், அதே போன்று சதாம் ஹுசைன் குவைத்தை ஆக்கிரமித்தானே அப்போது எங்கே போனார் - உயர்குல வீரர் ஒசாமா பின் லதைன்?

ஒரு மதவெறியனை, பயங்கரவாதியை, மனித மிருகத்தை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் ஜப்பாரை தட்டிக் கேட்காதது மட்டுமல்ல, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் தமிழர்களைச் சொல்லவேண்டும்....

வேறு யாரை நொந்து கொள்வது நாம்?

Monday, August 27, 2007

ஹைதராபாத் குண்டுவெடிப்புக்கள்: தெற்கின் ஜிகாதி தீவிரவாத கொடுக்குகள்

ஹைதராபாத் போகும்போதெல்லாம் ஹுசைன் சாகர் ஏரிக்கும், பக்கத்தில் உள்ள லும்பினி பூங்காவிற்கும் சென்றிருக்கிறேன். அட்டகாசமான அந்த லேசர் காட்சிகளில் நகரின் பல புராதன பெருமைகளையும் சொல்லி, கடைசியில் எப்படி எல்லா மதங்களும் அமைதியாக வாழும் நகரம் ஹைதராபாத் என்று ஒரு செக்யுலர் பஜனை உண்டு. ஆனால், பிரிவினையின் போதே ஹைதராபாத் முஸ்லீம்கள் பாகிஸ்தானில் சேரத்துடித்து அப்துல் ரசாக் தலைமையில் வன்முறையில் இறங்கியதும் சர்தார் படேல் அவர்களின் உறுதிமிக்க ராணுவ நடவடிக்கையால் அவர்கள் அடக்கப் பட்டதுமான அதி முக்கியமான சரித்திர சம்பவம் இந்த லேசர் காட்சிகளில் கிடையாது..

இந்த வாரக்கடைசியில், வேண்டுமென்றே இருட்டடிக்கப் பட்ட அதே ஜிகாதி இஸ்லாமியத் தீவிரவாதத்தின் அதே கோர முகம் அதே பூங்காவிலும், நகரத்தின் வேறு சில பகுதிகளிலும் 53க்கும் மேற்பட்ட மனித உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது.

வழக்கம் போல வாழ்க்கையின் வாரக்கடைசி குதூகலங்களுக்காக பூங்காவிற்கும், உணவகங்களுக்கும் ஓடும், சட்டத்த்தை மதித்து வாழ்ந்த, உழைத்து உண்ணும் மனிதக் கூட்டத்தின் உயிர்கள் இந்த மதவெறி மிருகங்களின் கோழைத்தனமான தாக்குதலில் சிதறடிக்கப் பட்டிருக்கின்றன. உயிரிழந்தவர்களின் ஆன்மா அமைதியடையட்டும். அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இஸ்லாமிய தீவிரவாதம் ஹைதராபத்திற்குப் புதிதல்ல. லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஹர்கத்-உல்-ஜிஹாட்-அல்-இஸ்லாமி (HuJi) அமைப்புகள் உள்ளூர் முஸ்லீம்கள் மத்தியில் அன்றாடம் புழங்கும் சமாசாரம் என்று தன்னிடம் கூறப்பட்டதாக பாதுகாப்பு நிபுணர் பி.ராமன் இந்தக் கட்டுரையில் கூறுகிறார். அவர் மேலும் தரும் தகவல்கள் -

".. ஹைதராபத்தில் ஏராளமான முஸ்லீம்கள் வீடுகளில் ஒசாமா பின் லேடன் மற்றும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரப் படங்களை மாட்டி வைத்திருக்கிறார்கள். ஜார்ஜ் புஷ் இந்த நகரத்திற்கு வந்த போது மிகப் பெரிய அளவில் எதிர்ப்புகள் இருந்தன - எதிர்ப்பாளர்கள் பின் லேடன் படங்களை ஊர்வலத்தில் எடுத்துச் சென்றார்கள். வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீன் மீது பட்டப் பகலில் கொலைவெறித்தாக்குதல் நடத்தும் அளவுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் இங்கு துளிர்விட்டுப் போயிருக்கிறார்கள். இந்தியாவில் நடக்கும் எல்லா தீவிரவாத தாக்குதல்களிலும் ஏதாவது ஒரு ஹைதராபாத் தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது.. 1995-லேயே இங்கு அல்-கொய்தாவின் தலைமறைவு இயக்கங்கள் (sleeper cells) உருவாகி விட்டன"

கொல்லைப் புறத்தில் இவ்வளவு பெரிய ஜிஹாதி தீவிரவாத ஊற்றை வைத்துக் கொண்டு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததும், வழக்கம் போல பங்களாதேஷ், பாகிஸ்தான் தீவிரவாதிகள் இதை செய்திருப்பார்கள் என்று ஆந்திர முதல்வர் வெட்கமில்லாமல் அறிக்கை விடுகிறார். அதே நேரத்தில் உளவுத்துறை குண்டுவெடிப்பில் பயன்படுத்திய வெடிமருந்து நாக்புரில் கடை வைத்திருக்கும் ஹைதரபாத்காரர் சுஹைல் என்பவரது கடையில் இருந்து வந்திருப்பதாக அறிவிக்கிறது... நம் நகரங்களிலேயே இருக்கும் இந்த கொலைகாரர்களை பார்க்க மறுத்து இன்னும் எத்தனை காலம் தான் கண்களை மூடிக் கொண்டிருக்கப் போகிறோம்?

இந்த குண்டுவெடிப்புகள் 2005 தீபாவளிக்கு முன்பு தில்லியில் நிகழ்ந்த சம்பவத்தையே பெரிதும் ஒத்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் வாரங்களில் இந்த நகரில் விமரிசையாகக் கொண்டாடப் படும் முக்கியமான இந்துப் பண்டிகைகளான ரக்ஷா பந்தன் மற்றும் விநாயக சதுர்த்தி விழாக்களைக் குறிவைத்து, இந்தத் தருணத்தில் மக்களை அச்சுறுத்த இந்த குண்டுவெடிப்புகள் நடந்ததாகக் கூறப் படுகிறது. இனிமேல் ஒவ்வொரு வருடமும் எல்லா நகரங்களிலும் முக்கியமான இந்துப் பண்டிகைகளின் போது ஜிகாதி தாக்குதல்கள் திட்டமிடப்படலாம் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

தீபாவளி, பொங்கல் போல ஜிகாதி தீவிரவாதத்தால் இந்தியர்கள் உயிரிழப்பதும் வழக்கமான நிகழ்வாகி வருகிறது. ஜனவர்-2004 முதல் ஆகஸ்டு 2007 வரை உள்ள காலகட்டத்தில் இந்தியாவின் இழப்பு 3674 மனித உயிர்கள் என்று ஆகஸ்டு-27 டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவிக்கிறது. உயிரிழப்பில் போரால் சீரழிக்கப் பட்டிருக்கும் ஈராக்கிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு இந்தியா தான் என்றும் இந்தப் பத்திரிகை கணக்கிட்டிருக்கிறது. தீவிரவாதத்தால் பலியான அமெரிக்கர்களின், பிரிட்டிஷாரின், ஐரோப்பியர்களின் ஒட்டுமொத்த ரத்தத்தை விட அதிகமாக இந்துக்களின் ரத்தம் தான் ஜிகாதி வன்முறைக்கு எதிராக இன்றும் சிந்திக் கொண்டிருக்கிறது.




இப்போது நடப்பது கொடுங்கோலன் ஔரங்கசீப்பின் ஆட்சியோ, கொள்ளையன் தைமூர் படையெடுப்போ அல்ல, ஆனால் சுதந்திர பாரதத்திலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இஸ்லாமிய மதவெறி மிருகங்களின் அதிகபட்ச தாக்குதல்கள் இந்துக்களைக் குறிவைத்தே நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

எவ்வளவு பெரிய அபாயத்தை நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணிப் பாருங்கள். இந்த சவாலை எதிர்கொள்ளத் திராணியில்லாத அரசியல் சக்திகளுக்கு நாட்டை ஆளும் உரிமை இல்லை. இனிவரும் காலங்களில் தீவிரவாதம் தான் இந்தியாவின் தலையாய பிரசினை - அதை உறுதியுடன் நேர்கொள்ளும் அரசியல் சக்திகளுக்கு மட்டுமே தங்கள் உயிர்மீது கொஞ்சமாவது பிரியம் உள்ள இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும்.

Thursday, July 26, 2007

மும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்

1993-ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தி என்னால் மறக்க முடியாத ஒன்று. அப்போது நான் புனே நகரில் பணிபுரிந்து வந்தேன். விநாயக சதுர்த்தியை 10 நாட்கள் சமூக விழாவாக மிக விமரிசையாகக் கொண்டாடும் கலாசாரம் தோன்றிய இடம் புனே. அதனால் நகரின் பல இடங்களில் விழாப் பந்தல்களில் அழகிய கணபதி அலங்காரங்களோடு, அந்தந்த வருடத்தின் முக்கியமான சமூக நிகழ்வுகளைப் பிரதிபலிப்பது போன்று சிறிய, பெரிய கண்காட்சிகள் மாதிரியும் அமைத்திருப்பார்கள். அந்த வருடம் எல்லாப் பந்தல்களிலும் ஒரே ‘தீம்’ தான் : மும்பை குண்டுவெடிப்புகள், அதற்கான சதித்திட்டம், அதில் ஏற்பட்ட மரணங்கள், மனித சோகங்கள். இவற்றை கோட்டோவியங்களாகவும், பொம்மைகளாகவும், வாசகங்களிலும் வெளிப்படுத்தியிருந்தார்கள். மரணமடைந்தவர்களின் ஆத்மாக்களுக்கு அமைதியும், இந்த பெரும் கொடுமையைச் செய்த தாவூத் இப்ராகீம், டைகர் மேமன் மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு கடும் தண்டனையும் விநாயகர் வழங்குவார் என்பதாகவும் சில காட்சிகள் இருந்தன.

அந்த வருடம் மார்ச் மாதம் ஒரே நாளில் 12 இடங்களில் நடத்தப் பட்ட இந்த குண்டுவெடிப்புகள் 257 அப்பாவி மக்களின் உயிர்களைப் பலிகொண்டு, இன்னும் 800 பேரைக் காயப் படுத்தி அவர்கள் வாழ்க்கையை நாசம் செய்ததோடல்லாமல், நாட்டின் பொருளாதாரத் தலைநகரையே ஸ்தம்பித்து செயலிழக்கச் செய்தன.

14 ஆண்டு கால நீதிமன்ற வாசத்திற்குப் பின் இந்த வழக்கில் தீர்ப்புகள் இப்போது வரத் தொடங்கியிருக்கின்றன. மாஹிம் மீனவர் குப்பம் பகுதியில் கையெறி குண்டுகளை வீசி எறிந்து 3 பேர் இறப்பதற்குக் காரணமான 4 தீவிரவாத அடியாட்கள் உள்ளிட்ட 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. இவர்களில் ஒருவரான முகமது யூசுஃப் ஷேக் மத்திய மும்பையில் ஒரு ஸ்கூட்டர் நிறைய 15 கிலோ வெடிகுண்டுகளை நிரப்பி நிறுத்தியிருந்தார் – தெய்வாதீனமாக அவை வெடிக்கவில்லை. இருப்பினும், இந்த சமூக விரோத சதித்திட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததற்காக அவருக்கு அளிக்கப் பட்ட தண்டனை நியாயமானது தான் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கோடே குறிப்பிட்டுள்ளார்.

ஆயுள் தண்டனை வழங்கப் பட்டிருக்கும் 16 குற்றவாளிகளில் ஒருவரான சுங்கவரித்துறை அதிகாரி சோம்நாத் தாபா, ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் கடற்கரை வழியாக மும்பை நகரத்துக்குள் கடத்திக் கொண்டு வரப் பட்டதற்கு உடந்தையாக இருந்ததற்காக மரணை தண்டனை வழங்கப் படவேண்டியவர் எனினும் அவர் புற்றுநோயால் அவதிப் படுவதன் காரணமாக இது ஆயுள் தண்டனையாக்கப் பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானுக்குச் சென்று அங்குள்ள ஜிகாதி தீவிரவாத முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்ற, இந்தச் சதியின் முக்கிய குற்றவாளியான டைகர் மேமன் தப்பிக்க உதவிசெய்த ஜாகீர் ஹுசைன் ஷேக் உள்ளிட்ட 3 பேருக்கும் மரணதண்டனை வழங்கப் பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆஜர் படுத்தப் பட்ட 100 பேரில் இதுவரை 91 பேருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு தரப்பட்டு விட்டது. மீதமிருக்கும் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கும் இதே போன்ற கடும் தண்டனைகள் தரப்படும் என்று எதிர்பார்க்கலாம். சில குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் 1992 டிசம்பரில் நிகழ்ந்த சர்ச்சைக்குரிய பாபர் மசூதி கட்டிட இடிப்புக்கு பழி வாங்குவதற்காகவே இந்தக் குற்றவாளிகள் குண்டுவெடிப்பு சதியில் ஈடுபட்டதாகவும், அதனால் அவர்கள் தரப்பில் இந்தப் படுகொலைகளுக்கான நியாயம் இருப்பதாகவும் வாதிட்டனர். இத்தகைய வாதங்களை போதிய ஆதாரமில்லாதவை என்று கூறி நீதிபதிகள் முற்றிலுமாக நிராகரித்தனர்.

தண்டனை பெற்றவர்கள் இந்த வழக்கை உச்சநீதி மன்றம் வரை எடுத்துச் சென்று வாதிடும் சாத்தியம் உள்ளது. இருப்பினும், சாட்சிகளும், நிரூபணங்களும் மிக வலுவாக உள்ளதால் உச்சநீதி மன்றம் மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்பையே வழிமொழியும்.

இந்த வழக்கு நடந்து வந்த காலங்களில், மும்பை பொதுமக்களும் சரி, ஊடகங்களும் சரி, இந்தச் சம்பவத்தையும், பாதிக்கப் பட்டவர்களின் சோகங்களையும் மறக்கவில்லை. அவை தொடர்ச்சியாக நினைவூட்டப் பட்டுக் கொண்டே இருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக அனுராக் கஷ்யப் இயக்கிய கறுப்பு வெள்ளி (Black Friday) என்ற குறிப்பிடத்தக்க இந்தித் திரைப்படமும், சில குறும்படங்களும் கூட வெளிவந்தன. 2004, 2005 ஆம் வருடங்களில் ஏற்பட்ட சில சிறு குண்டுவெடிப்புகளும், 2006 ஜூலை மாதம் 200-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்ட ரயில் குண்டுவெடிப்பும், இந்த தீவிரவாதத்தின் கோர முகத்தினை மீண்டும் மும்பை மக்களுக்கு வெளிப்படுத்தின.

இதன் தொடர்ச்சியாக, 1993 குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருந்த 18 முக்கிய குற்றவாளிகளுக்காக வாதாடி வந்த இந்தியாவின் தலைசிறந்த கிரிமினல் வழக்கறிஞர்களில் ஒருவரான நிதீன் பிரதான் அவர்களுக்காக தான் வாதாடப் போவதில்லை என்று ஜூலை 2006ல் வெளிப்படையாக அறிவித்தார். ரிடீஃப்..காம் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் முதலில் மும்பையைச் சேர்ந்த முஸ்லீம் சமூகத் தலைவர்கள் தங்கள் சமூகம் அனியாயமாகக் குற்றம் சாட்டப் படுவதாகக் கூறியதைக் கேட்டு அதில் நியாயம் இருப்பது போலத் தோன்றியதால் அவர்கள் சார்பாக வழக்காட ஒப்புக் கொண்டதாகவும், பின்னர் அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்க முயல்வது தெரியவந்ததும் அதிலிருந்து விலகுவதாகும் கூறினார்.

11 ஜூலை,2006 குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மும்பை பொதுமக்கள் பெருமளவில் திரண்டு அண்மையில் 11 ஜூலை, 2007 அன்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பெரும்பாலான ஆங்கில, இந்தி ஊடகங்கள் இந்த குண்டுவெடிப்பால் சிதறிய கனவுகளையும், தொலைக்கப் பட்ட வாழ்க்கைகளையும் மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தன. இந்த கண்ணீர் அஞ்சலிகளுடன் இதற்காக குற்றம் சாட்டப்பட்ட ஜிகாதி தீவிரவாதிகள் “இந்த கொடுஞ்செயல் செய்ததில் தங்களுக்கு எந்தவிதமான குற்ற உணர்வோ, வருத்தமோ இல்லை” என்று கடுத்த முகங்களுடன் அளித்த வாக்குமூலத்தையும் ஊடகங்கள் தவறாமல் மக்களிடம் கொண்டு சென்றன. இந்த வழக்கும் விரைவில் விசாரிக்கப் பட்டு, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைகள் வழங்கப் படலாம் என்று எண்ணுவதற்கு முகாந்திரம் இருக்கிறது.

இந்தப் பின்னணியில், 1998 கோவை குண்டுவெடிப்பு வழக்குக்கான தீர்ப்புகள் ஆகஸ்டு முதல் தேதி அன்று அறிவிக்கப் படும் என்று செய்திகள் வந்துள்ளன. இது பற்றி விவாதிக்க ஜூலை-27 அன்று ஒரு கூட்டம் நடைபெறும் என்று குற்றம் சாட்டப் பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் சி.அபுபக்கர் கூறியிருக்கிறார்.

1998-ஆம் ஆண்டு, பிப்ரவரி 14-ஆம் நாள் பா.ஜ.க. தலைவர் அத்வானியின் உயிரைப் பறிப்பதற்காகவும், பொதுமக்கள் கூடும் இடங்களில் அவர்களைக் கொலை செய்வதற்காகவும் திட்டமிட்டு நகரின் பல பகுதிகவைக்கப் பட்ட இந்த குண்டுகள் வெடித்ததில் 52 பேர் மரணமடைந்தனர், 200க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 100 கோடிக்கு மேல் சொத்து நாசமடைந்தது. இந்த சதி தொடர்பாகக் கைது செய்யப் பட்ட 166 பேர்களில் பெரும்பாலர் அல்-உம்மா என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள். இந்த சதியின் முக்கிய காரணகர்த்தர்களாக குற்றம் சாட்டப் பட்டு 8 ஆண்டுகளாக்ச் சிறையில் இருப்பவர்களில் கேரளத்தைச் சேர்ந்த அப்துல் நசீர் மதானி மற்றும் தமிழகத்தின் எஸ். ஏ பாட்சா, முகமது அன்சாரி ஆகிய தலைவர்களும் அடக்கம்.

தொழில் நகரமான கோவையின் அமைதிக்குப் பெரும் குந்தகம் விளைவித்த இந்த சம்பவம் நிகழ்ந்தவுடன், அதுவரை இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் முளைப்பதைக் கண்டும், காணாமலும் இருந்த தமிழக அரசும், காவல் துறையும் உடனடியாக செயலில் இறங்கி இந்த இயக்கங்களின் எல்லாத் தொடர்புகளையும் ஆணிவேர் வரை சென்று தீவிரமாக ஆராய்ந்து புலன்விசாரணை செய்து, குற்றவாளிகளைப் பிடித்து, இந்த இயக்கங்கள் செய்திருந்திருக்கக் கூடிய வேறு பல குண்டுவெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாதத் திட்டங்களையும் செயலிழக்கச் செய்தது மிகவும் பாராட்டுக்குரியது. அஸ்ஸாம், மும்பை, தில்லி என்று பல நகரங்களிலும் வலைவீசி குற்றவாளிகள் கைதுசெய்யப் பட்டிருக்கின்றனர். சமீபகால வரலாற்றில், இது போன்று மிகத் துல்லியமாக ஒரு சந்தேக இழையையும் விட்டுவைக்காமல் ஒரு பயங்கரவாதச் சதியில் ஈடுபட்ட அத்தனை பேரையும் கண்டுபிடித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியற்கான உதாரணங்கள் மிகச் சிலவே உண்டு.

ஆனால், இப்படி ஆரம்பித்த இந்த விசாரணை, கால ஓட்டத்தில் மிக மோசமான அரசியல் நிர்ப்பந்தங்களை சந்தித்தது. வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மாற்றல்கள், அவர்களது சில சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் இவை இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின. ஒருவழியாக இந்த ஏப்ரல் மாதம் விசாரணைகள் முடிந்து, இப்போது தீர்ப்ப்புகள் வரப்போகின்றன.

திரும்பிப் பார்க்கையில், கோவை மற்றும் தமிழக மக்கள் மற்றும் ஊடகங்கள் இந்த பயங்கரவாதச் செயலையும், அதன் பின்னணியையும், பற்றி ஒரேயடியாக மற்ந்து விட்டார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது. சிறையில் இருக்கும் தீவிரவாத குற்றவாளிகளுக்கு ராஜோபசாரம் நடப்பது பற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.. மதானிக்கு சிறையில் ஆயுர்வேத மசாஜ், ஸ்பெஷல் கோழிக்கறி இவை வழங்கப் படுவது பற்றிய செய்திகள் வந்தன. கேரள சட்டசபை உறுப்பினர்கள் மதானி என்கிற இந்த குற்றவாளியை தமிழக சிறைகளில் “துன்புறுத்துவதாகவும்” அவரை விடுவிக்கவேண்டும் என்றெல்லாம் கூட கோரிக்கை வைத்தனர். இவ்வளவு சீரியஸான விஷயத்தை எதிர்த்து ஒரு கண்டனம், ஒரு அரசியல் பொதுக் கூட்டம் இங்கு நடத்தப் படவில்லை. மாறாக, சிறைகளில் “துன்புறும்” தீவிரவாதிகளது “மனித உரிமை”களுக்கு வக்காலத்து வாங்கி பொதுக்கூட்டங்கள் நடத்தப் பட்டன. சில முற்போக்குவாதிகள் அவைகளில் சென்று இந்த மனித மிருகங்களுக்கு தங்கள் பரிவையும், கனிவையும் தெரிவித்தனர்.

சட்டத்திற்கு அடங்கி நடக்கும் கோடிக் கணக்கான சாதாரண குடிமக்களின் பாதுகாப்பையும், நலவாழ்வையும் விட தீவிரவாதிகளுக்கு தரப் படும் வசதிகளும், உரிமைகளும் தான் முக்கியமானவையாக அரசும், அறிவுஜீவிகள் சிலரும் கருதும் ஒரு சமூகத்தில் இருக்கிறோம் என்ற உணர்வே பெரும் அச்சமூட்டுவதாக உள்ளது.

இந்த சூழலில் வரப் போகும் கோவை தீர்ப்புகள் மும்பை தீர்ப்புகளை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்று இயற்கையாகவே ஒரு எதிர்பார்ப்பு உருவாகிறது. கோவையைக் கோரமாக்கிய கொடியவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை நீதிமன்றங்கள் வழங்கி, மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

இதில் இன்னொரு சோகம் என்னவென்றால் கோவை குண்டுவெடிப்பில் பாதிக்கப் பட்ட அப்பாவி மக்களின் இழப்புகள், துயரங்கள், வேதனைகள் பற்றிய நினைவுகளோ, பதிவுகளோ தமிழக ஊடகங்களில் பெரிய அளவில் எடுத்துச் சொல்லப் பட்டதாகதவே தெரியவில்லை. சமீபத்தில், “ஜிகாதி வெறிக்கு பலியான தமிழர்” என்ற இந்த வலைப் பதிவில் சுட்டியிருந்த வீடியோ சுட்டிகளைப் பார்க்க நேர்ந்தது.

பக்கத்தில் உள்ள மைதானத்தில் விளையாடச் சென்று, உடல் சிதறி இழந்த மகனைப் பற்றி மீளமுடியாத துயரத்துடன் நினைவு கூறும் தாய். திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற இடத்தில் குண்டு வெடித்ததால் அருமை அண்ணனை இழந்த சகோதரி. மகனையும், அவன் இறந்த சோகத்தால் மறைந்த கணவனையும் பறிகொடுத்து நிற்கும் அபலைப் பெண். இவர்களது வேதனையைப் பார்க்கையில் நெஞ்சு பதறுகிறது. இந்தக் கதி செய்தவர்களை சும்மா விடக் கூடாது, அவர்கள் உடல் சிதறி சாக வேண்டும் என்று ஆற்றாமையில் சாபமிடுகிறார்கள் இந்த அல்லலுற்றவர்கள்.

அந்த கண்ணீருக்குப் பதில் சொல்லும் பொறுப்பு வரப் போகும் நீதி மன்றத் தீர்ப்புகளுக்கு இருக்கிறது.

Wednesday, July 25, 2007

பயங்கரவாதிகள் மீது காட்டும் பரிவால் நிகழவிருக்கும் பின்விளைவுகள்

தீவிரவாதச் செயல்களுக்கு துணணபோனதற்காக குற்றம் சாட்டப்பட்டு ஆஸ்திரேலியாவில் விசாரிக்கப் பட்டு வரும் இந்திய டாக்டருக்காக இந்திய அரசு காண்பித்து வரும் அதீத கனிவும், பரிவும் தேசபக்தர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துவது நியாயமே.

இதன் பின்னணியில் முதுபெரும் எழுத்தாளர் திரு. மலர்மன்னன் அவர்கள் ஜூலை-12, 2007 திண்ணை இதழில்
ஹிந்துஸ்தானத்தின் மீது பயங்கரவாத முத்திரை விழப் போகிறது! என்ற ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையில் கடைசியில் அவர் எடுத்துவைக்கும் வாதம் மிகவும் சிந்தனைக்குரியது -

".. ஹிந்துஸ்தானத்துப் பிரதமரோ, போதிய ஆதாரங்கள் சிக்கியதன் அடிப்படையில் விசாரணைக் கைதிகளாக லண்டனில் வைக்கப்பட்டிருக்கும் ஹிந்துஸ்தானத்து முகமதிய இளைஞர்களின் தாய்மார்கள் அளிக்கும் கண்ணீர்ப் பேட்டிகளைப் பார்த்துத் தாமும் கண்ணீர் மல்க இரவெல்லாம் உறக்கமின்றி உழன்றதாகச் சொல்கிறார். அந்தத் தாய்மார்களுக்கு ஆறுதலும் தைரியமும் அளிக்கிறார். ஹிந்துஸ்தானத்து தூதரகங்கள் அந்த விசாரணைக் கைதிகளின் நலனைக் கவனித்துக் கொள்ளும் என உறுதி கூறுகிறார். இங்கிலாந்தின் பிரதமரிடம் பேசுகிறார். தப்பித் தவறிக்கூட மதத்தின் சாயத்தை இதில் பூசிவிடாதீர்கள் என்கிறார்.

... முஷரப் ஆப்கானிஸ்தானத்துடனான எல்லைக் கோடு நெடுகிலும் கண் காணிப்புக்கும் ஏற்பாடு செய்து, தாலிபான்களின் ஊடுருவலைத் தடுக்க முனைந்துவிட்டார். ஆக, பயங்கர வாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் உறுதியாகவும், ஒரு முகமதிய தேசமாக இருப்பினும் நிர்தாட்சண்யமாகவும், திறமையாகவும் செயல்படுவதாக உலக அரங்கில் நம்பிக்கை பிறக்கிறது. அதே சமயம், ஹிந்துஸ்தானம் முகமதிய பயங்கரவாதிகளிடம் காட்டும் மெத்தனத்தையும் மீறிய பரிவின் காரணமாக, பயங்கர வாத ஆதரவு நாடாகக் கருதும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

உலக நாடுகளுக்கு ஹிந்துஸ்தானத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உள்விவகாரங்கள் பற்றி சரியான புரிதல் ஏதும் இல்லை. புரிந்துகொள்ள வேண்டுமென்கிற அக்கரையும் அவற்றுக்கு இல்லை. எனவே அவற்றின் பார்வையில் பாகிஸ்தான் பயங்கர வாதத்தை ஒடுக்கும் நாடாகவும் ஹிந்துஸ்தானம் பயங்கர வாதிகள் மீது அனுதாபம் கொண்டு சலுகை அளிக்கும் நாடாகவும்தான் தோற்றமளிக்கும்"



இதைத் தொடர்ந்து வந்த பல கேள்விகளுக்கும் பதிலளிக்கும் முகமாக சி.பி.காம் தளத்தில் அவரது இன்னொரு கட்டுரையும் வந்துள்ளது. இதில் திரு. ம.ம அவர்கள் எழுப்பும் கேள்விகளும், வைக்கும் வாதங்களும் இந்தியாவின் தற்போதைய தலையாய சமூக பாதுகாப்பு பிரசினையான ஜிகாதி தீவிரவாத்தை நேர்கொள்வதில் அரசு காட்டி வரும் மெத்தனப் போக்கை தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்துரைப்பதாக உள்ளன. சில துளிகள் -

.. அரசியலுக்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத விளையாட்டு வீரர்களை அராபத்தின் பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் கொன்று குவித்த பிறகும் நமது மைய ஆட்சியாளர்கள் அராபத்தை மார்புறத் தழுவி அவரது பயங்கரவாத இயக்கத்தை ஆதரிக்கத் தவறவில்லை. ஹிந்துஸ்தானம் இந்த மரபினைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது என்கிற செய்தியைத் தமது செயலால் உலக நாடுகளுக்குப் பிரகடனம் செய்து வருகிறார், இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்.

.. ஹிந்துஸ்தானத்தில் அண்மைக் காலத்தில் தோன்றி, உலகம் முழுவதும் சீடர்களைப் பெற்றிருந்த மிகச் சிறந்த சிந்தனையாளரும் தத்துவ ஞானியுமான ஆசாரிய ரஜனீஷ் என்கிற ஓஷோ அமெரிக்காவில் ஒரு குற்றவாளியாக அலைக்கழிக்கப்பட்டதும் நினைவிருக்கும். .. ஓஷோ அமெரிக்காவில் கைதான போது கூட அவர் அகில உலகிலும் மதிக்கப்படும் சிந்தனையாளர்; அவரைக் கௌரவமாக நடத்துங்கள் என்று நமது மைய அரசு சொன்னதாக எனக்கு நினைவில்லை. ஆனால் நமது இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் ஆஸ்திரேலிய அரசிடம் மிகவும் உறுதிபடச் சொல்கிறார்: பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாகக் கருதி நீங்கள் காவலில் வைத்திருக்கும் ஹமீது எங்கள் நாட்டுப் பிரஜை; அவரது உடலுக்கோ, உள்ளத்திற்கோ எவ்வித ஊறும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்பதாக.

.... முன்பெல்லாம் ஹிந்துஸ்தானத்திலிருந்து வருபவர்களை 'ஓ! புத்தர் பிறந்த தேசத்திலிருந்து வருகிறீர்களா?' என்று விமான நிலையத்திலேயே இன்முகத்துடன் வரவேற்பார்கள். சில சமயம் 'யோகா தேசமா' என்பார்கள். காந்தி திரைப்படம் வந்தபின் 'கேண்டி?' என்று வரவேற்பார்கள். இனி, 'ஓ! சொந்த நாட்டு பயங்கரவாதிகள் மீது பரிவு காட்டும் தேசத்திலிருந்து வருபவரா?' என்று மனத்திற்கு உள்ளாவது நினைத்துக்கொள்வார்கள். அதற்குத் தகுந்தவாறுதான் வரவேற்பும் இருக்கும்.

Saturday, March 31, 2007

காஷ்மீர், கன்னியாகுமரி: இந்தியமக்களைக் கொல்லும் தேசவிரோதிகள்

ஒரே நாள்.. தேசத்தின் இரு முனைகள். ஒரே விதமான செய்திகள். இந்திய விரோதிகள் இந்தியக் குடுமக்களைப் படுகொலை செய்த சம்பவங்கள்.

ஜம்மு காஷ்மீரில், 5 இந்து தொழிலாளர்களைத் தனியாக அடையாளப் படுத்தி ஜிகாதி தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். தங்கள் வழக்கமான வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் இவர்கள்.

டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி:

JAMMU: Five labourers were killed and four injured, when two terrorists attacked a shelter at Rajouri's Mathiani village late Thursday night. Police said two men dressed in military fatigues entered the village shelter at about 10.30 pm and demanded identity proof from the labourers. The labourers were then asked to segregate themselves based on their religion. After rounding up 11 Hindu labourers, the attackers opened fire, killing five of them on the spot. Two labourers, who managed to escape, reported the incident to an Army camp in the area at about 7 am on Friday. A rescue team airlifted four injured workers from the village. They have been admitted to Jammu's Military Hospital. Three columns of the Army were rushed to the area. "Police has launched a hunt for the killers," said Jammu IG S P Vaid. "This is an act of terrorism. We will trace the group behind it." In May 2006, terrorists had unleashed two communal terror attacks at Doda and Udhampur.

கன்னியாகுமரியில் மீன்பிடிக்கச் சென்ற இந்திய மீனவர்கள் 5 பேர் மர்மமான முறையில் கொல்லப் பட்டுள்ளனர். வழக்கம் போல கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் இவர்கள். தேசவிரோத வலை இவர்கள் உயிரை விழுங்கி விட்டது. இவர்கள் மீது சுட்டது இலங்கைக் கடற்படை என்று தினமலர் கூறுகிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி இது விடுதலைப் புலிகளின் வேலையோ என்று ஐயுறுகிறது..

NEW DELHI: The killing of four Indian fishermen, who had strayed into Sri Lankan waters on Thursday, could be the handiwork of LTTE in order to create a rift between the Indian and Sri Lankan governments. Holding that this possibility could not be ruled out, Navy chief Admiral Sureesh Mehta on Friday said an inquiry into the incident was being conducted to ascertain the facts. Asked about the incident on the sidelines of a ceremony where Army chief General J J Singh took over as the new chairman of the chiefs of staff committee, Admiral Mehta said, "Fishermen cross over into each other's waters in search of lucrative catches...But the Sri Lankan Navy chief has assured me that he has asked his forces not to fire at Indian boats." Outgoing IAF chief Air Chief Marshal S P Tyagi, in turn, said the LTTE air strike on a Sri Lankan airbase near Colombo on Monday had added a completely new "dimension" to the internal war taking place in the island nation. "The existence of aircraft (with LTTE) did not come as a surprise...we have been monitoring it. But the attack was a surprise. This is a new dimension and, therefore, it is serious," he said. This confirms an earlier TOI report which held that the Indian security establishment was worried that even a light aircraft in the hands of a terrorist outfit could be used as a missile against high-value targets, demonstrated well by the 9/11 strikes by al-Qaida in US in 2001. India has strengthened patrolling and surveillance along its coastline, especially in the Palk Strait and Gulf of Mannar region. This becomes all the more important since the radar coverage in central and peninsular India is quite weak, as reported earlier by TOI.

இந்திய மக்களின் வாழ்வைக் குலைக்க இருமுனைகளிலும் இருந்து தாக்குதல் தொடுக்கும் தேசவிரோதிகளை ஒன்றிணைந்து வெற்றி கொள்வோம்.