Wednesday, November 11, 2009

இயற்கை முரண்களும், இருவேறு கலாசாரங்களும்

… இரண்டுமே சாதாரண வரையறைகளுக்குள் அடங்காத விசித்திர பிராணியைக் கற்பனை செய்தன. ஒரு கலாசாரம் அதனை தெய்வீகத் தன்மை கொண்ட அதிசயமாகப் பார்த்தது. மற்றது சாத்தானிய (diabolical) தன்மை கொண்ட அரக்கனாகப் பார்த்தது…

முழுக் கட்டுரை தமிழ்ஹிந்து.காம் தளத்தில்.

Sunday, September 20, 2009

இறைமை ததும்பும் இரவு: நவராத்திரியை முன்வைத்து ..

இரவு அச்சமூட்டுவது, வசீகரிப்பது, மர்மங்களும் ஆழ்ந்த அமைதியும் கொண்டது. அதனால் தான் நம் மரபில் இரவைப் பெண்ணாக, தேவியாக உருவகித்தார்கள் போலும்! உலகின் வெளித் தோற்றங்கள் அனைத்தும் காரிருளில் கரைந்து மறையும் அந்தக் காலவெளியை, அக எழுச்சியை விழையும் அனைத்து விதமான மாந்தர்களும் சரணடைகிறார்கள் - ஞானிகள், கலைஞர்கள், கவிஞர்கள், போகிகள், யோகிகள், இலக்கின்றித் தவிப்பவர்கள் யாராயினும்…

முழுதும் படிக்க:
இறைமை ததும்பும் இரவு: நவராத்திரியை முன்வைத்து ..

இதில் ராத்ரி ஸுக்தம் என்ற அழகிய வேத மந்திரத்தின் ஆடியோ க்ளிப் ஒன்றையும் போட்டிருக்கிறேன்.

அனைவருக்கும் நவராத்ரி வாழ்த்துக்கள்!

Sunday, September 13, 2009

கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?

மூலம்: தருண் விஜய், தமிழில்: ஜடாயு

ஷா ஆலம் (மலேசியா) பகுதியில் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தினர் மதவெறி கோஷங்களை எழுப்ப தலைவரான ஹாஜி சொன்னார் - “கோயில் கட்டுமானம் மட்டும் தொடர்ந்தால் இங்கே ரத்த ஆறு ஓடும்” … தாங்கள் ஒரு குற்றமும் செய்யாதபோதும், கோயம்புத்தூர் முதல் கோலாலம்பூர் வரை, காட்மாண்டு முதல் ஜெட்டா வரை ஏன் எல்லா இடங்களிலும் கொத்துக் கொத்தாக இந்துக்கள் படுகொலைக்கு எளிய இலக்காகின்றனர்? இந்துக்கள் படும் காயங்கள் பல துறைகளிலும் செல்வாக்குள்ள தலைவர்களாக உள்ள இந்துக்களாலேயே கண்டுகொள்ளாமல் ஒதுக்கப் படுகின்றன. ஏன்? ....

முழுக்கட்டுரையும் தமிழ்ஹிந்து தளத்தில் படிக்கலாம்.

Wednesday, August 12, 2009

வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: வள்ளுவர், சர்வக்ஞர்

... குடகு மலையில் தோன்றும் காவிரி என்கிற கன்னடத்தி, மலைமுகடுகளில் இளநடை பயின்று தன் யௌவனத்தின் முழுப் பொலிவுடன் தமி்ழச்சியாகித் தன் மணாளனாகிய சமுத்திர ராஜனை ஆதுரத்துடன் சென்று தரங்கம்பாடியில் தழுவிக் கொள்கிறாள், பின்னர் கடலோடு கலந்து உலகப் பிரஜையாக உருமாறி விடுகிறாள். இயற்கையே செய்திருக்கும் ஏற்றமிகு ஏற்பாடு!...

முழுக்கட்டுரையும் தமிழ்ஹிந்து.காம் தளத்தில் படிக்கலாம்..