Thursday, May 26, 2011

பெங்களூர் தெருப்பாடகர்கள்

இவர்களை அவ்வப்போது நீங்கள் தெருக்களில் பார்க்கலாம்.. இந்த கோஷ்டி ராமர், அனுமார் வேடம் பூண்டிருந்தது.. ஓரிடத்தில் பார்த்தபோது, அவர்களை அழைத்து உபசரித்து நின்று பாடச் சொல்லி, படம் பிடித்தேன். சன்மானமும் கொடுத்தனுப்பினேன். ஏக சந்தோஷம் அவர்களுக்கு.

வீடியோ: பாகம் 1



வீடியோ: பாகம் 2




கிராமத்தில் விவசாயக் கூலிகளாகவோ பண்ணைத் தொழிலாளர்களாகவோ இருப்பவர்கள்.. வேலை இல்லாத காலங்களில் நாடகம் போடுவது, ஊர் ஊராக பாடி சுற்றுவது என்று காலத்தை ஓட்டுகிறார்கள்..

இரண்டாவது வீடியோவில் உடைந்த கன்னடத்தில் கேள்வி கேட்பது அடியேன் தான். கன்னடம் நன்கறிந்த பெரியோர்கள் மன்னித்தருள்க!

1 comment:

Anonymous said...

அன்புடையீர் !

தாந்தரீகம் என்றால் என்ன ? தயவு செய்து எனக்கு சற்று விளக்கமாக எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். நான் இலங்கையில் வாழ்வதால் போதிய நூல்கள் கிடைக்கவில்லை. இந்துமதம் தொடர்பான கட்டுரைகளை ஆர்வத்துடன் வாசித்து வருகின்றேன். இந்து விக்கிரகங்கள் குறித்து ஆய்வுக்கட்டுரைகளை தேடிக் கொண்டிருக்கின்றேன்.

அன்புடன்

சரவணன்
vks@yahoo.de