Saturday, March 31, 2007

காஷ்மீர், கன்னியாகுமரி: இந்தியமக்களைக் கொல்லும் தேசவிரோதிகள்

ஒரே நாள்.. தேசத்தின் இரு முனைகள். ஒரே விதமான செய்திகள். இந்திய விரோதிகள் இந்தியக் குடுமக்களைப் படுகொலை செய்த சம்பவங்கள்.

ஜம்மு காஷ்மீரில், 5 இந்து தொழிலாளர்களைத் தனியாக அடையாளப் படுத்தி ஜிகாதி தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். தங்கள் வழக்கமான வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் இவர்கள்.

டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி:

JAMMU: Five labourers were killed and four injured, when two terrorists attacked a shelter at Rajouri's Mathiani village late Thursday night. Police said two men dressed in military fatigues entered the village shelter at about 10.30 pm and demanded identity proof from the labourers. The labourers were then asked to segregate themselves based on their religion. After rounding up 11 Hindu labourers, the attackers opened fire, killing five of them on the spot. Two labourers, who managed to escape, reported the incident to an Army camp in the area at about 7 am on Friday. A rescue team airlifted four injured workers from the village. They have been admitted to Jammu's Military Hospital. Three columns of the Army were rushed to the area. "Police has launched a hunt for the killers," said Jammu IG S P Vaid. "This is an act of terrorism. We will trace the group behind it." In May 2006, terrorists had unleashed two communal terror attacks at Doda and Udhampur.

கன்னியாகுமரியில் மீன்பிடிக்கச் சென்ற இந்திய மீனவர்கள் 5 பேர் மர்மமான முறையில் கொல்லப் பட்டுள்ளனர். வழக்கம் போல கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் இவர்கள். தேசவிரோத வலை இவர்கள் உயிரை விழுங்கி விட்டது. இவர்கள் மீது சுட்டது இலங்கைக் கடற்படை என்று தினமலர் கூறுகிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி இது விடுதலைப் புலிகளின் வேலையோ என்று ஐயுறுகிறது..

NEW DELHI: The killing of four Indian fishermen, who had strayed into Sri Lankan waters on Thursday, could be the handiwork of LTTE in order to create a rift between the Indian and Sri Lankan governments. Holding that this possibility could not be ruled out, Navy chief Admiral Sureesh Mehta on Friday said an inquiry into the incident was being conducted to ascertain the facts. Asked about the incident on the sidelines of a ceremony where Army chief General J J Singh took over as the new chairman of the chiefs of staff committee, Admiral Mehta said, "Fishermen cross over into each other's waters in search of lucrative catches...But the Sri Lankan Navy chief has assured me that he has asked his forces not to fire at Indian boats." Outgoing IAF chief Air Chief Marshal S P Tyagi, in turn, said the LTTE air strike on a Sri Lankan airbase near Colombo on Monday had added a completely new "dimension" to the internal war taking place in the island nation. "The existence of aircraft (with LTTE) did not come as a surprise...we have been monitoring it. But the attack was a surprise. This is a new dimension and, therefore, it is serious," he said. This confirms an earlier TOI report which held that the Indian security establishment was worried that even a light aircraft in the hands of a terrorist outfit could be used as a missile against high-value targets, demonstrated well by the 9/11 strikes by al-Qaida in US in 2001. India has strengthened patrolling and surveillance along its coastline, especially in the Palk Strait and Gulf of Mannar region. This becomes all the more important since the radar coverage in central and peninsular India is quite weak, as reported earlier by TOI.

இந்திய மக்களின் வாழ்வைக் குலைக்க இருமுனைகளிலும் இருந்து தாக்குதல் தொடுக்கும் தேசவிரோதிகளை ஒன்றிணைந்து வெற்றி கொள்வோம்.

யார் பிற்படுத்தப்பட்டவர்கள்?

'பந்த்' நிறுத்தங்களினால் ஒரு நாள் தேசிய உற்பத்தித் திறன் மற்றும் பலகோடி ரூபாய்கள் இழப்பு தவிர ஆகப்போவது ஒன்றும் இல்லை என்று தெளிவாக எல்லாருக்கும் புரிந்திருக்கும் நிலையிலும், அரசு ஆதரவில் தமிழ்நாட்டில் முழு பந்த் - இடஒதுக்கீடு பற்றிய உச்சநீதிமன்ற ஆணையை எதிர்த்து. ஏற்கனவே தான் நடைமுறைப்படுத்தியிருக்கும் இடஒதுக்கீட்டு கொள்கைகள் போதாதென்று, இந்த அருவருக்கத் தக்க செயல் மூலம், இந்திய மாநிலங்கள் எல்லாவற்றிக்கும் ஒரு மகா மோசமான முன்னுதாரணத்தை தமிழ்நாடு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

வழக்கமாக ஆங்கிலத்தில் எழுதும் நண்பர் Reason இதே தலைப்பில் ஒரு நல்ல தமிழ்ப் பதிவு போட்டிருக்கிறார். அதில் கூறுகிறார் -

எதற்கு இந்தப் 'போராட்டம்'? தேசீயக்கல்வி நிலையங்களில் 'பிற்படுத்தப் பட்டவர்களுக்கான' இட ஒதுக்கீட்டு ஆணையை உச்ச நீதிமன்றம் தடை செய்ததற்கு.

ஏன் அந்த ஆணையை உச்ச நீதிமன்றம் தடை செய்தது?மத்திய அரசு - திரா'விட'ர்கள் அங்கம் வகிக்கும் மத்திய அரசு - யார் பிற்படுத்தப் பட்டவர்கள் என்ற கேள்விக்கு சட்டம் அங்கீகரிக்கக் கூடிய விடை அளிக்காததால்.

முப்பது கோடி இந்தியர்கள் ஒரு நாளைக்கு ஒரு டாலர் - 45 ரூபாய்க்கும் குறைவான வருவாயில் வாழும் நாட்டில், இந்தக் கேள்விக்கு விடை அளிப்பதில் என்ன கஷ்டம் இருக்க முடியும்?

'விடை அளிக்காததால்' - 'முடியாததால்' அல்ல, 'விடை அளிக்க விரும்பாததால்'. சரியான விடை அளித்து விட்டால் இந்தப் பிற்படுத்தும் விளையாட்டு - இந்தியா முழுவதும் நடக்கும், திரா'விட'ர்கள் முன்னின்று நடத்தும் விளையாட்டு - நிறுத்தப் பட வேண்டியிருக்கும்.

இப்படித் தொடங்கி , ஏற்கனவே மிகவும் பிரபலமாகி விட்ட மாநிலவாரியான பிற்படுத்தப் பட்டவர்கள் சதவீதம் பற்றிய அட்டவணையையும் சுட்டிக் காட்டி கேட்கிறார் -

ஒரிசா - வளர்ச்சிக் குறியீடுகளில் ஒரு பின் தங்கிய மாநிலம் - அங்கு கார் தொழிற்சாலைகளோ, IT காரிடார்களோ கிடையாது - ஆளைக் கொல்லும் வறட்சியும் வெள்ளமும் உண்டு. 2004-ஆம் ஆண்டில் OBC - பிற்பட்ட ஹிந்து மக்கள் தொகை - 37.8 சதவீதம். தமிழ் - மன்னிக்கவும் திராவிட நாட்டில் - 72.5 சதவீதம.

இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஒரிசாவில் பந்த் இல்லை. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ் - மன்னிக்கவும் திராவிட நாட்டில மட்டும்.நாட்டின் போக்கை எதிர்த்து - தேசியத்தை எதிர்த்து - ஏன் இறையாண்மையையே எதிர்த்து - செயல் படுவது திராவிடர்களுக்குப் புதிதல்ல. அதில் ஊறியவர்கள்.

உண்மையில், முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழகம், ஒரிஸ்ஸா போன்ற வறுமையில் உழலும் மாநிலங்களுக்கு உதவுவது பற்றி யோசிக்க வேண்டும். ஆனால், "உண்டாலம்ம இவ்வுலகம்.. தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுனர் உண்மையானே" என்ற தமிழ்ச் சான்றோர்களின் எண்ணத்திற்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இங்கே பந்த் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மானமுள்ள தமிழனையும் வெட்கப் படச் செய்யும் சமாசாரம்.

இது பற்றி எனது பழைய திண்ணண கட்டுரையில் சொன்ன ஒரு விஷயத்தை மறுபடியும் இங்கு மீள்பதிகிறேன். இந்த பிரசினையைப் பற்றிய என் முழுக் கண்ணோட்டமும் அந்தக் கட்டுரையிலேயே உள்ளது -

... இந்தியாவிலேயே அதிக சதவீதம் பிற்படுத்தப் பட்டவர்கள் உள்ள மாநிலம் என்கிற 'பெருமை'யையும் தமிழகம் பெற்றிருக்கிறது. மலைவாழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் சத்தீஸ்கட், மத்தியப்பிரதேசத்தை விடவும் தமிழ்நாட்டில் அதிகம் 'பிற்பட்டவர்கள்' இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அகில இந்திய அளவில் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகவில்லை. அதனால் தான் இட ஒதுக்கீட்டு அரசியலை எதிர்ப்பதற்கு ஓரளவு மக்கள் சக்தியாவது உள்ளது. 100% இட ஒதுக்கீடு என்று தமிழக அரசு ஒரு பேச்சுக்காக அறிவித்தாலும் கூட, அதை எதிர்ப்பதற்குத் தமிழ்நாட்டில் நாதியிருக்காது. இதுதான் தங்கள் தலையெழுத்து என்று இட-ஒதுக்கீடு-இல்லாத-சாதியார் தங்களை நொந்துகொண்டு வேறு வழிகள் தேட வேண்டியது தான்.

3. இதில் கூடுதல் சோகம் - தமிழகத்தில், ஒதுக்கீடு இல்லாத போட்டிக்கான இடங்களின் (open competition) பெரும்பங்கையும் எப்படி ஒதிக்கீடு-பெறும் சாதிக்காரர்களே பெற்று ஏப்பம் விட்டு, ஒதுக்கீடு இல்லாத சாதிக்காரர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள் என்பது. (பார்க்க: [2]). இவர்களுக்கு உண்மையிலேயே மனச்சாட்சி இருந்தால் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், இட ஒதுக்கீட்டையே பயன்படுத்துவேன் என்று சொல்லி, OC (ஓஸி?)யில் கிடைக்கும் இடத்தை, பாவப்பட்ட, இட ஒதுக்கீடு பெறமுடியாத மாணவர்களுக்கு விட்டுத் தர வேண்டும்.. ஆனால், இவர்களது சிந்தனை "நமக்கு OC-யில் இடம் கிடைத்து விட்டதே.. அந்த இடத்தை நம்ம சாதிக் (இட ஒதுக்கீடு சாதி) காரன் ஒருத்தன் எடுத்துக் கொள்ளட்டும்" என்பதாகத் தான் இருக்கிறது.. இந்த சிந்தனை சுயநலம், குரூரம் மற்றும் துவேஷ மனப்பான்மையினாலேயே உருவாகிறது.

4. இந்த BC இட ஒதுக்கீட்டையே அழித்து விட வேண்டும். SC/ST ஒதுக்கீடு போக மீதி இருக்கும் எல்லா இடங்களிலும் எல்லாரும் போட்டி போடலாம் (open competition) என்று அறிவிக்க வேண்டும். இந்தப் போட்டிக்கான "புள்ளிகளை" (points) நிர்ணயிப்பதில் தான் சமூக நீதியும், சமூக அக்கறையும் வெளிப்பட வேண்டும்....

Friday, March 30, 2007

தமிழ் வலைப்பூக்களின் பரிணாமம்

பிளாக் எனப்படும் வலைப் பூ எழுதும் உந்துதல் உள்ளவருக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப் பட்டது. தமிழ் வலைப் பூக்கள் துவக்கத்தில் தொழிற் நுட்பக் காரணங்களில் தடுமாறினாலும்,மெல்ல மெல்ல மற்ற மொழியினர் வியக்கும் வண்ணம் வளர்ந்தது. படித்தவர்கள், இளைஞர்கள்,பெண்கள் என்று பல தரப்பிலும் பதிவர்கள் உண்டாயினர்.அச்சில் தன் எழுத்தைப் பார்க்க முடியாதவர்களுக்கு தங்கள் கருத்தைப் பகிரவும்,எழுத்தை மேம் படுத்தவும் இது நல்ல மேடையாக அமைந்தது.

நன்றாக வளரும் வேளையில் பிடித்தது சனி! சாதாரண ஆத்திக நாத்திக வாதங்கள் சாதிச் சண்டையில் கொழுந்து விட,இது எந்தஅளவிற்கு போய் விட்டது என்றால்,இன்று ஒரு பதிவர் எனக்கு அந்த நடிகரைப் பிடிக்கும் என்றால் அவரை நடிகரின் சாதியோடு இணைத்து ஏசும் அளவிற்கு!ஒரு குறுப்பிட்ட சாதியினரின் ஆதிக்கம் மதுரையில் அதிகமாம்.அதனால் எனக்கு மதுரை பிடிக்கும் என்றால் கூட ஏச்சு விழுகிறது! பாரதியார் பற்றி எழுதினால்,அதில் சாதி,தேசீயம் என்றால் அதில் சாதி,வால் மார்ட் பற்றிக் கூறினாலும் சாதி,திரை விமர்சனம் எழுதினால் கூட சாதி!எதைப் பற்றி கூறினாலும் அதில் சாதியை நுழைப்பதே தலையாயமாகி விட்டது. இன்று தமிழ் மணம் என்ற திரட்டியில் பாருங்கள்; வரும் பதிவுகளில் பாதிக்கு மேல் சாதி மதங்களைப் பற்றித்தான்.

இதில் மிகவும் பாதிக்கப் பட்டவர்கள் பெண் பதிவர்கள்தாம்.பல பெண்கள் தங்கள் எழுத்தா ர்வத்தை வெளிப்படுத்துவதற்கு வலைப் பூக்கள் ஒரு நல்ல வடிகாலாயின.ஆனால் என்ன சொல்வது? இன்று பல பெண்கள் வலையில் எழுதுவதில்லை. காரணம், பின்னோட்டம் என்ற பெயரில் வரும் ஆபாசங்கள்தான் மூல காரணம். என்னதான் கமென்ட் மாடரேஷன்களைப் போட்டாலும் இந்த ஆபாசங்கள் புகுந்து விடுகின்றன. அதிலும் மணமான பெண்கள் என்றால் பின்னோட்ட ஆபாசம் அதிகம்.

எதிர் கருத்துக்களை நாகரீகமாகவும் வெளியிட முடியும் என்று தெரியாதவர்களா இவர்கள். இல்லை என் கருத்துக்கு எதிர் கருத்தே கூடாது என்பவர்களா? இதில் குரூப்பிசம் வேறு! அதாவது dictorship of idiots என்பார்களே அதுதான் நடக்கிறது. ஒருவருடய கருத்தை மற்றவர் மாற்ற இயலுமா? இயன்றாலும்அது தேவையா? இதனால் விரோத பாவங்கள் கூடுதலும், கால விரயமும் தானே மிச்சம்.


மற்ற மொழிகளின் வலைப் பூக்களைப் பார்த்தால் போர்னோ மற்ற வகையறாக்கள் ஒரு 3 விழுக்காடு இருக்கும். நம் மொழியினர் போல சாதிச் சாக்கடை நாறவில்லை!செம்மொழி அல்லவா!!


வலையில் எழுதும் முக்கால் வாசிப் பேர் நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள், இந்தியாவிலும், கடல் கடந்தும். வயதில் இளையவர்கள். படித்தவரிடம் நல்ல பண்பு இருக்கும் என்பது பொதுவான ஒரு நம்பிக்கை. இன்றைய பதிவுகளைப் பார்த்தால் நம்பிக்கை பொய்யோ எனப் படுகிறது.


ஸ்ரீனி


Copyright:thinnai.com

பின் குறிப்பு:

திண்ணை 29 மார்ச் 2007 இதழில் ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு - தமிழ் வலைப்பூக்களின் பரிணாமம்" என்ற தலைப்பில் வந்த ஸ்ரீனியின் கட்டுரை இது. அதை இங்கே மீள் பதிப்பித்திருக்கிறேன்.

கட்டுரை ஆசிரியரின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.

Thursday, March 29, 2007

நற்குணக் கடல்: ராம தரிசனம்

தவத்திலும், கல்வியிலும் சிறந்த நாரத மகரிஷியைப் பார்த்து முனிபுங்கவர் வால்மீகி கேட்கிறார் - "உலகில் தலைசிறந்த குணவான் யார்? வீரன் யார்? தர்மத்தை அறிந்துணர்ந்தவன், செய்ந்நன்றி மறவாதவன், சத்தியத்தில் உறுதியாக நிலைபெற்றவன் யார்?" (வால்மீகி ராமயணம், 2-ஆம் சுலோகம்) பின்னர் இப்படி பல நற்குணங்களின் பட்டியலை அடுக்கிக் கேள்வி கேட்டுக் கொண்டே போகிறார். இறுதியில் நாரதர் இவை எல்லாவற்றுக்கும் ஒரே விடையாக "ராமன் என்று மக்களிடையே புகழ்பெற்றவன்" (ராமோ நாம ஜனை: ஸ்ருத:) என்று பதிலளிக்கிறார்.

கம்பராமாயணம் 2-ஆம் பாடலில், கம்பர் கூறுகிறார் -

சிற்குணத்தர் தெரிவுஅரு நல்நிலை
எற்கு உணர்த்த அரிது; என்ணிய மூன்றினுள்
முற்குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்று அரோ.


சாத்விகம், ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களையும் கடந்த ஞானியர் நிலையை என்னால் உணர்த்த முடியாது; இவற்றுள் முதலாவதான சத்துவகுணத்தின் முழு உருவமாகத் தோன்றிய ஸ்ரீராமனுடைய நற்குணங்களாகிய கடலில் மூழ்குவதே நன்று.

"எல்லையொன்றின்மை எனும் பொருள் அதனைக்
கம்பன் குறிகளால் காட்டிட் முயலும் முயற்சியைக் கருதியும்.."


என்று பாரதி சொன்னது எல்லையற்ற பரம்பொருளை அல்ல, ஸ்ரீராமனுடைய எல்லை காணமுடியாத குணக்கடலைத் தான் என்றே எண்ணத் தோன்றுகிறது. அன்புக்கு எல்லை உண்டா? பாசத்திற்கு எல்லை உண்டா? பக்திக்கு எல்லை உண்டா? ஞானத்திற்கு எல்லை உண்டா? தொண்டுக்கு எல்லை உண்டா? 4 முழம் அன்பு, 3 கிலோ பாசம் என்று யாராவது சொல்லுவார்களா?

எல்லையில்லாத இந்த மனிதப் பண்புகளுக்கு ராமன், சீதை, லட்சுமணன், பரதன், அனுமன், குகன் என்றெல்லாம் குறியீடுகளால் காட்ட விழைந்தான் அல்லவா கம்பன்? அதைத் தான் பாரதி குறிப்பிடுகிறான் என்று கொள்ள வேண்டும்.

கற்றுக் கடக்க முடியாத கரைகாணாக் கடல் காகுத்தன் கல்யாண குணங்கள். அதனால் தான் "கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ?" என்று கேட்டார் நம்மாழ்வார்.

"அனுபம குணாம்புதி சந்த்ரஸி!" (ஒப்பற்ற குணங்களாகிய கடலுக்குச் சந்திரனே) என்று அழைத்துப் பாடினார் தியாகராஜர். கடல் அலைகள் சந்திரனைக் கண்டு பொங்கி மகிழ்வது போல, நற்குணங்கள் ராமனுக்காக அலைபாய்கின்றனவாம். இந்து தத்துவ மொழியில் கடல், சந்திரன் இரண்டும் மனத்தின் குறியீடுகள், இரண்டும் ஒன்றே என்பது உட்கருத்து.

நூற்றாண்டுகள் கழித்து ஸ்ரீஅரவிந்தர் கம்பனின் அதே கருத்தை எதிரொலிக்கிறார் -

.. It was Rama's business to be not necessa-rily as perfect, but as largely representative of sattvic man, faithful husband, obedient son, a tender and perfect brother, father, friend — of the outcast Guhaka, of animal leaders, Sugriva and Hanuman, of the vulture Jatayu, friend of even rakshasa Vibhishana. All that he was in a brilliant, striking but above all spontaneous and inevitable way... with a certain harmonious completeness.

His business was to destroy Ravana and to establish Rama Rajya... an order proper to the sattvic civilised human being who governs his life by finer emotions, moral ideals, such as truth, obedience, cooperation and harmony, the sense of domestic and public order — to establish this in a world still occupied by anarchic forces.

(From : Rama As An Avatar Of The Sattvic Human)

சத்யகாமன், சத்யசங்கல்பன், சத்யபராக்ரமன் என்பனவெல்லாம் ராமனுக்குரிய அடைமொழிகள். "தருமத்தின் தனிமூர்த்தி" என்பான் கம்பன். "ராமோ விக்ரஹவான் தர்ம:" என்பான் வால்மீகி.




சத்தியத்தின் வேர்ச்சொல்லான "சத்" என்பதன் பொருள் "உள்ளது". அதாவது என்றும் உள்ளது எதுவோ அது உண்மை. அதுவே தருமம். சத்தியம், தருமம் இரண்டும் ஒரே உண்மையின் இரு பக்கங்கள் தான். அதனால் தான் ஈசாவாஸ்ய உபநிஷத் "சத்ய தர்மாய த்ருஷ்டயே" என்று முடிகிறது.

"உண்டெனும் தருமமே உருவமாய் உடைய நிற்-
கண்டுகொண்டேன் இனிக் காண என் கடவெனோ?"


என்று உயிர்விடும் நேரத்தில் வாலிக்கு இந்த ராம தரிசனம் மூலமாக இந்த ஞான தரிசனம் கிடைக்கிறது.

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்


என்று வள்ளுவர் குறிப்பிடுவது இந்த "உண்மை"க் குணமான சத்துவ குணத்தைத் தான். சத்துவ குண சொரூபன் ராமன். அவனது வழி தருமம், சத்தியம். அதனால் தான் அவன் தன் உயிர்க்கு மட்டும் அல்ல, மன்னுயிர்க்கெல்லாம் துணையாகிறான்.

ராமனுக்கு முடிசூட்டும் செய்தியைச் சொன்ன தசரதனிடம் வசிஷ்டர் கூறுகிறார் -

பொன் உயிர்த்த பூ மடந்தையும் புவியெனும் திருவும்
"இன்னுயிர்த்துணை இவன்" என நினைக்கின்ற இராமன்
தன் உயிர்க்கு என்கை புல்லிது; தற்பயந்து எடுத்த
உன்னுயிர்க்கென நல்லன், மன்னுயிர்க்கெலாம் உரவோய்!

(மந்திரப் படலம், 37)

இங்கே பூமடந்தை என்னும் திருமகளும், புவிமடந்தையாகிய நிலமகளும், அவள் உருவாகவே தோன்றிய சீதையும் எல்லாரும் ஒன்று தான். அதனால் இவர்கள் அனைவர்க்கும் துணையானாலும் ராமன் தன் ஏகபத்தினி விரதத்தை பங்கம் செய்யவில்லை!

மகாபாரதத்தில் தருமர் யட்சன் உரையாடலில் "ஒரு மனிதனுக்கு உற்ற துணைவர்கள் யார்?" என்று யட்சன் கேட்க "தருமம் தாய், சத்தியம் தந்தை, கருணை நண்பன், அமைதி மனைவி.. " என்பதாக தருமர் பதிலளிக்கிறார்.
இதே கருத்தில், இருளில் காட்டில் ராமன் செல்கையில் இந்த நற்குணங்களாகிய விளக்குகளே அவன் துணையாயிற்று என்பதாக கம்பன் அழகாகச் சொல்லுவான் -

தையல் தன் கற்பும், தன் தகவும், தம்பியும்,
மையறு கருணையும், உணர்வும், வாய்மையும்,
செய்யதன் வில்லுமே, சேமமாகக் கொண்டு
ஐயனும் போயினான், அல்லின் நாப்பணே.

(தைலம் ஆட்டு படலம், 47)

மனிதர்களாகவே வந்த சீதை, ராமனுடைய திரு அவதாரங்கள் மானுடப் பண்புகளை மனித குலம் முழுமைக்கும் நினைவூட்டிக் கொண்டிருக்கும், "ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்" என்று வால்மீகியின் ராமன் தன்னைக் கூறிக் கொள்கிறான். "மானுடம் வென்றதன்றே!" என்று கம்பன் மெய்சிலிர்க்கிறான்.

ஸ்ரீராமன் புகழ்பாடும் சந்திரோதயம்
சீதாவின் முகம் தேடும் அருணோதயம்!