Tuesday, May 03, 2011

வெ.சா விமர்சனங்களும் விவாதங்களும் - வெளியீட்டு விழா பதிவுகள்

தமிழ் கலை, இலக்கிய விமர்சன பிதாமகர் வெங்கட் சாமிநாதன் அவர்களது அரை நூற்றாண்டு எழுத்து இயக்கத்தை சிறப்பிக்கும் முகமாக 30-ஏப்ரல்-2011 அன்று சென்னையில் ஒரு விழா நடந்தது. வெளியீட்டு விழா அழைப்பிதழ் இங்கே.

இவ்விழாவில் வெ.சா: விமர்சனங்களும் விவாதங்களும் என்ற புத்தகமும் வெளியிடப் பட்டது. இப்புத்தகத்தில் நான் எழுதியிருக்கும் ”வெ சா என்னும் சத்திய தரிசி” என்ற கட்டுரையை இங்கே படிக்கலாம்.
விழாவின் போது நான் எடுத்த புகைப்படங்கள் இங்கே.
வீடியோ பதிவுகள்:
ஜெயமோகன் உரை:

அரவிந்தன் நீலகண்டன் உரை:

வெங்கட் சாமிநாதன் உரை:

இது உரையின் முதல் பகுதி. பாதியில் காமிரா பேட்டரி தீர்ந்து விட்டதால் மீதம் உரையை செல்போனில் ஆடியோ பதிவு மட்டுமே செய்ய முடிந்தது. அந்தப் பதிவு:


வெ.சா: விமர்சனங்களும் விவாதங்களும் - அரை நூற்றாண்டு எழுத்து இயக்கம்
(கலை, இலக்கிய ஆளுமைகள், ஆர்வலர்கள் எழுதிய 43 கட்டுரைகள்)
தொகுப்பு: பா.அகிலன், திலீப்குமார், சத்தியமூர்த்தி
வெளியிடுவோர்:
சந்தியா பதிப்பகம்
பு. எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை - 600 083.
தொலைபேசி: 044-24896979
http://sandhyapublications.com/
பக்கங்கள்: 504
விலை: ரூ. 300

3 comments:

கானகம் said...

பதிவிற்கும், வீடியோக்களுக்கும் நன்றி. நாஞ்சில் நாடனின் பேச்சை யாரேனும் வீடியோ எடுத்தார்களா?

வெ.சா இந்நிகழ்ச்சியில் நெகிழ்வுடன் இருந்ததாக தெரிந்தது.

கானகம் said...

பதிவிற்கும், வீடியோக்களுக்கும் நன்றி. நாஞ்சில் நாடனின் பேச்சை யாரேனும் வீடியோ எடுத்தார்களா?

வெ.சா இந்நிகழ்ச்சியில் நெகிழ்வுடன் இருந்ததாக தெரிந்தது.

Ganesh said...

பாரதி மஹாகவியில்லை என்பது மாதிரியான கருத்தை முன்வைத்து ஜெயமோஹன் அவர்கள் எழுதிய கட்டுரை என்னை ரொம்ப கவலைப்படவைக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் “திண்ணை” என்ற இணைய இதழில், காவ்யா என்ற யாரோ ஒருவர், பாரதியின் கவிதைகள் பற்றி அபத்தக்களஞ்சியமாய் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தமிழ்னாடு எங்கு போய்க்கொண்டிருக்கிறது? பாரதி உயிரோடு இருக்கும்பொதுதான் கண்டு கொள்ளாமல் இருந்தோம். இப்போதோ, அவரின் இலக்கியத்தை விமர்சிக்கும் போர்வையில், அவரின் பங்களிப்பை சிறுமைப்படுத்துகிறோம்.