Thursday, March 29, 2007

இந்திய தேசியத்திற்கு எதிரான முள்காடு பூங்கா: கண்டியுங்கள்

தமிழ்மணம் வலைத்திரட்டி தொகுத்து அளிப்பதாகக் கூறும் பூங்கா என்ற வலையிதழ் (முள்காடு என்ற பெயர் தான் இதற்குப் பொருத்தமாக இருக்கும்) இந்திய தேசியத்திற்கு எதிரான கருத்துக்களைத் தானாகவும், பொறுக்கி எடுத்தும் மீண்டும் மீண்டும் வெளீயிட்டு வருவதைக் காண்கிறேன். குறிப்பாக கடந்த இதழ் ஆசிரியர் குழு எழுதியிருப்பது அக்மார்க் இந்திய தேசவிரோதக் கருத்துக்கள்.

தந்தைப் பெரியார் பார்ப்பனீயம் இந்தியாவில் மூன்று முகங்களைக் கொண்டிருக்கிறது என்றார். ஒன்று வலதுசாரி இந்துத்துவ முகம், நடுநிலையாகத் தோன்றமளிக்கும் காங்கிரஸின் இந்திய தேசிய முகம், இடதுசாரி பொதுவுடமை காட்டும் முகம். அணிகின்ற முகமூடிகள் வெவ்வேறு தன்மையுடையனவாய்த் தோன்றுகிற போதும் உள்ளிருந்து தொழிற்படுகின்ற சக்தியாய் பார்ப்பனீயம் இருக்கிறது. தனது நலன்களை காப்பாற்றிக்கொண்டு, மக்களை அதிகாரத்தின் நுகத்தடிகளில் வைத்திருக்க, காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப அது முகமூடிகளைத் திறம்பட பயன்படுத்துகிறது. நந்திகிராமில் பூணூல் திருவிழா நடத்தி தனது சாதித் திமிரை காட்டும் காம்ரேடுகள் அணிவது நவ- இடதுசாரி முகமூட...

இந்தியாவின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ஆளும்கட்சிக்கு ஜால்ரா போடும் கட்சி எல்லாமே பார்ப்பனீயமாம்! இந்த பார்ப்பனீயக் காங்கிரசின் அங்கமாக இருந்து குடும்பச் சொத்து சேர்க்கும் தி.முக, திராவிடக் கட்சிகளும் அப்படியானால் பார்ப்பனீய அடிவருடிகள் தானே? அதை ஏன் விட்டுவிட்டார்கள்? "இந்திய தேசியம்" என்ற கருத்துருவாக்கமே பார்ப்பனீயமா? அது ஒரு தீமையா? அப்படியானால் இந்த பார்ப்பனீயத்திற்கு எதிரான ஜிகாதி தீவிரவாதம், நக்சசலைட் தீவிரவாதம், பிரிவினைவாதம், ஜனநாயக எதிர்ப்பு இதெல்லாம் தான் சிறந்ததா? சபாஷ்!

நந்திக்கிராம வன்முறையைக் கண்டிப்பதில் அந்தக் குறிப்பிட்ட இடதுசாரி குண்டர் கட்சி தவிர மற்ற அனைத்து இந்திய மக்களும், அரசியல் கட்சிகளும் ஒன்று திரண்டுள்ளன. அதை யாரும் ஆதரிக்கவில்லை. ஆனால் இங்கே நந்திக்கிராம வன்முறை கண்டனம் என்ற போர்வையில் நச்சு உமிழப் பட்டிருக்கிறது.

பூங்கா ஒரு நடுநிலை இதழ் என்று என்றுமே தன்னை அறிவித்துக் கொண்டதில்லை தான். சில கருத்துக்களில், சில சார்பான நிலைப்பாடுகளை அது எடுக்கலாம்.. ஆனால் பிராமண வெறுப்பு என்ற முகமூடியில் இங்கே அது பேசுவது கடைந்தெடுத்த இந்திய தேச விரோதம்...இதை எளிதாக ஒதுக்கி விட முடியாது.

இந்திய ஜனநாயகத்தில் பல குறைபாடுகள் உள்ளன. ஊழல், கிர்மினல் அரசியல், சுயநலம்.. ஆனால் இவை அனைத்தையும் எதிர்த்துப் போராடும் சக்தியின் ஊற்றுக் கண்ணாக விளங்குவது இந்திய தேசியம், இந்திய ஜனநாயகம், இந்திய அரசியல் சட்டம் தான். இன்று நாம் மார்தட்டிக் கொண்டு பேசும் கருத்துரிமை எல்லாம் அது வழங்கிய கொடை தான். நம் பொருளாதார முன்னேற்றம், வாழ்வுரிமை எல்லாவற்றுக்கும் ஆதாரமே அது தான்.

இடதுசாரி இந்துத்துவம் இப்படியான செயற்பாடுகளில் சற்றும் கூச்சமின்றி ஈடுபடும் போது வலதுசாரி ....

நந்திக்கிராமில் அப்பாவி மக்களைக் கொன்ற கடும் இந்து விரோத கம்யூனிஸ்டு அரசை "இந்துத்துவம்" என்று வர்ணிக்க படுபயங்கரமான மனநிலைப் பிறழ்வும், குழம்பிய மனநிலையும் வேண்டும். Hats off!

பைதிவே, இந்த இடதுசாரி இந்துத்துவம் என்ற சொல்லாட்சியை எனக்குத் தெரிந்து அறிமுகப் படுத்தியவர் என் நண்பர் அருணகிரி தான். அவர் திண்ணையில் எழுதிய இந்தக் கட்டுரையில், எப்படி மேற்கத்திய நாடுகளில் "இடதுசாரி" என்று சம்பிரதாயமாக அறியப்படும் பெண்ணுரிமை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு போன்ற மக்கள் பிரசினைகள் இந்தியாவில் இந்துத்துவ இயக்கங்களால் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப் படுகின்றன என்பதை விளக்க இந்த முரண்போன்று தோன்றும் சொல்லாட்சியப் பயன்படுத்தியிருக்கிறார். அதை இவ்வளவு அசிங்கமாகத் தான் காப்பியடிக்க முடியுமா?

மதுரையிலும், கோவையிலும், சென்னையிலும், பெங்களூரிலும், மும்பையிலும், தில்லியிலும் இருந்து தமிழில் பதிவு போட்டு மகிழ்பவர்கள் இதைக் கண்டிப்பாக எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று இந்தியாவில் தான் தமிழர்கள் சகல உரிமைகளுடனும், வசதிகளுடனும், வாய்ப்புகளுடனும் திகழ்கிறார்கள், உலகில் வேறெங்கும் அல்ல. இந்திய தேசியம் தான் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் ஒரு தமிழரை ஜனாதிபதியாகவும், இன்னொரு தமிழரை நிதியமைச்சராகவும் ஆக்கியிருக்கிறது. இதற்கு ஈடான தமிழ்ப் பெருமிதம் உண்டா?

நிலைமை இப்படியிருக்கையில், இந்தியர்களை பெரும்பான்மை படைப்பாளர்களாகவும், வாசகர்களாகவும் கொண்ட ஒரு வலையிதழின் ஆசிரியர் குழு எப்படி இங்ஙனம் எழுதத் துணிகிறது?

இதற்காக பூங்கா ஆசிரியர் குழுவை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்மணத்தில் தங்கள் பதிவுகளை இட்டு வரும் இந்திய தேசியத்தில் நம்பிக்கையுள்ள பதிவர்கள் அனைவரும் பூங்கா மற்றும் அதன் ஆசிரியர் குழு என்ற பெயரில் இப்படி எழுதிய புல்லுருவிகளை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

46 comments:

அரவிந்தன் நீலகண்டன் said...

ஜடாயு, பூங்கா நடுநிலை இதழ் இல்லை என கூறலாம். ஆனால் தமிழ்மணத்திரட்டியில் இடுகைகளை சேர்க்கையில் வரும் செய்தி 'சிறந்த பதிவுகள்' அல்லவா பூங்காவில் வெளியிடப்படும் என கூறுகிறது. இனிமேலாவது முகமூடி கிழிந்து இரத்த வெறியும் மனித வெறுப்பும் இணைந்த முகத்தை காட்டி இழிக்கும் பூங்கா கும்பல் அந்த தமிழ்மண இணைப்பு திரட்டியில் வரும் செய்தியில் 'சிறந்த முறையில் இந்துதருமத்தையும் சமுதாயத்தையும் பொதுவாகவும் அந்தணர்களை வசைபாடுவதை குறிப்பாகவும் செய்யும் பதிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்படும்.' என அறிவிக்கட்டும். என்னைப் பொறுத்தவரையில் இனிமேல் பூங்காவில் ஒரு பதிப்பு வெளிவருவதே அந்த பதிப்பின் நடுநிலையையும் அந்த பதிவாளரின் மனிதத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் ஒரு விசயமாக கருதுவேன். (ஜெயபாரதன் ஒரு விதிவிலக்கு). மார்க்சிய வெறியர்களுக்கு பலியான மக்களின் பிணங்கள் புதைக்கப்பட்டு அழுகிய நாற்றமெடுக்கும் களத்தின் மறுபெயர்தான் மார்க்சிய-பெரியாரிய பார்வையில் பூங்காவோ என்னவோ. இந்த மானுட வெறுப்பியலில் ஊறி நாற்றமெடுக்கும் கும்பலுக்கு அம்பேத்கரின் பெயரை உச்சரிக்கவும் தகுதி இல்லைதான்.

Anonymous said...

:))

Good Comedy post.

we cannot expect more from a brahmin.

Anonymous said...

பூங்காவைப் பிடிக்காத வந்தேறி பார்ப்பனர்கள் தாராளமாக தமிழ்மணத்தில் இருந்து வெளியேறலாம்.

Anonymous said...

we didnt get water from either side and we are not able to oppose it because we are indian.
When srilankan tamils are in trouble instead of helping them the indian army gave more trouble and we cannot able to oppose it because we are Indians.
We can tell lot like this.
Dont tell tamils are living in other states and so we have to be slave to india.
Tamils are living all over world not only in other states of india.More than tamils marvadis were living all over india.So dont keep cheating people by telling your false informations.

குழலி / Kuzhali said...

பார்ப்பனிய எதிர்ப்பு என்பது இந்திய தேசிய எதிர்ப்பா? ஆனால் பார்ப்பனிய எதிர்ப்பு கண்டிப்பாக ஹிந்து தேசிய எதிர்ப்பே.... அப்படியே இந்திய தேசியத்தை எதிர்த்தால் தான் என்ன தவறு... இந்திய தேசியத்தை எதிர்ப்பதற்கான நியாயங்கள் இருக்கத்தானே செய்கின்றன.

//இந்திய தேசியம் தான் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் ஒரு தமிழரை ஜனாதிபதியாகவும், இன்னொரு தமிழரை நிதியமைச்சராகவும் ஆக்கியிருக்கிறது. இதற்கு ஈடான தமிழ்ப் பெருமிதம் உண்டா?
//
ஹா ஹா.... பாக்கிஸ்தானில் கூட இந்துக்கள் அமோகமாக வாழ்கிறார்களாம், அங்கே ஒரு ஹிந்து தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியாத உங்களுக்கு, பார்க்க என் பதிவு

//இன்று இந்தியாவில் தான் தமிழர்கள் சகல உரிமைகளுடனும், வசதிகளுடனும், வாய்ப்புகளுடனும் திகழ்கிறார்கள், உலகில் வேறெங்கும் அல்ல. இந்திய தேசியம் தான் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில்//
பேசாமல் இந்தியாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக இணைத்து விட்டால் நாமும் உலகின் வல்லரசு நாடாகிவிடுவோம், மிகப்பெரிய ஜனநாயக நாடு, மன்மோகன்சிங்க் அமெரிக்காவின் நிதியமைச்சராக்கிவிடலாம்,

அப்போது ஜடாயு ஒரு பதிவு போடுவார்,

இன்று அமெரிக்காவின் கீழுள்ள இந்த அரசில் தான் இந்தியர்கள் சகல உரிமைகளுடனும், வசதிகளுடனும், வாய்ப்புகளுடனும் திகழ்கிறார்கள், உலகில் வேறெங்கும் அல்ல. அமெரிக்க தேசியம் தான் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் ஒரு இந்தியரை ஏபிசி என்ற பதவியிலும்(ஒன்றுக்கும் உதவாத ஏதாவதொரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி ஏதாவது சொல்லுங்க), இன்னொரு இந்தியரை நிதியமைச்சராகவும் ஆக்கியிருக்கிறது. இதற்கு ஈடான இந்தியப் பெருமிதம் உண்டா?


என்ன ஜடாயு, இந்தியாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக்கிவிடலாம் தானே...

இந்தியா அமெரிக்காவின் 51வது மாநிலமாகக்கூடாதா? ஏன்? ஏனென்பதற்கான நியாயங்களை சொல்லும் ஜடாயு, சொல்ல மாட்டீர்கள் நீங்கள் அதற்கு என்னென்ன நியாயம் சொல்கிறிர்களோ அதே நியாயம் தமிழகம் ஏன் இந்தியாவோடு இருக்கக்கூடாது என்பதற்கு பொறுந்தும், இந்தியா என்பது ஹிந்துயாவாக இருக்க வேண்டும் என்ற ஹிந்துத்துவா வெறியர்களின் எண்ணம், ஹிந்து என்றால் பார்ப்பனிய ஆதிக்கம், இதுத்தானேய்யா விசயமே....

arunagiri said...

பூங்காவில் பொய் பூக்கத்தொடங்கி, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் இன்று காழ்ப்புக் காடாக மாறி விட்டிருக்கின்றது.

இடதுசாரித்தனம் என்பது பற்றிய வரலாற்றுப்புரிதலும் சிந்தனை அறிவும் எள்ளளவும் இல்லாத கூட்டம் ஒன்று ஈவேராவின் வெறுப்புக் குப்பைகளை ஆசிரியர் குழு என்ற முகமூடியில் விதைத்து வருகிறது.

சிறுகுழுக் கலாசாரப்பாதுகாப்பு, சூழலியற்கண்ணோட்டம், மகளிர் மேம்பாடு போன்ற இடதுசாரி சிந்தனைகளை இயல்பாகவே கொண்டுள்ளது இந்து மரபு என்பதனை அடிக்கோடிட்டது இடதுசாரி இந்துத்துவம் என்ற எனது திண்ணைக் கட்டுரை.

இடதுசாரித்தனம் என்பது மார்க்ஸிஸ்டுகளின் வெற்று கோஷங்களிலும், மாவோயிஸ்டுகளின் வன்கொலைவெறியிலும், பொய்பூக்கும் பூங்காவின் பெரியாரிச மடைமையிலும் இல்லை.வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் பசுமையின் மீதான பரிவில் இருப்பது அது. மொழியையும் நாட்டையும் பெண்களாய் உருவகித்து உயர்விப்பது இடதுசாரிச் சிந்தனை.
எங்கோ உள்ள தீவின் கரும்புத்தோட்டத் தொழிலாளர்களின் கஷ்டங்களுக்காகக் கண்ணீர் சிந்தியது இடதுசாரி உள்ளம்.

முன்னும் பின்னும் முரண்படப்பேசி,
ஆதிக்க சக்திகளுக்கு அடிவருடிக்கொடுத்து, ஆங்கிலேயருக்கு கால் பிடித்து விட்டு, பொறுக்கித்தனமும் ரவுடித்தனமும் தினமும் செய்து 'நாயும் பிழைக்கும் இந்தப்பிழைப்பு' என்பதற்கேற்ப அரசியல் மைனர் வேலை நடத்தி வந்த பெரியாரிசத்துக்கு
தேசியம் கேவலமாகத்தான் தெரியும்.

இந்த மண்ணாங்கட்டிகளுக்கு வலதுசாரித்தனம் பற்றிய அறிவும் கிடையாது இடதுசாரித்தனம் குறித்த தெளிவும் கிடையாது. முள்ளமாரித்தனம் உண்டென்று சொல்லுங்கள், ஒப்புக்கொள்கிறேன்.

வஜ்ரா said...

பூங்கா, அதன் தலை முதல் வால்வரை புரையோடிக்கிடக்கிறது இந்திய தேசிய எதிர்ப்பு. சே குவேரா போன்ற போதை மருந்துக்கு அடிமையானவனையெல்லாம் ஹீரோ வாக்கும் இந்த கூட்டம் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்ஸலைட்டுகளின் கூடாரம். அவர்கள் ஸ்டராடர்ஜி பட்டிக்காட்டில் வேலை செய்யாததால் வலையில் recruitment செய்துகொண்டிருக்கிறார்கள்.

தேசவிரோதம் என்று மொண்ணையாகச் சொன்னால் போதாது. மக்கள் விரோதம், இந்து மத விரோதம், இந்திய யூனியனுக்கு எதிரி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

They are basically the mouth piece of Separatist groups and naxalites.

இந்திய தேசியத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் தயவு செய்து பூங்கா வலையிதழுக்கு தங்கள் படைப்புகளை வெளியிட சம்மதம் தெரிவிக்காமல் இருக்கும்படி கேட்டுக்கொள்வது தான் இப்போது நாம் செய்யக்கூடிய ஒன்று. கண்டிப்பதனால் ஒன்றும் நேரப்போவதில்லை.

Hari said...

சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ, மார்க்ஸீயம், கம்யூனிஸம், பார்பனீய பண்பாட்டு ஆதிக்கம் இப்பிடி ஏதாவது ஒரு தலைப்பு வைத்தால் உடனே அது பூங்காவில் பூக்கும். சுத்த அடிவருடித்தனம். இந்திய தேசியம் பேசுவதை வெறுக்கும் இவர்கள் தங்கள் இந்திய பாஸ்போர்ட்டை எரிக்கட்டும்.

சீனாவிற்கோ, ரஷ்யாவிற்கோ, ஏன் பாகிஸ்தானிற்கோ செல்லட்டும்.

Jataayu, I stand with you

Anonymous said...

தமிழ் திரட்டியின் நிர்வாகிகள்தானே இந்த நச்சு வனத்தையும் நடத்துகிறார்கள் ? இந்திய தேசியத்தில் அக்கறை உள்ள பதிவர்கள் எல்லோரும் ஏன் தங்களது கடுமையான கண்டனங்களை இந்த நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கக் கூடாது ? இவர்களது இழிவான நோக்கங்களை இனம் கண்டு அன்றே இவர்களைப் பற்றி பல பதிவர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். எனினும் தங்கள் பதிவுகள் நீக்கப் படுமோ என்ற அச்சத்தில் பல பதிவர்களும் இவர்களது தேசத் துரோக போக்கைக் கண்டும் காணாதது போல் செல்கிறார்கள். துணிந்து கண்டித்த உங்களது துணிவிற்குப் பாராட்டுதல்கள். "எனி இந்தியன்" என்ற பெயர் இருப்பதால் அந்த இணைய புததகக் கடையையே புறக்கணிக்க வேண்டும் என்று எழுதிய தீவீர இந்திய வெறுப்புப் பிண்டங்கள்தான் இன்று இந்த நச்சுப் பூங்காவை நடத்துபவர்கள். இத்தனைக்கும் இந்தியாவின் கல்வி நிலையங்களில் படித்து விட்டு வந்து, இந்தியாவின் தலைச்சிறந்த கல்வியையை பெற்று விட்டு இன்று ஊண்ட வீட்டுக்கே துரோகம் செய்யும் நன்றி இல்லாத ஜென்மங்கள் இவர்கள். இன வெறுப்பு, இந்திய வெறுப்பு, இந்து வெறுப்பு இவை மூன்றுமே இவர்களின் தாரக மந்தீரங்கள். இவர்களை எதிர்த்து நான், பி கே சிவகுமார், லெப்டினட் வந்தியத்தேவன், முகமூடி போன்றோர் தொடர்ந்து போராடி வருகிறோம். நாங்கள் இத்தனை வருடங்கள் இந்தத் இந்திய தேசத் துரோகிகளை எதிர்த்து எழுதியதை இன்று நீங்களும் புரிந்து கொண்டது குறித்து மிக்க மகிழ்ச்சி, உங்களைப் போன்ற உணர்வு ஒவ்வொரு பதிவருக்கும் ஏற்பட்டு இவர்களுக்கு கடுமையான கண்டனங்கள்ளையும் எதிர்ப்பையும் தெரிவிக்க வேண்டும். இந்திய அரசு மற்றும் அமெரிக்க அரசிடம் இவர்களது தேசத் துரோக நடவடிக்கைகளை எடுத்துச் சென்று இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டியது நம் அனைவரது கடமையுமாகும்.

அன்புடன்
ச.திருமலை

Anonymous said...

பூங்காவை விமர்சித்ததால் நீங்கள் தமிழ் திரட்டியில் இருந்து கூடிய விரைவில் தூக்கப் படும் சாத்தியம் இருக்கிறது.

Anonymous said...

தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான பெயரிலி என்ற ரமனீதரன் கந்தையாவின் பெயரில் தமிழ் மணத்தில் இருந்து வந்தேறி பார்ப்பனர்கள் வெளியே செல்ல வேண்டும் என்று எழுதியுள்ளார். ஆகவே இதை தமிழ் மணத்தின் அறிவிப்பாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு அறிவிப்பு வந்த பின்னும் மானம் ரோஷம் உள்ள இந்திய தேசியத்தில் நம்பிக்கையுள்ள வந்தேறி பார்ப்பனர்கள் அனைவரும் என்ன செய்யப் போகிறீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளேன். வெட்கம் மானம் சூடு சொரனை எல்லாவற்றையும் இழந்து தமிழ் மணத்தில் தொங்கிக் கொண்டு திரியப் போகிறீர்களா அல்லது இந்திய விரோத மக்கள் விரோதக் கூட்டணி எப்படித் திட்டினாலும் பரவாயில்லை என்று ஒட்டிக் கொண்டிருக்கப் போகிறீர்களா என்ன செய்யப் போகிறீர்கள் மானம் உள்ள வலைப் பதிவர்களே ? வெளியே போங்கடா இந்திய நாய்களே என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளிய பின்னும் தமிழ்மணத்தில் மூலமாக உங்கள் பதிவுகளைப் பதியத்தான் வேண்டுமா ?

Hariharan # 03985177737685368452 said...

விடுங்க சார்! பூங்கா வியர்டு பதிவுகளின் தொகுப்பாக மாறி ரொம்ப நாளாச்சு! அது இந்திய , இந்துமத, வெறுப்பாளர்கள் சந்திக்கும் பூங்கா!

நம்மூர் ஆட்கள் யாரெல்லாம் இப்படியான சிந்தனையோடு இருக்கிறார்கள் என அறிய வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக இருந்துவிட்டுப் போகட்டும்!

ஜடாயு said...

// குழலி / Kuzhali said...
பார்ப்பனிய எதிர்ப்பு என்பது இந்திய தேசிய எதிர்ப்பா? //

இப்படி நான் சொல்லவில்லை. நான் மேற்கோள் காட்டியிருக்கும் பதிவு தான் இப்படிச் சொல்லியது.

// அப்படியே இந்திய தேசியத்தை எதிர்த்தால் தான் என்ன தவறு... இந்திய தேசியத்தை எதிர்ப்பதற்கான நியாயங்கள் இருக்கத்தானே செய்கின்றன. //

இங்கே உங்கள் முகத்திரை கிழிகிறது. ஸோ, உண்மையில் இந்திய தேசியத்திற்கும், தேசத்திற்கும் நீங்கள் எதிரி. இதை நேரடியாகச் சொல்லாமல் பார்ப்பனீயம், அது இது என்று ஏன் ஜல்லியடிக்க வேண்டும்?

இந்தியர்களுக்கு தேசத்துராகிகளை இனம் காண வசதியாக இருக்கும் இல்லையா?

// .. இன்று அமெரிக்காவின் கீழுள்ள இந்த அரசில் தான் இந்தியர்கள் சகல உரிமைகளுடனும், வசதிகளுடனும், வாய்ப்புகளுடனும் திகழ்கிறார்கள், உலகில் வேறெங்கும் அல்ல. அமெரிக்க தேசியம் தான் உலகின் மிக //

நீங்கள் இந்திய தேசத்திற்கு எதிரானவர் என்று முதலிலேயே சொல்லிவிட்டதால் இந்த வாதமே அர்த்தமற்றது. இந்தியா நாசமாய்ப் போக வேண்டும் என்று நினைக்கும் உங்களிடம் அதன் ஒற்றுமை, முன்னேற்றம், இறையாண்மை இவை பற்றி மேலே சொன்னது போன்ற அபத்தங்களின் அடிப்படையில் நான் வாதம் புரிய விரும்பவில்லை.

அரவிந்தன் நீலகண்டன் said...

தமிழ்மணத்திரட்டியின் சேவையை நாங்கள் பெறுகிறோம். அதே போல தமிழ்மணமும் எங்கள் பதிவுகளை பெறுகிறது. ஆனால் பூங்கா என்பதை பொறுத்தவரையில் அது கெட்ட நாற்றமடிக்கும் இடதுசாரி வெறியர்களின் தொழுவமே அன்றி வேறல்ல. அதனை நடத்துபவர்கள் மனிதகுல விரோதிகள். சக மனிதர்களை கொன்று தின்று இரத்தம் குடிக்கும் மார்க்சிய கொலைகாரர்களின் இரத்தம் இவர்கள் கைகளிலும் நாற்றமெடுக்கிறது. உக்ரைனிலும் சீனாவிலும் இறந்த குழந்தைகளின் இரத்தத்தையும் திபெத்தில் கொல்லப்பட்ட/படும் பௌத்தர்களின் இரத்ததையும், மேலும் பாரதத்தின் ஆந்திரா முதல் சட்டீஸ்கர் வரையிலும் கொல்லப்படும் வனவாசிகளுடைய இரத்தத்தையும் நக்கி சப்புகொட்டியபடி விகாரமாக இளிக்கும் மிருகங்களே பூங்காவின் ஆசிரியக்குழுவில் இருப்பதாக நான் கருதுகிறேன். அவர்களுக்கு குறைந்தபட்ச மனிதத்தன்மைகூட இல்லை என கூறுகிறேன்.

Hari said...

வன்னிய நாடு கேட்காமல், தனி தமிழ் தேசம் கேட்குமளவுக்கு இறங்கி வந்திருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சிக்குறியது. யார் கண்டார், சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது என்பார்களே, அது போல தான் இதுவும் என்று நினைக்கிறேன்.

பிரிவினைவாதத்திற்க்கு இவர்கள் உடனே காரணமாக கொள்வது காவிரி. தனி தமிழ் தேசம் குடுத்துவிட்டால் மட்டும் இந்த பிரச்சனை தீர்ந்துவிடுமா? உங்கள் தலைவர்கள் தங்கள் சுயநலத்திற்க்கு செய்த காரியங்களின் பலனைத் தான் நாம் எல்லோரும் அனுபவிக்கிறோம். பிரச்சனை என்னவென்று தெளிவில்லையா இல்லை தெரிந்து கொள்ள விருப்பமில்லையா?

அரவிந்தன் நீலகண்டன் said...

குழலி நீங்கள் இப்படிப்பட்ட மாங்கா மடையர் என நான் நினைக்கவில்லை. தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.

குழலி / Kuzhali said...

//நீங்கள் இந்திய தேசத்திற்கு எதிரானவர் என்று முதலிலேயே சொல்லிவிட்டதால் இந்த வாதமே அர்த்தமற்றது. இந்தியா நாசமாய்ப் போக வேண்டும் என்று நினைக்கும் உங்களிடம் அதன் ஒற்றுமை, முன்னேற்றம், இறையாண்மை இவை பற்றி மேலே சொன்னது போன்ற அபத்தங்களின் அடிப்படையில் நான் வாதம் புரிய விரும்பவில்லை.
//
ஜடாயு எஸ்கேப்பிசமா? இந்தியா இந்தியாவாக இருப்பதை விட அமெரிக்காவின் 51வது மாநிலமாக இருப்பது எவ்வளவோ மேல்.... அது ஏன் தவறு என்று நீங்கள் சொல்லுங்கள்? சொல்லுங்கப்பா காரணத்தை சொல்லுங்கோ ஏன் காரணம் சொல்ல மாட்றேள், ஓ ஓ காரணம் சொன்னால் அதே காரணம் தமிழகத்துக்கும் பொறுந்தும் என்பதாலா?

ஜடாயு said...

தமிழ்மணம் என்ற வலைதிரட்டியின் சேவையைப் பாராட்டுகிறேன். தமிழ் மற்றும் அனைத்து இந்திய மொழிகளும் இணையத்தில் மேலும் மேலும் வளர்வது கண்டு பெருமகிழ்ச்சியடைபவர்களில் யானும் ஒருவன்.

அரசியல், சமூகம், மதம் பற்றிய விஷயங்களில் கருத்து வேறுபாடு என்பது இருக்கலாம். ஆனால் இந்திய தேசத்தின் இறையாண்மையைக்கு ஊறு விளைவிக்கும் கருத்துக்களுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்தும், அவற்றைப் பரப்பியும் வருவது ஏன் என்று சொல்ல இந்தியர்களைப் பெரும்பான்மை படைப்பாளர்களாகவும், வாசகர்களாகவும் கொண்ட ஒரு ஊடகம் கடமைப் பட்டுள்ளது.

இங்கே நடக்கும் விவாதத்தின் அடிப்படையில் தமிழ்மணம் மற்றும் அதன் ஆசிரியர் குழுவுக்கு ஒரு கேள்வியை வைக்கிறேன் -


இந்திய தேசத்தின் இறையாண்மை, இந்திய அரசியல் அமைப்பு, இந்திய ஜனநாயகம் இவற்றுக்கு எதிரானதா தமிழ்மணம்?


தமிழ்மணம் என்ற வலைதிரட்டியில் தங்கள் பதிவுகளை இணைத்திருக்கும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியப் பதிவர்கள் அனைவரும் கூட்டாகவோ அல்லது தங்கள் பதிவுகளிலோ தமிழ்மணத்திடம் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்று கோருகிறேன்.

மற்றபடி தமிழ்மணம் மற்றும் பூங்காவுடன் தொடர்புள்ள எவர் மீதும் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் எனக்கு இல்லை.

அரவிந்தன் நீலகண்டன் said...

ஓகோ அன்புமணிராமதாஸும் மாறனும் பாலுவும் ஒன்றுக்கும் உதவாத ரப்பர் ஸ்டாம்ப் பதவியில் தான் பின்புறத்தில் பெவிகால் போட்டு ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களோ? இப்படி பச்சையாக புளுக உங்களுக்கு வெட்கமாயில்லையா குழலி? அது எங்கே இருக்கப்போகிறது...ஈவெரா கும்பலுக்குதான் மானம் ரோசம் எல்லாம் கிடையாதே...கோவிலுக்கு போன பொண்டாட்டியை நண்பர்களிடம் 'ஊருக்கு புதிசா வந்த தாசி' என சொல்லுகிற கீழ்த்தர புத்தி உள்ளவனை பகுத்தறிவு தந்தை என்கிற ஆசாமிகளுக்கு இந்தியா மீது எப்படி பாசம் வரும்.

Anonymous said...

அன்புள்ள ஜடாயு,

உங்கள் பதிவு மட்டும் இந்திய தேசியத்திற்கு ஆதரவானதா? உங்கள் மனதில் கைவைத்துச் சொல்லுங்கள். பார்ப்பனர்களால் தலித்துகள் தங்கள் உரிமையை இழந்தார்கள், உடையை இழந்தார்கள். கஞ்சிக்கும் வழியின்றி பார்ப்பனர்களை அண்டிப் பிழைக்கும் ஒரு இழிந்த நிலைக்கு தள்ளப் பட்டார்கள்.

அப்படி வரலாற்றில் நடந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு இங்கே சிலர் பதிவுகளை எழுதிகிறார்கள். அப்படியான உண்மைப் பதிவுகளை பூங்காவில் போடாமல் ஆர்.எஸ்.எஸ் ஒரு நற்பணிகள் செய்யும் மன்றம் என்று எழுதும் உங்களின் பதிவுகளையும் அரவிந்தன் போன்ற அடிவருடும் கும்பலின் பதிவுகளையுமா போடச் சொல்கிறீர்கள்?

பூங்கா என்பது இதழ். தமிழ்மணம் என்பது திரட்டி. இரண்டும் வெவ்வேறு என்கிறோம் நாங்கள், ஆனால் இரண்டும் ஒன்று என்கிறீர்கள் நீங்கள். எனவே உங்கள் வழிக்கே வருகிறேன், இரண்டும் ஒன்றுதான். எப்போது உங்களுக்கு பூங்காமேல் நம்பிக்கை இல்லையோ அப்போதே தமிழ்மணத்தில் இருக்க உங்களுக்கு தகுதி இல்லை.

நீங்களாக தமிழ்மணத்தில் இருந்து வெளியேறினால் மரியாதை. இல்லை என்றால் நாங்களாக கழுத்தைப் பிடித்து தள்ளி உங்களை வெளியேற்ற வேண்டி இருக்கும்.

நீங்கள் படித்தவர், புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மதியாதார் வாசல் மிதியாதே என்பதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இந்த கடிதம் உங்களுக்கு மட்டும் இல்லை அரவிந்தனுக்கும் சேர்த்துதான்!

ஜடாயு said...

// Vajra said...
They are basically the mouth piece of Separatist groups and naxalites.

இந்திய தேசியத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் தயவு செய்து பூங்கா வலையிதழுக்கு தங்கள் படைப்புகளை வெளியிட சம்மதம் தெரிவிக்காமல் இருக்கும்படி கேட்டுக்கொள்வது தான் இப்போது நாம் செய்யக்கூடிய ஒன்று. கண்டிப்பதனால் ஒன்றும் நேரப்போவதில்லை. //

வஜ்ரா, இது நல்ல யோசனையாகத் தெரிகிறது. நான் இதுவரை எல்லா பதிவுகளுக்கும் "சம்மதம்" என்றே சொல்லி வந்தேன், இந்தப் பதிவு உட்பட :))

நீங்கள் சொல்வது ஒருவிதமான எதிர்ப்பு வழிமுறை. இனிமேல் இப்படியே செய்யப் போகிறேன் - "சம்மதமில்லை" என்பதைத் தேர்வு செய்து. வஜ்ரா கருத்துடன் உடன்படுபவர்கள் அனைவரும் தங்கள் விருப்பப் படி இதைச் செயல்படுத்தலாம்.

Hari said...

தங்கமணி,
விஷயம் இங்கு ஜாதியை பற்றியில்லை. தேசியத்தை பற்றியதே. ஜாதியையும், தேசியத்தையும் நீங்கள் இணைத்துப் பார்த்தால், உங்கள் புரிதலில் தவறு உள்ளது. தலித்களின் நிலையை பற்றி நான் மறுக்கவில்லை. அதற்கு காரணம் பிரமணர் மட்டும் தான் என்று நீங்கள் கூறுவதை நான் ஏற்கவுமில்லை. மேலும், அதை பற்றி இங்கு பேசுவது சம்பந்தமில்லாதது.

/*அப்படி வரலாற்றில் நடந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு இங்கே சிலர் பதிவுகளை எழுதிகிறார்கள்.*/

அதே போன்ற ஆதாரங்களுடன் தான் அரவிந்தன் எழுதுகிறார். அதையும் நீங்கள் படித்திருக்கலாம். அப்பிடி அரவிந்தன் எழுதுவது பொய் பிரசாரம் என்று பட்டால் ஆதாரத்துடன் அதை மறுத்து எழுதுங்கள். அதை விட்டு அவரை கேவலமாக திட்டுவது அழகன்று.

/*பூங்கா என்பது இதழ். தமிழ்மணம் என்பது திரட்டி. இரண்டும் வெவ்வேறு என்கிறோம் நாங்கள், ஆனால் இரண்டும் ஒன்று என்கிறீர்கள் நீங்கள்*/

இப்பிடி நான் சொல்லவில்லை. அப்பிடியே இரண்டும் ஒன்று என்று கூறுவதாக கொண்டாலும், தமிழ்மணத்தின் நிலைபாடுகளை போலவே பூங்காவின் நிலைபாடுகளை எதிர்பார்க்கிறோம்.

/*நீங்களாக தமிழ்மணத்தில் இருந்து வெளியேறினால் மரியாதை. இல்லை என்றால் நாங்களாக கழுத்தைப் பிடித்து தள்ளி உங்களை வெளியேற்ற வேண்டி இருக்கும்*/

இதை செல்வதற்கு உங்களுக்கு உரிமையில்லை. நான் இங்கு இருப்பது உங்களுக்கு சங்கடமாக இருப்பதாக பட்டால், என்னிடம் சொல்லுங்கள், வெளியேறுகிறேன்.

Anonymous said...

//பார்ப்பனர்களால் தலித்துகள் தங்கள் உரிமையை இழந்தார்கள்//

Is it ? So it is not because of vanniyars..., thevars..., chettiyar..., nadars..., nayudu..., naikars..., pillais..., mudaliyars...!!!

adutha mirattal yarukkunganna?

Anonymous said...

The post by thangamani was duplicate comment.It was posted by poli dondu alais vidathu karuppu alais Malaysian dog.

Please remove it and delete your replies to it.

ஜடாயு said...

//அன்புள்ள ஜடாயு,

உங்கள் பதிவு மட்டும் இந்திய தேசியத்திற்கு ஆதரவானதா? //

தங்கமணி, இது என்ன கூத்து? நீங்கள் சீரியஸ் ஆகத் தான் பேசுகிறீர்களா?

நான் மேற்கோள் காட்டியது திரட்டிய பதிவில் இருந்து அல்ல, பூங்காவின் ஆசிரியர் குழுவே எழுதியது. அதில் ஊற்றெடுக்கும் தேசவிரோதம் பற்றித் தான் பேச்சு.

இந்திய தேசியத்திற்கு எதிராக இப்படி வெளிப்படையாக எழுதும் இணைய இதழை அடையாளம் காட்டுவது முக்கியமாகிறது.

Anonymous said...

Jatayu

That is not thangamani.Thangamani has his own blogger account.This is polidondu.Please delete his comments and dont reply to it

வடுவூர் குமார் said...

பூங்கா ஆசிரியர் குழுமம் தான் விளக்கம் கொடுக்கவேண்டும்.நிலை தடுமாறுவது இயற்கை.
நீங்கள் கொண்டிருக்கும் எண்ணத்தில் தான் என்றால்...
வஜ்ரா சொல்லியதை செய்ய வேண்டியது தான்.
சாத்வீக முறையில் நம் எதிர்பை காண்பிப்போம்.

Anonymous said...

"இப்படி பச்சையாக புளுக உங்களுக்கு வெட்கமாயில்லையா குழலி? அது எங்கே இருக்கப்போகிறது...ஈவெரா கும்பலுக்குதான் மானம் ரோசம் எல்லாம் கிடையாதே...கோவிலுக்கு போன பொண்டாட்டியை நண்பர்களிடம் 'ஊருக்கு புதிசா வந்த தாசி' என சொல்லுகிற கீழ்த்தர புத்தி உள்ளவனை பகுத்தறிவு தந்தை என்கிற ஆசாமிகளுக்கு இந்தியா மீது எப்படி பாசம் வரும்."

அப்படி போடு ராசா. ரொம்ப ஒவராத்தான் பேசிக்கிட்டுரான் குலலி

அட்ரா சக்கை அட்ரா சக்கை

ஜடாயு said...

"தங்கமணி" என்ற பெயரில் வந்து அனானி பின்னூட்டம் இட்டது வேறு ஒரு ஆள் என்று தெரியும். சுட்டிக் காட்டிய இன்னொரு அனானிக்கு நன்றி.

அனானி மற்றும் பல பெயர்களில் வந்து மிரட்டல் விட்டுக் கொண்டிருக்கும் ஆட்களுக்கு: போய் வேலையப் பாருங்கப்பா.

பூங்கா வலையிதழ் மீது வந்த விமரிசனத்தை தாங்கும் நிலை கூட இல்லாமல் அதை எழுதிய பதிவரைத் தூக்குவது போன்ற செயல்களை தமிழ்மணம் திரட்டி செய்யாது என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு பாதுகாப்பின்மையா?

மாற்றுக் கருத்துகள் உள்ள பதிவுகளை அல்ல - தகாத வார்த்தைகள், ஆபாசம் மற்றும் வசவுகள் தாங்கிய பதிவுகளைத் தான் இதுவரையில் அந்தத் திரட்டி நீக்கியதாகக் கேள்விப் படுகிறேன்.

Anonymous said...

பெயரிலி பெயரிலும் யாரோ அனானி எழுதியிருக்கிறது என்ரே ஜடாயுவுக்கு தெரியாதோ?

அனானிகள் மற்றவர்கல் பெயர்கலைப் பயன்படுத்துவதை வரவேற்பது சரியா

Amar said...

Agree, Jatayu.

கால்கரி சிவா said...

ஜடாயு, நானும் உங்களுடன் சேர்ந்து கண்டிக்கிறேன். ஒரு பத்திரிகையை அதன் வாசகர்களும் பங்காளிப்பார்களும் கண்டிப்பதில் தவறில்லை. நாங்கள் இந்திய இறையாணமைக்கு எதிரானவர்கள் தாம் என பூங்கா குழு அறிவித்துவிட்டால் நாம் கண்டிப்பதற்கு ஒன்றுமில்லை புறக்கணிப்புதான்.

arunagiri said...

குழலி,

சிலுக்குவார்பட்டியும் வெயிலடிச்சான்பட்டியும் தனிநாடு கேட்கிறது. கொடுத்து விடலாமா என்று இந்திய தேசியத்திடம் நம்பிக்கை கொண்ட நாட்டு மக்களிடம் ஓட்டுப்பிச்சை எடுத்து சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் பதவியிலிருக்கும் உங்கள் கட்சித்தலைகளை கேட்டுச்சொல்லவும். சொல்ல மறந்து விட்டேன், சிலுக்குவார்பட்டியில் 2-ஆவது குறுக்குத்தெருவும், வெயிலடிச்சான்பட்டியின் மெயின் ரோட்டில் நாலாவது சந்தும் சிலுக்குவார் மற்றும் வெயிலடிச்சான் பட்டிகளுக்கு எதிராக 'தன்மானம் காக்க தனியாகப்பிரிந்து செல்வோம்" என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதைப்பற்றியும் மிஸ்டர் குடிதாங்கி என்ன சொல்கிறார் என்று கேட்டு சொல்லி விடுங்கள். அமெரிக்காவின் 51-ஆவது மாநிலம் பற்றியெல்லாம் அப்புறம் பேசலாம்.

ஐந்தாம்படை வேலையையே செய்துகொண்டிருந்தால் சிந்தனையில் இப்படித்தான் அபத்தக் குழப்பங்கள் அதிகம் உருவாகும். அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு வெளியில் வராதவரை எந்த ஒரு சமுதாய, அரசியல் கூட்டமைப்பைப் பற்றியும் உளறல்தான் வரும், புரிதல் வராது.

Anonymous said...

கடலூர் மாவட்டம் சேடப்பாளையத்தில் 2007 புத்தாண்டுக்கு முன்தினம், வயிற்று வலியால் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட தலித் இளைஞனை வெட்டிக் கொன்றார்களே? அந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டாரே? இதோ, செய்தித்தொகுப்புகள் -
http://dinamalar.com/2007mar23/district/cuddalore.asp - எட்டாவது செய்தி
http://www.thehindu.com/2007/01/11/stories/2007011107230400.htm
http://www.keetru.com/dalithmurasu/feb07/poovizhiyan.html

இது எது சார்ந்த பார்ப்பனீயம் - வன்னியப் பார்ப்பனீயமா, திராவிடப் பார்ப்பனீயமா, அல்லது இரண்டும் சேர்ந்த அசிங்கக் கலவையா?

முட்டாள்கள். இந்த முட்டாள்களுக்கு - வெளி நாட்டில் இருந்தாலும் - தலைமுறை தலைமுறையாக இட ஒதுக்'கேடு' தேவைதான்.

Anonymous said...

ஜடாயு,

தேசியம் என்பதென்ன எல்லோரும் ஜெய்ஹிந்த் பாடி கண்ணீர் மல்க உருகுவதா? அது போலிருப்பது அடிமைதனத்தின் ஒரு முகமே. தேசியம் என்பது எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியது, தன்னையே சுய ஆய்வு செய்யும் கேள்விகளையும் உள்ளடக்கியதே.

இறையாண்மை குறித்த குரல்களின் நோக்கம் வாசிப்பவரின் எண்ணம் பொருத்து சிதறி விடவும் வாய்ப்புண்டு. பூங்கா தொகுப்பாளரின் எண்ணங்கள் நாட்டின் அரசியல் கட்சிகளின் அடாவடிதனமான போக்கை எண்ணி மனம் நொந்தும் வந்திருக்கலாம் அல்லவா?

அரசியல் கட்சிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையா?

இந்திய இறையாண்மை அதனை நோக்கிய விமர்சனத்தை மறுக்காது, வெறுக்காது.

பாஸிஸ தன்மையோடு இந்திய தேசியம் இருந்தால் மட்டுமே அதன் பன்முக தன்மை மறுக்கப்பட்டு எதிர்குரல்கள் மறுக்கப்படும். எனக்கு தெரிந்து இந்திய தேசியம் மக்களாட்சி அமைப்பே. எல்லா வகை குரல்களும் அனுமதிக்கப்பட்டவையே.

கருத்தளவில் பூங்கா ஆசிரியரின் எழுத்துகளை எதிர் கொள்ள விட்டு உங்களுக்கு எதிர்குரலாய் படுவதை தேசிய எதிர்பாக சித்தரிப்பது சரியன்று.
தேசியத்தை கொச்சை படுத்தலாகுமா?

Anonymous said...

குழலி,

பாக்கிஸ்தானில் ஏற்கனவே பதவியிலிருந்த ஒரு நீதிபதியைத் தூக்கிவிட்டது மிகப் பெரிய கலவரத்தைத் தூண்டியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் அந்தப் பதவிக்கு வர உயிர்பயம் உள்ள எவனும் வரத் தயாராக இல்லாத நிலையில், ஆபத்தான சூழலில், பதவி ஏற்கும் தைரியம் ஒரு ஹிந்துவுக்குத்தான் வந்திருக்கிறது.

மேலும், இந்த கொந்தளிப்பான சூழலில் கொல்லப்படவேண்டியவன் ஒரு துலுக்கனாக இருக்கக்கூடாது என்று முஷராஃப்மியா நினைத்திருக்கலாம்.

உகாண்டா நாட்டின் இடி அமீன் தன்னுடைய நாட்டின் எல்லா முக்கியப் பதவிகளிலும் இந்தியர்களையே வைத்திருந்ததாக இந்திரா காந்தியிடம் கதை விட்டான்.

அவனுக்குத் துலுக்கர்களின் ஆதரவு இருக்கிறது. உங்களுக்கும் அது தேவை போலிருக்கிறது.

பெங்களூர் American

Muse (# 01429798200730556938) said...

பூங்காவில் வேறுபட்ட கருத்துக்கள் வெளிவருவது எதிர்க்கப்படவேண்டியதில்லை. ஆனால், ஒரே ஒரு குறிப்பிட்ட கருத்து மட்டுமே தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றதே. அது ஏன்?

இவர்களுடைய டாக்டிக்ஸாக இருப்பது இதுதான்:
ஒரு குறிப்பிட்ட தரமற்ற கீழ்த்தரத்தோடு தொடர்புடைய ஒன்றை மட்டும் முழுப்பொறுப்பாளியாக்குவது. உதாரணமாக, ஜாதி வெறி. இதற்கு பார்ப்பனர்களை மட்டும் பலிகடா ஆக்குவது. பின்னர், இவர்கள் எதையெல்லாம் அழிக்க விரும்புகிறார்களோ அதை எல்லாம் இதனோடு தொடர்புபடுத்திவிடுவது. இந்தியா பார்ப்பனர்களின் தேசம். எனவே, இந்தியாவை எதிர்ப்போம் என்று கும்பலாய் குலைக்க வேண்டியது. எதிர் கருத்துக்களை ஒட்டுமொத்தமாய் அடக்க வேண்டியது. அவர்களது கருத்துக்களை தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள துறைகளில் வெளிப்படாமல் இருக்கச் செய்ய வேண்டியது.

திராவிட கட்சி என்று தங்களை சொல்லிக்கொள்ளுபவர்கள் ஆட்சிக்குவந்தவுடன் அரசாங்கத்தில் வெறுமே வேலையை மட்டும் பார்த்துவந்தவர்களானாலும், பார்ப்பனர்கள் என்றால் அழிக்கும்படி உத்தரவு வந்ததும் எதேச்சதிகாரம்தான். பார்ப்பனர்கள் மட்டுமல்லாது உயர்ஜாதி என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் அத்தனைபேரும் தங்களின் மேன்மையை நிலைநிறுத்த தலித்துக்களை அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதும் இந்த எதேச்சதிகாரத்தின் ஒரு வடிவம்தான். கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் சேராவிட்டால் தொழிற்சாலையில் வேலை கிடைக்காது என்கின்ற ஒரு நிதர்ஸனமும் ஒரு எதேச்சதிகாரம்தான்.

அனானி போல யாரோ வந்து உங்களையெல்லாம் யார் எழுதச் சொன்னார்கள் போய்த் தொலை என்று மிரட்டல் விடுக்கிறார்கள். இது மீடியா எதேச்சதிகாரம். குண்டாயிஸம்.

இருக்கின்ற மீடியாக்கள், கல்விநிலையங்கள், பொதுஜன தொடர்பைத் தருகின்ற அத்தனை அமைப்புக்களையும் இந்த ஒற்றைச் சிந்தனைப் போக்குள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்வதும், மற்றவர்களது கருத்துக்களை ஓரம் கட்டுவதும், ஏனென்று கேட்டால் "வெளியே போ" என்று சொல்லுவதும் பச்சை சர்வதிகாரப்போக்கு. ஆனால், இந்தச் சர்வதிகாரத்தின் சுவையைத்தானே பூங்காவின் ஆசிரியர் குழு தேடிக்கொண்டிருக்கிறது. எனவே, மாற்றுக்கருத்துக்கள் அனைத்தும் தவறானவை என்கின்ற திம்மித்தனத்திற்கு மற்றவர்கள் தயார் செய்துகொள்ளவேண்டும். அல்லது, பரவிவரும் இந்த எதேச்சதிகாரத்தைக்கண்டு எதுவும் செய்ய முடியாமல், வாய்க்கட்டு அவிழ்க்கமுடியாமல் சாகவேண்டியதுதான்.

இந்த எதேச்சதிகாரம் இந்தியாவிற்குப் புதிதில்லை. இந்த எதேச்சதிகாரத்தை எதிர்த்து விட்டிலாய் செத்துப்போகிறவர்களும் இந்தியாவிற்குப் புதிதில்லை. ஐயன் காளி, வெண்ணிக்காலடி என ஆயிரம்பேர் உண்டு. இவர்களைப் பற்றிய தகவல்களை மறைப்பதால் இவர்களது வீரம் மறைந்துபோகும் என்று நினைக்கிறார்கள்.

மீடியா ஆக்கிரமிப்பால் விட்டில் பூச்சிகளாகிவிட்ட வீரர்கள் இந்த மண்ணில்தான் மக்கியுள்ளார்கள். இந்த மண்ணில் விளைந்த உணவிற்கு உரமானவர்களாக இந்த நேர்மையாளர்கள்தான் இருக்கிறார்கள். எனவே இந்த மண்ணில் விளைகின்ற உணவை உண்கின்ற ஒவ்வொருவனுக்குள்ளும் இவர்களின் உணர்வு இருக்கிறது.

"விட்டு விடுதலையாகி நிற்க" ஆசை கொள்ளுவது ஹிந்துத்துவம். "முக்தி" பெறுவது மனித வாழ்வின் தலையான குறிக்கோள் என்று சொல்லுவது ஹிந்துத்துவம். அந்த தனிமனித விடுதலையை, சமூக விடுதலையைத் தரமறுக்கின்ற எதேச்சதிகார கும்பலுக்குள்ளும் இந்த சுதந்திர தாகம் பீறிட்டு எழும்போது ஆபிரகாமிய முதலாளிகளுக்காக தங்களை காவுகொள்ளுகின்ற இவர்கள் திருந்தலாம் என்கின்ற நப்பாசையும் எனக்கிருக்கிறது.

வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களுக்கு பாரம்தாங்கியாக இருப்பதாக இவர்கள் உண்மையில் நினைத்தால், பாரம் தாங்கியாக இருப்பதைவிட பாரத்தையே இல்லாமல் செய்வதுதான் ஹிந்துத்துவம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இவர்களுடைய கொள்கைகளைத் தவிர மற்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இவர்களுக்கு இல்லாததால், இவர்களுடைய கருத்தை எதிர்ப்பவர்களுக்கும், மாற்றுக்கருத்தை வெளியிடுபவர்களுக்கும் ஹிந்துத்துவவாதிகள் என்று இவர்கள்தான் முத்திரை குத்திவிடுகிறார்கள்.

ஆபிரகாமிய மலத்தை எங்கள் சகோதரர்கள் மேல் சுமத்திவிட்டு அவர்களது பாரத்திற்கு சுமைதாங்கியாக இருப்பதைவிட இந்தப் பாரத்திற்குக் காரணம் யார் என்று சொல்லுபவர்களை பூணூல் போட்டவர்கள் என்று முத்திரை குத்திக்கொண்டிருக்கும் தொழிலை விடுங்கள். உங்கள் முத்திரையின் மையான ஆபிரகாமிய மலம் உங்களையும் நாறடிக்கிறது.

Muse (# 01429798200730556938) said...

ஜடாயு அவர்களே, நீங்கள் புரிந்துகொண்டிருப்பது சரிதான்.

தங்கமணி இப்படி அனானியாக வந்து மிரட்டல் விடக்கூடியவர் இல்லை. தேவைப்பட்டால் நேரடியாக சம்பந்தப்பட்டவருக்கு மெயில் அனுப்புகிற த்ராணி அவருக்கு உண்டு.

பூங்கா மாற்றுக்கருத்துக்களை ஏற்க மறுக்கின்ற தன்மை கொண்டுள்ளதாக விளங்குவது விளங்கினாலும், சிலர் உங்களைப்போன்றவர்களின்மேல் சேறு வீச இந்த அனானி காமெண்ட்டுகளைப் போட்டு வைத்துள்ளார்கள்.

ஐயன் காளி said...

தமிழ்மணம் அனைத்துக் கருத்துக்களையும் திரட்டுகிறது.

தமிழ்மணம் திரட்டுகிறது.

பூங்கா திகட்டுகிறது.

ஜடாயு said...

// Anonymous said...
ஜடாயு,

தேசியம் என்பது எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியது, தன்னையே சுய ஆய்வு செய்யும் கேள்விகளையும் உள்ளடக்கியதே. //

அனானி, என்னை எதிர்த்து வந்ததில் சாரம் உள்ள கேள்வி உங்களுடையது தான். நீங்கள் யாராயினும், பாராட்டுகிறேன்.

// பூங்கா தொகுப்பாளரின் எண்ணங்கள் நாட்டின் அரசியல் கட்சிகளின் அடாவடிதனமான போக்கை எண்ணி மனம் நொந்தும் வந்திருக்கலாம் அல்லவா? //

இல்லவே இல்லை. என் பதிவின் முதல் பாகத்தைப் பாருங்கள். வன்முறையை அந்த ஆசிரியர் குழு கண்டிக்கவில்லை. அந்த சாக்கில் "இந்திய தேசியம்" என்பதே ஒரு முகமூடி என்று சொல்லியிருக்கிறது! இதில் மனம் நோகல் எங்கே இருக்கிறது ஐயா?

// அரசியல் கட்சிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையா? //

இல்லை, ஆனால் இது விமரிசனம் அல்ல. மகா கேவலமான, கிறுக்குத் தனமான முத்திரை குத்தல் - காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்டு எல்லாரும் பார்ப்பனீய முகமூடியாம்!
இந்த எல்லா கட்சிகளின் சில பல போக்குகளை நான் வெறுக்கிறேன். ஆனாலும், இவை தான் இன்று இந்திய ஜனநாயக அரசியல் அமைப்பின் முக்கிய அங்கங்கள். இவற்றில் ஒன்றின் மீது கூட அல்ல, அனைத்தின் மீதும் வெறுப்பு உமிழ்வது என்பது இந்திய வெறுப்பு இல்லாமல் வேறு என்ன?

// இந்திய இறையாண்மை அதனை நோக்கிய விமர்சனத்தை மறுக்காது, வெறுக்காது. //

பூங்கா செய்தது விமரிசனம் அல்ல. கேலி, அவதூறு, அவமதிப்பு.

// எனக்கு தெரிந்து இந்திய தேசியம் மக்களாட்சி அமைப்பே. எல்லா வகை குரல்களும் அனுமதிக்கப்பட்டவையே. / /

ஆமாம், ஆனால் "இந்திய தேசியமே பொய்" என்ற ஒரு குரலைத் தவிர. அந்தக் குரலை எழுப்புவன் இந்த மக்களாட்சியை ஆதரிப்பவன் அல்ல, அதை அழித்து ஒழிக்கத் துடிக்கும் துரோகி.

// கருத்தளவில் பூங்கா ஆசிரியரின் எழுத்துகளை எதிர் கொள்ள விட்டு உங்களுக்கு எதிர்குரலாய் படுவதை தேசிய எதிர்பாக சித்தரிப்பது சரியன்று.//

இது எனக்கு எதிர்க்குரல் அல்ல, எப்படி இந்திய தேசியத்தின் எல்லா ஜனநாயக முகங்களையும் எதிர்க்கிறது என்று புளியைப் போட்டு விளக்கி விட்டேன்.

// தேசியத்தை கொச்சை படுத்தலாகுமா? //

அன்பரே, இப்போது சொல்லுங்கள் - தேசியத்தை கொச்சைப் படுத்துவது நானா? பூங்காவா?

Anonymous said...

இப்படி புலம்புவதால் என்ன பயன்?

பேசாமல்.. பூங்காவை படிப்பதை நிறுத்துங்கள்.

Muse (# 01429798200730556938) said...

Posted in https://www2.blogger.com/comment.g?blogID=6220079&postID=412479078956236592


பூங்கா இங்கனம் செய்ததை ஜடாயுவும் கண்டித்திருந்தார். அதற்குப் பதிலாக அவரை தமிழ்மணத்திலிருந்தும் வெளியே போகுமாறு ஃபத்வா விதித்திருக்கிறார்கள்.

அவர் சொல்லியிருப்பதெல்லாம், பூங்கா இங்கனம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்பதுதான். அவர் தமிழ்மணம் பற்றி எந்த குறையும் சொல்லவில்லை. ஆனால், தமிழ்மணத்திலிருந்து அவரும், அரவிந்தன் நீலகண்டனும் வெளியேறவேண்டும் என்று தங்கமணியின் பெயரில் அனானி பின்னூட்டம் போட்டுள்ளார்கள்.எனக்குத் தெரிந்த தங்கமணி இங்கனம் செய்பவர் இல்லை என்று நம்புகிறேன். அதையே என் கருத்தாய் பின்னூட்ட ஃபத்வா உள்ள ஜடாயுவின் பதிவிலும் இட்டுள்ளேன்.

மறுப்போ, ஆதரவோ சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து இதுவரை வரவில்லை என்பது அவசரப்பட்டு எடுக்கும் முடிவாக இருக்கும். எதற்கும் இரண்டு மூன்று வருடங்கள் காத்திருக்கலாம்.

மாற்றுக் கருத்துக்கள் வெளிப்படும்போதுதான் ஒரு விஷயத்தின் பல முகங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்பது என் கோட்பாடு. பார்ப்பனீயத்தை பழித்தலுக்கும் இடம் வேண்டும். பார்ப்பனீயம் தவறானதில்லை என்று சொல்லுவதற்கும் இடம் வேண்டும். இந்தியா ஏன் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதற்கும், ஏன் தனிநாடு வேண்டும் என்பதற்கும் சம வாய்ப்பு வேண்டும். பாரதத்தை புகழ்தலுக்கும் இடம் வேண்டும்.

இந்த விஷயத்தில்கூட சுதந்திரம் தராமல் இருப்பவர்கள் பயப்படுவது மாற்றுக்கருத்துக்களின்பக்கம் இருக்கும் உண்மையை கண்டு பயந்தா, அல்லது அதை எதிர்கொள்ள சரியான நேர்மை இல்லாததாலா என்று தெரியவில்லை.

வாய்மையைவிட வலிமைதான் இதுபோன்ற சூழலில் வெல்லும். பூங்கா ஆசிரியர்குழு தங்கள் எதேச்சதிகாரத்தின் வெற்றியை ஷாம்பெய்ன் பாட்டில்கள் திறந்து கொண்டாடிக்கொள்ளட்டும்.

Anonymous said...

பூங்காவின் இந்த எதேச்சதிகாரத்தைக் கண்டித்து ரவி ஸ்ரீனிவாஸும் ஒரு பதிவு போட்டுள்ளார்.


http://ravisrinivas.blogspot.com/2007/03/blog-post_3429.html

Anonymous said...

Jataayu,
Links posted in your comments get truncated, possibly due to comments formatting. FYI.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ஜடாயு said...

இமேஜ்களில் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க சொன்ன ஒரு பின்னூட்டம் - தங்கள் நிறுவன உறுப்பினர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முறையில் இருப்பதாகவும், அதனால் அதை நீக்கிவிடுங்கள் என்ற வேண்டுகோளுடனும் தமிழ்மணம் நிர்வாகத்திடம் இருந்து ஒரு தனிமடல் வந்திருந்தது.

A case of some people fearing their images being squandered by these images..?

அதில் இருந்த வேண்டுகோளின் அடிப்படையில் அனானி ஒருவர் இட்டிருந்த அந்த பின்னூட்டம் நீக்கப் படுகிறது.