Friday, February 23, 2007

தமிழும் தனித்தமிழும்! : ஜெயகாந்தன்

தமிழ் ஒரு மொழி. தனித் தமிழ் ஒரு முயற்சி. தனித் தமிழே தமிழ் மொழியல்ல.

இந்தத் தெளிவு எனக்கிருப்பதால் தனித்தமிழ் மீது எனக்கு வெறுப்பில்லை. இந்தத் தெளிவு இல்லாததினால் தனித்தமிழ்ப் பிரியர்கள் தம்மை அறியாமலேயே தமிழை வெறுத்து வருகிறார்கள்.

தமிழனது சமுதாய வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் கலப்புகள் நிகழ்ந்திருக்கிறதோ அப்பொழுதெல்லாம் தமிழ் மொழியில் கலப்பு நிகழ்ந்திருக்கிறது. இவ்விதக் கலப்பினாலேயே அவனது வாழ்க்கை வளமுற்றது போல - அவனது மொழியும் வளம் பெற்றிருக்கிறது.

தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் இத்தகைய கலப்புக்களையெல்லாம் தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொண்டுவிட்ட சிலர், மொழி மட்டும் தனித்திருக்க வேண்டுமென்று ஆசையுற்று அவ்வித முயற்சியில் இறங்குவது ரசனைக்குரியதே. ஒரு முயற்சி என்ற முறையில் அதிலிருக்கும் பலவீனமான அழகைக் கூட என்னால் ரசிக்க முடிகிறது. எனினும் அதுவே தமிழ் என்பதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்தத் தனித்தமிழ் முயற்சியில் சில வியாசங்கள் வரையலாம். நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதிக் கொள்ளலாம். மேடையில் மிகுந்த ஜாக்கிரதையோடு கூடிய ஒரு சமத்காரத்தோடு கூற வந்த விஷயத்தைக் கூற முடியாமலேயே - தமிழின் தனித்துவத்தைக் காப்பாற்றக் கூடிய முயற்சியில் வெற்றியோ, தோல்வியோ பெற்று ஒருவாறு பேசி முடிக்கலாம்.

என்னதான் செய்தாலும் இந்தத் தனித்தமிழில் ஒன்றை மட்டும் செய்ய முடியாது. இலக்கியம் சிருஷ்டிப்பது என்ற மகத்தான காரியத்தைக் கம்பியில் நடப்பது போன்ற இந்தத் தனித்தமிழ் என்கிற 'பாலன்ஸ்' கூத்தின் மூலம் நிறைவேற்றவே முடியாது.

ஒரு மொழியெனின் அதில் இலக்கியம் உருவாக வேண்டும். வாழ்க்கையைப் புறக்கணித்து இலக்கியங்கள் உருவாவதில்லை. இன்றைய தமிழ் இலக்கியம் என்பது - உலக அளவிற்கு உட்பட்ட துறைகளில் உருவாவது, உரைநடையில் நிறைவேறுதல் வேண்டும். உரை நடையென்று செய்யுளுக்கு வந்த உரைபோல அமைதல் கூடாது. எந்த அளவுகு நடைமுறை வாழ்க்கையோடு - அதன் பிரத்தியேக அழகுகளோடு வசனம் இசைந்து உருப்பெறுகிறதோ அந்த இசையையே வசனத்தின் வளர்ச்சியெனக் கொள்ளூதல் வேண்டும். அதற்குமேல் நவீன இலக்கியங்கள் நாம் சந்திக்கின்ற மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

பாத்திரப் படைப்பு என்பது ஒவ்வொன்றும் தனித்தன்மையோடு விளங்க - இது இந்தக் காலத்தை - இந்தச் சூழ்நிலையை - இந்தப் பிரதேசத்தை - இந்த வர்க்கத்தை என்றெல்லாம் சம்பாஷணைகளின் மூலமும் சிந்தனைகளின் மூலமும் ஆசிரியனின் விவரிப்பின் மூலமும் நிலை பெறுதல் வேண்டும்.






இந்தச் சாதனையைத் தனித்தமிழ் என்ற ஒரு சாதாரண முயற்சி சாதிப்பது துர்லபம். ஏனெனில் தனித்தமிழ் என்பது ஒரு வாழ்க்கை உண்மையில்லை; அது ஒரு மனமயக்கம்! அல்லது ஒரு குழுவின் விருப்பம். இதற்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லாதிருப்பதே இதன் சிறப்பு.

(எனவேதான் இதனை ஒரு முயற்சி என்று குறிப்பிட்டேன்.)

இதில் ஒரு வெறியோடு சம்பந்தப்பட்ட சிலர் தங்களது சிந்தனைகளையெல்லாம் மனத்துள் மொழிபெயர்த்து நண்பர்களோடு உரையாடுகையில் பேசிக்கொள்கிறார்கள். இவர்கள் தங்களது கையாலாகாத்தனம் வெளிப்படுகையில் கூட வெட்கப்பட்டு இதனைக் கைவிடுவதில்லை. இவர்கள் உண்மையின் ஒளியின்றி உதட்டால் பேசுவதைக் காணும்பொழுது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளக்கூடிய மாய்மாலக்காரர்களாகவே எனக்குத் தோன்றுகிறது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு இவர்களது அசட்டுத்தனம் மாறிப் போனதை நான் பார்க்கிறேன்.

இந்தத் தனித்தமிழ் இலக்கியம் சமைப்பதாக எண்ணிக் கொண்டு எழுதித் தள்ளிய பேராசிரியர்கள்கூட அந்த வழியினின்றும் இன்று மாறியிருக்கிறார்கள். இன்னும் இலக்கியம் இவர்கள் கையில் உருப்பெறாததற்குக் காரணம் இது ஒன்றுமட்டுமல்ல; தனித்தமிழ் ஒரே மாதிரிதான் இருக்கும். அதிலே பல்வேறுபட்ட நடைகளும் சாத்தியமில்லை.

ஒரு நடைதான் சாத்தியமெனில் அது ஒரு மொழியா?


வேறு மாதிரியான ஒரு நடையே சாத்தியமில்லையெனில் பல்வேறு தரப்பட்ட பாத்திரங்களை சிருஷ்டிப்பது சாத்தியமாகாது.

தனித் தமிழ்தான் தமிழ் எனில் இலக்கியம் படைக்க லாயக்கற்ற மொழி தமிழ் என்றாகும்.

தனித்தமிழ் என்பது ஒரு நினைப்புத்தான். தனித்தமிழ் என்று நினைத்துக் கொண்டிருப்பினும் இவர்களால்கூட அறியாமை காரணமாகப் பிறமொழிச் சொற்கள் உபயோகிக்காமல் இருக்க முடிவதில்லை.

ஆனால் பாவம், இவர்களுக்கு அது தெரியாது. தமிழ் தனியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கும் தனியாக இருக்கிறது என்று நம்புகிறவர்களுக்கும் கூடத் தெரியாமலேயே தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன. தமிழ் பிறமொழிகளில் கலப்பதும் பிற மொழிகள் தமிழில் கலப்பதும் விஞ்ஞானப் பூர்வமான ஒரு விளைவு என்பதனால்தான் இதனை அவ்வளவு சீக்கிரம் பிரித்து விடவும் முடிவதில்லை.

திரு.வி.கே. சூரியநாராயண சாஸ்திரிகள் தமது பெயரைத் தனித்தமிழில் மாற்றிக் கொள்வதாக எண்ணி, சூரியன் - பரிதி, நாராயணன் - மால், சாஸ்திரி - கலைஞன் என, மொழிபெயர்ப்பதாக எண்ணி வேறு சமஸ்கிருதச் சொற்களில் மாற்றி 'பரிதிமாற்கலைஞன்' என்று வைத்துக் கொண்டார் என்பது ரொம்ப ரஸமான விஷயந்தான்.

பரிதி என்பதும், மால் என்பதும் சமஸ்கிருதச் சொற்களே!


ஒரு பொருளைக் குறிக்கப் பல வார்த்தைகளிருப்பது ஒரு மொழியின் செழுமை. அவ்விதம் இருக்கின்ற வார்த்தைகளை மொழி ஆராய்ச்சியாளர்கள் எந்தெந்த வார்த்தைகள், எந்தெந்தக் காலத்தில், எதனெதன் விளைவாய் எந்தெந்த மொழிகளில் இருந்து வந்திருக்கக் கூடுமென்பதை ஆராய்ந்து குறிக்கலாம். இதற்கு உதவுபவை அம்மொழியின் இலக்கியங்களேயாகும்.

அதாவது இத்தகைய கலப்புக்களை அவ்விலக்கியங்கள் பிரதிபலித்திருக்கக் கூடும் என்று கொள்ளுதல் வேண்டும்.

நாவாய் என்ற வார்த்தை தமிழர் நாகரிகம் கடல் கடந்து சென்ற காலத்திற்கு முன்பு தமிழக மண்ணில் யவனர்கள் வாணிகஞ் செய்யும் பொருட்டு வருவதற்கு முன்பு இருந்திருக்க முடியுமா என்பதை ஆராய வேண்டும்.

நாவாய் என்ற சொல் கப்பலைக் குறிக்கின்ற தனித் தமிழ் சொல்லெனக் கருதுதல் வேண்டா. அஃது கிரேக்க மொழியின் 'நோவே' என்ற கப்பலைக் குறிக்கின்ற சொல்லின் திரிபேயாகும்.

இவ்விதம் திரிந்து பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் இவ்வார்த்தை இருத்தல் கூடும். ஆங்கிலத்தில் 'நேவி' என்றிருப்பது போல.

தமிழ் இலக்கியங்களைப் பார்த்தால் ஒவ்வொரு காலத்து இலக்கியமும் அந்தந்தக் காலத்தைப் பிரதிபலிப்பனவையாயிருக்கின்றன. அவையாவும் ஒரே செய்யுள் வடிவில் இருப்பினும் ஒரே மாதிரியாக இல்லை.

தமிழுக்கு சிரஞ்சீவித் தன்மை தந்த தமது முற்காலத்துக் கவிஞர்கள் எல்லாம் வாழ்க்கையில் வந்து கலந்த பிறமொழிச் சொற்களைக் கைவிட முடியாமல் கையாண்டு நமது இலக்கியங்களூக்குச் செழுமை தந்திருக்கின்றனர். அதற்கு இடங்கொடுக்காத இலக்கணத்தை அவர்கள் இழுத்து வளைத்திருக்கிறார்கள். அவர்கள் இழுப்பிற்கு இலக்கணம் வளைந்து கொடுத்தும் இருக்கிறது. அதன் மூலம் அவர்கள் புதிய இலக்கணத்தை உருவாக்கியுமிருக்கிறார்கள்.

அன்று அவர்கள் இலக்கியம் சமைத்திருப்பது செய்யுள் உருவத்தில். அவர்களே இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்கள் என்றால் - அவர்கள் காலத்தைவிட எத்தனையோ மடங்கு வேகமானதும் விரைவானதுமான, அதிகக் கலப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் கால வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நவீன இலக்கியத்தை உரைநடையின் மூலம் உருவாக்குகின்ற ஒருவன் தனித் தமிழைக் காப்பாற்றுவது எங்ஙனம்?

'அந்தோணி சைக்கிளில் போனான். டயர் பஞ்சராயிற்று' என்ற வாக்கியங்கள் தமிழ் இல்லையென்று யார் சொல்லுவது? இதனை எவ்விதம் தமிழாக்குவது? தனித் தமிழ்வாதிகளூக்கு இந்தச் சொற்றொடரில் இரண்டே வார்த்தைகள் தான் இருக்கின்றன. ஆயிற்று, போனான் என்பதே அவை. ஆவதும், போவதும் தமிழனின் எல்லாக் காலத்திலும் இருந்த ஒரு வினை.

ஆனால் அந்தோணியும், சைக்கிளும், டயரும், பஞ்ச்சரும் ஒரு நவீன காலத்தைப் பிரதிபலிக்கின்ற உண்மைகள் அல்லவா?

இதனை மொழிபெயர்ப்பதன் மூலம் காலமும் இடமும் அற்ற ஒரு கனவு மயக்கத்திற்கு அல்லவா நாம் போய் விடுகிறோம்.

சைக்கிள் என்ற பொருள் நமக்கு வேண்டும். சைக்கிள் என்ற பெயர் நமக்கு வேண்டாம் என்று சிலர் விரும்புவதை வாழ்க்கை எவ்விதம் அனுமதிக்கும்?

எனவேதான் சொல்லுகிறேன்.

தமிழ் ஒரு மொழி.

தனித்தமிழ் ஒரு முயற்சி - ஒரு விளையாட்டு. அது சிருஷ்டிமேதை அவசியப்படாத சில வாத்தியார்களுக்கும், ஒரு தற்காலிகக் கவர்ச்சியை நாடும் சில மாணவர்களூக்கும் ஒரு வேளை உகந்ததாய் இருக்கலாம்.

மொழி என்பது சில வாத்தியார்களிடத்திலும் இல்லை; சில மாணவர்களிடத்திலும் இல்லை. அது வாழ்க்கையில் இருக்கிற்து.

எனவே இந்தத் தனித்தமிழ் யதார்த்தத்திற்கும் ஒத்துவராது; இலக்கியத்திற்கும் ஒத்துவராது; எழுதுபவனுக்கும் ஒத்துவராது.

எனினும் தனித்தமிழ் என்பது ஒரு ரசிக்கத்தக்க முயற்சிதான்!

இந்தத் தனித்தமிழ் மீது நம்பிக்கையில்லாமலேயே சில அரசியல்வாதிகள் இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்களே அதுதான் இதில் உள்ள மகத்தான ஹாஸ்யம்.!

(எழுதப்பட்ட காலம்: 1964)

ஜெயகாந்தன் ஒரு பார்வை - டாக்டர். கே.எஸ். சுப்பிரமணியன், முதல் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை - 600 017.

(நன்றி : இந்தக் கட்டுரையை Tab எழுத்துருவில் இட்டிருக்கும் எனி-இந்தியன் இணையதளத்திற்கு. http://www.anyindian.com/jayakanthan/tamil.htm )

--------------

தனித்தமிழ் பற்றிய மேலும் சில அறிவுபூர்வமான சிந்தனைகள்:

பொருந்தாக் காமம் : பி.கே.சிவகுமார் ('திண்ணை')

தலைப்பைப் பார்த்துவிட்டு, ஏதேதோ கற்பனை செய்தபடி இதைப் படிக்க ஆரம்பித்து முடிவில் ஏமாந்து போனால் அதற்கு நான் பொறுப்பல்ல. தனித்தமிழின்மீது ஒருசிலர் கொண்டுள்ள பிரேமையைப் 'பொருந்தாக் காமம் ' என்று அழைப்பதே பொருத்தமென எனக்குத் தோன்றுகிறது. தனித்தமிழ் என்பது காலத்திற்குப் பொருந்தாதது என்பது என் கருத்து. பொருந்தாத ஒன்றின் மீது பிறக்கும் மோகத்தைப் 'பொருந்தாக் காமம் ' என்று அழைக்கலாம்தானே! .......

தனித்தமிழ் என்னும் போலி (1) : பி.கே.சிவக்குமார் ('மரத்தடி')

தனித்தமிழ் என்னும் போலி (2) : பி.கே.சிவக்குமார் ('மரத்தடி')

23 comments:

மிதக்கும்வெளி said...

சரிதான்

Anonymous said...

செயகாந்தர் எப்போதோ சங்கராச்சாரிக்கு கூஜா தூக்கப் போய்விட்டார். வேலிக்கு ஓணான் சப்போர்ட்டு, அந்த ஓணானுக்கு இன்னொரு ஓணான் சப்போர்ட்டு. அந்த இன்னொரு ஓணானுக்கு நீர் மேற்கோள் வேறு காட்டுகிறீர். கஷ்ட்டம்!

ஜடாயு said...

// செயகாந்தர் எப்போதோ சங்கராச்சாரிக்கு கூஜா தூக்கப் போய்விட்டார். வேலிக்கு ஓணான் சப்போர்ட்டு, அந்த ஓணானுக்கு இன்னொரு ஓணான் சப்போர்ட்டு. அந்த இன்னொரு ஓணானுக்கு நீர் மேற்கோள் வேறு காட்டுகிறீர். கஷ்ட்டம்! //

தமிழ் எழுத்துலகின் ஆகச் சிறந்த ஆளுமை ஒருவரது கருத்தைப் பற்றி சொல்வதற்கு இவ்வளவு தான் உள்ளதா.. ம்?

தனித்தமிழ்ப் பிரியர்களின் எண்ண ஓட்டம் இப்படித் தான் இருக்கும் போலிருக்கிறது!

Anonymous said...

ஜடாயு அய்யா,

தனிதான் தமிழ் தமிழ்தான் தனி என்ற உலறிய உண்மையை உரைக்க எங்க பீலா அய்யா,பார்வை அய்யா,வெளி அய்யா,தழல் குழல் அய்யா என்று எல்லா அய்யாக்களும் இப்போ ஜெ.காவையும்,அவர் பற்றி போட்ட உங்களையும் நாலாவித ஜல்லிகளில் அடிக்க பதிவொ பதிவென்று இடுவார்கள் அய்யா.தேசீயம்,பார்ப்பன சதி எல்லாம் ஆரம்பிக்கும்.பார்த்து இருங்க அய்யா.
அன்புடன்
ப.பாண்டியன்
மும்பாய்

Anonymous said...

// செயகாந்தர் எப்போதோ சங்கராச்சாரிக்கு கூஜா தூக்கப் போய்விட்டார். வேலிக்கு ஓணான் சப்போர்ட்டு//

அந்த ஓணானுக்கு உங்க திராவிட தலைவர் கருணாநிதி சப்போர்ட்டு பண்ணி விருதெல்லாம் தந்தாரே சமிபத்தில், அதெமட்டும் எப்படி எளிதா மரந்த்தீங்க?, ரொம்ப மிதக்காதிங்கய்யா

Mani - மணிமொழியன் said...

//தமிழ் ஒரு மொழி. தனித் தமிழ் ஒரு முயற்சி. தனித் தமிழே தமிழ் மொழியல்ல.//
This basic premise itself is WRONG.

தனித் தமிழே தமிழ் மொழி. "தனித் தமிழே தமிழ் மொழியல்ல" என்று ஜெயகாந்தன் சொல்லுவது "தூய கலப்படமற்ற பால், பாலே அல்ல" என்று சொல்லுவதைப் போன்ற அர்த்தமற்ற வாதம்.

தமிழ் அதன் கலப்பற்ற நிலையில் இருப்பதே தமிழ். மற்றது கலப்படத் தமிழ் அல்லது திரிபுகள் உள்ளடக்கிய தமிழ்.
"தனித் தமிழ் முயற்சி" என்பது கலப்படங்களைக் களைந்து தமிழ்மொழியின் உண்மை வடிவத்தை நோக்கிய ஒரு பயணம்.
நல்ல கதை எழுதும் ஜெயகாந்தன், நல்லா கதையும் விடுகிறார்.

Anonymous said...

தமிழ் எழுத்துலகின் ஆகச் சிறந்த ஆளுமை ஒருவரது கருத்தைப் பற்றி சொல்வதற்கு இவ்வளவு தான் உள்ளதா.. ம்?

இவ்வளவு தூரம் இருக்கிறதே, இதுவே அதிகம் என்றுதான் பெருமைப்பட்டுக்கொள்ளுகிறார்கள். அறிஞர், ஞானி, தந்தை, தமிழினக் காவலர், தமிழின ஏட்டய்யா, தமிழின இன்சுபெக்டர் என்றெல்லாம் பட்டம் வாங்குவதுதான் முக்கியம். உட்கார்ந்து ஆராய்ச்சி செய்து உண்மை எதுவென அறிய எங்களுக்கு படியளப்பவர்கள் சொல்லித்தரவில்லை.

உண்மை எதுவென்று முன்முடிவு எடுத்து அதற்கு ஏற்றாற்போல ஆதாரங்களை உருவாக்குவோம். இடிக்கின்ற விஷயங்களைத் திரிப்போம். திரிக்க முடியாவிட்டால் இருக்கவே இருக்கு "அது எங்ககிட்ட இருந்துதான் உலகம் முழுக்கப் போச்சு" என்கின்ற வாதம்.

ஏன், சமசுகிருதம் என்பதே தமிழ் வார்த்.......சீ சீ சீ, தனித் தமிழ்வார்த்தைதான். ஹ்ம்ம்ம்ம்ம், எப்படி நிறுவுவது, கூப்பிடு அந்தாளை.

அந்தாள்: அதாகப்பட்டது, "சமசுகிருதம்" என்பதை பிரித்துப்பார்க்க வேண்டும் - "சமைச்சு" + "கிருதோம்". சமைச்சு என்பது "சமைத்து" என்கின்ற வேர்ச்சோல்லிலிருந்து வந்தது. "சமைத்து" என்றால் "வடிவமைத்தல்" "ஒழுஙமைத்தல்". "இருதோம்" என்பது "இருந்துகொண்டிருந்தோம்" என்கின்ற வேர்ச்சொல்லிலிருந்து ஏற்பட்டது. மொழியை கட்டமைப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்த தமிழர்களால் உருவானதுதான் "சமச்சுக்கிருதோம்" என்கின்ற தமிழின் திரிபு மொழி. ஆகவே, "சமச்சுகிருதம்" என்பது தமிழின் மாறுபட்ட வடிவம். இதைப் பார்ப்பனர்கள் தங்களின் ஆதிக்கத்திற்காக திரித்து அது ஒரு தனிமொழி என்றும், தமிழ் தோன்றிய காலத்திலேயே தோன்றியது என்றும் திரித்துவிட்டார்கள். பார்ப்பனீயம் அழியவேண்டும். பார்ப்பனீயம் அழிந்தால்தான் சாதி அழியும். பார்ப்பனீயம் அழிய பார்ப்பனர்களாகப் பிறந்தவர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்துவிடவேண்டும். எனவே, யாராவது "சமச்சுக்கிருதோம்" தமிழிலிருந்து தோன்றவில்லை என்று சொன்னால் அவர்களை "பார்ப்பனர்கள்" என்று சொல்லிவிடவேண்டும். அவர்கள் "பார்ப்பன" சாதியில் பிறக்கவில்லையென்றால் உடனே "பார்ப்பனக் கைக்கூலிகள்" என்று சொல்லிவிட வேண்டும். இந்த "கூலி" என்கிற வார்த்தை இருக்கே, அது வந்து......

ஜால்ராக்கள் மொத்தமாக (மனதுக்குள்): ஐயையோ, என்னவோ இவர் சொல்லுகிற விஷயத்தையெல்லாம் நாங்க படிக்கிற மாதிரியும், புரிஞ்சிக்கிற மாதிரியும் நினைச்சுக்கிட்டு இவரா,...... விடமாட்டேங்கறாரே. நாங்க அவர் எது சொன்னாலும் நம்புறோம். அது போறாதா? என்னவோ, இவர் சொல்கிறதையெல்லாம் படித்து, புரிந்து ஜால்ரா தட்டுறோம்னு இவரா நினைச்சுக்கிட்டு திரியறாரு. இருக்கட்டும். வழக்கம்போல நம்ம வேலையை ஆரம்பிப்போம்.

ஜால்ரா 1: தலீஈஈஈவாஆஆ, கொன்னுட்ட தலீவா, பாப்பானுங்கள்ளாம் செத்தானுங்க

ஜால்ரா 2: இராத ஐயா, தங்களைப்போன்றவர்களால்தான் பார்ப்பனர்கள் அடங்கி இருக்கிறார்கள்

ஜால்ரா 3: ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க ஐயா, சூப்பரப்பு

கும்பலுக்குப் புதியவர்: சார், சாதி என்பது பிறப்பால்வரும் என்றால், பிறப்பால் பார்ப்பனராய் கருதப்படுபவரை அழிக்கவேண்டும் என்பதும் சாதிவெறிதானே. அதுவும் இல்லாமல் இந்த வேர்ச் சொல் கண்டுபிடிப்பது எல்லாம் பீர் அடித்துவிட்டு எழுதுவது மாதிரி இருக்கிறதே. எந்த ஆதாரமும் இல்லாமல் நீங்களாக சொல்லுவது மாதிரி இருக்கிறதே.

டேய், டேய், அட்றா அவன, ....ங்கோ****, ங்கொம்ம்**** தேவி**** கசுமாலம்**** கயிதே**** ங்கொக்க்****

மற்ற ஜால்ராக்கள் எல்லாம் சேர்ந்து அடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இதைக்கண்டு மகிழ்வடைந்த இராத ஐயா தண்ணித்தமிழில் புன்னகைத்தார்.

ஜடாயு said...

// தனித் தமிழே தமிழ் மொழி. "தனித் தமிழே தமிழ் மொழியல்ல" என்று ஜெயகாந்தன் சொல்லுவது "தூய கலப்படமற்ற பால், பாலே அல்ல" என்று சொல்லுவதைப் போன்ற அர்த்தமற்ற வாதம். //

அறிவியல் ரீதியாக இந்த உதாரணத்தை அணுகுகிறேன். "தூய்மையான பால்" என்று இங்கு குறிக்கப் படுவது, கறந்ததற்குப் பிறகு வேறு எதுவும் கலக்காத பால்.

வேதியியல் படி பார்த்தால் பால் என்பது லாக்டிக் அமிலம் உட்பட பலதும் சேர்ந்த ஒரு கலவை (compound) தான். இயற்கையே உண்டாக்கிய கலவை. இதில் சில மூலக்கூறுகள் எனக்குப் பிடிக்கவில்லை, அதனால் அவற்றைத் தூக்கி எறியப் போகிறேன் என்று பாலில் molecular level dissection செய்தால் எப்படியிருக்கும்? அது ஒருவிதமான பரிசோதனை. கண்டிப்பாக பாலின் இயற்கைத் தன்மையைக் குலைக்கும் செயல். ஆனால் அப்படி தனிமைப் படுத்தப் பட்ட மூலக்கூறுகளே பால் ஆகுமா?

இதைத் தான் ஜெயகாந்தனும், பி.கே.சிவகுமாரும் சொல்லுகிறார்கள். தமிழ் என்பது ஒரு வாழும் உயிரி (organism) என்று கொண்டால் இத்தனை நூற்றாண்டுகளும் திசைச்சொல், வடசொல் எல்லாம் அதன் இயற்கையோடு ஒன்றுகலந்து ஒரு அழகிய ஜீவனுள்ள மொழியாக ஆகியிருக்கிறது!

தனித்தமிழ் என்பது 20-ஆம் நூற்றாண்டில் செயற்கையான ஒரு கூட்டத்தால் உருவாக்கப் பட்ட கருத்துருவாக்கம். அது தமிழின் இயற்கையே அல்ல.

// "தனித் தமிழ் முயற்சி" என்பது கலப்படங்களைக் களைந்து தமிழ்மொழியின் உண்மை வடிவத்தை நோக்கிய ஒரு பயணம் //

உண்மை வடிவம் என்பது என்ன? பி.கே.எஸ். கட்டுரை படித்தீர் அல்லவா? தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்திற்கும் முந்தைய உண்மை வடிவமா? அப்படி ஒரு டைனசோர் வடிவம் இருந்திருக்கும் என்றெல்லாம் கூறுவது தான் கதைவிடல், ஜெயகாந்தன் சொல்வது அல்ல.

இது போன்ற ஜல்லியடிகளைத் தவிர தனித்தமிழில் உருப்படியாக, பயனுள்ளதாக ஏதாவது எழுதப் பட்டிருக்கிறதா?

Muse (# 01429798200730556938) said...

அப்படி ஒரு டைனசோர் வடிவம் இருந்திருக்கும் என்றெல்லாம் கூறுவது தான் கதைவிடல்,

அந்த டைனோசர் வடிவத்திற்கு "தமிழி" என்று பெயர் என்று கால்ட்வெல் பாதிரி கண்டுபிடித்தான். கண்டுபிடிப்பிற்கு ஆதாரம் கேட்கக்கூடாது.

இந்தப் பிரச்சினைகள் எல்லாம் கால்ட்வெல் பாதிரி தமிழை ஒழுங்கு படுத்துகிறேன் என்கின்ற போர்வையில் ஆரம்பித்துவைத்தது. கால்ட்வெல்லைத் தாண்டி தமிழ் வரலாறு காண கற்பனை உடைப்பு நடக்கவேண்டும். உண்மை தேடும் பரந்த மனம் வேண்டும்.

Anonymous said...

Nice article by Jayakanthan. And nicer comments.
Jayakanthan refers to நாவாய for boat, but does not refer to the words Nau/Navgati in sanskrit that mean navigation. May be he deliberately avoided reference to Sanskrit :-)

In real 'Dravida' tradition, Sankaracharya has been dragged into this - Jayalalitha's government was conducting that case through Nakkeeran and these 'Dravida' scum. When the case went to Supreme Court, Jayalalitha's prosecution had no evidence to show to the Supreme court judges. The Dravida scum may want to find out details of the Supreme Court hearing. Add Supreme court also into 'enemies' of Dravidianism - the reservation case is cooking so you might want that.

ஜடாயு said...

Reason,

// Jayakanthan refers to நாவாய for boat, but does not refer to the words Nau/Navgati in sanskrit that mean navigation. May be he deliberately avoided reference to Sanskrit :-)//

அப்படி இல்லை.'nav' என்ற இந்தச் சொல் சம்ஸ்கிருதம், தமிழ் மற்றும் பல ஐரோப்பிய மொழிகளில் படகு என்பதைக் குறிக்கிறது. இது உண்மையில் எந்த மொழியிலிருந்து வந்தது என்று கண்டுபிடிப்பது மிகக் கடினம். மொழியியல் அறிஞர்கள் வேலை அது.

ஆங்கில அகராதியில் navigate தேடியபோது லத்தீன் மூலம் என்று சொன்னது -

Etymology: Latin navigatus, past participle of navigare, from navis ship + -igare (from agere to drive)

கொசு said...

தமிழ் என்போர் தன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றான் ஜெயகாந்தன்.

நீயும் அவனும் சமஸ்கிருதத்தில் புடுங்க போக வேண்டியதுதானே?

எதற்கு தமிழில் பிடுங்க வேண்டும்?

நாதாறிகளா!

ஜடாயு said...

மின் அஞ்சலில் Muse அனுப்பிய பின்னூட்டம்:

--------------

Dear Jataayu,

Could not post the following comment for your article "thamizum, thaniththamizum".

Please post this.

Thanking You,
With Regards,
Muse


முதலில் எந்த மொழி இருந்தது என்று நிறுவத்தான் இத்தனைக் கூப்பாடுகளும்.

தமிழ்நாட்டில் பகுத்தறிவு குத்தகைக்காரர்கள் இத்தனை கூப்பாடு போடுவதற்குக் காரணம், பல்லாண்டு கடந்து வந்துள்ள ஒரு மொழி செழுமை பெற்றதாகவும், வளமை பெற்றதாகவும் இருக்கும் என்பதாலேயே.

ஆனால், இங்கனம் நிறுவ இவர்கள் செய்வது எல்லாம் தமிழை அதன் ஆரம்ப குழவி நிலைக்குக் கொண்டு செல்லுவதே.

ஒரு மொழி வளர்ந்ததற்குக் காரணம் அதன்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் அத்தனை துறைகளைச் சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் திறன் பெற்றிருப்பதுதான்.

அத்தகைய திறனைப் பெற்ற மொழிகள் அனைத்தும் ஒரு துறை எந்த மொழியினூடே வளர்ந்துள்ளதோ அந்த மொழியிலுள்ள அந்தத் துறை சார்ந்த வார்த்தைகளை தன்னகத்தே எடுத்துக்கொள்ளுகின்றன. கருத்தை வெளிப்படுத்த உதவும் வகையில் அந்த வார்த்தையை அப்படியே எடுத்துக்கொள்ளவோ, அல்லது திரிபு கொண்ட வார்த்தையாகவோ பயன்படுத்தி அந்தத் துறையில் வல்லமை பெறுகின்றது. ஷர்ட் என்கின்ற ஆங்கில வார்த்தையை "சட்டை" என்று அழகான திரிபு வார்த்தையாகப் பயன்படுத்துவது பாராட்டுக்குரியது. "மெய்ப்பை" என்கின்ற தூய தமிழ் பதத்தையும் பயன்படுத்தலாம். தவறே இல்லை.

ஆனால், இந்த "தூய்மைப்படுத்தல்" என்கின்ற முயற்சி கல்லறையை தோண்டுகின்ற செயலாக உள்ளது. இவர்களின் தயவு இல்லாமலேயே தமிழின் பெருமை உலகமெல்லாம் பரவியுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு நன்றிகள். ஏனெனில், தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தோன்றிய காலத்திலிருந்து தமிழ் இலக்கியத்தை பாதுகாத்து முன்னகர்த்திச் செல்லவேண்டிய பொறுப்பை தாங்களாக ஏற்றுக்கொண்டார்கள். அண்டை மாநிலமான கேரளத்தில் வளர்ந்துள்ள அளவோடு ஒப்பிடுகையில் தமிழர் இலக்கியம் மு.வ காலத்தோடு தொக்கி நிற்கிறது. அவ்வப்போது பீறிட்டுக்கிளம்பிவரும் தமிழை தூய தமிழ் இலக்கியம் கான்க்ரீட் போட்டு புதைத்தும் வருகின்றது.

தூய்மையாய் வைத்திருக்க முயன்ற மொழிகள் எல்லாம் செத்த மொழிகாளாய் சர்ச்சுகளின் ஆரதனைக்கு மட்டும் பயன்பட்டு வருகின்றன.

தூய்மைப் படுத்துதல் என்பதே மற்ற மொழிகளின்று தன்னை அன்னியப்படுத்தும் ஒரு முயல்வு. தங்களை தூய சாதியார், தூய இனத்தார் என்றெல்லாம் கூறிக்கொண்டவர்கள் அனைவரும் ஆதிக்க வன்முறையாளர்களாகவே வரலாறு கண்டுணர்ந்துள்ளது.

அடால்ஃப் ஹிட்லர் சமீபத்திய உதாரணம்.

ஹுடு டுட்ஸி கலவரங்கள் மற்றொரு உதாரணம்.

ஆரிய திராவிட கற்பனை இனங்கள் மற்றொரு உதாரணம்.

இவை அனைத்தையும் கற்பித்தவர்கள் கிருத்துவர்களாய் இருப்பது தெரிந்தும் தெரியாததுபோல் பகுத்தறிவு குத்தகைக்காரர்கள் பகலில் இரவைத் தேடுவது நடைமுறை உதாரணம்.

இந்தக் குத்தகையால் இவர்களுக்கு நல்ல லாபம் இருந்தது. அடித்துப் பிடுங்கிய குத்தகை. அடுத்துக் கெடுக்கும் குத்தகை. தமிழ்த் தாயின் சொத்தை சொத்தை தமிழர்கள் பணம்பார்க்க பயன்படுத்த இந்த குத்தகை உதவும். தூய தமிழால் குப்பனுக்கும், சுப்பனுக்கும் கம்ப ராமாயணம் கசந்தது. புதுக்கவிதை புரியவில்லை. செய்யுள் பதம் பிரிக்க எத்தனைத் தமிழர்களுக்குத் தெரியும்?

இவர்களால் தமிழ் வாகனம் முன்னும் செல்லாமல், பின்னும் செல்ல முடியாமல், ப்ரேக்கோடு ஆக்ஸிலரேட்டர் கொடுக்கப்பட்ட வண்டி போல கதறிக்கொண்டே இருக்கின்றது.

பல துறைகளிலும், பல மொழிகளோடும் சந்திப்பு நடைபெறும் இடங்களே ஒரு மொழி வளர வாய்ப்புள்ள வெளி. இது புரியாமல் மையத்துக்குள் சுருங்கிக்கொண்டு தமிழ் ஃபாஸிஸம் பேசுபவர்களுக்கும் ஹிட்லரின் இனவெறிவாதிகளுக்கும் ஒரு துளியும் வித்யாஸமில்லை.

தமிழர்களுக்குத் தேவை அவர் வாழ்விலும் இலக்கியத்திலும் வளம் சேர்க்கும் நற்தமிழ்தான். தூய தமிழ் இல்லை

Anonymous said...

// "சமசுகிருதம்" என்பதை பிரித்துப்பார்க்க வேண்டும் - "சமைச்சு" + "கிருதோம்". சமைச்சு என்பது "சமைத்து" என்கின்ற வேர்ச்சோல்லிலிருந்து வந்தது. "சமைத்து" என்றால் "வடிவமைத்தல்" "ஒழுஙமைத்தல்". "இருதோம்" என்பது "இருந்துகொண்டிருந்தோம்" என்கின்ற வேர்ச்சொல்லிலிருந்து ஏற்பட்டது //

ஹா ஹா ஹா! படித்தேன், சிரித்தேன்.

இவர்களது “வேர்ச்சொல்” தேடும் முயற்சிகள் எல்லாம் இப்படித் தான் இருக்கின்றன. மொழிஞாயிறு என்று இவர்கள் போற்றும் மொழிக்கோமாளி தேவநேயப் பாவாணர் என்பவர் இப்படித் தான் தன் கற்பனைக் கழுதையைக் கண்டபடி ஓடவிட்டு, இஷ்டத்துக்கு வேர்ச்சொல் விளக்கங்கள் அளித்துவந்தார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. கிறித்துவரான அவர் அடிக்கடி வேதம், வேதாகமம் என்றெல்லாம் சொல்வதைப் பார்த்து ஜால்ராக்கள் ஐயா அது வடமொழிச் சொல் அல்லவா என்று கேட்டார்கள். பாய்ந்தார் பாவாணர். “எவன் சொன்னான்? அது தூய தமிழ்ச் சொல். வேதம் ஓதுபவர்கள் ஏற்றி, இறக்கி மூச்சைப் பிடித்து சொல்வார்கள். ‘வே’ என்றால் உயர்த்துவது, ‘தம்’ என்றால் ‘தம்’ பிடிப்பது அதாவது மூச்சுப் பிடிப்பது. அதனால் தான் அந்தப் பெயர் என்றாரே பார்க்கலாம். புல்லரித்துப் போய்விட்டார்கள் ஜால்ராக்கள்!

உண்மையில் ‘தம்’ (dam) என்பது உருதுச் சொல் – dam todne tak maar daalo என்றெல்லாம் இந்திப் பட வசனங்கள் கேட்டிருக்கலாம். சென்னைத் தமிழ் போன்ற பேச்சு வழக்குகளில் அது இடம் பெற்றது. இதை வைத்து புரட்டு செய்த இந்த ஆளை மொழியியல் அறிஞர் என்றெல்லாம் கொண்டாடுகிறார்கள். வெட்கம்! வெட்கம்!

ஜடாயு said...

சராசரி தமிழன், நெல்லை கோவிந்தன் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. பி.கே.சிவகுமார் தன் கட்டுரையில் பெரும்பாலான இந்த வேர்ச்சொல் சமாசாரங்கள் முழுக் கற்பனை என்பதாகவே கூறுகிறார்.

// இவர்களால் தமிழ் வாகனம் முன்னும் செல்லாமல், பின்னும் செல்ல முடியாமல், ப்ரேக்கோடு ஆக்ஸிலரேட்டர் கொடுக்கப்பட்ட வண்டி போல கதறிக்கொண்டே இருக்கின்றது. //

ம்யூஸ், நல்லவேளையாக இந்த குழப்படி வகையறாக்கள் (specimans) முக்கிய நீரோட்டத்தில் இல்லை. இவர்களது தாக்கத்தையும் மீறி தமிழ் இலக்கியம் வளர்ந்தது, வளர்ந்து வருகிறது. ஜெயகாந்தனில் இருந்து ஜெயமோகன் வரை அதை செழுமைப் படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.

உங்கள் உவமைகள் வழக்கம் போல ரொம்பவே ரசிக்கும்படியாக இருக்கின்றன

Anonymous said...

//அண்டை மாநிலமான கேரளத்தில் வளர்ந்துள்ள அளவோடு ஒப்பிடுகையில் தமிழர் இலக்கியம் மு.வ காலத்தோடு தொக்கி நிற்கிறது. அவ்வப்போது பீறிட்டுக்கிளம்பிவரும் தமிழை தூய தமிழ் இலக்கியம் கான்க்ரீட் போட்டு புதைத்தும் வருகின்றது.//

ஜெயகாந்தன் தன் கதைகளை என்ன சமஸ்கிருதத்திலா எழுதினார்? ஜெயமோகன் சமஸ்கிருதத்திலா எழுதுகிறார்? ஜல்லி அடிப்பதற்கும் ஒரு அளவில்லையா?

Muse (# 01429798200730556938) said...

ஜெயகாந்தன் தன் கதைகளை என்ன சமஸ்கிருதத்திலா எழுதினார்? ஜெயமோகன் சமஸ்கிருதத்திலா எழுதுகிறார்?


அவ்வப்போது பீறிட்டுக்கிளம்பிவரும் தமிழை தூய தமிழ் இலக்கியம் கான்க்ரீட் போட்டு புதைத்தும் வருகின்றது

Anonymous said...

// அதுவும் இல்லாமல் இந்த வேர்ச் சொல் கண்டுபிடிப்பது எல்லாம் பீர் அடித்துவிட்டு எழுதுவது மாதிரி இருக்கிறதே. //

இதைப் படித்துவிட்டு சம்பந்தப் பட்ட இராம.கி பதிவுகளில் போய் மேய்ந்ததில் கிடைத்தது இது. அக்னிஹோத்ரி என்ற சொல் எப்படி வந்தது என்பதற்கு இவர் அளித்த புருடாவைப் பார்த்து யாரோ ஒரு சமஸ்கிருத வித்வான் (அட, இவிங்கெள்ளாம் கூட தமிழ்மணம் படிக்கிறாங்க அப்பு..!) அவரது ஒரு பதிவில் இப்படி ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறார்…. ஐயா இன்றுவரை இதற்குப் பதில் சொல்லவில்லை!


எஸ்.ராமச்சந்திரன் said...
அன்புள்ள திரு. ராமகிருஷ்ணன் அவர்களே,

என் நண்பர் ஒருவர் சொல்லி நீங்கள் எழுதியிருப்பதைப் படித்தேன்.

// அழனிக்கு முன்னால் இருந்து வேள்வி மந்திரங்களைத் திரும்பத் திரும்ப ஓதுபவன் அழனியோதி (agnihotri; அழனியை வடமொழியில் அக்னி என்று சொல்லுவார்கள். ஓதி ரகரம் நுழைந்து otri ஆகும்; h என்பது உடம்படு ஒலியாய் உள்நுழைந்து நிற்கும். //

நான் சமஸ்கிருத பண்டிதன் அல்ல. ஆனால் இந்தத் தவறு மிக எளிதாக சமஸ்கிருத மாணவர்களே கண்டுபிடித்து விடக் கூடியது.

ஹ்வே, ஹூ, ஹோ - அழைத்தல் என்பதற்கான வேர்ச்சொல் வடிவங்கள். சமஸ்கிருத இலக்கணத்தில் தாது (Dhatu) ரூபம் என்று சொல்வார்கள்.
தேவதைகளை "அழைக்கும்" யாகத்தில் தொடர்புள்ள எல்லாமே இதிலிருந்து வருகிறது. “ஹோத்ரி” என்று ஒரு சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு அது தமிழில் “ஓதி”யிலிருந்து வந்தது என்று சொல்வது கற்பனை கலந்த ஒரு crackpot theory !

ஹோமம், ஹவனம் - வேள்வி
ஆஹ்வானம் - வேள்வியில் "வா" என்று அழைத்தல் (ஆவாஹனம் )
ஹோத்ர், ஹோத்ரி, ஹோதா - வேள்வியில் மந்திரம் சொல்லி அழைப்பவர்
ஹவி - ஹவிசு (அவி) - வேள்வியில் இடும் பொருள்
ஹவ (வினைச் சொல்) - வேட்டல்
ஹவாமஹே - வேண்டுவோம் ("கணானாம் த்வா" என்ற கணபதி மந்திரத்தில் இந்த சொல் வருகிறது)
ஹவ்யவாஹன் - அவியை சுமப்பவன், அக்னி
ஹுதம் - வேள்வியில் எரிந்து பொசுங்கியது
ஹுதசேஷம் - வேள்வியில் எரிந்ததன் மிச்சம்
ஹுதாசனன் - எரித்துப் பொசுக்கியதை உண்பவன், அக்னி

ஹும் என்கிற துர்கா தேவியின் ஹுங்கார பீஜாட்சரமும் இதோடு தொடர்புடையது..

இந்த சொற்கள் தொடர்பான சம்ஸ்கிருத அகராதி பக்கங்கள்:
http://www.ibiblio.org/sripedia/ebooks/mw/1300/mw__1334.html
http://www.ibiblio.org/sripedia/ebooks/mw/1300/mw__1339.html
http://www.ibiblio.org/sripedia/ebooks/mw/1300/mw__1341.html

நீங்கள் சமஸ்கிருதத்தில் என்ன படித்திருக்கிறீர்கள்? உங்களுக்கு சமஸ்கிருதத்தில் புலமை அவ்வளவாக இல்லை என்று இதன்மூலம் தெரிய வருகிறது.

நீங்கள் அந்த மொழியை ஓரளவு நன்றாகக் கற்றுக் கொண்டால் இத்தகைய முயற்சிகளில் பிழைகள் வருவதைத் தவிர்க்கலாம். இல்லையென்றால் கொஞ்சம் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் கூட உங்கள் முயற்சிகளை எள்ளி நகையாட வாய்ப்புள்ளது. ஒரு சொல்லுக்கு வேர் உண்மையிலேயே அந்த மொழியில் உள்ளதா இல்லை வேறு மொழியில் இருந்து வருகிறதா என்பதை அறிந்து சொல்வதற்கு குறிப்பிட்ட இரு மொழிகளிலும் தேர்ந்த புலமை என்பது எதிர்பார்க்கப் படும் அல்லவா? இது நியாயம் தானே?

// இதை விளக்கப் போனால், இன்னும் நாலுபேர் நான் சங்கதத்தைக் கீழிறக்கி விட்டேன் என்று வலைப்பதிவுகளில் காவிகட்டிப் பாய்ந்து வருவார்கள். அய்யா, சங்கதத்தைக் கீழிறக்குவது என் வேலையல்ல. தமிழின் ஆழத்தைக் காண்பது என் வேலை; //

சரி தான். ஆனால் சம்ஸ்கிருதச் சொல் ஒன்று எப்படி வந்தது என்று நீங்கள் விளக்க முற்படும்போது அந்த மொழியைப் பற்றிய குறைந்த பட்ச அறிவாவது இருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?

இதற்கு நேர்மையாக பதில் சொல்லவும்.

அரவிந்தன் நீலகண்டன் said...

ிராவிட 'ஆராய்ச்சியாளர்களுக்கும்' தூரத்தை ஒளி வருடங்களில் அளக்க வேணும். கபாடபுரம் தொடங்கி ஹரப்பா வரை நீளும் அபத்த நாடகங்களுக்கு அங்கு குறை கிடையாது. ம்யூஸ் ஒருவர் சில வருடங்கள் முன்னர் எழுதியிருந்தார்: "திராவிடம் கால்டுவெல் பாதிரி பரப்பிய எய்ட்ஸ்" என்று. ஏதாவது தமிழாராய்ச்சி ஐயாக்கள் கிரிக்கெட்டை 'குறுக்கு கட்டை' என்றும் அது திராவிட விளையாட்டு பார்ப்பன ஆரியர் சூழ்ச்சியால் அது மறைக்கப்பட்டிருந்தது என்றும் அதை நல்லகாலமாக வெள்ளைகாரன் கொண்டு வந்துவிட்டான் என்றும் ஆனாலும் அதில் பார்ப்பன ஆதிக்கம் தொடருகிறது என்றும் ஏதாவது கதைவிடாமல் இருந்தால் சரி.

Anonymous said...

சொக்கு

எல்லாம் வேத காமம் காம்அத்துக்கு வேர்ச் சொல்ல புருடா வ்ட்ட மாதிரிதான். இந்தஆ அஆல் ஊலார த பார்த்தா வெரும் பீர் மட்டுமமல்லலாதுக்கு மேல ஏதோ சரக்கு மாதிரரீருக்கு

Anonymous said...

தமிழாராய்ச்சி ஐயாக்கள் கிரிக்கெட்டை 'குறுக்கு கட்டை' என்றும்

ஏற்கனவே இதுபற்றி கதை இருக்கிறதே. நம்மூர் கிட்டிப்புள்தான் கிரிக்கட்டாக மாறியது என்று சொல்லுகிறார்களே தெரியாதா?

amuthathamil.blogspot.com said...

ஜெயகாந்தன் எதற்காக தனித்தமிழ் சுமையானது என்று கூறுகிறார், என்பதை யாரும் சரிவர புரிந்து கொள்ள வில்லை. இலக்கண வரம்புக்கு உட்பட்ட, வெண்பா, ஆசிரியப்பா,கலிப்பா வெல்லாம், பாட இலக்கண விலங்கு அணிந்து கொள்ள வேண்டும். புதுக்கவிதை எழுத எதுவும் தேவையில்லை. அதுவும் ஹைக்கூ எழுத கெட்ட வார்த்தை கூட போதும். இவற்றை வைத்து கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், சங்க பாடல்கள் எல்லாம் தேவையில்லை என்று சொல்ல முடியுமா? கதை, வட்டார வழக்கு, கூத்து போன்ற இடங்களில், தனித்தமிழ் உதவாது என்பதைஜெ. கூறுகிறார். அதோடு அவர் எல்லை முடிந்து விட்டது.
நமஸ்காரம். மேரேஜ் இன்விடேசன் இஸ்ஸ்யூ பண்ணியிருக்கேன். ஸ்யூரா யுவர் அட்டெனன்ஸ் எக்ஸ்பெக்டட் பை மை ஃபேமலி மெம்பர்ஸ்.யூ ஆர் வெல்கம்.
இப்ப எல்லாம் இப்படித்தான் பேசிக்கிறாங்க.
வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல் மாதிரி எழுத வேண்டியது தானே ? ஜெ. காலத்துல, புதுமைப் பித்தன் காலத்திலே எழுத்து முறை மாற வில்லையா? மாற்றங்களும், எதிர்ப்புகளும் எப்போதும் இருக்கும். சாக்கடை அரசியலை நுழைப்பது ஏன் என்பதுதான் தெரியவில்லை. மணிப்பிரவாள நடைக்கு சாவு மணி அடித்து பல ஆண்டுகள் ஆகி விட்டன.

விசுவநாதன் said...

https://youtu.be/ClLPDw9mqHo